Thursday, September 28, 2017

குழந்தையைக் கடத்திய சென்னை சிறுவனின் தந்திரம்! குறிவைத்துப் பிடித்த போலீஸ்

சகாயராஜ் மு




சென்னை தண்டையார்பேட்டையில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட குழந்தையை, கொருக்குப்பேட்டை பகுதியில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். "விளையாட்டாக குழந்தையை சிறுவன் கடத்தியதாகக் கூறும் காவல்துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சைக்கிளின் நிறத்தைச் சிறுவன் மாற்றியுள்ளான் என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை முகமது சாது, நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது சைக்கிளில் வந்த ஒரு சிறுவன், கடத்திச் சென்றான். குழந்தை காணாமல்போனது குறித்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் இலியாஸ் புகார் கொடுத்தார்.

பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே, குழந்தையைக் கடத்திய சிறுவனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையில், நேதாஜி நகர் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தை முகமது சாதுவை, சிறுவன் ஒருவன் ஆரஞ்சு நிற சைக்கிளில் வைத்துக் கொண்டுசெல்வது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கொருக்குப்பேட்டை பகுதியில் சிறுவன் இருப்பதைக் கண்டறிந்த தனிப்படையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.



இதையடுத்து, குழந்தையைக் கடத்திய சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தண்டையார்பேட்டை கார்னேஷன் நகரில் உள்ள கஸ்தூரிபா தெருவில் வசித்துவரும் கூலித் தொழிலாளி குமார் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. விளையாடுவதற்காகவே, குழந்தையை சிறுவன் அழைத்துவந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய சைக்கிளின் நிறத்தை மாற்றியது ஏன் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, குழந்தையைக் கடத்தியதாகக் கூறப்பட்ட சிறுவனை, காவல்துறையினர் கைதுசெய்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன், நேற்றிரவு தந்தை இலியாஸிடம் குழந்தை முகமது சாதுவை ஒப்படைத்தார். குழந்தை கிடைத்ததால் மகிழ்ச்சியில் திளைத்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டதோடு, காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
“ரத்தம் கக்கி சாவேன்னு மிரட்டுறாங்க!”- கிராமத்து திருவிழாவை செய்தியாக்கிய பெண் நிருபரின் அனுபவம்

ஷோபனா எம்.ஆர்




கோயில் திருவிழாவில் சடங்கு என்கிற பெயரில் சிறுமிகளை மேலாடை இல்லாமல் ஊர்வலமாக அழைத்துச்செல்வது பற்றி செய்தி வெளிட்ட பெண் பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சம்பவம், பெண் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாகியிருக்கிறது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே இருக்கும் கிராமம் வெள்ளளூர். இங்கே உள்ள ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் நடத்தப்படும் சடங்கு சமூக ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 61 கிராமங்கள் சேர்ந்து நடத்தும் திருவிழாவில், 15 வயதுள்ள சிறுமிகளை மேல் சட்டையில்லாமல் ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள். இதுபற்றி ‘தி கோவை போஸ்ட்’ என்ற செய்தி இணையதளம், வீடியோ ஒன்றை கடந்த ஞாயிற்றுகிழமை வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து அந்தச் செய்தி வெளிட்ட பத்திரிகையாளர் மெய்யம்மையிடம் பேசினோம். “நான் மதுரையைச் சேர்ந்தவள். அந்த அம்மன் கோவிலில் நடக்கும் இந்தத் திருவிழாப் பற்றி எனக்குத் தெரியும். 15 வயதுடைய வளரிளம் சிறுமிகளை, மேல் சட்டையைக் களைந்து ஊர்வலமாக அழைச்சுட்டுப் போவாங்க. அந்தச் சிறுமிகளை ஏழு நாள்களுக்குக் கோவில் பூசாரியுடன் தங்கவைப்பாங்க. இதை, கடந்த ஞாயிற்றுகிழமை செய்தியாக வெளியிட்டேன். திங்கட்கிழமை முதல் எனக்கு போன் மூலமாகவும் ஃபேஸ்புக் மூலமாகவும் பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வர ஆரம்பிச்சது.

நான் எந்த மத நம்பிக்கைகளுக்கும் எதிரானவள் இல்ல. ஆனால், அந்தச் சிறுமிகளுக்குப் பூப்பெய்தும் வயது இது. கிட்டதட்ட 50,000 பேர் கூடும் ஒரு திருவிழாவில், இப்படி மேலாடை இல்லாமல் ஊர்வலமாக கூட்டிட்டுப்போறது கொடுமையானது. அந்தத் திருவிழாவை நான் நேரடியாகப் பார்த்தேன். அங்கே இருந்தவங்களே செல்போனில் அந்தச் சிறுமிகளைப் படம்பிடிக்கிறாங்க. அந்த சிறுமிகளின் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கலெக்டர்கூட அந்தச் சிறுமிகளுக்கு மேலாடை போட்டு, திருவிழா நடத்துங்கனு சொன்னாரு. ஆனா, அது எங்க வழக்கத்துக்கு மாறானதுனு மறுத்துட்டாங்க. இதெல்லாம் எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்துச்சு. அதனாலதான், இதைச் செய்தியாக்கினேன். எனக்குத் தொடர்ந்து மிரட்டல் வரவே, ஃபேஸ்புக் பக்கத்தை டிஆக்டிவேட் செய்துட்டேன்” என்கிறார்.

அந்தச் செய்தி நிறுவனத்தின் ஆசிரியரான வித்யாஸ்ரீ தர்மாராஜிக்கும் மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. “எனக்கு திங்கட்கிழமை இரவு ஒரு கால் வந்துச்சு. அவங்களின் கோயில் திருவிழா பற்றி அவங்களுடைய நியாயத்தைப் பேசினாங்க. நானும் என் தரப்பைச் சொல்லிட்டிருந்தேன். ஆனால், அதற்கடுத்த ராத்திரி முழுக்க பல அழைப்புகள் வந்துட்டே இருந்துச்சு. 'ரத்தம் கக்கி சாவே', “உங்க இணையதளத்தையே ஹேக் செஞ்சுடுவோம்’னு பல வகையில் மிரட்டினாங்க. நேற்று (செவ்வாய்கிழமை) மதியம், சைபர் கிரைமில் புகார் கொடுத்திருக்கோம். அவர்கள் இணையதளம் கால் வழியே பேசியிருக்காங்க. இதை Voice over Internet Protocol தொழில்நுட்பம்னு சொல்வாங்க. இதைப் பயன்படுத்தி போன் செய்தால், 12 எண்கள் காட்டும். அதனால் கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டம்னு சொன்னாங்க. இதற்கு காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும்னு நம்புறேன்.

ஆனா, நாங்க யாரையும் புண்படுத்துறதுக்கு இந்த செய்தியை வெளியிடலை. நாங்கள் குழந்தைகள் பாதுகாப்பைத்தான் வலியுறுத்துறோமே தவிர, எந்த மத நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிரான நோக்கத்தில் இதை வெளியிடலை'' என்றார் ஆதங்கத்துடன்.
கணக்கில் வராத விடுமுறை! மூன்று நாள்கள் பிரச்னைக்கு முடிவு கேட்கிறது பெண்கள் பாதுகாப்பு சங்கம்
vikatan



பெண்களுக்கு எவ்வளவுதான் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளித்துவிடும் சக்தியும், எண்ணமும் கட்டாயம் அவர்களுக்கு இருக்கும். ஆனால், மாதந்தோறும் ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னையை எதிர்கொண்டு, அதனைச் சமாளிக்கக்கூடிய சக்தியை இன்னமும் பெண்கள் கற்றுகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெண்களுக்கு குறிப்பிட்ட அந்த நேரங்களில் ஏற்படும் வலி, மனரீதியான அழுத்தம் (Mood swings). கோபம், சோர்வு என எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். நவீன மருத்துவம், வளர்ந்து விட்ட விஞ்ஞான தொழில்நுட்பம் என்று என்னதான் நாடுவளர்ச்சியடைந்துள்ள போதிலும், பெண்களின் இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் பெண்கள்தங்களின் வலியையும், பிரச்னையையும் வெளிக்காட்டாமல் இருந்தாலும், மாதந்தோறும் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்களால் பல பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.


பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் நாள்களில் விடுமுறை வழங்க வேண்டும் என்று பலரும் போராடி வருகிறார்கள். அதுபோன்ற வலியுறுத்தலை 'தமிழர் சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்கம்' தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2015-ம் ஆண்டில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்ட இந்த அமைப்பினர், தமிழக முதல்வரின் முதன்மைச் செயலருக்கு அளித்த மனுவில், "பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தற்போதைய உணவுப் பழக்கவழக்கத்தால் 10 முதல் 13 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகிறார்கள். இதுபோன்ற சூழலில், பெண் குழந்தைகளுக்கு போதிய விழிப்பு உணர்வு இருப்பதில்லை. தவிர, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளும் போதியளவு இருப்பதில்லை.

சில நேரங்களில் சக மாணவர்கள், ஆசிரியர்களால் மாணவிகள் கிண்டல், கேலிக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இதேபோல், தனியார் மற்றும் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த காலகட்டங்களில் வெளியே சொல்ல முடியாத பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. சில வெளிநாடுகளில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மூன்று நாள்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும் இந்த காலத்தில் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன்கருதி, தனியார் மற்றும் அரசுத்துறைக்கும், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாதவிடாய் காலங்களில் மூன்று நாள் விடுமுறை அளிக்க வழிவகை செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து 'தமிழர் சுதேசி பெண்கள் பாதுகாப்புச் சங்க' தலைவர் கலைச்செல்வியைத் தொடர்புகொண்டு பேசினோம், "எங்கள் சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண்கள் நலனுக்காகப் போராடி வருகிறது. சங்கத்தில் மேலும் பலரும் பெண்களுக்கு மூன்றுநாள் விடுமுறை கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். சங்கத்தின் சார்பில் பல அறவழிப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பள்ளி மாணவி ஒருவர், மாதவிடாய் காலத்தில் விடுப்பு எடுத்ததற்காக, அந்த மாணவியை அடித்து துன்புறுத்தியது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன.மாணவிகள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். மூன்று நாள்கள் விடுமுறை அளிக்க இயலாவிட்டாலும், ஒரு நாளாவது விடுப்பு அளித்தால், பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்றார்.

தனியார் மற்றும் அரசுத் துறைகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காவிட்டாலும்கூட, பெண்கள் தங்களின் மாதாந்திர உடல்ரீதியான பிரச்னைகளுக்காக விடுப்பு எடுக்கும்போது, அதை உயர் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டாலே போதுமானது. அப்படிச் செய்வதால், மற்ற நாள்களில் பெண்கள் தங்களின் பணிநேரத்தைப் பயனுள்ளதாக அமைத்துகொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயம் என்று உலக அளவில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டாலும், பெண்களுக்கே உரித்தான இயற்கையான உபாதைகள் மாறப்போவதில்லை. அந்த நாள்களில் பெண்களால் தங்களின் பணியை திட்டமிட்டுச் செய்ய இயலாத நிலைதான் இன்றளவும் உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, வீடுகளிலும், அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களிலும் பெண்களுக்கு சிரமங்களை அளிக்காத வகையில் பணி வழங்கினாலே, அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
கன்னியாகுமரியில் 10 எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகள் மூடல்..! பொதுமக்கள் அதிருப்தி

த.ராம் ரா.ராம்குமார்

ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் என்கிற எஸ்.பி.டி உள்பட 5 அசோசியேட் வங்கிகள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு விட்டன. இந்த இணைப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தில் ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையும், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் 9 கிளைகளும் மூடப்படும் நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. அதைத் தொடர்ந்து, எஸ்.பி.டி உள்ளிட்ட 5 அசோசியேட் வங்கிகளின் பணியாளர்கள் கட்டாயமாக ஓய்வுபெற்றுச் செல்லும் வகையில் வி.ஆர்.எஸ் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.




கேரளாவில், மொத்தம் உள்ள 852 எஸ்.பி.டி வங்கிக் கிளைகளில் 204ஐ மூடவும், இதே போன்று தமிழகத்தில் மொத்தம் 176 கிளைகளில் 58 கிளைகளை மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூரின் கிளைகள் 37 இருக்கின்றன. இதில் எஸ்.பி.டி 9 மற்றும் எஸ்.பி.ஐ ஒன்று என மொத்தம் 10 கிளைகள் மூடப்படுகின்றன. அதோடு, ஸ்டேட் பேங்க ஆஃப் திருவிதாங்கூரின் மண்டல அலுவலகமும் மூடப்படுகிறது.

அதைப்போன்று ஏ.டி.எம்-களும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வங்கிக் கிளைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவுகிறது.

கல்விச் செய்தி: 7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...

கல்விச் செய்தி: 7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...: மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழ...
7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது. இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.

கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 COURTESY: kALVISEITHI

Anna University relaxes arrear rule

Those who joined in 2010 and earlier can write exams next year

Anna University has decided to give a one-time exemption from its earlier decision to disallow students who joined in 2010 and earlier from taking up arrear exams.
Minister for Higher Education K.P. Anbalagan said on Wednesday that the government has granted an extension to the students on humanitarian grounds.
“Students are generally given a maximum of of seven years to finish their arrears and complete their degree. However, those who have exhausted this window will be permitted to write their examination for only two semesters — sometime around February 2018 and August 2018 — as a special case,” he said.
One centre in each district
A schedule for the arrear examinations and details of registration for the subjects, including the process to pay examination fees, will be announced at a later date and the exam will be conducted at one centre in every district.
Earlier this year, the university had decided to implement the UGC norm that specifies that the engineering candidates and architecture students should complete their degree within seven and eight years of joining respectively.
The reason given for implementing the norm was that conducting arrear examinations for a long period of time affected the regular academic schedule and curtailed vacation time for regular students. When the university released the timetable for the November/ December semester, it did not contain details of exams for students of those who had joined in 2010 and before. Mr. Anbalagan further said that there were approximately around 40,000 students who had joined in 2010 and before who had to clear their arrears.
“As no further chance will be given to students from the category, they should utilise this opportunity and take utmost care to clear all the subjects,” he added.

Maintain status quo in DME appointment, says High Court

Direction passed on govt.’s appeal against single judge’s order

The State government filed an appeal before the Madurai Bench of the Madras High Court on Wednesday against the order of the Single Bench which directed Health and Family Welfare Department to appoint Revwathy Kailairajan, Dean, Karur Medical College, as Director of Medical Education (DME).
The Division Bench of Justices K. Kalyanasundaram and S.S. Sundar, sitting as vacation Judges, ordered status quo in the case till further hearing.
In its appeal, the government had stated that the appointment of Edwin Joe, Dean, Coimbatore Medical College and Hospital, as the DME was in accordance with rules and regulations. There was no violation of rules in his appointment and Dr. Edwin Joe was appointed as Dean in 2010 and Dr. Revwathy in 2013.
This point proved that Dr. Edwin Joe was qualified and had seniority in accordance with the Tamil Nadu Medical Service Rules for appointment as the DME, the government claimed.
The Single Bench of Justice R. Mahadevan had earlier quashed the appointment of Dr. Edwin Joe as the DME and directed Health and Family Welfare Department to appoint Dr. Revwathy Kailairajan in the post after she had filed a petition stating that her eligibility was not considered for the appointment. The appeal was posted for further hearing to October 6.

