Monday, March 21, 2016

In 12 yrs, 77% Indian docs with foreign degrees flunk MCI test

THE TRIBUNE
An average 77 per cent Indian students who returned with a foreign medical degree in the past 12 years failed to clear the mandatory screening examination conducted by the Medical Council of India.

Any citizen possessing a primary medical qualification awarded by any medical institution outside the country who wants provisional or permanent registration with the MCI or any state medical council needs to qualify the screening test (known as Foreign Medical Graduates Examination) conducted by the MCI through the National Board of Examinations (NBE).

In a year-by-year break-up of the number of students who sat for the screening exam, data provided by the NBE under the RTI Act shows that since 2004, the number of instances of successful candidates crossing 50 per cent of the total who appeared was two, while in one particular instance, only 4 per cent students passed the test.

The highest percentage of 76.8 successful candidates was registered way back in September 2005 when 2,851 students appeared for the test and 2,192 passed it. In March 2008, 58.7 per cent candidates were able to clear the screening with 1,087 out of 1,851 candidates qualifying it.

The last two sessions of the screening exam in 2015, however, saw only 10.4 per cent and 11.4 per cent candidates clearing the test, respectively. In June last year, 5,967 candidates appeared for the exam of whom only 603 cleared it, while in December, 6,407 candidates took the test and only 731 passed. — PTI


http://www.tribuneindia.com/news/nation/in-12-yrs-77-indian-docs-with-foreign-degrees-flunk-mci-test/211667.html

Buying Phone in Moore Market? Its Spare Parts May be From a Stolen Phone

Buying Phone in Moore Market? Its Spare Parts May be From a Stolen Phone

NEW INDIAN EXPRESS 
CHENNAI: “Give me just two days time, I can give you iPhone 6+ original display,” assures a vendor who has displayed around 10 high-end mobiles for sale on the streets of Moore Market Complex at Park Town.
There are chances it may be original as the vendor claims since investigations by the Chennai police have found that the trend of dismantling and selling stolen cellphones is rising, of late.
A police source from the Central Crime Bureau said that like cars and bike spare parts being sold in the market, spares of mobiles are also easily available these days. “Many cellphone users believe that the 15-digit IMEI (International Mobile Station Equipment Identity) number, will help them trace their lost phone, but very recently we learnt that miscreants have started following this new trick making it difficult for the service provider to trace the mobile,” added the source.
Official statistics show that there has been an increase in mobile missing cases by 39 per cent, compared to last year. However, tracing them still remains a task for the Central Crime Bureau due to various factors including non-cooperation from service providers, flashing of IMEI numbers (a technique of changing the number) and selling the phones to other states and countries.
Citing a case, the source said, a complaint had been lodged about a missing Iphone 6+. “For three months, we tried to trace but failed. Later, a six-member gang was taken for inquiry, which revealed that the phone was dismantled and sold.”
Giving out more details, the officer said that  it’s a big network. The shop-keepers know better if a phone is a stolen one or an original second-hand item. “To our surprise during raids, we found that there are even specific shops in the local markets of Burma Bazaar and Richie Street where spare parts of stolen phones are available. Some shops operate exclusively to sell iPhone products. The most surprising part is these shops sell the product with receipts,” the officer adds.
Citing an example, the source said, “An iPhone 6+ display, whose original price is Rs 8,500 is available for Rs 4,500 to Rs 6,000. Samsung Note3 whose original item costs Rs 8,500 is available at Rs 8,000.”

Jet Airways directed to pay Rs 55,000 compensation to passenger


Jet Airways directed to pay Rs 55,000 compensation to passenger
DECCAN CHRONICLE. | P ARUL

Mar 21, 2016, 9:13 am IST

For failure to provide seat despite confirmed ticket.

Chennai: The District Consumer Dispute Redressal Forum Chennai, (North) has directed Jet Airways to pay a compensation of Rs 55,000 to a former Principal Sessions Court Judge, Chennai for failure to provide him a seat in a flight to Bhopal from Mumbai despite having a confirmed air ticket.


The judge, who was proceeding to attend a national judicial conference in Bhopal, was left in lurch by the airline staff in Mumbai airport in 2012. In his petition, N. Authinathan said that when he was working as Principal District Judge in 2012, the Madras High Court had nominated him to participate in “National Conference of Senior District Judges on Court Management for Enhancing Quality Responsiveness and Timelines of Justice”, in Bhopal during April 21-23, 2012. The meeting was organised by the National Judicial Academy.
He paid `23,308 to the manager of Gay Travels, Nungambakkam for air tickets to Bhopal and return to Coimbatore.

He was scheduled to fly from Coimbatore to Mumbai at 3.10 pm on April 20, 2012 by SpiceJet flight, at 6.50 pm on the same day from Mumbai to Bhopal by Jet Airways. While returning, he was scheduled to take Jet Airways flight (9W 2043) at 8.50 am on 24.4.12 from Bhopal to Mumbai and by SpiceJet flight 12.50 pm from Mumbai to Coimbatore.

After reaching Mumbai airport, he approached Jet Airways staff, who gave him a boarding pass without mentioning a seat number. On completion of regular security check, the Jet Airways staff took him to the aircraft point and made him wait. Meanwhile, the staff informed that all the seats were taken.

He said, “despite having a confirmed ticket, I was left in the lurch and unable to board the flight and prevented me from attending an important judicial conference”. “I was denied comfortable night stay at Mumbai by the Jet Airways personnel and stayed in the airport lounge with great agony and pain”, he said.
In its reply, the manager, Gay Travels, said the company did not commit negligence since it issued all confirmed tickets to him.

Jet Airways stated that it was true that the flight 9W 2043 was marginally overbooked and when Authinathan reached the counter for boarding the flight, the flight was already full.

Overbooking in flights was accepted practice amongst all airlines across the globe. This was done to curb the possibility of flights departing with unoccupied seats because of non-arrival of passengers at the check-in counter before its closure. The airline sought dismissal of the petition.

The bench comprising its president, K. Jayabalan and member T. Kalaiyarasi said Authinathan, who possessed a confirmed ticket, was not allowed to travel from Mumbai to Bhopal. He was made to wait in the airport throughout the night till his departure next day causing intolerable mental agony to him.

This proves that the airlines committed deficiency in service. The bench directed the Jet Airways to pay a compensation of Rs 50,000 for causing mental agony and Rs 5,000 costs.

First husband challenges divorce order, plea rejected


First husband challenges divorce order, plea rejected

DECCAN CHRONICLE. | J STALIN
016, 6:08 am IST
Madras High Court rules in favour of woman.

Chennai: Coming to the rescue of a woman, who after getting an ex-parte decree of divorce, got married to another person and gave birth to a girl child, the Madras HC has dismissed a petition filed by her first husband, which sought to set aside the ex-parte order of divorce and permit him to contest the case.


Dismissing the petition filed by the husband, a Division Bench comprising Justices R. Sudhakar and S. Vaidyanathan said on a reading of the affidavit filed by the wife, it was crystal clear she has started a new lease of life with her second husband and the first husband has no reason to interfere in her ways, that too, when there was a decree of divorce between them.

Initially, the first husband and the wife filed a petition for divorce by mutual consent before the subordinate judge, Ooty. Since the husband did not appear before the court, the petition was dismissed for default on August 27, 2012.
According to the wife, her husband did not lead a meaningful life with her in order to continue the bond of marriage.

Hence, she filed a petition on January 29, 2013 before the Sub-Judge, Ooty seeking divorce on grounds of cruelty and desertion. When the said case was taken up for hearing on July 17, 2014, the husband was called absent and hence the petition was allowed in wife’s favour.

On August 5, 2014, the husband filed an application, seeking to set aside the ex-parte order and allow him to contest the petition on merits. On September 7, 2015, the family court, Udhagamandalam, dismissed the application. Aggrieved, he filed the present petition.

Writing the judgment for the Bench, Justice Vaidyanathan said while dealing with a matrimonial dispute, pragmatic approach was very important. The court cannot plainly go by available evidence. The case should be dealt with based on established facts and circumstances. In this case, though it was apparent that the husband was inclined to save the marriage with his wife, whether he really intends to live with her peacefully was not known. But the prevalent situation was otherwise.

To Escape' or 'To Escape From'


To Escape' or 'To Escape From'

THE NEW INDIAN EXPRESS

A few days ago, while interacting with a group of students at a communication skills workshop at a deemed university in Chennai, one of the participants approached me with a request, “Sir, some of my classmates and I read your English Blues column regularly. The column is very useful for those who prepare for competitive exams. We will be delighted if you can answer some of our queries in it.” Touched by their enthusiasm, I assured them that I would choose some good queries and discuss them in the column. Here are two of their queries:

Is the verb ‘escape’ followed by the preposition ‘from’ or is it followed by an object?

What is the difference between ‘presume’ and ‘assume’?

The verb ‘escape’ can be used both as a transitive and an intransitive verb depending on the context in which it is used. A transitive verb is followed by an object whereas an indirect object is not followed by an object. Look at these examples:

Vijay Mallya escapes from India (news headline)

One tiger has escaped from its cage in the zoo.

The idiomatic expression escaped from my memory.

The child escaped the torture of her mother.

I am one among a few passengers who escaped serious injury.
r name always escapes me.

In the first three sentences, the word ‘escape’ is used as an intransitive verb whereas in the last three sentences, it is used as a transitive verb. In the first two sentences, the verb ‘escape’ means ‘to get away from or to gain liberty from something and so it is followed by the preposition ‘from’. In the third example, it means ‘to slip away from something’. In the other three examples, the verb, used transitively, means ‘to succeed in avoiding someone or something’ and ‘to ellude’.

Though both the words ‘assume’ and ‘presume’ mean ‘to suppose’ or ‘to take for granted’, ‘assume’ means ‘to take something for granted without proof’ whereas ‘presume’ means ‘to believe that something is true or to form an opinion based on reasonable grounds or evidence’. To make it clearer, if something is presumed, it is more likely to be true than something assumed. Look at these examples:

Don’t assume every educated person is against casteism. (no proof)

The public assumed that the dalit youth had some problems with his killers but only some critics presumed that he was killed because he had married a girl belonging to a different caste.

“Your assumptions are your windows on the world. Scrub them off every once in a while, or the light won’t come in.” - Isaac Asimov

Dr Albert P’ Rayan

is an ELT Resource Person and Professor of English. He can be contacted at rayanal@yahoo.co.uk

Sunday, March 20, 2016

எம்ஜிஆர் 100 | 24 - மென்மையான உள்ளம் கொண்டவர்! : ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 24 - மென்மையான உள்ளம் கொண்டவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தன்னால் ஒரு மனிதர் கூட வருத்தப்படக் கூடாது என்ற மென்மையான உள்ளம் கொண்டவர். தவிர்க்க இயலாத நிலையில், தன் நடவடிக்கையால் யாராவது பாதிக்கப்பட்டாலோ, மனம் புண்பட்டாலோ, உடனே அதற்கு பரிகாரம் தேடிய பிறகே அமைதி அடைவார் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ம.பொ.சி. தொடர்பான சம்பவம் அதில் ஒன்று.

‘மந்திரி குமாரி, ‘மலைக்கள்ளன்', ‘குலேபகா வலி', ‘மதுரை வீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்று 1956-ம் ஆண்டிலேயே எம்.ஜி.ஆர். தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அந்த ஆண்டு ஜூன் 26-ம் தேதி ம.பொ.சி.யின் பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். விழாவில் எம்.ஜி.ஆர். பேசும்போது, ம.பொ.சி.யின் தமிழறிவை பாராட்டி, ‘‘தமிழை மழை போல் பொழியும் சிவஞானம்’’ என்று கூறவும்... கூட்டம் ஆர்ப்பரித்தது.

1986-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மேல்சபை இருந்து வந்தது. சட்டசபைத் தேர்தலில் தோற்றவர் களை கொல்லைப்புற வழியாக பதவிக்குக் கொண்டு வரவே மேல்சபை பயன்படுகிறது என்று பொதுவாக ஒரு விமர்சனம் இருந்தது. இந்நிலையில், 1986-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் மேல்சபை கலைக் கப்பட்டது. அதுகுறித்து பல்வேறு சர்ச்சைகளும் வருத்தங்களும் நிலவின.

