Wednesday, October 25, 2017

நாதெள்ளா நகைக் கடைக்கு என்ன ஆனது? நகைச் சீட்டுக் கட்டிய வாடிக்கையாளர்கள் கவலை


By DIN  |   Published on : 24th October 2017 11:24 AM  
gold2


சென்னை: தமிழகத்தில் உள்ள நாதெள்ளா நகைக் கடையின் 7 கிளைகளும் மூடப்பட்டதால், நகைச் சீட்டுக் கட்டிய வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தாங்கள் கட்டிய பணத்தைத் திருப்பிக் கேட்டு நாதெள்ளா நகைக் கடை வாயில்களில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், தங்களது நிதிநிலை துரதிருஷ்டவசமாக மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தர அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும் நாதெள்ளா நகைக் கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நகைக் கடை வாயில்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுமார் 77 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட இந்த நகைக் கடை, எதிர்பாராதவிதமாக நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டதாகவும், வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 5 மற்றும் வேலூர், ஓசூரில் உள்ள தலா 1 கடைகளை விரைவில் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாதெள்ளா நகைக் கடையின் இயக்குநர் பிரசன்ன குமார் கூறியிருப்பதாவது, "நாங்கள் மிக மோசமான நேரத்தை சந்தித்துள்ளோம். எங்களது முழு முதற் கவனம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தருவது மட்டுமே. எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நகைச் சீட்டில் பணம் கட்டியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது பணத்தைத் திருப்பித் தர, எங்களது சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளோம். உங்களை மின்னஞ்சல் வாயிலாக நாங்கள் விரைவில் அழைப்போம். இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்து நிலுவைத் தொகைகளும் திரும்ப செலுத்தப்படும் என்று நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள நாதெள்ளா நகைக் கடை மீது பொதுமக்கள் சிலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தாங்கள் கட்டிய நகைச் சீட்டு முதிர்வடைந்த பிறகும், நகையோ பணமோ அளிக்கப்படவில்லை என்று புகாரில் கூறியுள்ளனர்.

நவம்பர் 1-ம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை, நெல்லை, குஜராத்துக்கு புதிய ரயில்கள்

By DIN  |   Published on : 24th October 2017 10:12 PM  
rail

நவ.1ம் தேதி முதல் சென்னையின் புதிய முனையமாக செயல்பட தொடங்கியுள்ள தாம்பரத்திலிருந்து செங்கோட்டை, நெல்லை, குஜராத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 
மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு புதிதாக ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்றும்  பகத்-கி-கோத்தி(ராஜஸ்தான்)க்கு ஹம்சபர்  வாராந்திர எக்ஸ்பிரஸ்,  திருநெல்வேலிக்கும், செங்கோட்டைக்கும் தனித்தனியே தினசரி  அந்தியோதயா  எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இதேபோல் திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாமுக்கு வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், காரைக்குடி,  சேலம், மன்னார்குடி,  நெல்லை, முத்துநகர் உட்பட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளன.

இப்படி வேகம் அதிகரிப்பதால் ரயில்கள் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரமும் நவ.1ம் தேதி முதல் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அம்மா உணவகத்தில் பல்லி சாம்பார்: பெண் வாந்தி

அம்மா உணவகத்தில் பல்லி சாம்பார்: பெண் வாந்தி
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சல், 28. நேற்று, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரை பார்க்க வந்த இவர், அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கி சாப்பிட்டார். பாதி சாப்பிட்ட போது, சாம்பாரில் பல்லி கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். உடனே, வாந்தி எடுத்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி, அவர் யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
தகவலறிந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவை மாதிரி எடுத்து, பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு கூடத்துக்கு, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர் கலெக்டருக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தாசில்தார் அலுவலக வாடகை பாக்கி தொகை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாதவரத்தில், பரிதா சவுகத் என்பவருக்கு சொந்தமான இடத்தில், தாலுகா அலுவலகம் இயங்கிவருகிறது. பல மாதங்களாக வாடகை தராததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: வாடகை பாக்கி தொகையை, ௩௦ நாட்களுக்குள் அரசு செலுத்த வேண்டும். அதை, முழுமை யாக வழங்கும் வரை, குத்தகை தொகையை, அவ் வப்போது மாற்றி அமைப்பது குறித்த ஷரத்து, ஒப்பந்தத்தில் இடம் பெறும் வரை, வருவாய் துறை செயலர், திருவள்ளூர் கலெக்டர், மாதவரம் தாசில்தார் ஆகியோர் சம்பளம் பெறக்கூடாது.

