Tuesday, October 31, 2017

PCB says Chitlapakkam dumpsite unauthorised, yet appeals by locals to clear it fall on deaf ears


By Samuel Merigala  |  Express News Service  |   Published: 30th October 2017 01:22 AM  |  

Dumpyard near the Chitlapakkam lake is a health hazard | Sunish P Surendran
CHENNAI: An RTI petition filed by a local activist has reaffirmed that the dumpyard near the Chitlapakkam lake and the police station is unauthorised. 

The Tamil Nadu Pollution Control Board, to whom the RTI application was addressed, has clearly stated that permission has not been given to the Chitlapakkam town panchayat to process and dispose of solid waste in the area. P Viswanathan, petitioner and president of the Chitlapakkam Residents Welfare Association, describes the mounds of unsegregated waste towering behind the Chitlapakkam police station as “The Himalayas” partly because it keeps getting bigger and partly because all their repeated attempts to bring it down have been futile. 
“Closure of this dumpyard which borders a police station, government school and the Chitlapakkam lake is something we have been fighting for since 2000,” said Viswanathan. It was in 2000 when the TNPCB first issued a show-cause notice to the Chitlapakkam town panchayat for its irresponsible disposal of solid waste. The town panchayat flinched and began dumping waste in the nearby burial grounds. After intervention of the Kancheepuram Collector, arrangements were made for waste to be dumped in Perungudi. “At that time we didn’t have a vehicle to transport waste to Perungudi,” said an official at the Chitlapakkam town panchayat. 
Waste continued to be dumped near the lake despite repeated assurances from the panchayat that dumping would shift to Keerapakkam, where 20 acres of land has been allocated for waste from town panchayats. 
On July 24, Viswanathan filed a complaint to the Chief Minister’s special cell regarding the illegal dumping of waste near a government school and sought special permission for the 15 tonnes of waste generated every day from Chitlapakkam to be dumped in Venkatamangalam landfill.
The complaint was forwarded to the District Collectorate which said on August 8 that arrangements would be made for collection and dumping of waste in Venkatamangalam landfill, where the solid waste of the municipalities is scientifically processed. The Collectorate further said that the dumpyard at Chitlapakkam would be closed and the existing waste removed from the 0.63-acre dumpyard. However, no action has been taken and partially segregated waste continues to be dumped and mounds grow bigger. 
Irregular waste collection, segregation

The Chitlapakkam town panchayat outsourced conservancy work to an NGO called Hand in Hand in 2008. An MOU was signed where the panchayat agreed to let NGO bring in 56 workers and provide implements required for conservancy work 
After nine years, the number of conservancy workers has increased to just 61 in the MOU while the population has drastically increased in the area 
K Kannan, supervisor for Hand in Hand at Chitlapakkam, told Express that out of the 61 workers, there are at least 10 absentees every day. “Finding people do conservancy work is difficult. So we can’t force them to be regular,” he said
“There are around 12,800 people living per square kilometre in Chitlapakkam. Still depending on an NGO with irregular workers to do conservancy work is stupidity on the part of the town panchayat,” said S Chandrasekar, a member of the Chitlapakkam Residents Welfare Association 

அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் வேலை: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!


Published on : 30th October 2017 02:28 PM    
postal

ராஜஸ்தான் அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 129 போஸ்ட்மேன் வேலைக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Postman
காலியிடங்கள்: 129
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100
தேர்வு கட்டணம்: ரூ.400
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.doprajrecruitment.in/Post-MG%20exam%20%20notification%20-%202017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மெர்சல் படத்துக்கு ரூ. 200 கோடி வசூலா?: அபிராமி ராமநாதன் ஆச்சர்யம்!


By எழில்  |   Published on : 30th October 2017 01:05 PM  

mersal6


மெர்சல் படம் ரூ. 200 கோடி வசூலைத் தொடவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு அபிராமி ராமநாதன் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளரும் திரையரங்க அதிபருமான அபிராமி ராமநாதன், மெர்சல் படத்தின் வசூல் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெர்சல் வசூல் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:  
நாங்கள் 1976-ல் இருந்து இந்தத் துறையில் உள்ளோம். முன்பு, பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு 20% வரை டிக்கெட்டுகள் ஒதுக்கிவிடுவோம். எம்ஜிஆர் படத்துக்கு நூறு ரூபாய் டிக்கெட் விற்கிறார்கள் என மக்கள் வியந்தால் எனக்கு அந்த இடத்தில் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. இதனாலேயே இன்று ரூ. 150 கோடி, ரூ. 200 கோடி வசூலாகிறது என்று சொல்கிறார்கள். இது சிதம்பர ரகசியம். யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. சென்னை நகரத்தில் இந்தப் படத்துக்கு எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். தயாரிப்பாளருக்கு இன்னும் அந்த வசூல் நிலவரங்களை நான் தரவில்லை. படம் ஓடிமுடிந்தபிறகுதான் வசூல் விவரங்கள் அளிக்கப்படும். அதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதமாகும். அதேபோல மற்ற ஊர்களிலும் எவ்வளவு வசூலாகிறது என்பதைத் தயாரிப்பாளருக்குச் சொல்லவேமாட்டோம். இந்த நிலையில் ரூ. 200 கோடி வசூல் என எப்படி ஒருவர் சொல்கிறார்? இதைச் சொன்னால் யாராலும் மறுக்கவும் முடியாது. இது ஒரு இலவச விளம்பரம். மற்றபடி 99% உண்மை கிடையாது என்றார்.

பாரதியத்துக்கு இழுக்கு!


