Saturday, May 4, 2019

ஆறு மருத்துவ கல்லுாரிகளில்

Added : மே 04, 2019 02:45

சென்னை, மே ௪-

தடை விதிக்கப்பட்ட தனியார் கல்லுாரி மாணவர்கள், 108பேரை, வேறு ஆறு தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, மறு ஆய்வு மனுவை, உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லுாரி  2016 - 17ம் ஆண்டில், புதிதாக துவங்கப்பட்டது. அதே ஆண்டில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

தடை விதிப்பு

இந்திய மருத்துவக் கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், 2018 18மற்றும் ௨௦18 - 19ம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, இந்தக் கல்லுாரியில் சேர்ந்த, ௧௦௮ மாணவர்கள், தங்களை வேறு கல்லுாரிகளுக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது.மேல் முறையீடுஇதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

மனுவை, நீதிபதி, எம்.சத்தியநாராயணன் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து, பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் உள்ள, ௨௨ அரசு மருத்துவக் கல்லுாரிகளில், இந்த மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய பரிந்துரையை, இந்திய மருத்துவக் கவுன்சில் ஆட்சி மன்ற குழுவுக்கு, தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும். 

பரிந்துரையை பெற்ற பின், விதிமுறைகளின்படி பரிசீலித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதன்பின், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுஇருந்தது.
இதையடுத்து, மறு ஆய்வு மனுவை, தமிழக அரசு தாக்கல் செய்தது. மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கடிதத்தில், ஆறு தனியார் மருத்துவக் கல்லுாரி களில், மாணவர்களை சேர்ப்பதற்கு, அனுமதி அளிக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின் கடிதத்தை பதிவு செய்து, மறு ஆய்வு மனுக்களின் விசாரணையை, டிவிஷன் பெஞ்ச் முடித்து வைத்தது.

No comments:

Post a Comment

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya

IAS reshuffle: Pradeep Yadav is secy to Udhaya  TIMES NEWS NETWORK 03.10.2024  Chennai : State govt on Tuesday carried out a reshuffle of se...