Tuesday, August 7, 2018

நிஜத்திடம் டிக்கெட் கேட்ட போலி ரயிலில் சிக்கினார் சென்னை வாலிபர்

Added : ஆக 07, 2018 01:13

வடமதுரை; முத்துநகர் ரயிலில், பரிசோதகரிடமே டிக்கெட் கேட்ட, 'போலி' பரிசோதகர் சிக்கினார். துாத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பெட்டியில் ரயில் டிக்கெட் பரிசோதகர் தோற்றத்தில் ஏறிய ஒரு வாலிபர், அங்கிருந்த, டி.டி.இ.,யிடம் டிக்கெட்டை காட்டும்படி கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், 'நானும் ஒரு டிக்கெட் பரிசோதகர்' எனக்கூறி, அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காட்டும்படி கேட்டார். வாலிபரும் ஒரு அடையாள அட்டையை காட்டியுள்ளார். மேலும் துறை சார்ந்த சில கேள்விகளை கேட்கவே வாலிபர் உளறிக்கொட்டினார். அந்த வாலிபரை பிடித்து, ரயிலில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், போலி, டி.டி.இ.,யாக நடித்தவர் சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரமேஷ், 31, என்பதும், டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக்கிங் பணி செய்வதும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 12.06.2026

  Staff dismissal only for grave violations like corruption: SC  Insubordination, Indiscipline Not Reasons Enough For Sacking’ Dhananjay.Mah...