Thursday, October 3, 2019

ஓட்டுனர், நடத்துனர் விடுப்பு எடுக்க தடை

Added : அக் 03, 2019 01:15

சென்னை : ஆயுத பூஜையை முன்னிட்டு, போக்குவரத்து ஊழியர்கள், நாளை முதல் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம், வரும், 7ம் தேதி, ஆயுத பூஜையும், 8ம் தேதி, விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாட்கள் அரசு விடுமுறை நாட்கள். அதாவது, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என, தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்போர், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வர முடியும். அவர்கள் வசதிக்காக, நாளை முதல், சிறப்பு பஸ்களை இயக்க, அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி, நாளை முதல், 6ம் தேதி வரை, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வழக்கமான, 2,225 பஸ்களுடன், சிறப்பு பஸ்களாக, மூன்று நாட்களும் சேர்த்து, 6,145 பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், திருப்பூரிலிருந்து பிற ஊர்களுக்கு, 280 பஸ்கள்; கோவையில் இருந்து, பிற ஊர்களுக்கு, 717 பஸ்கள்; பெங்களூருவில் இருந்து, பிற ஊர்களுக்கு, 245 பஸ்களும் இயக்கப் படுகின்றன.அதேபோல, ஆயுதபூஜை முடிந்த பின், 8, 9- தேதிகளில், பிற நகரங்களில் இருந்து, திருப்பூருக்கு, 266; கோவைக்கு, 490; பெங்களூருவுக்கு, 237 பஸ்களும் இயக்கப் பட உள்ளன. சென்னைக்கு, மக்களின் வருகைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனால், இன்றுமுதல், போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுப்பில் உள்ளோரும், உடனடியாக பணிக்கு திரும்ப, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Chennai faces worsening LPG crisis as wait for refill stretches to 50 days

Chennai faces worsening LPG crisis as wait for refill stretches to 50 days The supply of LPG cylinders to domestic consumers has been impact...