Friday, March 27, 2015

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளைhttp://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள்http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர் கள், மேற்கூறிய இணைய முக வரியை பயன்படுத்தி, தங்களது பதிவு அடையாள அட்டையை பதி விறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிவு விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், உடனடியாக கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அடையாள அட்டை, ஆதார் எண், கைப்பேசி எண்/ இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள், வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். திருத்திய பதிவு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெட்டி ஒட்டும் கம்ப்யூட்டர்!



அபிமானத்துக்குரிய தங்கள் கதாநாயகன் இரட்டை வேடங்களில் நடித்தால் அதைக் கொண்டாடத் தவறியதில்லை ரசிகர்கள். அன்று எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இரட்டை வேடங்களில் நடித்தபோது இன்றைய அதிநவீனக் கம்போசிட்டிங் (compositing) தொழில்நுட்பம் இல்லை.

அன்று இரட்டை வேடங்கள் ஒரே காட்சியில் தோன்றுவதைப் படம்பிடிக்க நடிகரோடு தொழில்நுட்பக் குழுவும் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்து. உதாரணத்துக்கு ‘நாடோடி மன்னன்’ படத்தை எடுத்துக் கொள்வோம். எம்.ஜி.ஆர் ராஜா மார்த்தாண்டனாக ஒரு வேடத்திலும், அவரது ஆட்சியை எதிர்த்து மக்களாட்சி வேண்டும் எனப் போராடும் புரட்சியாளன் வீராங்கன் என்ற மற்றொரு வேடத்திலும் நடித்திருந்தார்.

இரண்டு கதாபாத்திரங்களும் சந்தித்துக்கொள்ளாதவரை பிரச்சினை இல்லை. ஆனால் இரண்டு கதாபாத்திரங்களும் சில காட்சிகளில் ஒன்றாகத் தோன்றியே ஆக வேண்டும் அல்லவா? இந்தப் படத்தை இயக்கி நடித்த எம். ஜி.ஆர். முதலில் மார்த்தாண்டன் தொடர்புடைய காட்சிகளையெல்லாம் படம்பிடித்துக் கொண்டார். பிறகு வீராங்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படம்பிடித்தார். இருவரும் தோன்றிய காட்சிகளை எப்படிப் படம்பிடித்திருப்பார்? அதற்கு அப்போது பயன்படுத்திய தந்திரம்தான் ‘ பிளாக் மாஸ்க்’.

நாடோடி மன்னனில் மார்த்தாண்டன், வீரங்கனுடன் கைகுலுக்கும் காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். செட்டில் எந்த இடத்தில் இரண்டு வேடக் கதாபாத்திரங்களும் நிற்கவேண்டும், அந்த ஷாட்டின் வடிவமைப்பு(shot composition) என்ன, அப்போது செட்டின் ஒளியமைப்பு என்ன என்பதையெல்லாம் ஒளிப்பதிவாளர் முடிவு செய்துவிடுவார்.

முதலில் மார்த்தாண்டன் வலப்புறம் நின்று கைகளை நீட்டி, எம்.ஜி.ஆருக்கான ஒரு டூப் வேஷ நடிகரின் கைகளைக் குலுக்குவார். இப்போது கேமராவின் கண்கள் என்று வருணிக்கப்படும் அதன் லென்ஸ் வழியே இந்தக் காட்சி பதிவாக வேண்டும். வீராங்கன் நிற்கப்போகும் இடப்பக்கம் கேமராவில் பதிவாகாமல் இருக்க வேண்டும். இதனால் கேமராவின் பார்வையை அதன் இடப்பக்கம் முழுவதையும் கருப்பு வண்ணக் காகிதத்தால் பாதி மறைத்துவிடுவார்கள்.

இப்போது மார்த்தாண்டன் நடிக்கும் ஷாட்டைப் படம்பிடித்துவிடுவார்கள். ஷாட் பதிவாகி முடிந்ததும் கேமராவில் மறைக்கப்பட்ட பகுதியானது பிலிமில் எதுவும் பதிவாகாமல் அப்படியே நெகட்டிவாக இருக்கும். இப்படி எடுக்கப்பட்ட முதல் ஷாட்டில் எத்தனை பிரேம்கள் படம் பிடிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை பிரேம்களை பிலிம்ரோலில் ரிவர்ஸ் செய்து சரியான முதல் பிரேமில் ‘க்யூ’ செய்து வைப்பார்கள். இம்முறை மார்த்தாண்டன் நின்றிருந்த இடத்தை கேமரா பதிவு செய்யாமல் இருக்க கேமராவின் மற்றொரு பாதி கருப்புக் காகிதத்தால் மறைக்கப்பட்டுவிடும்.

வீராங்கன் நிற்க வேண்டிய இடப்புறத்தில் மேக் அப்பை மாற்றிக்கொண்டு எம்.ஜி. ஆர். வீராங்கன் தோற்றத்தில் நிற்பார். டூப் நடிகர் கைகுலுக்கியபோது ஒளிப்பதிவாளர் குறித்துக் கொண்ட அதே இடத்தில் நின்று வீராங்கனாக நடிப்பார். இப்போது ஒரே பிலிமில் ஒரே நடிகரால் நடிக்கப்பட்ட இரண்டு வேடக் காட்சி தயார்.

இந்தக் கடின முறையை நவீன கம்போசிட்டிங் முறை சுலபமாக்கிவிட்டது. உடலோடு ஒட்டிப்பிறந்த இரட்டைக் கதாபாத்திரங்களில் மாற்றன் படத்தில் சூர்யா நடித்திருந்தார். அவர் அந்தப் படத்தில் ஏற்றிருந்த அகிலன், விமலன் ஆகிய கதாபாத்திரங்களின் குணாதிசயம் வெளிப்படும்படி, உடல்மொழி, வசன உச்சரிப்பு இரண்டிலும் வேறுபாடு காட்டி இரண்டு கதாபாத்திரங்களையும் சிறப்பாக நடித்திருந்தார் என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். உண்மையில் நவீன கம்போசிட்டிங் முறை தரும் வசதியால் சூர்யா இதைச் சுலபமாகச் செய்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்.

முதலில் ஒரு கதாபாத்திரத்தை அதற்குரிய அத்தனை காட்சிகளிலும் நடித்து முடித்துவிட்டார் சூர்யா. பிறகு மற்றொரு வேடத்திற்கு சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் இந்த இரட்டையர் வேடங்கள் இடம்பெறும் எல்லா காட்சிகளும் ‘கிரீன் மேட்’ பின்னணியில் பச்சை வண்ணத் துணியை செட்டின் பின்புலத்தில் கட்டி படம் பிடிக்கப்பட்டன.

எதற்காக இந்தப் பச்சை வண்ணத் திரையின் பின்னணியில் இவர்கள் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன? வேறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை, அல்லது காட்சிகளை வெட்டி ஒட்டவே இந்த பச்சை வண்ணப் பின்னணி பயன்படுகிறது.

அது எப்படி என்பதை எப்படி அடுத்த பகுதியில் எளிமையாகப் புரிந்துகொள்வோம். அப்போது தசாவதாரம் கமலும் ஸ்பைடர்மேனும் நமக்குத் துணையாக வருவார்கள்.

படங்கள் உதவி: ஞானம்

இனி புகைப்படங்களில் மட்டும்!- சாந்தி திரையரங்கம்

உலகத் திரையரங்குகள் தினம்: மார்ச் 27
அடையாளம்


சென்னை, அண்ணா சாலையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவாக்கிய சாந்தி திரையரங்கம். ஐம்பது ஆண்டுகளைக் கடந்து ரசிகர்களுக்கு இளைப்பாறுதல் அளித்து வந்தது. இத்திரையரங்கை இனி ரசிகர்கள் காண முடியாது. தற்போதிருக்கும் திரையரங்கம் விரைவில் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் பிரம்மாண்ட வணிக வளாகத்துடன் கூடிய மல்டி பிளக்ஸ் திரையரங்காக மாற இருக்கிறது.

தொடக்க விழாவில்

1961-ல் அன்றைய முதல்வர் காமராஜரால் பொங்கல் திருநாளில் திறந்து வைக்கப்பட்ட இத்திரையரங்கம் சென்னையின் முதல் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டது என்ற பெருமைக்குரியது.


பொக்கிஷ கவுண்டர்

மற்ற திரையரங்குகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று சாந்தி திரையரங்கிற்கு உண்டு. ஒரு சிறு அருங்காட்சியகம் போலச் சிவாஜி நடித்த படங்களின் பட்டியல் அங்கே ஒரு கல்வெட்டாகப் பதிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாழ்வில் முக்கியப் பிரமுகர்களுடன் சிவாஜி இருக்கும் புகைப்படங்கள், ரசிகர்கள் அவருக்கு வழங்கிய ஓவியங்கள் எனப் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்குப் போனஸ் விருந்தாக இருந்து வருகின்றன. இங்கே நீங்கள் பார்ப்பது மரத்தினால் செய்யப்பட்ட பழைய டிக்கெட் கவுண்டர். தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது.


பாவ மன்னிப்பு

சிவாஜியின் திரையரங்கில் வெளியான முதல் திரைப்படம் அவர் நடித்தது அல்ல என்பது ஆச்சரியமளிக்கும் செய்தி. ஏ. சுப்பாராவ் இயக்கத்தில் நாகேஸ்வரராவ், சாவித்திரி நடித்த ‘தூய உள்ளம்’ என்ற படமே திரையிடப்பட்டது. பிறகு சிவாஜி நடித்த ‘பாவமன்னிப்பு’ உட்பட அவரது பல படங்கள் இங்கே வெள்ளி விழா கண்டிருக்கின்றன. சிவாஜியின் மகன் பிரபு நடித்த ‘சின்னத் தம்பி’ 205 நாட்கள் இங்கே ஓடியிருக்கிறது.

தற்போது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் படங்கள் இந்தத் திரையரங்கை ஆக்கிரமித்து விடுகின்றன. இங்கே நீங்கள் பார்ப்பது புரொஜெக்டர் அறை. அங்குள்ள சதுரத் துளை வழியே தெரியும் திரையிடல்.


ரசிகர்களின் அன்பு

சிவாஜியின் ரசிகர்கள் அவருக்கு அன்புடன் வழங்கிய பல ஓவியங்களில் ஒன்று இது. சிவாஜி, கணேசன் ஆகிய இரண்டு பெயர்களின் அர்த்தமும் விளங்கும் விதமாக வரையப்பட்ட ஓவியம்.


