Monday, May 23, 2016

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்

500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடல்;
மின் கட்டணச் சலுகைகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:

பயிர்க்கடன் தள்ளுபடி

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மின் கட்டணச் சலுகை

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

திருமண உதவித் திட்டம்

3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை

4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

5) மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்தாக கருணாநிதி குற்றச்சாட்டு

Return to frontpage

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.

அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மீண்டும் ஜெ., பதவிப்பிரமாணம் செய்தார் கவர்னர்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தொடர்ந்து ஜெ., முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை முன்னாள் மேயரும்,எம்எல்.ஏ.,வுமான மா.சுப்பிரமணியம் , சேகர்பாபு, ஏ.வ வேலு, வாகை சந்திரசேகர், இந்திய கம்யூ., சார்பில் தா.பாண்டியன், பா.ஜ.,தரப்பில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பகல் 12 மணியளவில் சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்த விழா சென்னையில் எல்ஈடி மூலம் லைவ் வீடியோ காண்பிக்கப்பட்டது. பதவியேற்பு முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் அதிமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

குஜராத்தில் தகிக்கும் வெயில்: உருகும் தார்ச்சாலைகளில் சிக்கி மக்கள் அவதி

குஜராத் மாநிலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக தார்ச் சாலைகள் உருகுகின்றன. உருகிய தார்களில் மக்களின் காலனிகள் சிக்கி அவர்கள் கீழே விழுகின்றனர். மேலும் வாகனங்களும் பிடிமானமின்றி வழுக்கிச் செல்கின்றன.

வல்சாத் பகுதியில் தார்ச்சாலைகள் உருகி, தார் குழம்பாக மாறி நிற்கிறது. சிலர் சாலையைக் கடக்காமல் வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். சிலர் துணிச்சலாகக் கடக்கின்றனர். அவ்வாறு சாலைகளைக் கடப்பவர்களின் செருப்பு, ஷூ போன்றவை தாரில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிலர் காலணி மாட்டிக் கொள்வதால் தடுமாறி விழுகின்றனர்.

ஒரு பெண் கீழே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. அவர் விபத்துக்கு உள்ளாவதற்கு சில நொடிகளுக்கு முன்புதான் அதே இடத்தில் ஒரு லாரி, சாலையில் டயர்கள் பிடிமானமின்றி வழுக்கிச் சென்றது.

வல்சாத் பகுதியில் நேற்று முன்தினம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஆமதாபாத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெயில் கொடுமைக்கு நாடு முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் சுரு, ஸ்ரீகங்கா நகர் பகுதியில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம் வங்காள விரிகுடா பகுதியில் புயல் காரணமாக கடலோர பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு இருந்தது.

தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு:விஜயகாந்த், வைகோ ஆலோசனைதமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர, விஜயகாந்தும், வைகோவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு போட்டியாக, ம.ந.கூ., - தே.மு.தி.க., - த.மா.கா., இணைந்து உருவாக்கிய கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக, கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த், உளுந்துார்பேட்டை தொகுதியில், 'டிபாசிட்' இழந்து படுதோல்வி அடைந்துள்ளார்.மேலும் தே.மு.தி.க., போட்டியிட்ட, 104 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்துள்ளது. தேர்தல் தோல்வியால் விஜயகாந்த், வைகோ, வாசன், திருமாவளவன், முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணனும் சோகமடைந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில், ஆறு பேரும் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணிநேரஆலோசனையில், தலைமை தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளனர்.இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:பணப்பட்டுவாடா காரணமாகவே, கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என, விஜயகாந்த் உட்பட, கூட்டணி கட்சி தலைவர்கள் கருதுகின்றனர். தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி போன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.இதை காரணமாக்கி, அனைத்து தொகுதிகளிலும் நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர உள்ளனர். பணப்பட்டு வாடாவை தடுக்க தவறியதாக, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மீதும் வழக்கு தொடர முடிவெடுத்து உள்ளனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -


நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றை அடுத்த ஆண்டு முதல் தரவரிசைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் தேசிய அளவில் தரவரிசைப் படுத்தப்பட்டன. அந்தப் பட்டியல் கடந்த மாதம் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன. அதுதொடர்பாக, இம்மாத தொடக்கத்தில் அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் உயர் கல்விக்கான செயலர் வி.எஸ்.ஓபராயும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், தரவரிசைப் பட்டியலில் மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றையும் சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

புதுடெல்லி மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில், அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய மந்திரி ஜே.பி. நட்டா இன்று சந்திக்கிறார். பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தித்தான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி கடந்த 1–ந் தேதி நடந்த நுழைவுத்தேர்வை சுமார் 6½ லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். ஜூன் 24–ந் தேதி இரண்டாவது கட்ட நுழைவுத்தேர்வு நடக்க உள்ளது. ஆனால் இப்படி நுழைவுத்தேர்வு நடத்தினால், அது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து எழுந்துள்ளது. நகர்ப்புற மாணவர்களுடன், சி.பி.எஸ்.இ., என்னும் மத்திய செகண்டரி கல்வி வாரிய பாடத்திட்ட மாணவர்களுடன் அவர்கள் போட்டி போட முடியாது என்பதால் இந்த நுழைவுத்தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. அவசர சட்டம் இந்த ஆண்டு மட்டுமாவது பொது நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல தரப்பிலும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்து, இந்த ஆண்டு மட்டும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ்–2 முடித்த மாணவர்களுக்கு, மாநில அரசு நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக்கல்லூரிகளில் பொது நுழைவுத்தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்தது. இந்த அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி விளக்கம் கேட்கிறார் அந்த அவசர சட்டம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உடனே ஒப்புதல் அளித்து விடாமல் இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த அவசர சட்டத்துக்கு என்ன அவசியம் வந்தது என்று விளக்கம் அளிக்குமாறு அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் கேட்டுள்ளார். மந்திரி நேரில் விளக்கம் இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா இன்று (திங்கட்கிழமை) நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கிறார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாளை (செவ்வாய்க்கிழமை) சீனா செல்கிறார் என்பது நினைவு கூரத்தக்கது. எனவே, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஒப்புதல் வழங்கி விட்டால் மருத்துவம், பல் மருத்துவ படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு உண்டா, இல்லையா என்ற மாணவர்களின் குழப்பம் முடிவுக்கு வந்து விடும். மாநில கல்வி வாரியத்தின்கீழ் பிளஸ்–2 முடித்த மாணவர்கள் இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு எழுத தேவை இருக்காது. மாநில அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசுகளுக்குரிய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் பொது நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைபெற வழிபிறக்கும்.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பணப்பட்டுவாடா புகாரால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 232 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், அ.தி.மு.க. 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதைத்தொடர்ந்து, 6-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். முன்னதாக, சென்னையில் கடந்த 20-ந் தேதி நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதல்- அமைச்சர்) ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் அவர் கவர்னர் கே.ரோசய்யாவை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு உரிமை கோரினார். கவர்னரும் புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று பகல் 12 மணிக்கு கோலாகலமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். ஜெயலலிதா தனது அமைச்சரவையில், 28 அமைச்சர்களை நியமித்து உள்ளார். அவர்களும் இன்று பதவி ஏற்கிறார்கள். புதிய அமைச்சர்களுக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். ஜெயலலிதா, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பது இது 6-வது தடவை ஆகும். ஏற்கனவே, 1991 முதல் 1996-ம் ஆண்டு வரையும், 2001 முதல் 2006-ம் ஆண்டு வரையும், 2011 முதல் 2016 வரையும் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்துள்ளார். இடையில் 2 முறை அவர் பதவி விலக நேரிட்டு, மீண்டும் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல் முறையாக முதல்- அமைச்சர் ஆனபோதும் இதே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அவர் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பதவி ஏற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதற்காக, 3,150 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது. புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கின்றனர். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அதிகாரிகள் மூலம் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி ஈரான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருவதால், அவருக்கு பதிலாக மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். முதலமைச்சர் ஜெயலலிதாவின் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் 32 மாவட்டங்களிலும் எல்.இ.டி. அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பதவி ஏற்பு விழா நிறைவடைந்ததும், மதியம் 12.45 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு செல்கிறார். அங்கு, அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர். தனது அறைக்கு சென்று பணியை தொடங்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, 2 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கும், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பிலும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது. பின்னர், போயஸ் கார்டன் இல்லத்திற்கு திரும்பும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, மதியம் 1.30 மணிக்கு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் கூடும் சட்டசபை கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் செம்மலை புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க இருக்கிறார். அதற்கான தேதியும் இன்று முடிவு செய்யப்பட இருக்கிறது.

Aurangabad: The University Grants Commissions (UGC) has directed all universities across the country to issue degrees to students within 180 days of the student qualifying for the degree. The communique also carried a sage comment that withholding a student's degree could hamper 'the entry into a world of possibilities and promises'. The Commission warned that any institution found violating the norm will face punitive action including withdrawal of grants or the status as a university. "The period of 180-days is more than sufficient to perform the task which constitutes perhaps one of the most fundamental and primary duties of a university. Withholding the degree of a student who has successfully completed his tenure in the institution of his enrolment, for whatever reasons, amounts to limiting the opportunities of the student," UGC secretary Jaspal Sandhu said. The UGC has reportedly received several representations and references regarding some universities who have failed to award the degrees in time, due to which the students were unable to opt for further courses within the deadline. The circular has stated that getting the crucial document in time 'is an inviolable privilege of a student'.

Sunday, May 22, 2016

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இளம் வயதிலேயே இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளார் சங்கரன்கோவில் சட்டப் பேரவை உறுப்பினர் ராஜலட்சுமி. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இளம்பெண்கள் பாசறையில் இணைந்தார் ராஜலட்சுமி. கடந்த 2004 ஆம் ஆண்டில், இளம்பெண்கள் பாசறையின் சங்கரன்கோவில் 18-வது வார்டு செயலாளரானார். சங்கரன்கோவில் பேரவை உறுப்பினராக இருந்த கருப்பசாமி மறைந்ததைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக இருந்த முத்துச்செல்வி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2014ல் நடைபெற்ற சங்கரன்கோவில் நகராட்சி  தலைவர் பதவிக்காகன இடைத் தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, போட்டியின்றி தேர்வு பெற்றார் ராஜலட்சுமி. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சி தலைமை ராஜலட்சுமிக்கு 'சீட்' வழங்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களிலேயே மிகவும் இளையவர் ராஜலட்சுமி. 30 வயது நிரம்பிய ராஜலட்சுமி அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளதோடு, இளநிலை கல்வியியலும் பயின்றுள்ளார். இவரது கணவர் வி.முருன். இத்தம்பதியினருக்கு  ஒன்பது வயதில் ஹிரணி என்ற மகளும், 7 வயதில் பிரதீப் என்ற மகனும் உள்ளனர்.

