Thursday, May 30, 2019

சிங்கப்பூருக்கு கடத்த முயற்சிசென்னை விமான நிலையத்தில் 64 கிலோ சுறா மீன் துடுப்புகள் பறிமுதல்


சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.32 லட்சம் மதிப்புள்ள 64 கிலோ சுறா மீன் துடுப்புகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பதிவு: மே 30, 2019 03:45 AM மாற்றம்: மே 30, 2019 04:12 AM
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சிங்கப்பூருக்கு செல்ல வந்த சென்னையை சேர்ந்த மதார்(வயது 25), மதுரையை சேர்ந்த ஷேக்மதார்(35) ஆகியோரது உடைமைகளை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் இருந்த அட்டைபெட்டிகளில் சுறா மீனின் துடுப்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். இதுபற்றி மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, சுறா மீனின் துடுப்புகளை ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரின் விமான பயணத்தை ரத்து செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடம் இருந்தும் ரூ.32 லட்சம் மதிப்புள்ள 64 கிலோ எடை கொண்ட சுறா மீனின் துடுப்புகளை பறிமுதல் செய்தனர். சுறா மீனின் துடுப்புகள் சீனாவில் மருத்துவ சூப்பாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

பின்னர் மேல் விசாரணைக்காக பிடிபட்ட 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சுறா மீனின் துடுப்புகள் மத்திய வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Can BCI halt enrolment of an entire graduating batch?

Can BCI halt enrolment of an entire graduating batch? Manan Kumar Mishra Rizmi Lia M. Chennai. 15.08.2026 On Thursday, Bar Council of India ...