Friday, May 8, 2015

ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!

சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒன்றரை கோடி ரூபாய் வரை தருவதாக சொன்னபோதிலும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

அதற்கு அவர் கூறியுள்ள காரணம்தான் நெகிழ வைக்கிறது.

இந்த வாரம் ஆனந்த விகடனில் அவர் அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக கேட்கப்பட்டுள்ள கேள்வியும், பதிலும் வருமாறு:
விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?

''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.

'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

Return to frontpage

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 (திங்கள்கிழமை) வெளியாகிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

பெங்களூர் போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை:

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ல் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, பெங்களூருவில் ஒரு சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தன. அதுபோல் இம்முறை எந்தச் சம்பவமும் நடைபெறாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவது என பெங்களூர் காவல்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பெங்களூர் கமிஷனர் அலுலகத்தில், மாநகர ஆணையர் எம்.என்.ரெட்டி, இணை ஆணையர் ஹரிசேகரன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் அலோகுமார் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். பெங்களூரைச் சுற்றி உரிய பாதுகாப்பு போடுவது உள்ளிட்ட சிறப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர்.

நிரம்பும் ஹோட்டல் அறைகள்...

இதனிடையே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களில் அறைகளை முன் பதிவு செய்தனர். மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது, தீர்ப்பு தேதி உறுதி செய்யப்பட்டதால், பெங்களூருவில் உள்ள ஹோட்டல்களின் அறைகள் மிகத் தீவிரமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வழக்கின் பின்னணியும் நிறைவடைந்த தீர்ப்பு எழுதும் பணிகளும்

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12-ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், “பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்” என அதிரடி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமார சாமி ஏப்ரல் 29-ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம் பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.

சொத்து விவரங்களை கணக்கிட‌ ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர் கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார்.

தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய்வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டார். தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங்களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கிருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது.

மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவு:

முன்னதாக, நீதிபதிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, "கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கினாலும் ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பை எழுத வேண்டி இருப்பதால் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. அதேபோல் நீதிமன்ற ஊழியர்களும் அவருடன் காலநேரம் பார்க்காமல் தொடர்ந்து முழு ஒத்துழைப்பை அளித்தனர். இதனால் தீர்ப்பு எழுதும் பணிகள் நிறைவடைந்தது" என்றனர்.

திருப்பதி பெருமாளுக்கு வடிகிறது வியர்வை - திருப்பதி சில அரிய தகவல்கள்


cinema.vikatan.com

தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

இங்குள்ள மடப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.



ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

0 மாணவிகள் தற்கொலை - இது பகிரங்க போர் அல்லவா?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியாகி முதல் மூன்று இடங்களையும் பிடித்த மாணவர்களின் படங்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, தேர்வு முடிவுகளைப் போல தற்கொலை முடிவுகள் வரிசையாக வெளிவரத் துவங்கின.



ஈரோட்டை சேர்ந்த காளிதாஸ் என்ற நெசவுத் தொழிலாளியின் மகள் மஞ்சுளா, தேர்வில் வெற்றி பெற்றிருந்தும் மதிப்பெண் குறைந்து விட்டதே என தீக்குளித்து இறந்திருக்கிறார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ரகு, தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியாத்தம் நாகராஜ் மகன் குணசேகரன், சென்னை செம்மஞ்சேரியில் வசிக்கும் கரிகாலன் மகள் இலக்கியா, மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை. தேனி, கண்டமனூர் அன்னக்கொடி மகன் அஜய்யோ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோபிசெட்டிப்பாளையம் மாரிமுத்து என்பவரின் மகள் ஆனந்தி, தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வால்பாறை பச்சைமலை எஸ்டேட் பகுதி மாணவி கலா தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.

விழுப்புரம், தோகைப்பாடி காலனி முருகன் மகள் தேவதர்ஷினி, கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்து விடும் என்ற அச்சத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை. இப்படி விரிந்து வேதனையாக நினைவுகளாகச் செல்கிறது இளம் பள்ளிச் சிறுவர்களின் தற்கொலைகள்.

'தேர்வில் வென்றால் மட்டும் போதாது உயர் கல்விக்கு தகுதி பெறும் உயர்ந்த மதிப்பெண் பெற்றாக வேண்டும்...!' என்ற அழுத்தம் மாணவர்கள் மீது சுமத்தப்படுகிறது. சென்ற தலைமுறை வரை தேர்வில் வெற்றி என்பதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வந்தது. அப்போது கூட இந்த அளவு தற்கொலை நிகழ்ந்ததில்லை. பள்ளி வாழ்க்கை, மதிப்பெண்களுக்கு அப்பால் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்ட தலைமுறை அது. ஆனால், இந்த தலைமுறை சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க மறுத்து விட்டது நமது சமூக அமைப்பு.

'வெற்றி பெறுவதல்ல. அதிகம் மதிப்பெண் பெற வேண்டும்., போட்டியில் நீ இருக்க வேண்டும் என்றால் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், மனப்பாடம் செய்து மதிப்பெண்களை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும்!' என போதிக்கிறது நமது புதிய கல்வி மரபு. உண்மையில் பள்ளிக்கூடங்களின் நோக்கம்தான் என்ன?

மதிப்பெண் பெறுவது. 100% சதவீத தேர்ச்சி விகிதத்தை காட்டி, மேலும் மேலும் கல்விப் போட்டியில் தங்கள் பள்ளியை முதன்மைப் பள்ளியாக மாற்றுவது என்ற பிராய்லர் பள்ளி தேர்வு முறைகளே இந்தக் தற்கொலைகளுக்கு காரணம். நமது கல்வி முறை கடுமையாக பிளவுபட்டு நிற்கிறது. ஏழைகளுக்கு சேரிப் பள்ளிகளும், செல்வந்தவர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட பள்ளிகளுமாக கல்வித் திட்டங்களே வாழ்க்கை வசதிகளுக்கு ஏற்ப மாணவர் பருவத்தை பிளவுபடுத்தி விட்டது.

நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற பகுதிகளிலும், தமிழகம் முழுக்க கடை விரித்திருக்கும் தனியார் பள்ளிகளும் குறுக்கு வழியில் அதிக மதிப்பெண்களுக்காக மாணவர்களை துன்புறுத்துகின்றன. பிளஸ் டூ பாடத்தை 11-ம் வகுப்பிலே தொடங்கி நடத்துகின்றன. டியூஷன் செல்லவோ, பணம் செல்வழித்து படிக்கவோ வசதியற்ற மாணவர்கள் ஓராண்டு மட்டுமே படிக்கும் பாடத்தை, வசதியுள்ள மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். டியூஷன் செல்கிறார்கள். இது போக உள்ளூர் ஆசிரியர்களின் உதவியோடு நடக்கும் தேர்வுகளில் கேள்வித்தாள்களும் லீக் ஆகி, மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படி ஒரு கல்விமுறையை நடத்தி முதல்மதிப்பெண் கொண்டாட்டங்களை பெருமையாக கொண்டாட பள்ளிகள் தேவையில்லை. டியூட்டோரியல்களே போதுமானவை.

இதற்கிடையில் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட்டு, 8-ம் வகுப்பிலேயே மாணவர்களை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் போடுகிறது தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு. இன்னொரு பக்கம், அரசு பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை கைவிட மத்திய அரசு தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.) வழங்கியுள்ள உரிமையை இது இல்லாதொழிக்கிறது.

பள்ளிக்கூடங்களின் நோக்கம்

ஒரு குழந்தை பிறப்பதன் அடிப்படை, அது குழந்தை பிராயத்தில் இருந்து வளரும் போது சமூக விலங்காக மாற வேண்டும். ஆமாம், சமூக மயமாதல் என்பது வெறுமனே பெற்றோரிடம் மட்டும் நடப்பதல்ல. பள்ளிக்கூடம் அதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், இன்றைய கல்வி முறை நமது இளம் தலைமுறையை சமூக மயமாக்குவதற்கு பதிலாக, சமூகத்தில் இருந்து மிக மோசமாக விலக்கி வைக்கிறது. பாரபட்சமாக அடித்துத் துரத்துகிறது. அதன் விளைவுகள்தான் இந்த தற்கொலைகள். ஒரு வகையில் இது தனியார் கல்விமுறை நடத்தும் கொலைகளே.

இந்த கல்வியாண்டில் 100 சதவிகிதத் தேர்ச்சி விகிதத்தை அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் இலக்காக நிர்ணயித்துள்ளது பள்ளிக் கல்வித் துறை. ஆனால் தனியார் பள்ளிகளை விட இந்த ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கியுள்ளது அரசுப் பள்ளிகள். இது அரசும், பல விதமான பாரபட்சமான கல்விமுறையும் நமது ஏழைக் குழந்தைகள் மீது நடத்தும் பகிரங்கமான போர் அல்லவா?

-டி.அருள் எழிலன்

PHYSICS MARKS WILL DECIDE MEDICAL SEAT...DECCAN CHRONICLE


US-Indians raise hundreds of thousands of dollars for Nepal

WASHINGTON: Indian-Americans, along with the small Nepali community, are raising hundreds of thousands of dollars to help the victims in the quake-hit Nepal.

Grocery stores, gas stations owned by Indian-Americans and temples have kept donation boxes outside for the people to donate generously.

Several temples in California and Maryland have been making special effort to collect funds for the quake victims.

"We are making several fund raising efforts in various cities in the US for Nepal," said Chandrakant Patel, president of the Overseas Friends of BJP-USA.

"We are committed to provide support for the immediate relief and rehabilitation effort in the worst affected areas of Nepal," he said.

