Saturday, July 17, 2021

மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு

மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்வு

Added : ஜூலை 16, 2021 23:37


மானாமதுரை-மானாமதுரை பேரூராட்சி உட்பட தமிழகத்தில் 35 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரக்கூடிய பேரூராட்சிகளில் மானாமதுரை முதல் இடத்தில் உள்ளது. மானாமதுரையை ஒட்டியுள்ள மாங்குளம், கொன்னக்குளம், கீழமேல்குடி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகள் பேரூராட்சி எல்லையை ஒட்டி விரிவடைந்து வருகிறது.தற்போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள மானாமதுரை பேரூராட்சியை தரம் உயர்த்தி நகராட்சியாக மாற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் தமிழகத்தில் மானாமதுரை உட்பட 35 பேரூராட்சிகள்,நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மானாமதுரை பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு முன்பே கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,அதனடிப்படையில் தற்போது நகராட்சியாக மாற்றும் வாய்ப்பு உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions

  Madras High Court Rules Environmental Clearance Not Required for Essentiality Certificate of Medical Institutions The Madras High Court ...