1984-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடவில்லை. அப்போது அவர் மேல்சபை உறுப்பினராக இருந் தார். அரசியல் காரணங்களுக்காக சபை கலைக்கப் பட்டதாகவும் பேச்சு உண்டு. ஆனால், அரசுக்கு தேவையில்லாத வீண் செலவு என்பதால் மேல்சபை கலைக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசுக்கு வீண் செலவு என்று கூறி ஆந்திராவிலும் மேல்சபை கலைக்கப்பட்டது. அங்கே அப்போது எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தமிழகத்தில் அதுதொடர்பான வாக் கெடுப்பில் நடுநிலை வகித்தது.

காங்கிரஸில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கிய ஜி.கே.மூப்பனார், ‘‘மேல்சபை கலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் காங்கிரஸ் நடுநிலை வகித்தது’’ என்றார். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவதாக காங்கிரஸை திமுக குற்றம் சாட்டியது.

இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, மேல்சபை கலைக்கப்பட்டதில் மிகவும் வருத்தமடைந்தவர் ம.பொ.சி! அப்போது, மேல்சபைத் தலைவராக அவர்தான் இருந்து வந்தார். அரசின் முடிவை கடுமையாக எதிர்த்தார். முதல்வர் எம்.ஜி.ஆரை யும் விமர்சித்தார்.

எம்.ஜி.ஆரின் நண்பரான டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, ம.பொ.சி.க்கும் நெருக்கமானவர். அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அவர் ம.பொ.சி-யை சந்தித்தபோது, ‘‘மேல்சபை கலைப்பு முடிவுக்காக எதற்காக எம்.ஜி.ஆரை விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்.

பொதுவாழ்வில் ம.பொ.சி. தூய்மையானவர். தனக்கென்று எந்த சொத்து சுகமும் சேர்க்காதவர். ‘‘மேல்சபைத் தலைவர் பதவி போய்விட்டால் மாதம்தோறும் எனக்கு கிடைக்கும் சம்பளமும் போய்விடும். எனக்கு இப்போது அரசாங்க கார் இருக்கிறது. அந்தக் காரும் இருக்காது. வயது முதிர்ந்த காலத்தில் வெளியே செல்ல வேண்டு மானால் என் பாடு திண்டாட்டம்’’ என்று பழனி பெரியசாமியிடம் கூறி ம.பொ.சி. வருத்தப் பட்டிருக்கிறார். ம.பொ.சி. யாரிடமும் எதுவும் கேட் டுப் பழகாதவர். எம்.ஜி.ஆர். வீட்டுக்கு சென்றால் அவரிடம் எதுவும் கேட்கக் கூடாது என்று தனது மகள் மாதவி பாஸ்கரனிடம் சொல்லி அனுப்புவாராம்.

ம.பொ.சி. தன்னிடம் வருத்தப்பட்ட அன்று இரவே எம்.ஜி.ஆரை பழனி பெரியசாமி சந்தித் தார். விஷயத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். ‘‘அப்படியா?’’ என்று கேட்டுக் கொண்டாரே தவிர, எதுவும் சொல்லவில்லை.

அந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு ம.பொ.சி. சென்றார். அங்கு, பழனி பெரியசாமியின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. போனை எடுத்த பழனி பெரியசாமியிடம் பேசிவிட்டு ம.பொ.சி-யிடம் கொடுக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

ம.பொ.சி-யிடம் நலம் விசாரித்து விட்டு, அமெரிக்காவை நன்கு சுற்றிப் பார்க்கும்படியும் ‘ஷாப்பிங்’ சென்று தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளும்படியும் இதுகுறித்து பழனி பெரியசாமியிடம் சொல்லியிருப்பதாக வும் எம்.ஜி.ஆர். கூறினார்.

பின்னர், அமெரிக்காவில் இருந்து ம.பொ.சி. திரும்பிய பின் ஒருநாள், கோட் டையில் இருந்து வீட்டுக்கு காரில் புறப் பட்ட எம்.ஜி.ஆர்., திடீரென ம.பொ.சி-யின் வீட்டுக்குச் சென்றார். முதல்வரின் எதிர் பாராத வருகையால் ம.பொ.சி. மகிழ்ச்சி அடைந்தார். அவரிடம் அமெரிக்க சுற்றுப் பயணம் பற்றி விசாரித்துவிட்டு புறப்படத் தயாரானார் எம்.ஜி.ஆர்.

ம.பொ.சியும் வழியனுப்ப எழுந்துகொள்ள, அவரின் கையில் ஒரு சாவியை எம்.ஜி.ஆர். திணித்தார். புரியாமல் பார்த்த ம.பொ.சி-யிடம், ‘‘இது கார் சாவி. உங்களுக்கு அரசாங்கம் கார் கொடுத்திருக்கிறது. மேல்சபை தலைவராக இருந்தபோது உங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளமான ரூ.15,000 தொடர்ந்து கிடைக்கும். அந்த பதவியில் இருந்த எல்லா சலுகைகளும் வசதி களும் உங்களுக்கு தொடரும். உங்களை தமிழ் வளர்ச்சித்துறை தலைவராக நியமித்திருக் கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்க நின்றார் ம.பொ.சி.

சிலருக்குத்தான் சில பட்டங்கள் பொருத்தமாக அமையும். அப்படி எம்.ஜி.ஆருக்கு என்றே மிகப் பொருத்தமாக அமைந்தது, திருமுருக கிருபானந்த வாரியார் வழங்கிய பட்டமான ‘பொன்மனச் செம்மல்.’

- தொடரும்...

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது திருத்தணி ஆந்திராவுடன் சேர்க்கப்பட் டது. வடக்கு எல்லை போராட்டம் நடத்தி திருத் தணியை தமிழகத்துக்கு மீட்டார் ம.பொ.சி.

பின்னாளில் அவர் குடல்புண் நோயால் பாதிக்கப்பட்டபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவருக்கு தைரியம் சொல்லி மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையும் செலவுகளையும் செய்து குணப்படுத்தி கடும் வயிற்று வலியில் இருந்து ம.பொ.சி-யை மீட்டார் எம்.ஜி.ஆர்.

படங்கள் உதவி: ஞானம்

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள்: 2 ஆண்டில் 378 திருமணங்களை தடுத்த அதிகாரிகள் .....ஆர்.செளந்தர்

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள்: 2 ஆண்டில் 378 திருமணங்களை தடுத்த அதிகாரிகள்

ஆர்.செளந்தர்

தேனி மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும், 378 குழந்தை திருமணங்கள் சைல்டு லைன் அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தேனி மாவட்டத்தில் குறிப்பாக வருசநாடு, கடமலைக்குண்டு, அகமலை ஆகிய மலை கிராமங்கள் மற்றும் போடி, ஆண்டிபட்டி புறநகர் பகுதிகளில் சிறுமிகளுக்கு அதிகமாக திருமணங்கள் செய்து வைக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்காத 18 வயது பூர்த்தி அடைந்த ஏழை பெண் களுக்கு அரசு வழங்கும் சலுகை களை கூட அவர்கள் பெறாமல் விரைவில் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்த போதிலும் ஆண்டுதோறும் சிறுமி கள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் சைல்டுலைன் இயக்குநர் எஸ். முகமது சேக் இப்ராகிம் கூறியதாவது: இனக் கவர்ச்சியால் சிறுமிகள் சிலர் எளிதில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். இதனால், சில பெற்றோர் பள்ளிக்கு அனுப் பாமல் சிறு வயதிலேயே பெண் களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதன் காரணமாக அந்த சிறுமி உடல் மற்றும் மனரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார்.

தேனி மாவட்டத்தில் 2014-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி சைல்டுலைன் ஆரம்பிக்கப்பட்டது. 2014 ஏப்ரல் முதல் 2015 மார்ச் வரை 176 திருமணங்களும், 2015-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி வரை 202 திருமணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 378 திருமணங்களை நிறுத்தியுள்ளோம்.

திருமணம் நிறுத்தப்பட்ட சிறுமி களை தொடர்ந்து கண்காணித்து வந்தாலும், எங்களுக்குத் தெரியா மல் வசந்தவிழா என்ற பெயரிலோ அல்லது வெளியூரிலோ பத்திரிகை அடிக்காமல் சத்தமில்லாமல் திரு மணங்களை நடத்தி முடித்து விடு கின்றனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட திருமணங்களை கண்டறிய தற் போது கணக்கெடுப்பு பணியைத் தொடங்கி உள்ளோம். கணக் கெடுப்பு முடிந்த பின்னர், அந்த அறிக்கையை சமூக நலத்துறை மற்றும் காவல்துறையிடம் அளித்து நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள் ளோம்.

புகார் தெரிவிக்க..

திருமண மண்டபங்கள், கோயில், மசூதி, தேவாலயங்களில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமி களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என அறிவுறுத் தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக விழிப்பு ணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பெற்றோர் களும் தங்களது குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

சமூக ஆர்வலர்கள் ராம்குமார், அகஸ்டின் ஆகியோர் கூறியது: ஆணுக்கும், பெண்ணுக்கும் 21வயது பூர்த்தி அடைந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கடந்த 1969-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், தற்போது பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. ஆனால், பலர் உறவு முறை விட்டு போகக் கூடாது என்பதற் காகவும், வசதிபடைத்த குடும்பம், நல்ல வரன் எனக் கூறியும் அதிக வயதான நபருக்கு சிறுமி களை திருமணம் செய்து வைத்து| விடுகின்றனர்.

இதனால் பல இடங் களில் கணவன், மனைவிக்குள் புரிதல் இல்லாமல் விவாகரத்து, பிரசவக் காலங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க, சிறு வயதில் திருமணம் செய்து வைப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றனர்.
Keywords: தேனி மாவட்டம், அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள், திருமணங்களை தடுத்த அதிகாரிகள்





திருமணம், திருவிழாக்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றாவிட்டால் அபராதம்: மத்திய அரசு உத்தரவு

Return to frontpage

பிடிஐ


திருமண விழாக்கள், திருவிழாக்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை முறைப்படி அகற்றாவிட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. இதில் 9 ஆயிரம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. இதர 6 ஆயிரம் டன் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சுழலுக்கு பெரும் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ‘புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016’-ஐ மத்திய அரசு வரையறுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

50 மைக்ரானாக உயர்வு

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று கூறியதாவது:

இப்போதைய நிலையில் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. புதிய விதியில் இந்த வரம்பு 50 மைக்ரானாக உயர்த்தப்பட்டுள்ளது.

எனினும் புதிய விதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும். இல்லையெனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் இன்னும் 2 ஆண்டு களில் பயன்பாட்டில் இருந்து முழுமையாக அகற்றப்படும். அங்கீகரிக்கப்பட்ட கடைக்காரர் கள் மட்டுமே பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட வற்றை விற்பனை செய்ய முடியும்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த பிளாஸ்டிக் உறைகளை மீண்டும் சேகரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். இதற்கு பிளாஸ்டிக் உறை தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த உறையை பயன்படுத் தும் நிறுவனங்கள் முழு பொறுப்பேற்க வேண்டும்.

எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் முறையான கணக்கு விவரங்களை பராமரிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் பிளாஸ்டிக் தொடர்பான கட்டுப்பாடுகள் நகரங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்தன. புதிய விதிகளின்படி கிராமங்களிலும் பிளாஸ்டிக் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விரைவு ரயில் வருகை, புறப்பாடு விவரம்: செல்போன் மூலம் அறிய புதிய வசதி

THE HINDU TAMIL

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப் படும், வந்தடையும் விரைவு ரயில்களின் நடை மேடை (பிளாட்பார்ம்) எண் தொடர்பான தகவல் களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே புதிய வசதியை தொடங்கி யுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்கள் நடைமேடை எண் தொடர்பாக செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏடி டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு விரைவு ரயில் எண் டைப் செய்ய வேண்டும். பின்னர் சிறிது இடைவெளி விட்டு நகரத்தின் எஸ்டிடி எண்ணை டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் (குறுந்தகவல்) அனுப்பினால் சம்பந்தப்பட்ட விரைவு ரயில் தொடர்பாக தகவல் வந்தடையும்.

இதேபோல், விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன்கள் பயன்படுத்துவோர் பிளேஸ்டோ ருக்கு சென்று என்டிஇஎஸ் என்ற ரயில்வே தகவல் மையத்தின் செயலி டவுன்லோடு செய்து பிஎன்ஆர் எண் மூலம் பதிவு செய்து விரைவு ரயில்கள் தொடர்பான தகவல்களை பெறலாம். குறிப்பாக ரயில்கள் ரத்து, ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம், ரயில்கள் நேரம் மாற்றம் ஆகிய தகவல்களை பெற முடியும்.

எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்! ..... தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 25 - திரையுலகில் முடிசூடா மன்னர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. எப்போதுமே எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட்டவர் அல்ல. திரையுலகில் முடிசூடா மன்னராக இருந்தபோதும் சரி; அரசியலில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் சரி, அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற நிலை இருந்தபோதிலும் எதிர் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தவர் அவர். அதை விட முக்கியம், தனது கருத்தை செயல்படுத்துவதில் தானே முதலில் நிற்பார்.

திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட பிறகு, அதிமுக கொடியிலேயே தனது தலைவரான அண்ணாவின் உருவத்தை பொறித்தார். 1976-ம் ஆண்டு கட்சியினருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை எம்.ஜி.ஆர். வெளி யிட்டார். அதிமுகவின் ‘தென்னகம்’ நாளிதழில் அந்த அறிவிப்பு வெளி யானது. ‘எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் அண்ணா உருவம் பொறித்த நமது கட்சியின் கொடியை பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. ‘பச்சை குத்திக் கொள்ள வேண்டும்’ என்று கட்சியினருக்கு எம்.ஜி.ஆர். கூறியிருந்தாரே தவிர, அது கட்டாயம் என்று அதில் சொல்லவில்லை.

‘‘ஒருவரை ஒருவர் முன்பின் தெரியா விட்டாலும், கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொள்வதன் மூலம் அதைப் பார்த்ததும் ‘இவர் நம்ம ஆள்’ என்று அடையாளம் கண்டுகொண்டு கட்சியினரிடையே ஒற்றுமை மனப் பான்மை ஏற்படும், ஒருங்கிணைந்து செயல்பட உதவும்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். இதை ஏற்று லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்சிக் கொடியை பச்சை குத்திக் கொண்டனர்.

எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்புக்கு கட்சியிலேயே எதிர்ப்பும் எழுந்தது. படத் தயாரிப்பாளரான கோவை செழியன், விருதுநகர் சீனிவாசன் போன்றவர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ‘‘கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பம். இதை ஏற்பவர்கள் செய்யலாம். பச்சை குத்திக் கொள் ளாதவர்கள் அண்ணாவின் கொள் கையை விரும்பாதவர்கள் என்றோ, கட்சியில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றோ கூற முடியாது’’ என்று எம்.ஜி.ஆர். விளக்கம் அளித்தார்.

இப்படி, மாற்றுக் கருத்துக்களுக்கும் ஜனநாயகரீதியில் எம்.ஜி.ஆர். மதிப்பு அளித்தார் என்பது மட்டுமல்ல; கட்சியையும் தன்னையும் கடுமையாக விமர்சித்ததால் நீக்கப்பட்ட கோவை செழியன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். தனது வழக்கமான இயல்புப்படி, தன்னை விமர்சித்தவர்களுக்கும் பின்னர் கட்சியிலும் ஆட்சியிலும் பதவிகள் கொடுத்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். ‘ஊருக்குத்தான் உபதேசம் எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல’ என்று எம்.ஜி.ஆர். எப்போதுமே செயல்பட்டதில்லை. கட்சியினர் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று அறிக்கை வெளியான உடனே அதை செயல்படுத்திய முதல் நபர் எம்.ஜி.ஆரேதான். சென்னை மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அலுவலகத்துக்கு (இப்போது அந்த இடம்தான் நினைவு இல்லமாக உள்ளது) பச்சை குத்துபவரை வரவழைத்து தனது கையில் பச்சை குத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

இதில் சுவாரசியமான ஒரு விஷயம், அதிமுகவில் சேர்ந்து பிறகு கட்சி மாறிய நாஞ்சில் மனோகரன் போன்றவர்கள் கையில் கடைசி வரை பச்சை குத்தப்பட்ட அதிமுக கொடி இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பா.ஜ.க-வில் சேர்ந்த நடிகர் விஜயகுமார் கையிலும் அந்தப் பச்சை உள்ளது.

எம்.ஜி.ஆர். நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ திரைப்படத்தின் பல காட்சிகள் கர்நாடக மாநிலம் கலசபுரா என்ற இடத் தில் படமாக்கப்பட்டன. அங்கு கதைக்கு ஏற்றபடி பாழடைந்த கட்டிடம் போல ‘செட்’ போட வேண்டும். இரண்டு, மூன்று முறை அமைத்தும் பலத்த காற்று அடித்து ‘செட்’ வீணாகிவிட்டது. காற்று சுழன்றடிக்காத இடமாக பார்த்து ‘செட் ’அமைக்குபடி எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். காற்று அடிக்காத பகுதியாக பார்த்த இடம் ஒரு குன்று பகுதி. அந்த இடத்தில் ‘செட்’ போட வேண்டும் என்றால் அங்கு பொருட்கள் வந்து சேர ஆகும் செலவும் அதிகமாகும். எம்.ஜி.ஆர். ஆலோசித்தார்.

அந்த ஊர் மக்களின் பிரதான தொழில் கல் உடைப்பது. அங்குள்ள மக்களையும் படப்பிடிப்புக்கு வந்த தொழிலாளர்களையும் கொண்டே சிறு குன்றை உடைக்கச் செய்து, பெருங் கற்களை கொண்டு பலமான காற்றடித்தா லும் அசைக்க முடியாதபடி, பாழடைந்த வீடு போன்ற கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர்.!

படப்பிடிப்புக்குக் குறைந்த செலவில் ‘செட்’ தயாரானது. குன்று உடைக்கப்பட்டதால் குன்றை சுற்றி ஊருக்கு வராமல் நேர்வழியில் செல்ல மக்களுக்கு பாதை கிடைத்தது. முக்கியமாக, கல் உடைப்பதன் மூலம் ஊர் மக்களுக்கு ஒரு மாதத்துக்கு வேலை கிடைத்தது.

அப்போது, நெகிழச் செய்யும் ஒரு சம்பவம். குன்றை உடைக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்., வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலர் தடுத்தும், ‘‘விரைவில் வேலை ஆக வேண்டும், எல்லாரும் சேர்ந்து செய்தால்தான் முடியும்’’ என்று கூறி மக்களுடன் சேர்ந்து தானும் கல் உடைத்தார்.

தான் சொன்னதற்கு, தானே முன்னுதாரணமாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.

- தொடரும்...

கூட்டங்களில் எம்.ஜி.ஆர். பேசும்போது ‘‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்களே’’ என்று கூறி மக்களின் ஆரவாரத்துக் கிடையேதான் பேச்சைத் தொடங்குவார். இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத் தால் சிகிச்சை பெற்றபோது, எம்.ஜி.ஆருக்கு ஏராளமான ரத்தம் செலுத்தப்பட்டது.

‘‘எனக்கு ரத்தம் அளித் தவர்கள் யார் என்று தெரி யாது; ரத்தம் கொடுத்தவர் களுக்கே கூட அது எனக்குத் தான் அளிக்கப்பட்டது என்று தெரிந்திருக்காது. யார், யார் ரத்தம் என் உடலில் கலந்திருக்கிறதோ? அத னால்தான் ‘ரத்தத்தின் ரத்த மான’ என்று குறிப்பிடு கிறேன்’’ என்று விளக்கம் அளித்தார் எம்.ஜி.ஆர்.

ஸ்வேதா: நரிக்குறவர் சமூகத்தின் முதல் பொறியாளர் ,,,, க.சே.ரமணி பிரபா தேவி

குழந்தைகளுடன் ஸ்வேதா | படம்: ஆர்.ரவீந்திரன்.

தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. பட்டம் தனக்கு அளித்திருக்கும் பெருமையையும், கொடுத்திருக்கும் கடமையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய பரபரப்பில் இருக்கிறார். அவர் கடந்து வந்த வழிகளைப் பற்றி அவரின் வார்த்தைகளோடு இணைந்து பயணிக்கலாமா?

"நான் படித்தது பெண்கள் பள்ளி என்பதால், பள்ளியில் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. அங்கே தோழிகள் எல்லோருமே என்னை தங்கம், செல்லம் என்றுதான் கூப்பிடுவார்கள். கல்லூரியில்தான் மிகவும் பயந்தேன். தனியாகச் செல்லக் கூட பயந்த காலங்கள் அவை. கல்லூரி முடியும்போது, என் இனப் பெயரைப் பகிரங்கமாகச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார்கள். இன்றைக்கு ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று நினைத்து ஒவ்வொரு நாளும் பயந்து கொண்டிருந்தேன். கல்லூரிப் பேருந்தில் வீட்டுக்கு வரும்போது ஒரு நிறுத்தம் முன்னாலேயே இறங்கி விடலாமா என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.

எங்களின் சமுதாயத்தை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம், என் அம்மா, அப்பாவிடம் இருந்துதான் வந்தது. நரிக்குறவ இனத்தை முன்னேற்றும் முயற்சியில் ஈடுபடுபவர், எதற்காக பொறியியல் படிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். அப்போது படிப்பைத் தேர்ந்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. என் பெற்றோருக்கு, அவரின் மகள் படித்து நல்ல நிலைமைக்கு வந்து, எங்கள் இனத்துக்கே வழிகாட்ட வேண்டும் என்று ஆசை. அதனால் அப்போது பிரபலமாக இருந்த பொறியியல் படிப்பில், கணிப்பொறியியலில் சேர்த்தனர். படிப்பை முடித்த பிறகு வேலையைவிட, எங்கள் இனத்துக்காகப் போராட வேண்டியது அவசியம் என்று உணர்ந்திருக்கிறேன்.

பெற்றோர்கள் கொஞ்சமாவது படித்திருந்ததால்தான், கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்கு புரிந்தது. திருச்சியை அடுத்த தேவராயனேரியில் 26 வருடங்களாக அவர்கள், நரிக்குறவர் கல்வி மற்றும் நல சங்கத்தை நடத்தி வருகின்றனர். அரசு உதவியுடன், ஆரம்பப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறோம். இதுவரை சுமார், 3000 மாணவர்கள் படிப்பை முடித்துச் சென்றிருக்கிறார்கள்.

சொந்தக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?

பள்ளியை நடத்துவதற்கே அவர்களிடம் பெரிய எதிர்ப்பு இருந்தது. 'என் பிள்ளையை வைத்து சம்பாதிக்கப் பார்க்கிறாயா?' என்றெல்லாம் என் அம்மாவைப் பார்த்துச் சொன்னார்கள். 'பெண்களைப் படிக்க வைத்தால் கெட்டுப் போய்விடுவார்கள்' என்று பயந்தார்கள். ஆனால் நிலை இப்போது மாற ஆரம்பித்திருக்கிறது.

நரிக்குறவர்களின் நிலை

பெரும்பாலான நரிக்குறவர்களின் நிலை இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் ஓரளவுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றன. பிள்ளைகள் குறைந்தபட்ச ஆரம்பக் கல்வியையாவது முடிக்கிறார்கள்.

ஊசி, பாசி விற்றல் ஆகிய பாரம்பரியத் தொழில் குறித்து

எங்கள் இனத்தில் யாரும் மற்றவர்களை சார்ந்து வாழ மாட்டார்கள். எங்கள் இனம் மலைப்பகுதியில் வாழ்ந்ததால், அந்த முரட்டுத்தனம் இன்னும் முழுமையாகப் போகாமல் இருக்கிறது. இதனால் யாரையும் சாராத, சுய தொழில்களை ஊக்குவிக்கிறோம். அவை குறித்த கருத்தரங்குகளும், கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.

பொதுத் தேர்தல்

எங்களின் நிலையைப் புரிந்து உதவும் ஒரு கட்சிக்காகக் காத்திருக்கிறோம். மந்திரிகள், மக்கள் நலப் பணிகளுக்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்துகொள்கிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடத்தில் இருக்கும் எங்கள் இனத்தை, பழங்குடியினர் இனத்தில் சேர்க்கக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம்.

எதிர்காலத் திட்டம்

நரிக்குறவர்கள் இடையே கல்வியின்மை இல்லை என்ற நிலை வரவேண்டும். கல்வி கற்றால்தான் அடிப்படை சுகாதாரத்தையும், நாகரிகத்தையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை நானும், என்னுடைய பெற்றோர்களும் அவர்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருப்போம்!"

கம்பீரமாக விடை கொடுக்கிறார் நரிக்குறவப் பெண், இல்லை பட்டதாரிப்பெண் ஸ்வேதா!

மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை இனி மறைக்கத் தேவையில்லை: ராஜேஷ் லக்கானி

மறைந்த அரசியல் தலைவர்களின் சிலைகளை இனி மறைக்கத் தேவையில்லை: ராஜேஷ் லக்கானி


மறைந்த தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்களின் சிலைகளை இனிமேல் மறைக்கத் தேவையில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராஜேஷ் லக்கானி இன்ரு சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''அரசியல் கட்சி தலைவர்கள் சிலைகள் தேர்தல் விதிப்படி மறைக்கப்பட்டு வந்தன. இதுநாள் வரை காமராஜர், அண்ணா,எம்.ஜி.ஆர் சிலைகள் மறைக்கப்பட்டு வந்தன.

இனி மறைந்த தலைவர்களின் சிலைகள், தமிழறிஞர்களின் சிலைகளை இனிமேல் மறைக்கத் தேவையில்லை.

சந்தேகம் இருப்பின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டு விளக்கம் பெறலாம்' என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்
.

பெண் எனும் பகடைக்காய்: குறுநில மன்னர்களும் பூஞ்சைக் காளான்களும் .... பா. ஜீவசுந்தரி

Return to frontpage

மலரினும் மெல்லிது காமம். மலரைவிட மென்மையான காதலைக் கைக்கொண்டு, காதலொருவனைக் கைப்பிடித்து அவன் காரியங்கள் யாவற்றுக்கும் கை கொடுத்து வாழ நினைத்த இளம் பெண் குருத்து, இன்று சிதைக்கப்பட்டு நிற்கிறது. கண்ணெதிரில் துள்ளத் துடிக்கத் தன் துணையை, ஆருயிரை பலி கடாவாக்கிவிட்டோமே என்ற குற்ற உணர்வுக்கு அந்தப் பெண்ணை ஆளாக்குகிறது சாதியச் சமூகம். காட்சி ஊடகத்தின் வழி பார்த்த நமக்கே பதறுகிறது என்றால், அந்தப் பெண்ணின் துயரத்தையும், வேதனையையும் சொற்களில் அடக்கிவிட இயலுமா? வாழ்நாள் முழுதும் நரக வேதனையல்லவா? வாழ வேண்டிய ஒரு இளைஞன் பலர் பார்க்க நடு வீதியில் துண்டாடப்படுகிறான். ஆயிரம் கற்பனைக் கோட்டைகளுடன் தங்கள் வாழ்க்கையைத் தொடங்க நினைத்த அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் துயரத்தையும் மரணத்தையும் பரிசாக அளித்திருக்கிறது சாதி. மகளின் நிலை அந்தத் தந்தைக்கு இப்போது மன மகிழ்ச்சியைக் கொடுத்துவிட்டதா? அல்லது சாதியின் பெருமைதான் நிலைநாட்டப்பட்டுவிட்டதா? பெற்ற மகளின் மன மகிழ்ச்சியைவிட மேலானதா அந்தச் சாதி? சாதியின் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கும்மாளமிடும் கூட்டத்துக்கும் மனிதம் கடந்தவர்களுக்கும் வேண்டுமானால் அது மகிழ்ச்சியைக் கொடுக்கலாம். ஆனால், பெரும்பான்மை மனித மனங்களுக்கு அது கடக்க முடியாத துன்ப நதி.

குறுநில மன்னர்களா? ஜனநாயக ஆட்சி முறையா?

தங்கள் இனம் பெருக வேண்டும், அதில் கலப்பு நிகழ்ந்துவிடக் கூடாது, அந்த இனப்பெருக்கத்தைக் கொண்டு, பெரும்பான்மைச் சமூகமாக, தங்கள் பகுதியில் குறுநில மன்னர்களைப் போலத் தங்கள் வம்சம் ஆட்சி செலுத்த வேண்டும் என்ற மனநிலையின் வெளிப்பாடாகவே இவற்றைக் கூர்ந்து நோக்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் மாவட்டங்கள்தோறும் வீங்கிப் பெருத்திருக்கும் சாதியின் ஆதிக்கமும், அதன் வீச்சும், கொக்கரிக்கும் முழக்கங்களும் அதைத்தான் பறைசாற்றுகின்றன.

பூஞ்சை மனதும் பூஞ்சைக் காளான்களும்

அந்தந்தச் சாதியைச் சார்ந்த பெண்கள் படித்தவர்களாக இருந்தபோதும், சுய சிந்தனைகளும் செயல்பாடுகளும் அற்றவர்களாக, தலையாட்டி பொம்மைகளாக இருப்பதையே சாதிய ஆண் சமூகம் விரும்புகிறது. பெண்களைப் படிக்க வைப்பதையும்கூட, அவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதையும் தாண்டி, வேலை செய்வதற்கும், பொருளாதார நலன், பலன் கருதியுமே அதில் கவனம் குவிக்கிறது. கோணலாகிப் போன தங்கள் ஆதிக்கச் சிந்தனைகளால் பெண்ணைக் கட்டிப்போட நினைக்கிறது. பூஞ்சைக் காளான்களாக மனமெங்கும் படர்ந்து கிடக்கும் சாதியச் சிந்தனை, தரங்கெட்ட சொற்களாக அதை வெளிப்படுத்துகிறது.

ஜீன்ஸுக்கும், கூலிங் கிளாஸுக்கும் மயங்கி ஆணின் பின்னால் திரிபவர்களா பெண்கள்? விளம்பரங்களும்கூட இதே உத்தியைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. சாதாரண எளிய வீட்டு உபயோகப் பொருட்களைக் காண்பித்துப் பெண்ணை ஒரு ஆணால் கட்டிப் போட்டுவிட முடியுமா? இல்லை தன்வசப்படுத்திவிடத்தான் முடியுமா? முடியும் என்கின்றன அவை. அவ்வளவு பூஞ்சையானதா பெண் மனது?

இந்தியா முழுமையுமே பல மாநிலங்களில் சாதியின் கோர முகம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கு பலியாவது தலித் மக்களும், பெண்களும்தான். இருவரும் விளிம்பு நிலையில்தான் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘சாதி மதங்களைப் பாரோம்’ என்று பாரதி பாடிச் சென்ற அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் காற்றில் கரைந்து போனதன் மாயம் என்ன? பாப்பாவுக்குச் சொல்லப்பட்டவை, அவர்கள் வளர்ந்த பின் மறந்து போனதோ?

குடும்பமும் பாலியல் வன்புணர்வும்

டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வழக்கின் பலனாக அளிக்கப்பட்ட ஜே.எஸ். வர்மா கமிஷன் பரிந்துரைகள், பெண்களைப் பொறுத்தவரை இருளில் கிடைத்த ஒரு கைவிளக்கு என்றே கொள்ளலாம். அதன் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பல சட்டங்களிலும் பலவிதமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று கணவனே என்றாலும் மனைவியின் சம்மதம் இன்றி அவளைப் பாலியல் வன்புணர்வு செய்வதும் கிரிமினல் குற்றமே என்று பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதை அமல்படுத்தினால் குடும்ப அமைப்பில் விரிசல் ஏற்படும்; குடும்ப உறவு முறைகள் சிதறிப் போகும் என்று நாடாளுமன்றக் குழு அறிக்கை சுட்டுகிறது.

ஆண் விருப்பும் பெண் வெறுப்பும்

பெண்ணின் உடல் நிலை, மனநிலை எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் விருப்பம் மட்டுமே முதன்மையாகக் கொண்டு நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுகள் பற்றி, உலக நாடுகளின் பெண்கள் பலரும் தெரிவித்திருக்கும் கருத்துகள் அதிர வைப்பவை. இந்தியா உட்பட தென் கிழக்காசிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள

பத்தாயிரம் ஆண்களிடம் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய கணக்கெடுப்பு, அவர்களின் பெண் பற்றிய பார்வையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆண் – பெண் உறவில் பெண்ணின் சம்மதம் தேவையற்றது, கட்டாயப்படுத்தி, பெண்ணின் விருப்பமின்றி, அவளைத் துன்புறுத்தி உறவு கொள்வது தங்களின் உரிமை என்று 70 முதல் 80 சதவீத ஆண் சிங்கங்களிடமிருந்து பதில் கிடைத்திருக்கிறது. அதில் பலரும் தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள, மனைவியைத் தண்டிக்க அல்லது தங்களின் சந்தோஷம் மட்டுமே முதன்மையாக என்று பலவிதமாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

திருமணம் முடிந்த அன்றே, தங்கள் வெறியைத் தீர்த்துக்கொள்ளும் முனைப்புடன் ‘காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்தாற் போல்’ செயல்படும் ஆண்களின் ‘வீரம்’ கண்டு பெண் அஞ்சாமல் இருக்க முடியுமா? இதுவே தொடர்கதையானால் இல்வாழ்க்கை இனிமையாகத்தான் இருக்க முடியுமா? பெண்ணின் விருப்பம் இங்கு முதன்மை இல்லையா? இதைக் காரணமாக்கியே இன்று விவாகரத்து வழக்குகளும் தொடரப்படுகின்றன. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் மலரினும் மெல்லிது காமம் என்பது இங்கு பெரும் கேள்விக்குறியாக நம் முன் நிற்கிறது.

ஜனநாயகமாகட்டும் குடும்ப அமைப்பு

குடும்ப அமைப்பு என்பதன் பெயரில்தான் பெண் மீதான அத்தனை வன்முறைகளும் பாதுகாப்பாக நான்கு சுவர்களுக்குள் இங்கு நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குடும்ப அமைப்பு மிகவும் அவசியம். அதைச் சிதைக்க வேண்டுமென்று பெண்ணியவாதிகள் யாரும் குரலெழுப்பவில்லை. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஜனநாயகம் வேண்டும் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் இல்லாததே ஆணவக் கொலைகளுக்கும்கூட ஒரு காரணம் என்றும் சொல்லலாம். எந்த வன்முறையையும் தீர்த்துவிடலாம், ஆனால் குடும்ப வன்முறைக்குத் தீர்வு? அனைவர் கருத்துக்கும், விருப்பத்துக்கும் மதிப்பளிக்கத் தொடங்கினாலே, குடும்பத்துக்குள் நிகழும் வன்முறைகள் குறைந்துவிடாதா என்ற நப்பாசைதான் இதை வலியுறுத்தக் காரணம்.

பெண் மீது செலுத்தப்படும் அனைத்துத் தரப்பு வன்முறைகள் பற்றி எத்தனை முறை பேசினாலும், மீண்டும் மீண்டும் அதிரவைக்கின்றன அத்தனை நடப்புகளும். ஏன் தொடர்ச்சியாகப் பெண்ணைக் குறி வைத்து அடிக்கிறார்கள்? இந்தக் கேள்வியை அனைவரும் கேட்டுக்கொண்டே இருங்கள். அப்போதுதான் தீர்வும் தெளிவும் கிட்டும்.

(நிறைவடைந்தது)

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

தேர்தலில் சீட் வாங்கும் ஆசையில் ரூ.1 கோடி வரை பறிகொடுத்த அதிமுகவினர் .... எல்.மோகன்


THE HINDU TAMIL

தேர்தலில் எம்எல்ஏ சீட்டுக்காக ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பணம் கொடுத்து ஏமாந்த கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்க கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், வரும் 23-ம் தேதி பங்குனி உத்திரத்துக்கு முன், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளை தற்போது கைவசம் வைத்துள்ள அதிமுக, வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இதற்காக மக்கள் செல்வாக்கு மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பணம் பரிமாற்றம்

இதற்கிடையே எம்எல்ஏவாகி விடலாம் என கனவு கண்ட அதிமுகவினர் பலர், முக்கிய அமைச்சர்கள் இருவரின் இடைத்தரகராக செயல்பட்ட மாவட்ட நிர்வாகி ஒருவர் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இரு மாதங்களுக்கு முன்பே கொடுத்துள்ளனர். தற்போது கட்சி தலைமை அவர்களை ஓரம்கட்டியுள்ள நிலையில், மாவட்டம் வாரியாக அவர்களின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரகசிய ஆய்வு

திருநெல்வேலி வரை இந்த நடவடிக்கை பாய்ந்துள்ள நிலை யில், இனி குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீது தான் நடவடி க்கை இருக்கும் என தெரிகிறது. இதற்காக கட்சி தலைமையின் விசுவாசமானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரகசியமாக முகா மிட்டு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

இங்குள்ள அதிமுக நிர்வாகிகளின் நடவடிக்கை, கட்சி யினரிடையே பிரிவினையை தூண்டுவோர், சுய நலத்துக்காக கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவோர் குறித்த தகவல்களை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் மூலம், முழு அறிக்கையை இவர்கள் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தான் அதிமுக தலைமை தற்போது குமரி மாவட்டம் பக்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பாவம் முன்னாள் எம்எல்ஏ

முக்கிய அமைச்சர்கள் ஓரம்கட்டப் படுவர் என்பதை கனவிலும் நினைக்காத நிலையில், அவர்களிடம் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாந்த அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இவர்களில் முதல் இடத்தில் இருப்பது, திமுகவில் எம்எல்ஏவாக இருந்து தற்போது அதிமுக வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்தான்.

