Wednesday, October 25, 2017

அம்மா உணவகத்தில் பல்லி சாம்பார்: பெண் வாந்தி

அம்மா உணவகத்தில் பல்லி சாம்பார்: பெண் வாந்தி
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏஞ்சல், 28. நேற்று, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு உறவினர் ஒருவரை பார்க்க வந்த இவர், அங்குள்ள அம்மா உணவகத்தில் இட்லி, சாம்பார் வாங்கி சாப்பிட்டார். பாதி சாப்பிட்ட போது, சாம்பாரில் பல்லி கிடந்ததை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். உடனே, வாந்தி எடுத்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி, அவர் யாரிடமும் புகார் அளிக்கவில்லை.
தகவலறிந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். அங்கு தயாரிக்கப்பட்ட மதிய உணவை மாதிரி எடுத்து, பாளையங்கோட்டை உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு கூடத்துக்கு, ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...