Wednesday, March 18, 2020

பெட்ரோல், 'பங்க்'கில் ரொக்க பணம், 'நோ'

Added : மார் 17, 2020 22:15

சென்னை :'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், 'கொரோனா' வைரஸ், ரொக்க பணம் வாயிலாகவும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளிடம், டிஜிட்டல் முறையில், பணம் வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. மேலும், பெட்ரோல் பங்க்களில், கை கழுவும் சுத்திகரிப்பான் வைப்பது உள்ளிட்ட, துாய்மை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025