Tuesday, August 7, 2018


வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியது: தேடும் பணி தீவிரம்
By DIN | Published on : 06th August 2018 11:42 PM

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியதையடுத்து அதை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூருலிருந்து 4 கழுதைப் புலிகள் கொண்டுவரப்பட்டு அவை ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒரு கழுதைப் புலி கூண்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது. இன்று மாலை கூண்டிலிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒரு கழுதைப் புலி காணாதது கண்டு உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை நேரில் பார்வையிட்டனர்.

பின் தப்பி ஓடிய கழுதைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அதனை சுற்றுயுள்ள பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது எனவே அதை கண்டறிவதற்காக நாளை செவ்வாய்கிழமை உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளனர். எனவே நாளை காலை முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...