Wednesday, August 8, 2018

ஜெயலலிதாவிடம் பிடித்த விஷயம்















ஆட்சிச் சக்கரம் இல்லாவிட்டாலும், அரசியல் சக்கரத்தை எப்போதும் தன் கையில் வைத்திருப்பவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. தன்னைச் சுற்றியே தமிழ்நாட்டு அரசியல் சுழல வேண்டும் என்பதில், எப்போதும் கவனமாக இருப்பவர். அதைக் கைப்பற்றியும் வைத்திருப்பவர். வயது முதிர்வால் அவரது மேடை முழக்கங்கள் குறைந்துவிட்டன. ஆனாலும், தனது எண்ணங்களை எழுத்துக் கர்ஜனைகளால் கொண்டு செலுத்துவதில் 95 வயதைத் தாண்டியும் சலிக்காமல் இருந்தவர். அவர் கடைசியாக ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டி.



'நினைத்ததை முடித்துவிட்டுத்தான் கண்ணை மூடுவேன்' என, தி.மு.க முப்பெரும் விழாவில் திடீரெனப் பேசினீர்களே... எதனால் இந்த வேகமும் கோபமும்?”''உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னது அல்ல; உள்ளத்தால் சொன்னது அந்தச் சொற்கள். 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்பார்களே, அதைப் போன்றது இந்த மாபெரும் இயக்கம். திராவிட இயக்கம் தொடங்கப்பட்டு, 100 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 100 ஆண்டுகளில் எத்தனையோ லட்சியங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ் இன, மொழி, நாட்டு முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் ஆற்றிட வேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்திட வேண்டும். அவற்றை வரையறை செய்து, பாதை மாறாமல் பயணம் தடை ஏதும் இன்றி நடைபெறவும், இந்த இயக்கத்தை எதிர்காலங்களுக்கு எடுத்துச் செல்லவும், தேவையானவற்றை வகுத்துத் தொகுத்திட வேண்டும் என்ற சிந்தனையில் சொல்லப் பட்ட கருத்து அது; உண்மையான ஈடுபாட்டுடன் சொல்லப்பட்ட எண்ணம் அது.”

''எந்த நோக்கத்துக்காக நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களோ, அது நிறைவேறிவிட்டதா?”

''பெரும் அளவுக்கு நிறைவேறியுள்ளது. நிறைவேறியது அனைத்தும் முழுமையான அளவுக்கு மனநிறைவைத் தந்துவிட்டது என என்னால் சொல்ல முடியவில்லை. இன்னும் நிறைவேறவேண்டியவை நிறைய உள்ளன. அந்த நோக்கங்களையும் நிறைவேற்றிடத்தான் நான் இன்னும் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.”

''ஒருகாலத்தில் நீங்கள் பேசிய பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகள், தி.மு.க தொண்டர்களிடம் இன்று குறைந்துவிட்டதா?”

''பகுத்தறிவு, நாத்திகம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொடக்ககாலத் தொண்டர்களும், அவர்களின் நேரடித் தலைமுறையினரும் எந்தவித சமரசமும் இன்றி அவற்றைப் பின்பற்றிவருகின்றனர். தி.மு.கழகம், இன்றைக்கு சமுத்திரம்போல் பெருகிவிட்டது. கடலில் பல்வேறு நதிகளும் ஓடிவந்து கலந்துவிடுவதைப்போல, பல்வேறு திசைகளில் இருந்தும் தோழர்கள் கழகத்தில் ஐக்கியமாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் புதியவர்களில் ஒருசிலர் இந்த இயக்கத்தின் மூலக்கொள்கைகளைப் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அதை வைத்து, கொள்கை குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.”

''உங்கள் ஆட்சிக் காலத்தின்போது 'தீர்க்க முடியாமல் போய்விட்டதே!' என எந்த விஷயத்தை நினைத்து இப்போதும் வேதனைப்படுகிறீர்கள்?”
''காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னைதான் இன்றளவும் என்னை வேதனைப்படுத்துகிறது. அறிஞர் அண்ணா முதலமைச்சராகவும், நான் பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்த காலத்தில் இருந்தும், பின்னர் நானே முதலமைச்சர் ஆன பிறகும், தொடர்ந்து பலமுறை கர்நாடக அரசோடும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பலமுறை கடிதங்கள் அனுப்பியும்,

நீதிமன்றங்களுக்குச் சென்றும் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மூலம் காவிரி நடுவர் மன்றம் அமைத்தும், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவந்தும்கூட, இதுவரை நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு முழுமையாக நிறைவேற்றப்படாமல் காவிரிப் பிரச்னை முடிவு இல்லாமல் நீடித்துக்கொண்டே இருப்பது எனக்கு வேதனையைத் தந்துகொண்டிருக்கிறது.”

''நாகரிகச் சூழலும் மக்களின் மனநிலையும் மாறிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?”
''யாருக்கும் சந்தேகம் வேண்டாம், தி.மு.க-வின் அரசியல் எதிர்காலம் ஒளி நிறைந்ததாகவும், ஊக்கமூட்டுவதாகவும் எப்போதும் இருக்கும்.”

'ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்' என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”

''ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.”

''தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”

தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு - சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.”

'கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!' என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”

''நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய 'ஆனந்த விகடன்' வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.”

நீங்கள் எதிர்த்து அரசியல் செய்த தலைவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

எவரையும் எதிர்த்தோ, எதிர்ப்பதற்காகவோ நான் அரசியல் நடத்தியது இல்லை. நான் கொண்ட கொள்கைகளை பெரியார் - அண்ணா வழி நின்று வளர்த்தெடுத்து, நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் என்னுடைய அரசியல் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது.”

ஜெயலலிதா உங்களுக்கு எத்தகைய அளவில் சவாலாக இருக்கிறார்?
நான் இதுவரை யாரையும் எனக்குச் சவாலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டது இல்லை.”

முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நிலை குணமாகவேண்டி முதலில் நீங்கள்தான் அறிக்கை வெளியிட்டு வாழ்த்தினீர்களே!
அருமை நண்பர் எம்.ஜி.ஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது,

 'நானும் பிரார்த்திக்கிறேன்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரையே எழுதியிருந்தேன். அதே உணர்வோடுதான் இப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரபரப்பாகச் செய்தி வந்தவுடனேயே, அவர் விரைவில் முழுமையான உடல் நலம் பெற்று, பணிக்குத் திரும்பிட வேண்டும் என வாழ்த்தி, அப்போதே அறிக்கை வெளியிட்டிருந்தேன். இப்போதும் வாழ்த்துகிறேன்.”

ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள், பிடிக்காத விஷயங்கள்?

பிடித்த விஷயம் நடனம், நடிப்பு. பிடிக்காத விஷயம் காழ்ப்புஉணர்ச்சி அரசியல்.”

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என என்றாவது நினைத்தது உண்டா?

எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரையில், அவர் தொடக்கத்தில் என்னுடன் பழகிய காலத்தில் இருந்த இனிய நினைவுகள்தான் எனது உள்ளத்தில் மேலோங்கி இருக்கின்றனவே தவிர, கட்சியைவிட்டுப் பிரிந்த பிறகு நடைபெற்ற சம்பவங்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், அவர் மறைவுக்குப் பிறகு அவரை 'மிஸ்' பண்ணிவிட்டோம் என நான் பலமுறை நினைத்திருக்கிறேன்.”

இத்தனை வருட அரசியல் வாழ்க்கை, உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?
என்னால் பயன்பெற்றவர்கள், கைதூக்கிவிடப்பட்டவர்கள் எப்போதும் என்னிடம் நன்றி உணர்வோடு நடந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது தவறு என்பதையும்; ஒருவருக்கு நாம் செய்யும் உதவியை நமக்குக் கிட்டிய நல்வாய்ப்பாகக் கருதி செய்து முடித்ததும் அதை மறந்துவிட வேண்டும் என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது.”

அரசியலில், பொதுவாழ்வில் வெற்றிபெற நினைப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் எவை?”

காழ்ப்புஉணர்ச்சி கூடாது; யாரிடமும் வெறுப்பு - விரோதம் கூடாது; சோம்பி இருக்கக் கூடாது; சுறுசுறுப்போடு உழைப்பு; அரசியல் நிகழ்வு எதையும் அலட்சியம் செய்யக் கூடாது; காரியம் ஆற்றுவதிலும், கருத்துரைப்பதிலும் தாமதம் கூடாது. இப்படிப்பட்டவர்களால்தான் பொதுவாழ்வில் வெற்றிபெற முடியும்.”

உங்களது ஒருநாள், எப்படிக் கழிகிறது?

''காலை எழுந்தவுடன் காபி குடித்துவிட்டு, அனைத்து நாளேடுகளையும் படிப்பேன். காலைக்கடன்களை முடித்துவிட்டு, உடன்பிறப்பு மடல், கேள்வி-பதில், அறிக்கைகள் போன்றவற்றை உதவியாளர்களிடம் 'டிக்டேட்' செய்வேன். பின்னர் அமர்ந்தால், கட்சிப் பிரச்னைகள்தான். கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ள தம்பிமார்களுடன், மதியம் சாப்பிடப்போகும் நேரம் வரை கலந்துபேசி முடிவுகளைக் காண்பேன். மதியம் ஒரு மணி நேரம் குட்டித் தூக்கம். மாலையில் வீட்டிலோ, அண்ணா அறிவாலயத்திலோ அமர்ந்து, கழகத்தினருடன் உரையாடுவேன். நிகழ்ச்சிகள் இருக்கும் நாளில் அவற்றில் கலந்துகொள்வேன். திருமண வரவேற்பு நிகழ்ச்சி களுக்குச் செல்வேன். நேரம் கிடைக்கும்போது 'டி.வி.' பார்ப்பேன்.”

நீங்கள் தி.மு.க தலைவராகி அரை நூற்றாண்டு நெருங்க இருக்கிறது. இதை எப்படி உணர்கிறீர்கள்?

நான் கழகத்தின் தலைவராகி, 47 ஆண்டுகள் நிறைவடைந்து 48-வது ஆண்டு நடைபெறுகிறது. இந்த 48 ஆண்டுகளில் எத்தனையோ உயர்வு-தாழ்வுகள், மேடு-பள்ளங்கள், வேதனை- சோதனை-சாதனைகள், இழிமொழிகள், பழிச்சொற்கள், புகழ்ச்சிப் பாராட்டுக்கள் என அனைத்தையும் பார்த்துவிட்டேன். ஆனாலும் சின்னஞ்சிறு வயதில், தமிழ்க் கொடி தாங்கி, எத்தகைய எழுச்சி உணர்வுகளோடு பொதுவாழ்வில் கால் பதித்தேனோ, அதே உணர்வுகள்தான் இன்றைக்கும் எனது இதயத்தில் நிரம்பி வழிகின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய 'திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் ஆலமரத்துக்காக, 48 ஆண்டுகள் இரவு-பகல் பாராமல் உழைத்திருக்கிறோம் என்ற பெருமித உணர்வும் எனக்கு ஏற்படுகிறது.

பள்ளி, கல்லூரிக்கு விடுமுறைதமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம்

dinamalar 08.08.2018

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவையொட்டி, இன்று ஒரு நாள், அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கவும், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடவும், அரசு விழாக்களை ரத்து செய்யவும், முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.




இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமியை, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அழகிரி, டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பெரியசாமி, 'முரசொலி' செல்வம் ஆகியோர் சந்தித்தனர்.

அப்போது, முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கருணாநிதியின் உடல்நிலையில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என, டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹாலை, மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒதுக்க வேண்டும்.

