Tuesday, March 31, 2020

கொரோனா பாதிப்பை தவிர்க்க முதியோருக்கு மத்திய அரசு அறிவுரை

Added : மார் 30, 2020 23:03

புதுடில்லி:மத்திய சுகாதார அமைச்சகம், மூத்த குடிமக்கள், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை வெளியிட்டுள்ளது.

முதியோர்கள், என்ன செய்யலாம், எதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:செய்ய வேண்டியவை*அடிக்கடி முகம், கைகளை கழுவ வேண்டும்.* வீட்டிற்கு வரும் விருந்தினர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.* அப்படியே சந்தித்தாலும், குறைந்தது மூன்றடி இடைவெளி விட்டு பேச வேண்டும்.*வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து களை தொடர வேண்டும்.* தினமும் உடற்பயிற்சி செய்யலாம்.*வீட்டில் சமைத்த சூடான உணவுகள், பழரசம், போதிய அளவு தண்ணீர் குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்*கண், மூட்டு அறுவை சிகிச்சை ஆகியவற்றை தள்ளி வைக்கலாம்.*அடிக்கடி பயன்படுத்தும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கலாம்.* லேசான காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுக வேண்டும்* உடல் நலன் குறித்து, குடும்ப மருத்துவரை நேரில் சந்திப்பதற்குப் பதிலாக, தொலைபேசி மூலம் ஆலோசனை பெறலாம்.தவிர்க்க வேண்டியவை*காய்ச்சல், இருமல் இருந்தால், சுய மருத்துவம் பார்க்கக் கூடாது.*அதிக மக்கள் கூடும் காய்கறி சந்தைகள், மத வழிபாட்டு தலங்கள், பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.*இருமல், தும்மலின் போது, வெறும் கையால் தடுக்கக் கூடாது; கைக்குட்டை அல்லது துண்டை பயன்படுத்தலாம்.*காய்ச்சல் அல்லது இருமல் உள்ளோர் அருகில் செல்லக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வாசனை, உணவு ருசி இல்லாமல் இருப்பதும், கொரோனா பாதிப்புக்கான துவக்க அறிகுறி என, மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...