Monday, December 19, 2016

ஜெயலலிதாவின் தருணங்கள்: அவர் கடந்து வந்த பாதை

பவித்ரா

தமிழகத்தின் முதலமைச்சராக ஆறு முறை பதவி வகித்தவர் ஜெ.ஜெயலலிதா. அவர் மாநில அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் தாக்கம் செலுத்தும் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். பலவிதமான ஏற்ற, இறக்கங்கள் மற்றும் போராட்டங்களைச் சந்தித்த அவரது வாழ்க்கைப் பயணத்தின் திருப்புமுனைகள் இங்கே காலவரிசைப்படி வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் பிறந்தார்

கர்நாடக மாநிலத்திலுள்ள மாண்டியா மாவட்டத்திலுள்ள மேல்கோட்டை என்னும் ஊரில் ஜெயராம், வேதவல்லி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். அவரது அப்பாவழித் தாத்தா இட்ட பெயர் கோமளவல்லி. அவருக்கு ஒரு வயதானபோது ஜெயலலிதா என்ற பெயரைப் பெற்றோர்கள் வைத்தனர். ஜெயலலிதாவுக்கு ஜெயகுமார் என்ற மூத்த சகோதரர். 1950-ல் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராம் மரணமடைந்தார். ஜெயலலிதாவின் தாய் வேத வல்லி, ஜெயலலிதாவையும் அவர் அண்ணன் ஜெயகுமாரையும் பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

சென்னைக்கு வந்தார்

ஜெயலலிதாவும் அவரது அண்ணனும் பெங்களூருவில் அத்தையுடன் தங்கியிருக்க அவரது அம்மா வேதவல்லி, சென்னைக்கு வந்தார். ஜெயலலிதா பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியில் படித்தார். வேதவல்லி நாடகங் களிலும் சினிமாக்களிலும் சந்தியா என்ற பெயரில் நடிக்கத் தொடங்கினார். 1958-ல் ஜெயலலிதாவின் அத்தைக்குத் திருமணமான நிலையில், அவர் சென்னை வந்தார். சென்னையின் புகழ்பெற்ற சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார். கர்நாடக இசை, பரத நாட்டியம் மற்றும் கதக் நடனப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. படிப்பைப் பொறுத்தவரை முன்னணி மாணவியாகத் திகழ்ந்தார்.

திரைவாழ்வு தொடங்கியது

1964-ல் சர்ச் பார்க் கான்வென்டில் மெட்ரிக் வகுப்பில் நல்லமுறையில் தேறினார். புதுமுக வகுப்பில் படிப்பதற்கு தயாரான சூழலில், குடும்பத்தை அழுத்திய கடன் சுமையை நீக்கும் வகையில் சினிமா நடிகையானார். அவரது முதல் திரைப்படம் ‘சின்னடா கொம்பே’ என்ற கன்னடப் படம். சிறு வயதில் அவருக்கு வழக்கறிஞராகும் லட்சியம் இருந்தது. ஜெயலலிதாவின் முதல் தமிழ்த் திரைப்படம் ‘வெண்ணிற ஆடை’. 1965-ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் இயக்குநர் ஸ்ரீதர்.

அதே ஆண்டு தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்பு என்று இன்றும் நினைவுகூரப்படும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். உடன் முதல் முறையாகக் கதாநாயகியானர்.

1965 முதல் 1980 வரை ஜெயலலிதா நட்சத்திரமாக ஜொலித்த ஆண்டுகள். அக்காலத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் திரைக்கலைஞராக விளங்கினார். புகழ் மிக்க பிராண்டுகளின் விளம்பர மாடலாகவும் இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் 140 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் 120 திரைப்படங்கள் வெற்றிப்படங்கள். அவர் தமிழில் நடித்த கடைசித் திரைப்படம் 1980-ல் வெளியான ‘நதியைத் தேடி வந்த கடல்’.

அரசியல் வாழ்வின் தொடக்கம்

1982, ஜூன் 5-ம் தேதி, அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் ஜெயலலிதா இணைந்தார். ‘பெண்ணின் பெருமை’ என்ற தலைப்பில் முதல் மேடைப் பேச்சை நிகழ்த்தினார். அரசியலில் நுழைவதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். தான் என்றும் அவர் கூறினார். அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டத்தை மேற்பார்வையிடும் உயர் மட்டக் கமிட்டியின் உறுப்பினராகப் பின்னர் நியமிக்கப்பட்டார். 1983-ல் ஜெயலலிதா அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆனார்.

1984, மார்ச் மாதம் 12-ம் தேதி, அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பி னராக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை, அப்போதைய சட்டசபை சபாநாயகர் கே. ராஜாராம் முன்மொழிந்தார். 1984-ம் ஆண்டு முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர் மரணம்

அ.தி.மு.க. வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 1987, டிசம்பர் 24 அன்று மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான இரண்டு அணிகள் ஏற்பட்டன. 1988, ஜனவரி 1-ம் தேதி அ.தி.மு.க. (ஜெ) அணிக்கு பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர்

1989, ஜனவரி 24-ம் தேதி, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்தார். போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று சட்டசபை உறுப்பினர் ஆனார் ஜெயலலிதா. அவர் தலைமையிலான அணி 27 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சி ஆனது.

1989, பிப்ரவரி 9-ம் தேதி தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்து இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார். அதே ஆண்டு நவம்பர் மாதம் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அ.தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 40 இடங்களில் 39 இடங்களை வென்றது. இதன் மூலம் ஜெயலலிதா தேசிய அரசியலில் நுழைந்தார்.

முதலமைச்சர் ஆனார்

1991-ல் சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில், ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி, 234 தொகுதிகளில் 224-ஐ வென்றது. 39 நாடாளுமன்றத் தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. அதிகபட்ச பெரும்பான்மையுடன் ஜெயலலிதா, தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். அதிகபட்ச பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் (25) இடம்பெற்ற சட்டசபையாகவும் அது அமைந்தது.

தொட்டில் குழந்தைத் திட்டம்

1992-ம் ஆண்டு பெண் சிசுக்கொலையைத் தவிர்க்கும் வகையில் ‘தொட்டில் குழந்தைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 2011-ம் ஆண்டுவரை அறிமுகம் செய்யப்பட்டது. பெண்கள் சார்ந்த குற்றங்கள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க மகளிர் காவல் நிலையங்கள் முதல் முறையாக அமைக்கப்பட்டன. போலீஸ் பணிகளில் 30 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தமிழகத்தில் அரசு வேலைகள் மற்றும் கல்வியில் 69 சதவீதம் இடஒதுக்கீடு தொடர வழிவகை செய்யப்பட்டது.

அடுத்த தேர்தலில் தோல்வி

1996 மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோற் கடிக்கப்பட்டார். அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியது. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் பெற்ற வெற்றி

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றிபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். 2002-ம் ஆண்டு, ஜெயலலிதா ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வென்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். பெண் போலீஸ் கமாண்டோக்களைக் கொண்டு இந்தியாவின் முதல் மகளிர் காவல் படையை அமைத்தார்.

வழக்கு, விடுதலை, மீண்டும் தோல்வி

2003, நவம்பர் மாதம் டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜெய லலிதாவை விடுதலை செய் தது. 2006-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தோற்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெய லலிதா வென்றார். பின்னர் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.

அம்மா பிராண்ட்

2011, மே மாதம் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் 13 கட்சிகள் கூட்டணி அமைத்து மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆனார். அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டன.

2016, மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 134 இடங்களை வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து முதலமைச்சரான சில தலைவர்களில் வரிசையில் ஜெயலலிதா இடம்பெற்றார். செப்டம்பர் மாதம், பெண் அரசு ஊழியர்களுக்கு ஒன்பது மாத பிரசவ கால விடுப்பை அறிவித்தார். அதற்கு முன்னர் ஆறு மாத காலமே இருந்தது.

காலம் ஒலித்த மணி

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி, காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி, 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 11.30 மணிக்குக் காலமானார்.


இது புதுசு: திருமணத்துக்கு முன் எதைப் பேசலாம்?

யாழினி
Return to frontpage

இன்று காலம் ஓரளவு மாறிவிட்டது. திருமணம் முடிந்த பிறகே கணவனை ஏறெடுத்துப் பார்க்கும் நிலை இன்று இல்லை. பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களில்கூட மணமக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் சில மாதங்களாவது நேரம் இருக்கிறது. ஆனால் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடைபெறுவதற்குள் இருக்கும் இந்த நேரத்தில் ஆண், பெண் இருவருமே ஒருவரையொருவர் எந்தளவுக்குப் புரிந்துகொள்கின்றனர் என்பது கேள்விக்குறிதான்.

அத்துடன், காதல் திருமணத்தில் இருக்கும் சிக்கல்களைவிட ஏற்பாட்டுத் திருமணங்களில் இருக்கும் சிக்கல்கள் இன்றைய சூழலில் அதிகரித்திருக்கின்றன. இந்தச் சிக்கல்களைத் தாண்டி எப்படித் தன்னுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்தேன் என்பது பற்றி நஸ்ரீன் ஃபஸல் என்ற இளம்பெண், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தார். அவருடைய அனுபவத்தை ஃபேஸ்புக்கில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் பகிர்ந்திருந்தனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ‘லைக்’செய்திருக்கின்றனர்.

நஸ்ரீன் ஃபஸல் ஒர் இளம் எழுத்தாளர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்திருக்கிறார். கடந்த நான்கு மாதங்களுக்குமுன் இவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. தற்போது கணவர் அமீனுடன் சவுதி அரேபியாவில் வசித்துவருகிறார். தன்னுடைய ஏற்பாட்டுத் திருமணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு நஸ்ரீன் கூறியிருக்கும் காரணங்கள் பலரையும் ஈர்த்திருக்கின்றன.

என் கணவரை முதல்முறை சந்தித்தபிறகு, என்னைப் பற்றிய அறிமுகத்தை இரண்டு பக்கங்களுக்கு அவருக்கு எழுதி அனுப்பினேன். ஒரு பக்கத்தில், நான் யார் என்பதைத் தெரிவித்திருந்தேன். இன்னொரு பக்கத்தில் என்னுடைய வாழ்க்கைத் துணையிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, அவர் தன்னைப் பற்றிய மூன்று குறிப்புகளையும், எனக்கு நேரடியான மூன்று கேள்விகளையும் அனுப்பியிருந்தார்.

ஒருவரையொருவர் புரிந்துகொள்ளத் தொடங்கிய இந்த முதல் வாரத்தில் நாங்கள் 80 மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டோம்! ஆமாம், எண்பது மின்னஞ்சல்கள். இந்த மின்னஞ்சல்களில் அற்பத்தனமான எந்த விஷயங்களையும் நாங்கள் பேசவில்லை. முழுக்க முழுக்க எங்களுடைய வாழ்க்கையின் முன்னுரிமைகள், எதிர்காலம், வாழ்க்கைத் துணையிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் பற்றித் தொடர்ந்து விவாதித்தோம். பெரும்பாலான கேள்விகளை நான்தான் முன்வைத்தேன்.

‘பெண்கள் வேலைக்குச் செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘முறைகேடு’ Abuse பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’, ‘எப்போது குழந்தைகள் வேண்டுமென்று நினைத்திருக்கிறீர்கள்?’… இப்படிப் பல கேள்விகளைக் கேட்டேன். அவர் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாகப் பதிலளித்தார். இப்படி இருவரும் திருமணத்தை உறுதிப்படுத்த இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டோம். இந்த முறையான அறிமுகம்தான் எங்கள் உறவின் அடித்தளம்.