காமராஜர் சாலையில் உள்ள, அண்ணா சதுக்கத்தில், அவரை நல்லடக்கம் செய்ய, இடம் ஒதுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். அதை பரிசீலனை செய்த முதல்வர், சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அவற்றின் விபரம்:

* மிக முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த, சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, ராஜாஜி ஹால் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்

* இறுதி சடங்கு நடைபெறும் இன்று, ஒரு நாள், விடுமுறை அளிக்கப்படும். பள்ளி, கல்லுாரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* கருணாநிதி உடலை, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில், தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், அவர் மீது தேசியக் கொடி போர்த்தி, ராணுவ மரியாதையுடன், குண்டு முழங்க மரியாதை வழங்கவும், நடவடிக்கை எடுக்கப் படும்

* தமிழக அரசு சார்பில், ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். அந்த காலகட்டத்தில், தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு சார்ந்த விழாக்கள் ரத்து செய்யப்படும்

* தமிழ்நாடு அரசிதழில் இரங்கல் வெளியிடப்படும். இவ்வாறு தலைமை செயலர் தெரிவித்துள்ளார்.

மெரினாவில் இடமில்லை : தமிழக அரசு கைவிரிப்பு

சென்னையில், நேற்று மதியம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, 'கருணாநிதியின் உடலை, அண்ணா நினைவிடத்தில் நல்லடக்கம் செய்ய, அனுமதி அளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். அதை பரிசீலனை செய்த முதல்வர், 'நீதிமன்ற வழக்கு காரணமாக, அங்கு இடம் ஒதுக்க இயலாது' என, கூறியுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமி உத்தரவின்படி, காமராஜர் சாலையில் உள்ள, மெரினா கடற்கரையில், நல்லடக்கம் செய்வதற்கு தடையாக, பல வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மண்டபம், காமராஜர் நினைவகம் அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை, ஒதுக்கீடு செய்ய, அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்
 
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது
 
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூண்டில் இருந்து தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியது. 
 
வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு ஸ்ரீ சாம ராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 2 ஜோடி கோடிட்ட கழுதைப்புலி உள்ளிட்ட சில விலங்குகள் கொண்டுவரப்பட்டன.

மைசூருவில் இருந்து பெறப்பட்ட கோடிட்ட கழுதைப் புலிகளை வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள விலங்குகள் மருத்துவமனை அருகே தனியாக ஒரு கூண்டில் அடைத்து வைத்து கழுதைப்புலிகளுக்கு ஏதாவது நோய் தொற்றுகள் உள்ளதா? என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்தனர். இந்த கழுதைப்புலிகள் 3 வார மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு பொதுமக்கள் பார்வைக்கு விடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 3 வயது உடைய ஆண் கழுதைப்புலி ஒன்று சற்றும் எதிர்பாராத வகையில் கூண்டில் கம்பிகள் இடையே உள்ள வழியை பயன்படுத்தி தப்பி ஓடியது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கழுதைப்புலி மாயமாகி இருப்பதை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தப்பிய ஓடிய கழுதைப் புலியை இரவு நேரம் வருவதற்குள் பிடிக்க முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. கழுதைப்புலி தப்பி ஓடிய தகவல் பூங்கா உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் தப்பி ஓடிய கழுதைப்புலியை இரவுக்குள் பிடிப்பதற்காக பூங்காவில் இருள் சூழ்ந்த பகுதியில் மின்விளக்குகளை அமைத்தனர். பின்னர் தப்பி ஓடிய கழுதைப்புலியை பிடிப்பதற்காக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு கூண்டை வைத்து அதில் கழுதைப்புலி சாப்பிடுவதற்காக மாட்டு இறைச்சியை தொங்கவிட்டனர்.

இதனைத்தொடர்ந்து பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கழுதைப்புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை ஊழியர்கள் இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். மேலும் கழுதைப்புலியை பூங்கா வளாகத்திற்குள் உள்ள காட்டுப்பகுதியிலும் தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணி அளவில் தப்பி ஓடிய கழுதைப்புலி பூங்கா மருத்துவமனை அருகே கூண்டில் வைக்கப்பட்டு இருந்த மாட்டு இறைச்சியை சாப்பிடுவதற்காக வந்தது.

இதைப்பார்த்த பூங்கா ஊழியர்கள் கழுதைப்புலியை லாவகமாக கூண்டிற்குள் அடைத்தனர். கழுதைப்புலியின் உடலில் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டு இருந்தது. இந்த காயங்களுக்கு பூங்கா மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து தப்பி ஓடி, பின்னர் சிக்கிய கழுதைப்புலியை மட்டும் தனியாக ஒரு இரும்பு கூண்டில் அடைத்து வைத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தப்பி ஓடிய கழுதைப்புலி சிக்கியதால் பூங்கா ஊழியர்களும், அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.
மாநில செய்திகள்

ராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது





திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi

பதிவு: ஆகஸ்ட் 08, 2018 05:55 AM
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.












தலையங்கம்

அரசியலில் இமயம் சாய்ந்துவிட்டது




ராஜாஜி, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய 7 முதல்–அமைச்சர்களுக்கு இரங்கல் அறிக்கைகளை அவர்கள் மறைவுக்குப்பிறகு தன் கைப்பட எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, இந்தமுறை தனக்கு அனைவரும் இரங்கல் அறிக்கை வெளியிட வகைசெய்யும் வகையில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார்.

ஆகஸ்ட் 08 2018, 04:00

ராஜாஜி, அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள், ஜெயலலிதா ஆகிய 7 முதல்–அமைச்சர்களுக்கு இரங்கல் அறிக்கைகளை அவர்கள் மறைவுக்குப்பிறகு தன் கைப்பட எழுதிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி, இந்தமுறை தனக்கு அனைவரும் இரங்கல் அறிக்கை வெளியிட வகைசெய்யும் வகையில் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை சந்தித்து வெற்றிகண்ட கலைஞர் கருணாநிதி, உடல்நலக்குறைவு என்ற போராட்டத்தில்தான் வெற்றி காண முடியவில்லை. இதிலும் ஒரு நீண்ட போராட்டத்தை சந்தித்து, தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டார். தமிழன்னையின் தவப்புதல்வன் மறைவை தாங்கமுடியாமல் மக்கள் கண்ணீர் விட்டு கதறுகிறார்கள். யாருக்கு–யார் ஆறுதல் சொல்வது? என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

மிக சாதாரண குடும்பத்தில் பிறந்து எந்தவித பின்புலமும் இல்லாமல், தன் கொள்கை பிடிப்பினாலும், அறிவாற்றலாலும், செயல்திறனாலும் தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தின் தலைவராக ஒளிவீசியவர் கலைஞர். ஒரு அரசியல் கட்சித்தலைவராக 50 ஆண்டுகள் இருந்த சரித்திரத்தை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதிதான்.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப்பிறகு, தி.மு.க. என்ற தீபத்தை அணையாமல் காத்து, மேலும் ஒளிவீச செய்தவர் அவர்தான். தி.மு.க. ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் முன் கட்சியை வளர்க்க பல்வேறு இன்னல்கள், இடையூறுகளைத் தாண்டி, தமிழ்நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசியிருக்கிறார். அவர் கால்படாத ஊர்களே இல்லை எனலாம்.

ஏராளமான போராட்டங்களில் கலந்துகொண்டு ‘மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை என்னை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை’ என்று மிகவும் துணிச்சலாக சிறைவாசம் கண்டவர். அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர், அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர், பாடலாசிரியர், கவிஞர், நாடக நடிகர், தமிழறிஞர் என பன்முக ஆற்றல் கொண்டவர். எப்போதுமே நான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறிய அவர், பத்திரிகையாளருக்கும் பிதாமகனாகவே திகழ்ந்தார். அரசியலில் 80 ஆண்டுகள் கண்டவர் என்றால், இந்திய அரசியல் வரலாற்றிலேயே கலைஞர் ஒருவராகத்தான் இருக்கமுடியும். 1924–ம் ஆண்டு ஜூன் 3–ந் தேதி பிறந்த அவர், தன் மாணவ பருவத்திலேயே அரசியலிலும், தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டவர். அதுபோல, சிறுவயதிலேயே கையெழுத்து பிரதி நடத்தியவர். தான் கொண்ட கொள்கையில் மிக உறுதியானவர். அவரது கொள்கை பிடிப்பை பார்த்துத்தான் தந்தை பெரியார், கலைஞர் நமக்கு கிடைத்த அரிய பொக்கி‌ஷம் என்றார். அண்ணா ஒருமுறை அவரைப்பற்றி கூறும்போது, ‘தண்டவாளத்தில் தலைவைத்து படு என்றாலும் சரி, அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றாலும் சரி, இரண்டையும் ஒன்றுபோல ஏற்றுக்கொள்வார் என் தம்பி கருணாநிதி’ என்றார். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர்., தனக்கென ஒரு கொள்கை, தனக்கென ஒரு தலைவன் என்று வைத்துக்கொண்டு பற்றோடும், பிடிப்போடும் அயராது உழைத்து வந்தவர் கலைஞர் என்றார். இப்படி அவரைப்பற்றி பாராட்டாத தலைவர்களே இல்லை எனலாம். இதுவரையில் அவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றதேயில்லை.

13 சட்டமன்ற தேர்தல்களிலும், ஒருமுறை மேல்–சபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்ணாவின் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், 5 முறை முதல்–அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பே சட்டசபையில் பொன்விழா கண்டவர். நிர்வாகத்திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர். அவருடைய ஆட்சியில் நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் அவரது பெருமையை என்றும் பறைசாற்றிக்கொண்டே இருக்கும். தாய்மொழியாம் தமிழ்மீது அளப்பரிய பற்றுகொண்டவர். அய்யன் திருவள்ளுவரை போற்றி வணங்கியதால்தான், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், கன்னியாகுமரி கடலில் 133 அடி உயர சிலையும் உருவாக்கினார். உழைப்புக்கும், நினைவாற்றலுக்கும், தமிழ்ப்பற்றுக்கும், அரசியல் நாகரிகத்துக்கும், நிர்வாகத்திறமைக்கும், மாற்றாரையும் மதிக்கும் பண்புக்கும், சுறுசுறுப்புக்கும், கொள்கை பிடிப்புக்கும், தொண்டரையும் தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பாக கருதும் நற்குணத்துக்கும் வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால், கலைஞர் என்றுதான் வைக்கவேண்டும். பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், அடுத்த தலைவர் யார் என்பதில் ஒரு குழப்பம் இருக்கும். ஆனால், தி.மு.க.வில் இதனால் ஒரு சலசலப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக மு.க.ஸ்டாலினை அடையாளம் காட்டிவிட்டார். மொத்தத்தில், அரசியலில் கலைஞர் என்ற இமயம் சாய்ந்துவிட்டது. தமிழ் உள்ளளவும் அவர் பெயர் பட்டொளி வீசி பறந்துகொண்டு இருக்கும். முழு வாழ்க்கை வாழ்ந்து மறைந்த அவர் புகழ் காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
மாநில செய்திகள்
 
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கு: காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கு: காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கில் காலை 8 மணிக்கு மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi 
 
சென்னை,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

திமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டிற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வருகை தந்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். திமுக தரப்பில் சண்முக சுந்தரம், வில்சன் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். தற்போது விசாரணை நிறைவு பெற்றது. இதில் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி திமுக மனு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணிக்கு பதில் மனு தாக்கல் செய்ய முடியுமா? - நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரிய திமுக வழக்கில் காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை அரசு பதில் மனு தாக்கல் செய்தவுடன் காலை 8.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, August 7, 2018

Student on bail commits suicide in Thoothukudi

DECCAN CHRONICLE. | M. ARULOLI

PublishedAug 7, 2018, 3:24 am IST

Thoothukudi South police registered three cases against these two youths and arrested them on July 11.