Last week in Los Angeles more than $160,000 were raised for the Nepal earthquake victims.

More than $360,000 were raised by not for profit Sewa International USA.

The American India Foundation (AIF), set up in the aftermathe Gujarat earthquake, said it had established a Nepal Rehabilitation Fund whose entire donation will directly go to the rehabilitation process.

"Given that one of our core strengths is in livelihoods and skill building, this fund will support the rehabilitation of lost livelihoods for communities across Nepal, to rebuild and provide a new life filled with dignity, opportunity, and hope," AIF said in a statement.

Meanwhile, the US Agency for International Development (USAID) Acting Administrator Alfonso Lenhardt yesterday announced an additional $11 million in assistance for Nepal earthquake response and recovery efforts, bringing the total US humanitarian assistance for the disaster to nearly $26 million.

Lenhardt made the announcement during a trip to Nepal, where he surveyed the damage caused by the powerful April 25 earthquake.

Married daughter can get dad's job: Madras high court



CHENNAI: Married daughter of a government employee is eligible for a job on compassionate grounds after the death of her father while in service, the Madras high court has ruled. But, she should fulfil two requirements, the court said. One, she must obtain no-objection certificate from other siblings; two, she and her husband must give an undertaking that she will take care of other members of her parents' family from her salary.

An order to this effect was passed by a division bench of Justice Satish K Agnihotri and Justice M Venugopal recently, while dealing with a case of I Kayalvizhi whose father V Indarjith died while in service in the education department.

"A married daughter is eligible for consideration, subject to submission of no-objection certificate of other members of the deceased's family and also with an undertaking from her and her husband that she will take care of other members of the parents' family," the bench said.

Kayalvizhi was the only daughter of Indarjith and she was married by the time he died in harness. She then applied for appointment under compassionate grounds. When she was denied appointment, she moved the high court. Citing a government order governing the issue, a single judge said she was entitled to be considered for the job. Her marriage alone need not necessarily disentitle her from claiming the job, as marriage is not a disqualification, the judge said.

Assailing the order, the assistant primary education officer in Anthiyur in Erode district filed the present appeal before the bench.

The judges upheld Kayalvizhi's rights in this regard, and directed the authorities to consider her case for appointment within a period of four weeks. The only modification made in the single judge order was the NOC from members in her paternal family and an undertaking from her husband.

In this regard, the bench cited an earlier order of the court in the Kamatchi vs state of Tamil Nadu, wherein it had been said that even if there are other members in the family, the beneficiary could take a no-objection from them and stake her/his claim for appointment under compassionate grounds.

The GO, on its part, clearly said an NOC from the remaining members of the family, an undertaking from the beneficiary that he/she shall be helpful to her/his parents' family and an assurance from the spouse of the beneficiary that he/she shall not cause hindrance to her/him in helping members of his/her parents' family in future, should be fulfilled to become eligible for appointment.

Will Salman Khan get bail, stay out of jail?..TOI

MUMBAI: A day after Bollywood superstar Salman Khan was convicted and sentenced to 5 years RI in a 2002 hit-and-run case, the question on everyone's lips was: Will the Bombay high court admit his appeal and grant him bail today? Even as Bollywood personalities threw their weight behind Khan saying the sentence was too harsh, there was some relief for the actor: the Supreme Court refused to stay the interim bail granted by the HC. Also, Khan does not have to be physically present in the HC today. Usually, in law, a first appeal against a conviction is admitted by a higher court. But if bail is denied, Khan can go to the Supreme Court the same day.

Sessions judge D W Deshpande's 240-page judgment, a copy of which came into exclusive possession of TOI first, makes it clear that he did not believe any statement made by the actor in his defence, nor did he believe Khan's driver Ashok Singh who said it was he, and not Salman, who was driving. "Singh is a got up witness," the judgment said.

About Khan, the judge noted: "The accused is a well-known cine actor and had knowledge that one should not drive the vehicle without licence or after consuming liquor and that too late at night. These are basic rules."

READ ALSO: Salman Khan's appeal, bail plea will be heard today

Stars twinkle in Galaxy, fans keep a count

Salman Khan told TOI in 2002 driver was at wheel

The entire judgment appears to rest primarily on the testimony of police constable Ravindra Patil, who was the actor's bodyguard and was with him in the Land Cruiser when it rammed into a Bandra bakery at 2.45am on September 28, 2002, killing one and injuring four. Patil said he had asked Khan, who was drunk, to slow down. Salman's lawyer Shrikant Shivade could not cross-examine Patil, who died in 2007, but the court held his evidence to be admissible and said "there is no reason for any prudent man to believe that Patil is falsely implicating Salman due to mob or media pressure".



Bollywood actor Salman Khan and his father Salim Khan seeing off Maharashtra Navnirman Sena chief Raj Thackeray who met the actor in Mumbai on Thursday.

The judge said that since the beginning, it was never Khan's defence that his driver Singh was driving. Besides, no one suggested that Patil or singer Kamaal Khan was driving, and Khan never questioned any witness to suggest his other driver Altaf was driving initially, till he went to J W Marriott. "The only irresistible inference is that only Salman was at the wheel," the judge concluded. The judgment said special public prosecutor Pradip Gharat "proved all eight charges" against Khan.

READ ALSO: Salman Khan sentenced to 5 years in jail

Salman Khan 2002 hit-and-run case: 11 key witnesses

"There was 0.062 percent alcohol noticed in his blood. When a person has consumed alcohol and was driving late at night... he has knowledge there an accident can kill those sleep (sic) on the footpath," said the judge, relying on the judgment in the Alastair Pereira case.

Across the judgment, the judge held that "there was no reason" for various witnesses to lie against Khan, each time the actor questioned the evidentiary value or merit of that witness.

Here's what the judge has said in his order on various aspects of the case:

On Khan's conduct

"The accused is (a) renowned film actor and he could do anything to provide help to the injured. If a ghastly accident takes place, wherein one person was crushed and four were injured and in spite of that the person whose vehicle was involved in the accident hided himself (sic) till he is arrested, this itself shows the conduct of the accused," the judgment has stated.

"If according to the accused he did not commit the accident, then he could have convinced people that action will be taken against the driver. Salman Khan did not wait for the police on the spot but he went home and till 10.30am hid himself," the judge said.

"If really the accused Salman Khan committed no wrong, he could have visited the police immediately and lodged information about the incident. It is pertinent to note that the accused did not take any positive steps by visiting the hospital to see the injured and provide medical aid to them and to come to the spot again with the police," the judgment noted.

BLOG: What if Salman Khan had run over a fellow Bollywood superstar?

On his being drunk

According to Justice Deshpande, "Finding the alcohol in the blood is conclusive proof to demonstrate that the person had consumed alcohol. Even if Rizwan Rakhangi, the manager of Rain Bar, and Kalpesh Verma, the parking assistant, did not notice any smell that would not establish that the accused had not consumed alcohol."

On the chemical analyst

The court discarded Salman's claim that the analyst, Dattatray Bhalshankar, was no expert. "If under gruelling cross-examination, the witness is unable to tell the formulas and explain the test, it does not mean that he is not an expert. No doubt can be raised against him. There is no reason for him to lie against the accused. Merely because advanced techniques are not used, opinion cannot be faulted, unless technique used is faulty." The judge on the other hand said, "If the accused would have been arrested immediately after the incident then the percentage of the alcohol in his blood would be more."

Complete coverage: Salman Khan hit-and-run case

On Khan's driving licence

Did Khan have a driving licence? As per the judgment, "The alleged incident occurred in the intervening night of September 27, 2002 to September 28, 2002. The burden shifts on the accused to demonstrate that he was having licence. However, nothing is produced by the accused to show that he was possessing licence. If the accused was having licence on that day, then he could have produced it. Non-production itself shows that the accused was not possessing licence."

On the death of Nurullah Sharif

The judge labelled the defence submission that the death of the victim was caused by the falling crane that was called into lift the car and rescue the injured as imaginary and without any valid and legal evidence. Referring to an injured victim's statement in court, the judge said, " "How is it possible that Nurullah was alive in the hospital and he was crying in pain?... Nurullah expired because of the dash and running over his body by car when he was sleeping."

On Ravindra Patil, the complainant and Khan's bodyguard

Prosecution witness Ravindra Patil is a "natural and impartial witness", the judgment has stated, and there was no reason for him to falsely implicate Khan even though he did not mention about Khan being drunk in the FIR initially.

On culpable homicide not amounting to murder

According to the judge, "When a person has consumed alcohol and was driving the car late in the night, it was difficult for the person to concentrate in the night and that he had a knowledge that there is every likelihood of his meeting with an accident resulting in death or injuries to other particularly those sleeping on the footpath. The knowledge of such fact can neither be far away from the reality, in any case would squarely fall within the term knowledge appearing in Section 304 (II) of the IPC."

On Ashok Singh, Salman's driver

"Ashok Singh is a got up witness who has come to help the accused on the instruction of Salim Khan, father of the accused. After 13 years for the first time under Section 313 CrPC accused has stated that initially Altaf and thereafter Ashok Singh was driving the vehicle."

On five years' RI

The judgment has said, "One cannot compare the punishment awarded in different cases. In some cases punishment awarded not more than 2 years does not mean that in the present case also the court has to pass similar punishment."