நம்முடையது ஒரு வேடிக்கையான கலாசாரம். ஓர் உணவகத்தில் உணவைத் தேர்வு செய்யப் பல மணி நேரம் எடுத்துக்கொள்வோம். ஆனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போதுமட்டும், ஓர் ஆணும் பெண்ணும் சில மணிநேரங்களில் (சில சமயங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக) அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். இதில் எந்த நியாயமுமில்லை என்று நீள்கிறது நஸ்ரீனின் விவரம்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் கட்டத்திலிருக்கும் பெண்கள் நஸ்ரீன் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்வுகள், ஆன்மிகம், பணி வாழ்க்கை, நிதி நிலைமை, உடல் சார்ந்த எதிர்பார்ப்புகள் போன்ற விஷயங்களைத் திருமணத்துக்குமுன் பேசிவிடுவது நல்லது. கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டு, பேச வேண்டிய விஷயங்களை நேரடியாகப் பேசித் தெளிவு பெற்றபின் திருமணத்தை உறுதிசெய்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.

பெற்றோர் முடிவுசெய்துவிட்டார்கள், அவர்கள் நமக்கு நல்லதுதான் செய்வார்கள் என்ற வழக்கமான வரையறைக்குள் சிக்கிக்கொள்ளாமல் உங்கள் பார்வையிலிருந்து வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள். வாழ்க்கை குறித்த தெளிவுடன், ஒத்துப்போகும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, அது மகிழ்ச்சியானதாகவும் வெற்றிகரமானதாகவும் இருக்கிறது என்ற உண்மையை நஸ்ரீன் தன் அனுபவத்தின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

மனமே நலமா?- இழப்புத் துயரத்திலிருந்து மீள வழியில்லையா?

டாக்டர். எம்.எஸ்.தம்பிராஜா



நான் இறந்த பிறகு

எனக்காகக் கொஞ்சம் அழு, கண்ணீர் விடு

நம் இனிமையான தருணங்களை

அவ்வப்போது நினைத்துக்கொள்

ஆனால், கொஞ்ச நேரம் நினைத்தால் போதும்.

பின் அந்த நினைவுகளைத் தாண்டிச் செல்

நீ உயிரோடு இருக்கும்வரை

உன் எண்ணங்கள் உயிருள்ளவர்களுடனேயே இருக்கட்டும்” - யாரோ

மனித வாழ்வில் இழப்புகள், குறிப்பாகக் குடும்பத்தினர் ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்புகள், தவிர்க்க முடியாதவை. அன்பார்ந்த ஒருவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. ஒரு தாய் தன் மகனை இழப்பதாலும், ஒரு கணவன் தன் மனைவியைப் பறிகொடுப்பதனாலும் ஏற்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அடங்கப் பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு குடும்பத்தில் ஏற்படும் ஓர் அகால மரணம் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். அந்த மரணத்தின் கருநிழல் அவர்கள் மனதை விட்டு நீங்குவதே இல்லை.

“ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் அவளைத் தேடுவேன். அவள் இல்லை என்று உணரக் கொஞ்ச நேரம் ஆகும். பின் மனதை ஒரு பாரம் அழுத்தும். முக்கியமான ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டபோது ஏற்படும் படபடப்பு இருக்கிறதே, அது போன்ற ஒரு பதற்றம் என் நெஞ்சில் வியாபிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஆரம்பமாகிறது” - மனைவியை இழந்த ஒருவரின் மனக்குமுறல் இது.

நெருங்கிய ஒருவரின் மரணத்துக்குப் பின் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்குகளைப் பட்டியலிடுவது கடினம். ஆனாலும் இழப்புத் துயரத்தை (Grief) அறிவியல்பூர்வமாக ஆராய்ந்தவர்கள், அன்பார்ந்த ஒருவரை இழந்த பின் ஏற்படும் உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் விரிவாக விவரித்துள்ளார்கள்.

உணர்ச்சிக் கோலங்கள்

மரணத்தை அறிந்த பின் முதன்முதலில் ஏற்படுவது மனஅதிர்ச்சி. கூடவே மனம் மரத்துப் போகிறது (Shock and Numbness). மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை உள்ளம் நம்ப மறுக்கிறது. ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பதுபோலத் தோன்றுகிறது. அடுத்ததாக, மெல்ல மெல்ல உண்மை விளங்க ஆரம்பிக்கும்போது, கடும் மனவேதனை ஒருவரை ஆட்கொள்கிறது. நெஞ்சில் வேல் பாய்ந்ததுபோன்று உள்ளம் வலிக்கிறது.

அழுகையை நிறுத்த முடிவதில்லை. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. ஊன் உறக்கம் கொள்ள முடிவதில்லை. இழந்தவரின் நினைவு மனதை விட்டு நீங்குவதே இல்லை. இதிலிருந்து மீளச் சில வாரங்கள், மாதங்கள் ஆகலாம்.

அதோடு, அவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் என்ற உணர்வும் மனதை உறுத்துகிறது. “நான் அவனைப் பள்ளிக்கூடச் சுற்றுலாவுக்கு அனுப்பியிருக்கக் கூடாது” என்று தன்னையே மீண்டும் மீண்டும் கடிந்துகொள்கிறாள், பள்ளிச் சுற்றுலாவின்போது தன் மகனைக் கடலில் பறிகொடுத்த ஒரு தாய். இந்தக் கட்டத்தில் தன்னையே குறைகூறுவதும் (“நான் மட்டும் அன்று அவர் கூடவே இருந்திருந்தால், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்கலாம்”), மற்றவர்களைக் குற்றம்சாட்டுவதும் (“அந்த டாக்டர் சரியாகக் கவனிக்கவில்லை”) சகஜம்.

சில வேளைகளில் இறந்தவர் மீதே கடும் கோபம் கொள்வதும் உண்டு (“இந்த மனுஷன் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தான் போய்ச் சேர்ந்துவிட்டான்”). ஆனால் இம்மாதிரியான எண்ணங்களால் குற்ற உணர்வு பெரிதாகி, அதை வெளியே சொல்வதற்குத் தயங்கவும் செய்யலாம்.

குரலும் இருப்பும்

இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. சில வேளைகளில் இறந்தவர் தன்னுடன் பேசுவதுபோல அவருடைய குரல் கேட்கலாம்; அவர் அருகில் இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். ஆனால், இவை நெடுங்காலம் நீடிப்பதில்லை.

இவ்வாறாக ஒரு மரணத்துக்குப் பின் மனஅதிர்ச்சி, மனவலி, கோபம், குற்ற உணர்வு, மன சஞ்சலம் ஆகிய பல தரப்பட்ட மனவெழுச்சிகளுக்கு மனிதர்கள் ஆளாகிறார்கள். இவை குறிப்பிட்ட எந்த ஒழுங்குமின்றி மனதை வியாபிப்பதுதான் இழப்புத் துயரத்தின் தன்மை.

எப்படிக் குறைப்பது?

பொதுவாக, இழப்புத் துயரம் ஓரிரு ஆண்டுகள்வரை நீடிக்கும். பின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும். இறந்தவர் இல்லாமல் வாழ்க்கையைச் சீரமைக்க வேண்டி இருக்கும். ஆனாலும் இறந்தவரின் நினைவு, நிழல்போல நெடுங்காலம் தொடரும். ஒருவரது மரணத்துக்குப் பின் நடத்தப்படும் இறப்புச் சடங்குகள் சமுதாயத்துக்குச் சமுதாயம் வேறுபட்டாலும், இவை இழப்புத் துயரத்தைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இழப்புத் துயரம் உடலையும் வெகுவாகப் பாதிக்கிறது. மனைவியை இழந்த ஆண்களில் பலர் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மரணமடைகிறார்கள் என்பதை ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதேபோல நோய்த் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாத்துக்கொள்ளும் திறனும் இழப்புத் துயரத்தின்போது குறைகிறது.

சாதாரண இழப்புத் துயரத்தின்போது ஏற்படும் மனவேதனைக்கு மருந்துகள் தேவை இல்லை. காலம்தான் இவர்களுக்கு மருந்து. சிலர் தூக்க மாத்திரையைப் போட்டுக்கொள்வது உண்டு; சிலர் மது அருந்தி மனதை மரத்துப்போகச் செய்வதுண்டு. இவை பயன் தருவதில்லை. சிகிச்சை ஏதும் இல்லாமலேயே ஓரிரு ஆண்டுகளில் சாதாரண இழப்புத் துயரம் தானாகக் குறையும். நெருக்கமானவர்களுடன் தன் மனவேதனையைப் பகிர்ந்து கொள்வது இழப்புத் துயரத்தில் இருந்து மீள்வதற்கு உதவும்.

தீராத இழப்புத் துயரம்

சில மரணங்கள் தீவிரமான இழப்புத் துயரத்தை உண்டாக்கலாம். தற்கொலைகள், அகால மரணங்கள் போன்றவை ஏற்படுத்தும் துயரம் கடுமையாகவும் நெடுங்காலம் நீடிப்பவையாகவும் அமையலாம். இது தீராத இழப்புத் துயரம் (Unresolved grief) என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பல ஆண்டுகள் கழிந்த பின்னும் தான் இழந்தவரைப் பற்றி பேசும்போது மிகுதியாக உணர்ச்சிவசப்படுகிறார் என்றால், அவர் இன்னும் அந்தத் துயரத்தில் இருந்து விடுபடவில்லை என்று கூறலாம்.

இறந்தவரின் சடலத்தைக் காணக் கிடைக்காதபோது ஏற்படும் துயரம் இவ்வகையைச் சேர்ந்தது. இறந்தவர் ஒரு நாள் திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பில், இவர்கள் நாட்களைக் கடத்துகிறார்கள். அவர் திரும்பி வருவது சாத்தியமில்லை என்பது அடிமனதில் தெரிந்தால்கூட, அதை ஏற்றுக்கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள்.

உதாரணமாக, படிப்புக்காக வெளிநாடு சென்று விபத்தில் இறந்துவிட்ட ஒரு மாணவனின் தாய் (அவருக்கு மகனின் உடல் காணக் கிடைக்கவில்லை) பத்து ஆண்டுகளுக்கு மேலாக எவரையும் தன் மகனின் அறைக்குள் போக அனுமதிக்காமல், அந்த அறையைப் பழசு போலவே வைத்திருந்தார்! இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 20,000 பேர் ‘காணாமல் போனார்கள்’. இவர்களின் பெற்றோர், உறவினர் படும் இழப்புத் துயரமும் இவ்வகையைச் சேர்ந்ததுதான்.

தீராத இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். கடுமையான இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.

கட்டுரையாளர், மனநல மருத்துவர் மற்றும் முன்னாள் பேராசிரியர்
தொடர்புக்கு: ibmaht@hotmail.com

பெண் குழந்தை போற்றுவோம்: பெண் குழந்தை பிறந்தால் பரிசு!

என். முருகவேல்

அடுத்தவன் வூட்டுக்குப் போற பொம்பள புள்ளையப் பெத்துட்டு, அதுக்குக் காலம் முழுக்கக் காவலா இருக்க முடியும்? பெத்தோம், கட்டிக் கொடுத்தோம்ன்னு இல்லாம, அதுகளைப் படிக்க வச்சு, நகை நட்டுப் போட்டுக் கட்டிக் கொடுக்க நாங்க எங்கே போறது? அதான் கலைச்சிப்புடறது” என்று சொன்ன தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்த சின்னாயியும், “பொண்ணுங்க வீட்ல இருந்தாலும் பாதுகாப்பு இல்லை. வெளியில் போனாலும் பாதுகாப்பு இல்லை. அதுக்குப் பயந்துகிட்டு எங்க ஊரில் பாதிப் பேரு பொண்ணுன்னு தெரிஞ்சாலே கலைச்சிடறாங்க” என்ற எம்.பட்டியைச் சேர்ந்த வினோதினியும் இன்று தங்கள் கருத்துகளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

விருத்தாசலம் சுற்றுவட்டாரக் கிராமங்கள் கருக்கலைப்பின் கரும்புள்ளி கிராமங்களாக விளங்கின. மங்கலம்பேட்டை, மங்களூர், முகாசா பரூர், எம்.பட்டி, எறுமனூர், தொட்டிக்குப்பம், மு.அகரம், எடச்சித்தூர், மாத்தூர் உள்ளிட்டக் கிராமங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் சராசரிக்கும் குறைவாக இருந்தது. 1000 ஆண்களுக்கு 983 பெண் குழந்தைகள்தான் இருக்கிறார்கள். கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை கிராமங்களில் ’மக்கள் கருத்தொளி இயக்கம்’ மூலம் சில ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்தி வந்தது. பெண் குழந்தைகள் பிறப்பைத் தடுக்கும் முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து, முதல்கட்டமாக 6 ஸ்கேன் மையங்களை மூடியிருக்கிறது. வரதட்சிணை, பெண் மீதான அடக்குமுறைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

பெண் குழந்தை வளர்ப்பின் எதிர்காலம் குறித்த கவலைகளைப் போக்கி, பெண் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் தற்போது ‘பெண் குழந்தைகளைக் காப்போம்! பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்!’ என்ற மத்திய அரசின் திட்டம் தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 7-ம் தேதியை, பெண் குழந்தை தினமாகக் கொண்டாடி வருகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு உபகரணங்கள், மத்திய அரசின் ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டத்தின் கீழ் 700 ரூபாயும், தாயின் பங்களிப்புடன் கூடிய செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்கையும் ஆரம்பித்துக் கொடுக்கின்றனர். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்க்கு மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழையும் ஒரு மரக்கன்றையும் வழங்குகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது கிராமங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 5 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். பெண்களைக் கொண்டாடும் மாவட்டமாகக் கடலூர் மாறும் காலம் தொலைவில் இல்லை.