By ஆசிரியர்  |   Published on : 30th October 2017 03:52 AM  |
உத்தரப் பிரதேசத்திலுள்ள சர்வதேச கலாசாரச் சின்னமான பதேபூர் சிக்ரிக்கு சுற்றுலா வந்த சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதி தாக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த அந்த சுவிஸ் தம்பதி ஆக்ராவுக்கு சென்றிருக்கிறார்கள். தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டு ஆக்ராவை அடுத்துள்ள பதேபூர் சிக்ரி சென்ற அவர்களை சில இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்டனர். தங்களைப் புகைப்படம் எடுப்பதை விரும்பாத சுவிஸ் தம்பதியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள், எலும்புகள் முறியும் அளவுக்கு அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், அதை என்னவென்பது?
 பதேபூர் சிக்ரி ஒரு மிக முக்கியமான, வரலாற்றுச் சின்னம். உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் அமைந்திருக்கும், மொகலாய சக்கரவர்த்தி அக்பரால் எழுப்பப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்துக்கு, தாஜ்மஹாலை பார்க்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தவறாமல் விஜயம் செய்வார்கள்.
 ஆக்ராவிலிருந்து 39 கி.மீ. தொலைவிலுள்ள பதேபூர் சிக்ரி நகரம், 1569-இல் எழுப்பப்பட்டு 1571 முதல் 1585 வரை மொகலாய சாம்ராஜ்யத்தின் தலைநகராகத் திகழ்ந்தது. சித்தூர், ரத்தன்போர் ஆகிய இடங்களைக் கைப்பற்றியதன் வெற்றிச் சின்னமாக ஒரு புதிய தலைநகரை உருவாக்க விரும்பிய அக்பர், ஆக்ராவிலிருந்து பதேபூர் சிக்ரிக்குத் தனது தலைநகரை மாற்றினார். பதேபூர் சிக்ரி என்கிற இடத்தில் அக்பரின் வழிகாட்டியான சுஃபி மகான் சலிம் சிஷ்டியின் நினைவாக அந்தத் தலைநகர் அமைக்கப்பட்டதால், அதற்கு பதேபூர் சிக்ரி என்று பெயர் சூட்டப்பட்டது. அக்பரின் காலத்திற்குப் பிறகு பதேபூர் சிக்ரி புறக்கணிக்கப்பட்டது.
 கடந்த பல ஆண்டுகளாகவே பதேபூர் சிக்ரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வழிகாட்டிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இளைஞர்களும், தெருவோர வியாபாரிகளும் சூழ்ந்து கொள்வதும், அவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதும் வழக்கமாக இருந்து வரு
 கிறது. யுனெஸ்கோ நிறுவனத்தால் உலக கலாசாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பதேபூர் சிக்ரிக்கும் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த இளைஞர்களின் இலக்கு.
 பதேபூர் சிக்ரி நகருக்குள் நுழையும்போதே, அங்கே கூட்டம் கூட்டமாக அங்கீகாரம் பெறாத வழிகாட்டிகள் வாகனங்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். கையை ஆட்டியும், வாகனங்கள் நிற்காவிட்டால் அதன் முன்னால் போய் நின்று தடுத்தும் நிறுத்துகிறார்கள். தங்கள் உதவி இல்லாமல் பதேபூருக்குள் நுழைந்தால் வாகனங்களை நிறுத்துவதிலும், பதேபூர் சிக்ரியை அடைவதிலும் பிரச்னைகள் உண்டு என்று அச்சுறுத்துகிறார்கள்.
 சமீபத்தில் பதேபூர் சிக்ரிக்கு விஜயம் செய்த அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் தனது முகநூலில், அங்கே தனக்கு நேர்ந்த பிரச்னைகளையும் அச்சுறுத்தல்களையும் விவரமாகப் பதிவு செய்திருக்கிறார். பதேபூர் சிக்ரியில் நுழைந்த சில நிமிடங்களில் தனது வாகனத்தை, மோட்டார் சைக்கிளில் சில இளைஞர்கள் துரத்தி வந்ததாகவும், வாகனத்தின் கண்ணாடியை இறக்கும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவிக்கிறார். அவர்களிடம் தங்களுக்கு வழிகாட்டி யாரும் தேவையில்லை என்று தெரிவித்தும்கூட விடாப்பிடியாக வற்புறுத்திப் பணம் பிடுங்கிய பிறகுதான் வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தாக கூறுகிறது அவரது பதிவு.
 ஆக்ராவில் அதிகாரபூர்வமற்ற வழிகாட்டிகளை "லப்கஸ்' என்று அழைக்கிறார்கள். சுற்றுலாப் பயணி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களுக்குப் பணம் கொடுத்தாக வேண்டும். லப்கஸ் என்பவர்கள் இருபது வயதுக்குக் கீழேயுள்ள இளைஞர்கள். வழிகாட்டுகிறோம் என்கிற பெயரில் அங்கிருக்கும் கடைகளில் அதிக விலைக்குப் பொருள்களை வாங்கப் பயணிகள் இவர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
 பதேபூர் சிக்ரியில் இருக்கும் ஜாமா மஸ்ஜித்தில் சுற்றுலாப் பயணிகளின் அனுபவம், அதிலும் வெளிநாட்டவராக இருந்தால், இன்னும் மோசம். அங்கிருக்கும் ஷேக் சலிம் சிஷ்டி என்கிற சுஃபியின் தர்காவில் நுழையும்போதே, தங்களை தர்கா ஊழியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் சுற்றிவளைத்துப் பணம் பிடுங்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதில் சில வழிகாட்டிகள் 10 வயது, 11 வயது சிறுவர்கள் என்பதுதான் வேடிக்கை. இவர்களும் தரக்குறைவாகவும், முரட்டுத்தனமாகவும் வெளிநாட்டுப் பயணிகளிடம் நடந்துகொள்வதுதான் வாடிக்கை.
 2016-இல் இந்தியாவுக்கு 88 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அந்நியச் செலாவணி ரூ.1.5 லட்சம் கோடி. கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான அரையாண்டில் 49 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு ரூ.87,096 கோடி அந்நியச் செலாவணியை வழங்கியிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டைவிட 22.3% அதிகம்.
 பதேபூர் சிக்ரியில் சுவிஸ் தம்பதிக்கு நடந்ததைப்போல் இந்தியாவின் வேறு பல பாகங்களிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, நடந்துவருகின்றன. பாலியல் வன்முறைகூட இதில் அடக்கம். அதனால்தான் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்று வெளிநாட்டினர் பலர் இந்தியாவைக் குறிப்பிடுகின்றனர். விருந்தினர்களை வரவேற்பது இந்தியாவின் பொதுக்கலாசாரமாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், நமது தேசத்தின் பெருமைகளையும் வரலாற்றுச் சுவடு
 களையும் தெரிந்து கொள்ள வரும் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காக தலைகுனிய வேண்டும்!

