Tuesday, August 7, 2018

'முக்கிய கோவில்களுக்கு சுற்றுலா பஸ் இயக்கம்'

Added : ஆக 06, 2018 23:34

திருச்சி: ''திருச்சியிலிருந்து, பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது,'' என்று அமைச்சர் நடராஜன் தெரிவித்தார்திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:உள்நாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகை, தொடர்ந்து, நான்கு ஆண்டுகளாகவும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.மத்திய அரசின் பிரசாத் திட்டத்தில், தற்போது, காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இரண்டு சுற்றுலா தலங்களுக்கான மேம்பாட்டு நிதி அறிவிக்கப்படும் போது, திருச்சி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற்று, முக்கொம்பு, கல்லணை போன்ற சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.சுற்றுலா துறை சார்பில், திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து, ஏழுமலையான் கோவில் தரிசனம், தங்குமிடம் உள்ளிட்டவற்றுடன், தினமும் 150 பேர் சென்று வரும் வகையில், சென்னையிலிருந்து குறைந்த கட்டணத்தில், சுற்றுலா பஸ் இயக்கப்படுகிறது. அதே போல், திருச்சியிலிருந்து பல்வேறு முக்கிய கோவில்களுக்கு, விரைவில் சுற்றுலா பஸ் இயக்கப்பட உள்ளது.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...