Thursday, October 26, 2017

அரசு ஊழியர்களையும் அலற வைக்கும் கந்து வட்டி! : 'சைடு பிசினஸ்' செய்யும் போலீசார்

அரசு ஊழியர்களையும் அலற வைக்கும் கந்து வட்டி! : 'சைடு பிசினஸ்' செய்யும் போலீசார்
திருநெல்வேலி: கந்து வட்டி கொடுமை, அரசு ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களும் வட்டிக்கு கடன் வாங்கி, மாத ஊதியம் முழுவதையும் கந்து வட்டி குண்டர்களிடம் அளிக்கும் சம்பவங்கள், தமிழகம் முழுவதும் தொடர்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், காசிதர்மத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, 27, கந்து வட்டி தொல்லை காரணமாக, மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன் தீக்குளித்தார்; நால்வரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கந்து வட்டி தொடர்பாக புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் தனிப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கென தனி மொபைல் நம்பரையும் வழங்கியுள்ளது. இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

அவசர கடன் : நெல்லை மாவட்டத்தில், கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதில், பலரும் ஈடுபட்டாலும், இத்தொழிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்கள், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள், பீடி தொழிலாளர்களை குறி வைத்து, கடன் வழங்குகின்றனர். குறைந்தபட்சம், மாதம், 10 சதவீத வட்டிக்கு பணம் வழங்குகின்றனர். தினசரி, வாரம், மாதம் என, வட்டி வசூலிக்கின்றனர்.

ஏழை, எளிய மக்கள், இல்லாதோர் அவசரத்திற்கு பணம் கிடைப்பதை எண்ணி, அவர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். இந்த நிலை தொடரும் போது, ஒருவரிடம் வாங்கிய கடனை, மற்றவரிடம் வாங்கி அடைக்கின்றனர். அதிக வட்டி என்பதால், அசலுக்கு மேல், வட்டி கட்டியும், கடன் முழுவதையும் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களும், கந்து வட்டி கும்பலிடம் சிக்கி தவிக்கின்றனர்.

அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் கண்டக்டர்கள், டிரைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் பலரும், கந்து வட்டிக்கு பணம் வாங்கி சீரழிகின்றனர். மகன், மகள் படிப்பு, வேலை, திருமணம் என, இவர்கள் வாங்கும் கடனை அடைக்க முடியாமல், மாத சம்பளம் முழுவதும் வட்டியிலேயே மூழ்குகிறது.

பின், வீட்டு செலவுக்கு பணம் பத்தாமல், மறுபடியும் வட்டி கும்பலை நாடுகின்றனர். சில மாதங்களாக வட்டி கட்ட முடியாமல் போனால், அந்த வட்டி தொகையை, அசலுடன் சேர்த்து, அதற்கும் வட்டி தர வேண்டும் என, கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால், கந்து வட்டி, மீட்டர் வட்டி, புல்லட் வட்டி, ராக்கெட் வட்டி என விஸ்வரூபம் எடுக்கிறது. கந்து வட்டி கும்பலின் பிடியில், மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களும் சிக்குகின்றனர்.

இதற்கு கடிவாளம் போட வேண்டிய போலீசார், கந்து வட்டி கும்பலுக்கு துணை போகின்றனர். சில போலீசார், தங்களுக்கு கிடைக்கும் மாமூல் வருவாயை, உறவினர்கள் மூலம், கந்து வட்டி தொழிலில் முதலீடு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

எவ்வளவு வட்டி? : இது குறித்து, கந்து வட்டிக்கு பணம் தரும் சிலர் கூறுகையில், 'நாங்கள் யாரையும் தேடி சென்று, கடன் கொடுப்பதில்லை. வங்கி, நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எங்களிடம் வந்ததும், பணம் கிடைக்கிறது என்பதால் வருகின்றனர். 'நாங்கள் கூறும் வட்டி விகிதத்திற்கு ஒப்புக்கொண்டே பணம் வாங்குகின்றனர். எங்களை போல, பலரிடமும் கடன் வாங்கி, சிலர் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர்' என்றனர். வங்கிகளில் குறைந்த பட்சமாக, விவசாய நகை கடன், ஆண்டுக்கு, 4 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. மற்ற நகை கடனுக்கு, 11 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. பர்சனல் கடன், வாகன கடன் உள்ளிட்ட இதர கடன்களுக்கு அதிகபட்சம், 15 முதல், 18 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றனர். 'ஆண்டுக்கு, 18 சதவீதம் வட்டி சட்டத்திற்கு உட்பட்டது' என, பதிவு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடும்பத்துடன் புகார் : திருநெல்வேலியை அடுத்துள்ள ஆரைக்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 36; கூலித் தொழிலாளி. இவர், அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடம், 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். 10 சதவீத வட்டியாக, மாதம், 500 வீதம், மூன்று ஆண்டுகளில், 18 ஆயிரம் ரூபாய் திரும்ப செலுத்தி உள்ளார். ராமச்சந்திரன் மேலும், 15 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்து, முன்னீர்பள்ளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை. எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதை விசாரித்த போலீசார், ராமச்சந்திரனுக்கு ஆதரவாக தங்களிடம் எழுதி வாங்கியுள்ளதாக தெரிவித்து, ஆறுமுகம், மனைவி, மூன்று குழந்தைகளுடன் வந்து, நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