Saturday, May 21, 2016

முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து


தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

'நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கின்றோம். பொறுப்புள்ள எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.

மக்களுக்கு பயன்படும் வகையில் சட்டமன்றம் நடப்பதற்கு வழிவிட்டு ஆரோக்கியமான ஜனநாயகத்தை நிலைநாட்ட அதிமுக பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.

இந்த தருணத்தில் அம்மையார் ஜெயலலிதாவிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.'

இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

துயரத்தில் தேமுதிக: விஜயகாந்த் டெபாசிட் இழப்பு; மாநில கட்சி அங்கீகாரமும் பறிபோக வாய்ப்பு

Return to frontpage

உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் தனது வெற்றிவாய்ப்பை இழந்ததோடு டெபாசிட் தொகையையும் இழந்துள்ளார். தேமுதிக மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தையும் இழக்கும் நிலையில் உள்ளது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், தேமுதிக சார்பில் விஜயகாந்த், பாமக சார்பில் வழக்கறிஞர் பாலு ஆகியோர் போட்டியிட்டனர்.

பதிவான வாக்குகள் எண்ணிக்கை உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் தனியார் கலைக் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி என்பதால் அந்த கல்லூரி வளாக பகுதியில் ஏராளமான கட்சியினர் திரண்டிருந்தனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் சுற்றில் திமுக 3960 வாக்குகளும், அதிமுக 2992 வாக்குகளும், தேமுதிக 1494 வாக்குகளும் பெற்றனர். 2-ம் சுற்றிலும் தேமுதிக 3-ம் இடத்திலேயே தொடர்ந்ததால், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வெளியே கூடியிருந்த மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தொண்டர்கள் அங்கிருந்து சோகத்துடன் கலைந்து சென்றனர்.

டெபாசிட் இழந்த விஜயகாந்த்

2006 விருத்தாசலத்திலும், 2011 ரிஷிவந்தியத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜயகாந்த், இம்முறை உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்டு தோற்றதோடு, டெபாசிட் தொகையும் இழக்க நேர்ந்தது.

உளுந்தூர்பேட்டை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகள் 2,26,120. இதில் அதிமுக வேட்பாளர் குமரகுரு 81,973 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2-ம் இடம் பிடித்த திமுக வேட்பாளர் ஜி.ஆர்.வசந்தவேல் 77,809 வாக்குகள் பெற்றார். இவரை தொடர்ந்து விஜயகாந்த் 34,474 வாக்குகள் பெற்றார். பாமக வேட்பாளர் 20,233 வாக்குகள் பெற்றார்.

பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் தான் டெபாசிட் தொகையை பெறமுடியும். அந்த வகையில் விஜயகாந்த் 34,474 வாக்குகள் மட்டுமே பெற்றதால் அவர் தனது டெபாசிட் தொகையை இழக்க நேர்ந்ததாக உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முகுந்தன் தெரிவித்தார். இவருக்கு அடுத்த படியாக வாக்குகள் பெற்ற பாலுவும் டெபாசிட் தொகையை இழந்தார்.

மாநிலக் கட்சி என்ற ஆங்கீகாரத்தை இழக்கிறதா தேமுதிக?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்தது தேமுதிகவே. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 8% ஆக இருந்த தேமுதிகவின் வாக்கு வங்கி தற்ப்போது வெறும் 2.4% சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம் பெற ஒரு கட்சியானது அது எதிகொள்ளும் தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 6% பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் தேமுதிக மாநிலக் கட்சி அங்கீகாரத்தை இழக்கும் சூழல் ஏற்ப்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என முன்நிறுத்தப்பட்ட விஜயகாந்த் 34,477 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

எம்ஜிஆர் 100 | 69: அரசியல் வேறு, நிர்வாகம் வேறு


எம்.ஜி.ஆருக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்கிறார் கருணாநிதி.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. யாரிடமும் தனிப்பட்ட விரோதம் பாராட்டியதில்லை. எதிர்க்கட்சியினரையும் அரவணைத்தே சென்றவர். எதிர்க் கட்சித் தலைவரோடு நட்போடு இருந்ததற்காக அரசு அதிகாரி களை அவர் புறக்கணித்ததோ, பழிவாங்கியதோ இல்லை. தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் கூறும் நியாயமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் தின் துணை வேந்தராக இருந் தவர் வேங்கட சுப்பிரமணியம். தமிழக அரசின் கல்வித்துறையிலும் பணியாற்றியவர். சிறந்த கல்விமான். ஆங்கிலத்திலும் தமிழிலும் பெரும் புலமை மிக்கவர். எம்.ஜி.ஆர். முதல்வர் ஆவதற்கு முன்பே அவரோடு அறிமுகம் உண்டு. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதேநேரம், திமுக தலை வர் கருணாநிதியின் தமிழுக்கும் ரசிகர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, தமிழக அரசின் கல்வித்துறையில் இணை இயக்குநராக வேங்கட சுப்பிர மணியம் பணியாற்றி வந்தார். அந்த சம யத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் விழா வில் வேங்கட சுப்பிரமணியம் கலந்து கொண்டதோடு, கருணாநிதியின் வீட்டுக் கும் சென்று வாழ்த்து தெரிவித்தார். இதுபற்றி கண், காது, மூக்கு வைத்து எம்.ஜி.ஆரிடம் சிலர் கூறினர்.
அப்போது கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகத்திடம் இதுபற்றி தெரிவித்து, வேங்கட சுப்பிரமணியத்தை தன்னை வந்து சந்திக்கச் சொல்லுமாறு எம்.ஜி.ஆர். கூறினார்.
முதல்வர் எம்.ஜி.ஆரை அவரது அலுவலகத்தில் வேங்கட சுப்பிரமணியம் சந்தித்தார். தான் கேள்விப்பட்ட விவரங் களை அவரிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அதற்கு பதிலளித்த வேங்கட சுப்பிர மணியம், ‘‘திமுக தலைவரை அரசியல் வாதி என்ற பார்வையில் நான் சந்திக்க வில்லை. அவரது இலக்கிய நயம் மிக்க தமிழுக்கு நான் ரசிகன். அந்த வகையில் அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போதும், எனது அரசுப் பணிகள் பாதிக்காத வகையில் நேரம் ஒதுக்கியே அவரை சந்தித்தேன். இது தவறு என்று நீங்கள் கருதினால், தாங்கள் என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்’’ என்று கூறினார்.
விஷயத்தை மூடிமறைக்காமல், மழுப்பாமல், தனது மனசாட்சிப்படி வேங்கட சுப்பிரமணியம் பேசியது எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. என்றாலும் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல், ‘‘விளக்கத் துக்கு நன்றி. நீங்கள் போகலாம்’’ என்றார். வேங்கட சுப்பிரமணியமும் தனது மனதில் இருந்ததை சொல்லிவிட்ட திருப்தியுடன் வெளியே வந்தார். இருந்தாலும் அவரது மனதில் ஒரு நெருடல்.
அதற்கு காரணம் இருந்தது. அந்த சமயத்தில் அவரது பதவி உயர்வு தொடர்பான கோப்பு முதல்வர் எம்.ஜி.ஆரின் பரிசீலனையில் இருந்தது. அந்தக் கோப்பின் போக்கு இனிமேல் எப்படி இருக்குமோ என்று அவருக்கு சந்தேகம். ஆனால், சில நாட்களிலேயே பள்ளிக் கல்வித்துறை இயக்குநராக வேங்கட சுப்பிரமணியத்தை எம்.ஜி.ஆர். நியமித்தார். புதிய பொறுப்பேற்றதும் முதல்வரை சந்தித்து நன்றி சொன்னார் வேங்கட சுப்பிரமணியம்!
அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகளை எம்.ஜி.ஆர். பழிவாங்கியதில்லை என்பதோடு, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வுகளையும் தடுத்தது இல்லை. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்பதை உணர்ந்து எல்லா தரப்பினரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.ஜி.ஆர்.!
தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க உள்ளார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப் படும் நேரத்தில், அவர் தொடங்கிய கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பதும் எம்.ஜி.ஆருக்கு ஒரு சிறப்புதான்.
பதவிக்கு வருபவர்கள், எல்லோரை யும் அரவணைத்துச் சென்று அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டும் என்பதை விளக்குவது போல எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ திரைப்படத்தில் ஒரு காட்சி.
படத்தில் தனது அண்ணன் டி.கே.பகவதியின் முதலாளியான எஸ்.வி. ரங்காராவின் தவறுகளை தட்டிக் கேட்டதால் அண்ணனின் கோபத்துக்கு ஆளாகி, வீட்டை விட்டு வெளியேறி சேரிப் பகுதியில் எம்.ஜி.ஆர். தங்கியிருப் பார். அங்குள்ள மக்களின் விருப்பத்துக் கேற்ப, பஞ்சாயத்து தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெறுவார். சேர் மன் பதவிக்கு எம்.ஜி.ஆருக்கும் எஸ்.வி. ரங்காராவுக்கும் போட்டி நடக்கும்.
பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவோடு சேர்ம னாக எம்.ஜி.ஆர். தேர்வு செய்யப்படு வார். தான் தேர்ந்தெடுக் கப்பட்டதற்காக எம்.ஜி.ஆர். நன்றி தெரிவித்து பேசும்போது, தேர்தலில் தனக்கு எதிராக இருந்தவர்கள் உட்பட எல் லோரது ஆதரவையும் ஒத்துழைப்பை யும் கோருவார். எம்.ஜி.ஆரின் செழுமை யான ஜனநாயகப் பண்பை வெளிப்படுத் தும் அருமையான காட்சி அது.
தேர்தல் நேரத்தில் உணர்ச்சிகரமான பேச்சுக்களும் பரஸ்பர குற்றச் சாட்டுக்களும் எழுவது சகஜம்தான். அவையெல்லாம் தேர்தல் முடியும் வரைதான். ஜனநாயகத்தில் ஒவ் வொருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், எல்லோருமே நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தனது படத்துக்கு எம்.ஜி.ஆர். தேர்வு செய்த தலைப்புதான்… ‘நம்நாடு'.
ராமாவரம் தோட்டத்து வீட்டில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம்.
தேர்தலில் அதிமுக வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தொண்டர்கள் மகுடம் சூட்டியுள்ளனர். | படம்: ம.பிரபு
முதல்வராக இருந்தபோதும் அரசு காரை எம்.ஜி.ஆர். பயன்படுத்தியது இல்லை. தனக்கு சொந்தமான TMX 4777 என்ற எண் கொண்ட அம்பாசிடர் காரையே பயன்படுத்தி வந்தார். காருக்கு எரிபொருள் செலவையும் அரசிடம் அவர் கோரியது இல்லை. அந்த கார்தான் நினைவு இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேட்டி

Return to frontpage
மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை. மேலும் ஜூலை 24-ம் தேதி திட்டமிட்டபடி 2-ம் கட்ட நுழைவு தேர்வு நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ரூ.80 லட்சம் வரை நன்கொடை வசூலிப்பதாகவும் 100-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு நடப்பதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தி தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. கடந்த 1-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்வை ஜூலை 24-ம் தேதி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் கடந்தவாரம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில அரசுகள் சார்பில் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நுழைவுத்தேர்வுக்கான பாடத் திட்டம் மற்றும் மொழி வேறுபடுவதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தேசிய நுழைவுத்தேர்வு நடை முறையில் இருந்து மாநிலங் களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாகவும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப் பட்டதாகவும் தகவல் வெளியானது.

