Saturday, December 17, 2016

இதுவரை கைப்பற்றப்பட்ட கருப்புப் பணம் எவ்வளவு? இளகிய மனம் படைத்தோர் படிக்க வேண்டாம்

By IANS  |   Published on : 17th December 2016 11:04 AM  |  

புது தில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் 586 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.2,900 கோடி கருப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.140 கோடிக்கும் அதிகமான புதிய ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றியதாக வருமான வரித் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே கருப்புப் பணத்தை மாற்றும் நடவடிக்கைகள் ரகசியமாக நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்தது.

இதைத் தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தபோதிலும், வங்கி அதிகாரிகளின் துணையுடன் இந்த முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில், சந்தேகத்துக்குரிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுவரை 586 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது. அதில் ரூ.300 கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளும், ரூ.2,600 கோடி கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கணக்கில் வராத பணத்தில் பெரும்பாலானவை புதிய ரூ.2,000 நோட்டுகளாக இருந்தன. ஒரே சோதனையில் அதிகபட்சமாகக் கைப்பற்றப்பட்டது சென்னையில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் இருந்துதான் என்று வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அங்கு மட்டும் ரூ.140 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தவிர தில்லியில் உள்ள வழக்குரைஞர் ஒருவரது வீட்டில் ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், மகாராஷ்டிரத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. உரிய ஆதாரங்களின்றி வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...