Saturday, August 4, 2018

TOI EXCLUSIVE CASH FOR MARKS

How Anna univ scam rigged marks, turned 5 to 77


Siddharth.Prabhakar@timesgroup.com

Chennai: 04.08.2018

: The cash-for-marks racket at Anna University boosted scores of a student in one paper (in April/May 2017 exam) from 5 to 77 after re-evaluation that seemed perfectly legal but exploited loopholes in rules.

The answer sheet from the April/ May 2017 exam is part of evidence collected by directorate of vigilance and anti-corruption (DVAC), which booked former controller of examinations G V Uma and nine others for taking money to rig the reevaluation process.

Tens of thousands of students may have paid to pass, the investigators suspect.

The university re-evaluation rules state that if the reevaluated total is 15 marks more than the original, a second reevaluation is to be done. The marks obtained in the central evaluation, first re-evaluation and second re-evaluation are compared, and the ‘best’ among the two ‘most consistent marks’ is taken as the ‘true’ score. In this case, the student’s marks changed from 5 to 45 after the first re-evaluation, a change of 40 marks from the original. Since the difference in marks was more than 15, the paper was sent for a second re-evaluation as per rules. After the second reevaluation, the student was given 77 marks.

Now, the difference between marks of the first re-evaluation and the second re-evaluation was 32, which is less than the difference between the primary valuation and the first reevaluation, which was 40. So, 45 and 77, which were nearer to each other than 5 and 45, were considered ‘consistent marks’. Of the two, as per the rule, 77 was considered the ‘true mark’ as it was higher. Similar anomalous increases in marks were found in several papers.



Uma, two more professors suspended

Anna University authorities on Friday suspended former controller of examinations G V Uma and two other professors, and relieved two deans from their posts after an internal probe initiated three months ago by the university found evidence of their involvement in the marks-for-money scam. While DVAC officials said incriminating evidence has been retrieved from Uma’s office, vice-chancellor M K Surappa promised action against all those involved.

Well-planned conspiracy at re-evaluation stage alone

When university officials, suspicious of the great improvement in marks, gave the answer script to a third external examiner. This new examiner gave the student 8 marks. “This means the fraud happened not at the central evaluation, but it was a well-planned conspiracy during re-evaluation,” said a highly-placed source in the university. Officials said many other answer sheets were found to have been similarly tampered with. What’s worse, the central evaluator, who would have given the correct marks, ended up being debarred for no mistake of his, said the source.

DVAC is investigating Uma’s role in influencing examiners at the reevaluation centre in Tindivanam. The other accused in the case include two assistant professors of Government College of Engineering, Tindivanam, the re-evaluation centre and seven other examiners.

Uma did not respond to TOI’s calls on Friday. In a telephonic interview to TOI on Thursday, she denied all charges and said she was being targeted for trying to reform the examination system.

முதுமையில் உதவும் உரிமைகள்!


By பி.கே. குருவிளா | Published on : 04th August 2018 01:11 AM |

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்பது ஒரு காலத்தில் வளர்ந்த நாடுகளில் மட்டும் நிலவும் விவகாரமாகப் பார்க்கப்பட்டது. இப்போது இந்தியாவும் அந்தப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறது என்று தெரியவரத் தொடங்கியுள்ளது.