Newborn dies as incubator ‘overheats’

Vastalya Hospital in Pune where a newborn baby died.Special Arrangement  

Pune child suffers over 80% burns; parents accuse hospital staff of negligence

A newborn burnt to death after an incubator in a hospital reportedly caught fire due to overheating in Pune on Wednesday, police said.
The baby was placed in the incubator on Tuesday morning as it developed breathing difficulty after its mother suffered seizure, police said.
The child suffered more than 80% burns and succumbed to the injuries despite treatment.
The incident occurred at the Vatsalya Hospital in Budhwar Peth area.
According to preliminary investigation, a short circuit may have caused the incubator to overheat.
A case was lodged at the Visrambaug Wada police station under sections 287 (negligent conduct with respect to machinery) and 338 (causing grievous hurt by act endangering life or personal safety of others) against the hospital’s gynaecologist Dr. Gaurav Chopade and his staff.
No arrests have been made in this regard so far.
‘Technical problems’
“This is the first time such an unfortunate incident has occurred. The warmer overheated owing to technical problems. However, there was no negligence whatsoever from the side of the hospital staff,” said Dr. Chopade.
The newborn’s parents, Vijayendra Kadam and his wife, Swati, accused the hospital staff of negligence.
The family alleged that the incubator was “faulty” and that they saw smoke coming out after it overheated followed by “a minor explosion-like sound.”

SAVEETHA UNIVERSITY DECCAN CHRONICLE

Father prays to court to bring back dead son’s body from Iran

tnn | Sep 28, 2017, 00:58 IST

Madurai: The family of a 22-year-old man, who died under mysterious circumstances in Iran, has filed a habeas corpus petition before the Madurai bench of the Madras high court, seeking a direction to the government to bring his body back. On this, the court ordered notice to the external affairs secretary and Tirunelveli superintendent of police and adjourned the case by a week.

When the case came up for hearing before a division bench of justices K Kalyanasundaram and S S Sundar on Wednesday, the petitioner B Sankarapandi from Tirunelveli told the court that his son, Ponraj was a marine engineer. He was sent to Lian Ocean Star Shipping Company, Port of Bushehr, Iran for a job through agent Narayanasami of Karaikal on November 14 last year.

On August 20 morning, the agent informed the petitioner over phone that Ponraj along with eight workers were admitted in a hospital for kidney ailments as they were under the influence of alcohol. By noon, he communicated to Sankarapandi that Ponraj and four workers were dead.

Suspecting something amiss in his son's death, the petitioner knocked on the doors of the district collector immediately. In his petition to the collector, he said Ponraj was a teetotaller and was in contact with him till August 19 night. His son used to complain about the food served in the company and a dispute between Indian workers and the chef of the company. It resulted in the dismissal of the chef. Later, the said chef rejoined duty on August 19.

The petitioner received a response from the government secretary with a delay of two weeks and thereafter received response from the collector on September 20. Their communications with Indian embassy in Tehran revealed a lot of discrepancies over Ponraj's death. The embassy had said that the death was unnatural. Since the time the news of the death came, the petitioner's wife had fallen sick. Now, the petitioner has been left in the lurch for the past one month. He did not know the exact status of his son, he said.
Govt forces RGUHS to transfer Rs 580cr without syndicate's nod

TNN | Sep 28, 2017, 06:13 IST



BENGALURU: The state government, which has been pushing for shifting of Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) campus to Ramanagara, has asked its acting vice-chancellor to transfer Rs 580 crore from its corpus fund for the construction of a new campus and hospital without the approval of the syndicate council.

The government has in structed the varsity to transfer Rs 200 crore to the public works department and the remaining into an escrow account. This, members from the syndicate pointed out, was in violation of the high court order.

On June 7, 2017, the Karnataka HC said that the university must bear the cost of only the administrative block (which according to RGUHS costs about Rs 60 crore) and that if there is need for more funds for the proposed campus in Ramanagara, the government should discuss the issue with the varsity. The medical education de partment then wrote a let ter to the university on July 31, asking the vice-chancellor to transfer Rs 580 crore. RGUHS, however, did not take any decision and a meeting under the chairmanship of chief minister Siddaramaiah was held on July 12, where the university was instructed to transfer the money .

However, on August 9, acting V-C M K Ramesh wrote to the department, saying it couldn't be done without the syndicate's approval. Notwithstanding this letter, the government convened a meeting under the chairmanship of additional chief secretary (medical education) on September 7 and again instructed the university to transfer the money .

Documents with TOI show sity hasn't yet transferred the money as the V-C is going by the book," sources said.

With repeated phone calls and other communication not having the desired response from the V-C, the department wrote to him on September 9, directing the university to transfer money at the earliest.


RGUHS registrar Noor Mansoor said: "The RGUHS is an autonomous institution and does not receive funds from the government. However, in 2014 the government brought an amendment to the RGUHS Act which now allows the government to give directions about how to use the university's funds." Sources, however, argue that the amendment does not take away statutory powers given to the syndicate and government directions cannot overrule the syndicate. that the government has been forcing the university to transfer the money . Following this, sources in the know of the issue, said there have been several phone calls between the V-C and the government, but no decision was taken. "There has been a lot of communication but the univer

Meeting held

The RGUHS finance panel held a meeting on Wednesday to decide whether the university should transfer the money as demanded by the government.RGUHS registrar Noor Mansoor confirmed to TOI the meeting was held on Wednesday. He, however, did not reveal if the panel decided to transfer the money. The acting V-C could not be contacted after the meeting.
Tamil Nadu govt issues GOs on Jayalalithaa death probe, terms of reference

Meera Vankipuram| TNN | Sep 27, 2017, 22:58 IST



Supporters of former Tamil Nadu Chief Minister J Jayalalithaa pay tribute at the memorial where she was laid t... Read More

CHENNAI: The Tamil Nadu government on Wednesday released a copy of the government order, defining the terms of reference for the one-man commission led by retired judge of Madras high court Justice A Arumughaswamy probing former chief minister J Jayalalithaa's death. The order said the commission will "inquire into the circumstances and situation leading to Jayalalithaa's hospitalisation on September 22, 2016 and subsequent treatment provided till her unfortunate demise on December 5, 2016."

Another order, dated September 25, said the commission will complete its inquiry and submit its report (both English and Tamil) to the government within three months from the date of publication of the order notification in the TN government gazette. The Palaniswami government had, on Monday, made the brief announcement appointing the retired judge to probe Jayalalithaa's death, without releasing the details of the orders.

The first order, dated September 25, stated that the government had decided "that there should be an independent inquiry into the unfortunate demise" of the former chief minister. It stated that the commission of inquiry will be headed by a retired judge of the Madras high court.

TOP COMMENT  The circumstances leading to admission of Jayalalithaa and the 75 days treatments in Apollo Hospital and her death as revealed all will remains as suspense thriller for generation to come. Jayalalith... Read MoreRajaram Venkatram

The second order, dated September 27, stipulated the terms of reference for the probe "into the circumstances and situation leading to the hospitalization".

A month ago, CM Edappadi K Palaniswami had announced that his government would set up an inquiry panel headed by a retired judge to probe the circumstances leading to the demise of Jayalalithaa.
Pondy med scam: Will not arrest accused till Oct 9, CBI tells court

TNN | Sep 28, 2017, 00:05 IST

Chennai: A week after registering cases against five top officials of the Puducherry government under Prevention of Corruption Act for alleged irregularities in the recent admissions to postgraduate medical courses, the CBI on Wednesday gave an undertaking to the Madras high court that the accused will not be arrested till October 9.

Special public prosecutor for CBI cases made the submission on an anticipatory bail plea moved by former Puducherry health secretary Dr B R Babu, director of health and family welfare services Dr K V Raman and three others fearing arrest by the CBI. All the five are members of the Central Admissions Committee (CENTAC) through which the admission were made based on NEET marks.

When the plea came up for hearing before vacation judge Justice G R Swaminathan, the special prosecutor sought adjournment till October 9 to get instructions from the investigating agency.

The judge adjourned the bail pleas. According to the petitioners, A case has been registered against them for the alleged irregularities in medical admission under Section 120-B read with 420 of IPC and Section 13 (2) read with Section 13 (1) (d) of the Prevention of Corruption Act, 1988.

Denying the allegations, the petitioners said, "The case is registered on the basis of source information, which alleges that we conspired with the private medical institutions and facilitated admission of students not sponsored by CENTAC in the PG medical courses.