However, Velmurugan since released on bail, was said to be in a frustrated mood and on Sunday evening, when nobody was at home, he was reported to have hung himself to death.

Thoothukudi: A college student, on bail in connection with three mobile theft cases against him, committing suicide here triggered tension as the student’s Federation of India (SFI) launched a protest, demanding Rs 20 lakh compensation and government job for a member of the victim’s family.

A second year B. Com student, Velmurugan (20) son of Murugan along with his friend, Saji (22) son of Raja, studying second year Economics at another college in Thoothukudi, was accused of indulging in mobile snatchings.

Three women including a nurse working at Thoothukudi government Medical college hospital lost their mobiles to the two youths, whose modus operandi was to snatch the mobiles from its users while riding on motorbike.

Thoothukudi South police registered three cases against these two youths and arrested them on July 11. The court, however, on August 3 released Velmurugan and Saji on bail with a condition to sign daily at the police station.

However, Velmurugan since released on bail, was said to be in a frustrated mood and on Sunday evening, when nobody was at home, he was reported to have hung himself to death.

As Velmurugan was a member of SFI, the students body on Monday morning launched a strike in front of the private college (V O C College) and allowed nobody inside. The students too charged the police with falsely implicating Velmurugan in the three cases. As tension mounted, the college administration, on the advice of the police, declared holiday on Monday.

The agitated students, however, demanded a compensation of Rs 20 lakh to the family of Velmurugan and a government job to one of the family members of the deceased.
Medical college girls catch thief in Dharmapuri hostel

DECCAN CHRONICLE. | SANJEEVI ANANDAN

PublishedAug 7, 2018, 3:28 am IST

Other girls caught the thief who entered the room of another girl to rob valuables including a cell phone and laptops.

The nabbed thief was handed over to policemen on duty at the DGMCH outpost. He gave his name as Madesh, 25, a habitual offender and native of Jogir Kottai village, near Jittandahalli in Dharmapuri.

Dharmapuri: One person was caught by hostel girls for a robbery bid here and handed over to the police while his associates escaped. In the early hours of Monday, one girl staying on the fourth floor of the hostel premises of students studying in the Dharmapuri government medical college and hospital (DGMCH), spotted a few strangers loitering in the verandah and raised an alarm. Other girls caught the thief who entered the room of another girl to rob valuables including a cell phone and laptops. His associates escaped leaving their man to his fate.

The nabbed thief was handed over to policemen on duty at the DGMCH outpost. He gave his name as Madesh, 25, a habitual offender and native of Jogir Kottai village, near Jittandahalli in Dharmapuri. Madesh told police that the gang consisting of three others from Coimbatore, entered hostel buildings by climbing the walls in the rear of the property. They would then rob whatever they could from rooms left unlocked.

In yet another incident, Indoor police of Dharmapuri arrested a 55-year-old shepherd of Kattukottai near Somanahalli in Dharmapuri. He was arrested for assaulting his 44-year-old wife Parvathi, as she did not give him money to drink alcohol. He attacked her with a machete. Neighbours took Parvathi to the government hospital and she is said to be out of danger.
My heart will be in Tamil Nadu, says Chief Justice Indira Banerjee as she bids farewell to Madras HC

She will take oath as a judge of the Supreme Court on Tuesday. She is the second woman Chief Justice to head the chartered HC, following Chief Justice Kanta Kumari Bhatnagar appointed in 1992.

Published: 07th August 2018 03:39 AM | Last Updated: 07th August 2018 03:39 AM 

By Express News Service

CHENNAI: “I will physically be in Delhi. But my heart will be in Tamil Nadu,” said Chief Justice of Madras High Court Indira Banerjee, as she bade farewell to the Bar on Monday.
She will take oath as a judge of the Supreme Court on Tuesday. She is the second woman Chief Justice to head the chartered HC, following Chief Justice Kanta Kumari Bhatnagar appointed in 1992.

Commending the professional competency of lawyers at this Bar, she said at her farewell that the Madras High Court is the best. “When I was first being sent here, I found a lot of people being somewhat apologetic. But I think I will now go and tell them that this is the best High Court for a judge. I am thankful to the members of the Bar that they have not abstained from work even a single day in my tenure,” she said, speaking about her 16-month stint at the court.

She said she was thrilled when she was offered to take up the mantle of Chief Justice of this court as she already had a soft corner for the State.

Stressing the need for a paradigm shift from a court-centric approach to a litigant-centric, service-oriented approach, she said that she had personally requested the Chief Minister to ensure that the projects to renovate the heritage structures of the court were not stalled for want of funds or administrative delay.

Next interim CJ of HC

Justice Huluvadi Gangadharappa Ramesh, the seniormost judge of the Madras High Court, will perform the duties of the Chief Justice of the court, once Chief Justice Indira Banerjee relinquishes charge, a notification of the Union Law Ministry said on Monday. Justice Ramesh will perform the duties until the new Chief Justice of the High Court, Vijaya Kamlesh Tahilramani, assumes office. Appointed recently as a judge of the Supreme Court, Indira Banerjee attended a farewell party hosted at High Court.
Periyar University to hold passport, driving licence camps for its students

SALEM, AUGUST 07, 2018 00:00 IST

Periyar University will organise passport and driving licence camps on its campus for the benefit of its students, P. Kolandaivel, Vice-Chancellor, has said.

The University authorities will hold discussion with the Coimbatore Passport Office and the Transport Department officials shortly for holding the camps for the provision of passports and driving licences to eligible students, Mr. Kolandaivel said while speaking at the inaugural of the two-day workshop on soft skills by the Department of Microbiology of the University recently.

These special camps will form part of the many soft skill development activities planned by the University departments.

Free education policy

The Vice-Chancellor said that the University would implement the free education policy for the benefit of the bright students belonging to the economically weaker sections. One top student from each department would be identified by an expert committee and recommended for fee waiver throughout their period of study.

Soft skills

He said that nurturing soft skills in students was the foremost task of the teachers and the University had proposed to do the same systematically in every university department.

Acquiring English language skill was paramount to every student and scholar in the university especially in higher learning institutions.

The Vice-Chancellor called upon the student community to take full advantage of the available resources in the campus to enhance their skills.

R. Balagurunathan, Professor and Head, Department of Microbiology, and R. Dhandapani, faculty member, also spoke.
How hi-speed   internet can affect your sleep

London: 06.08.2018  times of india

Access to highspeed internet may reduce the duration and quality of your sleep, according to a study.

The research, published in the Journal of Economic Behaviour and Organisation, found that individuals with Digital subscriber line (DSL) access tend to sleep 25 minutes less than their counterparts without DSL internet. DSL is a technology for bringing high-bandwidth internet to homes and small businesses over ordinary copper telephone lines.

The researchers from Bocconi University in Italy and the University of Pittsburgh in the US conclude that access to high-speed Internet reduces sleep duration and sleep satisfaction in individuals that face time constraints in the morning for work or family reasons.

“Individuals with DSL access tend to sleep 25 minutes less than their counterparts without DSL Internet,” said Francesco Billari, a professor at Bocconi University. “They are significantly less likely to sleep between seven and nine hours, the amount recommended by the scientific community, and are less likely to be satisfied with their sleep,” Billari said.

The effect that the researchers find is largely driven by individuals that face time constraints in the morning and by the use of electronic devices in the evening, and not by their use throughout the day.

“Digital temptations may lead to a delay in bedtime, which ultimately decreases sleep duration for individuals who are not able to compensate for later bedtime by waking up later in the morning,” Billari said.

Among teenagers and young adults (aged 13-30), there is a significant association between insufficient sleep and time spent on computer games or watching TV or videos in the evening, researchers said. PTI
Paracetamol ads on TV for awareness on fever mgmt soon

Sushmi.Dey@timesgroup.com

New Delhi:06.08.2018

You may soon find advertizements of paracetamol – a commonly used medicine for relief from pain and fever. In a move to create public awareness on management of fever associated with common selflimiting conditions such as cold and flu, dengue and chikungunya, the drug regulator has decided to exempt paracetamol from the current law prohibiting advertizement of medicines.

At a recent meeting, the Drug Technical Advisory Board allowed drug makers to advertize paracetamol for “fever”. However, companies cannot advertize their particular brand as the regulator’s go ahead comes with a caveat that the exemption from the law shall be provided for “generic name paracetamol” and “not for brand name”, an official told TOI.

Paracetamol is one of the top selling generic medicines in India and is available under more than 200 brands. Some of the popular brands include Calpol, Crocin, Sumo L and Tamin. Industry estimates show 4.77 lakh tablets of paracetamol worth ₹1,008 crore were sold in India in 2017-18.

An official said the decision was taken because use of paracetamol is very common and creating awareness would also mean that patients would avoid taking unnecessary drugs, especially antibiotics.
Jet pilots suspended for Riyadh runway mishap

Manju.V@timesgroup.com

Mumbai:06.08.2018

The mystery behind the Mumbai-bound Jet Airways Boeing 737-800 veering off into soft ground at Riyadh airport last Friday has been solved. The pilots mistook a taxiway — pathways leading off the runway to parking bays — for a runway and attempted a take-off.

Licences of both pilots have been suspended, said Lalit Gupta, joint director-general, Directorate General of Civil Aviation, on Monday. Pilots are generally de-rostered after any “incident”, pending investigation. The tougher decision points to the gravity of the incident. In 2000, a Singapore Airlines plane crashed after a similar mistake killing 81.

“The aircraft attempted take-off from taxiway (K), parallel to take-offdesignated Runway (R33),’’ said a statement issued by Saudi Arabia’s Aviation Investigation Bureau on Sunday. It added that the visibility was high and there were no obstacles on the taxiway. “The aircraft accelerated with full take-off power and exceeded the taxiway onto unpaved area…” A Jet Airways spokesperson said: “The matter is currently under investigation and we cannot comment.” Last week, the airline said in a statement flight 9W 523 “departed the runway, following an aborted takeoff... All 142 guests and seven crew members safely evacuated”.

Experts are taken aback by the error. “What’s strange is that it occurred at night, when the white runway-edge lights and the blue taxiway lights are clearly visible. It’s not easy to mistake a runway for a taxiway at night,’’ said a senior instructor with a foreign airline.

Firstly, there are the runway markers: the piano key markings that indicate the threshold, the runway number and the white runway-edge lights. Most importantly, the runway centre-line is indicated by 30m dashes with 20m gaps (illuminated when needed), while taxiway centre-lines are a single, solid line, with blue taxiway-edge lights. Then there is the navigation display map in the cockpit and navigation aids like the localizer signals that indicate whether the aircraft has lined up along the correct runway.

The incident has raised questions, the ambit of which extends beyond the cockpit to include the role played by Riyadh airport officials and also Jet’s training standards and operational practices.

On May 28, Riyadh air traffic control had issued a permanent notice to pilots, controllers that a new taxiway K (Kilo) is functional. But the current aerodrome chart released by Saudi Arabia does not show taxiway K. Consequently, the Jeppesen airport chart, consulted by pilots, also does not show it.
Very few against Salem greenfield project: Centre

Sureshkumar.K@timesgroup.com

Chennai:06.08.2018

Though there are more than 12,000 landowners whose properties are to be acquired for the Chennai-Salem greenfield corridor, only about 35 have approached the court so far, the Centre told the Madras high court, adding: “It is being projected as though everyone is opposing the project.”

This apart, a Constitutional bench of the Supreme Court has made it clear that the legislation under which the lands are acquired cannot be assailed and the challenge can be only whether the project is for public purpose or the compensation provided is adequate, additional solicitor-general G Rajagopalan argued on Monday.

“Right to own property is not a fundamental right, therefore such acquisition of land cannot be challenged,’ Rajagopalan added.

As to the allegation that the acquisition process cannot be commenced without obtaining the environmental clearance from the Union ministry of environment, the solicitor general said the law barred only the commencement of the project before obtaining the clearance, and that there was no prohibition to acquire land.