நாட்டின் மக்கள்தொகையில் முதியோரின், அதாவது 60 வயதைக் கடந்தவர்களின் விகிதம் கடந்த 1971-ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருந்தது. அது 2007-இல் 7.5 சதவீதத்தைத் தொட்டது. வரும் 2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் எட்டு பேரில் ஒருவர் முதியவராக இருப்பார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க புள்ளிவிவரம், பிறரைச் சார்ந்திருப்போர் விகிதாசாரம் பற்றியது. அதாவது, பணிக்குச் செல்வோருக்கும் - முதுமையால் பணிக்குச் செல்ல இயலாமல் பிறரைச் சார்ந்திருப்போருக்கும் இடையேயான விகிதாசாரம் என்பது இதன் பொருள்.
இந்தியாவில், சென்ற 2001-ஆம் ஆண்டில் பிறரைச் சார்ந்திருப்போர் விகிதம் 11.9 சதவீதமாக இருந்தது. வரும் 2050-ஆம் ஆண்டில் இந்த விகிதாசாரம் 28.2 சதவீதமாக உயரும். அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையினர் வருமானம் - சுய வாழ்வாதாரம் இன்றி பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த வகையினர் கிராமப்புறப் பகுதிகளில் அதிகமாக இருப்பார்கள். மற்றொரு குறிப்பிடத்தக்க விவரம் - பிறரைச் சார்ந்திருக்கும் முதியோரிடையே ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம். அதே சமயத்தில், மொத்த மக்கள்தொகையில் இளைய வயதினரில் பெண்களின் எண்ணிக்கையைவிட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு பெரும் நெருக்கடியான நிலையை உருவாக்கப் போகிறது.
சென்ற 1956-ஆம் ஆண்டிலேயே ஹிந்து சட்டத் திருத்தத்தின்போது, ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டது. அதன்படி,முதுமைப் பருவம் அடைந்த பெற்றோரைப் பேணிப் பராமரிப்பது, மகன்கள் மற்றும் மகள்களின் கடமையாகும். அதன் பிறகு 1973-இல் குற்றவியல் சட்ட நடைமுறையில் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்கீழ், வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோர் நீதிமன்றத்தை அணுகிமுறையிடலாம். ஆனால், தங்கள் வாரிசுகளுக்கு வசதி இருந்தும் தங்களின் பராமரிப்புக்கு நிதி உதவி மறுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றத்தில் முதியோர் நிரூபிக்க வேண்டும். இதன் பிறகு 2007-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம்' ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.

இந்த சட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களைப் பேணுவதும் பராமரிப்பதும் அவர்களுடைய பிள்ளைகளின் கடமை மட்டுமல்ல, அவர்களின் பேரன், பேத்திகள் மற்றும் வாரிசுதாரர்களின் கடமையும் என்பது கட்டாயமானது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உள்பட அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்பது இதில் குறிப்பிடத்தக்கஅம்ச
மாகும்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசுகளும், கோட்ட அளவில் முதியோர் பரமாரிப்பு குறித்த புகார்களுக்கான தீர்ப்பாயங்களை அமைத்துள்ளன. மாவட்ட அளவில் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களை அணுகுவதைக்காட்டிலும், இந்தத் தீர்ப்பாயங்களை அணுகி புகார் அளிக்கும் நடைமுறையும் மனு தாக்கல் செய்யும் நடைமுறையும் எளிமையாக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை மனுக்களையோ புகார் மனுக்களையோ தாக்கல் செய்யலாம்.

மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன்' சட்டத்தைத் தவிர, ரிவர்ஸ் மார்ட்கேஜ்' என்கிற, வீட்டின் மீதான மறு அடைமானம் மூலம் கடன் தொகை திரட்டும் திட்டமும் தேசிய ஓய்வூதியத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டன.
மறு அடைமானம் திட்டத்தின் கீழ், ஒரு மூத்த குடிமகன் தனது வீட்டை வங்கியில் அடைமானம் வைத்து, தனது ஆயுள் காலம் வரை, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒரு தொகையைப் பெறலாம். ஒருவர் புதிதாக வாங்கும் வீட்டுக்கு கடன் பெறுவது என்பதற்கு நேர் எதிரான முறையில், அடைமானம் வைத்த வீட்டுக்கு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஈடுத் தொகை பெறும் முறை இது.

இதன் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை வீட்டு அடைமானத் தொகை பெற இயலும். மிக அவசரத் தேவைக்கு ரூ. 15 லட்சத்தை ஒரே தவணையாகப் பெற முடியும். வீட்டின் உரிமையாளரான முதியவர் தனது வாழ்நாளில் இந்தக் கடனை திருப்பி அடைக்க வேண்டியதில்லை. இதனிடையே அவர் அந்த வீட்டை விற்கவும் முடிவு செய்யலாம். அவ்வாறு விற்பனை செய்ய முடிவு செய்தால், கடன் தொகை போக மீதித் தொகையை அவர் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெயரில் சொத்து இருக்கும் பட்சத்தில், வீட்டின் கடைசி உரிமையாளர் காலமாகும் வரை, கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலை எழாது. இறுதி உரிமையாளர் காலமான பின்னர், வாரிசுகள் அந்தக் கடனை திருப்பிச் செலுத்தி வீட்டை தங்கள் பெயரில் வாங்கிக் கொள்ளலாம்.
முதுமைக் காலத்தில் உதவுவதற்காக உருவான மற்றொரு திட்டமான தேசிய ஓய்வூதிய திட்ட'த்தில் (என்.பி.எஸ்.) இணைவதற்கு முதுமை வரை காத்திருக்க வேண்டியதில்லை. இளமையில் பணி காலத்தில் ஒரு நபர் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து கணக்கைத் தொடங்கினால், அவர் வேறு எந்த நிறுவனத்துக்கு மாறினாலும், தொடர்ச்சியாக ஒரே என்.பி.எஸ். கணக்கை வைத்திருந்து, அதில் ஓய்வு காலத்துக்கான தொகையைச் செலுத்தி வரலாம். ஓய்வூதியத் திட்டம் இல்லாத தனியார் துறை ஊழியர்கள், தங்கள் முதுமை கால வருவாயைத் திட்டமிட்டுக் கொள்ள இது மிகவும் உதவும். அமைப்பு சாரா தொழில்களில் உள்ளவர்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து, கணக்குத் தொடங்கி, தங்கள் பணி காலம் முழுவதும் அதைப் பராமரித்து, பலன் பெற முடியும்.