CENTAC allots students as per merit/reservation. This year, some of the allotted students complained that they were not being admitted and demanded higher fees.


Eight graduates held for kidnapping businessman’s father

TNN | Updated: Sep 28, 2017, 08:13 IST



CHENNAI: A gang of eight graduates allegedly kidnapped the father of a businessman after the businessman cheated them of nearly Rs 2 lakh promising them jobs in K K Nagar on Wednesday morning.

Police have also detained the businessman's father on a cheating complaint given by the graduates.

Police said Imran, son of Muhammed Rafiq, 50, runs a placement firm in Valasaravakkam. He sends graduates abroad for employment. The graduates went to register themselves in the firm to get jobs abroad. Imran reportedly collected Rs 1.60 lakh from graduates claiming that he would get them jobs overseas.

"He failed to get them jobs and kept dodging them," said an investigating officer.

Since then they were searching for Imran and visted his office several times but in vain, as he failed to come for talks with them. Meanwhile when the graduates went looking for him in his house, they found his car in a house in KK Nagar.

However, Imran was not there so the gang decided to kidnap his father in Mohammad Rafiq on Tuesday night from K K Nagar.

Mohammad Rafiq's friend Lal Bhadur lodged a missing complaint claiming that a gang in a Maruti Swift car bundled his friend into the car and escaped. Since Imran remained unreachable over phone, the gang kept travelling with his father for a while. They kept him in a house and tried to call his son asking him to come with the money. Meanwhile, police who were tracing Imran's mobile number tracked their location.

A special police team which reached the scene arrested Prasanna, 27, native of Mayiladuthurai and K Aravind, 24, resident of Kodambakkam, K Hariharan of Red Hills, V Gokul Prasad, 19 of Peravallur, R Vinoth Raj, 20 of Villupuram, P Vagisan, 20 of Poonamallee, R Kumar, 20 of Agaram, S Vigneshwaran, 26 of Kodambakam.

During enquiry it was found that the graduates had filed a complaint against Imran with the Central Crime Branch (CCB) police on August 24. The CCB team had started inquiry into the issue but Imran was absconding so the case was not pursued further. Frustrated over this, the graduates hatched a plan to get back their money.

"Since Mohammad's son is involved in the offence, we are questioning his father to trace the whereabouts of his son. Some more people are involved in the kidnap. We have launched a manhunt for six of them, who are still at large," said the officer.
Unprepared CMBT to handle footfall of 3.5 lakh commuters for festival rush

Yogesh Kabirdoss| TNN | Sep 28, 2017, 00:07 IST

Chennai: Boarding buses at the Chennai Mofussil Bus Terminus (CMBT) could be a nightmare for commuters as thousands of passengers would make a beeline to Koyembedu from Thursday for visiting their hometowns on the account of Dasara holidays. Apart from the ordeal, people may have to put up with hardships at the terminus as it is not prepared to handle the massive footfall thanks to poor amenities.

Filthy toilets, poor housekeeping and stale food greet passengers at the CMBT. The facility is maintained by the Chennai Metropolitan Development Authority (CMDA). Munnar-bound passenger Ranjth said, "The housekeeping services at the terminus are very poor. The biggest problem is the smelly toilets, while the floors are dirty," he said.

During weekends, CMBT records an average footfall of two lakh passengers. However, it increases by one and half times during the festival season with long weekends like the Durga pooja holidays beginning Friday. Another passenger Anbu complained that the quality of food sold at the stalls in the terminus was not good and also costly. "The cost of a packet of tamarind rice is Rs 60 and it tastes poor. Passengers have no choice as they are left with no other option within the premises of the terminus," he added.

A visit to the place on Wednesday found water leaking from the ceiling near the bay for buses departing to southern districts. The terminus with a capacity to park 450 buses is likely to operate at least 3,000 buses, of which 1,000 are special ones, to different parts of the state from Thursday. The special buses have already started arriving at the terminus since Wednesday morning.

When contacted, officials at CMBT said adequate basic amenities are available at the terminus. There are no issues with housekeeping, the sources added.
Ahmedabad-Mumbai flight 'gets ticketless flyer': A bird
Saurabh Sinha| TNN | Updated: Sep 28, 2017, 07:05 IST

HIGHLIGHTS

The bird hopped inside the aircraft and is learnt to have remained under a seat in the front cabin.
Once the plane landed in Mumbai and the aircraft gate was opened, the bird flew out of the plane.
Sources said this unprecedented incident took place on August 21.

NEW DELHI: A bird taking to the skies is natural but not if it does so in an aircraft and that too in the front end of the passenger cabin! This flight of fancy reportedly took place on an Ahmedabad-Mumbai flight last month.

The bird hopped inside the aircraft at Ahmedabad airport and is learnt to have remained under a seat in the front cabin.

However by the time this ticketless passenger was spotted, the aircraft's nearest airport was Mumbai and so the crew decided to proceed to the destination. Once the plane landed in Mumbai and the aircraft gate was opened, the bird flew out of the plane.

TOP COMMENT  Thank GOD the bird was cultured enough so it did not cause any nuisance for fellow passengers unlike few human beings.Syed Masood Hassan

Sources said this unprecedented incident took place on August 21. A senior official of an airline on which sources claimed the bird flew said that the "same was never confirmed".


நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடம்: சசிகலா பரோல் கோரி விண்ணப்பிக்கவில்லை - கர்நாடக சிறைத்துறை அதிகாரி தகவல்

Published : 28 Sep 2017 07:56 IST

இரா.வினோத்பெங்களூரு



சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால், பரோலில் வெளியே வர சசிகலா விண்ணப்பித்து இருப்பதாக வெளியான தகவலை கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக் மறுத்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினம் சசிகலாவின் கணவர் நடராஜன் சிறை வளாகத்துக்கு வந்திருந்தார்.அதன் பிறகு சசிகலாவை சந்திக்க அவர் பெங்களூரு சிறைக்கு வரவில்லை.


இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து, நடராஜனை பார்க்க சசிகலா கர்நாடக சிறை நிர்வாகத்திடம் பரோலில் செல்ல அனுமதி கோரி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை கூடுதல் டிஜிபி என்.எஸ்.மேக்ரிக், 'தி இந்து'விடம் கூறியதாவது:

இதுவரை சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி, ஒரு தண்டனை கைதி தனக்கு வழங்கப்பட்ட தண்டனையில் 3-ல் 2 பங்கு காலத்தை சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதன்பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை நிர்வாகமும், நல்லெண்ண ஆலோசனை குழுவும் அனுமதி அளிக்கும் பட்சத்தில் பரோல் வழங்கப்படும்.

ஆனால் சசிகலா விவகாரத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் ஓராண்டு கூட முழுமையாக தண்டனை அனுபவிக்கவில்லை. எனவே சசிகலாவின் ரத்த உறவினருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, வேறு ஏதேனும் அவசர தேவையாகவோ இருந்தால் சசிகலா ‘அவசர பரோல்' கேட்க முடியும்.

இதற்கு பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றம், சிறைத்துறை நிர்வாகம் மற்றும் நல்லெண்ண ஆலோசனை குழு அனுமதி அளிக்க வேண்டும். இந்த வகை பரோலில் 3 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை வெளியே செல்ல முடியும். சம்பந்தப்பட்ட கைதிக்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தாலும் பரோல் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்றார்.

இதனிடையே, சசிகலாவுக்கு நெருக்கமான பெங்களூருவை சேர்ந்த சிலர், ‘‘உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறையில் சசிகலா உடல் எடை குறைந்து காணப்படுகிறார். தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையும் அவருக்கு எதிராக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நடராஜனை சென்று பார்க்க வேண்டுமா என யோசித்து வருகிறார். இருப்பினும் அவரது குடும்பத்தினருடன் கலந்து பேசி, பரோலில் செல்வது தொடர்பாக சசிகலாவே இறுதி முடிவெடுப்பார்’’என கூறுகின்றனர்.
அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது: ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர்

Published : 27 Sep 2017 16:35 IST



அனிதா

அரியலூர் மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது என ஆதிதிராவிட ஆணைய துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாணவி அனிதா தற்கொலை குறித்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதை தமிழக அரசிடம் சமர்ப்பிப்போம். மாணவி அனிதா மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது.

