Sunday, March 1, 2020

பல்கலை பேராசிரியர் நியமன முடிவுக்கு எதிர்ப்பு

Added : மார் 01, 2020 00:26

சென்னை:அண்ணா பல்கலையில், ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மறு நியமனம் செய்யும் முயற்சிக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலையின் ஒவ்வொரு துறையிலும், பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை முறைப்படி நிரப்ப வேண்டும் என, ஆராய்ச்சி படிப்பு முடித்த பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.ஆனால், பல்கலையில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, அண்ணா பல்கலை பேராசிரியர்களாக மறு நியமனம் செய்ய, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி, அண்ணா பல்கலைக்கு துணைவேந்தராக வந்துள்ள, பேராசிரியர் சுரப்பாவின் நடவடிக்கைகள், தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை குறைக்கும் வகையில் உள்ளதாக, குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழக அரசின் நிதியில் செயல்படும் அண்ணா பல்கலையில் பணியாற்ற, தமிழகத்தில் தகுதியான பட்டதாரிகள் காத்துஇருக்கின்றனர். எனவே, அவர்களிடம் முறைப்படி விண்ணப்பம் பெற்று, பணி நியமனம் செய்ய வேண்டும் என, பட்டதாரிகள் உட்பட, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...