Tuesday, August 7, 2018

கருணை கொலைக்கு கதறிய ராணுவ வீரர்

Added : ஆக 07, 2018 01:10

சேலம்: உறவினர்கள் யாரும் கவனிக்க மறுப்பதால், தன்னை கருணைக் கொலை செய்யும் படி, போலீஸ் கமிஷனரிடம், முன்னாள் ராணுவ வீரர் கதறினார்.சேலம், அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 85; முன்னாள் ராணுவ வீரர். இவர், நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து, கதறி அழுதார். கமிஷனர் சங்கர், அவரிடம் விசாரித்தார்.கிருஷ்ணன் கூறியதாவது:என் தந்தை, தாசில்தாராக பணியாற்றியவர். நான் ராணுவத்தில் சேர்ந்து, சீனாவுக்கு எதிராக போரிட்டுள்ளேன். காஷ்மீரில் கடும் குளிரில், இரவு, பகல் பாராமல் பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பின், மதுரை கலெக்டருக்கு, கார் டிரைவராக பணிபுரிந்தேன். அப்போது, எனக்கு நீரிழிவு நோயின் அறிகுறி தென்பட்டதால், சேலம் வந்து விட்டேன்.நோய்க்கு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வரும் நிலையில், உறவினர்கள், எனக்கு உணவு தர மறுக்கின்றனர். நோயின் பிடியில் சிக்கி, தினமும் அவதியை சந்திப்பதால், என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.அவருக்கு ஆறுதல் தெரிவித்து, போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது:உங்கள் உறவினர்களுக்கு, தகவல் தெரிவிக்கிறோம். அவர்கள் அளிக்கும் தகவல்படி, உங்களை காப்பகத்தில் சேர்த்து, பராமரிக்க நடவடிக்கை எடுக்கிறோம். அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கிருஷ்ணனின் மகன் சுந்தருக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் வந்து, தந்தையை அழைத்தார். அவர், செல்ல மறுத்ததால், போலீசார் சமாதானம் செய்து, மகனுடன் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...