வேளாண் படிப்பில் சேரத் தயாரான மாணவி அனிதா ஏன் தற்கொலை செய்துகொண்டார்? அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்று விசாரிக்க ஆணையத்திடம் கேட்டுள்ளோம். கல்வியில் எஸ்.சி., எஸ்,டி., மாணவர்களுக்கு 18% இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்துவருகிறோம்" என்றார்.

உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காத நிலையில் செப். 1-ம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் இன்று 4-ஆவது ஒரு நாள் ஆட்டம் : வரலாறு படைக்குமா இந்தியா?
By DIN | Published on : 28th September 2017 01:03 AM |



பெங்களூரில் புதன்கிழமை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய கேப்டன் விராட் கோலி.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் வியாக்கிழமை நடைபெறுகிறது.

இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறும். இந்திய அணி தனது 926-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளது.
இதுவரையில் 7 அணிகள் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வாகை சூடியுள்ளன. ஆஸ்திரேலியா 6 முறையும், தென் ஆப்பிரிக்கா 5 முறையும், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் தலா இரு முறையும், இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகியவை தலா ஒரு முறையும் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளன. எனினும் தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி கண்டதே இன்றளவும் சாதனையாக உள்ளது. 

கடந்த ஜூலைக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.
தற்போதைய நிலையில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரையும் கைப்பற்றிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியும் இன்றி இந்திய அணி களமிறங்கும். ஆனால் ஆஸ்திரேலிய அணி, இந்தத் தொடரில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்குமானால், தரவரிசையில் இறக்கத்தைச் சந்திக்கும். அதாவது 3-ஆவது இடத்தில் இருந்து 4-ஆவது இடத்துக்கு தள்ளப்படும். எனவே கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா. 

வலுவான பேட்டிங்: இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி வருகின்றனர். கடந்த ஆட்டத்தில் ரஹானே 70, ரோஹித் சர்மா 71 ரன்கள் குவித்தனர். அவர்கள் இந்த ஆட்டத்திலும் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். கடந்த ஆட்டத்தில் முன்வரிசையில் களமிறங்கி 72 பந்துகளில் 78 ரன்கள் குவித்த ஹார்திக் பாண்டியா இந்த ஆட்டத்திலும் சோதனை அடிப்படையில் முன்வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் வாய்ப்பு கிடைக்காத கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் மணீஷ் பாண்டே நீக்கப்படுவார். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, பாண்டியா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் கூட்டணியும் பலம் சேர்க்கிறது. இந்தூரில் நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வீழ்த்த முடியாமல் தடுமாறினாலும், கடைசிக் கட்டத்தில் அபாரமாக செயல்பட்டு அந்த அணியை கட்டுப்படுத்தினர். எனவே இந்த ஆட்டத்திலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரோன் ஃபிஞ்ச்: ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபிஞ்சின் வருகையால் நம்பிக்கை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் சதமடித்த அவர், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடி ரன் குவிக்க முயற்சிப்பார் என நம்பலாம். மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னர், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரும் ஓரளவு சிறப்பாக ஆடி வருகின்றனர். ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய 3 பேரும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். 

மிடில் ஆர்டரில் டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பின்வரிசையில் மார்கஸ் ஸ்டோனிஸ் சிறப்பாக ஆடினாலும், அவருக்கு சரியான ஜோடி கிடைக்காததால், ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக திருப்பமுடியவில்லை.
கம்மின்ஸுக்கு ஓய்வு? வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்படலாம் என தெரிகிறது. அவருக்கு ஓய்வளிக்கப்படும்பட்சத்தில் ஜேம்ஸ் ஃபாக்னர் இடம்பெற வாய்ப்புள்ளது. 

மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நாதன் கோல்ட்டர் நீல், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆஷ்டன் அகர் வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகிவிட்டார். அதனால் சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா (உத்தேச லெவன்): அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா.
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), கிளன் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (விக்கெட் கீப்பர்), பட் கம்மின்ஸ்/ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.
மைதானம் எப்படி? 

பெங்களூரு சின்னசாமி மைதானம் ஓரளவு மெதுவான ஆடுகளமாக இருக்கும் என தெரிகிறது. சமீபத்திய காலங்களில் இங்கு நடைபெற்ற ஆட்டங்களில் ரன் குவிப்பது கடினமாக இருந்தது.
இந்த மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 6 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. 

ஓர் ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. 

மிரட்டும் மழை... 

பெங்களூரில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே போட்டி நடைபெறுவது வருண பகவானின் கையில்தான் உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம்!

பெங்களூரு சின்னசாமி மைதானம் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம் ஆகும். இங்கு 2013 நவம்பர் 2-இல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 158 பந்துகளில் 16 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

சங்கரன்கோவிலிருந்து பொறியியல் கல்லூரிக்கு பேருந்து இயக்கம்

By DIN | Published on : 28th September 2017 07:38 AM

சங்கரன்கோவிலிருந்து சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு அரசுப் பேருந்து சேவையை புதன்கிழமை செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஆகியோர் தொடக்கிவைத்தனர்.

இந்த பேருந்து சங்கரன்கோவிலில் நாள்தோறும் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, கழுகுமலை, குருவிகுளம் வழியே கல்லூரியை காலை 8.50 மணிக்கு வந்தடையும். இதுபோல கல்லூரி வளாகத்திருந்து மாலை 4.10 மணிக்கு புறப்பட்டு, சங்கரன்கோவிலுக்கு மாலை 5.20 மணிக்கு சென்றடையும். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆர். சோலைச்சாமி, தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கிளை பொதுமேலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவிலிருந்து கழுகுமலை வழியே கல்லூரிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பான் எண் தேவைக்கான 11 முக்கிய அம்சங்கள்!

By DIN | Published on : 27th September 2017 06:21 PM



பெர்மனன்ட் அகௌன்ட் நம்பர் எனப்படும் நிரந்தர பான் கணக்கு எண் தற்போது அனைத்து வகையான பணப்பரிமாற்றங்களுக்கும் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.50,000 அல்லது அதற்கு மேலான பணப்பரிவர்தனைகளுக்கு இந்த பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையால் இந்த நிரந்தர பான் கணக்கு எண் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தனிமனிதனின் பணப்பரிவர்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசாங்கத்தால் கண்காணிக்க முடியும்.

புதிய வீடு, கார் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும்போது, வெளிநாட்டு பண மாற்றத்தின்போது, வர்த்தகத்தின் போது மற்றும் பணப்பரிவர்தனைகள் உள்ளிட்ட அனைத்து பொருளாதார சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு இந்த பான் எண் உபயோகப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற 11 முக்கிய காரணங்களுக்கு இந்த பான் எண் அவசியம் தேவைப்படுகிறது. ஏனெனில் அனைத்தும் பான் எண் இல்லாமல் செய்துவிட முடியாது. மேலும், அன்றாட வாழ்வின் முக்கிய அம்சங்களாகவும் இவை திகழ்கின்றன.

புதிதாக வங்கிக் கணக்கு துவங்க:

நமது பணப்பரிமாற்றங்களுக்காகவும், சேமிப்பு தொடர்பாகவும் ஏதேனும் வங்கி ஒன்றில் புதிய கணக்குத் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு அவசியம் பான் எண் சமர்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50,000-க்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்டவரின் பான் எண் குறிப்பிட வேண்டும்.

சொத்து வாங்க, விற்க:

புதிதாக வீடு, நிலம் உள்ளிட்ட அசையா சொத்து ஒன்றை வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும் குறிப்பாக அந்தத் தொகை ரூ. 5 லட்சத்துக்கும் மேல் இருக்கையில் பத்திரப்பதிவின் போது அவசிம் பான் எண் சமர்பிக்கப்பட வேண்டும்.