வங்கிகளைக் காக்கும் வாடிக்கையாளர்


By எஸ். ராமன்  |   Published on : 31st October 2017 02:27 AM  |
அரசு வங்கித் துறையில் அவ்வப்போது ஏற்படும் நிகழ்வுகள் ஒவ்வொரு இந்திய குடிமகனின் அன்றாட வாழ்க்கையில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது. 
கடந்த வாரத்தில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லியின் வங்கித் துறை சார்ந்த மறு முதலீட்டு (Recapitalisation of banks) அறிவிப்பு, வாராக்கடன்களால் அடித்தளம் தளர்ந்து, சோர்ந்து போயிருந்த அத்துறைக்கு புத்துணர்வை ஊட்டியது என்றால் அது மிகையாகாது.
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளின் முதலீட்டு தொகையின் (Capital funds) பெரும் பங்கை விழுங்கிக் கொண்டிருக்கும் வாராக்கடன்கள், வங்கிகளின் கடன் வழங்கும் திறன் மற்றும் அவற்றின் புற மதிப்பீடுகளையும் (External ratings) வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கின்றன. 
இந்த இடர்ப்பாடுகளிலிருந்து தப்பி வெளியே வருவதற்கான சூத்திரம் தெரியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருந்த அரசு வங்கித் துறை, இந்த அறிவிப்பால் சற்று ஆசுவாச பெருமூச்சு விட ஆரம்பித்திருக்கின்றது என்று கருதலாம்.
நிதி அமைச்சரின் அறிவிப்பின்படி, வங்கிகளின் கடந்த கால மூலதன இழப்பீடுகளை சரிகட்டும் பொருட்டு, 1.35 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான மூலதன முதலீட்டு பத்திரங்களை (Recapitalisation bonds) மத்திய அரசு வெளியிடும். 
பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு, வங்கிகளின் பண கையிருப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. உபரி தொகை சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஆனால், சமீப காலத்தில், வங்கிகளின் கடன் வழங்கும் தொகையின் வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் கீழ் குன்றியுள்ளது. 
இது கடந்த பத்து ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவிலான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகையை வங்கிகள் லாபகரமாக பயன்படுத்தவில்லை என்றால், அவற்றின் செலவு கணக்கு அதிகரித்து, ஏற்கெனவே பழுது நிலையில் துவண்டு கொண்டிருக்கும் நிதி நிலை அறிக்கைகள் மேலும் பழுதடைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
அம்மாதிரி வைப்புத் தொகை, வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கடனாகக் கணக்கிடப்படுமே தவிர, அதை மூலதன கணக்கில் சேர்க்க முடியாது. 
எனவே, வங்கிகளிடம் குவிந்திருக்கும், வருமானம் ஈட்டமுடியாத உபரித் தொகையை மறுமுதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் என திட்டமிடப்பட்டிருக்கிறது. 
மறுமுதலீட்டு பத்திரங்களைப் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. 1990}ஆம் ஆண்டு, வங்கிகள் சந்தித்த பொருளாதார இடர்ப்பாடுகளை களைய, இம்மாதிரி பத்திரங்கள் வெளியிடப்பட்டன. 
அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்கும்போது, மறு முதலீட்டு பத்திர விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியை அரசாங்கம், வங்கிகளின் பங்குகளை வாங்க பயன்படுத்தும். 
இதனால், வாராக்கடன்களால் தேய்ந்து கொண்டிருக்கும் வங்கிகளின் மூலதன கணக்கு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வங்கிகளில் அரசாங்கத்தின் பங்கு தற்போதைய 51 சதவீதத்திலிருந்து மேலும் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
இம்மாதிரி பத்திர வெளியீட்டால், அரசாங்கத்திற்கு அதற்கான வட்டி சுமை, வருடத்திற்கு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும். இந்த வட்டி செலவு, அரசாங்கத்தின் வரவு, செலவு கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். 
அதே சமயத்தில் மூலதனங்கள் மூலம், வங்கிகளின் கடன் வழங்கு திறன் அதிகரித்து, கூடுதல் லாபத்திற்கு வழி வகுக்கும். கூடுதல் லாபத்திலிருந்து அரசுக்கு வழங்கப்படும் டிவிடென்ட் தொகை அதிகரித்து வட்டி செலவை ஓரளவு ஈடு கட்டும்.
இதைத் தவிர, வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்துவதற்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவில், பட்ஜெட்டிலிருந்து படிப்படியாக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும். 58 கோடி ரூபாய் அளவிற்கான பங்குகளை விற்று, மூலதனத்தை பெருக்க வங்கிகள் அறிவுறுத்தப்படும்.
டிவிடென்ட் போன்ற நேரிடையான பலன்களைத் தவிர, வங்கிகளின் கூடுதல் கடன் வழங்கும் திறனால், சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பயனடைய செய்யும் விதமாக திட்டங்கள் வெளிவர இருக்கின்றன.
இந்தச் செயல்பாடுகள், நாட்டின் தொழில் வளர்ச்சியையும், அதன் இணைப்பாக, வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி, ரூபாயின் மதிப்பை, சர்வதேச நாணய சந்தையில் உயர வழிவகுக்கும். இந்தச் செயல்பாடுகளால், உலகப் பொருளாதார சந்தையில் நம் நாட்டின் தரம் (Soverign rating) உயரும்.
கடனை திருப்பி செலுத்தாத பல பெரும் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திவால் சட்டத்திற்கு (Insolveny Act) உட்படுத்தப்பட்டு வருகின்றன. திவால் நிறுவனங்களின் பெயரில் இருக்கும் கடன் நிலுவைத் தொகையில் 50 சதவீதம் வரையில், வங்கிகள் தங்கள் வரவுக்கணக்கிலிருந்து ஒதுக்கீடு (Provision for bad debts) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. இதனால், வரும் காலங்களில் வங்கிகளின் ஒதுக்கீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
கடந்த சில மாதங்களாக அமலில் இருக்கும் திவால் சட்டத்தின் செயல்பாட்டு புள்ளிவிவரங்களைக் கூர்ந்து நோக்கும்போது, நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களில், என்னதான் முயன்றாலும், அதிக பட்சமாக 10 சதவீதம் வரையில் கூட வங்கிகளால் வசூலிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 
இதனால், வங்கிகளின் பொருளாதார இழப்புகள் அதிகரிக்குமே தவிர, குறைய வாய்ப்பில்லை. வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத பெரும் தொழில் அதிபர்களுக்கு இது எளிதில் "வெளியேறும் ஒரு வழி'யாக (Easy exit route) அமைந்து விடுமோ என்ற பய உணர்வு பொருளாதார வட்டாரங்களில் உலவுவது நிஜம்.
கடன் வழங்குவதிலும், கொடுத்த கடனை வசூலிப்பதிலும் வங்கிகள் காட்டிய மெத்தனப் போக்குதான் தற்போதைய தொய்வு நிலைமைக்குக் காரணம். தற்போது நிலுவையில் இருக்கும் வாராக்கடன்களின் பெரும் பகுதி, வங்கிகளின் கூட்டமைப்பால் (Consortium of banks) வழங்கப்பட்டவையாகும். 
ஒவ்வொரு கூட்டமைப்பிலும், குறைந்தது ஐந்து முதல் இருபது வங்கிகள் பங்கேற்று கடன் தொகையை பிரித்து வழங்கும். ஆனால், கடன் வழங்கப்பட்ட பிறகு அதற்கான கட்டுப்பாடுகள் (Control and Ensuring end use of funds) மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய திறன்கள் வங்கிகளிடையே முழு அளவில் வளரவில்லை என்பதுதான் உண்மை நிலவரமாகும். 
வங்கிகளின் இந்த பலவீனத்தை கடன்தாரர்கள், தங்களுக்கு சாதகமாக முழு அளவில் பயன்படுத்திக் கொண்டார்கள்.
குறிப்பாக, கட்டமைப்பு வசதிகளுக்கான கடன்கள் (Advances for infrastructure facilities) வழங்குவதிலும், அவற்றை மேற்பார்வை இடுவதிலும் பொதுத் துறை வங்கிகளுக்கு சிறிதளவும் அனுபவம் இல்லை என்றே சொல்லலாம்.
அரசின் கஜானாவான வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, அதற்கான முழுத்தகுதி, ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்களிடம்தான் ஒப்படைக்கப்படவேண்டும். 
மூன்று ஆண்டிற்கு ஒரு முறை வங்கியின் செயல் தலைவர்களை (Chief Executive officer) மாற்றுவதற்கு பதிலாக, அந்தந்த வங்கி அதிகார வர்க்கத்திலிருந்தே தலைவர்கள் நீண்ட கால பதவி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டால், தொடர் பணியால், அர்ப்பணிப்பு உணர்வு (Sense of belonging) அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு வங்கியின் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி, வழி நடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு, அதன் செயல் குழுவையே Board of director  சாரும். அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுபவர்கள், வங்கித் துறை சார்ந்த விஷயங்களில் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்பது மிகமிக அவசியம். 
மேலும், ஒவ்வொரு வங்கியின் செயல் குழுவிலும், ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி அங்கம் வகிக்கிறார். அந்தப் பிரதிநிதிக்கு வங்கி சார்ந்த ஞானம் (Professional knowledge in commercial banking) மிக அவசியம். 
வங்கி செயல்பாடுகளில் காணப்படும் குறைகளை அவ்வப்போது ரிசர்வ் வங்கி தலைமையின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை இந்தப் 
பிரதிநிதிகள் குறையின்றி நிறைவேற்ற வேண்டும். 
ஒரே மாதிரி சேவைகளை வழங்கும் பல வங்கிகளை இணைப்பது வங்கித் துறைக்கு பலம் சேர்க்கும். அம்மாதிரி இணைப்புகளால், ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை எளிதாகி, அதன் தரம் மேலும் மேம்படும். வங்கிகளில் வாராக்கடன்கள் குவிந்த பிறகு, கூட்டை கலைக்க முற்படுவதைவிட, ரிசர்வ் வங்கியின் தணிக்கை துறை பலப்படுத்தப்பட்டு, வங்கி தணிக்கைகளின் இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.
கூர்ந்து கவனித்தால், வங்கிகளை தற்போதைய பெரும் இடர்ப்பாடுகளிலிருந்து காப்பது, அவற்றின் வாடிக்கையாளர் தான். அவர்களின் வைப்புத்தொகைதான், சுழற்சியில், வங்கிகளின் மறு முதலீடு என மறு பிறப்பு எடுத்து, வங்கித் துறையை அழிவிலிருந்து காப்பாற்றுகிறது. 
ஆனால், வங்கித் துறையோ, அபரிமிதமான கட்டணங்களை வாடிக்கையாளர்களின் மீது தொடர்ந்து திணித்து, அவர்களின் வெறுப்பை சம்பாதிக்க முற்படுகிறது.
ஆபத்து நேரத்தில் தங்களுக்குக் கை கொடுத்து காப்பாற்றும் வாடிக்கையாளர்களை இனிய சேவைகளின் மூலம் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு வங்கி ஊழியரின் தலையாய கடமையாகும்.
கட்டுரையாளர்:
வங்கி அதிகாரி (ஓய்வு).