அலுவலகம்

திரையரங்கில் இருக்கும் சிவாஜியின் அலுவலக அறையில் அவருக்குப் பிறகு அவரது வாரிசுகள் எந்த மாற்றத்தைச் செய்யவில்லை. இன்றும் இதை விரும்பிப் பார்க்கத் திரையுலக ஆர்வலர்கள் வந்து செல்கிறார்கள்.
படங்கள்: ம.பிரபு

INDIAN NURSING COUNCIL CIRCULAR DATED 23.3.2015


Medical PG Classes to Begin by May 30 as per MCI Schedule

The New Indian Express
26th March 2015

COIMBATORE: The Medical Council of India (MCI) has drawn up a common admission schedule for postgraduate medical and dental courses based on a Supreme Court order, according to which classes should begin on May 30. The court has accepted the schedule.

The Supreme Court had given directions in this regard to the MCI and and the Director General of Health Services (DGHS) while hearing a petition seeking a schedule for all-India and state counselling for admissions to postgraduate medical and dental courses for the 2015-16 academic year.

According to the MCI schedule, the first round of counselling for the all-India quota should be held between March 1 and 4 and state quota counselling completed by April 5.

The second round for the all-India quota should be between April 10 and 16 and for state quota between April 29 and May 3.

The third round for the all-India quota should be between May 9 and 19 and for state quota between May 31 and June 4.

The classes should commence from May 30.

The Supreme Court directed all states to implement the schedule in letter and spirit. It also said that it was time for the MCI and DGHS to frame the 2016-17 schedule. A specific schedule should be followed so that such controversies do not reach the court every year. “All the states are bound to cooperate with the aforesaid authorities, failing which serious view shall be taken,” the court said.

In view of the Supreme Court order, MCI Secretary Reena Nayyar has asked state health secretaries and directors of medical education and deans of medical colleges to strictly follow the schedule.

TN GOVERNMENT SERVANTS SALARY FOR THIS MONTH ON APRIL 6TH...DINAMANI


ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்

ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆஜராகி சான்றுகளை சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சான்றுகளை வழங்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராக இயலாதவர்கள் வாழ்வுச் சான்றுடன் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

நேரில் வருபவர்கள்: ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண்,வங்கி வரவு புத்தகம்,வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்: வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்கூறிய 5 ஆவணங்களின் நகல்களுடன், சான்றொப்பம், மறுமணம் புரியா சான்று உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்: வெளிநாட்டிலுள்ள மாஜிஸ்திரேட்,நோட்டரி, வங்கி மேலாளர், இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

இதர விவரங்கள்: ஓய்வூதியர்கள் இருப்பிட முகவரி, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் ஜூன் மாதத்துக்குள் வர தவறிய ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் மாதிரிப் படிவத்தை www.tn.gov.in/karuvoolam என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பொதுத் துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழக மின்வாரியம், ரயில்வே துறை,அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sorrowful fans watch Team India exit

PUNE: After high expectations, came the great disappointment. Traffic on the usually busy city roads, which was thin since morning, remained so even after it became clear that India had surrendered the cup. Traffic on social networking sites, however, picked up as fans trolled the cricketers.

Many supporters took the humour route on Twitter to vent their frustration. The #WontGiveItBack made way for 'Maybe now #we_will_give_it_back'.

Inside college cafeterias, the volume of televisions telecasting the India-Australia match was turned up all the way, but on Thursday, cheers that usually drown out commentary were few and far between.

Halfway through the Indian innings, the crowd had started thinning out and when the last partnership anchored by Mahendra Singh Dhoni ended with his run-out, Aishwarya Ingle and her friends decided to leave as well.

"There really is no point in watching this match anymore. We have exams coming up, but we had all come down to watch it together. It has been a disappointment," she said as she walked away, leaving only a handful of spectators behind.

"It is not a good feeling. We should have fought for the win. We had hoped for a close game for the semi-final, but this was most disappointing," said Amit Jambhekar, an IT professional who had called all his friends over to his place so that they could cheer India on.

Disappointed cricket fans, many of whom had made arrangements hoping to watch Team India in the finals, had to change plans for Sunday.

"We had booked a table at a sports lounge for the final match. Some of our friends were coming from Mumbai to watch the match, but now we have cancelled those plans," said Rishabh Mehta, a college student. He still commended India's performance in the tournament so far.

Manoj Singh, a businessman, had arranged for a party at his house on Sunday so that everyone could watch the match. "The party is still on, just that we won't be watching India play. We would have enjoyed more if India were playing, but nevertheless they played well," he said.

Others still plan to watch the final match, many of them rooting for New Zealand to lift the trophy. "It won't be the final we had hoped for, but New Zealand have made it to a World Cup final for the very first time. I'm backing them for the match on Sunday," said Abbas entrepreneur Patwa.

Some optimists looked further into the future, taking solace in the unbeaten track record of the Indian team until their semi-final encounter.

"After watching all the matches and the brave show put up by our team in the semi-final, I strongly feel that our chance of winning the next World Cup is very high. My expectation is definitely high. I am not disappointed, but have become more optimistic for the Indian team now," said Shailesh Sant, a software professional, who got together with teammates of a cricket club that they play for.

Thursday, March 26, 2015

Fare to next station cheaper than platform ticket

Hubballi: Starting April 1, Rs 10 will get you entry to Hubballi railway station platform, while Rs 5 will take you to Unkal, 20km away. Or Kundgol. Or Kusugal. That's the minimum fare on an unreserved ticket.

People chary of paying up Rs 10 for a few minutes of farewells on the platform, have already found a way to get paisa-wise: buy a general ticket for Rs 5, spend time on the platform with family and walk coolly out of the station - Rs 5 saved.

Such shades of Scrooge are apparent among our folk who are looking to take advantage of an option provided, wittingly or otherwise, by the railway ministry itself.

The railway ministry has decided to increase the rate of platform tickets from Rs 5 to Rs 10 from April 1. It has also allowed divisional railway managers to increase the platform ticket rate beyond Rs 10 for occasions like fairs, rallies and festivals, the intention being to control the rush on platforms.

Passengers have been quick to spot the irony of the situation - that the minimum fare for ordinary trains is Rs 5, 50% less than the proposed rate of a platform ticket. They also know that no one can object to them walking on to the platform, armed with a ticket for Rs 5 - it may be unethical but perfectly legal, and probably happens only in India. Receiving family members and saying goodbyes is a deep-rooted Indian travelling tradition which few violate.

A clerk at Hubballi station recalled that this was happening regularly till October 7, 2013, when the minimum journey fare was Rs 3 and the platform ticket rate was Rs 5. "When the minimum fare was raised to Rs 5, on par with a platform ticket, visitors started buying platform tickets. Now it will be back to square one," he said.

A lady clerk, who worked at Bengaluru City station earlier, said this is common in the metro too. Passengers buy a ticket to Malleswaram, Cantonment or Nayandahalli stations for Rs 3 to evade paying Rs 5 for a platform ticket. "This was the general fare for ordinary trains then," she recalled.

As unreserved tickets can be bought only an hour before the train arrives, passengers have found a way out of such tight situations too: they buy tickets for any ordinary train headed in any direction, at any time.

Naveen Parapur, a construction worker in Hubballi, recalled that he often bought tickets to Unkal, Kusugal or Kundgol -- stations on Hubballi's outskirts but on different routes - for Rs 3 just to reach the platform. "I will do this now too. I will certainly not buy a platform ticket for Rs 10," Naveen said.

Mahendra Singhi, member of the Divisional Railway Users' Consultative Committee, said the ministry's move lacks practical sense. "The ministry itself is promoting this unethical practice. Seeing off and receiving family is our tradition, the ministry should look on it as a service rather than as a commercial opportunity. It should maintain the same fare for platform tickets or reduce it," he felt.

CANNOT TAKE ACTION

It has come to our notice that the minimum journey fare is less than the proposed rate of the platform ticket. As journey tickets are given one hour before the arrival of a particular train, visitors cannot buy such tickets all the time. If they do this to evade buying platform tickets, they cannot be prosecuted according to the existing guidelines.

Pradeep Kumar Saxena | General Manager, South Western Railway, Hubballi

MBBS students who left midway can resume course

MBBS students who could not complete their under-graduate medical course in due time can complete their course from the point where they had left the course. The only requirement is 75 per cent attendance in a subject for appearing in the examination.

Interestingly, the Medical Educations Regulation do not provide for any time-limit in which the MBBS course is required to be completed. Hence, for an MBBS student, owing to an exigency/exceptional circumstances has left the course in between, is permitted to resume his studies from the point from where he had left the course.

“The course can be completed by him after meeting the attendance requirement. In this regard, no duration for the gap period is required to be provided for, as the regulations do not prescribe the time duration in which the MBBS course of four and a half years with an additional internship of one year is required to be completed,” reads the regulation.

The only requirement is 75 per cent compulsory attendance inclusive of attendance in non-lecture teaching i.e. seminars, group discussions, tutorials, demonstrations, practicals, hospital (tertiary, secondary, primary) posting and bed side clinics.

While, in the recent executive committee meeting it was decided that a policy is needed to be formulated regarding joining/re-admission of candidates to MBBS course for which a legal opinion on what should be the duration of the leave allowed should be sought. The committee has given permission to three students to resume their studies after they availed long leaves. “As such the concept of leave of any kind whatsoever is not envisaged in the MBBS course,” reads the minutes of the meeting.

The executive committee of the council observed the matter with regard to re-admission of one George Nisha T.K. George, Jubilee Mission Medical College & Research Institute, Thrissur, after long leave was placed before the executive committee of the council.

The committee decided to allow Ms George Nisha T.K. in the MBBS course since she was admitted to final MBBS course during 2013 after availing long leave on medical grounds.

“Further, the executive committee of the council decided to allow the application of these three candidates and permit them to resume their studies,” it adds further.

டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனங்கள் தீப்பிடிக்கும் அபாயம்!


சென்னை: வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், ''கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. சென்னை உள்பட பல நகரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில், பெரும்பாலான இருசக்கர வாகனங்கள் திறந்த வெளியில் கடும் வெயிலில் தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தால், கடுமையான வெப்பம் காரணமாக டேங்க் வெடிக்கவும், தீ பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே டேங்க் முழுவதும் பெட்ரோல் நிரப்புவதற்கு பதிலாக அரை அல்லது முக்கால் டேங்க் பெட்ரோல் நிரப்பி மீதி காற்று நிரம்பி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இதுதான் கடைசி உலகக்கோப்பை போட்டியா? - தோனி பதில்




சிட்னி: எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு  2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

உல கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியாவும்-ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் இந்தியா தோல்வி அடைந்தது.

இதன் பிறகு இந்திய அணியின் கேப்டன் தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆஸ்திரேலியா 350 ரன்கள் வரை எடுக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், நாங்கள் அதை கட்டுப்படுத்தினோம். 300 ரன்களுக்கும் மேலான இலக்கை துரத்துவது என்பது கடினமானதுதான்.

உலகக் கோப்பையில் எங்கள் அணியின் ஆட்டம் திருப்தி அளிக்கக் கூடியதாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும்போது, இந்த அணியின் மீது பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

ரஹானே இந்தத் தொடரில் முன்னேற்றம் அடைந்த ஒரு வீரர் என்று நிச்சயம் கூற வேண்டும். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் என்று அவர் நல்ல மேம்பாடு அடைந்துள்ளார்.