வாகனம் வாங்க, விற்க:

ரூ. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விலையில் உள்ள ஏதேனும் வாகனம் ஒன்றை வங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் அதன் பதிவுடன் கட்டாயம் பான் எண் இணைக்கப்பட வேண்டும்.

புதிய தொலைபேசி இணைப்புக்கு:

தனிமனிதருக்கு அல்லது வீட்டுக்கு தொலைபேசி, செல்ஃபோன் உள்ளிட்ட இணைப்பு வாங்கும்போது பான் எண் வழங்க வேண்டும். தீவிரவாத செயல்கள் மற்றும் தனிமனித பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் ஏற்படாதவாறு மத்திய அரசால் இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பங்கு வர்த்தகம்:

பங்கு வர்த்தகத்தில் பிணாமிகளால் அதிகளவில் கறுப்புப் பணப்புழக்கம் ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தோடு, ரூ. 50,000-ல் இருந்து தனிநபர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போதும் ஒவ்வொரு முறையும் பான் எண் சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா:

வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்ளும்போது தினசரி தனிநபர் ஒருவர் ரூ. 25,000-க்கும் மேல் செலவு செய்ய நேர்ந்தால் அவர் அவசியம் பான் எண் குறிப்பிட வேண்டும்.

சொகுசு விடுதிகளுக்கு:

உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம் அல்லது வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் ஒருவர் தனது தேவைக்காக சொகுசு விடுதிகளில் தங்கும்போது அதன் செலவுத் தொகை ரூ. 25,000-ஐ தாண்டினால் பான் எண் தெரிவிக்க வேண்டும்.

சந்தா, தரகர் கட்டணங்களில்:

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ரூ. 50,000 மற்றும் அதற்கும் மேல் பங்குகளை வாங்கும்போதும், ரிசர்வ் வங்கியின் மூலம் ஏற்படும் பணப்பரிவர்த்தனை, காப்பீட்டூத் திட்டம் வாங்கிய ஒரு வருடத்துக்குள் அதன் சந்தா தொகையாக ரூ. 50,000 அல்லது அதற்கு மேல் செலுத்தும்போது, மொத்த சந்தை மதிப்பில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தரகரிடம் ஆபரணங்கள் வாங்க, விற்பது போன்ற செயல்களுக்கு பான் எண் கட்டாயம் தேவைப்படுகிறது.

பங்குச் சந்தை கணக்கு:

பங்குச் சந்தையில் ஈடுபட்டு தொழில் செய்வது தொடர்பாக புதிய பங்கு வர்த்தக கணக்கு ஒன்றை துவங்கும் போது அந்த குறிப்பிட்ட பங்குச் சந்தை தரகரிடம் பான் எண் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவரது பங்கு வர்த்தக கணக்கு உபயோகத்தில் இருக்காது.

கடன்:

அனைத்து கடன்களுக்கும் பொருந்தும். விவசாயக் கடன் தொடங்கி கல்விக் கடன் மற்றும் தனிநபர் கடன் என அனைத்துக்கும் பான் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக அந்த வங்கியில் இருந்து தகவல் வந்தால் உடனடியாக பான் எண் இணைக்கப்பட வேண்டும்.

கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பெற:

வங்கியில் இருந்து புதிதாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பெற பான் எண் வழங்க வேண்டும். இல்லையெனில் அந்த கார்டு பயன்படாமல் இருக்கும்.


ஜியோ போன்–சலுகைகளும் சர்ச்சைகளும்: சில விளக்கங்கள்!
By DIN | Published on : 27th September 2017 07:24 PM



சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஜியோ போன் உடன் வரக்கூடிய சலுகைகள் மற்றும் அதன் குறைந்த பட்ச பயன்பாடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் 'ஜியோ போன்' என்னும் மலிவு விலை போன் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்காக ரூ.1500-ஐ பயனாளர்கள் காப்புக் கட்டணமாக செலுத்த வேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஜியோவின் வழக்கமான சிறப்பு சலுகைகளும் அதனுடன் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டது.மூன்று வருட பயன்பாட்டிற்குப் பிறகு அந்த போனைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் பயனாளர்கள் தாங்கள் செலுத்திய காப்புக் கட்டணமான ரூ.1500-ஐ திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காப்புக் கட்டணமான ரூ.1500-ஐ திரும்பப் பெற பயனாளர்களுக்கு மூன்று வருட காலம் என்பதனை தற்பொழுது ரிலையன்ஸ் நிறுவனம் மாற்றி, அதற்கும் முன்னதாகவே வெளியேறும் படியான சில புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு:

முதல் ஒரு வருட காலத்திற்குள் ஜியோ போனை திருப்பிக் கொடுக்க விரும்புவர்களுக்கு எந்த விதமான காப்புக் கட்டணமும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

முதல் 12 மாதங்கள் முதல் 24 மாதங்களுக்குள் திரும்பிச் செலுத்த விரும்புவர்களுக்கு, ரூ.500 காப்புக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

அதேபோல 24 மாதங்கள் முதல் 36 மாதங்களுக்குள் திரும்பிச் செலுத்த விரும்புவர்களுக்கு, ரூ.1000 காப்புக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும்.

முதலில் அறிவிக்கப்பட்ட திட்டப்படி முழுதாக 36 மாதங்கள் அதாவது மூன்று வருட பயன்பாட்டிற்குப் பிறகு அந்த போனைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் பயனாளர்கள் தாங்கள் செலுத்திய காப்புக் கட்டணமான ரூ.1500-ஐ முழுமையாகத் திரும்பப் பெறலாம்

அதேநேரம் ஜியோ போனின் குறைந்த பட்ச பயன்பாடு தொடர்பாக முக்கியமான மற்றொரு அறிவிப்பினையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜியோ போன்களின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத பதுக்கலைத் தடுக்கவும், ஜியோவின் மிகச் சிறந்த வசதிகளைப் பயனாளர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் குறைந்த பட்ச பயன்பாடு என்பதனை வரையறை செய்துள்ளோம். அதன்படி பயனாளர் ஜியோவின் பல்வேறு விதமான திட்டங்களில் இருந்து தனக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்து, ஒரு வருடத்திற்கு ரூ.1500-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

அதனை அவர்கள் ஜியோவின் எந்த விதமான தொகுப்புத் திட்டங்களில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளும் வசதியினை நாங்கள் வழங்குகிறோம். உதாரணமாக ஒரு பயனாளர் ஜியோவின் ரூ.153 மாதாந்திர திட்டத்தினை தனக்கு தேர்வு செய்தால், பின்னர் ஒரு வருடத்தில் 10 முறை இந்த திட்டத்தில் அவர்கள் ரீசார்ஜ் செய்தால் போதும். இதன்மூலம் ஒருவேளை அவர் வருட இறுதியில் போனைத் திரும்ப அளிக்க விரும்பினால், அதற்கான காப்புக் கட்டண பெறுதலுக்குத் தயாராகிறார். இது வழக்கமாக ஒரு வருடத்திற்கு 13 தடவை ரீசார்ஜ் செய்வதை விட குறைவான தொகை கொண்டாதாகும்.

இது மற்ற 2G சேவை நிறுவனங்களைக் காட்டிலும் குறைவான தொகை என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் முக்கியமாக ஜியோ போனுக்கு சேவை வசதிகளை தடையற வழங்கும் பொருட்டு நாடு முழுவதும் 12000 சேவை மையங்கள் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு பயனாளர் அவர் இருக்கும் பகுதியின் 10 கிமீ சுற்றளவுக்குள் ஒரு ஜியோ சேவை மையத்தினை அணுகி பயன் பெறலாம்.



ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு

By DIN | Published on : 27th September 2017 10:25 PM



ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விசாரணை ஆணையத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.