சட்ட விரோதமாக ரூபாய் நோட்டு மாற்றிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேர் பெங்களூருவில் கைது: சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை

இரா. வினோத்

சட்ட விரோதமாக‌ செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் 2 பேரை பெங்களூருவில் கைது செய்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக‌ விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில் கறுப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்த வருமான வரித்துறை நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதமாக க‌ர்நாடகாவில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ரூ. 200 கோடிக்கும் அதிகமான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண ஏழை எளிய மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கும் நிலையில், வருமான வரித்துறை பண முதலைகளிடம் இருந்து கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் சிக்கியவர்களிடம் சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கறுப்புப் பணத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக‌ மாற்றிக் கொடுத்ததில் அரசு அதிகாரிகள், தனியார் வங்கி அதிகாரிகள், இடைத் தரகர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாகவே பெங்களூருவில் கடந்த வாரம் வங்கி அதிகாரிகள் 5 பேர், இடைத் தரகர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ரிசர்வ் வங்கி அதிகாரி மைக்கேல் சட்ட விரோதமாக ரூ. 6 லட்சம் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் சட்ட விரோதமாக பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த பெங்களூரு ரிசர்வ் வங்கி கிளையின் மூத்த சிறப்பு உதவியாளர் சதானந்த நாயக்கா மற்றும் சிறப்பு உதவியாளர் கவின் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு ரூ. 1.99 கோடி மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய்களை மாற்றிக்கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து சட்ட விரோத செயல்பாடு, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 2 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. கைதாகியுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இருவரும் நேற்று பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இருவரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கைதான ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Is Group Admin Liable For Defamatory Texts Made By A Member? Delhi HC Says No 
The Delhi High Court, while dismissing a civil suit for defamation against an administrator of a social media group, observed that he cannot be made liable for defamatory statements made by any other member of the group. Justice Rajiv Sahai Endlaw said: 

“I am unable to understand as to how the administrator of a group can be held liable for defamation even if any, by the statements made by a member of the group.” The court said that making an administrator of an online platform liable for defamation would be akin to making the manufacturer of the newsprint on which defamatory statements are published liable for defamation. “When an online platform is created, the creator, thereof, cannot expect any of the members thereof to indulge in defamation and defamatory statements made by any member of the group cannot make the administrator liable therefore. 

It is not as if without the administrator’s approval of each of the statements, the statements cannot be posted by any of the members of the group on the said platform,” the court observed. The administrator of Telegram and a Google group, where some defamatory statements were allegedly made by some members, was made defendant to the suit. The court observed that the plaint does not disclose any cause of action against the admin and it deserves to be rejected.

Read more at: http://www.livelaw.in/group-admin-liable-defamatory-texts-made-member-delhi-hc-says-no/
527 Days In Hospital To Evade Arrest: SC Holds Doctors Guilty Of Contempt

Hospitals and doctors who give shelter to criminals to escape from arrests will now have to think twice as they can also be held guilty of contempt of court.

 The Supreme Court, in Sita Ram vs. Balbir, has held two medical professionals guilty of contempt for granting medical asylum to an accused, without there being any reason or medical condition justifying his prolonged admission as an indoor patient. However, the court has not yet imposed any punishment on them and has granted them one more opportunity to present their view on the issue. It was revealed in the inquiry that the accused remained admitted in the hospital for 527 days and no laboratory test was conducted during the period of admission. 

“It is inconceivable that in normal circumstances, a man, who has no ailment or a medical condition requiring emergency treatment, would be kept as indoor patient without any laboratory test and without recovering a single paisa for more than 247 days,” the bench headed by the Chief Justice of India observed. The court also considered the question whether a person, who is not bound by a direction issued by the court, could be held guilty for committing contempt of court for his conduct in either directly aiding and abetting violation on part of the person who is bound by such direction. Referring to three English decisions, Seaward v. Paterson, Attorney General v. Times Newspapers Ltd. and another, and Z Ltd. v, the court held that the doctors were guilty for having helped the accused in his attempts to violate the court order and, thereby, obstructing the administration of justice. 

“We have found that the continued admission for such a long period as indoor patient was not justifiable for any reason or medical condition of the respondent. Both these medical professionals are responsible for such prolonged admission, which was actuated by only one reason -which was to extend medical asylum to the respondent as a cover to defeat the orders passed by this court and the trial court,” the court said while directing the doctors to be present in the court on 2nd January.

Read more at: http://www.livelaw.in/527-days-hospital-evade-arrest-sc-holds-doctors-guilty-contempt/

Saturday, December 17, 2016


தரமற்ற உணவகங்கள்

By எஸ். ரவீந்திரன் | Published on : 17th December 2016 01:23 AM | அ+அ அ- |

வாரம் ஒருமுறை குடும்பத்தோடு நல்ல உணவகத்துக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதில் கமகமக்கும் வாசனை, மூக்கைத் துளைக்க வைக்கும் அசைவ உணவகத்தைத் தேடி செல்பவர்கள் பலர். செல்லிடப்பேசி அல்லது குறுஞ்செய்தியை அனுப்பினால் போதும். அடுத்த நிமிடம் உங்கள் வீட்டுக்கே வந்து சுவையான உணவை தர உணவகங்கள் தயார்.
இவர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில் சுழல்வதை காசாக்கிப் பார்க்கிறார்கள். எனவே நம்பிக்கையுடன் அங்கு சென்று விதவிதமாக ருசித்துப் பார்த்து கேட்ட தொகையையும் கொடுத்துவிட்டு வருபவர்களுக்கு அண்மையில் இடிபோல வந்திறங்கியிருக்கிறது ஒரு செய்தி. அது, தரமான அசைவ உணவகங்களில் இறைச்சிகளில் கலப்படம் என்பதுதான்.
மனிதர்களுக்கு முதலில் நம்பிக்கை தேவை. ஆனால் நம்பிக்கை மோசடி செய்து ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சியில் கலப்படம் செய்து இப்படி ஒரு பிழைப்பை நடத்துபவர்களை என்ன செய்வது?
பொதுவாக அசைவம் சாப்பிட விரும்புபவர்கள் உணவகங்களுக்குச் செல்வதை முடிந்தவரையில் தவிர்க்கலாம். ஒரு சில நல்ல உணவகங்கள் இத்தகு இழிசெயலில் இறங்குவதில்லை.
நம்மில் பலருக்கும் விசித்திர குணம் ஒன்று உண்டு. மலிவு என்று கேள்விப்பட்டால் போதும். எப்பேர்ப்பட்ட வேலையையும் விட்டுவிட்டு அங்கு சென்றுவிடுவார்கள்.
மலிவு என்றாலே அது போலி அல்லது திருட்டுத்தனம் செய்வதாகத்தான் அர்த்தம். தரமான பொருள்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும். அதற்காக மலிவானவற்றை வாங்குவதால் ஆரோக்கியம், செலவு என அனைத்திலுமே கேடுதான் விளையும்.
அதேபோல அசைவ உணவகங்களில் குறைந்த விலையில் உணவை தரும்போது இந்த விலைக்கு இறைச்சி வாங்க முடியுமா என நாம் யோசிக்க வேண்டும். நாய்க்கறி, பூனைக்கறி போன்றவற்றை மனது வந்து எப்படி கலக்கிறார்களோ தெரியவில்லை.
இன்றைய நிலையில் கலப்படமற்ற இறைச்சி என்றால் கோழியைக் கூறலாம். அதுவும் உயிரோடு வாங்கும் வரைதான். இன்னும் ஒரு பொருளில் கலப்படம் செய்ய முடியாது. அது மீன் வகை எனலாம். இந்த காலத்தில் அதிலும் பழைய மீன்களை கலந்து விடுகின்றனர்.
இது தவிர பறவையினங்களில் கலப்படம், மாடு,ஆடு இறைச்சிகளில் நோய் தாக்கிய கால்நடைகள், இறக்கும் தருவாயில் உள்ளவை, இளங்கன்றுகள் என பலதரப்பட்ட இறைச்சிகளைக் கலக்கின்றனர்.
பெரும்பாலான உணவகங்களில் முந்தைய நாளில் மிஞ்சியிருக்கும் இறைச்சிகளை வினிகர் போன்ற ரசாயனங்களைக் கலந்து மறுநாளில் பயன்படுத்துகின்றனர். இவற்றை அத்தனை எளிதில் யாராலும் கண்டறிய முடியாது.
சுவையூட்டிகளில் சுகாதாரத்துறையினரால் அனுமதிக்கப்பட்டவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை. உதாரணமாக வெள்ளி நிறத்தில் கேக், பிஸ்கெட் போன்றவற்றில் கலக்கப்படுபவை மாட்டு கொழுப்பால் தயாரிக்கப்படுபவையாகும்.
இதேபோல அடர்த்தியான குழம்பு வகைகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால் அது பார்த்தாலே ருசியைத் தூண்டும். இவ்விதமாக பல பொருள்கள் உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக சுகாதாரத்துறையினர் பயனுள்ள வழிகாட்டுதல்களை சம்பந்தபட்ட உணவகங்களுக்கு வழங்கியிருந்தாலும் அவை கிணற்றில் போடப்பட்ட கல்லாகவே இருக்கின்றன.
இது போன்ற புகார்களுக்காகவே மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி குறைந்தது ரூபாய் ஒரு லட்சமும் அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தனை சட்டங்கள் இருந்தபோதிலும் அதை அலட்சியப்படுத்துவதுதான் நடந்து வருகிறது.
இதைத் தடுக்க உணவகங்களுக்கு வாங்கப்படும் இறைச்சிக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்து தர வேண்டும். இது நடக்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் பாதுகாப்பு, சுகாதாரமான இறைச்சிகளை வழங்குவதற்கு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது இல்லாதவரை கலப்படத்தை ஒழிக்க முடியாது.
மேலும் மசாலா, சுவையூட்டிகள் கலப்பதால் அது எந்த இறைச்சி என கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருக்கும். எனவே முடிந்தவரை அசைவ உணவுகளை உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நம் ஆரோக்கியத்துக்கு ஏற்றது.
சரி அசைவத்துக்கு மட்டும்தான் இந்த கலப்படம் என்றால் இல்லை. ஏனெனில் சைவத்திலும் கைவரிசை காட்டுவோர் உள்ளனர். தரமில்லா மசாலா பொருள்கள். அசுத்தமான குடிநீர், இலைகளுக்குப் பதில் சுற்றுப்புறக்கேடு தரும் பிளாஸ்டிக் தாள்கள், பருப்புகளில் கலப்படம் செய்து சமைக்கப்படும் கூட்டு, சாம்பார்,குழம்பு வகைகள் என சொல்லி மாளாது.
குறிப்பாக மசாலாப் பொருள்களில்தான் அதிகமாக கலப்படம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்வோருக்கு அதிகபட்ச சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் விரைவிலேயே வெளியில் வந்து மீண்டும் தங்கள் தொழிலைத் தொடர்கின்றனர்.
பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டுள்ள சைவ, அசைவ மசாலாக்களை பயன்படுத்தக் கூடாது. இப்படி தொடர்ச்சியாக இப்பொருள்கள் உடலில் சேர்வதால் புற்றுநோய், தோல்நோய், அஜீரணக்கோளாறு, வயிறு உபாதைகள் என ஏற்படுவதுடன் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குகின்றன.
எனவே கூடிய வரையில் வீடுகளில் கையினால் தயாரிக்கப்படும் மசாலா வகைகளை பயன்படுத்துவதே சிறந்தது. பழங்காலத்தில் தயாரித்த உணவுப் பக்குவத்தை இப்போது யாருமே பின்பற்றுவதில்லை. அவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு எந்தவித நோய்களும் வராமல் தடுக்கலாம்.
மிகவும் இக்கட்டான நிலை ஏற்பட்டால் தவிர மற்ற சமயங்களில் உணவகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதுதான் ஒரே வழி. ஆகவே கலப்படம் செய்து உணவகம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து இனி அத் தொழிலை அவர்கள் மீண்டும் நடத்த முடியாதவாறு செய்ய வேண்டும். அதுவரை கலப்படத்தைத் தவிர்க்கவே முடியாது.