ரசிகர்களுக்கு நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இந்தியாவிலிருந்தும், ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு அளித்துள்ளனர். எங்களுடன் பயணித்த ரசிகர்களுக்கு நன்றி. ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்” என்றார். 

‘இதுதான் உங்களது கடைசி உலகக்கோப்பையா?’ என்று கேட்டதற்கு, ''எனக்கு இப்போது 33 வயதுதான் ஆகிறது. நல்ல உடல்தகுதியுடன் இருப்பதோடு, நன்றாக விளையாடியும் வருகிறேன்.

அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. அந்தப் போட்டித் தொடர் முடிந்த பிறகு  2019 உலகக்கோப்பை போட்டி குறித்து யோசிக்கலாம். இப்போதைக்கு எதுவும் கூற முடியாது'' என்றார்.

அடக்கொடுமையே...இந்தியா வெற்றி பெற நாக்கை அறுத்துக்கொண்ட வாலிபர்!





வேலூர்: இன்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என வேண்டி வாலிபர் ஒருவர் நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி எதிர்கொண்ட நிலையில், ஆட்டத்தின் போக்கு தொடக்கத்திலேயே இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பை மங்கச் செய்தது.

இந்நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த தீவிர கிரிக்கெட் ரசிகரான சுதாகர் என்ற வாலிபர், இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண்டி, போட்டி தொடங்குவதற்கு முன்பே, கோவிலுக்கு சென்று தனது நாக்கை அறுத்துக்கொண்டார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் சுதாகரால் இனிமேல் பேச முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பேச முடியாத நிலையில் இருக்கும் சுதாகருக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவருடைய தம்பி ராஜீவ்காந்தி நம்மிடம் கூறுகையில், " அண்ணனுக்கு கல்யாணம் ஆகி இப்பதான் ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு. அவரு பெருசா ஒண்ணும் படிக்கலை 5வது வரைக்கும்தான் படிச்சிருக்காரு. ஆனா கிரிக்கெட்டுனா ரொம்ப உசுரு. இன்னைக்கு காலைல ஊர்ல இருக்குற வேடியப்பன் கோயிலுக்கு கற்பூரம் ஏத்திட்டு சாமி கும்பிட்டு வர போய்ட்டிருந்தார்.

அங்க போனவரு சாமிக்கு கற்பூரம் ஏத்திட்டு கத்தியால நாக்கை அறுத்து சாமிக்கு வேண்டுதல் செஞ்சி இருக்காரு.வலி தாங்க முடியாம ஒரு வீட்டுக்கு போன் பண்ணி பேச பாத்திருக்கார். அவரால பேச முடியல. உடனே பக்கத்துல இருந்த ஒரு பெண்மணிகிட்ட போனை குடுத்து சைகையால சொல்லி பேசச் சொல்லி இருக்கார். தகவல் தெரிஞ்சு ஓடி வந்து பார்த்தப்ப நாக்கு தனியே கோயில்ல கிடந்துச்சு. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம்.

இனிமே ஜென்மத்துக்கும் பேச்சு வர வாய்ப்பு இல்லைனு சொல்லி வாயில தையல் போட்டிருக்காங்க.ஏன் இப்படி பண்ணேனு கேட்டேன். பேச முடியாம கிரிக்கெட் பௌலிங் போடுவது போலவும், பேட்டிங் செய்வது போலவும் சைகை காட்டி சாமி கும்பிட்டு காட்டுனார். இந்தியா ஜெயிக்கணும்னு இப்படி பண்ணுனியான்னு கேட்டேன். ஆமான்னு தலையை ஆட்டி அழுதார்.

இந்த அளவுக்கு கிரிக்கெட் ரசிகரா இருப்பாருன்னு நினைக்கல’’’ என்றார் பதட்டத்துடன்.

நாக்கை அறுத்துக் கொண்ட இந்த சுதாகருக்கு, இன்று இந்தியா தோற்றது தெரியாதாம். நம்மிடமும் சைகை காட்டிக் கொண்டிந்தார்.அவரிடம் உண்மையை சொல்லாமல் கிளம்பிவிட்டோம்.

எப்படியெல்லாம் பண்றாங்கப்பா!

-சு. ராஜா (மாணவப் பத்திரிகையாளர்)

படம்: ச.வெங்கடேசன்

STARTING OF NEW MEDICAL COLLEGE FROM 2016-17 AT KARUR DISTRICT SUBJECT TO APPROVAL BY MEDICAL COUNCIL OF INDIA /GOVT. OF INDIA







தமிழை மதித்த பிரதமர்!

இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1955 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவை சிங்கப்பூர் - மலேசிய நாடுகளுக்கு வருமாறு அந்த நாடுகளிலிருந்த தி.மு.கழக நிர்வாகிகள் பலர் நேரடியாகவும் கடிதங்கள் மூலமாகவும் வேண்டியபடி இருந்தனர்.

அங்கிருந்த தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களான சாரங்கபாணி ("தமிழ் முரசு'), செல்வக்கணபதி ("தமிழ் மலர்'), முருகு சுப்பிரமணியன் ("தமிழ் நேசன்') மற்றும் பொது வாழ்வில் பெரும் பங்குபெற்ற திருப்பத்தூர் வள்ளல் ரெங்கசாமி போன்ற பிரமுகர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வேண்டுகோள்களை அனுப்பியபடி இருந்தனர்.

சிங்கப்பூர் - மலேசியப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை ஒட்டி, தமிழ்நாட்டின் பத்திரிகைகளும் தத்தம் போக்கில் எழுதிவிட்டன.

அண்ணா தமது "திராவிட நாடு' இதழில் "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' என்ற தலைப்பில் தமிழ் இலக்கியத்தில் புதியதொரு பகுதியை ஆரம்பித்தார்.

8-5-1955 அன்று வெளிவந்த அதன் முதல் இதழிலேயே "காகிதக் கப்பலில் கவனம் செலுத்தாதே தம்பி' என்கிற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில், பத்திரிகைகளில் வந்த செய்திகளை ஒட்டி தி.மு.கழகத்தின் முன்னுள்ள பெரும் பொறுப்புகளையும் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வலியுறுத்திவிட்டு, தமது சிங்கப்பூர் - மலேசியப் பயணத்தையும் குறிப்பிட்டு விட்டார்.

முதலில் வந்த செய்திகளின்படி 1955-இல் அண்ணாவின் பயணம் அமையவில்லை. பத்து ஆண்டுகள் கழித்து 1965 ஜூன் மாதத்தில்தான் அமைந்தது.

1965 ஏப்ரல் மாதத்திலேயே அண்ணாவின் வெளிநாட்டுப் பயணத்துக்கான ஏற்பாடுகளை நான் துவக்கி விட்டேன். பாஸ்போர்ட், விமானத் தொடர்புகள், வெளிநாட்டு நாணய அனுமதிகள் எல்லாம் பெற்று விட்டேன்.

அண்ணாவின் பெயரைக் கேட்டதுமே எல்லா இடங்களிலும் நிர்வாகிகளும் அதிகாரிகளும் உற்சாகத்துடன் தேவையான உதவிகளைச் செய்தனர்.

சிங்கப்பூர் - மலேசிய நாடுகளில் பல ஊர்களின் அண்ணாவுக்கு அழைப்புகள் இருந்தன. தமிழ்நாட்டிலேயே அண்ணாவின் சுற்றுப்பயணம் நேரப்படி நடப்பதில்லை. ஒரு தடவை அண்ணா "தொழுதூர் வந்நோம் பொழுது விடிந்தது' என்று எழுதினார்.

சிங்கப்பூர் - மலேசிய நண்பர்களுக்கு நான் முன் கூட்டியே கடிதம் எழுதி விட்டேன். ஒவ்வொரு நாளும் அண்ணா காலை 10 மணிக்கு மேல்தான் எழுந்திருப்பார். பெரும்பாலும் பிற்பகல் 4 மணிமுதல் 8 மணிவரை கூட்டங்கள் நடத்தலாம். இரவு 10 மணிக்குள் அண்ணா தங்குமிடத்திற்கு வந்துவிட வேண்டும். முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களைத் தவிர மற்ற எந்த நிகழ்ச்சியும் இடையில் சேர்க்கப்படக்கூடாது.

முதலாவதாக, 1965 ஜூலை 16 அன்று சிங்கப்பூர் செல்வதாக இருந்தது.

எங்கள் நண்பர்கள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவைச் சந்தித்தாகவும், அண்ணாவின் கூட்டத்துக்கு தலைமை வகிக்க உற்சாகத்துடன் அவர் ஒப்புக் கொண்டதாகவும் எங்களுக்குத் தெரிவித்தார்கள்.

பிரதமரே தலைமை வகிப்பதால், அண்ணா பேசுவதற்கு ஏற்ற இடமாக "சாலான் பசார்' என்ற பெரிய மைதானம் ஒதுக்கப்பட்டது. அண்ணாவின் வருகையை அறிந்து சிங்கப்பூர் நகரமே குதுகலமானது.

அண்ணாவை வழியனுப்ப சென்னை விமான நிலையத்திற்கு தி.மு.கழகத் தலைவர்கள் பலரும் வந்திருந்தனர் கழகத் தோழர்கள் தந்த மாலைகளும் கைத்தறி ஆடைகளும் மலைபோல் குவிந்து விட்டன.

விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் நெடுஞ்செழியன் என்னை அழைத்து, மலேசியாவிலிருந்து அண்ணாவுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை தந்து, "நான் சிங்கப்பூர் நண்பர்களிடம் பேசிவிட்டேன், கவலைப்பட வேண்டாம்' என்றார்.

விமானம் புறப்பட்டதும் அண்ணா அவர்கள் என்னிடமிருந்த கடிதத்தைப் பார்த்து முதலில் மிகவும் கவலைப்பட்டார். ஆனால், சிங்கப்பூர் விமான நிலையத்தில் கூடியிருந்த கூட்டம் அண்ணாவுக்கு ஆரவாரமான வரவேற்பைத் தந்தது.

அன்று மாலை "சாலான் பசான்' மைதானத்தில் கூட்டம் நடந்தது. பிரதமர் லீ குவான் யூ தலைமை வகித்து அதற்கு முன்னர் 1965-இல் பாங்காங் நகரில் அணிசாரா மாநாட்டுக்குச் சென்ற அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிங்கப்பூரில் பெரிய கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு அது போன்ற பெரியதொரு கூட்டம் அண்ணா கலந்துகொண்ட கூட்டம்தான்.

லீ குவான் யூ 30 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்தார். அவர் பிரதமர் ஆவதற்கு முன்பு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை அவர் ஒரு மாபெரும் பொருளாதார, ஜனநாயக நாடாக மாற்றினார்.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் சீனர்கள் 77 விழுக்காடு, மலாய் இனத்தவர்கள் 14 விழுக்காடு, தமிழர்கள் 6 விழுக்காடு இருந்து வருகிறார்கள்.