அவசர சட்டம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விரைவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அவசர சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து விளக்குவார் என்றும் கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் அவசர சட்டம் அமலுக்கு வரும். இருப்பினும் அடுத்த ஆண்டு தேசிய நுழைவுத்தேர்வு முறையை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால். ‘அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இத்தகவல் உண்மையானது அல்ல’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.

NEET Ordinance on 1-yr window goes to Pranab

NEW DELHI: In a move that provides great relief to lakhs of medical aspirants across the country, the Union Cabinet on Friday gave the go-ahead for an ordinance that would exempt certain state boards from the ambit of NEET for this academic year.
The ordinance, which has been sent to President Pranab Mukherjee for approval, will benefit students studying in state boards of Tamil Nadu, Kerala, Andhra Pradesh, Telangana, Gujarat, Maharashtra and Punjab. The move will partially overturn a Supreme Court verdict which mandated all admissions to medical colleges across the country to be covered under NEET starting this year.
The decision was taken as many states expressed their inability to conduct the entrance examinations this year. The states expressed concern as the examination was based on CBSE curriculum and would put students studying in state boards at a disadvantage. Later on Friday, Union Health Minister, J P Nadda clarified that the ordinance was meant only for certain states and the government had no plans to scrap NEET. He said that the second phase of the exams would take place as scheduled on July 24.
“Let me make it clear, NEET has been implemented and is in existence, first phase is over and second phase will take place on July 24,” he tweeted. “Government shares the same view as SC on NEET, just consulting procedures of implementation,” he said. Nadda’s statement came after centre’s decision evoked sharp responses from across the political spectrum.
Attacking the government on the ordinance, Congress spokesperson Randeep Surjewala said: “Modi government’s decision to defer NEET is conspiratorial submission to vested interests of private medical colleges lobby at the cost of students”. Delhi Chief Minister Arvind Kejriwal wrote to Prime Minister Narendra Modi suggesting that the demands for overturning the SC order on NEET had got to do with many politicians running medical colleges of their own.
“We all know about the amount of corruption involved in admission to private medical colleges. It’s all about money. Meritorious students are sidelined and those with money are given admission,” Kejriwal wrote.
Meanwhile, sources clarified that exemption would applicable only in state government colleges and seats earmarked for government admission in private colleges.
Different states earmark anything between 12-15 per cent seats in various private medical colleges for state quota so that students from one state can get seat in another state. The remaining seats in such colleges are reserved for domicile students. Now with this ordinance, the remaining seats meant for domicile students will come under NEET.
Who pushed for it
The decision was taken as many states expressed their inability to conduct the entrance examinations this year. The states expressed concern as the examination was based on CBSE curriculum and would put students studying in state boards at a disadvantage

Thursday, May 19, 2016

23ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கிறார்

ChennaiOnline

சென்னை,மே 19 (டி.என்.எஸ்) தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொறு தொகுதிக்கான இறுதி முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இதில் அதிமுக அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதோடு, அதிக தொகுதிகளில் வெற்றியும் பெற்று வருகிறது.

இதையடுத்து, மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெயலலிதா, தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருவதோடு, தான் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், வரும் மே 23ஆம் தேதி ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறு உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேப்டனுக்கு மீம்ஸை மட்டும் போட்டுட்டு, அம்மாவுக்கு ஓட்டு போட்ட நெட்டிசன்கள்

சென்னை: தமிழக மக்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மீம்ஸை போட்டுவிட்டு முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். 

இந்நிலையில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஜெயலலிதாவின் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகிறார்கள். எதிர்கட்சி தலைவராக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு சென்று தோல்வி அடைந்தது தான் மிச்சம். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர். மக்களோ விஜயகாந்த் பற்றி மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டு பட்டையை கிளப்பி வந்தனர். நெட்டிசன்கள் விஜயகாந்திற்கு மீம்ஸ் போட்டதோடு நிறுத்திக் கொண்டது இன்று தான் தெரிய வந்துள்ளது.

 ஜெயலலிதா பற்றி மீம்ஸ் போட்டாலும் மறக்காமல் ஓட்டு போட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் பக்கம் வராமேலேயே நெட்டிசன்களின் வாக்குகளை ஜெயலலிதா அள்ளியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/captain-gets-memes-while-amma-gets-votes-254079.html

32 வருடங்களுக்கு பிறகு.. தொடர்ந்து 2வது முறை ஆட்சியை பிடித்து அதிமுக சாதனை Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

சென்னை: 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை.

 1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்ஜிஆர் தலைமையிலான, அதிமுக 144 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 48 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து சென்று அதிமுகவை தொடங்கிய இந்த, முதல் தேர்தலிலேயே அக்கட்சி வெற்றிவாகை சூடியது. இரு கட்சிகளுக்கும் முறையே, 33.52 மற்றும் 24,89 சதவீத வாக்குகள் கிடைத்தன. எம்ஜிஆர் அருப்புக்கோட்டை தொகுதியிலும், கருணாநிதி அண்ணாநகர் தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

 1980ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக 162 தொகுதிகளிலும், கருணாநிதி தலைமையிலான திமுக 69 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 48.92 சதவீதம், அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் 44.43 சதவீதம். மதுரை மேற்கு தொகுதியில் எம்ஜிஆரும், அண்ணா நகர் தொகுதியில் கருணாநிதியும் வெற்றி பெற்றனர்.

 1984ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுகவும், கருணாநிதி தலைமையில் திமுகவும் மோதின. இதில் அதிமுக 195 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக 34 தொகுதிகளை மட்டுமே வென்றது. கருணாநிதி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எம்.ஜி.ஆர், ஆண்டிப்பட்டியில் அமோக வெற்றி பெற்றார். அதிமுகவுக்கு வந்த வாக்கு சதவீதம், 53.87 சதவீதமாகும். திமுகவுக்கு 37 சதவீத வாக்குகள் கிடைத்தன. முந்தைய தேர்தலைவிட வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு உயரவே செய்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் இல்லை என்பதை அது காண்பித்தது. 

இப்படி ஹாட்ரிக் வெற்றியை சுவைத்த அதிமுக, எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1989ல் நடந்த தேர்தலில் பிளவுபட்டு ஜெ அணி, ஜா அணி என பிரிந்து மோதியது. இதில் திமுக எளிதில் வென்று, கருணாநிதி முதல்வரானார். ஆனால் ஆட்சி கலைப்புக்கு பிறகு, 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதல்முறையாக முதல்வரான இந்த தேர்தலில் அதிமுக 224 தொகுதிகளை வென்று அசத்தியது. திமுக வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஜெயலலிதா பர்கூர் தொகுதியிலும், கருணாநிதி துறைமுகம் தொகுதியிலும் வெற்றி பெற்றனர். ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால் மக்கள் திமுக மீது இந்த அளவுக்கு வெறுப்பை காட்டினர்.

 இதன்பிறகு 1996ல் திமுக 221 தொகுதிகளில் வென்று பழி தீர்த்தது. அதிமுகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தன. பர்கூரில் ஜெயலலிதா தோற்றார். சேப்பாக்கத்தில் கருணாநிதி வென்றார். சொத்துக்குவிப்பு, ஆடம்பர திருமணம் போன்றவை ஜெயலலிதாவுக்கு வரலாறு காணாத அடியை பெற்றுக்கொடுத்தது. 

இதன்பிறகு, 2001 சட்டசபை தேர்தலில் அதிமுக 196 இடங்களிலும், திமுக 37 தொகுதிகளிலும் வென்றது. 2006 சட்டசபை தேர்தலில் திமுக 163 தொகுதிகளிலும், அதிமுக 69 தொகுதிகளிலும் வென்றது. 2011ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 31 தொகுதிகளில் மட்டும் வென்றது. இப்போது மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. 1984ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2வது முறையாக அதிமுக அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் இப்படி ஒரு கட்சி 1984க்கு பிறகு தொடர்ச்சியாக அரியணை ஏறுவது இதுதான் முதல்முறை. 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/after-3-decade-aiadmk-win-continuously-tamilnadu-254076.html

அன்புமணியாகிய நான்: தேர்தல் முடிவு குறித்து அன்புமணியின் குமுறல்

Logo

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அன்புமணி ராமதாஸ் முதல்வராக பதவி ஏற்பார் என கூறிவந்த பாமக 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் பின்னடைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், மக்கள் ஊழலுக்கும் மோசமான நிர்வாகத்திற்கும் ஆதரவாக வக்களித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
 
மேலும், நாங்கள் இலவசத்தை நம்பவில்லை. இலவசங்களை அறிவிக்கவில்லை! மாநில தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அறிவித்து எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றோம். இளைஞர் நலனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தோம்.
 
ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை ஐந்து வருடங்களில் முன்னுக்கு கொண்டு வரும் யதார்த்தமான சாத்தியம் உள்ள திட்டங்களை முன்நிறுத்தி இருந்தோம். ஆனால், மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.
 

கடும் பின்னடைவால் வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதல் சுற்று நிலவரப்படி தேமுதிக 2.3% வாக்குகள் பெற்றிருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும், வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி பின் தங்கியே இருந்ததால் தேமுதிகவின் தேர்தல் அலுவலகம் வெறிச்சோடியே காணப்படுகிறது.