அந்தக் கணக்கைத் தொடங்கிய நபருக்கு 60 வயது நிறைவடையும்போது, அவரது கணக்கில் செய்துள்ள முதலீட்டின் அடிப்படையில் அவர் ஆயுள் காலம் வரை ஓய்வூதியம் பெறலாம். பணி-ஊதிய பாதுகாப்பற்றோரில் சிலருக்கு தற்போது இந்தத் திட்டம் சிறு ஓய்வூதியத் தொகையை அளித்து வருகிறது என்றாலும், இந்தத் திட்டம் இன்னும் பரவலான முறையில் மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

இந்தத் திட்டங்களைத் தவிர, வங்கி சேமிப்புக் கணக்கு, வைப்புத் தொகை போன்றவற்றில் முதியோருக்கு என அதிக வட்டி விகிதம், பல விதமானக் கட்டணங்களில் அவர்களுக்கு சலுகை நடைமுறையில் உள்ளன. மேலும், ரயிலில் படுக்கை வசதியில் சலுகை - முன்னுரிமை, பேருந்துகளிலும் பிற போக்குவரத்து வசதிகளிலும் முதியோருக்கு இருக்கை - முன்னுரிமை உள்ளிட்ட சில சலுகைகள் அளித்து, முதியோர் நல்வாழ்வுக்கு வழிகோலப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, முதியோரின் இலையுதிர்' காலத்தில் அவர்களுடைய மன நலன் குறித்து சிந்திக்க வேண்டியதும் முக்கியமல்லவா?
கடந்த இருபது ஆண்டுகளாக இந்தக் கருத்தைப் பற்றி ஏராளமான கட்டுரைகளும் ஆய்வுகளும் குவிந்துள்ளன. இவை எல்லாவற்றிலும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் விஷயம், பிணைப்பு' என்பதாகும். அதாவது, முதியோர் பிறருடன் தொடர்பு கொண்டிருப்பது, பிணைந்திருப்பதுதான் மிகவும் முக்கியம் என்கிறது. முதியோர் நலனில் அரசும் சமூகமும் சில நல்ல முயற்சிகளை எடுத்தாலும்கூட, தற்போதைக்கு அவை பலவீனமாகவே இருக்கின்றன. நமது நாடு மிகவும் பரந்து, விரிந்திருக்கிறது; பொருளாதார வளம் போதாது; இங்கு மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்பட முடியும்.

முதியோர் சுயமாக தங்களுக்கு என்று எதுவும் செய்து கொள்ள முடியாதா? தங்கள் வயதையொத்த அந்நியர்களுடன் - புதியவர்களுடன் நட்பைத் தேடி வளர்த்துக் கொள்வது என்பது அவர்களின் வாழ்வின் அந்திப் பொழுதில் நடக்கிற காரியமல்ல.

நமது வாழ்நாளின் துடிப்பான காலகட்டத்திலேயே, சமூகத்தின் ஏணிப்படிகளில் துள்ளியேறும் பருவத்திலேயே, மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நட்புகளை வளர்த்துக் கொள்வதும் பிறர்க்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதும் அவசியம். உதவி-ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய நாம் நேரம் ஒதுக்குவோமானால், பின்னாளில் அது நமக்குப் பெரும் வெகுமதிகளை அள்ளித் தரும்.