விசாரணை : அவர்களுக்கு, அரசு சம்பளம் வழங்கக் கூடாது. வாடகை பாக்கியை செலுத்தி, குத்தகைக்கான ஒப்பந்தம் மேற்கொண்ட பின், இந்த அதிகாரிகளுக்கான சம்பளம் முழுவதையும், அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி விட்டதாகவும், சம்பளத்தை வழங்க உத்தரவிடும்படியும், உயர் நீதிமன்றத்தில் வருவாய் துறை செயலர், திருவள்ளூர் கலெக்டர் மற்றும் மாதவரம் தாசில்தார், மனு தாக்கல் செய்தனர்.மனு, நீதிபதி, வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

நடவடிக்கை : அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், வெங்கட்ரமணி, சிறப்பு பிளீடர் திவாகர்,''ஆறு மாதங்களுக்குள், தாலுகா அலுவலக கட்டு மான பணிகள் முடிந்து விடும். வாடகை பாக்கி செலுத்தப்பட்டு விட்டது; நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது,'' என்றனர்.
நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டதால், அரசு அதிகாரிகளுக்கான சம்பளத்தை வழங்க, தலைமை செயலர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.
கட் - அவுட்: ஐகோர்ட் அதிரடி

சென்னை:'பேனர்கள் மற்றும், 'பிளக்ஸ்' போர்டுகளில், உயிரோடு இருப்பவர்களின் படங்கள் இடம்பெறக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்த உத்தரவு குறித்த சுற்றறிக்கையை, மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு, தலைமை செயலர் அனுப்ப வேண்டும் என்றும், தெரிவித்துள்ளது.சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, திருலோச்சனா குமாரி தாக்கல் செய்த மனு:

அரும்பாக்கம், ராணி அண்ணா நகர், நாவலர் தெருவில் வசித்து வருகிறேன். என் வீட்டின் முன், ஓர் அரசியல் கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது; மதி என்பவர், அதை நிறுவினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்தபோது, என்னை மிரட்டினார். இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் எட்டாவது மண்டல உதவி ஆணையருக்கு, மனு அனுப்பினேன். 'வீட்டின் உள்ளே நுழைய முடியாமல், ஆக்கிரமிக்கும் வகையில் தடுத்துள்ளனர்' என, அதில் கூறியிருந்தேன்.

வழக்கு பதிவு

அரும்பாக்கம், போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் புகார் கொடுத்தேன்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின், கொடி, போர்டை அகற்றிவிட்டு, மீண்டும் அதே இடத்தில்,

மற்றொரு போர்டை வைத்தனர். மதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டும், புகாரை பெற,இன்ஸ்பெக்டர் மறுத்துவிட்டார். 'எனக்கு எதிராக, வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும்' எனக்கூறி, அசிங்கமாக திட்டினார்.

வீட்டின் முன் கட்டப்பட்ட கட்சி கொடியை அகற்ற வும்,கட்சியின் பேனர், போர்டை அகற்றவும், மாநகராட்சிக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில், சிறப்பு பிளீடர் திவாகர் ஆஜரானார். 

மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ''மனுதாரரின் வீட்டின் முன் வைக்கப்பட்ட பேனர் மற்றும் கொடிகள் அகற்றப் பட்டு விட்டன; நகரில், உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி, சுவர்களில் வரைவது மற்றும் பேனர்கள், கொடிகள் வைக்கும் சம்பவங்கள் நடக்காது,'' என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரின்ஸ் பிரேம்குமார், ''முதலில், பேனர் மற்றும் கொடிகளை அகற்றினர். பின், மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டன,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:தனிப்பட்ட முறையில், மதி என்பவருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியும், 'அப்படி ஒரு நபர் இல்லை' என, திரும்பி வந்தது.பேனர்கள் மற்றும் கொடிகள் அகற்றப்படவில்லை என்றால், அவற்றை உடனடியாக அகற்றி விடுவதாகவும், எதிர்காலத்தில், இப்படி நடக்காது எனவும், மாநகராட்சி மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது; இதை, நான் பதிவு செய்கிறேன்.
பேனர் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றும்போது, யாராவது ஆட்சேபித்தால், அவர்களின் பெயர் மற்றும் முகவரியை, போலீசுக்கு வழங்க வேண்டும். அப்போது தான், அவர்களுக்கு எதிராக, போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியும்.தமிழகத்தின்

அனைத்துபகுதிகளிலும் சுத்தமான சூழ்நிலையை பேணவும், குடியிருப்புகள், கட்டடங்களின் சுவர்களில் தேவையின்றி ஓவியங்கள்,வாசகங்கள் எழுதுவதை தவிர்க்க வும், தமிழக அரசுக்கு, இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. சுத்தமான சூழ்நிலை நிலவு வதை, தலைமை செயலர் உறுதி செய்ய வேண்டும்.