To this, advocate T Mohan representing 35 affected landowners, submitted that the particular provision of the NHAI Act said the authorities could only ‘secure’ the land before the environment clearance. The term ‘secure’ means that they can secure the land from encroachment by third parties, but it does not mean that the authorities can acquire the lands before the environmental clearance, he said.

Explaining that the process involves various stages, another petitioner said it should start with a feasibility report based on which terms of reference would be issued followed by a draft Environmental Impact Assessment (EIA). The Tamil Nadu Pollution Control Board (TNPCB) would conduct public hearing thereafter.

But in the case of Chennai-Salem greenfield corridor, so far the EIA draft notification had not been issued based on which public hearing should be conducted in which grievances of the public would be considered. The authorities are trying to bypass the public hearing and directly acquire the lands, which is illegal, he said.

He pointed out that there was no enabling provision in the act to acquire the lands before environmental clearance or even to measure the lands. This apart, they must submit the landownership pattern prior to the commencement of the project detailing the extent of forest, private, public and revenue land involved in the project. So far, this has not been done by the authorities, he added.

Asserting that the land acquisition is not an eminent domain, Mohan added that it is a matter of livelihood and right to land.

The other petitioners also pointed out that in case the project is cancelled, there is no provision in the act to return the land to its original owners and it can be given only to the state to use it for other purposes.


Several farmers have protested against land acquisition for the proposed greenfield corridor between Chennai and Salem
CASH FOR MARKS

Govt won’t spare guilty officials: Higher edu min
‘Monitoring Other Univs For Re-evaluation’

times of india 06.08.2018
In the wake of multiple skeletons tumbling out of Anna University’s closet, higher education minister K P Anbalagan tells Siddharth Prabhakar that the government is probing re-evaluation at all universities and will not spare any official involved in such scams.

A ₹63 crore contract was given without tender process with many irregularities by Anna University in 2016. Were you not intimated about such a high value contract?


This contract should have gone through the purchase committee since it was a huge amount. Everyone’s permission should have been taken. If it has not been taken, it’s an irregularity. But as far as universities are concerned, it’s under the control of a vicechancellor or a convener committee when there is no VC. This controller of examinations (G V Uma) was appointed in 2015 before I became minister.

The then secretary and chairman of the convener committee had raised questions about the process in which the contract had been awarded. Yet the contract was passed. Will you initiate action against then higher education secretary?

We have already directed action against the university officials involved. We will check which officer was holding the secretary’s post.

Are you investigating if the re-evaluation scam is happening in all universities in Tamil Nadu?

We now know what the modus operandi is. If such a scam happens in one university, we can’t assume it’s happening elsewhere as the CoEs are different. But we are monitoring the increase in marks after reevaluation at all universities.

TOI has reported about the I-transcripts company which claims other universities as its clients without signing MoUs with them. What action will be initiated by the government against such companies?

It has not come to my knowledge. Please send the details to me. I shall look into it.

Do these companies have a link to persons in the higher education ministry because of which rules were bent?

Officials in the ministry might not know about these things. This happens within the university. If there is indeed a link to officials in the higher education department, it is wrong.

The DVAC has registered an FIR against former Anna University vice-chancellor M Rajaram and now against Uma. Both were appointed during the previous government. Will you probe the then minister and officials?

We will investigate anyone found responsible. The government is not afraid of investigating any wrongdoer. There will be no compromise. We inquire into any irregularities that crop up during any vice-chancellor’s tenure.

Are you going slow on retired vice-chancellors facing allegations?

That is a misconception. We check the veracity of every allegation that comes up. We are also taking action against former VCs.

But the action is being initiated by the university’s internal committees, not by the DVAC which has more powers

We are giving the information to the DVAC as well. For an example, in the (ex-Bharathiar University vice-chancellor ) Ganapathi case, we were conducting enquiries against him earlier and gave information to vigilance after verification. We will not spare anyone.




If such a scam happens in one university, we can’t assume it’s happening elsewhere as the CoEs are different. But we are monitoring the increase in marks after re-evaluation at all universities

K P ANBALAGAN

Higher education minister
Cadres swell as Karunanidhi’s health condition deteriorates
Maintaining Vital Organ Functions A Challenge: Docs


Team TOI

Chennai:07.08.2018

After a week’s lull, roads around Kauvery Hospital in Chennai swelled with DMK cadres and well-wishers on Monday evening over news of a “decline” in the health condition of DMK president M Karunanidhi.

The former chief minister and DMK patriarch has been in the intensive care unit of the hospital since July

29. A two-paragraph press release signed by hospital executive director Dr Aravindan Selvaraj said the medical condition of the 94-year-old former chief minister had been on the decline. “Maintaining his vital organ functions continues to remain a challenge, considering his age-related ailments. He is on continuous monitoring and is being treated with active medical support. His response to the medical intervention over the next 24 hours will determine the prognosis,” it said.

Meanwhile, most of his family members and senior party leaders remained at the hospital on Monday. Union minister for road transport & highways Nitin Gadkari, TNCC president Thirunavukkarasar, Dravidar Kazhagam leader K Veeramani and senior DMK leader K Anbazhagan visited the ailing leader.



PRAYERS POUR IN: M Karunanidhi’s son M K Stalin leaves Kauvery Hospital on Monday night. Hundreds of people had gathered outside the hospital over news of a ‘decline’ in the DMK chief’s condition | P 2

Wife Dayalu Ammal visits hosp with son


Former Tamil Nadu chief minister M Karunanidhi’s wife Dayalu Ammal was on Monday afternoon brought to Kauvery Hospital on a wheelchair. It was her first visit to the hospital since the DMK chief was hospitalized in the wee hours of July 29. She was wheeled in by her son M K Tamilarasu.

Crowd in front of hospital cheers MK, says ‘get up’

Hundreds of people outside the hospital raised slogans, “Ezhunthuvaa thalaivaa ... polaam polaam Arivalayam polaam ... Gopalapuram polaam …” (Get up and come ... let’s go to Arivalayam ... let’s go to Gopalapuram).

As the crowd swelled, police introduced traffic diversions on TTK Road and deployed more personnel. Police also blocked traffic coming towards the traffic signal in front of the Hospital up to Desikan Salai on Luz Church Road, but vehicles were allowed on the other side. A posse of police personnel was posted and barricades placed to ensure smooth entry and exit of vehicles to the hospital. Police personnel were seen atop the Alwarpet flyover monitoring the crowd.
1 driver, multiple buses: MTC hit by scam

Ram.Sundaram@timesgroup.com

Chennai: 07.08.2018

: Automated public transport could be a generation away, but Metropolitan Transportation Corporation records showed remarkable progress on this front by some staff — including one driver who operated multiple buses simultaneously, earning separate overtime wages for each vehicle.

Alas for the transport corporation, and taxpayers who pay the wages of its employees, MTC officials recently discovered that the feat was evidence of a payroll scam that the seemingly superdexterous driver and six other staff members had successfully pulled off since January.

MTC suspended all seven after an internal probe revealed that they exploited a wide gap in the allowances of permanent and temporary staff to fudge the name of the driver to show him on duty on various routes and pocket the difference in wages, an MTC official said.

The driver, Sudarshanam, received multiple allowances for operating buses from Koyambedu to Kelambakkam and T Nagar to Mogappair at the same time, the records show.

Gilbert, a temporary bus driver basis, and conductor Kumar from Anna Nagar depot, were supposed to operate a bus on route 147B on May 19. The conductor, according to MTC rules, entered details of the total collection in ticket sales and the driver’s name in the log sheet and way bill. But he substituted Gilbert’s name with Sudarshanam, who works out of the same depot.

A computer operator who had seen Sudarshanam organize a labour union event all morning that day, was taken aback when he saw his name in the records. Realizing that something was fishy, he informed the branch manager. The conductor stated that Sudarshanam forced him to enter his name instead of Gilbert’s name.



10 MTC staffers suspended for fudging duty log entries

MTC pays temporary drivers ₹500 per trip and permanent drivers ₹1,000 in overtime wages for the same job, the official said. By entering Sudarshanam’s name, the scamsters could collect ₹1,000, pay Gilbert ₹500 and hand over ₹500 to Sudarshanam — even though he would not be on the route during the shift.

Other sources at MTC said Sudarshanam and his accomplices managed to pull off the scam easily for months, but officials finally got wise to the data fudging game on May 19 when another conductor who was a part of the scam and was assigned on route 570 had also shown Sudharshanam as the driver instead of a temporary appointee.

A probe by officials revealed that Sudarshanam had adopted a similar strategy on route 27B, the sources said. After gathering conclusive evidence, MTC earlier this month suspended 10 staff members — four drivers, including three hired on a temporary basis, three conductors and three computer operators — from Anna Nagar depot in connection with the scam.

The computer operators were cleared of the charges; an inquiry is pending against seven others.

MTC has unearthed similar scams in the Vadapalani and Ambattur bus depot. The transport corporation suspended and later transferred five staff members for the racket at the Vadapalani depot, in which they illegally pocketed ₹45 lakh.

DGHS NOTIFICATION 6.08.2018


HC: Return original certificates withheld for discontinuing PG

TNN | Aug 6, 2018, 12.49 AM IST


 

MADURAI: The Madurai bench of the Madras high court has directed the dean of the Government Madurai Medical College to return the original certificates of a doctor which was withheld after she discontinued the post-graduate course at the college owing to personal reasons. 

The college had demanded Dr M Aarthy to Rs 10 lakh in accordance with the agreement bond and refused to part with the certificates.

Arathy had joined PG course in anatomy in 2016 and discontinued owing to personal reasons. When she asked for her certificates- class 10, 12, MBBS degree certificate, MBBS marksheet, house surgeon completion certificate, Medical Council registration and community certificate, the authorities rejected her application in a letter dated April 17, 2017.

Justice M S Ramesh noted that there exists an agreement bond which states that if a candidate discontinues the course any time before completion, he/she has to repay the amount received as stipend and pay appropriate discontinuation fee.

“There is no clause through which the petitioner has agreed that her original certificates could be retained till the amount is paid. In the absence of such a clause, the college is not justified in withholding the certificates,” the court observed, adding that it is unfortunate that the authorities chose to retain the documents for non-payment of penalty.

The court also refused to agree with the government pleader that the authorities have the right by citing a clause in the prospectus. “The said clause is an unilateral clause as the petitioner has no other option to join a PG course without purchasing the prospectus,” the court pointed out.

Holding that the authorities have no legal right to withhold the documents, Justice Ramesh directed the dean of the college to handover Arathy’s original certificates and also made it clear that it has not expressed views with regard to the authorities’ right to claim penalty or discontinuation fee.
பிரியாணி அரசியல்

Published : 03 Aug 2018 09:04 IST

 

அரசியல் என்பது தொண்டாக இருந்த காலம் போய் தொழிலாக மாறிப்போனதன் விளைவுதான், சென்னையில் அரங்கேறிய பிரியாணி கலாட்டா சம்பவம். கட்சியின் பெயர் சொல்லி பிரியாணி கேட்டு, கடை ஊழியர்களைக் கட்சி ஊழியர்கள் தாக்கும் அந்தக் காட்சிகள் அரசியல் மீதான மதிப்பை மேலும் குலைக்கவே வழிவகுக்கின்றன.

அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு மதிப்பு குறையவும், வெறுப்புணர்வு உருவானதற்கும் சிறிதும் பெரிதுமாகப் பல காரணங்கள் உண்டு. பல கட்சிகளில், தங்களிடம் உறுப்பினராக இருப்பவர்களின் செயல்பாடுகளைப் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. சொல்லப்போனால், குற்றச் செயல்களில் ஈடுபட்டுப் பணம் ஈட்டுவதற்காக அரசியல் பின்னணி தேடுபவர்களுக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்து வணிகர்களையும், தொழிலதிபர்களையும் மிரட்டுபவர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கின்ற கட்சிகளும் உண்டு.