Breakdowns, delays drive MTC bus commuters up wall

TNN | Oct 31, 2017, 00:08 IST

CHENNAI: Despite Metropolitan Transport Corporation (MTC) assurances that its fleet was well-serviced to handle downpours in the city, two buses broke down on day one of the northeast monsoon, causing major traffic snarls on Five Furlong Road, Guindy, and Poonamallee High Road, near Nandambakkam Trade Centre.

Passengers in these overcrowded buses had to wait for hours until the next scheduled bus on these routes arrived to ferry them to their destinations, said traffic police officers.

In many terminuses, especially in south Chennai, MTC buses arrived more than an hour-and-a-half behind schedule. MTC sources in one of the terminuses said since the rain started in the morning, the services were disrupted right from 9am and the situation was worsened by congestion caused by the garlanding of the Thevar statue on Anna Salai.

"Buses from areas in South Chennai plying to Broadway and Tiruvottiyur were moving at a snail's pace due to heavy traffic on Anna Salai from Little Mount to Teynampet junction," sources added.

A senior MTC officer said though the crew on the morning shift came to duty on time, a number of buses got stuck in traffic. "In many depots in the south, the buses which were scheduled to close the morning trip did not arrive even after 2.30pm," the officer said.

Similarly, drivers and conductors on the afternoon shift, which begins at 2 pm, were unable to reach the bus terminus on time, the officer said. The problem continued till late in the evening.

‘Write to reservation chief for transfer of train tickets to kin’

TNN | Updated: Oct 30, 2017, 07:56 IST



CHENNAI: One of the most common issues that railway passengers face during the holiday season is transferring a confirmed ticket to a family member due to unforeseen cirumstances. Southern Railway recently received complaints that passengers are facing problems in getting this process done.

According to railway rules, the Chief Reservation Supervisor (CRS) is authorised by the railway administration to permit the change of name of a passenger who has a reserved seat or berth to a family member's. The ticket can be exchanged only with a father, mother, brother, sister, son, daughter, husband or wife, rules state.

Recently, a senior citizen from Adambakkam who wanted to transfer his wife's ticket to his daughter was asked by staff at St Thomas Mount, his nearest booking counter, to travel up to Chennai Central station. At Central station, he faced further difficulties and in exasperation, he cancelled the trip.

A senior railway official said Passenger Reservation System (PRS) ticket counters at important stations will have a CRS. "For the name change, a request in writing has to be given 24 hours before the scheduled departure of the train that the reservation made in his/her name may be transferred to another member of his/her family," the official said.

An identity proof, which establishes the relationship of the two persons between whom the ticket exchange has to be made, should be provided to the CRS with the letter, the official said. "This can be a ration card or passport or any other document," he said.

This formality can be completed at any PRS counter and not necessarily at the one at which the ticket was booked.

The ticket can also be exchanged between students of recognised educational institutes. In this case, the head of the institution has to give a written request 48 hours before the scheduled departure of the train, stating that the reservation should be transferred between students

Rain, Thevar Jayanthi disrupt MTC bus services in Chennai

P Oppili| TNN | Updated: Oct 30, 2017, 16:09 IST


Traffic snarls were seen on many roads in Chennai due to rain and Thevar Jayanthi celebrations on Monday (TOI ... Read More

CHENNAI: MTC bus services were affected in Chennai on Monday due to rain and Thevar Jayanthi celebrations. Buses arrived more than one-and-a-half hours late at many depots, especially those in South Chennai.

MTC sources said services had been disrupted after it began to rain in the morning. After 9am, there was a steady flow of people from different parts Chennai and nearby districts to Nandanam to garland the statue of U Muthuramalinga Thevar on his 110th birth anniversary. This affected traffic on the Anna Salai.