சுற்றறிக்கை

எனவே, திறந்தவெளிகள் அசுத்தப்படுத்துவது தடுக்கும் சட்டம் அமல்படுத்துவதை, அதிகாரி கள் உறுதி செய்ய வேண்டும். பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், விளம்பர போர்டுகள் வைப்பதற்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தா லும், அவற்றில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். 'ஸ்பான்சர்' செய்பவர்களின் புகைப்படமும், இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.
இதுகுறித்து, பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் உள்ள, அனைத்து நிர்வாகிகளுக் கும், தலைமை செயலர், சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
'ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

புதுடில்லி: மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய தொலைத் தொடர்பு துறையின் உத்தரவு செல்லாது என, அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'மொபைல் போன் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' என, மத்திய தொலைத் தொடர்பு துறை, மார்ச், 23ல் உத்தரவு பிறப்பித்திருந்தது. 'இந்த உத்தரவு சட்டவிரோதமானது; செல்லாது' என அறிவிக்கக் கோரி, தெசீன் பூனாவாலா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, லோக் நீதி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மொபைல்போன் இணைப்பு பெற்றுள்ளோரின் அடையாளத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மொபைல் போன் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மொபைல் போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ரூ.5 லட்சத்திற்கு விலை போகுது கிட்னி : எஸ்.பி., முயற்சியால் தப்பிய டெய்லர்
ஈரோடு: கடன் பிரச்னையால், புரோக்கர் மூலம் கிட்னியை விற்று பணம் தருவதற்காக, வெளிமாநிலம் சென்ற டெய்லர், ஈரோடு, எஸ்.பி., நடவடிக்கையால் தப்பினார். ஈரோடு, காசிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 44; ஆயத்த ஆடை நிறுவன டெய்லர். மனைவி சம்பூர்ணம், 37; இவர், ஈரோடு கலெக்டர் பிரபாகரின் முகாம் அலுவலகத்தில், நேற்று காலை, ஒரு மனு கொடுத்தார்.

பின், அவர் கூறியதாவது: எங்களுக்கு, ௧௧ வயதில் மகன், ௧௩ வயதில் மகள் உள்ளனர். என் கணவரின் வேலை மூலம், போதிய வருவாய் கிடைக்கவி ல்லை. நானும் கூலி வேலைக்கு செல்வேன். குடும்ப செலவுக்காக சிலரிடம், கணவர் கடன் வாங்கினார். 

கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். எங்களால் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாமல், சிரமத்தில் உள்ளோம்.அவிநாசியை சேர்ந்த புரோக்கர் ஒருவர், கணவரை தொடர்பு கொண்டு, 'ஒரு கிட்னியை தானமாக வழங்கினால், ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன்' என கூறி, கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வரும்படி கூறி சென்றார்.

நேற்று முன் தினம், எர்ணாகுளத்துக்கு என் கணவர் சென்று விட்டார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. கணவரை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி.,யை தொடர்பு கொண்ட கலெக்டர் பிரபாகர், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது: கோவையில் இருந்து எர்ணா குளம் செல்ல, ரவி 
புறப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண்ணில் தகவல் தெரிவித்து, உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும் அல்லது ஊர் திரும்ப வேண்டும், என கூறினோம். 

அவரும், ஈரோட்டுக்கு புறப்பட்டு விட்டதாக உறுதியளித்தார். தற்போது, பஸ்சில் ஊர் திரும்புகிறார். அவர் வந்ததும் விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் துப்புரவு ஊழியரும் ஊசிபோடுகிறார் : அட...டா இதுவல்லவோ மருத்துவ வளர்ச்சி!
மதுரை: மதுரை மாவட்டம் கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிக்கு ஊசி 
போட்ட துப்புரவு ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.கருங்காலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். காலை 7:30 மணிக்கு டாக்டர், நர்சுகள் பணிக்கு வரவேண்டும். ஆனால் காலை 9:00 மணிக்கு மேல் தான் பணிக்கு வருவதாக புகார் உள்ளது. இதனால் காலையில் வரும் நோயாளிகளுக்கு அங்கிருக்கும் துப்புரவு ஊழியர் பொன்னுத்தாய்,48, ஊசி போட்டும், மாத்திரை வழங்கியும் சிகிச்சை அளித்துள்ளார். இது குறித்து அப்பகுதியினர் கலெக்டரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவுப்படி, துப்புரவு ஊழியரை பணி நீக்கம் செய்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன்குமார் உத்தர 
விட்டார்.