முன்னதாக, தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

சென்னையில் 16-ல் 11 தொகுதிகளில் அதிமுக பின்னடைவு


சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 11 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி அதிமுக 122 தொகுதிகளிலும் திமுக 94 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக தலா 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் சென்னை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் மதியம் 1.30 மணி நிலவரப்படி சென்னையில் 16 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே அதிமுக முன்னிலை வகிக்கிறது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா 27484 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் 16964 வாக்குகள் பெற்றுள்ளார்.

மைலாப்பூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ஆர்.நட்ராஜ் 11778 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கராத்தே எஸ்.தியாகராஜன் 9067 வாக்குகள் பெற்றுள்ளார்.

விருகம்பாகக்ம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் வி.என்.ரவி 19365 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் கே.தனசேகரன் 18310 வாக்குகள் பெற்றுள்ளார்.

தியாகராய நகரில், அதிமுக வேட்பாளர் சத்தியநாராயணன் 20507 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் டாக்டர் எஸ்.கனிமொழி 20314 வாக்குகள் பெற்றுள்ளார்.

ராயபுரம் தொகுதியில், அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் 17434 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் டாக்டர் ஆர்.அம்னோகர் 13374 வாக்குகள் பெற்றுள்ளார்.

இந்த தொகுதிகள் தவிர மற்ற 11 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் - திமுக கூட்டணி

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும் திமுக 2 இடங்களிலும் வென்று பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 8 இடங்களில் மட்டும் வென்றது.

புதுச்சேரியில் உள்ள 4 பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 30 தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸ் கட்சியானது காமராஜ்நகர், லாஸ்பேட், நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம், அரியாங்குப்பம், வில்லியனூர், நெட்டப்பாக்கம் , ராஜ்பவன், மணவெளி திருநள்ளாறு, காலாப்பட்டு, பாகூர், ஊசுடு, உழவர்கரை ஆகிய 15 தொகுதிகளில் வென்றது. கூட்டணியான திமுக உருளையன்பேட்டை, நிரவி டி.ஆர். பட்டிணம் ஆகிய இரு தொகுதிகளில் வென்றது.

என்.ஆர்.காங்கிரஸ் இந்திராநகர், கதிர்காமம், காரைக்கால் வடக்கு, மங்களம், மண்ணாடிப்பட்டு, நெடுங்காடு, தட்டாஞ்சாவடி, திருபுவனை ஆகிய 8 தொகுதிகளில் வென்றுள்ளது.

அதிமுக உப்பளம், முத்தியால்பேட் முதலியார்பேட்டை மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய 4 தொகுதிகளில் வென்றது. மாஹேயில் மக்கள் நலக்கூட்டணி ஆதரவு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

புதுச்சேரியில் 16 தொகுதிகள் வெற்றி பெற்று இருந்தால் ஆட்சியமைக்கலாம். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களை வென்றதால் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

அமைச்சர்கள் தோல்வி

ஆளுங்கட்சி அமைச்சர்களில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன், உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவா ஆகிய அனைவரும் தோல்வியடைந்தனர். சபாநாயகர் சபாபதி, அரசு கொறடா நேரு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் பாலன் என முக்கியமானவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர்.

மக்களால்தான் வரலாற்றுச் சிறப்பு சாத்தியமானது: ஜெயலலிதா வெற்றிப் பேச்சு


2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, தமிழக மக்களாலேயே சாத்தியமானதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர் பேசியதாவது:

தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1984-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி சாத்தியமாகியுள்ளது. எனது நெஞ்சத்தின் அடித்தளத்தில் எழுகின்ற நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை, தமிழ் அகராதியில் இல்லை.

இத்தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாதபோதிலும் ஆண்டவனையும் மக்களையும் கூட்டணியாகக் கொண்டு களம் கண்டேன். மக்கள் என்னைக் கைவிடவில்லை. தமிழக மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கையை மக்கள் வீண்போகச் செய்யவில்லை.

மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே எனது தாரக மந்திரம். இதே தாரக மந்திரத்தின் அடிப்படையில் இனியும் தொடர்ந்து செயல்படுவேன். எனது வாழ்க்கையை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். என்றென்றும் மக்கள் தொண்டில் என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இத்தருணத்தில் அதிமுகவின் அமோக வெற்றிக்கு உழைத்த கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜனநாயகம் படுதோல்வி; பணநாயகம் பெரும் வெற்றி: ராமதாஸ்

Return to frontpage

தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பாமகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைத்தன. ஊழலும், ஊழலும் கை கோர்த்தன என்று கூறும் வகையில் அனைத்து இடங்களிலும் நம்மைத் தவிர வேறு எவரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்று திமுகவும், அதிமுகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1000, ரூ.2000, ரூ.5000 வரை பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கின.

தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் உருவாக்கி முன்னேற்றத்திற்கான ஆவணத்தை பாமக முன்வைத்தது. ஆனால், தமிழகம் முன்னேறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள அதிமுகவும், திமுகவும், பாமக முன்வைத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான கொள்கைகளையும், திட்டங்களையும் பண பலத்தை பயன்படுத்தியும், தேர்தல் ஆணையம் ஊடகங்கள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தும் வீழ்த்தியிருக்கின்றன.

எப்படியும் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்ற வெறியுடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளும் இதற்கு துணை போயிருக்கின்றனர். இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை இரு கட்சிகளும் திட்டமிட்டு தடுத்திருக்கின்றன. எனினும், நமது பயணம் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும். இறுதியில் வெற்றி நமக்கே. அதுவரை நமது மக்கள் பணி தொடரும்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை விரும்பியவர்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டவர்கள் என தமிழகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த விரும்பிய அனைவரும் இந்த சதி மற்றும் சூழ்ச்சிக்கு இரையாகி பாமகவுக்கு சாதகமான தீர்ப்பை அளிக்க தவறி விட்டனர். எனினும் இது முடிவல்ல. பாமகவின் தர்மயுத்தம் தொடரும். திராவிடக் கட்சிகளை வீழ்த்தி புதிய வரலாறு படைக்கப் படும். கடந்த ஓராண்டிற்கும் மேலாக பாமக வலியுறுத்தி வரும் ‘புதியதோர் தமிழகம்’ அமைக்கப்படும்.

உலகமே அதிர்ந்த, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கட்சியும், ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர் தலைமையிலான கட்சியும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அந்தக் கட்சிகள் தான் இப்போது முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன என்பது தமிழகத்திற்கு பெரும் அவமானமாகும்.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல இக்கட்சிகளுக்கு கொள்கைகளோ, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற விருப்பமோ சிறிதும் இல்லை. 5 ஆண்டுகள் தொடர்ந்து ஊழல் செய்ய வேண்டும். ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை மக்களிடம் வீசி அவர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். அவர்களின் இந்த அணுகுமுறையால் தான் இந்த தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது; ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது. விரைவில் நீதிமன்றத்திலும், அதைத்தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இந்த இரு கட்சிகளும் தண்டிக்கப்படுவது உறுதி. அப்போது தான் குனிந்த தமிழகம் தலைநிமிரும்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான திமுகவையும், அதிமுகவையும் அகற்றும் காலம் தான் நமது பொற்காலம் என்று காமராஜர் கூறினார். அதை நிறைவேற்றி தமிழகத்தில் பொற்காலத்தை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த இலக்கை நோக்கிய பாமகவின் பயணம் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

13.30 pm status


எம்ஜிஆர் 100 | 67: மற்றவர்களுக்கும் மதிப்பளித்தவர்! ...தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


திருச்சி சவுந்தரராஜன் அமைச்சராக பொறுப்பேற்றபோது, அருகே நிற்கும் முதல்வர் எம்.ஜி.ஆருடன் அமைச்சர்கள் ராஜா முகமது, நாஞ்சில் மனோகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர்.

M.G.R. என்னதான் மக்கள் செல்வாக்கு பெற்றவராக இருந்தபோதும் மற்றவர்களுக்கு மதிப்பளிக்க தவறியதில்லை. முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உரிய மரியாதை அளித்தார். நிர்வாக விஷயங்களில் கட்சியினர் தலையீட்டையும் ஒருபோதும் அவர் அனுமதித்தது இல்லை.

முதல்வர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பணிவும் பவ்யமும் காட்டுவது நாம் பார்த்து பழகிப்போன ஒன்று. திருச்சி சவுந்தர ராஜன் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவரோடு பல படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர். மன்றத்தின் பொருளாளராகவும் பணியாற்றிவர். அவரை தனது அமைச்சரவையில் எம்.ஜி.ஆர். சேர்த்துக் கொண்டார். தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர் தானே என்று நினைக்காமல், அமைச்சருக்கு உரிய மரியாதையை அவருக்கு அளித்தார்.

1978-ல் அமைச்சராக நியமிக்கப்பட்ட திருச்சி சவுந்தரராஜன், ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டபின், பொறுப்பேற்க கோட்டைக்கு வந்தார். முதல்வர் எம்.ஜி.ஆரும் உடன் வந்து, புதிய அமைச்சரின் அறைக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து வாழ்த்தி அமைச்சருக்கான இருக்கையில் அமரச் செய்தார். அதோடு மட்டுமல்ல; வழக்கமாக முதல்வர்கள் அமர்ந்திருக்க அவர் பின்னால் மற்றவர்கள் நிற் பதை பார்த்திருப்போம். ஆனால், அமைச்சர் நாற் காலியில் திருச்சி சவுந்தரராஜன் அமர்ந்திருக்க, அவர் அருகே தானும் மற்ற அமைச்சர்களோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.!

இதேபோன்று, அவரோடு பதவியேற்ற கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட அமைச்சர்களை யும் வாழ்த்தி அவர்களுக்கு அருகே நின்று எம்.ஜி.ஆர். படம் எடுத்துக் கொண்டார். அமைச்சருக் குரிய நாற்காலியில் சம்பந்தப்பட்ட அமைச்சர் கள் அமர்ந்திருக்க, பக்கத்தில் நின்று கொண்டிருந்த முதல்வர் அநேகமாக எம்.ஜி.ஆராகத்தான் இருக்கும். 1983-ம் ஆண்டு எஸ்.ஆர்.ராதா அமைச்சராக பதவியேற்றபோதும் இதே மரபை எம்.ஜி.ஆர். கடைபிடித்தார். முதல்வர் அமைச்சர் என்பதைத் தாண்டி, தம்பி கள் பொறுப்புக்கு வருவதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் ஒரு மூத்த சகோ தரனின் பாசமும் அதில் தெரிந்தது.