Buses from South Chennai areas like Adyar, Thiruvanmiyur, Besant Nagar, the East Coast Road and the OMR which were going towards Broadway, Tiruvottiyur and other North Chennai areas via Saidapet and Nandanam were moving at a snail's phase due to heavy traffic on the Anna Salai.

A senior MTC officer said drivers and conductors slated for morning shift came to duty on time. The services began at 5.30am, as usual. However, a number of buses got stuck in traffic after it began to rain after people thronged the Thevar statue on the Anna Salai. In many depots in South Chennai, buses which were to close the morning shift by 2pm had not arrived even after 2.30pm, the officer said.

LATEST COMMENTAlready many places were chocked with heavy traffic due to manifold increase of many two and four wheelers and such type of events coupled with heavy rains added the woes of traffic apart from freq... Read MoreSathasivan Nagarajan

He said many drivers and conductors, who were to work on the afternoon shift (which begins at 2 pm), had not reached the bus depots on time.

Rs 1.10 lakh unaccounted money seized from Vellore corporation commissioner’s office

Shanmughasundaram J| TNN | Updated: Oct 30, 2017, 19:32 IST



CHENNAI: Two months after trapping then commissioner of the Vellore Corporation T Kumar for taking a bribe from a contractor, sleuths of the Directorate of Vigilance and Anti-Corruption Wing (DVAC) and officials of the VelloreDistrict Inspection Cell (DIC) conducted a surprise check and confiscated Rs 1.10 lakh unaccounted money from the commissioner's office. The officials have also confiscated Rs 29,500 from two other corporation employees during the check.

The joint raid was conducted following specific information that commissioner P Kubendran had received a bribe to award tender for development project. The bribe amount was in the possession of the commissioner. The joint raid commenced at 10am.

The team was led by district inspection cell officer C Sumathi and deputy DIC officer A Jothi and ADSP of DVAC M Balasubramanian.

The DVAC sleuths found Rs 1.10 lakh unaccounted money in the drawer in the antechamber of the commissioner's office.

The officials also seized Rs 20,000 unaccounted money from junior assistant (E 1 Section) Malika and Rs 9,500 unaccounted money from the possession of Bangaramma, who has been working on consolidate pay. She retired from the corporation office six years ago.

"Commissioner denied the graft charges and said he was not aware of the money in his drawer in the office," said a DVAC officer.

Following the seizure of the accounted cash, the sleuths took him to his house and conducted a search. However, nothing found in his house.

A senior police officer in the wing said that DIC had received a specific complaint against the commissioner. According to the complaint, the commissioner has been demanding 2% commission for awarding tender for the all kinds of works in the corporation limit. "After confirming the commissioner received the bribe amount, we conducted the check," said the official.

The DVAC would file a case against Kubendran and two others under the provision of the Prevention of Corruption Act after receiving a complaint from DIC.

It may be recalled that the DVAC police laid a trap and arrested former commissioner Kumar for demanding and accepting bribe to the tune of Rs 20,000 from a contractor. They had also seized Rs 10.44 lakh unaccounted money, a cash counting machine and 26 sovereign gold jewels worth around Rs 7 lakh from his house.

Corporation lies, and Chennai floats, again

TNN | Updated: Oct 31, 2017, 00:07 IST

CHENNAI: The city received just 6cm of rain on Monday, but that was enough to prove Greater Chennai Corporation had not been honest with residents about its monsoon-preparedness.

With storm water drains choked, major roads came under water, inundating several localities and affecting traffic movement for long hours. But the civic body chose to downplay the situation, saying that only 105 complaints of water stagnation had been reported and that no trees were uprooted.

The corporation's figure only took into account the petitions received by the 24/7 control room at Ripon Buildings, indicating that the civic body's 1913 helpline was not registering complaints. Several attempts by TOI to obtain actual monsoon-related complaint data failed as officials in the public relations department officials refused to share it.

Unfinished Metrowater work also caused stagnation in places like Guindy and Perungudi. Sajeevan, a Perungudi resident, said most storm water drains were blocked. Residents in areas like Villivakkam, Royapuram and Pulianthope too said passages to drains were blocked and that water wasn't receding.

With schools remaining open during the day, the poor road condition troubled parents. "The roads in Virugambakkam had turned into slush pits. There were potholes everywhere," said Vijay, a local resident.

Important bus route stretches like Whites Road in Royapettah, Chennai-Tiruvallur High Road in Ambattur, Jawaharlal Nehru Salai that connects Ekattuthangal with Koyambedu, and Old Mahabalipuram Road were under sheets of water.

As the roof of Chennai Central railway station, a heritage structure, leaked, a passenger shot a clip of water covering old and new concourse areas, and demanded action, after uploading it on Twitter, from the railway minister to fix what has become a recurrent problem.

Water logging on the stretch of GNT Road from Puzhal flyover towards Karanodai meant vehicles could move only at a snail's pace. In the RBI subway near Parry's water was at least one ft deep, while it was more than two ft deep in the one at Vyasarpadi Jeeva. With few corporation officials or police personnel to regulate traffic movement, members of the public took it upon themselves to streamline movement by allowing cars and two-wheelers to move alternately.

At Padmnabha Nagar in Adyar, a tree was uprooted in the rain. Thevar Jayanthi celebrations too affected traffic movement. "To reach Teynampet, it took me twice the time than on a normal day. There was bumper-to-bumper traffic on Anna Salai," said S Komal of Madipakkam.



On Santhome High Road and Dr Radhakrishnan Salai, lines of vehicles stretched for long distances. Motorists caught in the rain took refuge under overpasses as well as under metro rail and MRTS structures. Police reported a high number of accidents but no casualties. "The accidents mostly involved two-wheelers that skidded on slippery roads," an officer said.
MMC student hangs himself, 2nd in 2 weeks

TNN | Oct 31, 2017, 00:06 IST


Chennai: A second year Madras Medical College student hanged himself in his hostel room on Sunday night, allegedly over depression, police said.

The suicide of M Arun Selva, the second such death of an MMC student in less than two weeks, has caused concern, with the Doctors Association for Social Equality (DASE) calling for a probe by the administration.

Police said Arun Selva, a 20-year-old native of Vandavasi in Tiruvannamalai district, refused to accompany his friends for dinner, claiming he had to make a phone call. When he returned, they found him hanging from the ceiling of the room and called police. A team arrived and sent his body for autopsy.

On Monday, a student told TOI that Arun usually kept to himself. "He would rarely talk unless spoken to. This was often mistaken for disinterest. Everyone knew he was a bright student," said the third year student.

On October 16, P Soujanya, a second year student, committed suicide, after appearing depressed for two days. Police, quoting her parents, said the 20-year-old had joined the course despite having little interest in it and even told them that she might not be able to cope up with the pressure. On October 13, she was said to have been taken to a private hospital on Greams Road with a complaint of depression.