துணை இயக்குனர் கூறுகையில், ''சிகிச்சை அளித்த துப்புரவு ஊழியரை பணிநீக்கம் செய்துவிட்டோம். பணியில் இருக்க வேண்டிய டாக்டர், நர்ஸ்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இதையும் மறைக்கிறாங்க! : கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அஜாக்கிரதையாக இருந்த டாக்டர், நர்ஸ் ஆகியோரின் பெயரை தெரிவிக்க துணை இயக்குனர் மறுத்துவிட்டார். இதனால், அவர்கள் மீது நடவடிக்கை இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


'குட்கா' ஊழல் அசல் ஆவணங்களை கொடுங்க! :வருமானவரித்துறைக்கு போலீசார் நெருக்கடி

'குட்கா' வழக்கில், போலீஸ் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான, அசல் ஆவணங்களை கேட்டு, வருமான வரித் துறை யினருக்கு, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள குட்கா ஆலைகளில், 2016 ஜூலையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.



ரூ.39 கோடி :

அப்போது, சிக்கிய டைரியில், சுகாதார அமைச்சர், விஜயபாஸ்கர், உயர் போலீஸ் அதிகாரிகள், ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு, 39 கோடி ரூபாய் கொடுத்ததற்கான, ஆதாரங்கள் சிக்கியதாக, வருமான வரித்துறையினர் கூறியிருந்தனர். இதையடுத்து, குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற போலீஸ் உயரதிகாரிகள், அரசு அதிகாரிகள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்பு போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததும், அதில், உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர் இல்லை என்ற விபரமும், சமீபத்தில் தெரிய வந்தது.

இந்நிலையில், அந்த வழக்கின் மூல ஆதாரமான, லஞ்ச பட்டியல் அடங்கிய அசல் ஆவணங்களை கேட்டு, வருமான வரித்துறை யினரை, லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் வற்புறுத்திய தகவல் தெரிய வந்துள்ளது.இது குறித்து, வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: சில தினங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல், டி.எஸ்.பி., உள்ளிட்ட மூன்று அதிகாரிகள், எங்கள் உயரதிகாரிகளை சந்திக்க,சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்தனர்.

வற்புறுத்தல் :

குட்கா வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற் காக, லஞ்சம் பெற்றவர் பட்டியல் அடங்கிய, அசல் ஆவணத்தை தர வேண்டும்' எனக் கேட்டனர். முடியாது என, மறுப்பு தெரிவித்த போதும், நீண்ட நேரமாக, எங்களை வற்புறுத்தினர். நாங்கள், இதே ஆவணத்தின் நகலை, தமிழக தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவ், டி.ஜி.பி., அசோக்குமார் ஆகியோரிடம், கடந்த ஆண்டு கொடுத்துள்ளோம்.

திட்டவட்டம் :

ஆனால், 'அந்த ஆவணம் இல்லை' என, தற்போதைய தலைமை செயலர், கிரிஜா, நீதிமன்றத்தில் கூறினார். போலீஸ் அதிகாரிகளும், அதையே கூறினர்.அதனால், இந்த முறை சுதாரித்து, ஆவணங்களை தர முடியாது என, திட்டவட்டமாக கூறினோம். அவர்கள், 'எங்கள் துறை இயக்குனர், மஞ்சுநாதா நேரில் வந்து பேசுவார்' என, கூறினர். 'இந்த காரணத்திற்காக, இங்கு வருவதாக இருந்தால், அவரை வர வேண்டாம் என, சொல்லி விடுங்கள்' என, நாங்கள் கூறி விட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆவணத்தை அழிக்க முயற்சி? :

'குட்கா' வழக்கில், ஆவணத்தை அழிப்பதற்கான

வாய்ப்பு இருப்பதால்,அவற்றை வழங்க மறுத்தது தெரிய வந்துள்ளது. வருமான வரித்துறையினர் கூறியதாவது: தமிழக அரசிடம், ஏற்கனவே, அசல் ஆவணத்தின் நகல்களை தந்துள்ளோம். அப்படி இருக்கும் போது, அசல் ஆவணத்தை கேட்க வேண்டிய அவசியம் என்ன?

எங்களது தரப்பை வலுப்படுத்துவதற்கான, ஒரே ஆவணம் அது தான். அதையும் கொடுத்து விட்டால், பின், லஞ்ச ஒழிப்பு போலீசார், 'அது, தொலைந்து விட்டது' என, கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்போது, உயரதிகாரிகள் மட்டுமின்றி, வழக்கில் இருந்து அனைவரும் தப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

'நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான தேவை இருந்தால், அது தொடர்பான உத்தரவை பெற்று வாருங்கள். பின், நாங்களே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்; உங்களிடம் தர முடியாது' என, உறுதியாக கூறி விட்டோம்.மேலும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பின்பே, அசல் ஆவணத்தின் தேவை ஏற்படும். அந்த கட்டத்தை எட்டும் போது பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாயமான அதிகாரியை தேடி போலீசார் ஷீரடி பயணம்