துபாயில் +2 தேர்வு : மாணவர்கள் சாதனை

துபாய்: துபாயில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வில் தேர்வெழுதிய 20 மாணவர்களில் 19 பேர் பாஸாகியுள்ளனர். துபாயில் வசித்து வரும் தமிழர்களுக்காக தமிழர்களால் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது மேல்நிலைப்பள்ளியி்ல் கலைப்பரிவு வகுப்பு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில் 20 மாணவ, மாணவிகள் பயின்று வரு்கின்றனர். தற்போது இப்பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில், மாணவர் முகம்மது குப்தீன் ஜாபர் அலி 1,116 மார்க்குகளும், மாணவிகள் ரஷிதா 1,059 ஆயிஷா 1,045 பெற்றுள்ளனர். தமிழகத்தில் தேர்வுகள் துவங்கிய நேரத்தில் துபாயில் இந்திய தூதரக கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, விடைத்தாள்கள் தமிழக தேர்வு துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தோல்வி பயத்தில் தற்கொலை: தேர்வில் மாணவர் 'பாஸ்'

ஆண்டிபட்டி:பிளஸ் 2 தேர்வில், தோல்வி பயத்தில், முடிவு வெளிவருவதற்கு முதல்நாள் இரவே விஷம் குடித்து மாணவர் இறந்தார். முடிவில் அவர் தேர்ச்சி அடைந்திருந்தார். தேனி மாவட்டம், கண்டமனுார் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் அன்னக்கொடி. இவரது மகன் அஜய், 17. இவர் ராஜதானி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். 'தேர்ச்சி பெறமாட்டோம்' என்ற பயத்தில், நேற்று முன்தினம் இரவே விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் தேனி மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஆனால், நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர், 663 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிஅடைந்திருந்தார்.

சேது' பெயரில் ஓடிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் : பயணிகள் குழப்பம்

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், 'சேது எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் பலகையுடன் ஓடியதால், ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.
சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் இடையே, அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து, சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் தான், மாற்று ரயிலாக தினசரி இரவில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலாக, எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது.
குழப்பம்
அப்போது, ரயில் முகப்பு பகுதியில் உள்ள, 'சேது எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் பலகை மாற்றப்பட்டு, 'அனந்தபுரி எக்ஸ்பிரஸ்' என்ற பெயர் பலகை வைப்பர்.
நேற்று முன்தினம் இரவு, 7:35 மணிக்கு, வழக்கம் போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இருப்பினும், ரயில் முகப்பு பகுதியில் பெயர் பலகையை மாற்றாமல் விட்டனர்.
இதனால், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து விட்டதாக தகவல் தெரிவித்தாலும், நிற்பது சேது
எக்ஸ்பிரஸ் ரயில் தானே என, பலரும் குழப்பமடைந்தனர். ரயில் புறப்படும் நேரத்தில், சிலர் உண்மை புரிந்து அவசர அவசரமாக ரயிலில் ஏறினர்.
இதுகுறித்து, தாம்பரத்தைச் சேர்ந்த பயணி, கீதாலட்சுமி என்பவர் கூறியதாவது:
தாம்பரம் ரயில் நிலையத்திற்குள், 'சேது' என்ற பெயர் பலகையுடன் தான், ரயில் உள்ளே வந்தது; இதனால், குழப்பம் அடைந்தோம். என் உறவினர், இந்த ரயிலில் எழும்பூரில் இருந்து வந்தார்.
விசாரணைஅவர் தந்த தகவலினால் தான், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் என, தெரிய வந்தது; இல்லையென்றால், ரயிலை தவற விட்டிருப்பேன். சில பயணிகள் ரயிலை தவற விட்டிருக்க கூட வாய்ப்பு இருந்திருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.இதுகுறித்து, எழும்பூர் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெயர் பலகையை மாற்றும் பணியை, மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும்; இப்பிரச்னையில், என்ன தவறு நடந்தது என்பது குறித்து விசாரிக்கப்படும்; இனி, சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இன்ஜி.,க்கு 'கட்-ஆப்' அதிகரிக்க வாய்ப்பு : மருத்துவத்திற்கு குறைகிறது

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்தில் எதிர்பாராத அளவுக்கு 'சென்டம்' எண்ணிக்கை உயர்ந்ததால் இன்ஜி., படிப்புக்கான 'கட் - ஆப்'
அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இயற்பியல், வேதியியல் மற்றும்
உயிரியலில், 'சென்டம்' எண்ணிக்கை குறைந்ததால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு கணிதத்தில் 3,882 பேர் 'சென்டம்' எடுத்தனர்; இது இந்த ஆண்டு இரண்டரை மடங்கு அதிகரித்து 9,710 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர். ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 'சென்டம்' எண்ணிக்கை கடுமையாக குறைந்து உள்ளது.
எனவே இந்த ஆண்டு பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான 'கட் - ஆப்' மதிப்பெண்; மருத்துவப் படிப்புக்கு 'கட் - ஆப்' குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து கல்வியாளர் ஜெய பிரகாஷ் காந்தி கூறியதாவது:கடந்த பலஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 9,710 பேர் 'சென்டம்'
எடுத்துள்ளனர். இதே போல் 198 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.இதனால் இந்த ஆண்டு இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.அதனால் கடந்த ஆண்டு 'கட் - ஆப்' மதிப்பெண்ணை விட அதிகம் இருந்தால் மட்டுமே கடந்த ஆண்டு பட்டியலில் உள்ள இன்ஜி., கல்லூரிகளில் சேர முடியும்.இதேபோல் உயிரியல், இயற்பியல், விலங்கியல் போன்றவற்றில் 'சென்டம்' எண்ணிக்கை பெரிய அளவில்
குறைந்துள்ளதால் மருத்துவப் படிப்பு 'கட் - ஆப்' மதிப்பெண் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.உதாரணமாக கடந்த ஆண்டு 198.25 என்றால் இந்த ஆண்டு 197.75 என்று மாறலாம். ஆனால் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று 'கட் - ஆப்' வைத்திருப்போர் 800 பேர் வரை உள்ளனர்.இவர்கள் எந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரிகளுக்கு போட்டி போடுகின்றனர் என்பதை வைத்தே இந்த ஆண்டு மாணவர்களுக்கு 'சீட்' கிடைக்கும்.இந்த ஆண்டு இன்னொரு முக்கிய பாடமாக இயற்பியல் வந்துள்ளது. இதில் கடந்த ஆண்டை விட பெரிய அளவில் 'சென்டம்' எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் இந்த ஆண்டு இயற்பியல் - கணிதம், இயற்பியல் - உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். எனவே இந்த ஆண்டு இயற்பியல் மதிப்பெண் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும், என்றார்.- நமது நிருபர் -

சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: ஜூலை வரை குடிநீர் பஞ்சம் இல்லை



கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பிவிட்டதால், சென்னை நகர மக்களுக்கு ஜூலை மாதம் வரை தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்தது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் நோக்கத்துடன் புதிய வீராணம் திட்டம் அரசு நிதியுதவியுடன் கடந்த 2004-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி முதல் சென்னை நகர மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

வீராணம் ஏரியின் கொள்ளளவு கடந்த மாதம் 24-ஆம் தேதி 556 மில்லியன் கன அடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 6,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்தத் தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக மேலணை, கல்லணை அணைக் கரைக்கு 27-ஆம் தேதி வந்தடைந்தது. அன்றைய தினம் அணைக் கரையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் 1,465 மில்லியன் கன அடி முழு கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி வியாழக்கிழமை அன்று முழுவதும் நிரம்பியது.

இதைத் தொடர்ந்து சென்னை நகருக்கு வரும் ஜூலை மாதம் வரை தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் தடையின்றி விநியோகிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மனித உருவில் மிருகங்கள் By மணவை எஸ்.கார்த்திக்