ஆயினும், சிங்கப்பூர் ஆட்சிமொழிகளாக சீனம், மலாய், ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் பிரதமர் லீ குவான் யூ அரசமைப்புச் சட்டத்தை வகுத்தார்.

அண்ணாவை வரவேற்றவர், தமிழுக்கு மிகவும் மதிப்புத் தந்தவர் லீ குவான் யூ. அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழர்களாகிய நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

பலிகடா ஆசிரியரா?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஆசிரியர்கள் அங்கே தேர்வறைக் கண்காணிப்பாளர்
களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.
இவ்வாறான சூழல் உருவெடுத்தமைக்கு கல்வி வணிகமய
மானது மட்டுமன்றி, கல்வித் துறையும்கூட ஒரு முதன்மைக் காரணம் என்பதால், கல்வித் துறை இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெரும்பாடுபடுகிறது.
உடனடியாக கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு என்னவென்றால், ஒரு தேர்வுக்கூடத்தில் ஒரு மாணவர் காப்பியடிப்பதை அந்த அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடிக்காமல் வேறு யாராவது கண்டுபிடித்தாலோ அல்லது பறக்கும்படை கண்டுபிடித்தாலோ அந்த அறையின் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது .
ஒரு மாணவன் காப்பியடிப்பதை அனுமதிக்கும் அறைக் கண்
காணிப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மேலும், ஓர் அறைக் கண்காணிப்பாளர் அவ்வாறு காப்பியடிக்க அனுமதிக்கிறார் என்பதை மாணவர்கள் வெளியே வந்தவுடனே பகிர்ந்துகொள்வார்கள். இத்தகைய அறைக் கண்காணிப்பாளர்கள் மீது கூடுதலாக கவனம் செலுத்த, கல்வித் துறை இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வின்போது முதல்முறையாக தேர்வு நடைபெறும் பள்ளிகளில் புகார் பெட்டி வைத்திருக்கிறது. இதில் மாணவர்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். குறிப்பிட்ட அறையில் இன்று அறைக் கண்காணிப்
பாளராக இருந்தவர் குறிப்பிட்ட மாணவருக்கு உதவி செய்தார் என்றோ அல்லது விடைகளைச் சொல்லித் தந்தார் என்றோ புகார் செய்ய முடியும். இவ்வாறான ஒரு நல்ல நடைமுறையை அறிமுகம் செய்திருக்கும் கல்வித் துறை, நடைமுறை சாத்தியமில்லாத தடலாடி உத்தரவுகளையும் போடுகிறது.
இன்றைய பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கிறார்களே தவிர, ஆசிரியர்களுக்கு ஆதரவாக இல்லை. ஒரு மாணவன் விடைத்துணுக்குகள் வைத்திருக்கிறானா என்பதைப் பரிசோதிக்கும் உரிமையை ஆசிரியர்கள் இழந்துவிட்டார்கள். நீ பனியனுக்குள் என்ன வைத்திருக்கிறாய், சட்டையை கழற்று என்று சொன்னால், மாணவரை மற்றவர்கள் முன் அசிங்கப்படுத்தியதாக நீதிமன்ற வழக்குத் தொடுக்கும் நிலைமை உள்ளது.
ஒரு மாணவன் விடைத்துணுக்களை வெளியே எடுக்கும் வரை, அவன் வைத்திருந்தானா என்பது அந்த அறைக் கண்காணிப்பாளருக்கும்கூட தெரியாது. ஓர் அறையில் குறைந்தது ஐம்பது மாணவர்கள் தேர்வு எழுதும்போது, ஒரு மாணவன் இத்தகைய விடைத்துணுக்கை எடுக்கும் ஒரு கணம் என்பது கண் மறைக்கும் நேரம்தான். இதற்காக, அறைக் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்வது என்று தொடங்கினால், அறைக் கண்காணிப்பாளராகப் பணியாற்ற யாருமே முன்வர மாட்டார்கள்.
மேலும், அறைக் கண்காணிப்பாளர்கள் இத்தகைய மாணவர்
களைக் கண்டுபிடிக்கும்போது அந்த மாணவர்கள் மிரட்டவும் செய்கிறார்கள் என்பதையும் கல்வித் துறை உணர வேண்டும்.
நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதற்கான தீர்வைக் காண வேண்டுமே தவிர, இவ்வாறான அதிரடி உத்தரவுகள் தேவையில்லாத எதிர்ப்புகளையே கொண்டு வந்து சேர்க்கும்.
தேர்வு அறைக் கண்காணிப்பிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். மாணவர்களின் நடவடிக்கை மட்டுமன்றி, அறைக் கண்காணிப்பாளரின் நடவடிக்கையும் அதில் பதிவாகும். புகார் பெட்டியில் ஆசிரியர் குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தாலோ அல்லது தாக்குதலுக்கு அஞ்சிய ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட மாணவர் குறித்து புகார் தெரிவித்திருந்தாலோ, அந்த அறை கேமரா மூலம் மாணவன், ஆசிரியர் நடவடிக்கையை மீட்டெடுத்து நட
வடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நவீன முறைகள்தான் இன்றைய தேவை. அதிரடி உத்தரவுகள் அல்ல.
மாணவர்கள் காப்பியடிக்கக் காரணம் படிக்கவில்லை என்பதுதான். எந்த மாணவர்கள் படிக்கவில்லை, எந்த மாணவர்களுக்கு போதுமான வருகைப் பதிவு இல்லை, அவர்களை பொதுத் தேர்வுக்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஒரு வரன்
முறையை - ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வு நடத்துவது போல- கல்வித் துறை உருவாக்க வேண்டியதும் அவசியம்.
75% வருகைப் பதிவு இல்லை என்ற காரணத்துக்காக சீர்காழி அரசு மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியை 6 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி, 100% தேர்ச்சிக்காக எங்கள் குழந்தைகளை வேண்டுமென்றே தடுத்துவிட்டார் என்று கூறியதால், அந்தப் பள்ளியில் மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களைக் கட்டுப்படுத்துவதுபோய் ஆசிரியர்களின் கரங்கள் கட்டுண்டு இருக்கும் அவலம் மாற வேண்டும்.
மக்கள் அல்லது பெற்றோரின் கோபத்தை தணிக்கும் நட
வடிக்கை தாற்காலிகமானது. நிரந்தரமான தீர்வுக்கு கல்வித் துறை தன்னை முதலில் திருத்திக்கொள்ள வேண்டும். அறைக் கண்
காணிப்பாளர் பலிகடாவாக்கப்படுவது ஏற்புடையதல்ல.

எம்.பி.பி.எஸ். என்பதற்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கொடுமை கைதான போலி டாக்டர் தம்பதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்



சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள போலி டாக்டர் தம்பதி பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.பி.பி.எஸ். என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

போலி டாக்டர் தம்பதி

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த போலி டாக்டர் தம்பதி ஆனந்தகுமார், நிர்மலா சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலி டாக்டர் வேடம் போட்டதோடு, சென்னை மாநகராட்சி கமிஷனர் தங்களது குடும்ப நண்பர் என்றும், அவர் மூலம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாக ஏராளமான பேரிடம் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி உள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற படிப்புகள் பற்றி இருவரிடமும் போலீசார் கேட்டபோது, அந்த வார்த்தைகளின் அர்த்தம் கூட இவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் டாக்டர் வேடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி, மாத்திரை கொடுத்து சிகிச்சை அளித்துள்ளனர். எந்த வகை நோயாளி வந்தாலும், இவர்கள் கொடுப்பது ஒரே வலி நிவாரண மாத்திரை தான்.

பிரபல மருத்துவமனைகள் பெயரில்

சென்னையில் உள்ள இரண்டு பிரபல மருத்துவமனைகளின் பெயரைச் சொல்லி அங்கு இருதய நோய் சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருவதாக ஆனந்தகுமார் கதை விட்டுள்ளார். நிர்மலா ஒரு பிரபல மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பேராசிரியராக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.

இவர்களிடம் இருந்து ஸ்டெதாஸ்கோப், ஊசிகள் மற்றும் மருந்து, மாத்திரைகளும் ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்களிடம் சிகிச்சை பெற்ற மக்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. ஆனந்தகுமார், எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று விசிட்டிங் கார்டு போட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் தான், இவர்களின் முகமூடியை கிழித்துள்ளனர்.

தனி வழக்கு

தற்போது இவர்கள் மீது வேலைவாய்ப்பு மோசடிக்கு மட்டும் சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு போட்டுள்ளார். இவர்கள் மீது போலி டாக்டர் என்ற வகையில் மேலும் ஒரு தனி வழக்கு போடவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

இதற்காக ஆனந்தகுமார், நிர்மலா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது இவர்கள் இருவர் பற்றியும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. இவர்களிடம் வேலை கேட்டு பணத்தை பறிகொடுத்தவர்களின் புகார்கள் தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருகிறது. நேற்றும் 5 பேர் இதுதொடர்பாக புகார் கொடுத்தார்கள்.

ஆந்திராவில் முதலீடு

இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மோசடி மூலம் கொள்ளை அடித்த கோடிக்கணக்கான பணத்தை ஆந்திராவில் கந்து வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் 3 சொகுசு கார்கள் வைத்துள்ளனர்.

போலீஸ் தேடுவதை அறிந்ததும் அந்த கார்களை ஆந்திராவில் மறைத்து வைத்து விட்டதாக தெரிகிறது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தற்போது பிளஸ்–2 பரீட்சை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து சுதந்திரத்துக்கு விடுதலை

இந்திய அரசியல் சட்டம்தான் இந்தியாவில் உள்ள மக்களை மட்டுமல்லாமல், அரசாங்கங்கள், துறைகள் என்று எல்லோருக்குமே வழிகாட்டும் சாசனமாக அமைந்துள்ளது. இந்த அரசியல் சட்டத்தில் 19(1) பிரிவு அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் வழங்கியுள்ளது. இது ஒரு முக்கியமான சட்டப்பிரிவு ஆகும். பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் பற்றி இப்போது அல்ல, ஏறத்தாழ 240 ஆண்டுகளுக்கு முன்பே வால்டேர் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் சொன்னது இன்றும் இதன் ஆழத்தை தெளிவாக காட்டுகிறது.