அனைத்து முதியோரும் தங்களுடைய உரிமைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. பெண்கள், படிப்படியாகத் தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பற்றி அறிந்து கொண்டு வருகின்றனர். அதே போல, ஓய்வு காலத்துக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்கள், தங்களது உரிமைகள் குறித்து அறிந்திருப்பதும், அவசியம் ஏற்படும்போது அவற்றால் பயன் பெறுவது முக்கியமாகும்.

முதுமைக் காலத்தில் புனித இடங்களுக்குச் சுற்றுலா செல்வோர், தம் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் சந்நியாசம் வாங்கிக் கொள்வோர் - இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகச் சிறியதுதான். எல்லா முதியோருக்கும் அந்த வழிமுறை சரியான தீர்வாக அமைந்துவிடாது. கட்டுரையாளர்:

மனநல மருத்துவர்.
பழைய பெருமை பேச வேண்டாம்

By வாதூலன் | Published on : 04th August 2018 01:10 AM

  சில மாதங்களுக்கு முன்பு பெரியவர் ஒருவரின் சதாபிஷேக விழாவுக்குச் சென்றிருந்தேன். சொல்லப் போனால் அவர் அந்த வயதைப் போன வருடமே எட்டி விட்டார். ஆனாலும் மகன்கள் இரண்டு பேரும் இப்போதுதான் சேர்ந்து வர முடிந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்தேன்.

உறவினர் ஒருவரிடம் குடும்ப விஷயங்களை விசாரித்தபோது, அவர் ஓ காட்! எங்கள் குடும்பம் பாரத விலாஸ்... ஸாரி இன்டர்நேஷனல் வில்லா..' என்று தொடங்கி, தன் வாரிசுகள் எல்லாரும் அயல்நாட்டினரைத் திருமணம் புரிந்து கொண்டதைப் பெருமையாகவும் விரிவாகவும் சொல்லிக் கொண்டே போனார்.
சதாபிஷேக நாயகர், குறிப்பிட்ட சூழ்நிலையில் அந்தப் பேச்சை ரசிக்கவில்லையோ என்னவோ, குறுக்கிட்டு உரையாடலை திசை திருப்பினார். அந்த உறவினர் பெருமையாகப் பேசுவது போல் தோன்றினாலும், உள்ளுக்குள் வருத்தம் தோய்ந்திருந்ததைப் பேச்சில் கண்டுகொள்ள முடிந்தது. மனப் புண்ணை ஆற்றுவதற்கு ஒரு களிம்பு!

இதே மாதிரி அடிக்கடி கோயிலில் சந்திக்கும் சினேகிதி ஒருவர் என் மனைவியிடம் தன் பெயரனின் உடல் நிலையைப் பற்றிச் சொன்னார். என் அண்ணா 40 வருஷமாகப் பிட்ஸ்பெர்கில் இருக்கான். அங்கே கூட இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையாம்' என்றார் (பாவம், ஏதோ நரம்புத் தசைக் கோளாறாம்). அதாவது உலகத்தில் எங்குமே சிகிச்சை கிடைக்காத வினோத நோய் தங்கள் பெயரனைப் பிடித்துள்ளதாம். இத்தகைய மனோபாவமும், ஆழமான சோகத்தை உள்ளுக்குள் புதைத்து விட்டு, வெளியே பெருமையாகக் காட்டிக்கொள்ளும் ரகம்தான்.
இப்போது இந்தியாவிலேயே மருத்துவத்தில் அபார முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறுபது வயசு ஆயுளே அதிசயமாக இருந்தது முன்பெல்லாம். இப்போது நூறு வயது கூட வியப்பில்லை. என்னைவிட வயதான மனிதர் ஒருவர் என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் வயதை கேட்டுக் கொள்ளுவார். எனக்கு எண்பத்தைந்து... பாரு, நீ ரொம்ப சின்னவன்' என்று கூறி இரு சக்கர வாகனத்தில் பெருமை பொங்க ஏறிக் கொண்டு போவார். நீண்ட காலம் நலமுடன் வாழ்வது என்பது இறைவன் அளித்த வரம் அல்லது இயற்கை தந்த அரும்கொடை.