தற்போது நாளேடுகள் உள்பட எந்த ஊடகங்களை எடுத்தாலும், அதில் நாள்தோறும் தவறாமல் இடம் பெறும் செய்தியாகி விட்டது பாலியல் வன்கொடுமை.
ஆரம்பக் காலகட்டங்களில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வந்த பாலியல் வன்கொடுமைகள், இன்று ஜாதி, மத பேதமோ, மேல்தட்டு, அடித்தட்டு மக்கள் என்ற பாகுபாடோ, படித்தவர், பாமரர் என்ற வேறுபாடோ இன்றி அனைத்துத் தரப்பினரையும் ஆட்டி வைக்கிறது. இது நீதித் துறையையும்கூட விட்டு வைக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, அது என்னவென்றே அறியாத சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு மனிதன் மிருகமாக மாறி விட்டதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரில் 1-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் சில மனித மிருகங்கள். அதே பெங்களூரில் மற்றொரு பள்ளியில் 8 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளார் அதே பள்ளியில் பணிபுரியும் வெறிபிடித்த ஆசிரியர்.
இதுபோன்ற பாலியல் வன்முறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எனினும், அவற்றில் பெரும்பாலானவை கெüரவத்துக்காகவோ, பணத்துக்காகவோ மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன. நிர்பயா போன்ற ஒருசில சம்பவங்களே வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.
2012 டிசம்பரில் நள்ளிரவு நேரம் தலைநகர் தில்லியில் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, அப்பேருந்தின் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் அவர்களது நண்பர்களால் மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க
முடியாது.
நாடு முழுவதும் பெரும் தாக்கத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது இச்சம்பவம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது மட்டும் விழித்துக் கொள்ளும் நமது அரசுகள், அடுத்த சில மாதங்களிலேயே அதை மறந்து விடுகின்றன (அடுத்த சம்பவம் நிகழும் வரை).
இதனால்தான் அன்று நிர்பயாவுக்கு நிகழ்ந்த அதே கொடுமை இன்று 13 வயதுச் சிறுமிக்கு நேரிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் மோகாவில் பேருந்தில் பயணித்த தாயும், 13 வயதே ஆன அவரது மகளும் அந்தப் பேருந்தின் நடத்துநர், மேலும் இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டுள்ளனர். இதில் அந்தச் சிறுமி உயிரிழந்தது அதைவிடக் கொடுமை.
பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது ஐ.நா. சபையின் ஆய்வுத் தகவல்.
கடந்த மக்களவைக் கூட்டத் தொடரின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 2010-ஆம் ஆண்டு ஐ.நா. சபையின் குற்றப் போக்குகள் ஆய்வுத் தகவலின்படி, உலக அளவில் கொலைக் குற்றங்களில் இந்தியா 2-ஆவது இடத்திலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 3-ஆவது இடத்திலும் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 1.29 லட்சமும், பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 88 ஆயிரமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற சம்பவங்களுக்குக் காரணம் கல்வியறிவின்மை, கலாசாரச் சீரழிவு, செல்லிடப்பேசி, மது என்று பல்வேறு விதமான காரணங்களைக் கூறிவரும் நிலையில், உண்மையிலேயே இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்ன? சற்றே சிந்தித்துப் பார்த்தோமேயானால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும்.
அதாவது, நமது நாட்டில் சட்டமோ, தண்டனைகளோ கடுமையாக இல்லை என்பதுதான் அது. இதுபோன்ற பாலியல் வன்கொடுமையில் சிக்கும் நபர்கள் நமது நாட்டின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி எவ்வித தண்டனையும் இன்றி வெளியில் வந்து விடுகின்றனர். பிறகு எப்படி குற்றவாளிகள் திருந்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்?
அரபு நாடுகளில் திருட்டுக்குத் தண்டனையாக கையை வெட்டுகிறார்கள். இதுபோன்ற தவறுகளுக்குத் தலையை வெட்டுகிறார்கள்.
ஆனால், நமது நாட்டிலோ பயங்கரவாதிகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளையும் நீக்கிக் கொண்டல்லவா இருக்கிறோம். நாம் தண்டனைகளைக் குறைக்கிறோம், குற்றங்கள் அதிகரிக்கின்றன.
அரபு நாடுகளில் சட்டமும், தண்டனைகளும் கடுமையாக இருப்பதால் குற்றங்களும் குறைகின்றன.
கழுத்து முழுவதும் நகைகளுடன், நடுநிசி வேளையில் தனியாக, தைரியமாக எப்போது ஒரு பெண் நடந்து செல்கிறாளோ அப்போதுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள் என்றார் மகாத்மா காந்தி.
ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாக அல்லவா இருக்கிறது. நகையே அணியாமல் கணவர் துணையுடன் செல்லும்போதுகூட பெண்களால் தைரியமாக நடமாட முடியவில்லையே... திருட்டு பயமா? அப்படி இருந்தால்கூடப் பரவாயில்லையே, தனது கற்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்லவா இந்தப் போராட்டம்.
நமது நாட்டில் நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகள், அரபு நாடுகளில் எடுக்கப்படும் நடவடிக்கைபோல் கடுமையாக்கப்பட வேண்டும்.
அல்லது சமீபத்தில் வட மாநிலம் ஒன்றில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை, அந்தக் கிராம மக்களே பிடித்து கட்டிவைத்து நையப்புடைத்ததுபோல், சட்டத்தை மக்களே தங்களது கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில், ஏதேனும் ஒன்று நிகழ்ந்தால் மட்டுமே காந்தியடிகள் கண்ட கனவு தேசமாக இந்தியா மாறும்.

+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?

+2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்கள்?

சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட் டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.

ஐஸ்வர்யா மீனாட்சி:

(2002-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

பத்தாவதில், மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் போனதால் என்னால் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கமுடியவில்லை. +2வில், டிஏவி பள்ளிக்கு மாறினேன். இந்த மாற்றம் நல்ல பலனை அளித்தது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற இலக்கை அடைந்தேன்.

பிட்ஸ் பிலானியில் சீட் கிடைத்தது. ஆனால், மேற்படிப்புக்கு யு.எஸ் போவதாகத் திட்டம் இருந்ததால் பெற்றோருடன் இருக்கவேண்டும் என்பதற்காக வெங்கடேஸ்வராவில் பி.இ. பண்ணினேன். பல்கலைக்கழக அளவில், ஐந்தாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் எம்.எஸ். முடித்தேன். அங்கேயே பகுதிநேரமாக வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

நான் படிக்கும் காலத்தில் எனக்காக அமெரிக்க அரசு 20,000 டாலர் செலவழித்திருக்கும். கூடவே வேலை செய்ததற்காக சம்பளமும் கிடைத்தது (ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணி நேரம் வேலை.) நடுவில் மூன்று மாதம், ஐபிஎம்-மில் இண்டர்ன்ஷிப்பும் கிடைத்தது. ஐபிஎம்-மில் என்னை ஒரு மாணவர்போல நடத்தவில்லை. ஐபிஎம்-மில் வேலை செய்கிறவருக்குண்டான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல அனுபவத்துடன் படிப்பை முடித்தபிறகு, தாம்சன் ராய்ட்டரில் வேலை கிடைத்தது. 2009ல், பாரிஸில் நடந்த சர்வதேச கணினி மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளிருந்து தேர்வான இருபது கட்டுரைகளில் என்னுடையதும் ஒன்று. பிறகு, தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்யவேண்டும் என்பதற்காக மைக்ரோசாஃப்டில் விண்ணப்பித்தேன். +2வில் மாநில அளவில் முதலில் வந்தால் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் அது தனிக்கவனத்தை ஏற்படுத்தும். மைக்ரோசாஃப்டில் தேர்வாகி, 2010லிருந்து அங்கு பணிபுரிகிறேன். இப்போது, சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் என்ஜினியர் - லெவல் 3 என்கிற நிலையில் இருக்கிறேன்.

+2வில் முதலிடம் வந்ததால் கிடைத்த ஸ்காலர்ஷிப் தொகையே எப்படியும் ரூ. 75,000 வரை இருக்கும். கூடவே 9 விருதுகளும் கிடைத்தன. ஒரு ஐஐடி மாணவர் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால், கடுமையான உழைப்பினால் எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும். +2வில் பல லட்சம் மாணவர்களுடன் மோதி, முதலிடத்தைப் பிடித்ததால் அது தந்த தன்னம்பிக்கைக்கு ஈடே கிடையாது.

வித்யா சாகர்:

(2000-ம் வருடம் 1181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

டிஏவியில் படித்தேன். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நிறைய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற குறிக்கோள்தான் இருந்தது. +2வில் மாநில அளவில் முதலிடம் வந்தது, என் அப்பாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தேர்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு பள்ளிக்குச் சென்றபோது, வாசலிலேயே 100 பேருக்கு மேல் வாழ்த்தி வரவேற்றதை மறக்கவேமுடியாது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததால் நிறைய ஸ்காலர்ஷிப்களும் பல தொடர்புகளும் கிடைத்தன.

பிட்ஸ் பிலானியில் பி.இ. முடித்து, சென்னையிலுள்ள அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். 2005ல், சிங்கப்பூரில், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் எம்.எஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தேன். அதே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பகுதி நேரமாக வேலை செய்தேன். 2007 முதல் அங்கேயே காண்டினெண்டல் என்கிற ஜெர்மன் நிறுவனத்தில் 2013 வரை பணிபுரிந்தேன். சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினியர் பதவி வரை வேலை பார்த்தாலும் அடுத்ததாக மேனேஜ்மெண்ட் பிரிவில் நுழைய ஆர்வம் ஏற்பட்டது.

வேலை செய்துகொண்டிருக்கும்போது எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தேன். படிப்பு, வேலை என இரண்டையும் சமாளிப்பது ஒருகட்டத்தில் சவாலாக இருந்தது. படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக என் வேலையை ராஜினாமா செய்தேன். எம்.பி.ஏ முடித்தபிறகு, 2014ல் சிங்கப்பூரில் உள்ள எமர்சன் பிராசஸ் மேனேஜ்மெண்ட் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் என் விருப்பத்துக்கேற்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வேலை கிடைத்திருக்கிறது. என்ஜினியரிங் பேக்ரவுண்ட் உள்ள நிறுவனம் என்பதால் எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

கல்லூரி பாரதி:

(2003-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். 10வதில் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களுக்கு சென்னையைத் தாண்டி எங்குமே போகவில்லை. ஒரே படிப்பு மயமாகத்தான் இருந்தேன். டிவி, பாட்டு வகுப்புகள் என என் விருப்பங்களை சிலகாலம் ஒதுக்கிவைத்தேன். +2வில் நினைத்ததைச் சாதித்தவுடன், பிட்ஸ் பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். பிறகு, ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.

திருமணத்துக்குப் பிறகு புனேவில் ஒருவருடம் வேலை பார்த்துவிட்டு, 2011ல், எம்.எஸ் படிக்க அமெரிக்கா சென்றேன். பி.இ. முடித்தபிறகு எம்.எஸ் படிக்காததற்குக் காரணம், வேலை அனுபவம் வேண்டும் என்று நினைத்தேன். சம்பாதித்தால்தான் மேற்படிப்புக்காகப் பணம் சேமித்து, அப்பாவைத் தொந்தரவு பண்ணாமல் இருக்கமுடியும் என்று எண்ணினேன். நான், என் கணவர் இருவருமே எம்.எஸ் படிப்பை அமெரிக்காவில் முடித்தோம். பிறகு, இருவருக்கும் அங்கேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

+2வில் முதலிடம் வந்ததால் நிறைய பலன்கள். பிலானியில் 30,000 ரூபாய்க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பிலானியில் முதல் நாளன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், எல்லா மாநில ஸ்டேட் டாப்பர்களுக்கும் துணை வேந்தர் தனியாக மரியாதை அளித்தார். தமிழ்நாட்டிலிருந்து பிலானியில் சேர்ந்தவர்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருந்தது.