இதன் விளைவுகளை மக்கள் ஒவ்வொரு நாளும் கண்கூடாகப் பார்க்கின்றனர். அதனால்தான், அரசியல் என்பது தொண்டு என்ற எண்ணமெல்லாம் மறைந்து, அது ஒரு கொள்ளை லாபத் தொழில் என்பதுபோல ஆகிக்கொண்டிருக்கிறது.

சென்னையின் கடை ஒன்றில், கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த பிரியாணி அடாவடி சம்பவத்தை இன்று உலகம் முழுக்க சமூக ஊடகங்களில் அந்தக் கட்சியின் எதிரிகளும் அதிருப்தியாளர்களும் உற்சாகமாகப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த அவமானச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கட்சியும், நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பிரியாணி கேட்டு அடிதடி நடத்தியவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது. அக்கட்சியின் செயல் தலைவர் நேரடியாகவே பாதிக்கப்பட்ட உணவகத்தினரைச் சந்தித்துப் பேசிவந்திருக்கிறார்.

இது ஏதோ அந்த ஒரு கட்சி மட்டுமே தொடர்புடைய விஷயம் அல்ல. கட்சிப் பொதுக் கூட்டத்துக்கும், மாநாட்டுக்கும் நிதி கொடுக்கச் சொல்லி, வேறு சில கட்சிக்காரர்கள் கடைக்காரர்களை மிரட்டிய காட்சிகளும் இதேபோல் சமூக ஊடகங்களில் பரவியது உண்டு. ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவருடைய தகுதி பற்றி குறைந்தபட்ச விசாரணையாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு கட்சிகளுக்கு இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் மட்டுமே அது நடைமுறையில் இருக்கிறது.

கூட்டம் சேர்த்துக் காட்டினால் போதும் என்ற வெறியில், ‘யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் இணையலாம்’ என்றும், ‘அலைபேசி வாயிலாக ஒரு மிஸ்டுகால் கொடுத்தாலே போதும், உறுப்பினர் ஆக்கிவிடுகிறோம்’ என்றும் துரத்தித் துரத்தி ஆள் பிடிப்பவர்களுக்கு இந்த பிரியாணி சம்பவம் சமீபத்து எச்சரிக்கை. இதில் இன்னொரு கொடுமை, ஒரே நபர் எத்தனை கட்சிகளில் வேண்டுமானாலும் உறுப்பினர் அட்டை வைத்திருக்க முடியும். இதற்கும் கண்காணிப்பு, கட்டுப்பாடெல்லாம் கிடையாது என்பதாகும்.

இது கணினியின் காலம். தாங்கள் நடத்துவது அரசியல் தொண்டுதானே தவிர, தொழில் அல்ல என்று உறுதியாக நிரூபிக்க விரும்பும் கட்சிகள் - தங்கள் கொள்கைகள் மற்றும் திட்டங்களோடு, ஒவ்வொரு உறுப்பினரின் விவரங்களையும்கூட மக்கள் பார்வைக்கு வெளியிட முடியும். அதில், குற்றச்செயல் புரிந்தவர்கள் பற்றி ஆதாரத்தோடு யாரிடமாவது தகவல் இருந்தால், அதைக் கட்சியின் பார்வைக்கு மக்கள் கொண்டுவரவும் வழிவகை செய்ய முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு குற்றத்தன்மையிலிருந்து ஒவ்வொரு கட்சியும் தன்னை அந்நியமாக வைத்திருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவே இனி அது மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறும்.

- தங்கர் பச்சான், திரைப்பட இயக்குநர், தொடர்புக்கு: thankarbachan5@gmail.com
காற்றில் கரையாத நினைவுகள் 22: ஊருக்குப் போவது

Published : 31 Jul 2018 09:35 IST


வெ. இறையன்பு





முன்பெல்லாம் பிறந்த கிராமத்தைவிட்டு வெளியே வராமல், தங்களுடைய வாழ்வையே முடித்துக் கொண்டவர்கள் உண்டு. அதிகபட்சம் சம்பந்தி வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். சொந்தத்திலேயே பெண் கொடுப்பது அன்றைய வழக்கம். அதிகத் தொலைவில் இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாட்டார்கள்.

இன்று வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் என்ன பணி செய்தாலும் கவலைப் படாமல் பெண் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பெண் கொடுத்து, பெண் வாங்குவதும் நடைமுறையில் இருந்தது. மருமகளும், மருமகனும் ஒரே வீட்டில். பெரிய நகரங்களைப் பலர் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பார்கள். பட்டணம் போவது என்று சென்னைக்கு வருவதையே சிலாகித்துச் சொல்வது வழக்கம்.

கால்களே வாகனம்

நாங்கள் மும்பை சென்றிருந்தபோது என் நண்பர் ஒருவர், ‘எங்கள் பாட்டியை இங்கே கொண்டுவந்து விட்டால் திரும்பி வரவே தெரியாது’ என்று சொன்னார். அந்தக் காட்சி நினைத்துப் பார்க்கும்போதே கொடூரமாக இருந்தது.

அடிக்கடி வெளியில் சாப்பிடுவது கவுரவக் குறைச்சலாக இருந்த காலம் அது. ‘வாங்கித் தின்னானாம், வீங்கிச் செத்தானாம்’ என்று எங்கள் பக்கம் ஒரு சொலவடையே உண்டு. வெளியில் சாப்பிட்டு கட்டுப்படியாகாது என்பதே அதன் பொருள்.

பெரும்பாலும் நடையே வாகனம். எவ்வளவு நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்தான் செல்வார்கள். பணத்துக்காக உறவுகளிடம் தனி மதிப்பு இல்லாத காலம். குழந்தைகளுக்கு அத்தை, மாமா என்று பிடிப்பு ஏற்பட காலாண்டு, அரையாண்டு, முழுப்பரீட்சை விடுமுறைகளில் உறவினர் வீட்டுக்குப் பயணப் படுவது வழக்கம்.

புதிய சூழல் புதிய தெளிவுபுது ஊரில் புதுப்புது நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய சூழல். நிறைய விளையாட்டு. அப்பா, அம்மாவின் சகல நேரக் கண்காணிப்பில் இருந்து விடுதலை. சில சிறுவர்கள் தாத்தா, பாட்டி வீட்டிலேயே வளர்வது உண்டு. அவர்கள் அதிக சுதந்திரத்தோடு இருப்பார்கள். எதையும் அருகில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும்போது தெளிவு கூடுதலாக இருக்கும். பாட்டி வீட்டில் வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் சுயசிந்தனையோடு இருப்பதும் உண்டு.

சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போவது என்றால் சின்னத் துணிப் பையில் இரண்டு சட்டை, இரண்டு காற்சட்டை, இரண்டு உள்ளாடைகள் ஆகியவை எடுத்துக் கொள்ளப்படும். ஒன்று கொடியில், ஒன்று மடியில், மற்றொன்று இடையில். அவ்வளவுதான் மொத்த உருப்படிகள். படுக்கிற இடமோ பகிர்கிற உணவோ முக்கியமில்லை. உணர்வுக்கு முன் உணவு எம்மாத்திரம்!

அங்கு புதிதுபுதிதாய்க் கண்டறியும் அனுபவத்தில் ஆனந்தம் மேலிடும். ஒருநாளும் பெற்றோரை நினைத்து பிள்ளைகள் ஏங்காது. இன்று ஊருக்கு அனுப்பினால் பிள்ளைகள் சுவரில் அடித்த பந்துபோல திரும்பி வந்துவிடுகின்றனர்.

பள்ளிச் சிற்றுலா...

முன்பெல்லாம் பள்ளியில் அரிதாகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள். எங்கள் பகுதியில் இருந்த தென்னிந்திய கண்ணாடித் தொழிற்சாலைக்கு ஒரு

முறை எங்கள் பள்ளியில் இருந்து கூட்டிச் சென்றார்கள். அதுவே பேரனுபவமாக இருந்தது.

அதற்குப் பிறகு வேலைநிறுத்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை யையே இழுத்து மூடினார்கள். அங்கு பணியாற்றியவர்கள் வறுமையுற்று ஏற்கெனவே கொடுத்ததைவிட குறைவா கக் கொடுத்தால்கூட ஏற்றுக்கொள் கிறோம் என மன்றாடியதாகச் சொல்வார்கள். பலர் சோற்றுக்கே வழியின்றி சோர்ந்து இறந்ததை நானறிவேன்.

பள்ளியில் ஒருமுறை மேட்டூர் அணைக்கு அழைத்துச் சென்றார்கள். உயர்நிலைப் பள்ளியில் சாத்தனூர், செஞ்சிக்கோட்டை போன்றவற்றுக்கு சுற்றுலா அறிவித்தார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் மூத்தவர்களுக்கே முன்னுரிமை. ஒருமுறை என் சகோதரி கன்னியாகுமரி சுற்றுலாவுக்குச் சென்று, வீட்டுக்கு என்ன வாங்குவது எனத் தெரியாமல், அங்கு விற்ற விதவிதமான வண்ண மண்களை வாங்கிகொண்டு வந்தார். அதை வைத்து என்ன செய்வது என்று வீட்டுக்குள் பெரிய விவாதமே நடந்தது.

10 நாட்கள் முகாம்

நாங்கள் மிதிவண்டி எடுத்துக்கொண்டு சேலம் அம்மாபாளையத்திள் இருக்கிற மாமாங்கத்துக்குச் செல்வோம். அங்கு ஒரு குளத்தில் வற்றாத நீர். ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய ராமன் விட்ட அம்பால் ஏற்பட்ட நீர்நிலை அது என்பது ஐதீகம். அதில் நீந்திக் குளிப்போம். அதேபோல சித்தர் கோயிலுக்கு சைக்கிளில் செல்வோம். அங்கு வற்றாத கிணறுகள் உண்டு. அதில் திருப்தி வரும் வரை குளியல் போடுவோம்.

நான் தேசிய மாணவர் படைக்காக சங்ககிரிக்கு பத்து நாட்கள் முகாம் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஒரு நாள் சாலை போடுகிற பணியில் ஈடுபட்டோம். திரும்பி வரும்போது வேலைநிறுத்தப் போராட்டம் (ஹர்த்தால்) காரணமாக சரக்குந்தில் திரும்பி வந்தோம்.

சேலத்தில் நடக்கும் கண்காட்சிக்கு தொடக்கப் பள்ளி மாணவர்களை ஆசிரியர் அழைத்துச்செல்வது உண்டு. ஒரு ரூபாய் கட்டணம்.

ஒருமுறை கண்காட்சியில் அனைத்தையும் கண்டுகளித்த பிறகு வகுப்பாசிரி யர் கவலையோடு காணப்பட்டார். ஒரு மாணவன் பணமே கொடுக்காமல் கண்காட்சிக்கு வந்துவிட்டான். பிறகு கணக்கைப் பார்த்து கண்டு பிடித்தார். யாரெனத் தெரிந்ததும் அவனை அழைத்து விசாரித்தாரே தவிர, வெகுண்டெழ வில்லை. அந்த மாணவன் அதற்குப் பிறகு பள்ளிக்கு வரவேயில்லை.

பெரியம்மாவும் சிறுகிழங்கும்

சொந்தக்காரர்கள் வீட்டுக்கு வரும்போது கிடைத்ததையோ, முடிந்த தையோ வாங்கி வருவார்கள். அதற்கும் அவர்களுக்குத் தருகிற உபசரிப்புக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. எங்கள் பெரியம்மா ஒருவர் தீபாவளி நேரத்தில் சிறுகிழங்கு கொண்டு வரு வார். இன்னோர் உறவினர் பனைவெல்லம் கொண்டு வருவார்.