ஆனாலும் ஒரு சில பெருமைகள் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் அமைகின்றன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கள் குடும்ப மருத்துவரிடம் வழக்கமான பரிசோதனைக்குச் சென்ற போது என் மனைவியிடம் பரவாயில்லைம்மா, டயாபிடிஸ் எல்லாம் குறைஞ்சிருக்கு' என்றார். அதே தினம் எனக்கு அவர் மகனையும் பார்ப்பதாக நிச்சயித்திருந்தாலும், அவரைப் பார்க்க முடியவில்லை. அதைப் பற்றிக் கேட்டபோது, நகரிலுள்ள பிரபல மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு ஒரு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணினான். அந்த பேஷன்ட்ட பார்க்கப் போயிருக்கான்' என்றார். டாக்டருடைய முகத்தில் பெருமை ஜொலித்தது. மகன் தந்தைக்காற்றும் உதவி' என்று நினைத்துக் கொண்டேன்.
தொழில் பெருமைபோல, கலைப் பெருமை என்பதும் ஒன்றுண்டு. சென்ற டிசம்பர் சீஸனில், ஒரு கச்சேரிக்குப் போயிருந்தோம். எங்களுக்கு மூன்று வரிசை முன்பாக ஒருவர் உட்கார்ந்து கொண்டு ஆ! பலே! அப்படிப் போடு' என்று தொடையில் தாளம் போட்டுக் கொண்டு, தானும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் பாடகரின் தகப்பனார் என்ற உண்மை, கச்சேரி முடிந்த பின்தான் தெரிய வந்தது. நூற்றுக்கணக்கான ரசிகர்களைத் தன் குரல் வளத்தால் கட்டிப்போட்டு மகிழ்விப்பது எளிதான செயலா என்ன? தன் மகனைப் பற்றிய அந்த மனிதரின் பெருமை நியாயமானதாகவே தோன்றியது.

செய்தொழில், கலை போன்றவற்றில் பெயரெடுத்திருப்பவரின் முதுகில் தட்டிக் கொடுப்பது அந்த நபரை மேலும் உற்சாகப்படுத்த உதவும்தான். ஆனால், வியாபாரத்தில் இந்தத் தன்மை சில சமயங்களில் எதிர்மறையாக மாற்றிவிடும்.

அண்மையில் ஒரு நிகழ்வு. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டே போனார். அவரின் தாயார் எல்லாரிடமும் பெருமையாகச் சொல்லியபடியிருந்தார். அவன் சூப்பர் இன்டெலிஜென்ட் மாமி' போன்ற அடைமொழிகள் வேறு. உள்ளபடியே அவன் பெயர் பிரபல நாளேடுகளில் நல்லபடியாக அடிபட்டுக் கொண்டிருந்தது.
ஆனால், போகப் போக நிலைமை முற்றிலும் மாறியது. வெற்றிப் பாதையில் விரைந்து செல்கையில் எங்கேயோ சறுக்கியது. விளைவு? இன்று சிக்கலில் மாட்டிக் கொண்டு வழக்குரைஞர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறான். இப்போதும் அவன் பெயர் ஏடுகளில் வருகிறது. ஆனால் வேறுவிதமாக! பெற்றோரும் உற்றாரும் முக்கியமான வேளைகளில் அறிவுரை சொல்லி, வேகத்தைக் குறைக்கும் வேகத்தடையாக இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இன்றைய நாளில் பழைய பாரம்பரியப் பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க யாரும் தயாரில்லை. நூறு ரூபாய் சம்பளத்தில் மூன்று பேரைக் கட்டிக் காத்தேன்'... 1960-லேயே எங்களுக்கு ரெண்டு கார் இருந்தது' போன்ற பெருமைகள் வீண்.

ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அதை உணராமல், பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டே பொழுதைக் கடத்துகிறார்கள். மொழி, மதம், குடும்பம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொன்று. அவர்கள் கூற்றில் ஓரளவு உண்மை இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் எதார்த்த நிலைமையை உணராது செயல்பட்டால்? மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலே மகிமை இல்லை' என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் பாடியிருக்கிறாரே?