கோவை: மாயமான கோவை வருமான வரித்துறை துணை கமிஷனரை தேடி, தனிப்படை போலீசார் ஷீரடி விரைந்துள்ளனர். கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரி, செண்பகராமனின் மகன் சிவக்குமார், 38. இவர், 2008ல், ஐ.ஆர்.எஸ்., தேர்ச்சி பெற்று, கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை கமிஷனராக பணியாற்றி வந்தார்.
மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த, 13ம் தேதி, சிவக்குமார் திடீரென மாயமானார். பீளமேடு போலீஸ் விசாரணையில், 13ம் தேதி அதிகாலை, 1.00 மணிக்கு சிவக்குமார், வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் தெரிந்தது. குடும்ப பிரச்னையால் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை கண்டுபிடிக்க, இரு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம், வரி ஏய்ப்பு குற்றவாளிகளை பிடிப்பதில் பயிற்சி பெற்றவரான சிவக்குமார், தான் இருக்கும் இடத்தை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என எண்ணி, 'கிரெடிட்' கார்டு, மொபைல் போன் உள்ளிட்ட அனைத்தையும் வீட்டிலேயே வைத்துச் சென்றுள்ளார்.
'சாய் பக்தரான அவர் ஷீரடி சென்றிருக்கலாம்' என, சந்தேகிக்கும் போலீசார், அங்கு விரைந்துஉள்ளனர்.

ஜெர்மன் தம்பதியின் நாய் மீட்பு : கொஞ்சி விளையாடிய 'லூக்'


ஜெர்மன் தம்பதியின் நாய் மீட்பு : கொஞ்சி விளையாடிய 'லூக்'
சென்னை: மெரினா கடற்கரையில் காணாமல் போன நாய் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, நேபாளத்திற்கு சென்ற ஜெர்மன் நாட்டு தம்பதி, நேற்று சென்னை வந்தனர். அவர்களிடம், நாய் ஒப்படைக்கப்பட்டது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தோர், ஸ்டீபன் காக்ராப். இவரது மனைவி- ஜெனின். சென்னைக்கு சுற்றுலா வந்த இவர்கள், ஜூலை, 8ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, மெரினா கடற்கரைக்கு வந்தனர். அங்கு, அவர்களது, 'லுாக்' என்ற நாயை, மர்மநபர் துாக்கிச் சென்றார்.
இது குறித்து புகார் அளித்த ஜெர்மன் தம்பதி, நாயை கண்டுபிடித்து தருவோருக்கு, தகுந்த சன்மானம் வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து, லுாக் நாய் குறித்து, வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனாலும், நாய் கிடைக்காததால், ஜெர்மன் தம்பதியினர் வருத்தத்துடன், நேபாளத்திற்கு, சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில், ஜெர்மன் நாட்டு தம்பதிக்கு ஆதரவாக, சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் விஜயா நாராயணன், 'வாட்ஸ் ஆப்', நாளிதழ், சுவரொட்டிகள் மூலம், நாயை தேடி வந்தார். இரு தினத்திற்கு முன், மெரினா கடற்கரையில், சிறுவன் ஒருவனிடம், 'லுாக்' நாய் இருப்பதை பார்த்த ஒருவர், 
விஜயா நாராயணனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அவர், சிறுவனிடம் இருந்து நாயை மீட்டார். மேலும், இது குறித்து அவர், போலீஸ் மற்றும் ஜெர்மன் தம்பதியிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, நேபாளத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த, ஜெர்மன் தம்பதி, நேற்று மதியம், சென்னை வந்தனர். பின், அவர்களிடம் லுாக் நாய் ஒப்படைக்கப்பட்டது. நீண்ட நாள், தங்களது செல்ல நாயை பிரிந்திருந்த ஜெர்மன் தம்பதி, லுாக்கை கண்டதும், கட்டி அணைத்து 
மகிழ்ந்தனர்.

செங்கோட்டை ரயில் நேரம் மாற்றம்

சென்னை: தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில், புறப்படும் நேரம் இன்று முதல், மூன்று நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - பூதலுார் இடையேயான ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், தாம்பரத்தில் இருந்து, செங்கோட்டைக்கு, காலை, 7:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், இன்று முதல், 27ம் தேதி வரை, காலை, 9:00 மணிக்கு இயக்கப்படும். செங்கோட்டையில் இருந்து, தாம்பரத்திற்கு, காலை, 6:00 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், வரும், 26, 27ம் தேதிகளில், காலை, 8:00 மணிக்கு இயக்கப்படும்.

பேரறிவாளன் சிறையில் அடைப்பு

வேலுார்: ராஜிவ் கொலை வழக்கு கைதி பேரறிவாளன், இரண்டு மாத பரோல் முடிந்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளன், வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
அவரது தந்தை ஞானசேகரன், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு, ஆக., 24ல், ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில், பேரறிவாளன் தங்கியிருந்தார். பின், பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. நேற்றுடன் பேரறிவாளன் பரோல் முடிந்தது. திருப்பத்துார், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் ஜோலார்பேட்டை சென்ற போலீசார், பேரறிவாளனை அழைத்து வந்து, மாலை, 5:00 மணிக்கு, வேலுார் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.