அதன் அடிப்படையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் கமிஷன், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மரணம் அடைந்த நாள் வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரித்து, தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

நாளை முதல் 4 நாள்களுக்கு வங்கிகள் விடுமுறை
By DIN | Published on : 28th September 2017 04:40 AM



பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும்.
அனைத்து வங்கிகளும் வியாழக்கிழமை (செப்.28) வழக்கம்போல் செயல்படும். ஆயுத பூஜையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.29), விஜயதசமி (சனிக்கிழமை-செப்.30), ஞாயிற்றுக்கிழமை (அக்.1), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நான்கு நாள்களிலும் வங்கிச் சேவை இருக்காது. விடுமுறை நாள்களில் ஒரு வங்கியிலிருந்து பிற வங்கிகளுக்கு பண பரிவர்த்தனைக்கான 'என்இஎஃப்டி' சேவை இருக்காது; எனினும் 'ஐஎம்பிஎஸ்' எனப்படும் உடனடி பண பரிமாற்ற சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி பலன் அடையலாம்.

விடுமுறை நாள்களில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவுக்கு பணம் நிரப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.


நம்பிக்கை ஊட்டுவோம்!
By தி.வே. விஜயலட்சுமி | Published on : 28th September 2017 01:14 AM

அன்மையில், காலாண்டுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மனம் உடைந்த சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இந்துமதி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சியை நாளிதழில் படித்து மனம் நொறுங்கியது. 

மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவி, மதிப்பெண் குறைந்ததற்கு மனமுடைந்து, தற்கொலை முடிவுக்கு வந்ததற்கான காரணங்களை ஆய்ந்து பார்க்க வேண்டும். 

மதிப்பெண்கள் குறைந்ததால் ஆசிரியர் ஏவிய கடுஞ்சொற்கள் மனத்தைப் புண்படுத்தியிருக்கலாம். உடன் பயிலும் தோழிகள் இழித்து பேசி இருக்காலம். பெற்றோர்கள் தன் குறைந்த மதிப்பெண்களை அறிந்து விட்டால் தன்னைத் தண்டிப்பார்களே என்று எண்ணியிருக்கலாம். 

இவற்றையெல்லாம் எதிர்நோக்கி, விலைமதிப்பற்ற உயிரைப் போக்கிக் கொள்ள அம்மாணவி முன்வந்துள்ளாள் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். ஆசிரியர்களே அந்த மணைவியைத் தனியே அழைத்து ஆறுதல் தரும், நம்பிக்கையூட்டும நயவுரைகள் கூறி, தேர்வில் மதிப்பெண் குறைவு பெருந்தவறு அல்ல அதை எளிதாக எடுத்துக் கொண்டு, முயன்றால் நீ முதலாவதாக வரலாம் என்று சொல்லி, தனிச்சிறப்புப் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கலாம். 

பெண்ணின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, அவர்கள் உளப்பாங்கினை அறிந்து, ஏற்ற முறையில் அறிவுரை சொல்லி, அவர்கள் மனத்திற்கு நம்பிக்கை அளித்திருக்கலாம். தேர்வுக்கு முன்னரும், தேர்வுக்கு பின்னரும், பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தி, மாணவியின் அச்சத்திலிருந்து நீக்கியிருக்கலாம். 

பெற்றோர்களும், குறைவான மதிப்பெண்ணைக் கண்டவுடனே பிள்ளைகளை அடித்து, திட்டி அவமானப்படுத்தக் கூடாது. நன்கு படிக்கும் மற்ற மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. வீட்டில் வறுமைச் சூழ்நிலை அமைந்திருந்தால் அதைக் குழந்தைகளுக்கு நாளும் எடுத்துச் சொல்வதாலும் அவர்கள் மனம் புண்பட்டுப் போகும். 

இன்னும் மீதமுள்ள ஆறு மாதங்களில் முயன்று படித்தால், பள்ளியின் அனைத்து மாணவிகளிலும் முதலாவதாக வரலாம் என்ற உள்ள உறுதியை தராமல் இருந்ததால்தான் இந்துமதி இத்தகு கொடிய முடிவை எடுத்திருக்கிறாள். 

பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று ஓயாமல் சொல்கிறோம். வாரம் ஒரு முறையாவது ஒரு வகுப்பை ஒதுக்கி வாழ்வை எதிர்கொள்வது எப்படி? தோல்வியை எப்படி சமாளிப்பது? வாழ்வின் குறிக்கோளைத் தீர்மானிப்பது எப்படி? என்று பல்வகை வினாக்கள் எழுப்பி, பல அறிஞர்கள், தலைவர்கள் வரலாற்றை எல்லாம் எடுத்துரைத்து, உற்சாகப்படுத்த வேண்டியது பள்ளிகளின் இன்றியமையாத கடமை. இதைச் செய்யத் தவறினால், பல மாணவிகளை நாம் இழக்க நேரிடும்.
மனித குலம் உய்த்திட உழைத்த அமெரிக்க நாட்டின் அதிபர் ஆபிரகாம் லிங்கன் ஏழ்மை நிலையில் சிறு வயதில் படிக்க முடியாமல், பதினெட்டு வயதிற்குப் பிறகு, மரப்பட்டைகளில் ஏ, பி, சி, டி எழுதக் கற்றுக் கொண்டு படிப்படியாக உயர்ந்து வழக்குரைஞரானார். 

இப்பேர்ப்பட்ட தன்னம்பிக்கையால் உயர்ந்தோர் வாழ்வை வகுப்புகளில் எடுத்துரைக்கலாம். தோல்விகளை வெற்றியின் படிக்கட்டாகக் கொண்டு முன்னேறிய உயர்ந்த அறிஞர்கள் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளிகளில் குறும் படங்களாகத் திரையிட்டுக் காட்டி விளக்கலாம்.
பெற்றோர்களும் பிள்ளைகளை தோல்விகளைக் கண்டு அஞ்சாத அளவிற்கு அன்பு காட்டி நடத்த வேண்டும்.

உள்ளத்தில் அஞ்சி நடுங்கும் கோழைகளாக இருப்பவர்கட்குப் பாதுகாப்பு கிடையாது. அஞ்சுவார்க்கு இல்லை அரண் என்பது முதுமொழியன்றோ!
வீரத் துறவி விவேகானந்தர் இளைஞர்களை நோக்கி உம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் மனவுறுதியும் இருந்தால் கொடும்பாம்பின் நஞ்சு கூட வலிமையற்றதாகி விடும் என்று முழங்கினார். இவ்வீர உரையை பள்ளிகளில் ஒலிக்கச் செய்ய வேண்டும். உங்களைச் சுற்றிப் பேரிருள் படர்ந்திருந்தாலும் உங்கள் உள்ளத்தில் மட்டும் நம்பிக்கையின் சிறு துளி கீற்றாக இருந்தால் போதும். நீங்கள் என்றாவது ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தே தீருவீர்கள் என்ற வாழ்க்கைப் பாடத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்போம்.

நம்பிக்கையற்று, பல காரணங்களால் தற்கொலைக்கு முயல்பவர்களும், மாணவ மணிகளும், உறுதியோடு கற்றால், நல்வாழ்வு பெற்று, நல்லோர் போற்ற வாழ்வது திண்ணம். 

மாறி வரும் சூழலுக்கேற்ப கல்வியின் தரத்தை உயர்த்துதல் இன்றியமையாதது. அவ்வாறே, மாணவ மாணவிகள் மன நிலை அறிந்து அதற்கேற்ப அசையா உறுதியும், ஊக்கமும், நம்பிக்கையும் ஊட்டவல்ல கருத்துகளை இனிமையாக எடுத்துரைத்தால் மாணவ மணிகள் வாழ்வில் வளம் பெறுவர். இது போன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

தன்னம்பிகையுடன் உழைப்பை உயர்த்திப் பிடித்து, விடாமுயற்சியுடன் செயற்பட்டால் வெற்றிச் சிகரத்தில் மாணவ மணிகள் சிறகு விரிக்க முடியும்.
நம்மால் முடியும். நிச்சயம் வாழ்வில் பெற்றி பெறுவோம் என்ற தாரக மந்திரம் அனைவர் மனங்களிலும் காதுகளிலும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மழை நீரில் மிதக்கிறது பெங்களூரு!
By DIN | Published on : 28th September 2017 01:12 AM



பெங்களூரில் செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் நகரமே தண்ணீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது.