கிறிஸ்தவ நாடார் இனத்தைச் சேர்ந்த இவர், தனக்குள்ள மக்கள் பலத்தை பயன்படுத்தி எப்படியாவது ஜெயித்துவிடுவேன்.. என முக்கிய நிர்வாகியின் பின்னால் ஓராண்டுக்கும் மேலாக அலைந்து, சீட்டுக்காக காய் நகர்த்தியுள்ளார். முடிவில் நாகர்கோவில் தொகுதியை தனக்கு பெற்று தந்துவிடுமாறு கூறி, ரூ.1 கோடி வரை பணம் கொடுத்துள்ளார்.

ஒரு ரூபாயை இழந்தால் கூட, தூக்கம் கலைந்து புலம்பும் தன்மை கொண்ட அந்த முன்னாள் எம்எல்ஏ, இப்போது நிலைமை தலைகீழானதை பார்த்து பெரும் அதிர்ச்சியில் உள்ளார். பணம் இழந்த சோகத்தில் அவர் அடிக்கடி மயங்கி விழுவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் பரிதாபமாக உள்ளது.

பேரிடியில் பேராசிரியர்

இதுபோல், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிவிடவேண்டும் என்ற ஆசையில், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய ஒருவர், தனது தென்னந்தோப்பு மற்றும் சொத்துக் களை விற்று ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை இழந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவேயில்லை.

குளச்சல் தொகுதிக்கு சீட் வாங்குவதற்காக மீனவ பிரதிநிதி ஒருவர் ரூ. 25 லட்சம், விளவங் கோடு அல்லது பத்மநாபபுரம் தொகுதியைக் கேட்டு களியக் காவிளை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ரூ. 40 லட்சம், தக்கலை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 35 லட்சம், கிள்ளியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளனர்.

கல்லூரி அதிபர்

பத்மநாபபுரமோ, குளச்சலோ ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி அதிபர் ஒருவர் ரூ. 1 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார். நிதி நிறுவனம் நடத்திவரும் நிர்வாகியோ ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார். இவர்கள் பெரும்பாலும் 3-ம் இடத்தில் இருந்த வரை நம்பி பணம் கொடுத்தவர்கள். அவர் கட்சியில் ஓரம்கட்டப்பட்டதை எதிர்பார்க்காத இவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட குமரி மாவட்ட முக்கிய புள்ளியிடம், கொடுத்த பணத்தில் பாதியையாவது திரும்ப வாங்கிக் கொடுக்குமாறும், அதன் பிறகு அரசியலும் வேண்டாம்.. கட்சியும் வேண்டாம்.. என்ற விரக்தியில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குமரி அதிமுக வட்டாரம் பெரும் பதற்றத்தில் இருக்கிறது.

சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவுசல்யாவின் மேற்படிப்பு செலவை ஏற்கும் இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

THE HINDU TAMIL

கவுசல்யாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஏற்றுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு கடந்த 13-ம் தேதி, கலப்புத் திருமண தம்பதி சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்து வமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாய மடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சைக்குப் பிறகு படிக்க விரும்புவதாகவும், படிக்க உதவி செய்யுங்கள் என்றும் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய ஆய்வாளர் சந்திரபிரபாவிடம் கூறினார்.

இந்நிலையில், கவுசல்யாவின் மேற்படிப்பு செலவு முழுவதையும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் ஏற்றுக்கொள்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கவுசல்யாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

டாக்டர் மாத்ருபூதம்.

[19:58, 20/3/2016] Appa: ஆன்மிகத்தையும் அறிவுபூர்வமான விஷயங்களையும் நகைச்சுவையோடு சொன்னவர் தென்கச்சி என்றால், பாலுணர்வு விஷயங்களை நகைச்சுவையோடு சொன்னவர் டாக்டர் மாத்ருபூதம். ‘என்னிடம் வருகிற நோயாளிகளை மனநல வைத்தியம் பார்த்து நல்லபடியாக மாற்றிவிடுவதால் என்னைச் சிலர் “மாத்தற பூதம்” என்பார்கள்; நிறைய மாத்திரைகள் கொடுப்பதால் இன்னும் சிலர் என்னை ” மாத்திரை பூதம்” என்பார்கள். அப்படிச் சொன்னால் உடனே நான் ” உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, நோய் குணமாகிவிடும் என்று சொல்லி ஏமாத்தற பூதம் நான் இல்லை என்பேன்” என்று ஜோக்கடிப்பார்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே அவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். ஒருமுறை அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது கல்லூரி நாள்களில் நடந்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றைக் கூறினார்.

வகுப்பில் ஒரு பேராசிரியர். எக்ஸ்-ரே ஃபிலிம் ஒன்றைக் காட்டி ஏதோ விளக்கிக் கொண்டிருந்தாராம். திடீரென்று கரண்ட் கட்.

பேராசிரியர் பாடத்தை நிறுத்தவில்லை. ஜன்னலுக்கு அருகில் எக்ஸ்-ரே ஃபிலிமைப் பிடித்துக்கொண்டு பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார். இடையில் திடீரென்று அவர் “ஓ! ரங்கநாதன் கார் வாங்கிட்டார்போல இருக்கே!” என்றதும் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. மாணவர் மாத்ருபூதம் சட்டென்று ” சார்! அதெல்லாம்கூடவா எக்ஸ்-ரேல தெரியும்? ” என்று கேட்க, வகுப்பில் சிரிப்பலை அடங்க வெகுநேரமானது.

விஷயம் என்னவென்றால், இந்தப் பேராசிரியர் ஜன்னல் அருகில் வைத்து எக்ஸ்-ரேவைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம், அங்கே சக பேராசிரியரான ரங்கநாதன் காரை ஓட்டிக்கொண்டு போயிருக்கிறார். அதை அவர் எதார்த்தமாகச் சொல்ல, மாணவர் மாத்ருபூதம் அதைக் காமெடியாக்கிவிட்டார்.

ஒவ்வொருமுறை சந்திக்கும்போதும் இப்படி நிறைய டாக்டர் ஜோக்ஸ் சொல்லுவார் மாத்ருபூதம். சில சாம்பிள்கள்:

ஒரு டாக்டரிடம் நோயாளி : “டாக்டர்! நீங்க எமதர்மனைவிடப் பெரிய ஆள்! அவர் உயிரைமட்டும்தான் எடுப்பார்! நீங்க உயிரோட என் சொத்தையும் சேர்த்து எடுத்துக்கறீங்க!”

ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று தன் கிளினிக்கில் ஓர் எலும்புக்கூட்டை மாட்டி வைத்திருந்தார். ஆனால் சீக்கிரமே அதை அப்புறப்படுத்திவிட்டார். காரணம், டாக்டரின் கிளினிக்கில் இருப்பது அவருடைய முதல் பேஷண்ட்டின் எலும்புக்கூடு என்று யாரோ வதந்தி பரப்பியதுதான்.

மனிதர்களே! மாட்டைப்போல உழையுங்கள்; நாயைப்போலச் சாப்பிடுங்கள்; பூனைபோலத் தூங்குங்கள்; முயலைப்போல ஓடுங்கள்; வருடத்துக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் செல்லுங்கள்!

ஒருவரது நாய்க்கு உடம்பு சரியில்லை. கால்நடை மருத்துவரிடம் கொண்டுவந்தார். நாயைப் பரிசோதித்த டாக்டர் “நாய் செத்துப் போய்விட்டது” என்றார். நாயின் எஜமானர் நம்பவில்லை. உடனே டாக்டர் அடுத்த அறைக்குப்போய் ஒரு பூனையைக் கொண்டுவந்தார். நாயின் முகத்துக்கு அருகே விட்டார். “பூனை வாசனை தெரிந்தால் நாய் உடனே குரைக்க ஆரம்பித்துவிடும்! உங்க நாய் சும்மா இருக்கிறது; இப்போதாவது நாய் செத்துவிட்டது என்பதை நம்புகிறீர்களா?” என்றார்.

சோகமான நாயின் சொந்தக்காரர் புறப்பட்டார். அவரிடம் 200 ரூபாய் ஃபீஸ் கேட்டார் டாக்டர்.

“நாய் செத்துப்போனதாகச் சொன்னதற்கு 200 ரூபாயா?” என்று அவர் கேட்க, டாக்டரது பதில்: ”என் கன்சல்டேஷன் 100 ரூபாய். பூனையை வெச்சுப் பண்ணின cat scan சார்ஜ் 100 ரூபாய்.”

டாக்டர் மாத்ருபூதத்தின் “புதிரா? புனிதமா?” என்ற நிகழ்ச்சி தமிழ் சேனல்களில் ஒரு புது முயற்சியாக இருந்தது. பாலுணர்வு குறித்த சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி அது. விஜய் டி.வி.யில் ஒளிபரப்பானது. ஆரம்பித்த சில மாதங்களுக்குள்ளாகவே அந்த நிகழ்ச்சி ரொம்பப் பிரபலமாகிவிட்டது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாத்ருபூதம் நன்றாகப் பாடுவார். ”புதிரா? புனிதமா” நிகழ்ச்சியில்கூட இடையிடையே பழைய தமிழ் சினிமாப் பாடல்களையும் கர்நாடக இசைக் கீர்த்தனைகளையும்கூட அவர் பாடியதுண்டு.

நடிகர் – எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர் டாக்டர் மாத்ருபூதத்துக்கு ஒரு பட்டம் கொடுத்தார். என்ன பட்டம் தெரியுமா?

தமிழ்நாட்டின் வயாக்ரா!
[20:13, 20/3/2016] Appa: புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

ஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா?” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.

(டாக்டர் மாத்ருபூதம் அவர்களின் புன்னகைப் பூக்கள் என்ற  புத்தகத்திலிருந்து)

Class XII Board Exam Delayed as Centre Chief Goes Missing


Class XII Board Exam Delayed as Centre Chief Goes Missing

NewIndian Express

By Bagalavan Perier B

Published: 19th March 2016 05:17 AM

Last Updated: 19th March 2016 05:17 AM

VILLUPURAM: Students taking the Class XII State Board exams at the Government Higher Secondary school at Mampazhapattu village near Villupuram on Friday had a tough time. Not because they feared the Maths and Zoology papers, they couldn’t trace their allotted classrooms.

As the clock went past 10, when the exam was officially slated to begin, their surprise gave way to anxiety. Queries as to what was happening led them to discover that the exam-in-charge was nowhere to be found as he had forgotten all about the exam.

After frantic calls, he finally made it to the venue and with teachers pooled from nearby schools, the exam was conducted, albeit half-an-hour late.

The public exam began on March 4. Villupuram, one of the lowest ranked educational districts in the State, has 36,000 students appearing from 109 schools. The school at Mampazhapattu village is one such centre and Thirunavalur government high school headmaster Thangaraj was appointed as the superintendent of that exam centre.

After news spread, education department officials and chief education officer Mars rushed to the school for damage control and found that the centre superintendent and 17 teachers were missing. The CEO immediately called up Thangaraj, who was in his school at the time. Shocked education department officials desperately called teachers from nearby schools in Perumbakkam, Kanai and Kalpattu to set things in motion.

Parents of the students alleged that their wards were psychologically upset which could reflect in their marks. CEO Mars first denied this but later blamed the centre-in-charge and assured that an inquiry will be held. Last year, a board exam was delayed at Valavanur for the same reason.

