Wednesday, March 25, 2020

தயார் நிலையில் பல்கலை கல்லூரி விடுதிகள் தனிமை மையங்களாக்க திட்டம்

Added : மார் 25, 2020 00:01

மதுரை, தமிழகத்தில் பல்கலை மற்றும் கல்லுாரி விடுதிகளை தயார் நிலையில் வைக்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்ந்து பல்கலை, கல்லுாரிகள், ஆராய்ச்சியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் சில உத்தரவுகளை உயர்கல்வி செயலாளர் அபூர்வா பிறப்பித்துள்ளார்.இதன்படி பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் உள்ள அனைத்து விடுதிகளும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும். 

பதிவாளர்கள், கல்லுாரி முதல்வர்கள், விடுதி காப்பாளர்களை எந்த நேரத்திலும் அழைத்தாலும் பதில் அளிக்கும் நிலையிலும், தேவை இருப்பின் அரை மணி நேரத்தில் கல்லுாரி, பல்கலைகளுக்கு வர தயாராக இருக்க வேண்டும். கல்லுாரி, பல்கலைக்கு மிக அருகில் உள்ளஆசிரியர் ஒருவரிடம் விடுதிகளின் சாவியை கொாடுத்து வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.பேராசிரியர்கள் கூறியதாவது: கொரோனா தாக்கம் அதிகரித்தால் பாதிக்கப்பட்டவர்களை இந்த விடுதிகளில் தனிமைப்படுத்தும் முயற்சியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்தால் மருத்துவமனை மற்றும் முகாம்களை மட்டும் நம்பியிருக்க முடியாது. பல்கலை சார்பில் இதுதொடர்பாக அனைத்து கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் சில ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தலாம், என்றனர்.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...