"Soon after her suicide, the MMC management conducted counselling session for students. Since then, Arun Selva had appeared depressed," said a police officer quoting some of Arun Selva's friends.

On Monday, DASE general secretary Dr G R Ravindranath said the trend was disturbing. "The management should investigate and take necessary steps," he added.

With regard to Arun Selva's death, MMC dean Dr Narayana Babu said, police were investigating the cause. He ruled out harassment by professors to be among the reasons that pushed the student to the brink. "Some of our students complain of high stress levels. That is bound to happen in a medical college. We have several programmes and facilities on campus to help students cope, including mentorship and counselling," he said.

Rain: Holiday declared for schools in Chennai, Tiruvallur and Kancheepuram districts; Chennai colleges also to remain closed

Vinayashree J| TNN | Updated: Oct 30, 2017, 21:23 IST


The education department took a decision on Monday evening after weathermen said there would be heavy to very ... Read More

CHENNAI: The Tamil Nadugovernment declared a holiday for all schools in Chennai, Tiruvallur and Kancheepuram districts on Tuesday due to forecast of heavy rain.

The education department took a decision on Monday evening after weathermen said there would be heavy to very heavy rainfall in the city till Friday.

Colleges in Chennai district will remain closed on Tuesday due to rain, collector announced on Monday night.

Chennai rain: Roof of Chennai Central railway station starts to leak again

Siddharth Prabhakar| TNN | Oct 30, 2017, 20:22 IST



CHENNAI: Despite assurances and work taken up by Southern Railway, the roofof Chennai Central railway station, which caters to three lakh daily passengers, has started to leak again in the wake of heavy rain in Chennai.

The roof started to leak on Monday the evening. A video shared by a passenger on social media shows that the area on the old concourse and new concourse near the closed food plaza have been covered in water.
A senior official in the Southern Railway said men were working to remove water. However, since the roof would be slippery, they could not be sent up to unclog the drains.

On several occasions, the roof used leak even after a brief spell of rain. It must be noted that the divisional railway manager of Chennai Railway Division had issued strict instructions to ensure that such an issue would not crop up this year.

Doctors leave scissors inside man’s abdomen

TNN | Oct 31, 2017, 01:24 IST



NELLORE: Almost a month after a 45-year-old man underwent an appendicitis operation at the Nellore Government General Hospital (GGH) here, he had to be readmitted only to learn that a pair of surgical scissors was left behind in his stomach during the earlier surgery.

Hospital sources said the patient Sireekapu Chalapathi had been suffering from appendicitis for the past few years and upon examination, it was found that the appendix had damaged a portion of his intestines. On October 3, a team of doctors headed by Dr Padma Shree removed Chalapathi's appendix as well as the damaged portion of intestines.

TOP COMMENTwell this is what happens when u induce reservation in critical sectors like healthcare  TANUJ PARIHAR

On October 27, however, Chalapathi returned to the hospital complaining of severe stomach and abdominal pain. Upon examination, doctors found that a large pair of surgical scissors was left behind in his stomach after the previous surgery. He was immediately operated upon and the scissors were removed, but his condition is still critical.

GGH superintendent Dr Hari has ordered an internal inquiry.The botched operation became public on Monday after the X-Ray showing the scissors inside Chalapathi's stomach was leakedto the media.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பியடித்து தில்லுமுல்லு

ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பியடித்து  தில்லுமுல்லு
சென்னை: சென்னையில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சினிமா பட பாணியில், ஐ.ஏ.எஸ்., தேர்வில் காப்பி அடித்த, தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியமான, யு.பி.எஸ்.சி., இந்த ஆண்டு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில், 985 காலியிடங்களை நிரப்ப, ஜூன், 18ல், முதல் நிலை தேர்வை நடத்தியது. இதில், 13 ஆயிரத்து, 350 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கான மெயின் தேர்வு, அக்., 28ல் துவங்கி, நவ., 3 வரை நடக்கிறது. சென்னை உட்பட, நாடு முழுவதும், 24 முக்கிய நகரங்களில் தேர்வு நடக்கிறது. 

அக்., 28ல், சென்னை எழும்பூரில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த, தமிழக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ஷபீர் கரிம், 30, தேர்வு எழுதினார்.
பொறியியல் பட்டதாரியான இவர், 2014ல், யு.பி.எஸ்.சி., தேர்வில், 112வது இடத்தில் தேர்ச்சி பெற்று, ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றார். ஆனால், ஐ.பி.எஸ்., அதிகாரியாக விருப்பம் தெரிவித்து, பயிற்சிக்கு பின், நெல்லை மாவட்டம், நாங்குநேரி, சப் - டிவிஷன், உதவி எஸ்.பி.,யாக பயிற்சி பெற்று வந்தார். கேரளாவில், பல பெயர்களில், மனைவியுடன் சேர்ந்து, ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறார். இதனால், மீண்டும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முயற்சித்துள்ளார்.அதற்காக, விடுமுறை எடுத்து படித்து வந்த, ஷபீர் கரிம், தேர்வு மைய கண்காணிப்பாளர்களின் கண்ணில் மண்ணை துாவி, அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய, மொபைல் போன் மற்றும் சிறிய வகை, 'புளூடூத்' கருவியை எடுத்து சென்று உள்ளார். 

அதன் வாயிலாக, ஐதராபாதில் இருந்த, மனைவிக்கு கேள்விதாளை அனுப்பி, 'புளூடூத்' கருவி வழியாக பதிலை பெற்று, தேர்வு எழுதி உள்ளார்.

இவரது தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்த, தேர்வு மைய கண்காணிப்பாளர், ஷபீர் கரிமை, எழும்பூர் போலீசில் ஒப்படைத்து உள்ளார். அவரிடம், நேற்று, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர், சாரங்கன், இணை கமிஷனர், மனோகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது, நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., சினிமா பட பாணியில், ஷபீர் கரிம் காப்பி அடித்து, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார், அவர் மீதும், அவரது மனைவி மீதும் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். 

நேற்று ஹபீர் கரிமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த, அவரது மனைவி ஜாய்சி என்.ஜியாவையும் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

சதய விழாவில் பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம்


சதய விழாவில் பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், ராஜராஜசோழன், 1,032வது ஆண்டு சதய விழாவை முன்னிட்டு, 48 வகையான பொருட்களால், பிரகதீஸ்வரருக்கு பேராபிஷேகம் நடந்தது.