Obscene acts in private place not offence under Indian law: Bombay HC

HINDUSTAN TIMES
The Bombay high court has said that obscene act done in a private place is not a criminal offence under the Indian Penal Code, quashing a case against 13 men who were arrested for allegedly indulging in obscene acts with women in a flat.
A division bench of Justices N H Patil and A M Badar was hearing a petition recently filed by the men seeking quashing of the FIR registered against them by Andheri Police in December last year under IPC section 294 (anyone indulging in an obscene act in any public place or sings or utters any obscene songs or words in any public place causing annoyance to others).
According to police, on December 12, 2015, they received a complaint from a journalist about loud music emanating from a flat in the neighbourhood and that scantily dressed women were seen from the window dancing and men showering money at them.
On perusal of the complaint, the police raided the flat and found six scantily dressed women who were dancing and 13 men consuming liquor in the flat. All the men were taken into custody and an FIR was registered against them.
Petitioners’ advocate Rajendra Shirodkar argued that the flat in question cannot be said to be a public place where anyone had access.
The court accepted this argument and said, “Obscene act done in a private place or viewed in privacy is not covered by the provisions of section 294 of IPC. The flat in building owned by some private person meant for private use of such owner cannot be said to be a public place.”
“Section 294 of IPC is meant for punishing persons indulging in obscene act in any public place causing annoyance to others. As such, the places where such obscene act is committed needs to be a public place and meant for use of public at large.
“Public must have free access to such place so as to call it a public place. The place where public have no right rather a lawful right to enter into, cannot be said to be a public place for invoking the penal provisions of section 294 of IPC,” the court said.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற புதிய விதிமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற புதிய விதிமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று ஆவணமாக குடும்ப அட்டையும் (ரேஷன் கார்டு) இடம் பெற்றிருந்தது.

தற்போது முகவரிக்கான சான்றாவணத்தில் இருந்து குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோக துறை கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் குடும்ப அட்டை வினியோகம் செய்யப்படுவது உணவு பொருட்கள் வாங்குவதற்காக தான்.

அதனை அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆவணமாக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த ஆணையை இந்திய வெளி விவகார துறை ஏற்றுள்ளது. இதன் அடிப்படையில் குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்

மாலைமலர்

பிளாஷ் ஸ்டோரேஜ் கருவி விற்பனையில் முன்னிலையில் இருந்து வரும் 'சான்டிஸ்க்' நிறுவனம் இந்தியாவில் புதிய ஒயர்லெஸ் பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

200 ஜிகாபைட் சேமிப்புத்திறன் கொண்ட இந்த பென்டிரைவை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவி என அனைத்துவிதமான டிஜிட்டல் கருவிகளுடனும் பயன்படுத்தலாம்.

பாஸ்வேர்டு பாதுகாப்புடன் வை-ஃபை மூலம் இந்த பென்டிரைவை கனெக்ட் செய்வதால் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக 'ஆப்' ஒன்றையும் 'சான்டிஸ்க்' வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கடைகளிலும் விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒயர்லெஸ் பென்டிரைவை பயன்படுத்த இண்டர்நெட் அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வழங்கும் 2 புதிய வசதிகள்

ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வழங்கும் 2 புதிய வசதிகள்

  தினத்தந்தி


புதுடெல்லி,

ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்' 2 புதிய வசதிகளை வழங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்ட 2.12.535 புதிய அப்டேட்டில் இந்த புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, கூகுள் டிரைவில் நாம் சேமித்து வைத்துள்ள டாக்குமெண்ட்டுகளை நேரடியாக வாட்ஸ் ஆப் வழியாக இனி ஷேர் செய்யலாம். ஆனால், அவை பி.டி.எப் பைல்களாக இருக்க வேண்டும்.

அதேபோல், வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜ்களின் பார்மட்டையும் மாற்றிக் கொள்ளலாம். எழுத்துக்களை போல்டு ஆக்கிக் கொள்ள முடியும். சரிவாகவும் ஆக்க முடியும். அண்டர்ஸ்கோர் மற்றும் ஆஸ்டிரிச் குறியீடுகளை எழுத்துக்களிடையே சேர்க்கலாம். எனினும், நாம் செய்யும் இந்த மாற்றங்கள் அடங்கிய மெசேஜை மற்றவரும் இதே புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை பயன்படுத்தினால் மட்டுமே பார்க்க முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில் இன்னும் இந்த வெர்ஷன் வெளியிடப்படவில்லை.

It is not possible as it is against the law, says Rajesh Lakhoni


It is not possible as it is against the law, says Rajesh Lakhoni

The representations by private companies and the Information Technology Department seeking to exempt them from declaring a holiday on the day of the elections (May 16) cannot be accepted, Chief Electoral Officer Rajesh Lakhoni on Saturday clarified and said that it would not be possible, as it was against the law.

Mr. Lakhoni said, “The IT Department has received representations seeking an exemption. It is not possible and cannot be accepted, as it is against the law governing elections.”

Elaborating on the plea of these companies, he said, “They have claimed that they were running three shifts within 24 hours and hence if they declare a holiday for the entire day, all three shifts would be affected. They asked if there could be a partial holiday. But, going by the rule, the entire day of polling should be declared a holiday.”

Even in a meme tweet posted in its official twitter handle @TNelectionsCEO, to a query posed by a person, “Sir, last time many corporate companies didn’t announce holiday on election day. What abt this time..?”, the reply given by the CEO was, “It will definitely be done this time.”

It may be recalled that the National Association of Software and Services Companies (NASSCOM), the apex body for Information Technology and Information Technology Enabled Services industry, too had sent a letter to the Election Commission, requesting an exemption from full holiday on May 16.

28,000 polling booths

According to the Election Commission, around 28,000 polling booths would be web streaming and another 10,000 of them would be video recorded during the May 16 polls.

There are a total of 65,616 polling booths across the State

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர்
சுகி சிவம்

தூங்காதே தம்பி தூங்காதே!

மீன் கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும் என்று படித்தேன். 'ஆச்சரியமாக இல்லையா?' என்று ஒரு நண்பர் கேட்டார். ""இல்லை... ஆச்சரியமே இல்லை... மனிதர்களில் பல பேரும் விழித்திருக்கும்போதே தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றேன் நான். இதுதான் உண்மை.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது? எப்படி எப்படி எல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம்? சுரண்டப்படுகிறோம், கொள்ளையடிக்கப்படுகிறோம்... என்ற விழிப்புணர்வே பல பேருக்கு இருப்பதில்லை. ஒவ்வொரு கணமும் விழிப்பாக இருப்பவர்களே உன்னதமானவர்கள். சரியானவர்கள்.

நீங்கள் அப்படியா? நம் அனுமதியில்லாமல் நம்மைச் சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பார்கள். நம்மைத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். முட்டாளாக்குவார்கள். நாமும் கண்ணைத் திறந்துகொண்டே இவற்றைக் கண்டு கொள்ளாமல் தூங்கி வழிந்தால் என்ன ஆவது?

"பசித்திரு... தனித்திரு... விழித்திரு' என்றார் இராமலிங்கர். இப்படி மூன்றுமாக இருந்தால் மூன்றின் முதலெழுத்தும் ஆன பதவி நமக்கு உண்டு என்பார்கள். விழித்திரு என்ற சொல்லை "உத்திஷ்ட' என்கிறது பகவத்கீதை. "எழு... விழி' என்பதே இந்த அறைகூவலின் அர்த்தம். நமது அறியாமைகள் யாவும் இருளே. தூக்கமே. மரணத்தின் ஒத்திகையே. தாற்காலிகச் சாவுகளே! விழிப்பு ஒன்றே விடியல். வெற்றியின் பூபாளம்.

நான் சமயச் சொற்பொழிவும் செய்வதாலேயே பல சாமியார்கள் என்னை வளைத்துப் போட விரும்புவார்கள். அவர்களது பிரசார பீரங்கியாக இருந்து அவர்களுக்கு இல்லாத பெருமைகளை நான் முழங்கத் தயாரானால் தங்கமும் வெள்ளியும் தருவதாக ஆசை காட்டுவார்கள்.

அவர்கள் மாயாஜால மந்திர வித்தைகளைத் தமது சிஷ்ய கோடிகள் மூலம் எப்படியாவது எனக்கு விவரித்து என்னை மயக்கி என் வாயை வாடகைக்கு வாங்கி அவர்கள் புகழ் வளர்க்கத் திட்டம் தீட்டுவார்கள். நான் குழம்பியதும் இல்லை. மயங்கியதும் இல்லை.

மணிக்கணக்காக அவர்கள் மத்தியில் இருந்தபடி அவர்களை அணுஅணுவாக அளந்து பார்த்திருக்கிறேன். அதே நேரம் பல நீதிபதிகளும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் சாமியார்களின் சாம்ராஜ்யத்தில் ஏமாந்து போவதைக் கண்காணித்திருக்கிறேன். எச்சரித்தும் இருக்கிறேன்.

ஒரு சாமியார் பல பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பஞ்சாமிருதத்தில் இருந்து முருகன், விநாயகர் பொம்மைகளை எடுப்பார்... கொடுப்பார் என்று புகழ்ந்து தள்ளினார்கள். அகன்ற பாத்திரத்தில் பழங்களைப் போட்டார். வெல்லம் சேர்த்தார். தேனும் நெய்யும் ஊற்றினார்.

கொத்தாக இருந்த ஒரு கிலோ பேரீச்சம் பழத்தையும் உள்ளே போட்டுப் பிசைந்தார். "இந்தா... இந்தா' என்று எதிரில் இருக்கிற மாஜிஸ்திரேட் கையில் முருகன் சிலையை எடுத்துக் கொடுத்தார். கண்ணில் நீர் வடியக் கன்னத்தில் போட்டபடி மாஜிஸ்திரேட், "முருகா... முருகா' என்று வாங்கிக் கொண்டார்.

"முருகா... முருகா' என்று என் கண்ணிலும் நீர் வழிந்தது. கொத்துக் கொத்தாகச் சாமியார் உள்ளே போட்ட பேரீச்சம் பழத்தில் பத்து முருகன் பொம்மைகளை வைக்கலாம். இதற்கு அந்தச் சாமியாரையே மாஜிஸ்திரேட் உள்ளே வைக்கலாம். கண்ணைத் திறந்து கொண்டே கனவான்கள் தூங்கும் தூக்க தேசம் இது.

இதில் நாமும் உறங்கிவிட்டால் என்ன ஆவது? கண்ணைத் திற... தோளை நிமிர்த்து... உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று எப்போதும் விழிப்பாக இரு. மதத்தின் பெயரால் ஏமாற்று வேலைகள். திருட்டுத் தனமாகக் கோழி பிடிக்கிறவன் துண்டை விரித்துக் கொண்டு காத்திருக்கிற மாதிரிக் கட்சிக் கொடியை விரித்தபடி இளைஞர்களை அமுக்கப் பல அரசியல் கோஷ்டிகள் காத்திருக்கின்றன. சிக்கிவிடாதே இளைஞனே... விழிப்பாக இரு.

தாங்கள் உயர உயரப் பறப்பதற்கு இறகுகள் இன்றித் தத்தளிக்கும் சில ஜாதித் தலைவர்கள் உங்கள் தலைகளைக் கத்தரித்து இறக்கைகளாக்க வெறி பிடித்து அலைகிறார்கள். உஷாராக இரு இளைஞனே... கொஞ்சம் தூங்கினால் உன் தலை கத்தரிக்கப்படும்! இளம்பெண்ணே! சினிமாக் கனவுகளில் உன் சேலை நழுவும்போது உன் இளமையை விலை கூறி விற்க ஒரு கூட்டம் அலைகிறது. இளம்பெண்ணே... உறங்கிவிடாதே! விழிப்பாக இரு.

வெளிநாடுகளில் வேலை என்கிற மணி மகுடங்களைக் காட்டி, பரம்பரைச் சேமிப்பையும் கொள்ளையடித்து அநாதைப் பிச்சைக்காரர்களாய் உங்கள் கையில் ஓர் அலுமினியத் தட்டைத் திணிக்கும் அராஜகம் அரங்கேறப் பார்கிறது.

இளமையே... தூங்கி வழியாதே. விழிப்பாக இரு! காலையில் கண் விழித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு விஷயத்திலும் விழிப்பாக இரு. அலர்ட், அவேக், அவேர், அரைஸ், அலார்ம் என்று ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விழிப்பை உணர்த்தும் மொழிச் சொற்கள் உள்ளன.

ஒவ்வொரு சொல்லின் அர்த்தமாகவும் வாழ்ந்து பார். குழப்பம்கூட ஒரு தூக்கம்தான். மறதி, சோம்பல், தயக்கம் இவைகூட உறக்கத்தின் விதவிதமான புனைபெயர்களே. குழப்பத்தில் தத்தளித்த அர்ஜுனனை நோக்கி பகவத் கீதையில் கண்ணன் சொன்ன வார்த்தைகள்... "உத்திஷ்ட'.

அதையேதான் நானும் சொல்லுகிறேன். தூங்காதே... தம்பி... தூங்காதே. வெற்றி நிச்சயம்!