புதுடில்லி:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதியை,  டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி இன்று வெளியிடுகிறார்.


கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பு ஏற்படுத்திய வழக்கில் தீர்ப்பு தேதி வெளியாவதால், அரசியல் திருப்பம் நிகழும் என, தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.மத்தியில் காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 முதல், 2009 வரை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.

அப்போது, செல்போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மோசடி நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது. இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது.

இந்த வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. அதைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தொடர்பாக அதிக அளவுஆவணங்களை பரிசீலிக்க வேண்டியுள்ளதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த, 10 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்துக்கு முடிவு ஏற்பட உள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் பல்வேறு பரபரப்பு அரசியல் காட்சிகள் நிகழ்ந்து வரும் நிலையில்,
'2ஜி' வழக்கின் தீர்ப்பால், பல அரசியல் திருப்பம் நிகழும் என்பதால், தி.மு.க.,வினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

குற்றவாளிகள் யார்?:

'2ஜி' ஸ்பெக்ட்ரம்

ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தலையங்கம்

‘கந்து வட்டி தடைச்சட்டம்’ என்ன ஆனது?




அக்டோபர் 25 2017, 03:00 AM

கம்பராமாயணத்தில் போர்முனையில் ராவணன் அவமானத்தால் கூனிக்குறுகி நின்றகாட்சியை கம்பர் வர்ணிக்கும்போது, ‘கடன் பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று எழுதியிருக்கிறார். அந்தவகையில், வேறு வழியில்லாமல் கடன் வாங்குபவர்கள் அதற்கான வட்டி குட்டிபோட்டு, வட்டிக்குமேல் வட்டியாக திரும்ப கட்டமுடியாத நிலையில் அவமானத்தால் கூனி குறுகிப்போகிறார்கள். அதிலும் இப்போதெல்லாம் தாங்கமுடியாத அளவு நாள்வட்டி, கந்துவட்டி, மணிக்கு மணி வட்டி, மீட்டர் வட்டி, ஹெலிகாப்டர் வட்டி, தினவட்டி, ரன் வட்டி என்பதுபோன்ற பல பெயர்களில் வசூலிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமையை தாங்கமுடியாமல், தன் மனைவி சுப்புலட்சுமி, 4 வயது குழந்தை மதிஆருண்யா, 1½ வயது குழந்தை அக்‌ஷயா என்கிற பரணிகா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனுகொடுக்க வரும்போதே, கையில் 5 லிட்டர் மண்எண்ணெய் கேனையும் எடுத்து வந்தார்.

ஏற்கனவே இதுபோல 6 மனுக்களை கொடுத்துவிட்டோம். எந்தவித பலனும் இல்லை என்று நினைத்தாரோ?, என்னவோ? தெரியவில்லை. திடீரென தன் மனைவி மீதும், 2 பெண் குழந்தைகள் மீதும், தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். எல்லோருடைய உடலிலும் தீ பற்றி இருந்த நிலையில், அந்தப்பிஞ்சு குழந்தைகள் அம்மா... அம்மா... என்று கத்தியபடி, இங்கும் அங்கும் ஓடியகாட்சி இப்போதும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கிறது. போலீஸ் பாதுகாப்பு இருந்தும், எல்லாவற்றையும் மீறி அவர்கள் உடலில் தீ வைத்துக்கொண்டதால் அலறி துடித்தனர். இந்தச்சம்பவத்தில், இசக்கிமுத்துவை தவிர, அவர் மனைவி மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிர் இழந்தனர். இசக்கிமுத்துவும் மரணவாக்குமூலம் கொடுத்துவிட்டார். இந்த சம்பவம் சில கேள்விகளையும் எழுப்பி, எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளது.