எம்.ஜி.ஆர். எப்போதுமே நாட்டு நடப் பிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் விழிப்புடன் இருப்பார். அதுவும் முதல்வர் பொறுப்பில் இருந்தபோது மிகவும் கூர்மையாக இருந்தார். இப்போது போல அப்போதெல்லாம் தனியார் தொலைக்காட்சி கள், ஃபிளாஷ் நியூஸ், வாட்ஸ் அப் இத்யாதிகள் கிடையாது. இருந்தாலும் தமிழகத்தின் மூலை முடுக்கிலும்கூட என்ன நடந்தாலும் உடனடியாக அறிந்துகொள்வதற்காக, முதல்வர் என்ற முறையில் சில ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்து வைத்திருந்தார்.

ஒருமுறை, முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக சென்னையைச் சேர்ந்த அதிமுக வினர் கூட்டமாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்றனர். அவர்களிடம் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று விசாரித்தார்.

‘‘தலைவரே, எங்க ஏரியாவுக்கு புது போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு. அவருக்கு நம்ப கட்சிக்காரங்களைக் கண்டாலே வெறுப்பு. அதிமுக வினர் என்று தெரிந்தாலே அடிக்கிறாரு. வேண்டு மென்றே எங்கள் மீது பொய் வழக்குகள் போடறாரு’’ என்று கோரஸாக குற்றப்பட்டியல் வாசித்தனர்.

‘‘ஏன்? நீங்க என்ன பண்ணிணீங்க?’’ என்று அவர்களை ஆழம் பார்த்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘நாங்க ஒண்ணுமே பண்ணலை தலைவரே’’... பம்மியது கூட்டம்.

‘‘அப்படியா? ’’ என்று கேட்டு சில விநாடிகள் நிறுத்திய எம்.ஜி.ஆர்., ‘‘ ஆமா, உங்க ஏரியா ஸ்டே ஷன்லே ஹெட் கான்ஸ்டபிளை அடிச்சது யாரு? ’’ என்று கூட்டத்தினரை கூர்மையாக பார்த்தவாறே கேட்டார்.

கூட்டத்தில் இருந்த ஒருவருக்கும் பேச்சு மட்டுமல்ல; சில விநாடிகள் மூச்சும் வரவில்லை. பதில் சொல்ல முடியாத மவுனமே அவர்களின் தவறை வெளிக்காட்டியதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆரின் முகத்தில் கோபக் கனல் வீசியது.

‘‘நான் ஒரு முதல் அமைச்சர். எனக்கு எல்லா தகவல்களும் செய்திகளும் உட னுக்குடன் வந்துவிடும். நீங்க தப்பு பண் ணிட்டு போலீஸ் மீது பழியைப் போடறீங்க. போலீஸ்காரங்களும் மனுஷங்கதானே? போலீஸைக் கடமையை செய்ய விடாம நீங்க போய் தொந்தரவு கொடுக்கிறீங்க. அப்புறம் போலீஸ்காரங்க நம்ம கட்சியினரை பழிவாங் கறாங்கன்னு எங்கிட்டயே வந்து சொல்றீங்க.

நாம ஆளும் கட்சியா இருக்கலாம். நிர்வாகம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு அதிகாரி களை அவங்க எந்த துறையை சேர்ந்தவங்களா இருந்தாலும் மதிக்கணும். அவங்க பணிகளில் நாம குறுக்கிடக் கூடாது. தப்பு பண்ணிட்டு யாரா வது எங்கிட்ட சிபாரிசுக்கு வந்தீங்கண்ணா, நான் பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன். ஜாக் கிரதையா இருங்க’’ என்று வந்திருந்தவர்களை வார்த்தைகளால் புரட்டி எடுத்தார்.

அரண்டுபோன கட்சியினர், எம்.ஜி.ஆரைப் பார்த்து பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு நான்கு அடிகள் பின்வாங்கி பதிலேதும் பேசாமல் திரும்பி நடந்தனர்.

‘‘நில்லுங்க’’… எம்.ஜி.ஆரிடம் இருந்து அதட்ட லாய் உத்தரவு பிறந்தது. எதற்கு என்று புரியாமல் மந்திரத்துக்கு கட்டுப்பட்டதுபோல கூட்டத்தினர் நின்றனர்.

தந்தை பெரியாரின் கண்டிப்பும் பேரறிஞர் அண்ணாவின் கனிவும் கலந்து ஒலித்தது எம்.ஜி.ஆரின் குரல் …

‘‘எல்லோரும் சாப்பிட்டுட்டு போங்க!’’

- தொடரும்...

படங்கள் உதவி: எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்




மத்தியில் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு கவிழ்ந்த தைத் தொடர்ந்து, சரண்சிங் பிரதமராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் அதிமுகவைச் சேர்ந்த பாலா பழனூர், சத்திய வாணி முத்து ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். தமிழகத்தின் ஒரு மாநிலக் கட்சியைச் சேர்ந்தவர்களை முதன்முதலில் மத்திய அமைச்சர்களாக்கிய பெருமை எம்.ஜி.ஆரையே சேரும்.

முதல்வர் பதவி ஏற்பு விழா பல்கலை அரங்கு தயார்


DINAMALAR

விரைவில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளதால், நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் பணிகளை, மின் வாரியம் முடுக்கி விட்டு உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று 
எண்ணப்படுகின்றன. ஆட்சியை பிடிப்பது யார் என்பது, மதியத்திற்குள் தெரியும். யார் ஆட்சியை பிடித்தாலும், ஒரு வாரத்திற்குள், புதிய முதல்வர் பொறுப்பேற்பார்.
தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கம்; அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தால், சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபம் அல்லது, நந்தம்பாக்கத்தில் உள்ளவர்த்தக மையத்தில், முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்க இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழையால், மின் சாதனங்களில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல்வர் பதவி ஏற்பு விழா நடக்கும் என, எதிர்பார்க்கப்படும் நேரு உள் விளையாட்டு அரங்கம், வர்த்தக மையம், சென்னை பல்கலை மண்டபத்திற்கு, தடையில்லா மல் மின்சாரம் வழங்குவதற்கான பணிகளில், மின் வாரியம் ஈடுபட்டுள்ளது. அதே போல், அந்த இடங்களில், விழா ஏற்பாடிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

11.31 ...19.05.2016 TN ELECTION LEADING INFORMATION


ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்..

Return to frontpage
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய‌ சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாறி, தற்போது தமிழக அரசியல் களம் வேறுவிதமாக காட்சியளிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்துள்ளன. முதல்வர் போட்டியில் ஜெயலலிதாவை முந்தி விட்டார் கருணாநிதி என ஊட கங்கள் தெரிவித்து வ‌ருகின்றன. இந்நிலையில் நாளை வெளியாகும் தேர்தல் முடிவை ஜெயலலிதா பெரிதும் எதிர்பார்த்து கொண்டி ருக்கிறார்.

ஒருவேளை தேர்தல் முடிவுகள் சாதகமாக வந்தால், ஆட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வியூகங்கள் அமைத்து வருகிறார். அதேபோல முடிவுகள் பாதகமாக வந்தால் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், களையெடுக்க வேண்டிய தலைகள் குறித்து திட்டங்களை தீட்டி வருகிறார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தீர்ப்பு எப்படி வரும்?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைவிட, உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எப்படி வரும் என்று தான் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. ஏனென்றால் ஊழல் வழக்கில் வெளியாகப் போகும் இந்த தீர்ப்புதான் உண்மையில் ஜெயலலி தாவின் அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இவ்வழக்கில் கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் ஏறக்குறைய முடிந்துவிட்டது. எனவே உச்சநீதிமன்றம் இவ்வழக்கை கோடை விடுமுறை காலத்திலே தீர்ப்பை அறிவிக்க முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக வருகிற ஜூன் 1-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து, அன்றைய தினம் அரசு தரப்பு, குற்றம்சாட்டப்பட்டோர் இறுதி தொகுப்பு வாதத்தை முடிக்க காலக்கெடு விதித்துள்ளது.

ஒருவேளை வழக்கின் அனைத்து தரப்பு விசாரணையும் அன்றைய தினமே முடிவடைந்தால், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைக்க வாய்ப்பு இருக்கிறது. மாறாக, கர்நாடக அரசு தரப்பிலோ, ஜெயலலிதா தரப்பிலோ கால அவகாசம் கோரினால் முடிந்தவரை வழக்கை விரைவாக முடிக்க உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே வழக்கின் ஆவணங்களை அலசி ஆராய்ந்துள்ள உச்சநீதி மன்ற நீதிபதிகள், தீர்ப்பை அறிவிக்க பெரிதாக கால அவகாசம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதிபதி குன்ஹாவின் தண்டனை தீர்ப்பை உறுதி செய்யுமா அல்லது நீதிபதி குமாரசாமியின் விடுதலை தீர்ப்பை மீண்டும் அறிவிக்குமா என அனைத்து தரப்பு வழக்கறிஞர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். உச்சநீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் டெல்லியிலே தங்கி இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நிறைய குரல்கள் எழுந்துள்ளன. கடந்த முறை தீர்ப்பு வெளியானபோது ஆச்சார்யாவுக்கு மிரட்டல்கள் வந்ததால், இம்முறை தீர்ப்பு வெளியாகும்போது கூடுதல் பாது காப்பு கோர ஆச்சார்யா முடிவெடுத் துள்ளார். குறிப்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் ஆச்சார் யாவுக்கு ஆதரவாக களமிறங்கி யுள்ளார். இந்நிலையில் வழக் கறிஞர் ரத்னம் சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ‘‘நீதியை நிலைநாட்ட துணை புரியும் அரசு வழக் கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடை யூறாக இருக்க கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் அரசு தரப்பில் ஆஜ ராகும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’’என முறை யிட்டு இருந்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. ஆனால் வழக் கறிஞர் ரத்னம், ஆச்சார்யாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த தாக ஊடகங்களில் தவறான‌ செய்தி வெளியானது.

இது தொடர்பாக ஆச்சார்யா கூறுகையில்,

‘‘வழக்கறிஞர் ரத்னம் என்னை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தமிழகத்தில் பலர் என்னை எதிர்க்கும் நிலையில் வழக்கறிஞர் ரத்னம் எனக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நீதியை நிலைநாட்ட துடிக்கும் ரத்னம் போன்றவர்களின் ஆதரவு என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது’’ என்றார்.