மக்கள் நலன் இல்லை

By என். முருகன்  |   Published on : 17th December 2016 01:24 AM  |   அ+அ அ-   |  
murugan


இன்றைய தலையாய பிரச்னையாக நம் நாட்டில் விவாதிக்கப்படுவதும், சராசரி குடிமகனை பாதிப்பதுமான பிரச்னையாக பணத் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நள்ளிரவில், 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. நாட்டின் மொத்த ரூபாய் நோட்டுகளில் இந்த இரண்டு வகையானவையும் சேர்ந்து 86 சதவீதம் உள்ளன.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சாமாக பிரதமர் கூறியது கவனிக்கத்தக்கது.
அரசின் இந்த அதிரடி முடிவிற்கு இரண்டு காரணங்களை கூறினார் பிரதமர். ஒன்று, நாட்டின் எல்லைக்கு வெளியே கள்ள நோட்டுகளை தயாரித்து பயங்கரவாதிகள் நம் நாட்டிற்குள் ஊடுருவி இந்த கள்ள நோட்டுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உபயோகிப்பது. இரண்டாவது, கருப்புப் பணத்தையும், ஊழலையும் இந்த இரண்டு வகை ரூபாய் நோட்டுகள் நிலைப்படுத்துவது.
இந்த இரண்டு காரணங்களும் சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் நாட்டின் தலைசிறந்த பொருளாதார நிபுணரான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் கருத்துப்படி, "எல்லா கருப்புப் பணமும் ரொக்கப் பணமாக உள்ளது என்பதும் எல்லா ரொக்கப் பணமும் கருப்புப் பணம் என்பதும் தவறான அனுமானங்கள்.'
இது எப்படி என ஆராய்ந்தால், நம் நாட்டின் 90 சதவீத ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை ரொக்கமாகவே பெறுகிறார்கள். இவர்களில் பல கோடி பேர் விவசாயத் தொழிலாளிகள், கட்டட வேலை செய்பவர்கள், பல வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் தினக்கூலி பெறுபவர்கள். நம் நாட்டில் வங்கிகள் பல கிராமங்களுக்குப் பரவிவிட்டபோதிலும், இன்னமும் சுமார் 60 கோடி இந்தியர்கள் வசிக்கும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வங்கிக் கிளைகளே கிடையாது.
அப்படியே வங்கிக் கிளைகள் உள்ள பல இடங்களில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு வங்கியை உபயோகித்து பணத்தை சேமிக்கவும், அன்றாட தேவைகளுக்கு பணத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கமும் கிடையாது.
தங்கள் தின வாழ்க்கைக்கு ரொக்கப் பணத்தை செலவிடுவதும், தங்கள் சேமிப்பை அதிக மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக வீட்டில் பத்திரமாக பூட்டி வைத்துக்கொள்ளும் பழக்கமும் பெருவாரியான நமது மக்களுக்கு உண்டு. இந்த பழக்க வழக்கங்களை மறந்துவிட்டு இவர்களது வாழ்க்கையை துயரத்திற்கு தூக்கியடிக்கும் தரமற்ற செயல்தான் இந்த செல்லாத நோட்டு அறிவிப்பு என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சமூகவியல் கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் சஞ்சய் ரெட்டி என்பவரின் கருத்தும் இதுதான்.
அவர் கூறுகிறார்: "இந்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டுக்கான திடீர் அறிவிப்பு தவறான ஒன்று. அதன் பின்னணியில் எந்தவிதமான பொருளாதாரக் கோட்பாடும் கிடையாது. ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை சரியான நடவடிக்கைகளை எடுத்து ஒழிக்க முடியாத ஒரு அரசின் அவசரத்தனத்தை இந்த செல்லாத நோட்டுகளுக்கான அறிவிப்பு பறைசாற்றுகிறது.'
பொதுமக்களில் நிறைய பேர் மிகுந்த நல்லெண்ணத்துடன் தங்கள் சேமிப்புப் பணத்தை ரொக்கமாக சேர்த்து வைக்கிறார்கள். இதில் நடுத்தர வர்க்கத்தினரும், சாதாரண தொழிலாளர்களும் அடக்கம். அவர்களது பணம் செல்லாக் காசாகிவிட்ட காரணத்தால் அவர்களது நடவடிக்கைகள் பல ஸ்தம்பித்துப்போய், பின் இது நாட்டின் பொருளாதாரத்தையே பாதித்து விடும் எனக் கூறிகிறார் சஞ்சய் ரெட்டி.
புதுதில்லியின் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை ஆணையத்தின் பேராசிரியர் கோவிந்த ராவ் ஒரு முதிர்ந்த பொருளாதார நிபுணர். அவரது கருத்துப்படி, நம் நாட்டின் மொத்த ரொக்கப் பணத்தில் 86 சதவீதம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளே. இவற்றை செல்லாது என்று அறிவித்தபின் நமது பொருளாதாரம் தலைகுப்புற கவிழ்ந்து போனது.
நாட்டின் 96 சதவீத செலவினங்கள் ரொக்கப் பணத்தில்தான் நடைபெறுகின்றன என்பதால் இந்த "செல்லா நோட்டு அறிவிப்பு' எப்படிப்பட்ட சமூக குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது என்பது புரிந்திருக்கும். இது தெரியாதவர்கள்தான் நம்மை ஆளும் பொறுப்பில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது, பயங்கரவாதிகளுக்கு பணம் வருவதை தடுப்பது, கள்ள நோட்டுகளைத் தடுப்பது ஆகியவை உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால், இவற்றை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள் என்பதும், நம் நாட்டின் வங்கிகள் இவற்றை உடனடியாக சரி செய்யும் திறமை கொண்டவையாக உள்ளனவா என்பதும் சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா எனக் கேட்கிறார் கோவிந்த ராவ்.
கருப்புப் பணம் உருவாக அடிப்படைக் காரணங்கள் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தேர்தல் செலவுகள், நிலம் மற்றும் கட்டுமான வணிகங்கள், வரி ஏய்ப்புகள் மற்றும் அரசு ஊழியர்களின் லஞ்ச நடவடிக்கைகளே.
இதனால் உருவாகும் கருப்புப் பணம் ரொக்கமாக வைத்துக் கொள்ளப்படுவதில்லை. வெளிநாடுகளில் தேக்கி வைப்பதும், நிலங்களாகவும் பல கட்டடங்களாகவும், தங்க - வைர நகைகளாகவும் அவை பதுக்கி வைக்கப்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த பகிரங்க உண்மைகள். ஆக, கருப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளை செல்லாதவையாக அறிவிப்பது சரியல்ல என்கிறார் ராவ்.
இதுபோன்ற கருத்துகளை பல பொருளாதார நிபுணர்கள் எடுத்துக்கூறும் வேளையில், இவற்றிற்கெல்லாம் மேலாக இந்த நடவடிக்கை கருப்புப் பண வளர்ச்சியை நம் நாட்டில் மேலும் அதிகரிக்கும் எனக் கூறுகிறார் மெய்த்ரீஷ் ஃகாதக் எனும் லண்டன் நகரத்து பொருளாதார பேராசிரியர். அவர் இந்திய பொருளாதாரத்தை கூர்ந்து கவனிப்பவர்.
நம் நாட்டின் கருப்புப் பணத்தில் 5 அல்லது 6 சதவீதமே ரொக்கப் பணமாக உள்ளது. நமது பிரதமரின் செல்லா நோட்டு அறிவிப்பால் இந்தப் பணம் முழுவதையும் கைப்பறறிய பின்னரும் பெரிய நன்மைகள் விளையாது. காரணம், இனிவரும் காலங்களில் கருப்புப் பணத்தை பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளையும்விட, புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் அதிக அளவில் சேமித்து வைக்க முடியும் என்கிறார் ஃகாதக்.
அரசியல் விருப்பு வெறுப்பு இல்லாத பல பொருளாதார ஆய்வாளர்கள் அரசின் இந்த நடவடிக்கை தவறு என சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் பல அரசியல் கட்சிகளும் இதை அரசியல் பிரச்னையாக கையிலெடுத்து வாதம் செய்து வருகின்றன.
எனவேதான், இந்த நடவடிக்கை சரியான ஒன்று என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலைமையில் தேசிய வியாபார குறியீடுகள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிட்டன. தொழிற்சாலைகளின் உற்பத்திகளும் குறைந்து, வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார உற்பத்திக்கும் மக்களின் கையில் உள்ள ரொக்கப் பணத்திற்கும் உள்ள விகிதம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்குக் காரணம் நமது சமூகக் கட்டமைப்புதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நமது பொருளாதாரம் மக்களின் கையிலுள்ள ரொக்கப் பணத்தை உபயோகித்துதான் வளர முடியும். மக்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந்தால், நமது பொருளாதாரம் கீழ்நோக்கி வீழ்ச்சி அடையும். இது தற்போது நிரூபணம் ஆகிவருகிறது.
கருப்புப் பணத்தை ஒழிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் அதிக முக்கியம் நல்ல நாணயமான பல குடிமக்களின் தரமான வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு நாம் ஒரு திடீர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என பல தலைவர்கள் எண்ணுகிறார்கள்.
பழைய 500 ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு,புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்குவோம் என அரசு சொன்னபின்னர், டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி கணக்கீட்டின் படி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது ரூபாய் 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி.
ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட முடிந்த புதிய நோட்டுகள் ரூபாய் 5 லட்சத்து 28 ஆயிரம் கோடியே. இது பணப் புழக்கத்தை சரிபாதிக்கு கீழே கொண்டு சென்றதனால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தை பாதித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை.
ஆக மொத்தத்தில், இந்த நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் செய்திருந்தாலும், அது சரியாக நடந்தேற முடியாத சூழலில் அதை திரும்பப் பெறும் பல மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமான "மக்கள் நலன்' காக்க எந்த நடவடிக்கைக்கும் தயார் என்ற நல்ல பெயர் இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கும் என நம்மில் பலர் எண்ணுவது சரியே!

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு).

இதுவரை கைப்பற்றப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு? இளகிய மனம் படைத்தோர் படிக்க வேண்டாம்

By IANS  |   Published on : 17th December 2016 11:04 AM  |  

புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 586 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2,900 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.140 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியதாக வருமான வரித் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே கருப்புப் பணத்தை மாற்றும் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது.

இதைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தபோதிலும், வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில், சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை 586 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது. அதில் ரூ.300 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளும், ரூ.2,600 கோடி கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் வராத பணத்தில் பெரும்பாலானவை புதிய ரூ.2,000 நோட்டுகளாக இருந்தன. ஒரே சோதனையில் அதிகபட்சமாகக் கைப்பற்றப்பட்டது சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் என்று வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மட்டும் ரூ.140 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர தில்லியில் உள்ள வழக்குரைஞர் ஒருவரது வீட்டில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆதாரங்களின்றி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எய்ம்ஸ்: ஆதார் எண் தெரிவிக்கும் நோயாளிகளுக்கு பதிவு கட்டணம் கிடையாது

By புதுதில்லி  |   Published on : 17th December 2016 07:34 AM  | 
"தில்லி எய்ம்ஸ்மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோர், ஆதார் எண் தெரிவித்தால் அவர்களின் பதிவு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை; அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்' என்ற புதிய நடைமுறை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக எய்மஸ் மருத்துவமனையின் கணினிமயமாக்கல் பிரிவு தலைவரும், மருத்துவருமான தீபக் அகர்வால் கூறியதாவது:
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரிடம், தற்போது பதிவுக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுகாதார அடையாள எண் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறையில், ஒரே நோயாளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அடையாள எண்கள் ஒதுக்கப்படும் தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன. அதேவேளையில், நோயாளியின் அடையாள எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைத்தால், இந்த தவறுகள் நிகழ வாய்ப்பில்லை.
எனவே, ஆதார் எண்ணை தெரிவிக்கும் நோயாளிகளுக்கு, பதிவுக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யும் புதிய நடைமுறையை விரைவில் செயல்படுத்தவுள்ளோம்.  அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ரூ.100 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய நடைமுறையை, அடுத்த ஆண்டு ஜனவரியில் செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பான அறிவிக்கையை வெளியிடும்படி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் தீபக் அகர்வால்.
ப்ரீ பெய்டு அட்டைகள்
 மின்னணு பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருவதை கருத்தில் கொண்டு, எய்ம்ஸில் ப்ரீ-பெய்டு அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று தீபக் அகர்வால் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அந்த அட்டையில் பணத்தை முன்கூட்டியே டெபாசிட் செய்துவிட்டு, பின்னர் சிகிச்சை பெறலாம். சிகிச்சை நிறைவுற்ற பின், அட்டையில் பணம் மிச்சமிருந்தால் அது நோயாளியிடம் திரும்ப வழங்கப்படும்.இதேபோல, எய்ம்ஸில் பணம் செலுத்துமிடங்களில் 100 ஸ்வைப்பிங் மெஷின்கள் வைக்கப்பட உள்ளன. மேலும், மருத்துவ கல்விக் கட்டணங்களை, மாணவர்கள் இணையவழியில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்காக எய்ம்ஸ் தலைமை கண்காணிப்பாளர் டி.கே.சர்மா தலைமையில் உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார் தீபக் அகர்வால்.  

மார்கழி என்றதுமே நினைவில் வரும் எட்டு காட்சிகள்



மாதங்களில் அவள் மார்கழி' கண்ணதாசனால் புகழப்பட்ட மாதம் மார்கழி. விவசாய நாடான இந்தியாவில் அறுவடையைத் தொடங்கி வைக்கும் மாதம் மார்கழி. மித வெப்ப நாடான இந்தியாவில் குளிரால் போர்த்திய நாட்களை நமக்குத் தரும் மாதம் மார்கழி.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறதுதான் என்றாலும் மார்கழி என்றவுடன் நம் மனதிற்குள் சில அடையாளங்கள் சட்டென்று வந்து செல்வதே மார்கழிக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அப்படி, மார்கழியின் அடையாளங்களாய் எதெல்லாம் நம் கண்முன் வந்து செல்லும் என மனதை கிராமத்திற்குள் ஒரு ரவுண்ட் செல்ல ரெடியா?



குளிர் தரும் பனி
மார்கழியின் முதல் அடையாளம் பனி. மாலை தொடங்கியதுமே மெல்ல ஆரம்பித்து, முன்னிரவில் ஆடை மேல் இன்னோர் ஆடை அணிய வைக்கச் செய்யும். பின் கம்பளிக்குள் ஒளியச் செய்து, ஆழ்ந்த உறக்கத்துக்குள் அனுப்பும் பனி. அதிகாலையில் புகைப் போல படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கி விடும்.

புனல் செட் பாடல்கள்
'தாயே கருமாரி..." கோவிலில் புனல் ஸ்பீக்கரில், எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் கனவின் எந்த அடுக்கில் இருந்தாலும் உலுக்கி எழுப்பி விடும். எல்.ஆர்.ஈஸ்வரியைத் தொடர்ந்து, சீர்காழி கோவிந்தராஜன், வீரமணி உள்ளிட்டோர் தொண்டையைச் சரிசெய்தப்படி நமக்காக காத்திருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன், மார்கழி மாதத்தில் ரெக்கார்டு போடுவதற்கு என்றே ஒருவரை நியமித்திருப்பார்கள். அவர் அதிகாலை 4 மணிக்கெல்லாம் டேப் ரெக்கார்ட்டரில் பதிவு செய்யப்பட்ட பக்தி பாடல்களை ஒலிக்கச் செய்து எல்லோரையும் எழுப்புவார். பென் ட்ரைவைச் செருவி விட்டால் நாள் கணக்கில் பாடல்கள் இசைப்பது போல அப்போது கிடையாது. ஆறு பாடல்கள் முடிந்ததும் கேசட்டைத் திருப்பி போட வேண்டும் என்பதால் அவரும் தூங்க முடியாது. அதேபோல மாலை நேரத்தில் பாடல்களைப் போடுவார். அப்போது சினிமா பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் இடம்பிடிக்கும்.



சிக்கு கோலமா... பூ கோலமா...
எல்.ஆர். ஈஸ்வரி 4 மணிக்கே எழுப்பி விடுவது, தெருவை அடைத்து கோலம் போடுவதற்குதான். 48 புள்ளிகள், 64 புள்ளிகள் என முதல்நாளே இரவில் திண்ணையில் சாக்பீஸில் ஒத்திகைப் பார்த்தாலும் தெருவில் புள்ளி வைத்ததும், தர்மத்தின் தலைவன் ரஜினி வீடு மாறி செல்வதைப் போல, எல்லாம் சரி எங்கு தப்பு வந்தது எனத் தெரியாமல் அரைமணி குழம்பி, பின் அதையே வேறு கோலமாக மாற்றிப் போடுவது ஒரு திறமை. அதை பக்கத்து வீட்டுக் காரப் பெண்களால் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் அதுவே கலையாகி விடும். கோலம் போடுவதற்கு தம்பிகள், அக்கா இன்னைக்கு சிக்கு கோலமா... பூ கோலமா... என்று கேட்டுக்கொண்டே இருக்கும் தம்பிகளில் கெஞ்சல் ஓர் அழகு என்றால், சொல்றேன்... சொல்றேன் என அக்காக்கள் செய்யும் சஸ்பென்ஸ் இன்னும் பேரழகு. மார்கழியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற சிறப்பு நாட்கள் வரும்போது அதற்கு ஏற்றவாறு கோலங்களில் வித்தியாசம் காட்டி அசத்துவதும் நடக்கும்.

சாணிப் பிள்ளையார் :-
என்ன கோலம் என தம்பிகளை இழுத்தடித்தற்கு பழிவாங்கலாய், பிள்ளையார் செய்ய சாணி எடுத்து வர தம்பிகள் பிகு காட்டுவார்கள். நாளைக்கு உனக்கு பிடித்த கோலம் போடுகிறேன் எனச் சமாதானம் செய்த ஐந்து நிமிடங்களில் சாணி வந்துவிடும். கோலத்தின் நடுவில் சாணிப் பிள்ளையார் வைப்பது வழக்கம் நிறைவேறும்.

கூடுதல் அழகுக்கு பரங்கிப்பூ
கோலம் ரெடி.. நடுவில் பிள்ளையாரும் ஜம்மென்று வீற்றிருக்க... இரண்டையும் அலங்கரிக்க பரங்கிப்பூ அல்லது பூசணி பூ தேவை. மீண்டும் தம்பிகள் தயவு வேண்டும். அல்லது அந்த நேரத்தில் தம்பிகளாக மாறிவிடும் அப்பாவின் உதவியோடு பரங்கி பூ வந்து சேரும். பரங்கி பூ வை வைத்து நிமிர்ந்தால் சூரியன் சோம்பல் முறித்து பகலைத் திறப்பார்.



சுவையான பொங்கல்
கோலம் போட்டு முடிக்கும் நேரத்தில் சரியாக கோவில் மணியோசை கேட்கும், ஓடிச் சென்றால் ஊரில் சிறுவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டே வெட, வெட என நிற்பார்கள். அர்ச்சகர் பொங்கல் வாளியின் மூடியைத் திறந்து, ஒரு கைப்பிடி பொங்கலை மட்டும் இலையில் வைத்திருப்பார். ஆனால் அதன் நறுமணம் நாக்கில் எச்சில் ஊற வைக்கும். பூஜை எப்போது முடியுமென காத்திருந்து சுடச் சுட பொங்கலை கையில் வாங்கியதும் சூடு தாங்காமல் இந்தக் கையில் கொஞ்ச நேரம் அந்தக் கையில் கொஞ்ச நேரம் என மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே வீடு வருவதற்குள் பொங்கலின் சூட்டுக்கு கைப் பழகியிருக்கும்.

பஜனைப் பாடல்கள்
முதல்நாள் இரவே பாடல் புத்தகங்களைப் படித்து பஜனைப் பாடல்களை மனப்பாடம் செய்து, அதிகாலையிலேயே எழுந்து தூங்குமூஞ்சி நண்பன் வீட்டுக்குச் சென்று அவனை எழுப்பி கோவிலுக்குச் செல்வதற்குள் தனக்கு தருவதாக சொல்லியிருந்த ஜிங்க் சாக் கருவி வேறொருவனின் கையில் இருக்கும். அவன் நமக்கு முன்பே வந்து அதைக் கைப்பற்ற்றியிருப்பான். நாளை இன்னும் சீக்கிரமே எழுந்திருக்கனும் எனும் மார்கழி பாடத்தைக் கற்று, குருநாதரின் பாடலுக்கு பின் பாடத் தயாராவோம்.



போகி
பொங்கல் பண்டிகைன்னா... அது தை மாசம் இல்லையான்னு சொல்றீங்களா.. மார்கழியின் கடைசி நாள்தான் போகி. மார்கழியின் குளிருக்கு ஏற்ற பண்டிகைதான் இது. வீட்டில் பயன்படாத பொருட்களை தீ வளர்த்து அதில் போட்டு, சுற்றி உட்கார்ந்து குளிர்காய்வது சுகமான அனுபவம்.


மார்கழியைப் போற்றுவோம்! மார்கழியைக் கொண்டாடுவோம்.

Friday, December 16, 2016

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் விலகாவிட்டால் நீதிமன்றம் செல்வேன்: டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி பிரத்யேக பேட்டி

ஆர்.ஷபிமுன்னா
Return to frontpage
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பின் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். மாநிலங்களவை உறுப்பினருமான அவர் இது குறித்து ‘தி இந்து’வுக்கு விரிவான பேட்டி அளித்தார்.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறுவது பற்றி தங்கள் கருத்து?

மர்மம் இருப்பதால் தான் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இது குறித்து ஒரு நல்ல விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்த பல கேள்விகள் தொடரும். சிகிச்சைக்காக 75 நாட்கள் இருந்தபோது, செவிலியர்களிடம் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இது உண்மை எனில் அவரது குரலை கட்சித் தொண்டர்களுக்காக பதிவு செய்திருக்கலாமே. அமெரிக்க மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் இருந்தபோது செய்ததுபோல், வீடியோ பதிவு கூட வெளியிட்டிருக்கலாம். இதுபோல், அங்கு நடந்த தவறுகளை விசாரித்து, அதற்கான ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அப்பல்லோ, தமிழக போலீஸ் அதிகாரிகள் என பலதரப்பினரின் தொடர்பு உண்டு. இவர்களிடம் கிடைக்கும் ஆதாரத்தில் மர்மம் விலகாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன்.

ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் நிலை என்ன?

இறப்பின் காரணமாக ஜெயலலிதாவின் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்படாது. அதன் தீர்ப்பில் குற்றங்கள் ஏற்கப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டால் அதில், ஜெயலலிதா மறைவு காரணமாக அவருக்கு மட்டும் தண்டனையை செயல்படுத்த முடியாது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகளுக்கு இனி யார் வாரிசு?

ஜெயலலிதாவின் குடும்பத்தார் தான் அவரது சொத்துகளுக்கு வாரிசாக முடியும்.

அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்க அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆதரித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜனநாயக முறைப்படி கட்சி தான் ஒரு பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவினர் அனைவரும் சேர்ந்து அவரை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் அதை எதிர்க்க யாருக்கும் சட்டத்தில் இடம் இல்லை.

கடந்த 1999-ல் இருந்த வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதாவை காங்கிரஸுடன் பேசி, துணை பிரதமராக்க நீங்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததாகக் கூறப்படுவது குறித்து?

இதுபோல் ஒரு முயற்சி நடைபெற வில்லை. தான் பிரதமர் பதவிக்கு குறைவாக எதையும் ஏற்கக் கூடாது என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு அதிகம் உண்டு. எனவே, அவர் துணை பிரதமர் பதவியை எப்போதும் விரும்பியதில்லை. தன்னை வாஜ்பாய் ஏமாற்றியதால் தான் அவரது ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்தார். அப்போது ஜனதா, மதிமுக, பாமக உட்பட ஜெயலலிதா தலைமையில் தமிழகத்தில் அமைந்த கூட்டணியில் 30 எம்.பி.க்கள் இருந்தனர். இது பாஜக ஆட்சி அமைய பெரிய உதவியாகவும் இருந்தது. இதனால், என்னை நிதி அமைச்சராக்க வேண்டும் என வாஜ்பாயிடம் ஜெயலலிதா நிபந்தனை விதித்தார். இதை ஏற்றுக்கொண்டு ஆதரவை பெற்ற வாஜ்பாய் அதை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் சட்டத்துறை அமைச்சராக அமர்த்த கேட்டமைக்கும் வாஜ்பாய் மறுத்தார்.

இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த உங்கள் இருவரின் நட்பில் விரிசல் ஏற்பட காரணம்?

இந்த கேள்விக்கான பதில் எனக்கும் இன்றுவரை தெரியவில்லை. வெளியில் எங்காவது பார்த்தால் நல்ல முறையில் பேசுவார். என்னை கொடநாடு எஸ்டேட்டுக்கு காலை உணவுக்கு அழைத்தார். அப்போது அத்வானிக்காக நான் அவரிடம் பேசினேன். இதற்கு அவர்

‘பாஜகவை விட தன்னிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன. அவருக்காக நான் எதையும் செய்யத் தேவையில்லை’ என மறுத்து விட்டார். தமிழகத்தில் அதிமுகவிடம் இந்து வாக்குகள் அதிகம் உள்ளன என்பது உண்மை தான். கொடநாட்டில் பேசியதுதான் நான் அவருடன் நடத்திய கடைசி சந்திப்பு ஆகும். ஆனால், நிச்சயமாக இதற்கு நான் அவர் மீது தொடுத்த வழக்கு காரணமாக இருக்காது. ஏனெனில். இதை அறிந்த பின் தான் அவர் என்னிடம் கூட்டணியும் வைத்தார்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்த குணம் மற்றும் பிடிக்காதவை?

ஜெயலலிதா பிரமாதமான அறிவு கொண்டவர். அதிக சுயமரியாதை எதிர்பார்ப்பவர். அவருக்கு இருந்த ஞாபக சக்தி அபரீதமானது. 100 பக்கங்கள் கொண்ட கோப்பாக இருந்தாலும் பத்து நிமிடங்களில் படித்து தெளிவாகப் புரிந்து கொள்வார். நாள்தோறும் ஒரு நூல் படிக்கும் பழக்கம் கொண்டவர். பேராசை என்பது அவருக்கு இருந்தது கிடையாது. கல்லூரி, பல்கலைக்கழகம் சென்று படித்திருந்தால் அவர் ஒரு பேராசிரியர் அல்லது வழக்கறிஞராகி இருப்பார்.

இவருக்கு இருந்த அந்த ஆசையை என்னிடம் அடிக்கடி வெளிப்படுத்தி உள்ளார். ஜெயலலிதா தனது தோல்விக்குப் பின் ஒருமுறை என்னை பாபநாசம் சிவன் சாலை வீட்டுக்கு வந்து சந்தித்தார். இருவரும் கூட்டணி சேர்ந்து கருணாநிதியை தோற்கடிக்கலாம் எனக் கூறினார். இதற்கு நான் அவர் மீது தொடுத்துள்ள வழக்குகளை வாபஸ் பெற முடியாது என நிபந்தனை விதித்தேன். இதையும் அவர் பெருந்தன்மையுடன் ஏற்றார். இது, ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் ஆகும். அவருக்கு திடீர் கோபம், அநாவசியமான சந்தேகம் போன்றவை வந்து புத்தி மாறும். அது எனக்கு பிடிக்காது. திராவிட இயக்கத்தினரிடம் இருந்த சினிமாவில் ஜெயலலிதா ஒரு பிராமணப் பெண் என்பதால் அவரை அதிகமான துஷ்பிரயோகம் செய்திருந்தனர். இவர்களிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தால் சினிமா துறையினர் மீது மிகவும் கோபமாக இருந்தார். இந்த நரகத்தில் தன்னை தாய் வேதவல்லி தள்ளிவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறி வருந்தியுள்ளார்.

அதிமுகவால் தனி மெஜாரிட்டியுடன் ஆளப்பட்டு வரும் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தமிழக கட்சிகளுக்கு தேர்தலில் முன்னிறுத்தி வாக்கு கேட்க ஒரு முகம் அவசியம். பாஜகவுக்கு தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம். ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை. நரேந்திர மோடியை மக்களவை தேர்தலில் மட்டுமே ஏற்கும் நிலை உள்ளது. தவிர சட்டப்பேரவை தேர்தலில் இல்லை. இதற்கு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தால் தான் பாஜகவுக்கு விடிவு கிடைக்கும். தமிழக அரசியல் பொறுப்பு எனக்கு தரப்பட்டு முழு சுதந்திரம் அளித்தால் நான் பாஜகவை ஆட்சியில் அமர வைப்பேன்.

எம்எல்ஏக்களைப் பிரித்து பாஜகவும், காங்கிரஸும் அதிமுகவை உடைக்க முயல்வதாக வெளியாகும் செய்திகள் குறித்து?

இது ஒரு தவறான கருத்து. இருகட்சிகளிடமும் அந்த திறமை இல்லை. இந்த திறமை என்னிடம் உள்ளது. ஆனால், நான் அதை செய்ய மாட்டேன்.

இந்த சூழலில் தமிழக ஆளுநராக நீங்கள் அமர்த்தப்படுவதாக கிளம்பிய செய்திகள் உண்மையா?

ஒரு நண்பர் மூலமாக வந்த இந்த கோரிக்கையை நான் ஏற்க மறுத்து விட்டேன். ஒருமுறை, இந்தியா உட்பட சிலநாடுகள் இணைந்து உருவாக்கும் பிரிக்ஸ் வங்கிக்கு தலைவராக வேண்டும் என்றும் என்னிடம் பிரதமர் கேட்டார். இதற்கும் நான் மறுத்து விட்டேன். ஒரு தமிழனாக தமிழகத்தைச் சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமெரிக்கப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவன் நான். மீண்டும் எந்த வெளிநாட்டுக்கும் செல்ல மாட்டேன். இந்தியாவில் இருந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாட்ஸ்அப்ல க்ரூப் மாறி மெஸேஜ் அனுப்பிட்டீங்களா? இதைப் படிங்க!

வாட்ஸ்அப்
இந்த பாஸ் தொல்ல தாங்க முடியலடா! டார்கெட்ட முடிக்கச் சொல்லி உசுற வாங்குறாருனு தெரியாம பாஸுக்கே வாட்ஸ்அப் ஃபார்வர்டு பண்ற ஆளா நீங்க... இல்ல கேர்ள் ஃப்ரெண்டுக்கு அனுப்ப வேண்டிய லவ் யூ மெஸேஜ் வேற யாருக்கோ போய் முழிக்கிறீங்களா? இனிமே நீங்க பயப்படாம இருக்கலாம் எப்படி தெரியுமா?

ஆமாம், வாட்ஸ்அப் ஆனது மெஸேஜ் எடிட்டிங் அண்ட் ரீகாலிங் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெஸேஜை திரும்ப பெறவும், அதனை எடிட் செய்யவும் முடியும் என்கிறது வாட்ஸ்அப்.

WABetainfo என்ற ட்விட்டர் பக்கம், வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் பீட்டா வசதிகளை பற்றி முன் கூட்டியே கூறி வருகிறது. வீடியோ மற்றும் வாய்ஸ் கால் வசதிகளைப் பற்றி முதலில் கூறியது இந்த பக்கம் தான். இந்த பக்கம் பதிவெற்றிய ட்விட்டில் கூறியிருப்பது என்னவெனில்,

"வாட்ஸ்அப் நீங்கள் அனுப்பிய மெஸேஜ்களை எடிட் செய்யும் மற்றும் திரும்பப் பெறும் வசதியை பீட்டா தளத்தில் கொடுத்திருக்கிறது. பீட்டா தளத்துக்கு மட்டும் அளித்துள்ளதால், இந்த வசதியில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம். ஆப்பிள் நிறுவனத்தின் iOS 2.17.1.869 தளத்தில் இந்த வசதி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது."




சோதனை ஓட்டமாக ஒரு சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கும் இந்த சேவை அவர்களிடமிருந்து வரும் ஃபீட் பேக்கை அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படும். வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த ஆப் ஸ்டோர் அல்லது ப்ளே ஸ்டோருக்கு சென்று சைன் அப் செய்ய வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த ஆப்பின் டெஸ்டராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற தகவலும் இடம் பெற்றிருக்கும்.

வாட்ஸ்அப் அப்டேட்டில் அனுப்பிய செய்திகளை திரும்பப் பெற இயலும் என்றாலும் ஒரு சில நிமிடங்களுக்குள் தான் எடிட் அல்லது திரும்பப் பெற முடியும். அதற்குள் செய்யவில்லை என்றால் அது அனுப்பிய நபருக்கு சென்று விடுமாம். இந்தியா வாட்ஸ்அப் பயன்பாட்டில் முன்னணி இடம் வகிப்பதால் இந்தியாவில் முதலில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் வீடியோ காலிங் வசதி இந்தியாவில் தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி தகவல் ஆப்ஸ்களில் இந்தியாவில் வாட்ஸ்அப் தான் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 16 கோடி மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தினமும் வாட்ஸ்அப் மூலம் பத்து கோடி கால்கள் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் வாங்கியதிலிருந்து அதன் புதிய விஷயங்கள் மக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளன.

ம. சக்கர ராஜன்,
மாணவர் பத்திரிகையாளர்

அசைவம் நல்லதா... கெட்டதா? நலம் நல்லது-29 #DailyHealthDose

vikatan.com
அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று, அசைவம் சாப்பிட்டால் உடல் வளர்ச்சிபெறும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது, அசைவம் சாப்பிடுபவர்களுக்கு காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை, இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி.

அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 90 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்களும் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த `மைக்ரோசாஃப்ட்’, `ஆப்பிள்’ நிறுவனங்களை உருவாக்கியவர்களும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண்சத்துக்களும் காய், கனிகளில் குறைவு. உதாரணமாக, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில், இரும்புச்சத்து 300 மைக்ரோகிராம்தான் இருக்கிறது. எனவே, அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்கவேண்டியது இல்லை. ஆனால், நம் உடலுக்கு அசைவம் மட்டும் போதுமா, அதை எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்துவைத்திருப்பது நல்லது.



அசைவ உணவுகளை எப்படி, எவ்வளவு சாப்பிடலாம்?

* போருக்குச் செல்லும் வீரன்போல, காரில் போகும் சுகவாசி சாப்பிடுவது சரிப்படாது. கட்டுமரத்தில் நிமிர்ந்து நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக இருப்பவர் கேண்டில் லைட் டின்னரில் `ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்வது சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் நாம் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிட வேண்டும்.

* ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக்கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்துச் சாப்பிடுவது இன்னும் சிறப்பானது.

* மற்ற நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள்.

* வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள்.

* கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றையச் சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டிறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் அவர்கள்.

* `மாமிசம் சாப்பிடும்போது, கண்டிப்பாக இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவை இருக்க வேண்டும்’ என்கிறது தமிழ் மருத்துவம். எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கறையிலும், இந்தக் கறி மசாலா இல்லாமல், கிடாக்கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், இன்றைக்கு மூலைக்கு மூலை விரிந்திருக்கும் பன்னாட்டு கறிக்கடைகளில், அவித்தும் பொரித்தும் தரப்படும் கறி வகைகளில் கறி மசாலாவைப் பார்க்கவே முடியாது. அதேபோல், நம்முடைய சமையல் அறைகளை ஆக்கிரமித்துள்ள மசாலாப் பொடி பாக்கெட்களும் எந்த அளவுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. எனவே, வீட்டில் தயாரிக்கப்பட்ட கறி மசாலாவில், அந்த மணத்தோடு செய்த கறி வகைகளைச் சாப்பிடுவதே நல்லது.



* ரெஸ்டாரன்ட்டுகளில், ஹோட்டல்களில் கிடைக்கும் கறிவகைகளைத் தவிர்ப்பது சிறந்தது. காரணம், அவற்றில் நூற்றுக்கணக்கான ரசாயனப் பொருட்கள் கலந்திருக்கின்றன; ரசாயன உப்புகளும் கலக்கப்படுகின்றன. குறிப்பாக, புற்றுநோயை வரவேற்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் குளூட்டமேட் ஆகியவை உண்டு.



* கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரைதேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்த்த கோழியாக இருக்கக் கூடாது. ஆரோக்கியமான முறையில் வளர்ந்த கோழியாக இருப்பின், `உடல் சூட்டைத் தந்து, சாதாரண சளி, இருமல், மந்தம் ஆகியவற்றைப் போக்கும். உடல் தாதுவை வலுப்படுத்தி, ஆண்மையைப் பெருக்கக்கூடியது’ என்கிறது சித்த மருத்துவம். இதில், வைட்டமின் பி 12 சத்து அதிகம். அதனால் உடல் எடை அதிகரிக்காது. நம் ஊரில் `கருங்கோழி’ எனப்படும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. தசை சூம்பி, வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயாளிகளுக்கும், பிற தசை நோயாளிகளுக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாகச் சொல்லி வருகிறது தமிழ் மருத்துவம். பிராய்லர் கோழி இறைச்சி நல்லதல்ல. பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே பூப்படையும் பிரச்னை வரவும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



* மீன்கள் வெறும் உணவு அல்ல; ஊட்ட உணவு. அதிலும், கொழுப்பு அதிகம் இல்லாத புரதம் மிகுந்த உணவு. ஆனால், அந்தப் புரதத்தையும் இதயத்துக்கு நல்லது சேர்க்கும் சத்துக்களையும் முழுமையாகப் பெற வேண்டுமானால், மீனை பொரிக்கவோ, வறுக்கவோ கூடாது. வேக வைத்த மீனே சிறந்தது. `இ.பி.ஏ.’, (Eicosapentaenoic Acid), `டி.ஹெச்.ஏ.’ (Dacosahexaenoc Acid) எனும் இரண்டு `ஒமேகா 3’ அமிலங்கள் மீன்களில் உண்டு. இந்த இரண்டையும் நம் உடம்பு உற்பத்தி செய்யாது. சில வகை எண்ணெய் வித்துக்களைத் தவிர்த்து, தாவரங்களிலும் இது பெரிதாகக் கிடையாது. மூளைத் திறனைத் தூண்ட, புற்றுநோயைத் தடுக்க, மாரடைப்பைத் தடுக்க உதவும். இந்த இரண்டு `ஒமேகா 3’ அமிலங்களும் கடல் மீன்களிடம் கிடைக்கும்.

* ஆடோ, மீனோ, கோழியோ... அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் இயல்புடையவை. இறைச்சிக்காக ஒரு விலங்கைக் கொல்லும்போது அதன் தோலும் குடலும் முழுமையாக நீக்கப்பட்டவுடன், விரைவாக அடுப்படிக்குப் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதில் ஏற்படும் தாமதம், இறைச்சியில் நுண்ணுயிரிகளைப் பெருக்கம் செய்யக் காரணமாகிவிடும். ஆனால், இன்றைக்கு பன்னாட்டு கோழி, ஆட்டுக்கறி உணவகங்களில் இந்தக் கறித்துண்டுகள் கடந்துவரும் பாதை ரொம்ப தூரம் என்பதை மனதில்கொள்ளவும்.

எனவே, இறைச்சியை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த பிறகு சமைத்துச் சாப்பிடுங்கள்... அதையும் அளவாகச் சாப்பிடுங்கள்!

ஆச்சர்யம்... டிராஃபிக்கில் சிக்கினார் தமிழக முதல்வர்!

டிராஃபிக்
பொதுவாகவே தமிழகத்தில் முதல்வர்கள் மீது மக்களுக்கு அதிக வெறுப்பு வளர முக்கிய காரணமாக இருப்பது டிராஃபிக் ஜாமை ஏற்படுத்துவதுதான். ஜெயலலிதா முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது மக்களிடையே வெறுப்பை சம்பாதித்தற்கு இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருந்து ஜெயலலிதா புறப்படும் போதே அனைத்து பகுதிகளிலும் டிராஃபிக்கை மூடுவது போலீசாரின் வழக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் பள்ளிக்குச் செல்வோர் அலுவலகம் போவோர் என பலரும் சிக்கி சின்னாபின்னமாகி இருப்பார்கள்.

ஜெயலலிதா மட்டுமல்ல தமிழக முதல்வர்களாக பொறுப்புக்கு வரும் யாரும் மக்களோடு மக்களாக பயணிக்கத் தயாராக இருந்தது இல்லை. தங்கள் பயணத்துக்காக உடனடியாக டிராஃபிக்கை மூடி வைப்பதுதான் வழக்கம். கருணாநிதி முதல்வராக இருந்தாலும் அதுதான் நடக்கும் ஏன் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது கூட கோவை போன்ற பெரு நகரங்களில் கமாண்டோக்கள் புடை சூழ 50 கார்கள் பின்னால் அணி வகுக்க வலம் வந்தவர்தான். அதனால்தான் தவறை உணர்ந்திருக்கிறோம் என்று கடைசி சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் கதறிய போது கூட மக்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை.

அடிக்கடி கேரளத்தை நாம் உதாரணத்துக்கு சொல்வோம். தலைவர்களை மக்களாக பாருங்கள் என்பதுதான் கேரள மக்களின் பாலிசி. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் ரயில் நிலையத்தில் கையில் குடை வைத்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருப்பது போல புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பதவியில் இருந்து விலகிய பிறகு திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு ஒரு விழாவுக்கு பங்கேற்க சென்றார். திரும்புகையில் ரயிலை தவற விட அரசுப் பேருந்தில் கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு பயணித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தக் கூட, கேரள தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே விமானத்தில் பயணித்து ஒரே காரில் விமான நிலையத்தில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.

பொதுவாகவே தமிழகத்தைப் பொறுத்தவரை தனிநபர் வழிபாடும், துதிபாடும் குணமும் அதிகமாக இருப்பதால், தலைவர்களை தெய்வமாகத் தொண்டர்கள் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். தலைவர்களை நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை மறந்து விடுகின்றனர். அதனால்தான் தலைவருக்காக இறத்தல் கூட பெருகிக் கொண்டே போகிறது. ஒரு தலைவர் சென்றால் இன்னொரு தலைவர் வருவார் என்ற மனநிலை இல்லாத தன்மையும் ஒரு காரணம். இதனால்தான் இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக இருந்தாலும் நம்மால் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை சினிமா சார்ந்த முதல்வர்களே கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டதால் மக்கள் மனநிலை அப்படி மாறிப் போயிருக்கலாம்.

இப்போது தமிழகத்தில் பன்னீர்செல்வம் என்ற டீக்கடை மனிதர் முதல்வராகியிருக்கிறார். எளிமையான மனிதர். அதிர்ந்து பேசாதவர். தனது தலைமைக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தவர். அதிமுகவில் அவர் முதுகெலும்புடன் இருக்கிறார். இல்லாமலும் போகிறார். அதிமுக தலைமையை கைப்பற்றுகிறார். கைப்பற்றாமல் போகிறார். இதுவெல்லாம் நமக்கும் தேவையில்லை. அதிமுகவின் உள்கட்சி விவகாரம் அது. ஆனால், இப்போது முதல்வர் என்ற வகையில் நல்லாட்சியைத் தர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

பன்னீர் செல்வம் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை சார்மியர் சாலையில் நேற்று முதல்வர் பன்னீர்செல்வத்தின் கான்வாய் மக்களுடன் மக்களாகவே சென்றுள்ளது. ஏற்கெனவே புயலால் டிராஃபிக் விளக்குகள் சேதமடைந்து விட, முதல்வரின் காரும் டிராஃபிக்கில் சிக்கியுள்ளது. சார்மியர்ஸ் சாலையில் சுமார் 15 நிமிடங்கள் முதல்வரின் கான்வாய் நின்றுள்ளது. பின்னர் போலீசார் முதல்வர் கான்வாய் செல்ல வழி ஏற்படுத்தித் தந்துள்ளனர். தொடர்ந்து முதல்வரின் கான்வாய் பயணத்தை தொடங்கியுள்ளது.

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

வங்கிக் கணக்கை இயக்க பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடு


புது தில்லி: வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்களுக்கும், நவம்பர் 8ம் தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கும் புதிய கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதாவது, வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கும் மேல் வைத்திருப்பவர்கள் பான் எண்ணை இணைக்கும் வரை அல்லது படிவம் 60ஐ அளிக்கும் வரை தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதே போல, 2016 நவம்பர் 8ம் தேதிக்கு மேல் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்திருக்கும்பட்சத்தில் அவர்களும் பான் எண் இணைக்காமல் இருந்தால் கணக்கை இயக்க முடியாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், சாதாரண ஏழை, எளிய மக்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சிக்கு உதவி இருந்தால், அவர்கள் தங்களது வங்கிக் கணக்கை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

இதே போல், ஏழை மக்களுக்கான ஜன் தன் வங்கிக் கணக்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்டதால், ஒரு மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாமல் கட்டுப்பாடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

HSE Examination 2017 Time Table














பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு ரிசர்வ் வங்கி 'செக்' 


நவம்பர் 9-ம் தேதிக்கு பின் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தோர் பணத்தை எவ்வாறு எடுக்கலாம் என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். டெபாசிட் பணத்தை ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பான்கார்டு இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணம் மதிப்பு இழப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த மனுவிற்குப் பதில் அளிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி இன்று பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், நவம்பர் 9-ம் தேதிக்கு பின் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தோர் பான்கார்டு எண் தராமல் பணம் எடுக்க முடியாது என்றும், பான்கார்டு அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்றும், வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் வைத்திருக்க வேண்டும் என்றால் பான்கார்டு அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பழைய 500, 1000 நோட்டுகளை பயன்படுத்த அவகாசம் அளிப்பது குறித்த வழக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு அளிக்க உள்ளது.

