Tuesday, March 3, 2020

மானசரோவர், முக்திநாத் யாத்திரைக்கு மானியம்

Added : மார் 02, 2020 22:27

சென்னை: 'மானசரோவர், முக்திநாத் புனித யாத்திரை செய்தவர்கள், அரசு மானியம் பெற, ஏப்ரல், 30க்குள் விண்ணப்பிக்கலாம்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் தலங்களுக்கு, புனித யாத்திரை செல்வோருக்கு, மானியம் வழங்கும் திட்டத்தை, அறநிலைய துறை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருகிறது.அதன்படி, 2019 ஏப்ரல் முதல், 2020 மார்ச், 31 வரை, யாத்திரை சென்றவர்கள், மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.மானியம் பெற, தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். மானசரோவர் சென்றவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய்; முக்திநாத் சென்றவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய், அரசு மானியமாக வழங்கப்படுகிறது.விண்ணப்பங்கள், 500க்கு மேல் வந்தால், குறைந்த வருமானம் அடிப்படையில், பயனாளிகள், அரசின் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவர். முதல் முறையாக, மானசரோவர், முக்திநாத் சென்றவர்களுக்கு மட்டுமே, இந்த மானியம் வழங்கப்படும்.

எனவே, மானியம் பெற விரும்புவோர், www.tnhrce.gov.in என்ற, அறநிலையத் துறை இணையதளத்தில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், ஹிந்து சமய அறநிலையத் துறை, எண் 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 34' என்ற முகவரிக்கு, ஏப்., 30க்குள் அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:

FMGs awaiting up to 2 years for internship, some take delivery jobs to survive:  Medicos urge NMC, Health Minister's intervention  Writt...