தமிழக தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு ஆகிய வற்றுக்கு இடையில் வழக்கறிஞர் ரத்னத்தின் மனு ஜெயலலிதாவுக்கு சவாலாக மாறியுள்ளது. அரசு வழக்கறிஞரை மிரட்டிய விவகாரத்தை உச்சநீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது. எனவே இந்த மனு தீர்ப்பின் போக்கை மாற்றவும் வாய்ப்பு இருப்பதாக‌ நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன‌.

தேர்தல் முடிவுகள் 10 மணி நிலவரம்: அதிமுக முன்னிலை

Return to frontpage

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக கூட்டணி 118 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன.

ஜெயலலிதா முன்னிலை:

சென்னை ஆர்.கே.நகரில் அதிமுக முதல்வர் வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். பென்னாகரம் தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி, உளுந்தூர்பேட்டையில் மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

8 மணிக்கு தொடங்கியது:

தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகம் முழுவதும் இறுதி நிலவரப்படி 232 தொகுதிகளிலும் 74.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தேர்தலில் 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

Wednesday, May 18, 2016

மார்க்கும் மார்க்கமும்

Return to frontpage

மார்க்கும் மார்க்கமும்



டாக்டர் ராமானுஜம்


கொளுத்தும் கோடையின் வெப்பத்தைவிட கொடுமையானது காத்திருப்பு. தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்களைப் போன்றே தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் மாணவர்களின் தவிப்பும். “நமக்கு எவ்வளவு மார்க் கிடைக்குமோ” என்று கலக்கத்துடன் காத்திருந்தவர்கள் ஒரு பக்கம். முதலிடம் பெற்றால் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு எப்படிப் பேட்டி கொடுக்கலாம் என்ற தயாரிப்போடு இருந்தவர்கள் இன்னொரு பக்கம். அத்தனை காத்திருப்புக்கும் முடிவு வந்துவிட்டது.

மதிப்பெண் வாழ்க்கை இல்லை

நம்முடைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கே மதிப்பு அதிகம் இருப்பதால், மார்க்குகளே நாம் போகப் போகும் மார்க்கத்தை நிர்ணயிப்பதாக அமைகிறது. ஒருவரது உள்ளார்ந்த திறமையும் ஆர்வமும் எந்தத் துறையின்பால் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்விக் கூடங்களை ஒரே மாதிரியான இயந்திரங்களைச் செய்யும் தொழிற்கூடங்கள்போல் கருதும் மனநிலைதான் நிலவுகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் வந்தாச்சு. மட்டற்ற மகிழ்ச்சியில் வானத்தையே எட்டிப் பிடித்த மனநிலையில் சிலர் இருப்பார்கள். சிலருக்கு உலகமே இருண்டு பாதாளத்துக்குள் விழுந்ததுபோல இருக்கலாம். இரண்டு வகையான உணர்வுகளுமே மிகையானவை. தேவையற்றவையும்கூட!

வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வாழ்க்கைத் தேர்வில் தோல்வி அடைந்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதேபோல் அதிக மதிப்பெண்கள் பெறாமல் தோல்வியடைந்த பலரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மதிப்போடு வாழ்வதைக் காண்கிறோம்.

முடிவு உங்கள் கையில்

‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்று சொல்வதைப்போல் படித்தால் மருத்துவம், பொறியியல்தான்; இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் மனப்பான்மை குறுகிய பார்வை.

இவற்றைத் தாண்டி வேறு எதையும் பார்க்கவிடாத குறுகிய குகைப் பார்வையை Tunnel Vision என்பார்கள். இந்தக் குகைப் பார்வை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட முக்கியக் காரணம் சமூகம் பொதுபுத்தியில் திணித்திருக்கும் மதிப்பீடுகள்தான்.

நமக்கு என்ன வேண்டும், எது நன்றாக வரும் என்பதையெல்லாம் நினைக்கையில் சமூகம் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிக்கல்.

முதன்முதலாகப் பத்திரிகை நிருபர் வேலைக்குச் சேர்ந்த ஒருவரைத் துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்புவதைப் பற்றிச் செய்தி சேகரிக்க அனுப்பினார்களாம். காலையில் சென்ற அவரிடமிருந்து அன்று இரவுவரை எந்தத் தகவலும் இல்லையாம். நடு இரவில் அலுத்துக் களைத்த வந்த அவரிடம் செய்தி எங்கே என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு ‘போங்க சார்! கப்பல் கவிழ்ந்து பலர் இறந்துவிட்டார்கள்’ என்று பதில் சொன்னாராம். ‘அடப்பாவி இதுதானே நாளைய தலைப்புச் செய்தி! இதைத்தானே நீ உடனடியாகச் சொல்லியிருக்கணும்!’ என்றாராம் பத்திரிகை ஆசிரியர். இதுபோல எது முக்கியமோ அதைச் சுயமாகத் தீர்மானிக்காமல் போடப்பட்ட பாதையில் குறுகிய பார்வையோடு இருப்பதுதான் சிக்கல்.

ஆராய்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் தேவையான மனித ஆற்றல் இல்லாமல் பல்வேறு துறைகள் இருக்கின்றன. சற்று கவனமாகக் கண்காணித்தால் போதும். வாய்ப்புகள் நம் வசப்படும்.

எது கவுரவம்?

அப்துல்கலாமைப் பற்றிச் சொல்லாமல் சுயமுன்னேற்றக் கட்டுரை எழுத முடியுமா? அவர் மிகப் பெரும் கல்வி நிலையத்தில் கற்றவர் அல்ல. ஆனால் தமது துறைமீது கொண்ட ஆர்வமே அவரை ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநராக்கியது. இன்னும் கணினி மற்றும் மென்பொருள் துறையின் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற வெற்றியாளர்களது கதைகளை எல்லாம் எடுத்துப் பார்த்தால் பலரும் முறையான பள்ளிப் படிப்வைக்கூடப் படித்திருக்கவில்லை.

இது போன்ற உதாரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மதிப்பெண் பின்னால் ஓடும் மனப்பான்மைக்குக் காரணம் நல்ல மதிப்பெண் எடுப்பது கார், வீடு வாங்குவது போல் ஒரு சமூகக் கவுரவமாகக் கருதப்படுவதால்தான்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றிபெறத் தேவை, முதலில் ஆர்வம். மகாபாரதத்தில் தர்மரிடம் ஒரு யக்ஷன் பல கேள்விகளைக் கேட்பான். அதில் ஒன்று “யார் மிகச் சிறந்த ஆசிரியர்?” என்பதாகும். அதற்குத் தர்மர் “ஆர்வமே மிகச் சிறந்த ஆசிரியர்” என்றார். “கல்வி என்பது விஷயங்களைத் தெரிந்து கொள்வதல்ல. எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதே” என்பது ஐன்ஸ்டீனின் கருத்து. எனவே, புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்து பெறும் மதிப்பெண் சான்றிதழ் வெறும் அச்சடித்த காகிதம்தான்.

அதைத் தாண்டி நமக்கு நன்கு வரக்கூடிய, நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தைச் செய்வதே வெற்றி. ஆனால் நாமோ பொருள்ரீதியான விஷயங்களைப் பெறுவதே வெற்றி என்ற சமூக அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மதிப்பெண்கள் பின்னால் ஓடுவது கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போன்றதே.

ஆகவே மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடுங்கள். வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி!

மிகமிக முக்கியமான விஷயம், தயவு செய்து இந்த அச்சிடப்பட்ட காகிதத்தில் சில எண்கள் நீங்கள் நினைத்ததுபோல் அமையவில்லை என்பதால் வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்க வேண்டாம்.

அது எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றதாகும். கலைக்காகவே கலை என்று இலக்கியத்தில் சொல்வதைப்போல் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துக்காக கற்றலே உண்மையான வாழ்க்கைக் கல்வி. அது மதிப்பெண்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. கற்றல் இனிதானது. வாழ்தல் அதனினும் இனிமையானது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com

ரகுராம் ராஜன் மீதான சுப்பிரமணியன் சுவாமியின் விமர்சனம் சரிதானா?- ஓர் அலசல் பார்வை

Return to frontpage

'ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இந்திய பொருளாதாரம் முன்னேறவிடாமல் முட்டுக்கட்டை போடுகிறார்' என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சமீபகாலமாக விமர்சனம் வைத்து வருகிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம் ஒன்று, 'வட்டி விகிதத்தை அதிகரிக்கிறார் அல்லது குறைக்க மறுக்கிறார். இதனால் பொருளாதாரம் பின்னடைவு கண்டு வேலைவாய்ப்பின்மை ஏற்படுகிறது'. இரண்டாவது, 'பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வட்டி விகிதத்தை குறைக்க மறுக்கிறார்' என்பது.

மேலும், நிறுவனங்களுக்கு இடையிலான வர்த்தக அடிப்படையிலான மொத்த விற்பனை விலை குறியீடிலிருந்து மக்கள் நுகர்வுத்திறன் சார்ந்த நுகர்வோர் விலை குறியீடுக்கு அவரது இலக்கு தாவியுள்ளது; மொத்த விற்பனை விலை குறியீடில் அவர் கவனம் குவிந்திருந்தால் பொருளாதாரம் முன்னேறியிருக்கும் - சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை நசிவடைந்திருக்காது' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இவையெல்லாம் அவர் கூறும் பொருளாதார காரணங்கள்.

ஆனால், 'அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அவர் மனதளவில் இந்தியராக இல்லை, அமெரிக்க கிரீன் கார்டு வைத்திருக்கிறார்' என்றெல்லாம் கூறுவது பாஜகவின் மைய அரசியல் பார்வை என்பதைத் தவிர வேறில்லை.

அதேவேளையில், சுப்பிரமணியன் சுவாமி கூறும் அரசியல் ரீதியான பார்வையை விடுத்து, நாம் அவரது பொருளாதார காரணங்களில் ஏதாவது சாராம்சம் உள்ளதா என்பதை மட்டும் ஒரு முதற்கட்ட அலசலுக்கு உட்படுத்துவோம்.

செப்டம்பர் 2013-ல் ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக பொறுப்பேற்றபோது, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.70-ல் இருந்தது. அதாவது, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து கொண்டிருந்தது. 2012-ம் ஆண்டின் இறுதி காலாண்டிலிருந்து பணவீக்க விகிதம் இரட்டை இலக்கமாக அதிகரித்திருந்தது.

இதனையடுத்து பணவீக்க விகிதத்தை குறைப்பதும், அயல்நாட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு செல்லாமலும் இருப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியிருந்தது. இதற்காக கைவசம் இருந்த உடனடி வழி வட்டி விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுக்குள் அதிக முதலீட்டைக் கொண்டு வருவது. இந்தத் திட்டம் வெற்றி கண்டதாகவே பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். அன்னிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறாமல் தடுக்கப்பட்டதோடு, சில மாதங்களில் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் முதலீடு வரத்து ஏற்பட்டது.