கர்நாடகத்தில் நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பெங்களூரில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை மாநகரில் 58.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக நேர்ந்தது. 

உயிரிழப்பு: பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரம் ஆர்எம்எஸ் லே-அவுட் பகுதியில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்ததால், கணினியில் பொருத்தப்பட்டுள்ள தடையில்லா மின் கருவியை (யூபிஎஸ்) அணைக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, மீனம்மா என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதேபோல, மாதநாயகனஹள்ளிக்கு அருகேயுள்ள ஆலூரில் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், அதில் சிக்கி நாராயணப்பா (48) என்பவர் உயிரிழந்தார். ஆர்எம்எஸ் லேஅவுட்டில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு, வீட்டிலிருந்த பொருள்கள் தீயில் கருகின. 

கோரமங்களா, எச்எஸ்ஆர் லேஅவுட், ஜே.பி.நகர் 6-ஆவது தடம், கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், சாலைகள் மூழ்கின. அப் பகுதிகள் அனைத்தும் தீவு போல காட்சி அளிக்கின்றன. சந்திர லே-அவுட்டில் சுவர் இடிந்து விழுந்ததால் 6 கார்கள், 2 ஆட்டோக்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.
ஆடுகோடி சாலை, ராணுவப் பள்ளி சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால், பள்ளியின் நுழைவுவாயில் அடைபட்டது. 

சாகாம்பரி நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சுற்றுச் சுவரும் மழைக்கு விழுந்துள்ளது . 

தண்ணீர் புகுந்தது: சாந்தி நகர் பேருந்து நிலையத்தின் பணிமனையில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், அங்கிருந்த ஊழியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அல்சூர், கிரிநகர், கே.ஆர்.புரம், எச்.எஸ்.ஆர்.லே அவுட், ராஜராஜேஸ்வரி நகர், ஜே.பி.நகர், கோரமங்களா, சாந்தி நகர், அவலஹள்ளி, ராஜாஜி நகர், யஷ்வந்த்பூர், ஹெப்பாள், பனசங்கரி, மல்லேஸ்வரம், ஓகலிபுரம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் அவதிக்குள்ளாயினர்.

கோரமங்களாவில் உள்ள பேருந்து நிலையத்தில் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், பேருந்துகள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இரு சக்கர வாகனங்கள் இயக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

10 ஆயிரம் கோழிகள் சாவு: நெலமங்களா, தொட்டபிதர்கல்லு பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், அங்குள்ள கால்நடைப் பராமரிப்பு மைய வளாகத்திற்குள் பகுந்ததால், பண்ணையில் தட்டிக்குள் அடைத்து வைத்து வளர்க்கப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தண்ணீரில் மூழ்கி பலியாயின. பெங்களூரு, சந்திர லேஅவுட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததால், வாகனங்கள் சேதமடைந்தன. மாநகரின் பல்வேறு இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேயர் ஜி.பத்மாவதி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார்.

மழை தொடரும்

புதன்கிழமை தொடங்கி அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் இன்று ஓய்வு
By DIN | Published on : 28th September 2017 01:31 AM |



முன்னாள் தலைமைச் செயலாளரும், தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநருமான ராம மோகன ராவ் அரசுப் பணியிலிருந்து வியாழக்கிழமை (செப். 28) ஓய்வு பெறுகிறார்.

1985-ஆம் ஆண்டு பிரிவு: ஆந்திரத்தை பூர்வீகமாகக் கொண்ட ராம மோகன ராவ், கடந்த 1957 செப்டம்பர் 15-ஆம் தேதி பிறந்தவர். 1985-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது செயலாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளும் அவர் அந்தப் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல், முதல்வரின் முதல் செயலாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

சோதனை-சர்ச்சை: முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதனால் எழுந்த சர்ச்சையால் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டார். மேலும், அவருக்குப் பணி அளிக்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார்.

மீண்டும் பணி: இந்த நிலையில், கடந்த மார்ச் 31-ஆம் தேதி அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், செப்டம்பர் மாதத்துடன் 60 வயதை அவர் பூர்த்தி செய்வதால் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். வியாழக்கிழமை (செப்.28) அவரது கடைசி அலுவலக நாளாகும். வெள்ளி, சனி ஆகிய தினங்கள் அரசு விடுமுறை என்பதால், வியாழக்கிழமை மாலை அரசுப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெறுகிறார்.
நடராஜனை பார்க்க வர மாட்டேன்: சசிகலா
மருத்துவமனையில், உயிருக்கு போராடும் கணவர் நடராஜனை பார்க்க, 'பரோலில்' வர, சசிகலா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.



சசிகலாவின் கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 'டயாலிசிஸ்' சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

நடராஜனுக்கு, சிறுநீரகம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்சசிகலாவை, கர்நாடக, அ.தி.மு.க., செயலர், புகழேந்தி சந்தித்து, 'பரோல் விடுமுறையில் வந்து,நடராஜனை பாருங்கள்' என, கூறியுள்ளார். பரோல் கேட்பதற்கான மனுவில் கையெழுத்திடும் படியும், சசிகலாவிடம், வழக்கறிஞர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அம்மனுவில் கையெழுத்து போட, சசிகலா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதே சமயம், நடராஜனின் உடல்நிலை பற்றி மட்டும், புகழேந்தியிடம் விசாரித்து உள்ளார்.இது குறித்து, மன்னார்குடி வட்டாரம் கூறியதாவது: நடராஜன், கவலைக்கிடமாக இருக்கிறார். அவருக்கு,முக்கியமான இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட உள்ளன.

அதற்கு முன், சசிகலா வந்து பார்க்க வேண்டும் என, உறவினர்கள் விரும்புகின்றனர்; ஆனால், அவர் மறுத்துள்ளார்.பரோல் விடுமுறைக்கு விண்ணப்பிக்க, அவர் விரும்பவில்லை.

ஜெயலலிதாவால் ஓரங்கட்டி வைக்கப்பட்ட நடராஜனுடன், 33 ஆண்டுகளாக, சசிகலா சேர்ந்து வாழவில்லை. 'சசிகலா நடராஜன்' என்ற பெயரை மாற்றி, 'வி.கே.சசிகலா' என, வைத்துக் கொண்டார்.

ஏற்கனவே, மகாதேவன், தினகரன் மாமியார் மரணத்திற்கும், சசிகலா வரவில்லை. இதனால், குடும்பத்தில் பிரச்னை வெடித்து உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

- நமது நிருபர் -
பணிக்கு வராத டாக்டர்கள் : பெண் பரிதாப சாவு
பதிவு செய்த நாள்28செப்
2017
02:45

பெரம்பலுார்: அரியலுார் அருகே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் பணியில் இல்லாததால், பெண் நோயாளி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தி, 42. இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாந்தி, உடையார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
நேற்று காலையில், காய்ச்சல் அதிகமாகி, வீட்டில் மயங்கி விழுந்தார்.
காலை, 6:30 மணிக்கு, சாந்தியை, உடையார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அவரது கணவர், ரவி அழைத்து சென்றார். அப்போது, அங்கு டாக்டர்கள், நர்சுகள் யாரும் பணியில் இல்லை. பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்தார்.

மனைவியை தன் மடியில் படுக்க வைத்தவாறு, மருத்துவமனை வராண்டாவில், டாக்டர்களுக்காக, ரவி காத்திருந்தார். காலை, 7:30 மணிக்கு டாக்டர்கள் பணிக்கு வந்தனர். சாந்தியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, ரவியிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சாந்தியின் உறவினர்கள், அங்கு திரண்டனர். டாக்டர்கள் இல்லாததே சாந்தியின் சாவுக்கு காரணம் எனக்கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

NewsToday 18.10.2024