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ஸ்டேட் டாப்பர் என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்தது. +2வில் முதலிடம் பெற்று சாதனை செய்ததால் மற்ற வேலைகளிலும் நீ பொறுப்பாக இருப்பாய் என்று நம்பினோம், உன்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்று என்னை நேர்காணல் செய்தவர்கள் பிறகு கூறினார்கள். அதேசமயம் ஸ்டேட் டாப்பர் என்பதன் மதிப்பு, பெருமையெல்லாம் நாள் போகப்போக குறையத்தான் செய்யும். அதன்பிறகு வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பங்களிப்புதான் உரிய பலனைக் கொடுக்கும்.

ஸ்டேட் டாப்பர் ஆனதால் +2 தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு என்னால் அறிவுரை சொல்லமுடிந்தது. முதலிடம் வந்ததால் கடவுள் மீதும் அதிக நம்பிக்கை வந்தது. என்னைப் போலவே பல லட்சம் பேர் +2வில் உழைத்துப் படித்தார்கள். ஆனால், நான் மட்டும் முதலிடம் வந்ததற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.

சுஜனா :

(2005-ம் வருடம் மாநிலத்தில் முதலிடம். +2 தேர்வில், முதல்முறையாக 1190 மதிப்பெண்கள் எடுத்தவர்)

+2 வில் ஸ்டேட் டாப்பர் ஆனபிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் கிடைத்தது. எனக்கு இயற்பியல், கணிதத்தில் ஆர்வம் அதிகம். அதற்கு மெக்கானிக்கல்தான் சரிவரும் என்று நினைத்தேன். பிறகு, அமெரிக்காவில் எம்.எஸ் படித்தேன். இப்போது இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றுகிறேன்.

ஸ்டேட் டாப்பராக வந்ததால் என்னுடைய அணுகுமுறை மாறிப்போனது. எதையும் கேள்வி கேட்டுப் பழகவேண்டும், புரிதலுடன் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்கிற மனப்பான்மை உருவானது. +2 முடிவுகள் வந்த தினத்தை மறக்கமுடியாது. பாராட்டுகள், மீடியா பேட்டிகள் என பரபரப்பாக இருந்தேன். மீடியாவில் வந்ததால் வெளியே சிலர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். அந்தப் புகழெல்லாம் சில நாள்கள்தான். அதன்பிறகும் அதே பெருமையை வைத்து எல்லா இடங்களிலும் சலுகை கிடைக்காது.

இப்போது எல்லோரும் என்ஜினியரிங்தான் படிக்கிறார்கள். நமக்கு என்ன விருப்பம் என்று கண்டுபிடித்து அதில் ஈடுபாடு காட்டவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதற்குப் பதிலாக, எது உங்கள் விருப்பம், எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்து உங்கள் முயற்சிகளை ஓர் இலக்கு நோக்கி நகர்த்தவேண்டும். உதாரணமாக, +2 சமயத்தில், ஐஐடி அல்லது அரசுத் தேர்வு போன்றவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் சரியாக முடிவெடுக்கவேண்டும்.

எம்.பி.பி.எஸ்., பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வில் உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, ஒரு மாணவர் உயிரியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198,
வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:

உயிரியல் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50

மேலும் ஒரு உதாரணம்:
உயிரியல் 196/2 100-க்கு 98
இயற்பியல் 199/4 50-க்கு 49.75
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 197.75
பிளஸ் 2 பாடத் திட்டத்தில் அறிவியல் பிரிவை (சயின்ஸ் குரூப்) தேர்வு செய்து படித்த ஒரு மாணவர் தாவரவியலில் 200-க்கு 200, விலங்கியலில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:

தாவரவியல் 200/4 50-க்கு 50
விலங்கியல் 198/4 50-க்கு 49.5
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 199

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:
பிளஸ் 2 தேர்வில் கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் 200-க்கு எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு 198, இயற்பியலில் 200-க்கு 198, வேதியியலில் 200-க்கு 200 என மதிப்பெண் எடுக்கும் நிலையில் பி.இ. படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கீடு:-

கணிதம் 198/2 100-க்கு 99
இயற்பியல் 198/4 50-க்கு 49.5
வேதியியல் 200/4 50-க்கு 50
பி.இ. படிப்பில் சேர கட்-ஆஃப் மதிப்பெண்: 198.50

Thursday, May 7, 2015

சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்றதால் சாகும் வரை கொடூரத்தை சந்தித்த கான்ஸ்டபிள்: நண்பர் கண்ணீர் பேட்டி

கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.

சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.

சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.

சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.

அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.

கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.

நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.

அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.

பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.

இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.

இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.

பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் சாதனை; கலெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

சென்னை: கல்வியில் பின்தங்கியிருந்த பெரம்பலூர் மாவட்டம், பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் இரண்டாவது இடத்தையும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தும் சாதனை படைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமதுவே இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என பாராட்டுகிறார்கள் அம்மாவட்ட மக்கள்.
 


12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், முதல் 14 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் பெரம்பலூரைத் தவிர வேறு ஒன்று கூட வட தமிழகத்தைச் சேர்ந்ததில்லை.

கடந்த முறை 2014 –ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியிருந்தது.தற்போது 2015-ஆம் ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 97.25% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தை எட்டி பிடிக்கவும், கல்வி அறிவில் பெரம்பலூர் மாவட்டத்தை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர் தரேஸ் அகமதுதான் காரணம் என்கிறார்கள்,பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள்.

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம்

அதேப்போன்று அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 94.34% பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை மூன்று வகைகளாகப் பிரித்து, தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்திருந்தார்கள். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இவை மட்டும் இல்லாமல் சூப்பர் 30 என்று ஒரு அமைப்பு அமைத்து அதில் மாணவ,மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் அமைத்து கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்.அவற்றில் பயின்ற மாணவ,மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்:


1.வேளாங்கண்ணி - பெரம்பலூர் 1161


2. அசோக்குமார் 1147 - பெரம்பலூர்


3. சௌந்தர்யா 1141 - சு.ஆடுதுறை

இந்த மூன்று மாணவ,மாணவிகளும் சூப்பர் 30 அமைப்பில் பயின்றவர்கள்.பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டு மீட்கப்படட மாணவியர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத மாவட்ட நிரவாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.இதனால் அம்மாணவிகள் கல்வி படிப்பை தொடர்ந்தார்கள். இவற்றில் 19 மாணவியர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றார்கள்.


பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 8296. வெற்றி பெற்றவர்கள் 8068.


பெரம்பலூர் மாவட்டத்தில் அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகள்:

முதல் இடம்:
ராஜதுரை-1180-ராஜவிக்னேஸ் மேல்நிலை பள்ளி.மேலமாத்தூர்.


2-ம் இடம்:
ரேணுகா-1177-ராமகிருஷ்ணா மெட்ரிக்பள்ளி, பெரம்பலூர்.


3-வது இடம்:
மீனா-1176 ராஜவிக்னேஸ் மேல்நிலைப்பள்ளி.மேலமாத்தூர் பெரம்பலூர் மாவட்டம்



இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் இரண்டாவது இடத்திற்கு கொண்டு வந்ததற்காக அம்மாவட்டத்தின் ஆட்சியர் தரேஸ் அகமதுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


ஆனால், கடைசி 10 இடங்களில் உள்ள மாவட்டங்களில் அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி , திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டுதான் இந்த நிலை என்று இல்லை. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 36 ஆண்டுகளாகவே இதேநிலைதான் நீடிக்கிறது.

-ர.ரஞ்சிதா ( மாணவ பத்திரிகையாளர்)

பிளஸ் 2 தேர்வில் துபாய் வந்தது எப்படி? ருசிகர தகவல்கள்!

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கேலியும் கிண்டலுமாக நம்ம 'நெட்டிசன்கள்' வடிவேல் பாணியில் துபாய் எங்கே இருக்கிறது...? அது தூத்துக்குடி பக்கம் ... உசிலம்பட்டி பக்கம் இருக்கு... என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.


அத்தோடு வாட்ஸ் அப் மூலம் அரசுத் தேர்வுத்துறையைக் கிண்டல் அடித்து கலாய்க்கிறார்கள்.

ஆனால் இதில் பலருக்கு தெரியாத உண்மை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை துபாயில் வாழும் தமிழர்களின் வாரிசுகள் நமது அரசு தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள் என்பதே அது.

இந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி, டாக்டர் ராஜராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

"இந்தியா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக துபாய்க்கு போய் செட்டில் ஆகிறார்கள். ஆனால் துபாய் நாட்டில் பாடத்திட்டங்கள் அனைத்தும் அரேபிய மொழி மற்றும் உருது மொழியில் இருப்பதால் தமிழர்கள் பலரும் நம் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துபாயில் ‘ கிரசண்ட் ’ என்ற தனியார் பள்ளி ஒன்று அங்குள்ள தமிழர்களால் நடத்தப்படுகிறது. அங்கு ஆங்கில மீடியம் மூலம் தமிழ் பாடங்களை நடத்துகிறார்கள். கடந்த 2007 ஆம் ஆண்டு வரை கிரசண்ட் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது.

இப்போது மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அங்கு படிக்கும் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வை ஆண்டு தோறும் அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள். இங்கே எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கும் நாம் தேர்வு நடத்துகிறோமோ, அதே மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறோம். துபாயில் பள்ளி தொடங்கியதுமே நமது ஆங்கிலம் மீடியம் பாட நூல்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுவோம்.