‘உன் கருத்தில் ஒரு சொல்லில்கூட எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், எனக்கு உடன்பாடு இல்லாத அந்த கருத்தை சொல்வதற்கான உன் உரிமையை காப்பாற்றுவதற்காக என் உயிரையும் கொடுப்பேன்’ என்று முழங்கினார். இதுபோல, 1976–ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில், மறைந்த பத்திரிகையாளரான ஆர்.எம்.டி. சம்பந்தம், ஒரு வழக்கில் அவர் வெளியிட்ட செய்தி எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்டபோது, ‘பத்திரிகையாளர்கள் தங்களது செய்தி எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவேண்டியதில்லை’ என்று சொன்னது இன்றளவும் பத்திரிகையாளர்களுக்கு ஒரு பலமாக திகழ்கிறது. பேச்சுரிமைக்கும், எழுத்துரிமைக்கும் கொடுக்கப்பட்டுவந்த முக்கியத்துவம், 2008–ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தகவல் தொழில்நுட்பச்சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தினால், 66–ஏ என்ற ஒரு கொடிய பிரிவு முளைத்தது.

டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட ஏதாவது தகவல் பொய்யானது என்றோ, இடைஞ்சலோ, அசவுகரியமோ, ஆபத்தோ, அவமானமோ, தடையோ, தலையீடோ, பகையோ, வெறுப்போ ஏற்படுத்துவதாக அமைந்தால், அதன்கீழ் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், 3 ஆண்டுவரை ஜெயில் தண்டனை கிடைக்கவும் வகைசெய்யும் ஆபத்தான சட்டப்பிரிவு இது என்பது கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் விரும்பும் எல்லோருடைய ஆதங்கமும் ஆகும். இந்த சட்டத்தை பயன்படுத்தி எத்தனையோ பேர் தொடர்ந்து கைது செய்யப்பட்டனர். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சிவசேனா தலைவர் பால்தாக்கரே மறைந்தபோது, மும்பையில் நடந்த கடை அடைப்பை விமர்சனம் செய்து, பேஸ்புக்கில் மும்பையில் வசிக்கும் ஷாகின் தாதா என்ற பாலக்காடு மாணவி கருத்து வெளியிட்டதற்கும், அந்த கருத்தை விரும்புவதாக தெரிவித்த அவரது தோழி ரீனு சீனிவாசன் என்பவரையும் மும்பை போலீஸ் கைது செய்தது. இதை கண்டு சட்டக்கல்லூரி மாணவி ஷிரேயா சிங்கால் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வர், ரோகிண்டன் நாரிமன் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக எந்த சட்டத்தையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று சொல்லாத உச்சநீதிமன்றம், இந்த பிரிவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்துள்ளது. சிறைப்பட்டுக்கிடந்த பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் இந்த தீர்ப்பின்மூலம் கூண்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டது.

ஒரு சட்டக்கல்லூரி மாணவிக்கு உள்ள இந்த பொறுப்புணர்ச்சியை இந்தியாவே பாராட்டுகிறது. கருத்துகள், விமர்சனங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தால், அதை கருத்து ரீதியாகத்தான் எதிர்க்கவேண்டுமே தவிர, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், வன்முறைகளுக்கு இடமே இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி அத்துமீறப்பட்டால், அதற்கும் அரசியல் சட்டத்தின் மற்றப் பிரிவுகள் இருக்கிறது. அந்த பாதுகாப்பு கேடயத்தை எடுத்து நீதிமன்றத்தை அணுகலாமே தவிர, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் முயற்சியில் இனியும் யாரும் ஈடுபடக்கூடாது என்பதற்கு இதுவே ஒரு நல்ல சான்றாகும்.

Wednesday, March 25, 2015

இணையதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து

கடந்த 2012-ம் ஆண்டு சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணத்தை தொடர்ந்து மும்பை நகரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

அதை விமர்சித்து ‘பேஸ்புக்’ பக்கங்களில் எழுதியதாக மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த ஷகீன் தாதா மற்றும் ரீனு சீனிவாசன் ஆகிய இரு பெண்கள் மராட்டிய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

இதனை எதிர்த்து சட்டக் கல்லூரி மாணவி ஷ்ரேயா சிங்கால் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அவர் தன்னுடைய மனுவில், ‘கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவில் திருத்தங்கள் செய்ய வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

அவர் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சொரப்ஜி ஆஜராகி வாதாடினார். ‘66-ஏ பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது, நடைமுறைக்கு பொருந்தாதது. அரசியல் சட்டம் வரையறுத்த கருத்து மற்றும் பேச்சுரிமையை பறிக்கிறது’ என்று அவர் வாதாடினார்.

இப்பிரச்சினையில், இந்த மனு உள்பட 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2013-ம் ஆண்டு மே 16-ந்தேதி, சமூக வலைத்தளங்களில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஐ.ஜி. அல்லது போலீஸ் துணை கமிஷனரின் உத்தரவு இல்லாமல் போலீசார் கைது செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியது.

ஒத்திவைப்பு

கடந்த பிப்ரவரி 26-ந்தேதி, இந்த வழக்கின் மீது தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த 18-ந்தேதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அசம்கானை விமர்சித்து 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாக உத்தரபிரதேசத்தில் கைது செய்யப்பட்டான்.

இவ்விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த அறிவுரையை உத்தரபிரதேச போலீசார் கடைப்பிடிக்க வில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, கைதுக்கான சூழ்நிலை குறித்து உத்தரபிரதேச போலீசாரிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது.

தீர்ப்பு

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவுக்கு எதிரான மனுக்களின் மீது நீதிபதிகள் ஜெ.செல்லமேஸ்வர், ரோகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நேற்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அந்த சட்டப்பிரிவு செல்லாது என்று கூறி, அதை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

ஒரு சமூகத்தில் மனிதர்களின் கருத்து மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் முதன்மையானதாகும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66-ஏ பிரிவு மக்களின் அறிந்து கொள்ளும் உரிமையை பாதிக்கிறது. அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் போன்ற இருபெரும் தூண்களை இந்தப் பிரிவு தகர்க்கிறது.

உரிமைகள் பாதிப்பு

அது மட்டுமல்லாது அரசியல் சாசன சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு உரிமைகளை இந்தப் பிரிவு நேரடியாகப் பாதிக்கிறது. இந்த சட்டப்பிரிவில் குறிப்பிடப்படும் ‘‘எரிச்சல்படுத்தும்’’, ‘‘அசவுகரியமான’’ மற்றும் ‘‘மொத்தத்தில் தவறான’’ என்ற வார்த்தைகள் மிகவும் மேலோட்டமாகவும், தெளிவில்லாமலும் இருக்கின்றன.

சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கும், குற்றத்தை இழைப்பவர்களுக்கும் இந்த சட்டப்பிரிவில் உள்ள இதுபோன்ற வார்த்தைகள் அவற்றின் சரியான உட்கருத்தை சரியாக புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்திருக்கின்றன.

அவதூறு

நீதிபதியாக இருப்பவர்களே, இவற்றில் உள்ள ஒரே வார்த்தைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும்போது, சட்டத்தை அமல்படுத்துபவர்களும், மற்றவர்களும் என்ன முடிவு செய்வார்கள்?

ஒருவருக்கு அவதூறாகப்படுவது மற்றவருக்கு அவதூறாக இல்லாமல் இருக்கலாம். ஒருவருக்கு அவதூறாக இருப்பது மற்றவருக்கு அவதூறாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

மத்திய அரசின் வாதம் நிராகரிப்பு

இந்த சட்டப்பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க சில விதிமுறைகளை வகுக்கிறோம் என்று வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு உறுதி அளித்தது. அதை ஏற்க முடியாது.

அரசாங்கங்கள் வரும் போகும். ஆனால் 66-ஏ போன்ற பிரிவுகள் எப்போதும் இருக்கும். தற்போது உள்ள ஆட்சியினர் தங்களுக்கு அடுத்து வரும் ஆட்சியாளர்கள், துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என்ற உறுதியை அளிக்க முடியாது. எனவே, கருத்து சுதந்திரத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரான சட்டப்பிரிவு 66-ஏ ரத்து செய்யப்படுகிறது.

நீடிக்கும்

அதே சமயத்தில், சமூக வலைத்தளங்களில், குறிப்பிட்ட தகவல்களை யாரும் பார்க்க முடியாதவாறு முடக்கு வதற்கு உத்தரவு பிறப்பிக்கலாம். இதுதொடர்பான 69-ஏ மற்றும் 79 பிரிவுகளை சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அமல்படுத்தலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.புதுடெல்லி,

சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி



தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ‘ஏ’ பிரிவு, அரசியல் சட்டம் அளிக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் விதத்தில் இருப்பதால் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ, சமூகத்தில் ஒழுங்கைக் கெடுக்கும் விதத்திலோ, பிற நாடுகளுடன் இந்தியாவுக்குள்ள உறவைக் குலைக்கும் வகையிலோ கருத்துகள் பதிவிடப்பட்டால் அந்த இணையதளத்தை அரசு முடக்கிவைக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் கூறியுள்ளது. நீதிபதிகள் ஜே. சலமேஸ்வர், ரோஹின்டன் ஃபாலி நாரிமன் அடங்கிய அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது.

“தகவல்களை அறிந்துகொள்வதற்கு மக்களுக்குள்ள உரிமையைத் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) சட்டத்தின் 66 (ஏ) பிரிவு பாதிக்கிறது. அத்துடன், பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றுக்கும் குந்தகம் விளைவிக்கிறது. இந்தச் சட்டத்தில் விவரிக்கப்படும் ‘குற்றம்’, எந்த விதத்தில் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகக் குறிப்பிடப் படவில்லை. இந்தச் சட்ட வாசகத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருள் கொள்ளும் வகையில் அமைந்துள்ளன” என்று அமர்வு சுட்டிக்காட்டியிருக்கிறது.

மேலும், “விவாதம், ஒரு கருத்துக்கு ஆதரவு தேடுதல், தூண்டி விடுதல் என்ற மூன்றுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஒரு பொருள் பற்றி விவாதிப்பதோ, ஒரு கருத்துக்கு ஆதரவு திரட்டுவதோ சிலருக்கு எரிச்சலை ஊட்டினாலும் அதை அனுமதித்தாக வேண்டும்” என்றும் அமர்வு கூறியுள்ளது.

“ஒரு சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதால், அந்தச் சட்டத்தையே அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று கூறிவிட முடியாது” என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. “பேச்சுரிமையையோ கருத்துரிமையையோ கட்டுப்படுத்த அரசு விரும்பவில்லை. அதே வேளையில், இணையதளம் போன்ற ‘சைபர்’ மேடைகளை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமலும் அனுமதித்துவிட முடியாது” என்றும் அரசுத் தரப்பு கூறியிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் மாநில அமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஆசம் கான் பற்றி முகநூலில் 18 வயது பள்ளி மாணவர் ஒருவர் தெரிவித்த கருத்து ஆட்சேபகரமானது என்பதால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66 (ஏ) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கைது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த நிலையில், இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

சிவசேனைத் தலைவர் இறந்தபோது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்ததற்காக 2 இளம் பெண்களும், தற்போது ஒரு பள்ளிக்கூட மாணவரும் கைது செய்யப்பட்ட இதுபோன்ற சம்பவங்களிலிருந்து இந்தச் சட்டம் எப்படி சரியான ஆலோசனைகள் இன்றி, குழப்பம் தரும் விதத்தில் இயற்றப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. நல்ல சட்டங்களையே தவறாகப் பயன்படுத்தும் ஆட்சியாளர்கள், மோசமாக உருவாக்கப்பட்ட சட்டங்களை வைத்துக்கொண்டு அப்பாவிகளை எப்படி அலைக்கழிப்பார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. ஆகவே, சகிப்பின்மைக்குக் கிடைத்த சவுக்கடி என்றே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத வேண்டும்.