ஊருக்குச் சென்றால் திரும்பி வரும் வரை சேதி எதுவும் தெரியாது. அது பற்றி வீட்டினர் கவலைப்பட்டதும் கிடையாது. அன்று இன்றிருப்பதைப் போல தொலைபேசியோ, அலைபேசியோ இல்லை. இப்போதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று நேர்முக வர்ணனை நடக்கிறது. அவர்கள் சொன்ன இடத்துக்குத்தான் சென்றிருக்கிறார்களா என்று பார்க்கும் வசதியும் வந்துவிட்டது.

கல்லூரியில் படிக்கும் சமயத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றபோது, சில மாணவர்கள் முதன்முறையாக கடலைப் பார்த்தனர். அதைவிட்டு வரவே அவர்களுக்கு மனம் வரவில்லை. ஒகேனக்கல்லை முதன்முறையாக அதிசயமாய்ப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினோம். அதில் குளித்துக் கொண்டிருந்தவர்களை பேருந்துக்கு அழைத்து வருவது பெரும் பாடாய் இருந்தது.

வேளாங்கண்ணி, திருப்பதி, நாகூர்

இன்றைய சிறுவர்களோ நயாகரா அருவியையே காணொலியில் பார்த்துவிடுவதால் அவர்களுக்கு அந்த அருவிகள் வியக்கும் வீழ்ச்சிகளாய் இருப்பதில்லை. பார்க்கிற பழக்கம், அதிசயிக்கும் குழந்தை இயல்பை நீர்த்துப்போகச் செய்துவிடுகிறது.

அன்றைய நாளில் மொத்தக் குடும்பமும் ஊருக்குப் போவது அபூர்வம். அப்படிச் செல்வது பெரும்பாலும் கோயில்களுக்காகத்தான் இருக்கும். அப்படிச் செல்வது கூட அநேகமாக திருப்பதி, பழநி, வேளாங்கண்ணி, நாகூராகத்தான் இருக்கும்.

ஒரு மாதம் முன்பிருந்தே அதுபற்றிக் கற்பனையில் பேசிக் களித்திருப்பார்கள். இரண்டு காசு, மூன்று காசு என மிச்சமாகிற சில்லறையை அங்கிருக்கும் யாசகர்களுக்குப் போட முடிந்து வைப்பார்கள். எங்கு காலை உணவை சாப்பிடுவது என்பது தொடங்கி சிந்தனை விரியும். சென்று வந்ததற்கு அடையாளமாக சில வீடுகளில் மொட் டைத் தலைகள் பளபளக்கும்.

கட்டுச்சோற்றுப் பயணம்

இப்போதெல்லாம் குழந்தைகள் மொட்டை அடித்துக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. அப்பாக்கள்தான் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள். அப்போதெல்லாம் யாராவது காசிக்கு யாத்திரை சென்று வந்தால், அவர்களுடைய காலில் விழுந்து வணங்குவதை புண்ணியம் என்று கருதினார்கள்.

எளிய குடும்பங்கள் கட்டுச்சோறோடு பயணம் செய்யும். மூன்று வேளையும் புளிச் சோறு. டெல்லியில் இருந்து தொடர்வண்டியில் வருகிறபோது எளியவர் ஒருவர் அத்தனை வேளையும் பொட்டலம் கட்டியிருந்த பூரிக் கிழங்கை உண்பதைப் பார்த்தேன்.

அன்று விமானப் பயணம் மாபெரும் கனவு. இன்று வெளிநாடு சகஜம். இன்றைய நாளில் தண்ணீர் குடிப்பதைப் போல சர்வ சாதாரணமாக கோடை விடுமுறையில் மலைவாழ் தலங்களுக்கு மக்கள் செல்கின்றனர். அதற்காகவே சீட்டுப் போடுகின்றனர். ஆண்டுக்கொரு ஊர் என கண்டுகளிக்கின்றனர். வார இறுதிகளில் அருகில் இருக்கும் இடங்களுக்கு சிற்றுலா சென்று வரு கின்றனர்.

எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் அங்கெல்லாம் தங்கள் சொந்த ஊரையும் சிலர் தூக்கிக் கொண்டு செல்வதுதான் வியப்பாக இருக்கிறது!

- நினைவுகள் படரும்...
இளமை .நெட்: சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் லீவு!

Published : 03 Aug 2018 10:51 IST


சைபர் சிம்மன்

 



சமூக ஊடகச் சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்துக்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் எனக் கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும் ஒளிப்படங்களைப் பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சவாலே!

ஆம், இப்படி ஓர் அழைப்பை விடுத்திருக்கிறது இங்கிலாந்தின் சுகாதார அமைப்பு ஒன்று. அந்நாட்டின் ‘ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி’, ஒரு மாத காலம் சமூக ஊடகச் செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதத்தை ‘ஸ்கிரால் ஃப்ரீ’ மாதமாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது.

இன்று இணையத்தில் புழங்குபவர்களில் பெரும்பாலோர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என ஏதாவது ஒரு சமூக ஊடக சேவையையே தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். நாட்டு நடப்பு நிகழ்வுகள், தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என எல்லாவற்றையும், நிலைத்தகவலாகவோ ஒளிப்பட மாகவோ மீம் வடிவிலோ பகிர்ந்து கொள்வது இயல்பாகி இருக்கிறது.

இப்படிப் பலரும் சமூக ஊடகத்துக்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் சமூக ஊடகமே கதி என இருப்பது அவர்களது மனநலம், உடல்நலம் என இரண்டையும் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனில் ‘யங் ஹெல்த் மூவ்மெண்ட்’ எனும் இளைஞர் நல அமைப்புடன் இணைந்து பொது சுகாதாரக் கழகம் நடத்திய ஆய்வு முடிவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஸ்டேட்டஸ் ஆஃப் மைண்ட்’ (#StatusOfMind) எனும் பெயரிலான இந்த அறிக்கை, சமூக ஊடகப் பயன்பாட்டால் கவலை, மனச்சோர்வு, உடல் தொடர்பான எதிர்மறைப் பிம்பங்களை வளர்ப்பது, இணையச் சீண்டல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகளை உண்டாக்குவதாகத் தெரிவிக்கிறது. இவை தவிர, ‘ஃபோமோ’ (FOMO) எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் எதையும் தவற விட்டுவிடுவோமோ எனும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது.

சமூக ஊடகத் தளத்தைப் பார்த்துக்கொண்டே இருக்காவிட்டால், ஏதேனும் முக்கிய நிகழ்வு, நிலைத்தகவலைத் தவற விட்டு விடுவோம் எனும் எண்ணமே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ‘ஃபியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ என்கின்றனர். ‘நோட்டிஃபிகேஷன்’ ஒலிக்குப் பழகிவிட்ட பலருக்கு இந்தப் பாதிப்பு இருக்கலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு, சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் விடை கொடுக்கலாம் எனும் யோசனையை முன்வைத்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதைச் சாத்தியமாக்குவதற்காக, ‘ஸ்கிரால் ஃப்ரீ’ செப்டம்பர் எனும் கோஷத்தோடு, இங்கிலாந்து அமைப்பு தனது இணையதளம் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாடு, உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு மாத காலம் சமூக ஊடகத்துக்கு விடை கொடுக்க நீங்கள் தயாரா? இங்கிலாந்தில் உள்ளவர்கள்தாம் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை.

சமூக ஊடகப் பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். சமூக ஊடகம் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியாது என நினைப்பவர்கள், பகுதி அளவேனும் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். மாலை ஆறு மணிக்கு மேல் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இரவுப் படுக்கையறையில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றலாம்.

‘ஸ்கிரால் ஃப்ரீ செப்டம்பர்’ பற்றி மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/2vaJdA5
எல்லா நலமும் பெற: தோட்டத்தால் குறையும் மன அழுத்தம்!

Published : 04 Aug 2018 10:58 IST

தொகுப்பு: ஷங்கர்




மூட்டுவலிக்கு இயற்கையான தீர்வு இருக்கிறதா?

மூட்டுவலியைத் தணிக்கும் களிம்பு களைவிடக் கூடுதலான நிவாரணத்தை மஞ்சள் தருவதாகத் தெரிவிக்கும் ஆய்வுகள் உள்ளன. தினசரி மஞ்சளை உட்கொண்டால் அதன் பலன் எட்டு வாரங்களில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. உட்கொள்ளும் மஞ்சளுடன் சிறிதளவு மிளகும் கலந்திருக்க வேண்டும்.

ஒரே இடத்தில் உட்காராமல் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

கணவருடனோ மனைவியுடனோ நடைப்பயிற்சி செல்லுங்கள். குழந்தைகள், செல்லப் பிராணியுடனும் காலையிலோ மாலையிலோ ‘வாக்’ போகலாம். படி ஏறும் இறங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் லிஃப்டைப் பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டால் நடந்துகொண்டே பேசும் இடங்களைத் தேர்ந்தெடுங்கள்.

கார்கள், இரு சக்கர வாகனங்களுக்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். தினசரி அலுவலகத்துக்குப் போகும்போதோ வீடு திரும்பும்போதோ இரண்டு நிறுத்தங்களுக்கு முன்னால் இறங்கி நடந்து பாருங்கள். தொலைக்காட்சியில் சேனல் மாற்றும்போது, ரிமோட்டைப் பயன்படுத்தாமல் எழுந்து சென்று டி.வி.யில் சேனலை மாற்றுங்கள்.

மன அழுத்தத்தைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் உண்டா?

தோட்ட வேலை செய்வதால் மன அழுத்தம் குறைந்து, நிறைவும் களிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்துக்கு ஆறு மணி நேரமாவது தோட்டத்தில் செலவழிக்கிறவர்களுக்கு மன அழுத்தத்தின் தாக்கம் குறைவாக உள்ளது.

கோக் பானம் ஒரு கிளாஸ், ஆரஞ்சு பழச்சாறு ஒரு கிளாஸ். எது ரத்தத்தில் சர்க்கரையைக் கூடுதலாக அதிகரிக்கும்?

இரண்டுமே ஒரே அளவில்தான் சர்க்கரையை அதிகரிக்கும். ‘ஃப்ருக்டோஸ்’ அளவு இரண்டிலும் சமமாகவே உள்ளது. ஒருவகையில் ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள கலோரிகள் கோக்கைவிட அதிகம்.

பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற பொரித்த உணவுகள் நல்லவையா?

கார்போஹைட்ரேட் உணவை எண்ணெய்யில் பொரிக்கும்போது, நரம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளான அக்ரிலமைட் உற்பத்தியாகிறது. சிகரெட் புகையிலும் இந்த அக்ரிலமைட் உள்ளது. சிறுநீரகம், மார்பு, கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அக்ரிலமைட் உள்ளது.

இனிப்பு தேசம் 17: விளையாடுவது தவமே!

Published : 04 Aug 2018 10:59 IST


மருத்துவர் கு. சிவராமன்

 




‘கொஞ்ச நாளாவே எதுக்கெடுத்தாலும் ‘வள்வள்’ளுன்னு விழுறாரு சார்’ என வருத்தமாக வரும் தம்பதியிடம் ‘சுகர் சரியா இருக்கான்னு பார்த்தீங்களா?’ எனக் கேட்க வேண்டியதாக உள்ளது. ஆமாம்! இனிப்பு நோய், நிறைய நேரம் ‘கார’ நோயாகவும் உருவெடுக்கும்.

தேவையற்ற கோபம், எல்லோரிடமும் எரிந்துவிழுவது, கணக்கில்லாமல் கடுஞ்சொல் பேசுவது இது எல்லாம் நீரழிவு நோயாளிகளிடம் ரத்தச் சர்க்கரை கூடும்போதும் குறையும்போதும் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்கள். உலகம் முழுக்கவே இதை அலசி ஆராய்ந்து தள்ளி, ‘கட்டுப்பாடில்லாத இனிப்பு, வாழ்வில் இனிப்பைக் கொஞ்சம் குறைத்து, கசப்பைக் கூட்டுகிறது’ எனச் சத்தமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘Hangry’ (hungry+angry) என்ற புது ஆங்கிலச் சொல்லையும்கூட மருத்துவ உலகம் இதற்குப் படைத்துவிட்டது.