இதனைச் செய்யாதிருந்தால் பணவீக்க விகிதம் உச்சத்திற்குச் சென்று உலகப் பொருளாதாரம் சந்தித்த நெருக்கடியை இந்தியாவும் சந்தித்திருக்கும். ரகுராம் ராஜன் இந்த இடத்தில்தான் இந்திய பொருளாதாரத்தைக் காத்தார். வட்டி விகிதத்துக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் எந்த வித தொடர்புமில்லை என்பது உலக பொருளாதார நிபுணர்களின் கருத்து. இது ஆளுங்கட்சியின் பிரச்சார எந்திரங்கள் செய்யும் வேலை. வட்டி விகித குறைப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் வரலாற்றுச் சான்றுகளுடனான கருத்தாகும்.

மேலும், நிதிநிலைமைகள் ஓரளவுக்கு உறுதித்தன்மை அடைந்து வட்டி விகிதத்தையும் சீராக வைத்திருந்ததன் விளைவாக ஜனவரி 2015-க்குப் பிறகு வட்டி விகிதத்தை 150 அடிப்படை புள்ளிகள் (1.5%) குறைத்தார், அதாவது அவர் அதிகரித்ததை விட அதிகமாகக் குறைத்தார். பொறுப்பேற்கும் போது வட்டி விகிதம் 7.25% ஆக இருந்தது, அதனை 8% ஆக அதிகரித்தார். 2014-ல் அதனை அப்படியே வைத்திருந்தார். இதைத்தான் சுப்பிரமணியன் சுவாமி சாடுகிறார். ஆனால் ஜனவரி 2015-க்குப் பிறகு 6.5% ஆகக் குறைத்தார். அவர் இதனை ஏன் செய்தார் என்றால் இரட்டை இலக்க பணவீக்க விகிதம் 6%-க்கும் குறைவாக இறங்கியதாலேயே.

இந்த வட்டி விகிதக் குறைப்பு 2 ஆண்டுகால வறட்சி நிலைமைகளுக்கிடையே செய்யப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மாறாக, பொருளாதாரம் மந்தமடைவதற்குக் காரணம் நிதியமைச்சர் அரசு செலவீடுகளைக் குறைத்ததே என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

வட்டிக்குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்ற மாயை:

பணவீக்கம் என்பது பொருளாதார வீழ்ச்சியின் எதிர்ப்பதம் அல்ல. பணவீக்கம் என்பது பணவாட்டம் என்பதன் எதிர்ப்பதமே. பணவீக்கம் என்பது பொத்தாம் பொதுவாகக் கூற வேண்டுமென்றால் ‘விலைவாசி உயர்வு’ என்பதே. பொருட்களின் சராசரி மதிப்பை ஒப்பிடும்போது பணத்தின் மதிப்பு குறைவது பணவீக்கத்தின் ஒரு விளக்கம் என்று வைத்துக் கொள்வோம். ரூபாய் மதிப்பிழக்கிறது என்று கூறினால் நமக்கு உடனே எதனுடன் ஒப்பிடும்போது என்ற கேள்வி எழும். உதாரணத்திற்கு பால் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்தால் ஒன்று ரூபாய் தன் மதிப்பை சற்றே இழந்துள்ளது என்றோ, பாலின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றோ கொள்வோம். அதாவது, நாட்டில் விற்கப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் ரூபாயின் சராசரி அதிகரிப்பே பணவீக்கம்.

இதற்கும் பொருளாதார மந்த நிலை, வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பில்லை. விலைவாசி குறைகிறது என்றாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. விலைவாசி அதிகரித்தாலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. அதாவது இதற்கும் பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சிக்கும் சம்பந்தமில்லை. எனவே பணவீக்கத்தைக் குறைக்க வட்டி விகிதத்தை அதிகரிப்பது என்ற அவசியமான நடவடிக்கையினால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து விட்டது என்பது பிரச்சார உத்திதானே தவிர பொருளாதார கோட்பாடு அடிப்படைகள் இல்லாதது.

வட்டி விகிதத்தை குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பது அமெரிக்காவில் தப்பும் தவறுமாக கையாளப்பட்ட ஒரு கொள்கை. பொருளாதார வளர்ச்சிக்காக அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஏகப்பட்ட முறை வட்டி விகிதங்களை குறைத்ததற்கான வரலாறு உண்டு. பெடரல் ரிசர்வ் சேர்மன் கிரீன்ஸ்பான் எண்ணற்ற வட்டிவிகிதக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அதனால் பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை. மாறாக, அதிபர் புஷ் வரிவிதிப்பை கடுமையாகக் குறைத்தே அதற்குத் தீர்வு கண்டார்.

ஆனாலும் அமெரிக்கா வட்டி விகிதக் குறைப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேயில்லை. பெடரல் ரிசர்வ் சேர்மன் பெனாங்கேயும் வட்டி விகித குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் நடந்தது 2008-ம் ஆண்டு பொருளாதார நசிவு.

அதாவது, வட்டி விகித குறைப்பின் மூலம் அமெரிக்கர்கள் கிரெடிட் கார்டுகளில் அதிக அளவில் செலவு செய்து கடனாளி ஆனதுதான் மிச்சம் என்று எஸ்.குருமூர்த்தி போன்றவர்கள் எச்சரித்து கட்டுரை மேல் கட்டுரையாக எழுதியுள்ளனர். அதாவது சேமிப்பேயில்லாமல் செலவு செய்வது, பொருட்களை வாங்கிக் குவிப்பது. காரணம் வட்டி விகிதம் குறைவானது. இது ஒரு மாயையான பொருளாதார வளர்ச்சியே. ஒரு விதமான மாயையான செல்வச் செழிப்புக்கும் ஊக செல்வச்செழிப்புக்கும் அமெரிக்கர்களை இட்டுச் சென்றது. இது உண்மையான செல்வச் செழிப்பல்ல.

அதாவது கோட்பாட்டு அடிப்படையில் ஒரு வர்த்தகத்திற்கு 100 கோடி தேவைப்படுகிறது என்றால் வட்டி குறைவாக இருந்தால் அவர்கள் கடன் வாங்குவார்கள். அதேபோல் கடன் நுகர்வோரும் கடன் வாங்கி செலவழிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே இதுதான் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கோட்பாடு. ஆனால் நடைமுறையில் இதன் இன்னொரு பக்கத்தை கவனிக்கத் தவறுகிறோம். பணம் கொடுப்பவர்கள் பகுதிக்கு ஏற்படும் இழப்பை கவனிக்கத் தவறுகிறோம். அளிக்கும் பணத்திற்கு ஏற்ப ரிடர்ன் கிடைக்கவில்லையெனில் பணத்தை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்ற கேள்வி எழும், இதனால் பொருளாதார மந்த நிலையே ஏற்படும்.

எனவே வளரும் பொருளாதாரத்துக்குத் தேவை அதிக பணப்புழக்கம். வட்டி விகிதங்களைக் குறைப்பது பொருளாதாரத்தில் கூடுதல் பணத்தை அளிப்பதாகாது. இது கோட்பாட்டு அடிப்படையிலும் செயல்பாட்டு தளத்திலும் பொய்த்துப்போனதை அமெரிக்க வட்டிக் குறைப்பு வரலாற்றை இன்னும் தீவிரமாக ஆய்வு செய்தால் தெரியவரும்.

இன்னும் சொல்லப்போனால் அதிக வட்டி விகித காலங்களில் கூட ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் தருணங்கள் இருந்திருக்கின்றன. மாறாக, குறைந்த வட்டி விகிதங்களினால் ஜிடிபி ஊக்குவிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் இல்லை.

ஒரு பொருளாதரத்தை ஊக்குவிப்பது என்றால் என்ன? அதனை மேலும் பரவலாக்குவது. ஒரு பரவலான பொருளாதாரத்துக்கு அதிக பணம் தேவை. எனவே பொருளாதார வளர்ச்சிக்குத் தேவை அதிக பணம்.

எனவே, வட்டி விகிதத்தை ரகுராம் ராஜன் அதிகரித்தது தவறு என்ற பார்வையும் தவறு. வட்டி விகிதத்தைக் குறைத்தால் பொருளாதாரம் வளர்ச்சியுறும் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. பொருளாதார தோல்விகளுக்கு ஆட்சி செய்யும் தலைமைகளின் கொள்கைகளே காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது, அரசு செலவினத்தை குறைக்காமல் அதிகரிக்க வேண்டும்; வேலைவாய்ப்பை நேரடியாக அதிகரிக்க அரசு செலவிட வேண்டும். நுகர்வோரிடத்தில் தடையில்லா பணப்புழக்கம் ஏற்படவும் அரசு செலவினத்தை கஞ்சத்தனம் செய்தவதாகாது. வரிவிதிப்பை குறைக்க வேண்டும். விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இந்தப் பிரிவில் அரசின் செலவினங்களைக் குறைத்து கஞ்சப்பொருளாதாரம் செய்யக்கூடாது. மக்களின் கல்வி, மருத்துவச் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்ய வேண்டும். பொருளாதாரத்தை பரவலாக்க வேண்டும் இவற்றுக்கான கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே பால் குருக்மேன் போன்ற பொருளாதார நிபுணர்கள் ஆய்வு ரீதியாக கண்டடைந்த முடிவு.

எனவே. தொடர்புபடுத்த முடியாத வட்டி விகித - பொருளாதார வளர்ச்சி / பின்னடைவு பார்முலாவை தொடர்புபடுத்தி, அதற்கு ரகுராம் ராஜனைக் குறைகாண்பதில் எந்தவிதமான ஆய்வுபூர்வமான பொருளாதார அடிப்படைகள் இல்லை என்பதே பல பொருளாதார ஆய்வுகள் நமக்கு எடுத்துரைப்பதாகும்.

ஆர்.முத்துக்குமார் - தொடர்புக்கு muthukumar.r@thehindutamil.co.in

'108' ஆன அரசு பஸ்: சென்னையில் 'மனிதத்துக்கு' ஒருநாள்!

Return to frontpage

சென்னையில் மனிதம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உணர்த்துவது உண்டு. கடந்தாண்டு டிசம்பர் மழை மனிதம் மிக்க மனிதர்கள் எவ்வளவு பேர் கொண்டது சென்னை என்பதை உலகுக்கு உணர்த்தியது.

