Thursday, May 7, 2015

'தள்ளாட்டத்தில்' வந்த தாசில்தார் கைது

திருவனந்தபுரம்: முழுபோதையில் தள்ளாடியபடி அலுவலகம் வந்த தாசில்தாரை, கலெக்டர் உத்தரவு படி போலீசார் கைது செய்தனர். இவரது போதை காரணமாக ஒரு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திருச்சூர் 'ரெவன்யூ ரெக்கவரி' தாசில்தார் ஸ்ரீகுமார் 55. இவரை பாணாஞ்சேரி பஞ்சாயத்து நிலை கமிட்டியின் தேர்தல் அதிகாரியாக நியமித்து கலெக்டர் எம்.எஸ். ஜெயா உத்தரவிட்டிருந்தார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தலை நடத்த தாசில்தாரை அழைக்க பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஜீப் அனுப்பி வைக்கப்பட்டது. காலை நேரத்திலும் அலுவலகத்தில் முழுபோதையில் இருந்த ஸ்ரீகுமார் எழ முடியாத நிலையில் இருந்தார். இவரை அழைத்து சென்று எப்படி தேர்தலை நடத்த என விழித்த பஞ்சாயத்து அதிகாரிகள் கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவு படி திருச்சூர் கிழக்கு எஸ்.ஐ., லால்குமார் 'ரெவன்யூ ரெக்கவரி' அலுவகத்துக்கு சென்று ஸ்ரீகுமாரை கைது செய்தார். தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவக்கல்லூரியில் நடந்தபரிசோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தாசில்தார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024