Monday, November 23, 2020

மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

மருத்துவ படிப்புகளுக்கு இன்று பொது பிரிவு கவுன்சிலிங் துவக்கம்

Updated : நவ 23, 2020 02:25 | Added : நவ 23, 2020 02:22

சென்னை: மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று நடைபெற உள்ளது.

கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., - - 1,230 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953 எம்.பி.பி.எஸ்., -- 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், 399 இடங்கள்; சிறப்பு பிரிவில், 60 இடங்கள் என, 459 இடங்கள் நிரம்பியுள்ளன.அதைத் தொடர்ந்து, பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல், டிச., 4 வரை நடைபெற உள்ளது. இன்று, பொது பிரிவில் முதல், 361 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் மட்டுமே, கவுன்சிலிங் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஒவ்வொரு மாணவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே, வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.மேலும், கட்டாயம் முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025