'சென்னையில் ஒரு நாள்' படத்தைப் போல ஒரு பிரசவ வலியால் துடித்த பெண்ணை, அரசு பஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அதிவேகத்தில் ஓட்டிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அந்த பேருந்தில் பயணித்த இளவரசன் சுகுமாரிடம் பேசிய போது அவர் சொல்லிய வார்த்தைகள் அனைத்துமே ஆச்சர்யமூட்டுபவை. அரசு பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் அப்பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

அன்று நடந்த சம்பவத்தை பகிர்கிறார் இளவரசன் சுகுமார்:

எனக்கு காஞ்சிபுரம் சொந்த ஊர். தாம்பரம் சானிட்டோரியத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்தில் ஏறினேன். அடுத்த நாள் தேர்தல் என்பதால் கடுமையான கூட்டம் இருந்தது. தாம்பரம் தாண்டி படப்பைக்கு கொஞ்சம் முன்பு ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அலறல் சத்தம் கேட்டது.

கடுமையான கூட்டத்தில் நான் பின்னால் இருந்தேன். அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது என தெரிந்தது. அங்கிருந்து பிரசவம் பார்க்கும் மருத்துவமனையை நோக்கி காஞ்சிபுரத்துக்கு செல்ல 1 மணி நேரமாகும் என்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவருமே சீக்கிரமாக செல்ல திட்டமிட்டார்கள்.

பயணிகள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இருந்து 200 அடி தாண்டி தான் பேருந்தை நிறுத்தினார்கள். உடனடியாக இறங்க வேண்டும், வேறு எங்குமே பேருந்து நிற்கவில்லை. இந்த சூழலில் இன்னொரு நடத்துனர் அப்பெண்மணிக்கு பக்கத்தில் இருந்துகொண்டு தண்ணீர் கொடுத்து கவனமுடன் பார்த்துக்கொண்டார்.

ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் பேருந்தை மிக வேகமாக இயக்கினார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் 200 அடியைத் தாண்டி நிறுத்திவிட்டு, இறங்க வேண்டியவர்கள் இறங்கியவுடன் பேருந்தும் வேகமாக கிளம்பியது. ஒரு நிறுத்தத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் பேருந்தை நிறுத்த கைகாட்டினார். அப்போது கூட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.

காஞ்சிபுரம் நெருங்கும் முன்பு நடத்துனர் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்தார். ஆம்புலன்ஸ் ரங்கசாமி குளம் என்ற இடத்தில் தயாராக இருந்தது. இதற்கு முன்பே பிரசவ வலியால் துடித்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் போன் செய்து விட்டதால் அவர்களும் காத்திருந்தனர். அப்பெண்ணை ரங்கசாமி குளத்தில் இறங்கிவிடும் போது கூட "அம்மா.. போயிருவீங்களா. கூட யாரையும் அனுப்பட்டுமா?" என்று கேட்டார் ஒட்டுநர். என் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என நன்றி கூறிவிட்டு இறங்கி சென்றார்.

அந்த ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பெயரை எல்லாம் நான் பார்க்கவில்லை. அவர்களுடைய மனிதம் மட்டும் என்னுடைய கண்ணிலும், நெஞ்சிலும் தெரிந்தது என்று கூறிய இளவரசன் சுகுமாரன் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவுக்கு 84,482 விருப்பம் தெரிவித்தனர். 18 ஆயிரம் பேர் பகிர்ந்திருந்தனர். அவை எல்லாம் எனக்கு எண்களாகத் தெரியவில்லை. நான் கண்டுகொண்டது மனிதர்களையும், மனிதத்தையும் மட்டுமே.

Tuesday, May 17, 2016

இனோவா’ போய் ‘கிறிஸ்டா’ வந்தது

Return to frontpage




பன்முக பயன்பாட்டு வாகன பிரிவில் தனி முத்திரையை பதித்த வாகனம் இனோவோ. ஆனால் இனி இனோவா நம் கைகளுக்கு கிடைக்கப்போவதில்லை. பயப் பட வேண்டாம் இனோவாக்கு பதிலாக புதிய இனோவா கிரிஸ்டாவை கொண்டு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம்.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் புதிய இனோவா கிறிஸ்டாவை காட்சிப்படுத்தியது டொயோடா நிறுவனம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியிருந்தாலும் கிறிஸ்டாவுக்கான முதல் கட்ட அறிமுகம் சென்னை, மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. 10 நாட்களுக்குள்ளேயே 15,000 கார்களை முன்பதிவு செய்துள்ளனர். அதுவும் டாப் எண்ட் கார்களையே அதிகம் முன்பதிவு செய்துள்ளனர். அந்த அளவுக்கு இனோவா கிறிஸ்டா வாகன பிரியர்களிடையே எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது.

ஏனெனில் பன்முக பயன்பாட்டு வாகனத்தின் விற்பனையில் மிகப் பெரிய சாதனை படைத்தது இனோவா. அதுமட்டுமல்லாமல் தோற்றத்திலும் பயன்பாட்டிலும் அனைவரையும் ஈர்த்த வாகனம். பழைய இனோவாவை அப்படியே தொழில்நுட்ப ரீதியாகவும் தோற்றத்திலும் அப்டேட் செய்து புதிய வெர்ஷனாக கிறிஸ்டாவை தயாரித்துள்ளனர். பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் இந்த வாகனம் வெளிவந்துள்ளது.

ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட், ஜி என நான்கு மாடல்களில் தற்போது இனோவா கிறிஸ்டா வெளிவந்துள்ளது. இனோவா கிறிஸ்டாவுக்கு சிறப்பம்சமே புதிய இன்ஜின்தான் என்கிறார்கள். 2.8லிட்டர் தானியங்கி டீசல் இன்ஜின் மற்றும் 2.4லிட்டர் டீசல் இன்ஜின் என இரு வகைகளில் வந்துள்ளது.

புதிய இனோவா கிறிஸ்டாவின் நீளம் 4735 மிமீ, அகலம் 1830 மிமீ, உயரம் 1795 மிமீ. பழைய இனோவாவை விட பெரியதாக இருக்கும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வெளிப்புறத் தோற்றத்திலும் தானியங்கி எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் என மாற்றங்களை செய்திருக்கிறது.

7 அங்குல தொடுதிரை, பின்புற சீட்டில் லேப்டாப் வைத்துக் கொள்ளும் அளவிற்கு கேபின் வசதி, பின்பக்க சீட்டை எளிதாக நகர்த்திக் கொள்ளும் வசதி, சூழலுக்கு ஏற்ப குளிர்நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் நகர்த்திக் கொள்ளும் வசதி என உட்புறத் தோற்றத்தில் கவரக்கூடிய அளவிற்கு மாற்றங்களைச் செய்துள்ளது. பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள இனோவா கிறிஸ்டாவின் விலை ரூ. 14 லட்சத்திலிருந்து ரூ. 21 லட்சம் வரை இருகிறது. பழைய இனோவாவை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் பயன்பாட்டு வசதிகள் கிறிஸ்டாவில் அதிகம் என்கின்றனர்.

சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்ற டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை குழுமத்தின் துணைத்தலைவர் பி. பத்மநாபன், ‘பன்முக பயன்பாட்டு வாகனம் என்பதை மாற்றி பன்முக செயல்திறன் என்ற வகையில் இனோவாவின் இரண்டாம் தலைமுறையான கிறிஸ்டாவை வடிவமைத்துள்ளோம். எங்க ளுக்கு 6 லட்சம் வாடிக்கை யாளர்கள் இருக்கின்றனர். இது இன்னும் அதிகமாகும். வாடிக்கையாளர் திருப்தி சுற்றுச்சூழல் என இரண்டையும் கருத்தில் கொண்டே நாங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுகிறோம்' என்று தெரிவித்தார்.

ஆடம்பரம், செயல்திறன், அழகான வடிவமைப்பு என கிறிஸ்டா இதே பிரிவில் உள்ள மற்ற வாகனங் களை விட கிறிஸ்டா வாடிக்கை யாளர்களுக்கு முழு திருப்தியை தரும் என்பதில் ஐயமில்லை. முந்தைய இனோவாவை விட விற்பனையில் சாதனை படைக்குமா என்பதை பொ றுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தனது காரில் இருந்து எம்.ஜி.ஆர். இறங்குகிறார்.

எம்ஜிஆர் 100 | 66: கேட்காதவர்களுக்கும் உதவியவர்!

M.G.R. தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு.

இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்த மான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி அலுவல கத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக் கால கட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆரின் கார் வந்து கொண் டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம். காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

அங்கிருந்த ஒரு குதிரை வண்டிக்கார ருக்கு சொந்தமான குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும் பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில நாட் கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக் காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்கார ரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என் றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி. நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து வணங்கி னார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை அடக் கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற் குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளி களில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

‘‘இந்த உலகத்துலே ஏழைங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சவங்க உன்னை மாதிரி வேற யாரும் இல்லப்பா!’’

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்



எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை.

Monday, May 16, 2016

This Kerala man casts his vote with feet


This Kerala man casts his vote with feet

TOI

KOZHIKODE: Those who've been looking for excuses to not cast your vote should learn a lesson from 25-year-old Abdu Samad P N C of Muzhangaloor near Pallikkal in Malappuram district.

While voting is just a simple press of a button for the around 2.6 crore electorate of the state, Samad has to summon his gymnastic skills at the booth to vote with his feet.

Samad has not missed any election in seven years. The student of MA Sociology had his hands amputated after he was nearly electrocuted at age 11.Nevertheless, he has been at the forefront of the campaign and has visited almost all houses in his ward seeking votes for the candidate he supports."Every polling day has presented me with a memorable experience. It is a day when I feel that my voice too counts," he said. Recounting his poll day experiences, Samad says often there is a flutter and confusion among officials when he turns up to vote. "Last time an official even checked the residual stump on my shoulder by lifting my shirt. As I don't have fingers, they put the indelible ink on the second toe of my left leg and I sign the register with my leg."

Samad said he would balance himself on one leg and would lift his right leg to access the electronic voting machine and press the voting button with his second toe. "Selecting the name of the candidate on the EVM is no big deal as I skim through over 460 contacts in my mobile with my toes," he added. Samad has a few words for those who make excuses for not voting."I think you have no excuse to skip voting. Those who say that they would not vote are either busy or disillusioned with politics, or the candidates fail to excite them. What they don't understand is that vote is the only way to change it all," Samad said.

He welcomed the initiatives by the election commission to make polling booths more accessible to the disabled.

Pulikkal panchayat member K M Ali said that Samad's enthusiasm has been contagious. "Whether rain or shine, he is one of the first to queue up at the polling booth," Ali said.

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...