தஞ்சையில், ராஜராஜசோழனின், 1,032வது சதய விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, 8:00 மணிக்கு, திருமுறை வீதி உலாவுடன், யானை மீது, தேவாரம் - திருவாசகத்தை வைத்து, ஊர்வலமாக ராஜராஜன் சிலை வரை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சோழன் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, பிரகதீஸ்வரருக்கு தேன், தயிர், மஞ்சள், பால், பழம் ஆகிய, 48 வகையான பொருட்களால், பேராபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை காண, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், சிவனடியார்கள் திரண்டு இருந்தனர். கும்பகோணம் அடுத்த, உடையாளூரில் உள்ளதாக கூறப்படும் ராஜராஜசோழனின் நினைவிடத்தில், 1,032வது சதய விழா, நேற்று நடைபெற்றது. இதில், ஏராளமானோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
பாரிவேந்தர் மீதான வழக்கு: ரத்து செய்தது ஐகோர்ட்


சென்னை: எஸ்.ஆர்.எம்., குரூப் கல்வி நிறுவனங்களின் தலைவர், பாரிவேந்தருக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சென்னையை அடுத்த, காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., மருத்துவப் பல்கலையில், மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்று தருவதாக, கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக, 'வேந்தர் மூவிஸ்' நிர்வாகி மதன் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பல்கலையின் நிர்வாகி பாரிவேந்தர் மீதும், புகார் கூறப்பட்டது; மதன், தலைமறைவானார்.
சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், 75 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதை தொடர்ந்து, பாரிவேந்தருக்கு,
நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. தலைமறைவாக இருந்த மதன், பல மாதங்களுக்கு பின், திருப்பூரில் பிடிபட்டார். தற்போது, ஜாமினில் உள்ளார்.
வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த,
நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 'மாணவர்கள், பெற்றோருக்கு பணத்தை திருப்பி தர, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், கமிஷனராக நியமிக்கப்படுகிறார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், டிபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை, 136 பேருக்கும் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை 
எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பாரிவேந்தர் மனு தாக்கல் செய்தார். 
மனுவை விசாரித்த, நீதிபதிகள்
ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட, குற்ற நடவடிக்கையை ரத்து செய்ய, தங்களுக்கு ஆட்சேபனையில்லை என, உயர் நீதிமன்றத்தை அணுகி, பணம் கோரும் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்யும்பட்சத்தில், மனுதாரருக்கு எதிரான வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பாரிவேந்தர் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் வி.டி.கோபாலன், பி.குமார், வழக்கறிஞர் வி.வெங்கடேசன், மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆஜராகினர்.
இவ்வழக்கில், நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவு:
பணம் கோரியவர்கள் அனைவரும், ஒப்புதல் தெரிவித்து, மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மனுதாரர் தரப்பிலும் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் எல்லாம் சரியான நபர்கள் தான் என, உறுதி அளிக்கப்பட்டது. ௧௩௬ பேரில், ௧௧ பேர், மேற்கொண்டு விசாரணைக்காக, கூடுதல் துணை ஆணையரை அணுகலாம்.
மருத்துவ, 'சீட்' தொடர்பாக, யார் பணம் கொடுத்திருந்தாலும், அதை உறுதி செய்யும் விதத்தில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையரை அணுகலாம். அதிகாரியும், ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, ஒரு வாரத்தில், நீதிமன்றம் நியமித்த கமிஷனரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பச்சமுத்துவுக்கு எதிரான வழக்கு, ரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற ஆணையரின் அறிக்கையை பதிவு செய்வதற்காக, விசாரணை, நவ., ௩௦க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆதாரை எதிர்த்த வழக்கில் மம்தாவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி, : 'சமூகநலத் திட்டங்களின் பயனை அளிக்க, ஆதாரை கட்டாயமாக்கும், பார்லி., நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?' என, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜிக்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.



மத்திய அரசு வழங்கும், சமூகநலத் திட்டங்களின் பயன்களை பெறுவதற்கு, 'ஆதார்' எண்ணை அவசியமாக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இது தொடர்பாக, அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர், கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

தனிநபராகஇந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த
போது, கபில் சிபல் கூறுகையில், ''ஆதாரை கட்டாயமாக்கும், மத்தியஅரசின் திட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்க மாநில தொழிலாளர் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது,'' என்றார்.

அப்போது, வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, 'கூட்டாட்சி அமைப்பில், பார்லிமென்டில் எடுக்கப்படும் நடவடிக்கையை, மாநில அரசு எவ்வாறு எதிர்க்க முடியும்?
'இந்த விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, தனிநபராக, புதிதாக வழக்கு தொடரலாம்; அவரை, தனிநபராக கருதி, அவர் அளிக்கும் மனுவை, நீதிமன்றம் விசாரிக்கும்' என்றனர்.

இதற்கிடையே, தனிநபர்ஒருவர், மொபைல் போன் எண்களை, ஆதாருடன் இணைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், அது பற்றி பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு,

'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.

அரசியல் சாசன அமர்வு

இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, அரசியல் சாசன அமர்வை அமைக்கப் போவதாக, உச்ச நீதிமன்றம் நேற்று கூறியுள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று கூறியதாவது:ஆதார் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின், அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு அமர்வு கூறியது.

சென்னையில் கனமழை : விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை காரணமாக, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக சென்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், நகரின் பல்வேறு சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, விமான நிலையத்திற்கு, கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.
அதை போல, பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய, 23 விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
வீடு புகுந்த 2 திருடர்கள் 'துவைத்தெடுத்த' இளம்பெண்

திருப்பூர்: திருப்பூரில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இரண்டு வாலிபர்களை, இளம்பெண் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தார். திருப்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 32; மனைவி கஸ்துாரி, 28. அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், வேலை செய்கிறார். நேற்று, வழக்கம் போல் வீட்டை பூட்டி, வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல், 3:30 மணியளவில், அவரது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்த இருவர், பீரோவில் இருந்த, 5 சவரன் நகை மற்றும், 8,000 ரூபாயை திருடி, தப்ப முயன்றனர். எதேச்சையாக வீடு திரும்பிய கஸ்துாரி, இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார்.
உடனே, அங்கிருந்த பெரிய தடியை எடுத்து, துணிச்சலுடன் உள்ளே சென்றார். திருடர்கள் இருவரையும், கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தாக்கினார். 
வலி தாங்காமல் இருவரும் போட்ட சத்தத்தில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இருவரையும் கட்டி வைத்து, போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், இருவரையும் கைது செய்து, அழைத்து சென்றனர்.