அதீத சர்க்கரையிலும் (hyperglycemia), தாழ்சர்க்கரையிலும் (hypoglycemia) இரண்டிலுமே, இனிப்பு நோயர்களுக்கு இந்த கோபமும் எரிச்சலும் குடியேறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாலையில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து, ஆஸ்பத்திரியில் நர்ஸிடம் சண்டை கட்டுவோர்வரை உள்ள நபர்களில், ‘இனிப்பர்கள்’ கொஞ்சம் அதிகமாம். ரத்த இனிப்பு அளவுக்கும், ரத்த இன்சுலின் அளவுக்கும் மூளையின் பணிகளுக்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது.

சுயக்கட்டுப்பாட்டுக்கு… தலாமஸ்!

மூளையின் தலாமஸ் எனும் பகுதிதான், பசியை நமக்கு உணர்த்தும் விஷயம். பசி அகோரப் பசியாக மாறுவது, பசி நேரத்தில் ‘இது நமக்கு நல்லதல்ல. சுகரைக் கூட்டிடும், வேண்டாம்!’ எனும் சுயக்கட்டுப்பாட்டைத் தருவது எல்லாம் தலாமஸ்தான். ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடில்லாதவர்கள், பசியோடு வீட்டுக்குள் நுழையும்போது டைனிங் டேபிளில் கையில் கிடைக்கும் வஸ்துவையெல்லாம் வாரிச்சுருட்டி வாயில் அடக்கிக்கொண்டு, அதனால் வீட்டம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதற்குக் காரணம் தலாமஸைச் சர்க்கரைக் கொஞ்சம் பாடாய்ப்படுத்துவதால்தான் என்கிறது நவீனஅறிவியல்.

மூளையின் தலாமஸ்தான் சுயக் கட்டுப்பாட்டை (self-control) ஒருவருக்குத் தரும். தான் பார்த்த, கேட்ட, தொட்ட, முகர்ந்த என அத்தனை உணர்வுத் தகவல்களையும் நரம்பு மூலமாகப் பெற்று சீராகக் கையாள்வதும், அதனால் மனத்திலும் உணர்விலும் எழுச்சியை ஏற்படுத்துவதும் தலாமஸ்தான். அந்த தலாமஸைத் தடுமாறச்செய்வது சர்க்கரையின் ஏற்றத்தாழ்வு.

ஒருவர் உணவு இடைவேளையில் சாப்பாட்டுக்குச் செல்ல ஏதாவது காரணத்தால் நேரமாகும்போது, கன்னாபின்னாவெனக் கோபப்படுகிறார் என்றாலோ, அப்போது அவசர அவசரமாய் எழுதும்போது ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்’ ஏகத்துக்கும் வருகிறது என்றாலோ, அந்த நேரத்தில் எதிர்ப்படும் ஊழியரைக் கடித்துத் துப்புகிறார் என்றாலோ, தயவுசெய்து அடுத்த நாள் ரத்த சர்க்கரை அளவை வெறும் வயிற்றில் பார்க்கச் சொல்வதும், மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்வதும் மிக மிக முக்கியம்.

கோபம் குறைக்கும் நடை

பேசும்போது சரியான சொற்களுக்குத் தடுமாறுவது, மன அழுத்தம், வேலை ஏதும் செய்யாமலே, உடற்சோர்வாயிருப்பது, மனத்தை ஒருநிலைப்படுத்த இயலாது தயங்குவது, எரிச்சல், பரபரப்பு இவை எல்லாமே சர்க்கரை, ரத்தத்தில் அதிகரித்ததன் காரணமாக இருக்கும். தடாலடியாக இதை உளவியல் சிக்கலாய்க் கருதி உளவியல் மருந்துப் பக்கம் ஓட வேண்டியதில்லை. மாறாக, தினசரி 10 ரவுண்டு ஓடினாலோ நடந்தாலோ போதும். அனைத்தும் மாறிவிடும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இனிப்பர்கள் கோபம் கொள்வதில்லை. மாறாக, காதலும் கரிசனமும் கொள்கிறார்கள். அவர்களின் ஞாபகசக்தி, முடிவெடுக்கும் திறன், கற்பனை வளம் அத்தனையும் கூடுகிறது. நடை, சர்க்கரையைப் பதமாய்க் கையாண்டு, மூளையின் தலாமஸைத் தடவிக் கொடுத்துத் தட்டிக் கொடுப்பதாலேயே இத்தனை மாற்றமும்.

நீரழிவு நோயாளிகள் தன் உடலுழைப்பால், உடற்பயிற்சியால் ரத்தத்தில் உள்ள இன்சுலினை, செல்லுக்குள் தள்ளிவிடாமல் இருந்தால், அது மூளைக்குள்ளேயே சுற்றித் திரியும். அது சிலருக்கு நுண் நாளப் பாதிப்பை (micro vascular damage) ஏற்படுத்துவதுபோல, வேறு சிலருக்கோ அதுவே ஒருவகைத் திட்டுக்களாகின்றன (amyloid protein buildups / brain plaques). இந்தத் திட்டுக்கள் மூளையில் சேரச்சேர, பின்னாளில் ஞாபகத் திறன் குறையும். பல நோய்கள் வரிசையாய் வந்து சேரும்.

மைதானமே கோயில்

சர்க்கரையைச் சரியாக வைக்காவிடில், ஒரு சமூகத்தில் விவாகரத்து முதல் வன்முறைவரை பல பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. மனத்தை எளிதாக்க முதலில் நடைப்பயிற்சி, அப்புறம் கொஞ்சம் தியானப் பயிற்சி ஆகியவை கண்டிப்பாக ஒவ்வோர் இனிப்பரும் செய்ய வேண்டிய விஷயம்.

விளையாட்டு மிக அழகான, எளிதான தியானப் பயிற்சி என்பது பலருக்கும் தெரியாது. அதில் பந்துதான் கடவுள். மைதானம்தான் கோயில். கூட விளையாடும் அத்தனை பேரும் குருமார்கள். தனி அறையில் கடவுளை நோக்கி மனதை ஒருமுகப்படுத்த தியானிக்கும் போதுதான் ஈ.எம்.ஐ.பிரச்சினை, கொடுங்கோல் பாஸின் குரூர முகம் போன்றவை எல்லாம் அநியாயத்துக்கு வந்து நிற்கும். ஆனால், அதுவே விளையாட்டில், பந்தைத் தவிர வேறெதிலும் நாம் கவனம் செலுத்த மாட்டோம். ஆதலால் விளையாட்டும் உடற்பயிற்சியோடு கூடிய ஒரு தவமே!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
2022-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published : 06 Aug 2018 14:07 IST


பிடிஐ புதுடெல்லி,

 


கோப்புப்படம்

2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும் என்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

மாநிலங்களவையில் இன்று கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் பாஜக எம்.பி. அசோக் பாஜ்வாய் எழுந்து பேசுகையில், ‘‘இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி உலக அளவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாகமாறிவிடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும்.

நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம்தான், ஆனால், உலகமக்கள் தொகையில் இந்தியா 17.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

கடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்திப் பேசினார். இவருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. விஜய்பால் சிங் தோமரும் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.பி. ஜாவித் அலி கான், ‘‘உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் செயல்படும் சிறுபான்மையினருக்கான கல்வி அமைப்புகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.சிறுபான்மையினர் கல்விக்காக போதுமான நிதியும் ஒதுக்கப்படவில்லை

தேசிய சிறுபான்மை ஆணையத்துக்கான ஆணையர், உறுப்பினர்கள் கடந்த 4 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல், இருக்கிறது. இதுவரை 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையிலும் யாரும் நியமிக்கப்படாமல், பாரபட்சம் காட்டப்படுகிறது‘‘ என்று தெரிவித்தார்.

இதேப்போன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் குப்தா, சமாஜ்வாதி எம்.பி. ரவி பிரகாஷ் வெர்மா, அனில் பலுனி, காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தய்யா, மோதிலால் வோரா, ஹூசைன் தல்வாய் ஆகியோரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே தேர்வு நடைமுறை: முறைகேடுகளைத் தடுக்க அதிரடி மாற்றம்

By DIN | Published on : 07th August 2018 02:09 AM


பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இப்புதிய நடைமுறை மூலம் ஒரு மாணவருடைய விடைத்தாள் எந்த மையத்துக்குச் சென்றுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதோடு, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட ஒருசில அதிகாரிகளுக்கு மட்டுமே இதைக் கையாளும் அதிகாரம் கொடுக்கப்படும் என்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்காது என்கின்றனர் உயர் கல்வித் துறை அதிகாரிகள்.

விடைத்தாள் முறைகேடு காரணமாக... அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உண்மையில் தேர்ச்சியடையக் கூடிய மாணவர்களை தோல்வியடையச் செய்திருப்பதும், தகுதியில்லாத மாணவர்களை தேர்ச்சியடையச் செய்திருப்பதும் கல்வியாளர்கள், பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவர உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள்: இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு தேர்வு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தேர்வுத் தாளில் மறைமுக எண் (டம்மி' எண்) போடப்படும். அதாவது, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுத் தாள்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒவ்வொரு மாணவரின் தேர்வுத் தாளுக்கும் டம்மி' எண் போடப்பட்டு, தேர்வுத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நடைமுறையில், ஒரு மாணவர் எளிதில் தனது விடைத்தாளைக் கண்டுபிடித்து முறைகேட்டில் ஈடுபட்டுவிட முடியும் என்பது, அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற தமிழக உயர் கல்வித் துறை இப்போது முடிவு செய்துள்ளது.

பார் கோட்' நடைமுறை: அதாவது, விடைத்தாள்களில் பார் கோட்' நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவருடைய விடைத்தாளின் முதல் பக்கம் பல்கலைக்கழகத்திலேயே வைத்துக்கொள்ளப்பட்டு, விடைகள் இடம்பெற்றிருக்கும் மற்ற பக்கங்கள் மட்டும் சிறப்புக் குறியீடு இடப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது: இச்சிறப்புக் குறியீடு இடும் அதிகாரம் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்பட ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், முறைகேடு நடைபெற்றால் அவர்கள் மட்டுமே பொறுப்பேற்கவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். மேலும், பருவத் தேர்வில் மட்டுமின்றி, விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் விண்ணப்பித்தலின்போதும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படும். எனவே, புதிய நடைமுறை மூலம் முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறியது: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு போன்று வரும் காலங்களில் முறைகேடுகள் நடைபெறாத வகையில், புதிய தேர்வு நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது விடைத்தாளில் பார் கோடு' போன்ற ரகசியக் குறியீடு இடம்பெறச் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
குழு அமைக்கப்படும்: இதற்காக உயர் கல்வித் துறை இணைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக பரீட்சார்த்த முறையில் சிறிய அளவில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்.

இப்போது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு விதமான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியது: தேடும் பணி தீவிரம்
By DIN | Published on : 06th August 2018 11:42 PM

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியதையடுத்து அதை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூருலிருந்து 4 கழுதைப் புலிகள் கொண்டுவரப்பட்டு அவை ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒரு கழுதைப் புலி கூண்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது. இன்று மாலை கூண்டிலிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒரு கழுதைப் புலி காணாதது கண்டு உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை நேரில் பார்வையிட்டனர்.

