Tuesday, August 13, 2019

வருமான வரி கணக்கு 17 லட்சம் பேர் தாக்கல்

Added : ஆக 13, 2019 06:26 |

தமிழகத்தில், ஜூலை வரை, 17.10 லட்சம் பேர், 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்துள்ளனர்
.
கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வரும், 31ம் தேதியுடன் முடிகிறது.

நடவடிக்கை

ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.இந்நிலையில், ஜூலை வரை, கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை, வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.ஜூலை வரை, நாடு முழுவதும், 2.67 கோடி பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துஉள்ளனர்.
இது, 2017 - 18ம் நிதியாண்டில், 3.43 கோடியாக இருந்தது. 76 லட்சம் பேர், கடந்த நிதியாண்டை விட, குறைவாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில், ஜூலை வரை, 17.10 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, 2017 - 18ல், 24.68 லட்சமாக இருந்தது. கடந்த நிதியாண்டை விட, 7.58 லட்சம் பேர், தற்போது குறைவாக தாக்கல் செய்துள்ளனர்.

அவகாசம்

தமிழகம் மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும், 2017 - 18ம் நிதியாண்டை விட, பல லட்சம் பேர், குறைவாகவே வருமான வரி கணக்கு தாக்கல் செய்துஉள்ளனர்.கடந்த நிதியாண்டுபோல, நடப்பு நிதியாண்டிலும், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், எண்ணிக்கை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நமது நிருபர் -

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...