ரிசர்வ் வங்கி டூ சேகர் ரெட்டி! - சி.பி.ஐ வலையில் தமிழக அமைச்சர்கள்


அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டைத் தொடர்ந்து, அவருக்கு பணத்தை மாற்றிக் கொடுத்த வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர். 'வருமான வரித்துறையில் பிடிபட்ட சேகர் ரெட்டிக்குச் சொந்தமான பணம் மற்றும் தங்கம் உள்ளிட்டவை சி.பி.ஐயின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டன. எப்போது வேண்டுமானாலும் அதிரடி நடவடிக்கைகள் பாயலாம்' என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.

வேலூர், காட்பாடியைச் சேர்ந்த பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, அவருடைய உறவினர் சீனிவாச ரெட்டி மற்றும் கீழ்பாக்கம் கார்டனைச் சேர்ந்த பிரேம் குமார் ஆகியோரது வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து 170 கோடி ரூபாய் பணமும் 130 கிலோ தங்கமும் பிடிபட்டன. மூன்று நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரெட்டியின் காரில் இருந்து 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கார்டன் வட்டாரத்திற்கு நெருக்கமான ரெட்டியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது, அ.தி.மு.க அமைச்சர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் நெருங்கிய நண்பரான பிரேம் குமார் வீட்டிலும் ரெய்டு நடந்ததையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். குறிப்பாக, 'சேகர் ரெட்டியின் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுத்ததில் பிரேம் குமாரின் பங்கு மிக முக்கியமானது' என்கின்றனர் அதிகாரிகள். " புதிய இரண்டாயிரம் ரூபாய்களை மாற்ற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

ஆனால், ரெட்டியின் வீட்டில் இருந்து 34 கோடி ரூபாய்க்குப் புதிய நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. அட்டைப் பெட்டிகளில் சீல் பிரிக்கப்படாமல் இருந்த புதிய ரூபாய் கட்டுக்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர். அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் வழக்கமாக ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் அந்தப் பணம் வங்கிகளுக்குப் பிரித்து வழங்கப்படும். வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய பணம், நேரடியாக சேகர் ரெட்டியின் வீட்டிற்குச் சென்று சேர்ந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். அச்சகத்தில் அடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் சீரியல் எண்களையும் ரெட்டியின் வீட்டில் பிடிபட்ட ரூபாய் நோட்டுக்களின் சீரியல்களையும் சரிபார்த்து வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகளை சி.பி.ஐ வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் மைய அலுவலகங்களில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது" என்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்.

" ஓர் இடத்தை குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை நடத்தினால், அங்கு கைப்பற்றப்படும் பணத்தை பி.டி எனப்படும் வருமான வரித்துறை கணக்குக்குள் கொண்டு வருவது வழக்கம். ஆனால், சேகர் ரெட்டி உள்பட மூன்று பேர் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில் பிடிபட்ட பணம் மற்றும் தங்கத்தை பி.டி கணக்கிற்குள் கொண்டு வரவில்லை. மொத்தப் பணத்தையும் தங்கத்தையும் சி.பி.ஐ கொண்டு போய்விட்டது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ என மூன்று துறையின் அதிகாரிகளும் சேகர் ரெட்டியின் தொடர்புகளை ஆராய்ந்து வருகின்றனர். பாரிமுனையில் உள்ள மார்வாடிகள் துணையோடு கறுப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக் கொடுத்து வந்தார் பிரேம் குமார். மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பிற்குப் பிறகு, தங்கமாக மாறிய பரிவர்த்தனைகளை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தினர். அதன் விளைவாகவே பிரேம் குமாரும் அவரைத் தொடர்ந்து சேகர் ரெட்டியும் வசமாக சிக்கினர். ரெட்டி கைதால் கார்டன் வட்டாரம் அதிர்ந்தாலும் சி.பி.ஐ வளையத்தில் பிரேம் சிக்கியிருப்பது ஆளும் கட்சியின் அமைச்சர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், தங்கமாக மாறிய ரூபாய்கள் என பல தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் தகவல்களும் அடுத்தகட்ட ரெய்டுக்கு நாள் குறித்துத் தந்திருக்கிறது" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரி ஒருவர்.

தமிழக அரசின் சீனியர் அமைச்சர்கள் தொடர்போடு கடந்த ஐந்தாண்டுகளில் ரெட்டி குவித்த கோடிகள்; அதற்கான பின்னணி; ஆதாயம் அடைந்த அமைச்சர்கள் என சி.பி.ஐ செல்லும் பாதையை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் ஆளும்கட்சி புள்ளிகள். கொங்கு மண்டலத்தை குறிவைத்து அடுத்த ரெய்டு நடக்கலாம் என்ற பேச்சுக்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

NEET UG 2017: Check the last year cut off


For the under graduate NEET 2016 exam for medical courses, the cut off score is based on many factors such as number of seats, number of candidate’s applied for the exam, marking scheme and difficulty level of the test. After the Central Board of Secondary Education CBSE has declared the NEET 2016 result for candidates as qualified or non-qualified. The top 15% scorers is among the qualified candidates will be eligible to participate in NEET counselling process under 15% All India Quota seats. The merit list under 15% All India Quota seats will be prepared by the CBSE on the basis of score obtained in NEET 2017. The merit list will be equal to the number of seats available for allotment of MBBS/BDS courses under 15% All India Quota seats. There will also be a waiting list equal to 4 times of merit list.

In 2016, the category marks range for NEET UG was as follows: For UR- 691-098. The qualifying percentile was 50 and there were 157214 candidates. For OBC category the 629-081, while the 40th percentile will be qualifying criteria and there will be 149078 candidates. For the SC category, the marks range will be 610-081, there will be 40th percentile. There will be 42, 234 candidates. For ST categories the marks range will be 586-081. The qualifying criteria will be 40th Percentile. There will be 16518. For UR and PH, the marks range will be 589-089, the qualifying criteria will be 45 percentile. The marks range for OBC and PH will be 491-081, the qualifying criteria will be 40th percentile. There will be 606 candidates. For the Sc and PH, the marks range for the candidates will be 303-081 for the 40th percentile. There will be 173 candidates. For ST and PH category, the marks range will be 297-081 while to qualify the aspirants need to secure 40 th percentile. There will be 62 candidates. ALSO READ: NEET Super Speciality Exam Notification Released: Exam to be held on June 10, 2017

In 2016 there were 3,69,649 male eligible candidates. About 3,37,572 appeared for the exam while 32,077. About 11,058 candidates qualified for the exam. Overall 1,83,424 qualified over all NEET. There were 4,32,930 female eligible. About 3,93,642 appeared for the exam. 39,288 students were absent. About 8,266 candidates qualified for the candidates. About 2,26,049 aspirants qualified for the candidates. ALSO READ: NEET UG 2017: Colleges that are not covered under NEET

In 2016 there were 3,69,649 male eligible candidates. About 3,37,572 appeared for the exam while 32,077. About 11,058 candidates qualified for the exam. Overall 1,83,424 qualified over all NEET. There were 4,32,930 female eligible. About 3,93,642 appeared for the exam. 39,288 students were absent. About 8,266 candidates qualified for the candidates. About 2,26,049 aspirants qualified for the candidates.

Published Date: December 16, 2016 10:13 AM IST | Updated Date: December 16, 2016 10:27 AM IST

PG NEET puts doctors on the spot


A series of events in the city has put doctors appearing for postgraduate entrance exam in much difficulty.

The National Eligibility cum Entrance Test for PG courses was to be held between December 5 and 13. The exams were rescheduled in the State twice. Following the death of former Chief Minister Jayalalithaa, the exams scheduled for December 5 and 6 were moved to December 12 and 13.

Candidates had enquired about the exams after news of the cyclone hitting the city but were told the exam would be held as scheduled. The exam is offered in six centres in Chennai besides in Tiruchi and Coimbatore. Candidates have to make their choices at least a month ahead of the exam.

“We called the toll-free number given on the website but were told that the exam would be held,” said A. Saravanan, who arrived from Cuddalore with his wife, also a candidate, in Chennai on Monday for the afternoon session of the exam. If the centres are unable to function, candidates are shifted to other centres but are not allowed to choose their centres.

“On Monday, when I reached the exam centre in Ambattur, very few doctors had turned up for the morning session,” Saravanan recalled. “We were told that the exam was postponed. But some doctors protested saying they had travelled long distances for the exam. So around 1 p.m., the morning session exam was held and our session, cancelled,” he added.

Poor network connectivity prevented the stranded candidates from contacting the National Board of Examination officials immediately. On Tuesday, Saravanan was intimated that he had to take the exam on December 16 in Hyderabad. His wife was given a centre in Coimbatore.

“On the toll-free number, the official at the other end told us this was our last chance. I am on a bus to Hyderabad as there are no trains. I had to cancel my duty for tomorrow,” said Saravanan, who works at Mangalampettai Community Health Centre in Cuddalore district. His wife is an assistant surgeon in Virudhachalam Government Hospital.

House surgeons appearing for the exams would have to compensate for the leave taken during training period. “When we take leave, our training period is extended. Only after completing the required number of days, will we be provided the completion certificate,” a doctor explained.

“We want to have a uniform exam, something like an all-India entrance exam. The new system of NEET is causing much hardship. Government doctors have to be given more days of leave from work, which affects the functioning of the hospital too,” said P. Saminathan, secretary of Service Doctors and Post Graduates Association.

Doctors’ Association for Social Equality has demanded that the cancelled exams should be held in Chennai itself. He has sought the intervention of the State government in this regard.

NEET UG 2017: Colleges that are not covered under NEET

NEET UG 2017 is conducted for admission to MBBS/BDS Courses in Medical/Dental Colleges.


NEET UG 2017 is the examination which is conducted for admission to MBBS/BDS Courses in Medical/Dental Colleges. In order to apply for NEET UG 2017, the basic requirement that the candidates should fulfill is that the candidates need to be a Indian national or Overseas Citizen of India (OCI). It is important to note that the overseas Citizens of India (OCI) are eligible for admission in seats under the control of participating states/Universities/Medical Institutions. It is important to note that the candidates should have completed 17 years at the time of admission or will complete the age on or before December 31 (year of admission) for the Colleges that are not covered under NEET.

There are some institutes which conduct their own entrance exam. The institutes which conduct their own entrance exam include Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research JIPMER and All India Institute of Medical Sciences (AIIMS). Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) offers MBBS. There are about 200 seats. and the admission at JIPMER is done on the basis of JIPMER MBBS entrance exam. The exam will be conducted on June 4, 2017.The functions of the JIPMER institute aims to impart quality education in Under-graduate and Post-graduate medical and paramedical courses, to set trends in medical research and to offer patient care of high order. ALSO READ: NEET Super Speciality Exam Notification Released: Exam to be held on June 10, 2017

For the NEET UG Exam Section the aspirants need to go through the various sections which include Physics, Chemistry and Biology. Aspirants are required to note that there are 21 topics in Physics section, Chemistry section will have 24 sections while for biology section there are 12 topics. All India Institute of Medical Sciences (AIIMS) New Delhi will conduct the AIIMS MBBS 2017 on May 28 for admission to 700 MBBS seats in 7 AIIMS like institutions. The AIIMS MBBS 2017 will be a Computer Based Test (CBT) for 3 hours & 30 minutes. The online exam will be conducted in two slots – morning and evening. Candidates have to appear for the online test as per slot allotted to them. The result of AIIMS MBBS 2017 will be basis for selection of 700 candidates in 7 AIIMS. All the seats are equally distributed in each of 7 AIIMS situated at New Delhi, Bhopal, Patna, Jodhpur, Rishikesh, Raipur and Bhubaneswar. ALSO READ: NEET UG 2017: Notification awaited for medical entrance exam NEET at aipmt.nic.in

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...