Tuesday, August 7, 2018

2 விமானிகள் நீக்கம் : டி.ஜி.சி.ஏ., அதிரடி

Added : ஆக 07, 2018 00:36


மும்பை: சவுதி அரேபியாவின், ரியாத் நகர விமான நிலையத்தில், 'டாக்சிவே' எனப்படும் இணைப்பு பாதையில் இருந்து விமானத்தை ஓட்ட முயன்ற, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் இரண்டு பைலட்டுகளின் உரிமத்தை, டி.ஜி.சி.ஏ., 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. கடந்த வாரம், மேற்காசிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானம், 148 பயணியருடன் புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஓடு பாதைகளுக்கு இடையே உள்ள, டாக்சிவே எனப்படும் இணைப்பு பாதையில் நிறுத்தப்பட்டிருந்த அந்த விமானத்தை, அங்கிருந்தபடியே மேலே செலுத்த, விமானிகள் முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஓடுபாதையில் நுழைந்த அந்த விமானம், நிலை தடுமாறி, பயங்கர சத்தத்துடன் அப்படியே நின்றது. இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்த பயணியர், உடனடியாக பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம், பயணியர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த விமானத்தை இயக்கிய இரு விமானிகளின் உரிமங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக, டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமான போக்குவரத்து பொது இயக்குனரகம், நேற்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...