Saturday, March 19, 2016

பதின் பருவம் புதிர் பருவமா? - முகமூடி போட்டு வரும் போதைப்பொருட்கள்

Return to frontpage

டாக்டர் ஆர்.காட்சன்


நம் நாட்டைப் பொறுத்தவரை போதைப்பொருள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மதுதான். அடுத்து அதிகபட்சமாகப் புகைப்பழக்கம், கஞ்சா ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால் மேற்கத்திய நாடுகள் மற்றும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றைவிட ஆபத்துமிக்க போதைவஸ்துக்களான அபின், ஓபியம் வகைகள், LSD, கோகெய்ன் போன்றவை சர்வசாதாரணம்.

இவையெல்லாம் இந்தியாவில் சாமானியமாகக் கிடைக்காமல் இருப்பதற்கு ‘நார்கோடிக் மருந்து தடைச்சட்டம்’ மற்றும் அதன் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனை களும்தான் முக்கியக் காரணம்.

கஞ்சா

“கஞ்சா அடிச்சிப் பாரு, மனசுல இருந்து கற்பனை சும்மா கவிதையா கொட்டும், பூமில இருந்துட்டே சொர்க்கத்துக்குப் போயிட்டு வந்துடலாம்” என்றுதான் நண்பர்கள் இதை அறிமுகப்படுத்துவார்கள். கஞ்சாவுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். பொருள், பொட்டலம், ஸ்டஃப், துண்டு உட்படப் பல பெயர்கள் இருக்கும். கஞ்சா இலைகளை, புகையிலை போல பீடி அல்லது சிகரெட்டினுள் வைத்து இழுத்தால் போதை வரும். எல்லா இடங்களிலும் இது வெளிப்படையாகக் கிடைப்பதில்லை. மதுரை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கல்லூரி மாணவர்கள்தான் இதைப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

ஆரம்பத்தில் இந்தப் போதை ஒருவித மயக்கத்தைத் தந்தாலும் நாளடைவில் கற்பனைத்திறன், சுறுசுறுப்பு எல்லாவற்றையும் மந்தமாக்கிவிடும். பின்பு மனச்சிதைவு நோய் போன்ற மோசமான மனநோய்களையும் உருவாக்கிவிடும். ஆரம்பத்திலேயே இதைப் பயன்படுத்தாமல் தடுப்பதுதான் சிறந்த ஒரே வழி.

பெட்ரோலியப் போதைப்பொருட்கள்

இதையெல்லாம் போதைப்பொருளாகப் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு, வளர்இளம் பருவத்தினர் சில பொருட்களைப் போதைக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு வகை பெட்ரோலிய வேதிப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஒயிட்னர், ரப்பரை ஒட்டப் பயன்படும் பசைகள், பிளாஸ்டிக்கை ஒட்டப் பயன்படும் ஒரு வகை திரவம் உட்படப் பல திரவப்பொருட்கள்தான் இப்போது பள்ளி மாணவர்களிடையே புழங்குகின்றன.

பாதிப்புகள்

சிறுவயதிலேயே மூளை நரம்புகள் சுருங்கி ஞாபகமறதி நோய் ஏற்படுவது, இதன் முக்கிய பாதிப்புகளுள் ஒன்றாகும். மேலும் திடீர் ஆக்ரோஷம், வலிப்பு, கை நடுக்கம், மூச்சுத்திணறல், நரம்புத்தளர்ச்சி போன்றவை ஏற்படும். பள்ளியிலோ வீட்டிலோ மாணவர்கள் இந்தப் பொருட்களைத் தேவையில்லாமல் அதிகப்படியாக வைத்திருப்பது தெரிந்தால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

சிக்ஸ் பேக் சிக்கல்கள்

வளரிளம் பருவத்தில் உடல் கட்டமைப்பு மீது சிலருக்கு அதிகக் கவனம் ஏற்படும். ‘ஹிரித்திக் ரோஷன் சிண்ட்ரோம்’ என்று கூறும் அளவுக்கு உடற்பயிற்சி மூலம் கட்டழகு இளைஞனாக மாறுவதற்காக ‘ஜிம்’களுக்கு ஓட ஆரம்பிப்பார்கள். எல்லாவற்றிலும் அவசரப்படும் மூளை, இதிலும் எப்படியாவது சீக்கிரம் சிக்ஸ் பேக்கை வளர்த்துவிட வேண்டும் என்று நினைக்கும்போதுதான் சிக்கல் வருகிறது. இந்த நேரத்தில் நண்பர்கள் மூலமாகவும், சில நேரங்களில் ஜிம் மையங்கள் மூலமாகவும் ‘அனபாலிக் ஸ்டீராய்ட்’ (Anabolic Steroid) என்ற ஊசிமருந்தைப் பயன்படுத்தினால் சீக்கிரம் உடலை வளர்த்துவிடலாம் என்ற தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகின்றனர்.

இதைப் பயன்படுத்தினால் தசை வளர்ச்சி ஏற்படுவது உண்மைதான். ஆனால் உடலின் எல்லா உறுப்புகளையும் இது பாதிக்கும் என்பதுதான் நமக்குத் தெரியாத உண்மை. முக்கியமாக இது பல மனநோய்களையும், மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால் செடியை உரம் போட்டு வளர்ப்பது போல உடலை வளர்க்கும் விபரீத முயற்சிகள் வேண்டாம்.

வளரிளம் பெண்கள் ‘நாங்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை’ என்று போட்டி போட்டுக்கொண்டு உடல் இளைப்பதற்குக் களம் இறங்குவார்கள். ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனாலும் ஆனார், அன்றிலிருந்து இந்திய வளரிளம் பெண்களுக்கு ‘ஸ்லிம் ஜுரம்’ பிடித்துக்கொண்டது.

இதற்காகப் பல நாள் பட்டினி கிடப்பது, கொழுப்பைக் குறைக்கிறேன் என்று தேவையான உணவைக்கூடப் புறக்கணிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்கு ‘அனோரெக்சியா’ (Anorexia nervosa) என்று பெயர். முற்றிய நிலையில் இது பெண்களின் ஹார்மோன் சுரப்பைப் பாதிப்பதால், பல்வேறு நோய்களை உருவாக்கும். இது ஒரு மனநோயாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.

Friday, March 18, 2016

ராமன் விளைவின் பயன் என்ன?

Return to frontpage
கே.என். ராமசந்திரன்

ராமன் விளைவு என 80 ஆண்டுகளுக்கும் மேலாக சொல்லப்படுகிறதே அதன் நேரடியான பயன்பாடு என்னவாக இருக்கும் என யோசித்திருப்பீர்கள். பதுக்கி வைத்திருக்கும் போதை வஸ்துகள், வெடிபொருட்கள் ஆகியவற்றைக் கண்டறியும் குற்றப் புலனாய்வு, புற்றுநோய் கண்டறிதல், மூட்டு வாதம் மற்றும் எலும்புச் சிதைவு ஆய்வு உள்ளிட்ட உயிரியல் மருத்துவ ஆய்வுகள் இப்படிப் பல நோக்கங்களுக்கு ராமன் விளைவு உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? அத்தகைய ராமன் விளைவின் தனித்துவம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

சிதறிய ஒளிக் கதிர்

ஓர் ஊடகத்தின் மீது ஓர் ஒளிக்கற்றை விழும்போது ஒன்று அது எதிரொளிக்கும் அல்லது ஊடகத்தை ஊடுருவிச் செல்லும். ஊடுருவிச் செல்லும்போது ஒளியின் சில கதிர்கள் திசைமாறிப் பாயும். அப்போது அவற்றின் நிறம் மாறாது. நிறம் என்பது ஒளிக்கதிரின் அதிர்வெண் அல்லது அலைநீளத்தைப் பொறுத்தது. கதிர்கள் ஊடகத்துக்குள் திசை மாறிப் பாய்வது சிதறல் எனப்படும். அவ்வாறு சிதறும் கதிர்களின் நிறம் மாறாதிருந்தால் ‘ராலே சிதறல்’எனப்படும்.

ஆனால் திரவ மற்றும் வாயு நிலை ஊடகங்களில் ஓர் ஒளிக்கற்றை பயணிக்கிறபோது சில கதிர்கள் பக்கவாட்டில் சிதறுவதை சர். சி.வி. ராமனின் தலைமையில் ஆய்வு செய்தவர்கள் கண்டனர். அது நிகழ்ந்தது 1928-ல். ஒற்றை நிற ஒளிக்கற்றை ஒன்றை ஓர் ஊடகத்தின் வழியாகச் செலுத்தும்போது பக்கவாட்டில் சிதறி வெளிப்படுகிற ஒளிக்கதிர்களின் அதிர்வெண்கள் சிலவற்றில் கூடுதலாகவும் சிலவற்றில் குறைவாகவும் இருந்தன. ஊடகத்தின் வேதியியல் கட்டமைப்பைப் பொறுத்துத்தான் அதிர்வெண் மாற்றம் இருந்தது. இந்த விளைவு ‘ராமன் சிதறல்’ அல்லது ‘ராமன் விளைவு’ எனப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ராமனுக்கு வழங்கப்பட்டது.

ராமன் நிறமாலை

பொருள்களிலுள்ள அணுக்களும் மூலக்கூறுகளும் இடப் பெயர்ச்சி, சுழற்சி, அலைவு ஆகிய 3 இயக்கங்களைப் பெற்றுள்ளன. சுழற்சியும் அலைவும் மூலக்கூறுகளின் கட்டமைப்பையும் அவற்றில் உள்ள அணுக்களின் தன்மையையும் பொறுத்தவை. அதிர்வு இயக்கம் மூலக்கூறில் உள்ள வேதியியல் பிணைப்புகள் நீண்டு சுருங்குவதாலும் வளைவதாலும் ஏற்படும். இந்த மூன்று வகை இயக்கங்களுக்கும் மூன்று வகை ஆற்றல்கள் மூல காரணங்களாகும்.

சூழ் வெப்பநிலை குறைந்தால் இந்த ஆற்றல்களின் அளவும் குறையும். நீர் உறைகிற வெப்பநிலைக்குக் கீழே -273 (மைனஸ் 273) செல்சியஸ் டிகிரி வெப்ப நிலையில் இந்த ஆற்றல்கள் முழுமையாக மறைந்து அணுக்களும் மூலக்கூறுகளும் தம் அலைவுகளை இழக்கும். வெப்ப நிலை உயர்கையில் இந்த மூன்று வகை ஆற்றல்களும் அதிகமாகும். அவற்றில் மூலக்கூறுகளின் அலைவு இயக்கத்தில் ஏற்படுகிற அதிர்வெண் மாற்றங்களை அளவிடுவது எளிது. ஒளிக்கதிர் போட்டான் எனப்படும் ஆற்றல் பொட்டலங்களாலானது. போட்டான் ஒரு மூலக்கூறின் மேல் மோதும்போது மூலக்கூறின் ஆற்றல் அதிகமாகிறது.

எனினும் அடுத்த 10-15 விநாடிகளுக்குள் அந்த மூலக்கூறு தானடைந்த உபரி ஆற்றலை வெளியேற்றிவிடும். அந்த ஆற்றலும் போட்டான் வடிவிலேதான் இருக்கும். ஆனால் அதன் அதிர்வெண், மூலக்கூறின் மேல் மோதிய போட்டானின் அதிர்வெண்ணிலிருந்து மாறுபட்டிருக்கும். இந்த இரு அதிர்வெண்களுக்கிடையிலான வேறுபாட்டிலிருந்து மூலக்கூறின் துவக்க ஆற்றலுக்கும் போட்டான் மோதலுக்குப் பின்னிருந்த ஆற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கணக்கிட்டுவிடலாம். போட்டான் வடிவில் உமிழப்படும் ஒளியின் செறிவிலிருந்து அதைச் சிதறிய மூலக்கூறுகளின் எண்ணிக்கையையும் கண்டுபிடித்துவிடலாம்.

மூலக்கூறின் மீது வீழ்கிற கதிரின் அதிர்வெண்ணுக்கும் அவ்வாறு பட்டு மீள்கிற கதிரின் அதிர்வெண்ணுக்கும் இடையில் வரையப்படுகிற வரைபடம் ‘ராமன் நிறமாலை’ எனப்படுகிறது. ஒவ்வொரு வகை மூலக்கூறும் அதற்கே உரித்தான தனித்துவமான நிறமாலையை வெளியிடுகிறது. அத்தகைய நிறமாலைகளின் உதவியுடன் மூலக்கூறின் அதிர்வு ஆற்றல்களை அளவிட முடியும். மூலக்கூறின் கட்டமைப்பையும் அறிந்துவிடலாம். இவற்றைக் கண்டறிய பிரத்தியேக கருவிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படியாக ‘ராமன் நிறமாலையியல்’ என்ற துறை பெருமளவில் விரிவடைந்துள்ளது.