பட்டதாரிகளுக்கு எதிர்காலம் குறித்த கனவு வேண்டும்: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவுறுத்தல்


சென்னை: ''படித்த அறிவாளிகளை உருவாக்கிய நாம், நல்ல, ஒழுக்கமான மனிதர்களை உருவாக்கவில்லை; படித்தவர்களை விட, படிக்காதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன,'' என, எஸ்.ஆர்.எம்., பல்கலை பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார்.

எஸ்.ஆர்.எம்., பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, காட்டாங்கொளத்தூர் பல்கலை வளாகத்தில், நேற்று நடந்தது. 'இஸ்ரோ' தலைவர் கிரண்குமார், கலிபோர்னியா பல்கலை வேந்தர் பிரதீப் கே கோஸ்லா, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் அசுதோஷ் சர்மா ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் மற்றும் மாணவர்களுக்கான பட்டங்களை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பெங்களூரு அறிவியல் நகரமாக இருப்பதைப் போல், சென்னை, அறிவுசார் நகரமாக திகழ்கிறது. படித்த அறிவாளிகளை உருவாக்கிய நாம், சிறந்த, நல்ல, ஒழுக்கமான மனிதர்களை உருவாக்கவில்லை; படித்தவர்களை விட, படிக்காதவர்களிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன. மாணவர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்; எதிர்காலம் குறித்த கனவு, பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டும்; கனவு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். நான், 1993ல் டில்லியில் சுகாதாரத் துறை அமைச்சரான போது, போலியோ ஒழிப்பு குறித்த கனவு இருந்தது; இன்று, நான் அமைச்சராக இருக்கும் நிலையில், போலியோ ஒழிக்கப்பட்டது குறித்த திருப்தி எனக்கு உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து, தலைவர் ரவி பச்சமுத்து, சத்திய நாராயணன், இணை துணைவேந்தர்கள் கணேசன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில், 90 முனைவர், 3,899 முதுநிலை, 9,628 இளநிலை பட்டதாரிகள் என, 13,617 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இவர்களில், 91 பேர், பதக்கங்கள் பெற்றனர்.

Lawyers, activists welcome SC order on Section 66A

TRICHY: The Supreme Court verdict striking down Section 66A of Information Technology Act received overwhelming support from the public here. The provision allowed police to arrest anyone for posting offensive comments on social media.

Legal experts welcomed the verdict, commenting that there were enough laws under the Indian Penal Code (IPC) to deal with any violation on social media.

"If there is a violation in anyone's comments, police can prosecute them by invoking other laws available under IPC after closely analysing the comment. Otherwise, Section 66A would restrict the freedom of expression. The Supreme Court's move is welcome," said S Martin, president of Tiruchirappalli Bar Association.

"Anyone has the right to criticise anything, without which no change will happen. Section 66A of IT Act was misused by powerful people against anyone for posting comments against them. The order of the apex court to scrap the section is commendable. Freedom of expression is our right, but it should not interfere into others' feelings," said Paul Guna Loganath, social activist.

Academicians too, welcomed the verdict. "The actions of public personalities can be subject to comments from anyone. Instead of replying to such comments, whether positive or negative, they should not use the law to take action against them. However, there must be discipline in the way we comment," said D Rajkumar, principal of Sudarshana Vidya Vikas, Pudukkottai.

"The abolition of Section 66A can be considered a landmark in law. Arresting anyone based on what they have posted online cannot be accepted. The country gives us the fundamental right of speech," said Aravindh Neelakantan, a final year student at NIT-T.

"Now, people can freely express their views on the social media. Ultimately, let truth prevail. Goodbye to Section 66A of the Information Technology Act. A welcome judgment, for sure," said Balaji Muthukumar, founder of NammaTrichy.com.

No petrol without helmet in MP


BHOPAL: State government issued directives to petrol pump owners across Madhya Pradesh to provide petrol and diesel only to those two-wheeler riders who wear helmet.

A government release said that all district collectors have been asked to ensure implementation of the orders issued by food, civil supplies and consumer protection department. Order asked fuel pump owners to create awareness among two-wheeler riders by displaying banners in this regard in the premises of petrol pump.

In case of non- compliance of the order, action may be initiated against them under Essential Commodities Act, government release said.

Bank gives away Rs 1 crore loan against fake gold

ALLAHABAD: Everything that glitters is not gold. The adage could be aptly applied to the guards and officials of the main branch of SBI Bhadohi who were guarding 'gold' worth over Rs 1 crore kept in their vault for the past several years oblivion of the fact that it was artificial.

The gold, kept in form of jewellery, coins and gold bars, was pledged to the bank against various loans amounting to over Rs 1 crore. The loans were given in 2012 under the agri-gold loan scheme. After the borrowers failed to deposit the monthly installments, the bank issued notices. But when an amount of Rs 88.32 lakh constantly remained outstanding, authorities grew suspicious and tested the gold which was found to be artificial.

The bank manager has lodged an FIR against 27 people in Kotwali, including the field officer and firm which tested the gold in this connection.

The 'scam' came to light after borrowers failed to deposit monthly installments and the outstanding shot up to Rs 88.32 lakh, said bank manager Shiv Shankar Upadhyaya. "We have lodged an FIR. An internal probe too is underway," he added.

Bhadohi Kotwali in-charge Ramesh Chaubey said, "Persons against whom a complaint has been lodged include bank's field officer Arvind Kumar, owner of Sri Krishna Gold Bar Testing Lab, Varanasi, and 25 others who took loans under sections 419, 420, 406, 409, 467, 468 and 471 of the IPC (Indian Penal Code)." He added a probe was underway and the case would be transferred to crime branch.

In 2012, SBI's main branch distributed loan of over Rs 1 crore to around 25 people under Agri-gold loan scheme. The borrowers, all hailing from Bhadohi, pledged around 4kg gold in form of jewellery, coins, etc., to the bank along with Varanasi goldsmith's certificate regarding the purity of the gold.

In due course of time, many of these borrowers stopped depositing monthly installment. By 2013, the then bank manager was transferred. The bank started issuing notices to defaulters after a new manager took over. Lack of response to notices or reminders aroused new manager's suspicion and he decided to ascertain the quality of gold pledged for loan in 2012. He was shocked to find that the gold was fake.

Emirates fined Rs 50,000 for forcing passenger to fly sans seat belt


CHENNAI: Thavasu Vella Thambi of Chennai had boarded an Emirate Airlines flight in 2012, but to his horror he found that he had to fly without seat belts as the seat he was allotted was damaged and the flight crew even denied him an alternative arrangement. Three years after the incident, the resident of G N Chetty Road will be compensated as the District Consumer Disputes Redressal Forum, Chennai (North), has slapped a fine of Rs 53,000 on the airlines for deficiency in services.

Thavasu said in April, 2012, after he boarded his scheduled Emirate Airlines flight he found workers repairing his allotted seat 22G. However, they failed to fix the seat and the flight crew told him to adjust in the damaged seat, promising him to find an alternative seat later. But even after take-off he was not given another seat and, according to his statement, he 'faced a nightmare' during take-off and landing.

A month later, he claimed damages of Rs 2 lakh from the customer affairs manager of the airlines at its office in Nungambakkam. The airlines sent a reply assuring to look into his complaint on May 15, 2012. Thambi then sought a settlement, but although the airlines apologized for the incident they refused to pay him any compensation. When his legal reply also went unanswered, Thambi moved the district forum seeking a compensation of Rs 2 lakh.

In its counter, Emirates Airlines said the allegations were false.

An alternative seat could not be provided as the flight was full. The airlines said they had offered 1,000 skyward miles if he became a part of their frequent flier programme. This was a programme where the miles could be exchanged for tickets or uprgrades on subsequent travels. But Thambi refused the offer.

World Cup fever: Planning to fall ill tomorrow?


So, what will be your excuse for bunking work on Thursday, when India takes on Australia in the semifinal? As many as 34% of 6,000 officegoers surveyed nationwide said they would call in sick, while 2% plan to go to the extent of saying their houses have been burgled.
While most of India's matches in the Cricket World Cup have been during weekends, the India-Australia semifinal, billed as the "final before the final", is on Thursday, leaving countless fans anxious about how and where to watch it.

Perhaps anticipating a low turn-out at office, Nayantara Pani, business head of Bangalore-based PlayRight, said, "I've given leave to my staff. We're into sport communications and are sports enthusiasts. If there's a super important meeting, it'll be only after 4.30 pm."

An excited Pallavi Singh, 38, of Citibank, Gurgaon, said, "We've declared Thursday a no-meeting day to support our nation. Venue not fixed but (we'll be) with peers at hub or big screen at work. Bleed Blue! The game is on!"

Though almost 60% of respondents virtuously said they would report for work, may offices to are getting into the festive spirit. A Coca Cola spokesperson said, "Match days are usually relaxed in our office. We haven't granted leave to employees, but they're free to gather in the cafeteria or in their bosses' cabins to watch the match."

On the other hand, Shalini Pillai, head of people, performance and culture, KPMG in India, said its employees have been granted leave on Thursday. "It's time to celebrate India reaching the semi-final in the all important clash with Australia. KPMG supports Team India and wishes them all the best for this momentous match."

In Ludhiana, fans are prepping for a grand celebration with many residents having booked tractors to take their celebrations to the streets. On match day, many restaurants are offering heavy discounts and giving away freebies for each boundary hit or century scored.

Kochi teen Mark Anthony, whose 12th grade state board exams are going on, said, "My mom doesn't let me watch TV but my tuition teacher Varghese never misses an India match. And that gives me and friends some hope of catching a few overs with him."

In Chennai, Vasanth Raj, an auto consultant, said that he would go to work only after the game is over. "It's an important game for us and there's no way I am going to office. I've asked for half-a-day leave."

In Kolkata, MNC professionals, professors, cricket fans are planning to either reschedule their work or skip office altogether. Gourisankar Sa, a Bose Institute professor, said, "For me on Thursday, the World Cup match will top the priority. I have one class which I'll wrap up quickly and follow the match on internet in the laboratory. Somdutta Basu, an MNC employee, said, "Initially I had thought of taking leave, but then I decided to bunk work till the match is over citing official meetings etc."

