Thursday, May 2, 2019

டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

Added : மே 02, 2019 06:37

சென்னை:டாக்டர்கள், செவிலியர்கள் நியமனத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றும்படி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவிலியர்கள் நியமனத்துக்கு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு:நடைமுறையில் உள்ள தேர்வு விதிகளை பின்பற்றாமல் 2015ம் ஆண்டில் தேர்வு பட்டியலில் உள்ளவர்களை செவிலியர் பணிக்கு நியமிக்கின்றனர்.இவர்கள் ௨௦௧௫ல் நடந்த தேர்வில் வெற்றி பெறவில்லை. இதை அனுமதித்தால் எங்களுக்கு தேர்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
.மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் புகழ்காந்தி; அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் சிறப்பு பிளீடர் தம்பிதுரை ஆகியோர் ஆஜராகினர்.நீதிபதி பிறப்பித்த உத்தரவு:கடந்த 2015ல் தேர்ச்சி பெறாதவர்களை செவிலியர் பணிக்கு நியமிக்கும் நடைமுறையை அனுமதித்தால் பின் வாசல் வழியாக நுழைவதை ஊக்குவிப்பது போல ஆகிவிடும். எனவே நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை செய்யக் கூடாது.ஒப்பந்த ஊழியர்களைதேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம்.பணியிடங்களை நிரப்பும் வரை ஒப்பந்த ஊழியர்கள் பணியில் தொடரலாம். அதன்பின் அவர்களை விடுவிக்க வேண்டும்.டாக்டர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் பணியிடங்களில் நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி தேர்வு செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...