அதே நேரம் அந்தப் பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் படிப்புக்கு மட்டுமே அனுமதி. அறிவியல் பாடத்திட்டத்திற்கு அனுமதி கிடையாது. ஏனென்றால் அறிவியல் பாடத்திட்டம் என்றால் பிளஸ் 2 தேர்வின் போது சயின்ஸ் பிராக்டிக்கல் செய்முறைத்தேர்வு நடத்த வேண்டும்.

அதைக் கண்காணிக்க இங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைக்க வேண்டும். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் கணக்கு, வரலாறு, வணிகவியல் பாடத்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே பொதுத்தேர்வு எழுத துபாயில் இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும். பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை இந்திய தூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்போம்.

தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தேர்வுகள் நடக்கும். விடைத்தாள்களை இந்திய தூதரக அதிகாரிகள் தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம். இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கான மார்க் சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும்" என்றார் அவர்.
எம்.கார்த்தி.

தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே தீ குளித்த பிளஸ் 2 மாணவி உயிர் ஊசல்!


விழுப்புரம்: தோல்வி பயத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு முன்பே மாணவி ஒருவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. விழுப்புரம் தோகைப்பாடியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி தேவதர்ஷனி, கடந்த இரண்டு நாட்களாகவே தான் தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்று தனது நண்பர்களிடம் கூறியிருக்கிறார்.

இன்று காலை பதற்றத்தில் இருந்த அவர், தனது மதிப்பெண்களை பார்ப்பதற்கு முன்பே தோல்வி பயத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார்.

தேவதர்ஷினியின் அலறல் சத்தத்தை கேட்டு சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த அவரது தாயார் அதிர்ச்சியுடன் வந்து பார்த்தபோது, மகளின் உடல் முழுவதும் தீ பரவியிருக்கிறது. அருகில் இருந்தவர்களில் உதவியுடன் உடலில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தீக்காயங்கள் அதிகம் இருப்பதால், மேல் சிகிச்சைகாக தேவதர்ஷினி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தேவதர்ஷினியின் உடலில் எரிந்த தீ, அவர்களில் குடிசை வீட்டிலும் பரவியதால் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தேவதர்ஷியின் குடும்பத்தினர் தேர்வு முடிவுகளை பார்த்தபோது, அவர் கணக்கு பாடத்தில் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

-ஆ.நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்

Photographs of Gandhi, Ambedkar stolen from health university

When officials of the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) opened the doors of their offices on Tuesday morning, they found something was amiss.

Among the things missing were photos of Gandhiji and B.R. Ambedkar.

Further enquiries revealed that a mobile phone and an audio recording device too were stolen. But no files or important documents were touched. The university has registered a complaint with the Tilak Nagar police station.

S. Sacchidananda, Registrar (Evaluation), RGUHS, said they were suspecting the involvement of insiders. “The locks were not damaged. Gold medals were untouched, so was a small amount of cash. It almost looks like a mischief,” he said.

This unusual robbery has prompted the varsity authorities to beef up security near their premises, with entry from the hospital side being tightened.

'மாணவர்களுக்கு கடும் தண்டனை கூடாது': ஐகோர்ட் கிளை உத்தரவு


மதுரை: 'கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம்; மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மிகக் கடுமையாக இருக்கக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேர்வு எழுத தடை:

மதுரை மாவட்டம், சோழவந்தான், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பி.ஏ., (பொருளியல்) மூன்றாமாண்டு படித்த மாணவர் ஒருவர், கடந்த, மார்ச், 15ம் தேதி, மது அருந்தியதாக கூறி, வகுப்பிற்கு வரவும், இறுதி பருவத் தேர்வு எழுதவும் தடை விதித்து, நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 'தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், என் எதிர்காலம் பாதிக்கப்படும். வகுப்பில் பங்கேற்கவும், தேர்வு எழுத அனுமதித்தும் உத்தரவிட வேண்டும்' என, மாணவர் மனு செய்தார். விசாரணை நடத்திய தனி நீதிபதி, 'மாணவர்கள், எதிர்காலத்தில் தேசத்தை வழி நடத்தக்கூடியவர்கள்; அவர்களுக்கு, ஒழுக்கம் முக்கியம். மனுதாரர், தவறை ஒப்புக்கொண்டுள்ளார்; மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்றார். இதை எதிர்த்து, மாணவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கல்லூரி நிர்வாகம், 'மனுதாரரை, ஓராண்டிற்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது' என்ற தடையை நீக்குகிறோம். 'மாணவரை, வகுப்பில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். ஜூனில் சிறப்புத் தேர்வு நடத்தி முடிவை வெளியிடுவோம்' என, இறுக்க மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக கூறியுள்ளது. இதன் மூலம், மனுதாரர், மேற்படிப்பை தொடர முடியும்.

ஒழுக்கம் முக்கியம்:

கல்லூரி நிர்வாகத்தின் கருத்து ஏற்கும்படி உள்ளது. கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மாணவர்களிடம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நன்மை, தீமைகளை அறிந்து கையாளத் தெரிய வேண்டும். ஒழுக்கம் முக்கியம் என்பதையும் தாண்டி, வெளி உலக சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், தங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

கடுமை கூடாது:

மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையும் மிகக் கடுமையாக இருக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் நல்ல முடிவை பாராட்டுகிறோம். தனி நீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது; வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'தள்ளாட்டத்தில்' வந்த தாசில்தார் கைது

திருவனந்தபுரம்: முழுபோதையில் தள்ளாடியபடி அலுவலகம் வந்த தாசில்தாரை, கலெக்டர் உத்தரவு படி போலீசார் கைது செய்தனர். இவரது போதை காரணமாக ஒரு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திருச்சூர் 'ரெவன்யூ ரெக்கவரி' தாசில்தார் ஸ்ரீகுமார் 55. இவரை பாணாஞ்சேரி பஞ்சாயத்து நிலை கமிட்டியின் தேர்தல் அதிகாரியாக நியமித்து கலெக்டர் எம்.எஸ். ஜெயா உத்தரவிட்டிருந்தார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தலை நடத்த தாசில்தாரை அழைக்க பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஜீப் அனுப்பி வைக்கப்பட்டது. காலை நேரத்திலும் அலுவலகத்தில் முழுபோதையில் இருந்த ஸ்ரீகுமார் எழ முடியாத நிலையில் இருந்தார். இவரை அழைத்து சென்று எப்படி தேர்தலை நடத்த என விழித்த பஞ்சாயத்து அதிகாரிகள் கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவு படி திருச்சூர் கிழக்கு எஸ்.ஐ., லால்குமார் 'ரெவன்யூ ரெக்கவரி' அலுவகத்துக்கு சென்று ஸ்ரீகுமாரை கைது செய்தார். தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவக்கல்லூரியில் நடந்தபரிசோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தாசில்தார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

வண்டு கடித்தவருக்கு நாய்கடி ஊசி: டாக்டர் தற்காலிக பணிநீக்கம்

சென்னை: வண்டு கடி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு, நாய்கடி சிகிச்சைக்கான ஊசிக்கு பரிந்துரைத்த டாக்டர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த, சிறுவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 33; பெயின்டர். கடந்த வாரம், தன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, வண்டு கடித்தது. கை வீக்கம் அடைந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றார். பாலசுப்ரமணியை பரிசோதித்த டாக்டர், வண்டு கடிக்கு சிகிச்சை அளிக்காமல், நாய்கடிக்கான, 'ஆன்டி ரேபீஸ் வேக்சின் - ஏ.ஆர்.வி.,' என்ற ஊசி போட பரிந்துரைத்து உள்ளார்; அதன்படி, ஊசி போடப்பட்டு உள்ளது. இரண்டாவது முறையாக ஊசி போடச் சென்ற போது, டாக்டரின் அலட்சியத்தால், நாய் கடி ஊசி போடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனர், சந்திரநாதன் நேரடி விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணைக்கு பின், ஏ.ஆர்.வி., ஊசி போட பரிந்துரைத்த, டாக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூலை 1ல் துவக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு


சென்னை: அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்குட்பட்ட, 590 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவங்கியது. சென்னையில், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையில், வரும், 29ம் தேதி வரையிலும், மற்ற, 59 மையங்களில் வரும், 27ம் தேதி வரையிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்நிலையில், ரேண்டம் எண், தர வரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

* ஜூன், 15 - 'ரேண்டம்' எண்.


* ஜூன், 19 - 'கட் - ஆப்' மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்.


* ஜூன், 28 - விளையாட்டுப் பிரிவுக்கான கவுன்சிலிங்


* ஜூன், 29 - மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்.


* ஜூலை, 1 - பொது கவுன்சிலிங் துவக்கம்.


* ஜூலை, 31 - அனைத்துப் பிரிவினருக்கும் கவுன்சிலிங் முடிவு. இந்தப் பட்டியலில் உள்ள சேர்க்கை நடவடிக்கைகளில், தேவைக்கேற்ப தேதி மாற்றங்கள் இருக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

விளையாட்டு பல்கலை கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, துணைவேந்தர் இல்லை. தற்போது புதிய துணைவேந்தராக, மூர்த்தி என்பவரை, கவர்னர் ரோசய்யா நியமித்து உள்ளார்; இவர், கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி உள்ளார்; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் துணைவேந்தர் பதவியில், மூன்று ஆண்டுகள் இருப்பார்; இதற்கான உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இன்ஜி., கல்லூரி விவரங்கள் வெளியீடு: 'கட் - ஆப்' வரிசை பட்டியல் இன்று வெளியாகும்

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரி பாட விவரங்கள் மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளின் கடந்த ஆண்டு ஜாதி வாரியான, 'கட் - ஆப்' பட்டியல் இன்று வெளியாகிறது.

