Wednesday, November 13, 2019

மாணவன் கைரேகை ஆய்வுக்கு உத்தரவு

Added : நவ 13, 2019 01:08

மதுரை : 'நீட்' தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவரின் கைரேகையை ஆய்வு செய்ய, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோபாலபுரம் மாணவர் ரிஷிகாந்த், 19, அவரது தந்தை ரவிகுமார், 61, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் எங்களை விசாரணைக்கு அழைக்கின்றனர். எங்களை கைது செய்வரோ என அச்சப்படுகிறோம். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தனர் .நீதிபதி, ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு:ரிஷிகாந்தின் கைவிரல் ரேகை பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக அவர், சம்பந்தப்பட்ட கல்லுாரியில் ஆஜராக வேண்டும்.

மனுதாரர்கள் இருவரையும் கைது செய்யக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு, நவ. 19 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...