பின் தப்பி ஓடிய கழுதைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அதனை சுற்றுயுள்ள பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது எனவே அதை கண்டறிவதற்காக நாளை செவ்வாய்கிழமை உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளனர். எனவே நாளை காலை முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.
ரயில்வே ஊழியர்கள் 'பாஸ்' பெற புது வசதி

Added : ஆக 07, 2018 05:01


சென்னை: ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணத்திற்கான, 'பாஸ்' பெற, இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, தெற்கு ரயில்வே நேற்று அறிமுகம் செய்தது.ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ரயில் பயண, 'பாஸ்' வாங்கவும், அதை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கவும், ரயில்வே அலுவலகத்திற்கு, இரண்டு முறை வந்து செல்ல வேண்டியிருந்தது. அலைச்சலை தவிர்க்க, இணைய தளம் வாயிலாக, விண்ணப்பிக்கும் வசதி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.இந்த வசதியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ் ரேஸ்தா, சென்னையில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.இதன்படி, ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே, ரயில் பயண, 'பாஸ்' பெற, ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'பாஸ்' தயாரானதும், நிலையத்திற்கு வந்து, 'பாஸ்' பெற்று, டிக்கெட் கவுன்டரில், உரிய டிக்கெட்டை பெறலாம்.நேரில் வந்து, 'பாஸ்' பெற முடியாதவர்கள், அவர்களின் அனுமதி பெற்றவர்களை ரயில்வே அலுவலகத்திற்கு அனுப்பி, 'பாஸ்' பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருணை கொலைக்கு கதறிய ராணுவ வீரர்

Added : ஆக 07, 2018 01:10

சேலம்: உறவினர்கள் யாரும் கவனிக்க மறுப்பதால், தன்னை கருணைக் கொலை செய்யும் படி, போலீஸ் கமிஷனரிடம், முன்னாள் ராணுவ வீரர் கதறினார்.சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 85; முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, கதறி அழுதார். கமிஷனர் சங்கர், அவரிடம் விசாரித்தார்.கிருஷ்ணன் கூறியதாவது:என் தந்தை, தாசில்தாராக பணியாற்றியவர். நான் ராணுவத்தில் சேர்ந்து, சீனாவுக்கு எதிராக போரிட்டுள்ளேன். காஷ்மீரில் கடும் குளிரில், இரவு, பகல் பாராமல் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பின், மதுரை கலெக்டருக்கு, கார் டிரைவராக பணிபுரிந்தேன். அப்போது, எனக்கு நீரிழிவு நோயின் அறிகுறி தென்பட்டதால், சேலம் வந்து விட்டேன்.நோய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வரும் நிலையில், உறவினர்கள், எனக்கு உணவு தர மறுக்கின்றனர். நோயின் பிடியில் சிக்கி, தினமும் அவதியை சந்திப்பதால், என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அவருக்கு ஆறுதல் தெரிவித்து, போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:உங்கள் உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கிறோம். அவர்கள் அளிக்கும் தகவல்படி, உங்களை காப்பகத்தில் சேர்த்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ணனின் மகன் சுந்தருக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் வந்து, தந்தையை அழைத்தார். அவர், செல்ல மறுத்ததால், போலீசார் சமாதானம் செய்து, மகனுடன் அனுப்பி வைத்தனர்.
'முக்கிய கோவில்களுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்'

Added : ஆக 06, 2018 23:34

திருச்சி: ''திருச்சியிலிருந்து, பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது,'' என்று அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்நாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாகவும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில், தற்போது, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு சுற்றுலா தலங்களுக்கான மேம்பாட்டு நிதி அறிவிக்கப்படும் போது, திருச்சி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று, முக்கொம்பு, கல்லணை போன்ற சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.சுற்றுலா துறை சார்பில், திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து, ஏழுமலையான் கோவில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன், தினமும் 150 பேர் சென்று வரும் வகையில், சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில், சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


அண்ணா பல்கலையில் மறுமதிப்பீடு பணி துவக்கம் : முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களுக்கு அழைப்பு

Added : ஆக 06, 2018 23:27

அண்ணா பல்கலையில், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு, பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத்தாள் மறுமதிப்பீடு பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த பணிக்கு, முறைகேட்டில் ஈடுபடாத பேராசிரியர்களை அனுப்பும்படி, இன்ஜி., கல்லுாரி களுக்கு பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.அண்ணா பல்கலையில், 2017 ஏப்ரல், மே மாதங்களில், இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்வுத்தாள்களை மறுமதிப்பீடு செய்ததில், பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த மறுமதிப்பீட்டில், 73 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாணவரிட மும், தலா, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று, அதிக மதிப்பெண் வழங்கியதாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
'டம்மி எண்' : இந்த விவகாரத்தில், பல்கலையின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள, அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரியின் முன்னாள் முதல்வர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் இன்ஜி., கல்லுாரிகளை சேர்ந்த, ஏழு பேராசிரியர் களும் வழக்கில் சிக்கிஉள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வுத் தாள் மறுமதிப்பீடு பணி, தற்போது துவங்கியுள்ளது. இந்த ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த முறை, சென்னை அண்ணா பல்கலை தேர்வுத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில், மறுமதிப்பீட்டு பணியை மேற்கொள்ள, துணைவேந்தர் சுரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், தேர்வுத்தாள் மறுமதிப்பீடு தொடர்பாக, கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, தேர்வுத் தாள்களுக்கு சரியான, 'டம்மி எண்' ஏற்படுத்தி, அந்த டம்மி எண்ணை, யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாள் திருத்துவதில், எந்த அதிகாரி மற்றும் மைய பொறுப்பாளர்களின் சிபாரிசுகளையும் ஏற்கக் கூடாது என, பேராசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையில், அனைத்து, இன்ஜி., கல்லுாரிகளுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, வெங்கடேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மாணவர்களுக்கான தேர்வை நடத்துவது, விடைத்தாளை திருத்தி, முறையாக தேர்வு முடிவை வெளியிடுவது போன்ற நடவடிக்கையில், பல்கலை யின் உறுப்பு கல்லுாரிகள், மண்டல கல்லுாரிகள் மற்றும் தனியார், இன்ஜி., கல்லுாரிகளின் பங்கு முக்கியமானது.பெரும்பாலான தனியார் கல்லுாரிகள், தங்களின், 70 சதவீத ஆசிரியர்களை, தேர்வுத்தாள் திருத்த பணிக்கு அனுப்பாததால், திருத்துவதில் தாமதம் ஏற்படுகிறது.

சர்ச்சை : இந்த நிலை தொடர்ந்தால், பேராசிரியர்களை அனுப்பாத கல்லுாரி மாணவர்களின், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்.மேலும், தேர்வுத்தாள் திருத்தும் நடவடிக்கைகளில், பேராசிரியர்களின் பங்கும், அவர்களுக்கான பொறுப்பும் மிகவும் முக்கியமானது. திருத்த பணிக்கு வரும் பேராசிரியர்கள் தங்களின் மனசாட்சிப்படி, திருத்த பணிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட்டால் மட்டுமே, அந்த பணி அர்த்தமுள்ளதாக இருக்கும்.மாறாக, பொதுமக்கள் மத்தியில், பல்கலையின் தேர்வுத்தாள் திருத்தம் குறித்து, சர்ச்சை ஏற்படும் வகையில், நடந்து கொள்ளக்கூடாது. சமூகத்தில் கசப்பான மற்றும் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில், கல்லுாரிகளும், அனுபவம் மிக்க, திறமையான, மனசாட்சியுடன் தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்களை, பணிக்கு அனுப்ப வேண்டும்.இந்த ஆண்டுக்கான மறுமதிப்பீட்டில், எந்த பிரச்னைக்கும், சர்ச்சைக்கும் இடமின்றி, தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

போட்டோ வெளியிட கோர்ட் தடை


Added : ஆக 07, 2018 06:42

மதுரை: தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (பிரிஸ்ட் பல்கலை) டிரஸ்ட்மேலாண்மை அறங்காவலர் முருகேசன் மற்றும் அறங்காவலர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் இந்தியன் வங்கி கிளையில் கடன் வாங்கி, செலுத்தினோம். கடனை செலுத்தத் தவறியதாக போட்டோவுடன் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இது வங்கி விதிகளுக்கு முரணானது.போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கவேண்டும். எங்கள் ஆறு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறுகுறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு: மனுதாரர்களின் போட்டோக்களை வெளியிடக்கூடாது. கிளைமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.,20க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றது.
நிஜத்திடம் டிக்கெட் கேட்ட போலி ரயிலில் சிக்கினார் சென்னை வாலிபர்

Added : ஆக 07, 2018 01:13

வடமதுரை; முத்துநகர் ரயிலில், பரிசோதகரிடமே டிக்கெட் கேட்ட, 'போலி' பரிசோதகர் சிக்கினார். துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பெட்டியில் ரயில் டிக்கெட் பரிசோதகர் தோற்றத்தில் ஏறிய ஒரு வாலிபர், அங்கிருந்த, டி.டி.இ.,யிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், 'நானும் ஒரு டிக்கெட் பரிசோதகர்' எனக்கூறி, அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். வாலிபரும் ஒரு அடையாள அட்டையை காட்டியுள்ளார். மேலும் துறை சார்ந்த சில கேள்விகளை கேட்கவே வாலிபர் உளறிக்கொட்டினார். அந்த வாலிபரை பிடித்து, ரயிலில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், போலி, டி.டி.இ.,யாக நடித்தவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரமேஷ், 31, என்பதும், டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் பணி செய்வதும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 விமானிகள் நீக்கம் : டி.ஜி.சி.ஏ., அதிரடி

Added : ஆக 07, 2018 00:36


மும்பை: சவுதி அரேபியாவின், ரியாத் நகர விமான நிலையத்தில், 'டாக்சிவே' எனப்படும் இணைப்பு பாதையில் இருந்து விமானத்தை ஓட்ட முயன்ற, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் இரண்டு பைலட்டுகளின் உரிமத்தை, டி.ஜி.சி.ஏ., 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. கடந்த வாரம், மேற்காசிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், 148 பயணியருடன் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஓடு பாதைகளுக்கு இடையே உள்ள, டாக்சிவே எனப்படும் இணைப்பு பாதையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானத்தை, அங்கிருந்தபடியே மேலே செலுத்த, விமானிகள் முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஓடுபாதையில் நுழைந்த அந்த விமானம், நிலை தடுமாறி, பயங்கர சத்தத்துடன் அப்படியே நின்றது. இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணியர், உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், பயணியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளின் உரிமங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், நேற்று அறிவித்துள்ளது.
சித்தா படிப்பு, 'அட்மிஷன்' அடுத்த வாரம் விண்ணப்பம்

Added : ஆக 06, 2018 23:33

சென்னை: 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், அடுத்த வாரம் முதல், அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில் வினியோகிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், ஆறு அரசு சித்தா மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்கள் உள்ளன. அதேபோல, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,350 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங், 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக இருந்தது. பின், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.கடந்த, 2017ல் மாணவர் சேர்க்கைக்கு ஆக., 2ல், விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. நடப்பாண்டில், இதுவரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படவில்லை. சித்தா மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், பிளஸ் 2 அடிப்படையில் நடைபெறுவதால், 'அலோபதி' மருத்துவ படிப்பில், இடம் கிடைக்காத மாணவர்கள், சித்தா படிப்பிற்கு விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பம் வினியோகம், எப்போது துவங்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறுகையில், 'சித்தா மருத்துவ படிப்புகளுக்கான, தகவல் குறிப்பேடு மற்றும் விண்ணப்பம் வினியோகம் அச்சிடும் பணிகள் முடிந்துள்ளன. அடுத்த வாரம் துவக்கத்தில், சித்தா மருத்துவ கல்லுாரிகளில், விண்ணப்பம் வினியோகம் துவங்கும்' என்றனர்.***

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...