அண்ணா பல்கலையின் இணைப்பில், 596 கல்லூரிகள் கடந்த ஆண்டு இணைப்பு பெற்றுள்ளன. இந்த ஆண்டு, மூன்று கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன; 593 கல்லூரிகள் இணைப்பு கேட்டு உள்ளன. பொறியியல், முதல் ஆண்டு சேர்க்கை விண்ணப்ப விற்பனை துவங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலை இணைப்புக் கல்லூரிகளின் பெயர் மற்றும் விவரங்களை மாவட்ட வாரியாக, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளின் பாட விவரங்கள், இணைப்பு விவரம், போக்குவரத்து வசதி, விடுதி வசதி, கேன்டீன் வசதி போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, https://www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு, 593 கல்லூரிகளில் ஜாதி வாரியாக எவ்வளவு, 'கட் - ஆப்' தேவைப்பட்டது என்ற பட்டியல், இன்று வெளியாகிறது. இப்பட்டியலில், கடந்த ஆண்டு எந்த, கட் - ஆப் மதிப்பெண் வரை, எந்தப் பாடத்துக்கு மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர் என்ற விவரமும் இடம்பெறும். இதன்படி, இந்த ஆண்டு, கட் - ஆப் எண்ணைக் கணக்கிட்டு, கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், அண்ணா பல்கலை இணையதளத்தின் பெயரைப் போன்றே, பல போலி இணைய தளங்கள் திடீரென உருவாகியுள்ளன. இத்தளங்களில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தங்களுக்கு வேண்டிய கல்லூரிகளின் பட்டியல்களை தர வரிசைப் படுத்தி, 'கட் - ஆப்' மதிப்பெண்களை மாற்றிப் போட்டு, தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது,''பெற்றோர், மாணவ, மாணவியர், போலி இணையதளங்களில் கல்லூரி விவரங்களை எடுத்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சரியான தகவல்களைப் பெற, அண்ணா பல்கலையின் நேரடி மாணவர் சேர்க்கை இணையதளத்தைப் பார்க்க வேண்டும். அதில், கல்லூரிகளின் உண்மையான விவரங்கள் இடம் பெறும்,''என்றார்.


- நமது நிருபர் -

Accused MBBS student leaked 3 papers: Police


CHANDIGARH: An MBBS student from Post Graduate Institute of Medical Sciences (PGIMS), Rohtak, has been involved in leaking question papers or answer keys of least three prestigious exams, including All India Pre-Medical and Pre-Dental Test (AIPMT) and Delhi's AIIMS in 2012, police have said.

Haryana police arrested Ravi Kumar along with three other accused, including two dental surgeons from Rohtak, on Sunday in connection with leaking answer keys of AIPMT exam held in different parts of the country the same day. Around six lakh students had taken the exam.

Currently, the accused are on police remand.

Ravi is second-year student of MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery) at PGIMS. A resident of Nimaka village in Greater Noida, he is second oldest among three brothers. His father is a farmer and mother is a homemaker.

Rohtak range's inspector general of police Shrikant Jadhav told TOI that Ravi had gone to Kota town in Rajasthan to get coaching for AIPMT examination in 2005. "He succeeded in clearing the exam in 2007 and subsequently took admission in MBBS at PGIMS. However, he could pass just one class in the past eight years," Jadhav said.

Police are trying to verify whether he passed AIPMT on merit or took help from any gang. "The leader of the gang, Roop Kumar Dangi, has been active in Rajasthan for long and we suspect that Ravi may have also come in contact with such persons when he was taking coaching at Kota in 2005-06," said a police official associated with the probe.

According to investigators, in January 2012, Delhi Police had booked Ravi in connection with leakage of question paper for the exam conducted for admission to post graduation courses�MD and MS�in AIIMS.

About five moths later, the police again booked him in connection with an examination for recruitment in State Bank of India (SBI). "He has told us that he remained in jail for about a month and was later released on bail. Delhi Police have already filed a chargesheet against him in both the cases," said a police official.

What’s ailing SN Medical College? Aditya Dev,TNN | May 6, 2015, 10.46 PM IST..TIMESS OF INDIA ,,AGRA

Agra: The Intensive Care Unit (ICU) is meant to treat critically ill patients, and is supposed to be the highly sanitized area of the hospital. But it is not the case with SN Medical College, where the ICU in the medicine department looks nothing better than any general ward. There is no restriction on people's movement and even attendants of critically ill patients are often seen sitting on their beds.

Moreover, the critical care ward lacks many important facilities like ventilators, monitors for keeping a constant tab on heart beat and other vital body functions.

A senior doctor on condition of anonymity said that critical ill patients, with low immunity are admitted to this ward and such an unhygienic condition increases the chances of contacting chest infection. "Other water and air borne infections are also very common among them which further complicate the matter. Unfortunately, even the doors of ICU are never closed and anyone can enter anytime inside the ICU," the doctor added.

The ICU is not air conditioned and one can even see rats roaming, the doctor further said. Such is the dilapidated condition of the ward that two ICU cabins have been closed due to plaster falling from the ceiling. At present, 10 beds are available for patients.

Unfortunately, this is not only the story of the ICU ward of the medicine department. The building that houses the medicine department is likely to crumble in the event of an earthquake.

The Public Works Department (PWD) blacklisted the building as a 'condemned' one in 2012. A building once termed 'condemned' by the PWD is not suitable for any use and should be demolished immediately.

The department of medicine treats 5,000 patients in its in-patient department annually, whereas 500 are seen every day in its OPDs.

The department blames the security guards, who are supposed to man the doors and control movements for never being present to do their job.

When contacted, college principal Ajay Agarwal accepted the prevailing condition of the department and said more critical patients are admitted to the ICU of surgery department. He added that the hospital is in the process of hiring guards on contract basis.

He informed that the medicine department would be shifted in the building where surgery department is located. "A new building has been built for the surgery department. Once they are vacated, the department of medicine will move into that building," he said.

College withholds certificates of 7 Nigerians

BENGALURU: Seven Nigerian students of St George College of Management and Science in HRBR Layout are scrambling to get their visas renewed as their institution allegedly demanded they pay their fees for one year if they wanted a bona fide certificate. This documents is a must for visa renewal. The students then said they would like to quit the college but the management allegedly asked them to cough up $12,400, the fee for four years, if they wanted bona fide and discharge certificates.

The Rajiv Gandhi University of Health Sciences, to which the college claims to be affiliated, has washed its hands of the issue, forcing students to seek police help. Their ordeal began soon after they reached Bengaluru last September and joined the BSc (Nursing) course. "We learnt about this college through a former student who spoke highly of its world-class infrastructure and excellent faculty. The principal said we could pay our annual fees in installments," said Talabi Elizabeth Poeyemi, an affected student. This February, students asked for a bona fide certificate and May 19 is the last day to get their visas renewed.

The students approached RGUHS for help. The university sent a notice to the college asking the students be discharged and sought a written explanation on April 24. The college management didn't show up. The students were supposed to meet the management on Tuesday evening. "They refused to give us the certificates, saying they didn't really care what RGUHS said," Poyemi said. On Wednesday morning, the students returned to RGUHS but were told the University couldn't do anything more about this issue. Police called for a meeting between the students and the management on Thursday.

Late introduction of Salman Khan's driver in case backfired for defence, say experts

MUMBAI: Ashok Singh took the witness stand on March 30, 2015, almost 13 years since the fateful night when his employer's car had rammed into a Bandra bakery, killing one person and injuring four others. As the judgment copy is awaited, legal minds say the driver's sudden presence at the trial was the twist that swerved the case towards conviction.

Singh, Salman Khan's driver, told the court that he was driving the Land Cruiser when it crashed into the bakery's shutters on the night of September 27-28, 2002. His deposition was contrary to what deceased witness and Khan's former police bodyguard Ravindra Patil, who was present in the vehicle at the time of the incident, had said. Patil had given two statements to the police and stood by his second statement that he had warned the actor, who was allegedly drunk, to slow down, but to no avail. Patil died in 2007 after deposing before the magistrate in Bandra, where the actor was earlier facing the less serious charge of causing death due to rash driving, which attracts up to two years in jail.


READ ALSO: Complete coverage — Salman Khan hit-and-run case

As it happened: Salman hit-and-run case verdict

A senior lawyer from the prosecution said the introduction of the driver at a belated stage may have been an adverse turning point for the actor. "Which logical or prudent mind would believe the driver's claims?" special public prosecutor Pradip Gharat had asked in court while making his closing submissions in the trial as he called Singh a "self-condemned liar deposing falsely on oath.'' Singh said Salman's father Salim Khan asked him to finally depose, although he had wanted to do so even earlier. Gharat had asked, "Can it be accepted that Salman's father waited with a calm mind and tolerated the sufferings his son was put through by the driver all these years, till the turn of the defence witness came in the trial, even as the driver continued to serve with the family?''


Salman case: What is culpable homicide?

How Salman Khan was convicted





The case boiled down to who was at the wheel, the prosecutor had said. Gharat called the driver 'unbelievable' as a witness and said thus the prosecution's claim that Salman was at the wheel should be believed, given the lack of any other plausible alternatives. Lawyers outside the court on Wednesday also said the driver's statement ought to have been made much earlier, in 2002, both when Salman was arrested and later when he was tried for rash driving in the Bandra magistrate's court.