இன்றைய அரசியலில் மிக தூக்கலாகத் தெரிவது இரண்டு தன்மைகள்தான். முதலாவது, குறைந்துவரும் சகிப்புத் தன்மை; இரண்டாவது அதிகரித்துவரும் ஊழல். என்றைக்கு முன்னது அதிகரித்து, இரண்டாவது குறைகிறதோ அன்றுதான் இந்தியக் குடிமகனாக நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
விமானத்தில் 150 பேர் உயிர் தப்பினர்

Added : ஆக 04, 2018 05:32

புதுடில்லி:மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவின், ரியாத் நகரில் இருந்து, 150 பேருடன் மும்பை புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் சறுக்கியபடி, ரன் வேயை விட்டு வெளியில் சென்று நின்றதால், விபத்து நடக்காமல் தப்பியது.
நேற்று காலை, ரியாத்தில் இருந்து, 142 பயணியர் உட்பட, 150 பேருடன், மும்பைக்கு புறப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' விமானம் சறுக்கியதால், ரன் வேயை விட்டு வெளியே சென்று நின்றது.உடனே சம்பவ இடத்திற்கு வந்த, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்தில் இருந்த பயணியரை பத்திரமாக கீழே இறக்கி, விமான நிலைய வளாக கட்டடத்தில் தங்க வைத்தனர்.
ரன் வேயில் சென்ற போது, விமானி திடீரென பிரேக் போட்டதால், விமானம், ரன் வேயை தாண்டி சென்று நின்றதாக, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.சம்பவம் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக, மும்பையை சேர்ந்த, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ இடங்கள் நிரம்பின இன்று மாணவர் சேர்க்கை இல்லை

Added : ஆக 04, 2018 00:04

சென்னை:தமிழகத்தில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின. இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நடைபெறுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில், 516 எம்.பி.பி.எஸ்., - 715 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 30, 31ல் நடந்தது.
இந்த கவுன்சிலிங்கில் நிரம்பாத, 128 இடங்களுக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், பகல், 12:30 மணிக்குள் அனைத்து இடங்களும் நிரம்பின. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:நிர்வாக ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் யாரும் வர வேண்டாம். இன்றைய கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ராமாயண காவிய யாத்திரை ரயில் ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு

Added : ஆக 03, 2018 23:39 |


சென்னை: ராமஜென்ம பூமியான அயோத்திக்கு, ராமாயண காவிய யாத்திரை என்ற, 'ஏசி' சிறப்பு ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது. இந்த யாத்திரை ரயில், கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, வரும், 31ல் புறப்பட்டு, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

இப்பயணத்தில், ராமபிரான் வனவாசம் தொடங்கிய, மத்திய பிரதேசத்தில் உள்ள சித்திரக்கூடம், அகலிகை சாபவிமோசனம் பெற்ற இடமான, உத்தர பிரதேசத்தில் உள்ள சிருங்கவெற்பூர் மற்றும், துளசிதாசர் ராமாயணம் இயற்றிய, துளசி மானசமந்திர் சென்று வரலாம்.

பீஹார் மாநிலத்தில் உள்ள பழமையான மிதிலை நகரான தர்பங்கா, சீதை பிறந்ததாக கருதப்படும் சீதாமார்ஹி, ராமர் பிறந்த உத்தர பிரதேசம், அயோத்தி, சீதை தங்கியிருந்த மஹாராஷ்டிரா மாநிலம் பஞ்சவடி, ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற, தமிழகத்தின் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் உட்பட, பல புனித தலங்களுக்கு சென்று வரலாம்.

மொத்தம், 12 நாட்கள் சுற்றுலாவிற்கு, 'ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 39 ஆயிரத்து, 350 ரூபாய் கட்டணம்.மேலும் தகவலுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40681, 98409 02919 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை: துணைவேந்தர் உறுதி

Added : ஆக 03, 2018 14:21 |


  சென்னை: அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை என துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.

சஸ்பெண்ட்

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளுக்கு தேர்வு நடத்தும் தேர்வுத் துறையில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்ததாக புகார்எழுந்தது. அதிக மதிப்பெண் வழங்க மாணவர்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லுாரி முதல்வர் விஜயகுமார் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உமா, விஜயகுமார், அண்ணா பல்கலையில் கணிதத்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 19 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெற்ற 19 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பி லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது; முறைகேட்டில்ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஊழலுக்கு இடமளிக்க மாட்டேன் என்றும் அவர் கூறினார்.

பறிமுதல்

இது தொடர்பாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறுகையில், அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை. விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு புகாரில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எத்தனை பேருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரியாது. புகார் குறித்து விரிவான , வெளிப்படையான விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் தொடர்புள்ளவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விடைத்தாள் முறைகேடு தொடர்பாக சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோப்பையும் கவனமாக பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

நடவடிக்கை

அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், பேராசரியை உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிருபணமாகியுள்ளதாகவும், ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

NEWS TODAY 27.06.2026