Thursday, May 7, 2015

வண்டு கடித்தவருக்கு நாய்கடி ஊசி: டாக்டர் தற்காலிக பணிநீக்கம்

சென்னை: வண்டு கடி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு, நாய்கடி சிகிச்சைக்கான ஊசிக்கு பரிந்துரைத்த டாக்டர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த, சிறுவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 33; பெயின்டர். கடந்த வாரம், தன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, வண்டு கடித்தது. கை வீக்கம் அடைந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றார். பாலசுப்ரமணியை பரிசோதித்த டாக்டர், வண்டு கடிக்கு சிகிச்சை அளிக்காமல், நாய்கடிக்கான, 'ஆன்டி ரேபீஸ் வேக்சின் - ஏ.ஆர்.வி.,' என்ற ஊசி போட பரிந்துரைத்து உள்ளார்; அதன்படி, ஊசி போடப்பட்டு உள்ளது. இரண்டாவது முறையாக ஊசி போடச் சென்ற போது, டாக்டரின் அலட்சியத்தால், நாய் கடி ஊசி போடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனர், சந்திரநாதன் நேரடி விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணைக்கு பின், ஏ.ஆர்.வி., ஊசி போட பரிந்துரைத்த, டாக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024