ESPNcricinfo, which interviewed 6,000 respondents, said, "Cricket fans will not let work get in the way of them enjoying the much-awaited World Cup tournament. Sixty two per cent said they will miss work at some point. When it comes to what excuses they would use to skip work, the time-tested method of calling in sick appeals more to the younger fans; 75% fans over 30 are open to skipping work to watch a match."

(Inputs from Chennai, Delhi-NCR, Mumbai, Bangalore, Kochi, Kolkata, Chandigarh)

Tuesday, March 24, 2015

லீ: சிங்கப்பூரின் சிற்பி!



சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ - சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் - நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் - இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர். மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை - இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது - கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு - பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்' என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

- ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் - எழுத்தாளர்,

இந்தோனேசிய www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com

RGUHS to Confer Degrees to Over 26K Students

BENGALURU:As many as 26,252 students will receive degrees at the 17th annual convocation of Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) on Wednesday.

Former director of ISRO Dr K Radhakrishnan will deliver the convocation address while Governor Vajubhai Vala and Medical Education Minister Sharan Prakash Patil will be present.

This time, the varsity will award honorary doctorates to three people.

Dr C Vittal, surgeon and former medical superintendent of Victoria Hospital, Bengaluru; Dr M Gurappa, heart surgeon and former director of Jayadeva Institute of Cardio Vascular Sciences; and Dr N Rajiv Shetty, former director of medical education, will be conferred the honorary doctorates.

RGUHS Vice-Chancellor Dr K S Ravindranath told reporters that all universities in the state had decided on a ceiling of only three honorary doctorates.

This year, over 56 students are sharing 87 gold medals. Dr Mangala Gowri K of Bangalore Medical College and Dr Rozar Lusi Long of the College of Dental Sciences, Davanagere, will receive five gold medals each.

Dr Vijeta Vittalrai Rane of S Nijalingappa Medical College, Bagalkot, and Dr Nikita K Jain of MS Ramaiah Medical College, Bengaluru will receive four gold medals each.

To a query on why the registrar has not been changed yet, Ravindranath said, “The registrar (administration) should be either an IAS or a super time scale KAS officer. We have sent requests to the government, but they said that as there is a shortage of IAS officers, they will soon depute one super time scale KAS officer.”

On the allegation that the son of former V-C Sriprakash was allowed to write examinations despite attendance shortage, Ravindranath said if the police inquiry proves there was shortage of attendance, the degree will be withdrawn.

Digital Evaluation

Taking note of criticism of the evaluation system, RGUHS has decided to go for digital evaluation from this academic year. The vice-chancellor said, “From June 2015, we will go for digital evaluation and we are calling a tender soon for this purpose.”

The university is also spending Rs 1 crore each on strengthening regional centres.

University’s issues

■ The long-pending auditing of the university (for four years) is being done and will be submitted to the government soon

■ Notices have been sent to those colleges which have not paid the affiliation and examination fee

■ Negative endorsement was given for nursing and pharmacy colleges which have not followed rules while admitting students

■ Inquiries on recent marks card scams are still with the Central Crime Branch

■ PhD students will not be awarded degrees on stage during the convocation due to shortage of time

Women medicos to shine at RGUHS convocation

For 23-year-old Nikita K Jain, March 25 will be a special day. She will be awarded four gold medals for scoring the highest marks in MBBS at the 17th annual convocation of the Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) to be held at Nimhans Convention Centre here. Speaking to Deccan Herald on Friday, Nikita, who has bagged 51st rank in All India PG entrance exam, said she wanted to study Radiology at the Bangalore Medical College and Research Institute, because it was a promising subject these days. Jain did her schooling in Vidya Mandir in Malleswaram, pre-university from Mount Carmel College and MBBS from the MS Ramaiah College.

“I’m the only doctor in my family. My brother and sister are pursuing BBM and MBA. I like to go out, watch movies, go shopping, read books and listen to music. But in the last one year I did none of these things because of my internship and studies. I wanted to get through medical in the first attempt and it has paid off,” she said.

Mangala Gowri K, 23, also from Bangalore Medical College and Research Institute, will be awarded five gold medals for scoring the highest (84 per cent) in Obstetrics and Gynaecology and for being the topper (76.8 percent).

Sacrificed all for medicine
She did her schooling from the National High School, Basavanagudi, and has a degree from the National PU College. She loves to sing and indulge in crafts but she sacrificed it all for her medical course. She is also the only doctor in her family. Her younger sister, who doing her second PUC, is interested in engineering.

Vijeta Vithalray Rane, 24, a resident of Sirsi, did her MBBS from S Nijalingappa Medical College, Bagalkot. She will get four gold medals for scoring the highest marks in general medicine (79 per cent). “I decided to become a doctor when I was in ninth standard. I learnt that there is a shortage of doctors. I am interested in Paediatrics. I do not have time for hobbies. I like to read, sing and watch television. I hum to relax myself. But in last one year all this was put to rest because I was busy with my internship at S N Medical College and further studies,” she said.

She too is the only doctor in her family. Her mother is a government schoolteacher, her father an accounts officer in the KSRTC and her elder brother works in Corporation Bank. Roger Lau Sir Long from College of Dental Sciences, Davangere, will receive five gold medals.
These four are being honoured with medals for individual achievements, said Dr KS Ravindranath, RGUHS Vice Chancellor.

ரயில்வே இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு!

புதுடெல்லி: இந்திய ரயில்வேத்துறை, ஏஜெண்டுகளின் முறைகேடுகளை தடுக்க இ-டிக்கெட் முன்பதிவில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

இ-டிக்கெட் முன்பதிவில் ஏஜெண்டுகள் செய்யும் முறைகேடுகளை தடுப்பதற்காக, புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, ஒரு யூசர் லாக்-இன் ஐ பயன்படுத்தி, ஒரு தடவை மட்டுமே இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அடுத்த இ-டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றால், தானாகவே லாக்-அவுட் ஆகிவிடும்.

இது, ஐ.ஆர்.சி.டி.சி. ஏஜெண்டுகள் உள்பட அனைவருக்கும் பொருந்தும். ஆனாலும், ஒரே நேரத்தில் புறப்பாடுக்கும், திரும்பி வருவதற்கும் முன்பதிவு செய்வதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது. பாதுகாப்பு துறையினரின் முன்பதிவுக்கும் இது பொருந்தாது.

கூட்ட நெரிசல் நேரத்தில், ஏஜெண்டுகள் ஒரே லாக்-இன் ஐ பயன்படுத்தி, இ-டிக்கெட்டுகளை மொத்தமாக முடக்கி விடுகிறார்கள். அதை தடுப்பதற்காக, புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை 2-வது அரையிறுதியைக் காண சிட்னிக்கு படையெடுக்கும் இந்திய ரசிகர்கள்: மிரட்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு தங்கள் நாட்டுக்கு ரசிகர்களே அதிகம் வருவார்கள். அவர்களுடைய ஆதரவோடு சிறப்பாக விளையாட முடியும் என ஆஸ்திரேலிய வீரர்கள் நம்பியிருந்தனர். ஆனால் 42 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட சிட்னி மைதானத்தில் 70 சதவீத டிக்கெட்டுகளை இந்திய ரசிகர்கள் வாங்கியிருப்பது ஆஸ்திரேலிய வீரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவது போன்றதொரு சூழலுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோர் டுவிட்டர் மூலம் தங்களுக்கு ஆதரவு தருமாறு தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், “வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2-வது அரையிறுதி போட்டியைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவரும் மஞ்சள் வர்ணம் பூசிக்கொண்டு வாருங்கள். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பார்மி ஆர்மி என்ற பெயரில் கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணி, வெளிநாடுகளில் சென்று விளையாடும்போது அந்த போட்டிகளுக்கு பார்மி ஆர்மி சார்பில் ரசிகர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அதேபோன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அமைப்பை ஸ்வாமி ஆர்மி என்ற பெயரில் நடத்தி வரும் கார்த்திக் அய்யாலசோமய்யாஜுலா என்பவர் இந்தியா-ஆஸி. இடையிலான 2-வது அரையிறுதி குறித்து பேசும் போது, “ரசிகர்கள் விஷயத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கடினமான தருணம் இது. போட்டியின்போது இந்திய ரசிகர்கள் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக காதை கிழிக்கும் வகையில் குரல் எழுப்புவார்கள். அது ஆஸ்திரேலிய அணியினருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அப்போது ஏதோ வெளிநாட்டில் விளையாடுவது போன்ற உணர்வு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஏற்படும்.

இந்திய ரசிகர்கள் தாரை தப்பட்டையுடன் மைதானத்தை வலம் வருவதோடு, பாட்டுப் பாடியும், நடனம் ஆடியும் அசத்தப் போகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கும் போதும், இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்கும்போதும் பாடல்களை பாடி கொண்டாடவுள்ளனர்.

கிளார்க்கும், வார்னரும் தங்களுக்கு ஆதரவு தருமாறு தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்திய ரசிகர்கள் குறித்து அவர்கள் எவ்வளவு கவலையடைந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். சிட்னி மைதானத்தில் இந்திய ரசிகர்களே அதிகமிருப்பார்கள் என்பதை கிளார்க், வார்னர் ஆகியோரின் டுவிட்டர் கருத்துகள் சொல்லிவிட்டன. வரும் வியாழக்கிழமை மைதானத்துக்கு வரும் ஆஸ்திரேலிய ரசிகர்கள், தெற்காசியாவில் கிரிக்கெட்டுக்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொள்வார்கள். அரையிறுதியில் இந்திய அணிக்கு கிடைக்கப் போகிற ஆதரவை இதற்கு முன் ஆஸ்திரேலியர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்” என்றார்.

கார்த்திக், மெல்போர்னில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? - அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. அதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 25-ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சட்டப்பேரவை நாளை கூடுகிறது. நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அத்துடன் முதல்நாள் கூட்டம் முடிந்துவிடும்.

அதன்பிறகு, பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்யும். அதையடுத்து பேரவை மீண்டும் கூடும் நாளில், பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசுவார். அதைத் தொடர்ந்து துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்படும். பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாதத்துக்கும் மேல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். நாளை தாக்கல் செய்யப்படுவது, தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகளை எதிர்பார்க்கலாம். அரசு ஊழியர், ஆசிரியர் நியமனம், அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு, விவசாயக்கடன் வட்டி தள்ளுபடி, புதிய கல்லூரிகள் போன்றவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாவதற்கும் வாய்ப்புள்ளது.

அனைத்து அரசு ஊழி யர் சங்கங்களும், ஆசிரியர் சங்கங்களும் புதிய ஓய் வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்துமாறு அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே, பட்ஜெட்டில் ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை அரசு பணியில் உள்ளவர்கள் மட்டுமின்றி புதிதாக சேர விரும்பும் இளைஞர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமகாலப் பேரவலம்!