Senior counsel Nitin Pradhan said to prove his case, perhaps Salman could have first sought to depose as a witness, placed himself for cross examination, which he didn't, before bringing the driver as a defence witness.

The judge held that the prosecution proved its case against the actor, but did not bother with Gharat's submission to initiate perjury proceedings against Singh in the case.

Salman Khan's hit-and-run case: What is culpable homicide?


Actor Salman Khan has been convicted for culpable homicide on Wednesday in 2002 hit-and-run case.

The word 'homicide' came from the Latin terms, meaning killing of a human being by a human being is homicide.

Culpable Homicide is defined by section 299 of the Indian Penal Code. According to the section 299 of IPC whoever causes death by doing an act with the intention of causing death, or with the intention of causing such bodily injury as is likely to cause death, or with the knowledge that he is likely by such act to cause death, commits the offence of culpable homicide.

The essential elements of the offence of culpable homicide are as follows -

i) that death of a human being was caused ;
ii) by an act with the intention of causing death ; or
iii) by an act with the intention of causing such bodily injury as is likely to cause death ; or
iv) by an act with the knowledge that the act was likely to cause death . Without one or other of these elements an act , though it may be in it's nature criminal and may occasion death , will not amount to the offence of culpable homicide .

Section 299 defined Culpable Homicide in simple way. Culpable homicide are of two kinds:
I. Culpable homicide amounting to murder.
II. Culpable homicide not amounting to murder.

Culpable homicide is the Genus, and murder is the Species.

All murder are culpable homicide but not vice-versa. Section 299 cannot be taken to be definition of culpable homicide not amounting to murder. Culpable homicide is the genus, section 300 defines murder which means murder is the species of culpable homicide.

It is to be noted here that culpable homicide not amounting to murder is not defined separately in IPC, it is defined as part of Murder in the section 300 of IPC.

Section 300 - Except in the cases hereinafter excepted, culpable homicide is murder, if the act by which the death is caused is done with the intention of causing death, or

Culpable Homicide is not amounting to murder: Exception 1 to 5 of s300 of IPC defines conditions when culpable Homicide is not amounting to murder:
I. Provocation.
II. Right of private defense.
III. Public servant exceeding his power.
IV. Sudden fight.
V. Consent.

Exception-
1-culpable homicide is not amounting to murder if the offender, whilst deprive of self control by grave and sudden provocation, caused the death of the person who gave the provocation or causes the death of any person by mistake or accident.

The above exception is subject to the following provisions:- The provocation is not sought or voluntarily provoked by the offender as an excuse for killing or doing harm to any person.

2.The provocation is not given by anything done in obedience to the law, or by a public servant in the lawful exercise of the powers of such public servant.

3. The provocation is not given by anything done in the lawful exercise of the right of private defense.

Copying: Syndicate to decide on further action

The Syndicate of Mahatma Gandhi University that is scheduled to meet on Thursday will decide on the future course of action of the university in the issue of examination malpractice allegations against Inspector General of Police (Thrissur Range) T.J. Jose.

University authorities said a high-level meeting here on Wednesday discussed all issues involved in the matter.

The discussions were based on a report of a one-man commission appointed for inquiry into the allegation. The details of the discussions would be placed before the Syndicate.

Second chance

Since the Syndicate called on May 2 could not complete its business, it was decided to continue it on May 7, and as such the Syndicate was now, technically, in session, university authorities said. Hence, the decision to place the report and other details before the Syndicate for further action.

The Syndicate was expected to form a larger body to look into the matter.

Whether the accused would be given a chance to explain his side to the authorities, if yes, when, and so on would also be decided by the Syndicate.

Vice Chancellor Babu Sebastian; Pro Vice Chancellor Sheena Shukkur; Examination Convener N. Vijayakumar; Registrar M.R. Unni; Controller of Examinations Thomas John Mambara; standing counsel of the university at Kerala High Court Varghese M. Easo; deputy registrar (examinations) A.C. Babu and others participated in Wednesday’s deliberations.

Panel findings

Meanwhile, the report submitted by the inquiry commission into the misconduct of the IG in the examination has said that he ran out of the hall with the pieces of paper on which he had brought the answers for copying. The report was prepared by A.C. Babu.

According to the report, when the invigilator tried to confiscate the pieces of paper Mr. Jose had brought for copying, he forcibly took them and his hall ticket and ran out of the hall.




Officials discuss inquiry panel report


Syndicate may form a larger body to discuss issue

M.G. University spares 75 alleged ‘copycats’...KERALA HINDU NEWS

: Mahatma Gandhi University had exonerated nearly 75 B. Tech students involved in a case of suspected examination malpractice in May last year despite a report by an inquiry commission that the candidates received external help.

The commission, which consisted of faculty members of engineering colleges under the varsity, had ratified the finding by the Chairman of the centralised valuation camp (zone III at SCMS here) that the answers given by these students were identical.

The students had appeared for the Engineering Graphics paper (SI, S2 semesters B. Tech exam, May, 2014) and belonged to Gurudeva Institute of Science and Technology, Payyappady in Kottayam.

Curiously, an enquiry commission consisting of syndicate members Dr. N. Jayakumar, and Prof. B. Suseelan rejected the findings of the chairman of the centralised valuation camp and the committee of engineering teachers. They also acquitted the 75 candidates of all charges.

The syndicate resolution on the case, a copy of which is available with The Hindu , said that the students of EEE and ECE branches wrote the examinations along with other students of Civil Engineering and supplementary students. As they sat in different buildings, the alleged external help is not possible, it said.

The syndicate committee report also said that the “students might have answered in same sequence omitting the calculation and completing the drawing by simply transferring the approximate dimension using compass for question no. 7.

But the reports filed by the chief examiner and the expert committee of engineering teachers clearly mentioned that the students had attempted the same series of questions.

Interestingly, the committee members found that the answers were strikingly similar and all the 75 students also made the same mistakes, especially when it came to writing a value or a data in their answer sheets.








Engineering college teachers told The Hindu that the engineering graphics paper was one paper where many students used to fail as it mainly consisted of drawings. The pass percentage was below 50 per cent in several colleges, they said.

12 nursing students seek to leave college soon after admission

A nursing college in Banaswadi here finds itself in the middle of a controversy after a group of 12 students, seven of them from Nigeria, want to leave the institution barely six months after enrolling for the course. They have approached the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS), the affiliating university, to come to their rescue.

“These students from St. George College of Management, Science and Nursing complained to us that they want to leave the college as it does not have any facilities. We instructed the college to relieve the students as per their demand,” said S. Sacchidananda, Registrar (Evaluation), RGUHS. “They want their original certificates back which we will hand over to the college to be returned to the students,” Dr. Sacchidananda said.

Though the college claims it is affiliated to the RGUHS and approved by Indian Nursing Council, New Delhi, the Registrar said this will be verified.

As the institution does not have needed facilities, students have approached RGUHS to help them

பிளஸ் 2 உயிரியல் தேர்வு: 195 மதிப்பெண் பெற முடியாது என்ற கவலையில் விடைத்தாள் முழுவதையும் அடித்த மாணவி

பிளஸ் 2 உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற முடியாது என்று கருதி, மாணவி ஒருவர் விடைத்தாள் முழுவதையும் பேனாவில் அடித்து கோடு போட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 7) வெளியாக உள்ளன. மன அழுத்தம், பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழக அரசின் 104 தொலைபேசி சேவை உளவியல் ஆலோசனைகள் அளித்து வருகிறது. 

104 தொலைபேசி சேவைக்கு புதன்கிழமை காலையில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவியின் தந்தை ஒருவர் பேசினார்.
தனது மகள் உயிரியல் தேர்வு எழுதிய அன்று, தேர்வு எழுதி முடித்த பின்பு தனது விடைத்தாளை மதிப்பிட்டுள்ளார். உயிரியல் தேர்வில் 195 மதிப்பெண் பெற வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்துள்ளது. 

விடைத்தாளை மதிப்பிட்டபோது ஒரு மதிப்பெண் கேள்விகள் நான்குக்கு விடை தவறாக இருந்ததாகத் தோன்றியுள்ளது. இதனால் தனக்கு 195 மதிப்பெண் கிடைக்காது என்று கருதி, விடைத்தாள் அனைத்தையும் கோடு போட்டு அடித்துக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். வீட்டிலும் இதனைத் தெரிவிக்கவில்லை.

தேர்வு முடிவுகள் நெருங்க நெருங்க, பயத்தின் காரணமாக இதை இப்போதுதான் தெரிவித்ததாகவும், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் தொலைபேசியில் அழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து 104 சேவை அதிகாரிகள் கூறியது:
மாணவியின் செயலைக் கொண்டு வீட்டில் அவரை யாரும் திட்டவோ, கடுஞ்சொற்களை பயன்படுத்தவோ வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் இந்தத் தேர்வுக்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது
.
வேறு ஒரு மாணவர், சக மாணவர் ஒருவருக்கு தேர்வு முடிவு குறித்த பயத்தின் காரணமாக தற்கொலை எண்ணம் எழுந்துள்ளது என்று கூறி அழைத்தார். 

அவரிடம் பேசியபோது, அந்த மாணவர் தான் கணக்குத் தேர்வு சரியாக எழுதவில்லை. தோல்வி பயத்தின் காரணமாக தனது பெயரைக் குறிப்பிடாமல் நண்பனுக்கு என்று ஆலோசனை கேட்க முயன்றது தெரியவந்தது
சென்னையைக் காட்டிலும் திண்டுக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து அழைப்புகள் வருகின்றன. 80 சதவீதம் மாணவர்களும், 20 சதவீதம் பெற்றோர்களும் ஆலோசனைகளைப் பெறுகின்றனர் என்று 104 சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 20.09.2024