Sunday, March 1, 2020

திண்டுக்கல் மருத்துவக்கல்லூரிக்கு மார்ச் 15ல் அடிக்கல்: முதல்வர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

Added : மார் 01, 2020 01:36

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவ கல்லுாரிக்கு மத்திய அரசு ரூ.325 கோடி அனுமதி வழங்கியது. அடியனுாத்து கிராமம் ஒடுக்கத்தில் 8.61 எக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நிலத்தை சமமாக்கும் பணி நடக்கிறது. மார்ச் 5ல் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டுவதாக இருந்தது.மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பங்கேற்க உள்ளதால் அடிக்கல் நாட்டுவிழா மார்ச் 15க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பணியை விரைந்து முடித்து 2020--21 கல்வியாண்டில் 150 மாணவர்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது...

செயற்கை நுண்ணறிவு நமது நண்பன்! தொழில்துறை புரட்சியின் காலகட்டம் இது... செயற்கை நுண்ணறிவு  Din Updated on:  03 ஏப்ரல் 2025, 6:15 am  எஸ். எஸ்...