தேர்வுகளும் மதிப்பெண்களும் இந்தியக் கல்வித் துறையையும் நம்முடைய பெற்றோர்களையும் எப்படியெல்லாம் ஆட்டு விக்கின்ற ன என்பதை முகத்தில் அடித்துச் சொல்கிறது பிஹார் சம்பவம். மனார் வித்யா நிகேதன் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பெற்றோர்களும் நண்பர்களும் போட்டி போட்டுக்கொண்டு விடைகளை உள்ளே வீசும் படம் ஏற்படுத்திய அதிர்ச்சியைவிடப் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன, இந்தச் சம்பவத்தை பிஹார் அரசும் சமூகமும் எதிர்கொள்ளும் விதம்.

பிஹார் கல்வி அமைச்சர் பி.கே.ஷாஹியின் வார்த்தைகளில் எவ்வளவு பொறுப்பற்றத்தனம்! “14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மாநில அரசுக்கு இருக்கும் வசதிக்கு இந்த அளவுக்குத்தான் தேர்வுக்கூடங்களில் காவலையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க முடியும். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால், தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர்தான் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார் ஷாஹி. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கும் பாட்னா உயர் நீதிமன்றம், அமைச்சரின் பேச்சை வெட்கக்கேடு என்று சாடியிருக்கிறது. வெட்கக்கேடுதான்! கூடவே, அசிங்கங்கள் எந்த அளவுக்கு நமக்குப் பழகிவிட்டன என்பதையும் ஷாஹியின் வார்த்தைகள் அம்பலப்படுத்துகின்றன.

தேர்ச்சி ஒன்றே குறிக்கோள்; மதிப்பெண்களே மாணவர்களின் இறுதி இலக்கு எனும் எண்ணம் இந்தியப் பள்ளிகளில் தொடங்கி, எல்லா வீடுகளையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிறது. இதற்காக எந்த விலையையும் கொடுக்க எல்லோருமே தயாராக இருக்கின்றனர். இதற்கு எந்த மாநிலமும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு ஓசூர் சம்பவத்தையே உதாரணமாகச் சொல்லலாம். பிளஸ் டூ தேர்வு வினாத்தாளை ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பிப் பிடிபட்டிருக்கின்றனர் ஓசூர் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இதுதொடர்பாக, ஓசூர் மாவட்டக் கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கான விடைகளை மாணவர்களுக்கு அளிப்பதை ஒரு கலாச்சாரமாகவே வளர்த்தெடுத்திருக்கின்றன என்பது கல்வித் துறையினருக்குத் தெரியும்.

தேர்வு அறைகளில் பெற்றோர்களும் மாணவர்களின் நண்பர்களும் அத்துமீறி உள்ளே நுழைவது, தடுக்கும் ஆசிரியர்களை அடித்து உதைப்பது, காவலுக்கு நிற்கும் போலீஸ்காரர்களே பணம் வாங்கிக் கொண்டு ‘பிட்டு’களை உள்ளே சென்று கொடுப்பது, இன்னும் பல இடங்களில் பள்ளிகளே நேரடியாக விடைகளைத் தருவது, இதையெல்லாம் தடுத்து நிறுத்துவது சவாலான காரியம் என்று அமைச்சர் பேசுவது… இவையெல்லாம் எதன் வெளிப்பாடு என்றால், அரசாங்கத்துக்கு இந்த விஷயங்களெல்லாம் அசிங்கம் என்று துளியும் உறைக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. அரசாங்கம் தன்னுடைய பொறுப்புகளில் தரமான கல்விக்கு எந்த அளவுக்குக் கவனம் அளிக்கிறது என்பதன் வெளிப்பாடு. பிஹார் சம்பவம் குறித்து நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனங்களுக்குப் பின், தேர்வுகளில் பிட் அடித்ததாக 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைதுசெய்து, ரூ.15 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது பிஹார் அரசு. இந்த நடவடிக்கைகள் எல்லாம் இத்தனை நாட்கள் ஏன் உறைக்கவில்லை?

பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரை முழுமையாக இந்த விவகாரத்தில் குற்றவாளியாக்க முடியாது என்றாலும், இந்தக் குற்றக் கலாச்சாரத்தின் பின்னணியில் அவருக்கும் ஒருவிதத்தில் பங்கு இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு ஆரோக்கிய சமூகத்துக்கான கட்டுமானம் கல்வியையே அடித்தளமாகக்கொண்டு கட்டமைக்கப்படுகிறது. நல்ல நிர்வாகத்தைப் பற்றிப் பேசுபவர்களுக்குக்கூட கல்வித் துறை வீழ்ச்சி கண்ணிலேயே படாதது சமகாலத்தின் பேரவலம்!

மரணமும் மர்மமும்!

Dinamani

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் வணிக வரித் துறை அமலாக்கப் பிரிவு கூடுதல் ஆணையராகப் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவியின் மரணம் குறித்த விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பது என்கிற முடிவை கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சித் தலைமை "இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கலாம்' என்று கூறிய பிறகே முதல்வர் சித்தராமையா இந்த அறிவிப்பைச் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும்போது, முழுமையான பாராட்டு அவருக்குக் கிடைக்காமல் போகிறது.
"சிறப்பு நேர்வுகளில் மட்டுமே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர
விடுவது வழக்கம் என்றும், எந்த விவகாரத்தையும் மாநில காவல்துறை விசாரிப்பதுதான் வாடிக்கை, அதைத்தான் நாங்களும் செய்தோம்' என்றும் கர்நாடக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சித்தராமையா கூறியது சாதாரண நிகழ்வுகளுக்குப் பொருந்தக்கூடியது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே. ரவியின் விவகாரத்தில் அதையே பொருத்திப் பார்ப்பது பொருத்தமற்றது.
தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் ரவி, கோலார் வணிக வரித் துறை அமலாக்கக் கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த காலக்கட்டத்தில், பல அரசியல்வாதிகளின் நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்தி, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். சுமார் ரூ.200 கோடி வரை அரசுக்கு அவரால் வருவாய் கிடைத்துள்ளது என்பதும், அதன் காரணமாக அவர் பல அரசியல்வாதிகளின் விரோதத்தைப் பெற்றிருந்தார் என்பதும்தான் இந்த விவகாரத்தில் கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்.
அரசியல்வாதிகள் கொடுத்த அழுத்தம் அல்லது மிரட்டல் இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது இது கொலையாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம்தான், ரவியின் குடும்பத்தினர் மட்டுமன்றி பொதுமக்களும்கூட வீதிக்கு வந்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தக் காரணமாக இருந்தது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிடும் இதே நாளில், கர்நாடக அரசு அறிவித்த சி.ஐ.டி.
விசாரணையின் அறிக்கை பேரவையில் வைக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சி.பி.ஐ. விசாரணை முடியும் வரை சி.ஐ.டி. விசாரணையை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து விட்டதால், அந்த அறிக்கை பேரவையில் வைக்கப்படவில்லை. இருப்பினும் அந்த அறிக்கையின் அம்சங்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கசிய விடப்பட்டுள்ளன. அவருடைய செல்லிடப்பேசியிலிருந்து மற்றொரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் அவர் தினமும் எத்தனை முறை பேசினார், கடைசியாக அவர் அனுப்பிய குறுந்தகவல் என்ன என்பது உள்பட அனைத்து தகவல்களும் பத்
திரிகைகளில் வெளியாகிவிட்டன. இது எந்த வகையிலும் முறையற்ற செயலே.
ரவி நேர்மையான அதிகாரி என்பது பொதுமக்கள், உடன் பணியாற்றுவோர் எல்லோராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் கோலார் மாவட்டத்தில் பணியாற்றிய 14 மாதங்களில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆக்கிரமித்திருந்த அரசு நிலங்களை மீட்டிருப்பதோடு, அவர்களது நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளையும் விதித்தார் என்பது இந்த விவகாரத்தில் முன்னிலைப்படுத்தப்படும் நிலையில், அவரது தனிப்பட்ட அந்தரங்க விவகாரங்களை
அம்பலப்படுத்தி, ஒரு நேர்மையான அதிகாரியை இடுப்புக்குக் கீழாக அடித்தல் என்பது சரியல்ல.
அது அப்படியே இருப்பினும், அந்தப் பெண் அதிகாரி எந்தப் புகாரும் தெரிவிக்காத நிலையில் இது அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்தரங்கம். தற்போது அரசியல் லாபத்துக்காக அந்தரங்கத்தை அரங்கேற்றி, அவரது மரணத்தை மலினப்படுத்தப்
பார்ப்பது தரக்குறைவான அரசியல் குயுக்தி.
எடுத்த எடுப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாமல் சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதன் நோக்கமே, இதுபோன்ற அந்தரங்கத்தைக் கிளறியெடுத்து, அதைக் கசியவிட்ட பின்னர் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றுவது என்பதுதானோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்த வழக்கை விசாரிக்கவிருக்கும் சி.பி.ஐ., இதே அந்தரங்கத்தை மட்டுமன்றி அவரது நேர்மையான பணியின் போது
அவருக்கு உருவான எதிரிகள் அனைவரையும் கவனத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவரது கோப்புகளிலிருந்தும், அவர் எடுத்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோர் பட்டியலிலிருந்தும் விசாரணையைத் தொடங்க வேண்டும்.
ஒரு நேர்மையான அதிகாரியின் மர்மமான சாவில் எதிர்க்கட்சிகள் காட்டுகின்ற ஆர்வம் என்பது, பெரும்பாலான தருணங்களில், "அப்பாடா, இடையூறாக இருந்த ஒரு நேர்மையான அதிகாரி முடிந்தார்' என்கிற உள்மகிழ்ச்சியும், அதே நேரத்தில் இதை அரசியல் ஆதாயமாக்கக் காரணம் கிடைத்துவிட்டது என்ற வெளிமகிழ்ச்சி
யுமாகத்தான் இருக்கிறது.
அதிகாரியின் மரணம் தொடர்பான கூடுதல் ஆவணங்களைச் சேகரிக்கும் அரசியல் புலனாய்வுகளில் அவர்கள் ஈடுபடுவதே இல்லை. ஒரு நேர்மையான அதிகாரிக்கு ஆளும் கட்சியினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சியினரும்கூட ஆகாதவர்கள்தானே!
நேர்மையான அதிகாரிகள் மரணத்தில் அரசியல்வாதிகள்தான் சுயநலம் பார்க்கிறார்கள் என்றால், உடன் பணியாற்றிய அதிகாரி
களும்கூட மௌனமாக இருப்பது ஏன்? நேரடியாக சொல்ல அச்சமாக இருப்பினும், இன்றைய சமூக வலைதளங்கள் மூலமாக, பத்திரிகைகள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் முகம் காட்டாமலேயே உண்மையைக் கசிய விடலாமே! ஏன் செய்வதில்லை? நேர்மைக்குத் துணை தனிமை மட்டும்தானா?

NEWS TODAY 16.09.2024