இந்தசம்பவத்தில், கந்துவட்டி கொடுமையை தடுக்கவேண்டிய போலீசாரே அதை தடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். மாவட்ட கலெக்டரிடம், இசக்கிமுத்து மனுகொடுக்க, அவர் அதை போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்ப, சூப்பிரண்டு டி.எஸ்.பி.க்கு அனுப்ப, டி.எஸ்.பி. சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கே அந்தப்புகாரை அனுப்பி, எந்த போலீசார் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்களோ, அவரிடமே விசாரணைக்கு போயிருக்கிறது. 6 முறை இவ்வாறு மனு அனுப்பியும் கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியிடமே அந்த மனு சென்றதால் எந்தப்பயனும் இல்லை. 2003–ம் ஆண்டு கந்துவட்டி கொடுமையால் பட அதிபர் ஜீ.வி. தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நேரத்தில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இதுபோன்ற கந்துவட்டி கொடுமையை தடுக்க ஒரு சட்டத்தை பிறப்பித்தார். அந்த சட்டம் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீதும், கந்துவட்டி கொடுமையால் யாராவது தற்கொலை செய்துகொண்டால், அதற்கு பொறுப்பாக கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் மீதும் மிகக்கடுமையான தண்டனை, குறிப்பாக 10 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். கையில் ஜெயலலிதா ஆயுதத்தைக்கொடுத்தார். ஆனால், இதுவரை இந்தசட்டத்தின் கீழ் நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த சட்டத்தை அரசும், காவல்துறையும் தீவிரமாக அமல்படுத்தவேண்டும். ஆனால், சாதாரண ஏழை–எளிய மக்கள் ஆத்திர அவசரத்துக்கு, கைமாற்று செலவுக்கு அந்த நிமிடத்திலேயே பணம் வேண்டுமென்றால் கந்துவட்டிக்காரர்களைத் தவிர, வேறு எங்கும் பணம் கிடைக்காது. எனவே, அதற்கு ஒரு எளிய, நடைமுறை சிக்கல் இல்லாத வழியை வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்திக் கொடுத்தாலொழிய, கந்துவட்டி கொடுமையை அகற்றமுடியாது. எனவே, ஏழை–எளிய மக்களின் அவசர தேவைக்கு பணம் கிடைக்கும் வழிகளையும் அரசுகளும், வங்கிகள், கூட்டுறவு சங்கங்களும் ஆராய வேண்டும்.











மாநில செய்திகள்

டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் ரெயில்களில் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்


ரெயில்களில் டிக்கெட் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசார் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரி டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்டோபர் 24, 2017, 11:15 PM

சென்னை,சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரிக்கும், சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி போன்ற பல பகுதிகளுக்கும் புறநகர் மின்சார ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்கிவருகிறது.

இந்த புறநகர் மின்சார ரெயில்களிலும், இதேபோல் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் சில போலீசார் சீருடை அணிந்தோ, அல்லது சீருடை அணியாமலோ டிக்கெட் எடுக்காமல் பயணித்து வருவதாக ரெயில்வே துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனர் மற்றும் ரெயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆகியோருக்கு தெற்கு ரெயில்வேயின் மூத்த கோட்ட வணிக மேலாளர் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:–சென்னையில் இருந்து இயக்கப்படும் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரெயில்களில் போலீசார் பணியில் இருக்கும்போதும், பணியில் இல்லாதபோதும் உரிய டிக்கெட் இல்லாமல் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் பயணம் செய்வதாகவும், பயணிகள் அமரும் இடத்தில் அவர்கள் உட்கார்ந்து கொள்வதாகவும் பயணிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன.

ரெயில்களில் சென்னை கோட்ட டிக்கெட் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் அவர்களிடம் பயணம் செய்வதற்கான ஆவணங்களை கேட்கும்போது போலீசார் தங்கள் அடையாள அட்டையை மட்டும் காட்டிவிட்டு பயணத்தை தொடர்கிறார்கள். ரெயில்களில் பயணம் செய்யும்போது போலீசார் டிக்கெட் அல்லது உரிய பயண ஆவணங்களை வைத்து இருக்கும்படி அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

போலீசார் இவ்வாறு பயணம் செய்யும்போது உரிய ஆவணம் அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரெயில்வே விதிகளின்படி அபராதம் வசூலிக்கும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tuesday, October 24, 2017

Manual re-evaluation of PG medical answer sheets ordered

Justice A. Ramalingeswar Rao of the Hyderabad High Court on Monday ordered manual re-evaluation of answer sheets of about 50 PG medical students of NTR University of Health Sciences who appeared for the examination held in May 2017.
Till this exercise was completed, supplementary examination should not be conducted.
The court was dealing with cases filed by Dr. C. Sai Suveer Reddy and others.
The petitioners challenged the digital evaluation of answer sheets. They complained that they were not permitted to verify their answer sheets personally by the varsity.
The court was told that when manual evaluation was done, they got the chance to verify the answer sheets.
The court was also told that when the varsity introduced digital evaluation for the earlier batch, the High Court had found some discrepancies in the mechanism and had directed the varsity to re-evaluate answer sheets of those who had moved the court then.

