Tuesday, August 7, 2018


போட்டோ வெளியிட கோர்ட் தடை


Added : ஆக 07, 2018 06:42

மதுரை: தஞ்சாவூர் பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (பிரிஸ்ட் பல்கலை) டிரஸ்ட்மேலாண்மை அறங்காவலர் முருகேசன் மற்றும் அறங்காவலர்கள் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் இந்தியன் வங்கி கிளையில் கடன் வாங்கி, செலுத்தினோம். கடனை செலுத்தத் தவறியதாக போட்டோவுடன் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இது வங்கி விதிகளுக்கு முரணானது.போட்டோவுடன் அறிவிப்பு வெளியிட தடை விதிக்கவேண்டும். எங்கள் ஆறு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறுகுறிப்பிட்டனர்.நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு: மனுதாரர்களின் போட்டோக்களை வெளியிடக்கூடாது. கிளைமேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆக.,20க்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்றது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...