டெங்கு ஒழிப்பில் அலட்சியம் : தலைமை ஆசிரியை, 'சஸ்பெண்ட்'

ஓசூர்: ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நேற்று காலை, இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி வர தாமதமானதால், முன்னதாக வந்த கலெக்டர் கதிரவன், பள்ளியில் டெங்கு ஒழிப்பு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியின் கழிப்பறை, நீர்த்தேக்க தொட்டி மற்றும் மொட்டை மாடியில் ஆய்வு செய்தார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், மாணவ, மாணவியருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
பள்ளியை சுகாதாரமாக வைக்க தவறிய தலைமை ஆசிரியை லதாவை, சஸ்பெண்ட் செய்யுமாறு, கலெக்டர் உத்தரவிட்டார். இதேபோல், டெங்கு ஒழிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரகுமாரும், கலெக்டர் உத்தரவுப்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குமரியில் தொடர்ந்து 3-வது நாளாக மழை

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை மூன்று நாட்களாக பலத்த இடி மின்னலுடன் பெய்து வருகிறது. மாவட்டத்தில் 198 குளங்கள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 420 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. 590 குளங்கள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது.மூன்று நாட்களாக பெய்துவரும் மழையால் சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மதுரையில் அரசு டாக்டர் மாயம் : விளக்கம் கேட்கிறது கேரளா


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி, மாயமான கேரளாவை சேர்ந்த டாக்டரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கேரளா மாநிலம், புனலுார் அருகே கரியாரா கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் டாக்டர் வருண், 28. மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில், குழந்தைகள் நலம் குறித்து, முதுநிலை டிப்ளமோ படிக்கிறார். கல்லுாரி விடுதியில் தங்கியிருந்தார்.

மாணவர்கள் : குழந்தைகள் சிறப்பு வார்டில் டாக்டர் வருண் உட்பட, 20 முதுநிலை மாணவர்கள், தீவிர சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த, 27ம் தேதி மதியம், 12:40 மணிக்கு பணியில் இருந்த, டாக்டர் வருணின் சிகிச்சை முறை குறித்து, சக டாக்டர், நர்ஸ், நோயாளிகள் முன், பெண் உட்பட இரு சீனியர் டாக்டர்கள் உதாசீனம் செய்து பேசி, டாக்டர் பணியை விட்டு போகும்படி திட்டிஉள்ளனர். இதனால், மனமுடைந்த வருண், அன்று மதியம், 2:00 மணிக்கு அலைபேசியை, 'சுவிட்ச் ஆப்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து, மாயமாகி விட்டார்.
மகன் காணாமல் போய், மூன்று நாட்களாகியும், மதுரை போலீஸ் விசாரணையில் சுணக்கம் இருப்பதாக, டாக்டர் வருணின் பெற்றோர், கேரளா முதல்வர், பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளனர். 

விளக்கம் கேட்பு : அவரது உத்தரவுப்படி, கேரளா உள்துறை அமைச்சகத்தில் இருந்து, தமிழக டி.ஜி.பி.,யிடம் டாக்டர் வருண் வழக்கு குறித்து, விளக்கம் கேட்டுள்ளனர்.

டீன் மருதுபாண்டியன் கூறுகையில், ''டாக்டர் அருணை கண்டுபிடிக்க வலியுறுத்தி இன்று, போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து முறையிட உள்ளோம்,'' என்றார்.
ஜெ., மரணத்தில் மர்மம்: விசாரணையில் தாமதம்
நீதிபதி அலுவலகத்தில் கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லை


ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அலுவலகம், கம்ப்யூட்டர், தொலைபேசி இல்லாமல் இயங்குகிறது. அதனால், விசாரணை தாமதமாகுமோ என, அ.தி.மு.க., தொண்டர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.




ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என, அணிகள் இணைப்புக்கு முன், ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்தார். அணிகள் இணைப்புக்கு பின், விசாரணை கமிஷன் பற்றிய அறிவிப்பு, செப்., 25ல் வெளியானது. ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி, விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். கமிஷன் செயல்பட, சென்னை, எழிலகம் அருகே, பசுமை தீர்ப்பாயம் இயங்கும், கலாஸ் மஹால் கட்டடத்தின் முதல் மாடியில், இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

'ஜெ., மரணம் குறித்தும், மருத்துவமனையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், விபரம் அறிந்தவர்கள், நவ., 22க்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, தகவல்கள் அளிக்கலாம்' என, நீதிபதி, ஆறுமுகசாமி அறிவித்துள்ளார். விசாரணையை முடித்து, மூன்று மாதங்களில்

அறிக்கை அளிக்கும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.தற்போது, ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனாலும், பணிகள் இன்னும் வேகம் பிடிக்கவில்லை. விசாரணை கமிஷன் அலுவலகத்தில், துணை செயலர் அந்தஸ்திலான அதிகாரி உள்ளிட்ட, நீதித் துறை மற்றும் பொதுத் துறை ஊழியர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர். எனினும், அவர்களுக்கான, மேஜை, நாற்காலிகள், நேற்று வரை வரவில்லை.

மேலும், அந்த அலுவலகத்திற்கு, இதுவரை, தொலைபேசி இணைப்பும் தரப்படவில்லை. வழக்கு தொடர்பான முக்கிய தகவல்களை சேகரித்து வைக்க, கம்ப்யூட்டர்கள் வழங்கப்படவில்லை. அதனால், மூன்று மாதங்களுக்குள், விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முடியுமா என, அ.தி.மு.க.,வினருக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

15 பேருக்கு, 'நோட்டீஸ்?'

அதே நேரத்தில், ஜெ., மரணம் தொடர்பாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னை, அப்பல்லோ மருத்துவர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர், ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறும் என, தெரிகிறது. அவர்கள் அனைவருக்கும், 'நோட்டீஸ்'அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 15 பேருக்கு, விசாரணைக்கு வரும்படி நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக, நேற்று செய்திகள் வெளியாகின. இது குறித்து, நீதிபதி தரப்பில் கேட்ட போது, 'இதுவரை, யாருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படவில்லை.அனைத்து நடவடிக்கைகளும், நவ., முதல் சூடுபிடிக்கும்.

இது தொடர்பான அறிவிக்கை, அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.

தனி கணக்கு

விசாரணை கமிஷன் அலுவலகத்தில், சென்னை, தலைமை செயலகத்தில் பணிபுரிந்த, பொதுத் துறை மற்றும் சட்டத் துறை அலுவலர்கள், 10 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஊதியம், விசாரணை செலவுகள் பராமரிப்புக்காக, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள சிண்டிகேட் வங்கியில், தனி கணக்கு துவங்கப்பட்டு உள்ளது.

விசாரணை கூண்டு

ஜெ., மரணம் குறித்த விசாரணை கமிஷனில், நீதிமன்றத்தில் நடைபெறுவது போலவே, விசாரணை நடைபெறும். அதற்காக, நீதிமன்றத்தில் இருப்பது போலவே, சாட்சி கூண்டுகள், நீதிபதி அமரும் மேஜை, நாற்காலி ஆகியவை அமைக்கப்படும். அதற்காக, தமிழக சிறு தொழில் நிறுவனமான, 'டான்சி நிறுவனத்தில், 'ஆர்டர்' தரப்பட்டுள்ளது. 

- நமது நிருபர் -

news today 23.10.1024