Friday, March 27, 2020

ஏப். 2 முதல் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.1000

Updated : மார் 26, 2020 20:41 | Added : மார் 26, 2020 20:36 

சென்னை:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ஏப். 2 முதல் ரூ. 1000 வழங்க முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப். 14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் நடமாட முடியாமல் அன்றாட பணிகள் பாதிக்கப்படும் என்பதால், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ. 1000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க முதல்வர் இ.பி.எஸ்.,உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிக்கையை கூட்டுறவுதுறை அறிவித்துள்ளது. ஏப். 2 ல் துவங்கும் இப்பணி ஏப்.15 ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கடை பணியாளர்களுக்கு மாஸ்க், கடைகளுக்கு கிருமிநாசினி அந்தந்த கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து கொள்ளலாம். இதனை கூட்டுறவுதுறை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என கூட்டுறவுதுறையின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win

With AIADMK Aid, Vijay Set For Trust Vote Win  G Babu Jayakumar & D Sekar 1 2 May 2026 10:05 PM  AMMK member Kamraj supports TVK, expell...