Saturday, May 25, 2019

மாட்டின் மீது மோதிய ரயில் இன்ஜின் பழுதால் தாமதம்

Added : மே 25, 2019 00:04

ராமநாதபுரம், ராமேஸ்வரம்-சென்னை சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் ராமநாதபுரம் அருகே மாடு மீது மோதியதில் இன்ஜினில் பழுது ஏற்பட்டதால் 3 மணி நேரம் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8:15 மணிக்கு புறப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில், ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை ரயில்வே கேட் அருகே சென்ற மாடு ரயிலில் அடிப்பட்டு இறந்தது. இதனால் ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து பழுதை சரி செய்து 3:00 மணிநேரம் தாமதமாக இரவு 12:45 மணிக்கு ரயில் ராமநாதபுரம் வந்து பயணிகளை ஏற்றிச் சென்றது.மூன்று மணிநேரம் தாமதத்தால் பயணிகள் அவதியுற்றனர். தண்டவாளத்தில் மாடு அடிபட்டது தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...