ஆக இம்மியளவிலான பொருள்களைக்கூட ராமன் விளைவு பகுப்பாய்ந்துவிடும். திட, திரவ, வாயு என எந்த நிலையிலும் இருக்கும் பொருள்களைச் சோதிக்க முடிவது தொழில் துறையில் உற்பத்திக் கண்காணிப்பு, தரக் கட்டுப்பாடு, உற்பத்தி அளவைக் கூட்டுதல் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.

தேசிய வரலாற்றுச் சின்னம்

ராமன் விளைவுக்கு இன்றுவரை புதிய பயன்பாடுகள் கண்டறியப்பட்டுவருகின்றன. லட்சக்கணக்கான மூலக்கூறுகளின் ராமன் சிதறல் பாங்குகள் பதிவு செய்யப்பட்டுத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. கணினி ஆவணங்களின் உதவியுடன் எந்தவொரு பொருளின் நிறமாலையிலிருந்தும் அதன் வேதியியல் கட்டமைப்பைச் சில விநாடிகளுக்குள் அடையாளம் கண்டுவிடலாம்.

அமெரிக்க வேதியியல் சங்கமும், அறிவியல் மேம்பாட்டுக்கான இந்தியச் சங்கமும் ராமன் விளைவை வேதியியலின் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவித்துள்ளன.



எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

அரைக் கடத்திகள், சிலிகான் சில்லுகள், டிரான்சிஸ்டர்கள் போன்றவற்றைப் பிழையற, குறையற உற்பத்தி செய்வதற்கும் அவை இடம்பெறும் மின்னணுக் கருவிகளின் பரிமாணங்களை வெகுவாகக் குறைப்பதற்கும் ராமன் கருவிகள் உதவும். அவற்றால், உயிருள்ள திசுக்களைப் பகுப்பாய்வு செய்ய முடியும்.

புறத்தோல் நோய் அறிதல், தோலின் ஊடாக மருந்து உட்புகுத்தல், புற்றுநோய் கண்டறிதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு மற்றும் நோய் அறிதல், மூட்டு வாதம் மற்றும் எலும்புச் சிதைவு ஆய்வு, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதலை அளவிடல் போன்றவற்றில் ராமன் விளைவு பயன்படுகிறது. அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு கருவியிலுள்ள லென்ஸில் விரலை வைத்தால் தோலில் மோதித் திரும்பும் ஒளியைப் பகுப்பாய்வு செய்து ரத்தத்திலுள்ள சர்க்கரைச் சத்தின் அளவைக் கண்டுபிடிக்க, ராமன் விளைவைப் பயன்படுத்தும் உத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சஞ்சீவ சியாம கம்பீர், புற்றுநோயாளிகளின் ரத்தத்தில் தங்க நுண்துகள்களைச் செலுத்தி அவற்றைப் புற்றுக் கட்டிகளில் போய்த் தொற்றுமாறு செய்தார். அவற்றுக்கு மேலாக உள்ள புறத்தோல் மீது லேசர் ஒளியைச் செலுத்தினார். பிரதிபலிக்கும் ஒளியை ராமன் நிறமாலைப் பகுப்பாய்வு செய்து புற்றுநோய் இருப்பதை உறுதி செய்யும் உத்தியைக் கண்டறிந்தார். இது பக்கவிளைவு ஏற்படுத்தாத சிறப்பான உத்தி ஆகும்.

ஜார்ஜியாவிலுள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யும் ஷண்முக், உடலில் ஒரே ஒரு வைரஸ் புகுந்திருந்தாலும் அதன் வகை, தன்மை, இனப்பெருக்க வேகம் போன்றவற்றைக் கண்டறியும் ராமன் கருவியை உருவாக்கியுள்ளார்.

ஓவியங்களிலும் சிற்பங்களிலும் போலிகளை அடையாளம் காண்பது, அவற்றில் பயன்படுத்தப்பட்ட வர்ணங்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் மோசடிகளைத் தடுப்பது, புதைபடிவங்களின் வயதைக் கணிப்பது, வெடிபொருட்கள் மற்றும் போதை மருந்துகள் பதுக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடிப்பது, குற்றம் செய்தவர்களை அடையாளம் காண்பது போன்ற தடயவியல் துறை நோக்கங்களுக்கு ராமன் விளைவு பயன்படுகிறது.

இந்திய அரசின் ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் புதுப்புனைவுத்துறை’ (டி.ஆர்.டி.ஓ.) 15 அடி தொலைவிலிருந்துகூட வெடிபொருட்களைக் கண்டுபிடிக்க உதவுகிற ராமன் விளைவுச் சாதனங்களை உருவாக்கியுள்ளது. புற ஊதா மற்றும் அகச் சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்திப் பல படலங்களுக்கு அடியில் பொதிந்து வைக்கப்பட்ட வெடிபொருட்களையும் போதைப் பொருட்களையும் கூடக் கண்டுபிடித்துவிட முடியும்.

தேசிய அறிவியல் தினம்: ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட நாளான பிப்ரவரி 28 தேசிய அறிவியல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

- கே.என். ராமசந்திரன்,
பேராசிரியர் (ஓய்வு).

காமராஜர் படிக்காதவரா?

சிந்தனைக் களம் » இப்படிக்கு இவர்கள்

Return to frontpage
1937-ல் வெளிவந்த ஆல்டஸ் ஹக்ஸ்லியின் புகழ்பெற்ற புத்தகம் ‘எண்ட்ஸ் அண்டு மீன்ஸ்’ (Ends and means). இன்றைய நிலைக்கும் பொருத்தமான பல கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், அவர் விரும்பிப் படித்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. பத்திரிகையாளர் சாவி டெல்லியில் காமராஜரைச் சந்திக்கும்போது, அவர் தன் படுக்கையின் அருகே இந்தப் புத்தகத்தை வைத்திருந்தார் என்றும் “அரசியல் தலைவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்” என்று சொன்னார் என்றும் சாவி ஒருமுறை கூறினார்.

இதே கருத்தை காமராஜரின் சகாவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்த ரா.கிருஷ்ணசாமி நாயுடுவும் கூறக் கேட்டிருக்கிறேன். நேருவுக்கும் பிடித்தமான புத்தகம் அது. அந்த நூலை வாங்க டெல்லியில் பல புத்தகக் கடைகளில் காமராஜர் ஏறி இறங்கினார் என்றும் சொன்னார். சுவாரஸ்யமான இன்னொரு விஷயம், இந்தப் புத்தகம் நேருவுக்கும் அண்ணாவுக்கும்கூடப் பிடித்தமானது என்பது. எதற்கும் ஒரு முடிவு உண்டு. அந்த இறுதி நேர்மையாக இருக்க வேண்டும். அதுவே இயற்கையின் நீதி. அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் ஹக்ஸ்லி வைக்கின்ற வாதங்கள் அனைத்தும் தீர்வுகளோடு முடிவுகளையும் சொல்பவை.

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், அவ்வளவு எளிமையான நடையைக் கொண்ட நூல் அல்ல இது. மேலோட்டமான ஆங்கில ஞானத்துடன் இதைப் படித்துவிட முடியாது. நம்மில் பலரும் காமராஜரைப் படிக்காதவர் என்றுதான் இன்றைக்கும் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி இல்லை. மிகத் தீவிரமான வாசகர் அவர். பள்ளிக்கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட மேதை.

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை, ஃபேஸ்புக் மூலமாக.

Russian medical university to tie up with Indian varsities, hospitals

TIMES OF INDIA

CHENNAI: Indian students will be able to study medicine in Russia and undergo summer clinical training in home country as the Kazan State Medical University plans to tie up with leading medical universities and hospitals in India.

Kazan State Medical University of Russia will sign pacts with leading medical universities and hospitals, including the Tamil Nadu Dr MGR Medical University, Apollo Hospitals, and Sri Ramachandra Medical University (all in Chennai) and Jipmer (Puducherry).

The aim of the pact is to help its Indian students get familiarised with clinical conditions and the relevant treatments advised in India and gear up for their further studies/practice on their return to the country.

"The summer clinical training in India will allow Indian students of our institute get hands on experience and exposure that will enrich their knowledge in diagnosing the ailments when practising in India. This apart, our tie up will also focus on faculty exchange, student exchange and joint research programmes to offer the students wide scope of learning and institution enrich its programs," said Dr Alexey Stanislavovich Sozinov, chancellor, Kazan State Medical University, Russia, at a press meet organised at Russian Cultural Centre, Chennai, on Wednesday.

A high level delegation from the Kazan State Medical University, led by the chancellor, would visit All India Institute of Medical Sciences (AIIMS), the Medical Council of India and Dr Ram Manohar Lohia Hospital (all in Delhi).

Create 5% extra seats for differently-abled: HRD Ministry to AICTE, UGC - See more at: http://indianexpress.com/article/education/create-5-extra-seats-for-differently-abled-hrd-ministry-to-aicte-ugc/#sthash.4wR10084.dpuf

THE INDIAN EXPRESS 

The HRD ministry today said it has directed All India Council for Technical Education (AICTE) and University Grants Commission (UGC) to create 5 per cent supernumerary seats for the differently-abled in all schemes of skill development.

In a written reply to a question in Lok Sabha, HRD Minister Smriti Irani said her ministry has initiated provisions to assist differently-abled students.

She said that HRD ministry “has directed All India Council for Technical Education (AICTE) and University Grants Commission (UGC) to create 5 per cent supernumerary (extra) seats for differently-abled persons in all schemes of skill developmen

-In a written reply to another question, Irani said that a project ‘Swayam’ of her ministry is intended to provide Massive Open Online Courses (MOOCs) across the country. “It is proposed to roll out 500 courses before academic year 2016-17, and expand the same to 2,000 courses over a period of time,” she said. - See more at: http://indianexpress.com/article/education/create-5-extra-seats-for-differently-abled-hrd-ministry-to-aicte-ugc/#sthash.4wR10084.dpuf

Plan to use infra of closed engg colleges for skill training'

Business Standard

Government is planning to use existing infrastructure of closed AICTE-affiliated engineering colleges or polytechnics for skill development training programmes,was informed today. 

In a statement laid on the table of Lok Sabha, MSDE Minister said the ministry "is working meticulously with All Council for Technical Education (AICTE) to utilise the existing spare infrastructure/ capacities of AICTE-approved engineering colleges/polytechnics for conducting" skill training courses. 

National Skill Qualification Framework (NSQF) compliant courses under the National Council for Vocational Training (NCVT) will be conducted under the Pradhan Mantri Vikas Yojna, said Skill Development and Entrepreneurship Minister (MSDE) Rudy. 

Already closed engineering colleges/polytechnics may apply directly for affiliation to run the courses, Rudy said. 

The minister said as per information provided by AICTE, 31 institutions have been closed and 84 institutions have applied for closure across India. 

"A committee has been constituted by for feasibility study for utilisation of the surplus infrastructure, engineering colleges/polytechnics, for running NSQF compliant NCVT courses," he added.

Thursday, March 17, 2016

H1-B விசா மீண்டும் ஏற்கப்படும்: அமெரிக்கா அறிவிப்பு!

vikatan.com
வாஷிங்டன்: வேலை மற்றும் உயர் கல்வி காரணமாக அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் H1-B விசா மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
 
அமெரிக்காவில், சிறப்பான பணி எனப்படும் குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், அனுபவமும், திறமைகளும் தேவைப்படும் பணிகளை செய்ய உரிய படிப்பும், திறமையும், அனுபவமும் கொண்ட அமெரிக்கர்கள் கிடைக்காத  நிலையில்,  நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்களை வரவழைத்துக் கொள்ள வகை செய்யும் H1-B விசாவுக்கான சட்டம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இடையில் ஏற்பட்ட சில பிரச்னைகளை அடுத்து,  மீண்டும் H1-B விசா மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 2016 - 17 -ம் ஆண்டுமுதல் அமலுக்கு வரும். அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் விசாகள் ஏற்றுக் கொள்ளப்படும். முதற்கட்டமாக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதுவரை வருடத்துக்கு 65 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல் 5 நாட்களிலே 65 ஆயிரத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த விசா சயின்ஸ், என்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது

NEWS TODAY 20.09.2024