Friday, March 27, 2020

கொரோனா: தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு அறிவுறுத்தல்

Updated : மார் 26, 2020 20:57 | Added : மார் 26, 2020 20:53

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் 25 சதவீதம் படுக்கைகள் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளும் அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும். மற்ற வார்டுகளில் இருந்து தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் .

கொரோனா சிகிச்சை அறைகளில் நவீன வசதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். உத்தரவை பின்பற்றாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024