MBBS student found dead in college hostel

His father alleges ragging by seniors

Raghu G.S., a 19-year-old who was pursuing MBBS at the Shivamogga Institute of Medical Sciences (SIMS), committed suicide by hanging in his hostel room on Sunday evening.
He was a native of Begur village in Shikaripur taluk. On finding Raghu’s body, his hostel mates rushed him to a hospital, where he was declared brought dead.
According to sources, Raghu had gone to his native place on October 18 to celebrate Deepavali. He returned to the hostel on Sunday afternoon.
In a complaint lodged with the Doddapet police, Raghu’s father Gurumurthy has said that his son was ragged by seniors at the college hostel. He has claimed that though his son had complained to the warden, no action was taken.
Raghu has not left behind a death note. The police have booked a case of unnatural deathand recorded statements of the warden and Raghu’s classmates and hostel mates. On Monday, all classes were suspended at SIMS.
B.V. Sushil Kumar, director of SIMS, said the anti-ragging cell of the college would also look into the incident. On Monday, residents of Begur staged a protest in the village demanding a thorough proper into the suicide.

Soon, SIM cards, new food court at airport

A view of the new terminal building at Tiruchi International Airport.Photo: M. Moorthy  

Water cooler unit installed opposite the new terminal

Passengers can now look forward to additional amenities at the Tiruchi International Airport.
Inaugurating a water cooler unit installed opposite the new international terminal building on Monday, Airport Director K. Gunasekaran told reporters that plans were afoot to sell international SIM cards, besides opening another food court and a fruit juice stall.
Provision of a water cooler was a long-pending demand of travellers, he said adding that the facility had been provided at a cost of Rs. 1.2 lakh.
To a query on the introduction of new flight services, Mr. Gunasekaran said he had no information. However, Airports Authority of India was discussing with operators introduction of more flights from Tiruchi.
The recently launched overseas flight service to Bangkok from Tiruchi by Thai AirAsia had received good patronage with full passenger load in both directions, he pointed out.
On the status of the runway expansion project, Mr. Gunasekaran said the State government had issued final notification a few days ago pertaining to land acquisition. Time had been given up to November 30 for the public to express their willingness, problems and compensation aspect.
Only after the completion of the exercise, land would be handed over to Airports Authority of India, he said and expressed the hope that the process would be completed in about three months.

Tough competition expected for VC post of Bharathidasan varsity

As new law permits college teachers to apply for it

Now that there is a clear provision in the newly framed law that permits college teachers in the rank of associate professors to apply for the post of vice chancellors, a tough and much wider competition is expected for the post of the Vice Chancellor of the Bharathidasan University this time around.
Search committee
The Search Committee consisting of retired senior IAS official Santha Sheela Nair as the government nominee and Convenor; and R. Venkatarathnam, Senior Professor and Head of Sociology (Retired), Madurai Kamaraj University; and S. Sivasubramanian, former Vice-Chancellor of Bharathiar University, Coimbatore, as members, released an advertisement last week calling for applications from distinguished academicians with high levels of competence, integrity, moral and institutional commitment and possessing the prescribed educational qualifications and work experience till November 20.
According to academic circles, there is likely to be large number of applications this time. So far, the norms favoured only university professors.
Transparency
“A vital highlight is the transparency incorporated into the process of selection for identifying the candidate purely on the basis of merit. Transparent, merit-based selection has been made possible well after a decade," a prospective applicant conversant with the university system said.
As per the new law, the qualification for the post of Vice-Chancellor is a minimum of 10 years experience as professor in a university or in an equivalent position, or 20 years in colleges or reputed research institutions.
An aspirant should have a Ph. D. in the relevant field of the university and must be a professor with a minimum of 10 years’ experience or should have teaching experience of 20 years in a university or college offering PG programmes.
The qualifying clause includes work experience in a self-financing institution or deemed university.
"The scope for more number of college teachers to apply has brightened since there are many fulfilling the norms of the PG teaching experience," another applicant working in a college said.
The aspirant should have at least six years of administrative experience as a dean or head of department or a post equal to these or higher in a university or PG college or a publicly funded institution.
Aspirants should have published at least five research papers after Ph. D. in UGC-listed journals. They should have also presented at least two papers in international academic or research events.
Aspirants should have also conducted at least one such international academic or research event.
Three to be short-listed
A panel of three top-notch academicians from amongst the applicants will be selected and sent to the Chancellor for making the final choice.
There are expectations in academic circles that the new Governor, Banwarilal Purohit, will interview the three candidates himself, a practice that one of his predecessors Sundar Lal Khurana used to follow.
This will reinforce the transparency in the selection process, a former Vice-Chancellor of a State University said.
According to sources, the Search Committee will screen and most likely choose the candidates based on a format followed by Central Universities that requires furnishing of qualification (post-doctorate, Ph.D, post-graduation, graduation); present position and total experience (in years and months), academic experience and service details (as Vice-Chancellor, Professor or equivalent, Associate Professor); international exposure, if any; administrative posts held on full-time basis; research projects executed by applicant; publications (number of papers and books published); area of specialisation; and scholarships, awards, membership, and fellowships in academic societies.

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...