அரசு பஸ்சில், 'அரை டிக்கெட்' : வயது சான்றிதழ் அவசியம்


''அரசு பஸ்களில், அரை கட்டண டிக்கெட் எடுக்க விரும்புவோர், குழந்தைகளின் வயது சான்று எடுத்துச் செல்வது அவசியம்,'' என, சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், பாண்டி கூறினார். அரசு பஸ்களில், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டணம் கிடையாது; 3 முதல், 12 வயது வரை, அரை கட்டணம் வசூலிக்கப்படும். குழந்தைகளின் வயதில், கண்டக்டருக்கு சந்தேகம் ஏற்படும் போது, உயரத்தை கணக்கிடுவர்.
இதற்கு பஸ்சில் வசதி உள்ளது. 130 செ.மீ.,க்கு மேல் உயரம் இருப்பின், முழு கட்டணம் செலுத்த வேண்டும். பல நேரங்களில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் உயரமாக இருப்பதால், முழு கட்டணம் செலுத்த நேரிடுகிறது. இதனால், கண்டக்டர் - பயணியர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இது குறித்து, சேலம் கோட்ட போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், பாண்டி கூறுகையில், 
''அரை டிக்கெட் எடுப்பவருக்கான வயது சான்றை, பயணத்தின் போது எடுத்துச் சென்றால், எந்த சிக்கலும் வராது. ஆகையால், இனி அரை டிக்கெட் எடுக்க வேண்டிய பெற்றோர், தவறாமல், குழந்தையின் வயது சான்று எடுத்துச் செல்வது நல்லது,'' என்றார்.

- நமது நிருபர் -

வக்பு வாரியத்திற்கு உறுப்பினர்கள் நியமனம்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக, ஐந்து பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களாக, எம்.பி.,க்கள் சார்பில், அ.தி.மு.க., - எம்.பி., அன்வர்ராஜா; எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், முஸ்லிம் லீக் - எம்.எல்.ஏ., முகமது அபூபக்கர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மஸ்தான்; முத்தவல்லிப்பிரிவு சார்பில், ஹாஜா மஜீத், சையது அலி அக்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை, கவர்னர் நியமனம் செய்துள்ளார். இதற்கான உத்தரவை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கார்த்திக் பிறப்பித்துள்ளார்.

15 ஆயிரம், 'சிம்' கார்டுகள் பி.எஸ்.என்.எல்., இலவசம்

மொபைல் போன் வாங்குவோருக்கு, இலவசமாக, 'சிம் கார்டு' தரும் திட்டத்திற்காக, 15 ஆயிரம், 'சிம்'களை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வழங்கியுள்ளது. மொபைல் போன் தயாரிக்கும், 'மைக்ரோ மேக்ஸ்' நிறுவனமும், பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, குறைந்த விலை மொபைல் போன் வாங்குவோருக்கு, இலவசமாக, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு வழங்கப்படுகிறது.
அந்த மொபைல் போனின் விலை, 2,200 ரூபாய். அதில், '4ஜி' அழைப்புகளை பேசும் வசதி உள்ளது. அதை வாங்குவோருக்கு, ஒரு, பி.எஸ்.என்.எல்., சிம் கார்டு தரப்படுகிறது. அதில், மாதக் கட்டணமாக, 97 ரூபாய் செலுத்தினால், ஒரு மாதம், இலவச இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு இலவசமாக தரப்படுகிறது. அந்த திட்டத்திற்காக, சென்னை, காஞ்சி, திருவள்ளூர் தவிர்த்த, பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம், 'மைக்ரோமேக்ஸ்' நிறுவனத்திற்கு, 15 ஆயிரம் சிம் கார்டுகளை வழங்கியுள்ளது.

- - நமது நிருபர் - 

மூன்று துறைகளின் செயலர்கள் மாற்றம்


சென்னை: முதன்மை செயலர் மற்றும் செயலர் அந்தஸ்தில் உள்ள, மூன்று, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.

திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலர் ஆக உள்ள கிருஷ்ணன், வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ஆக மாற்றப்பட்டுள்ளார்.

வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் ஆக உள்ள தர்மேந்திர பிரதாப் யாதவ், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலராக உள்ள மங்காத் ராம் சர்மா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் மீட்டர்களில் பழுது ஏற்பட காரணம் என்ன?


வீடுகளில், மின் பயன்பாட்டை கணக்கிடுவதற்காக, மின் வாரியம் பொருத்தும் மீட்டர்களில், வெகு சீக்கிரத்தில் பழுது ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது: தமிழக மின் வாரியம், தற்போது, 'ஸ்டேடிக்' என்ற மீட்டர் பொருத்தி வருகிறது. ஒரு முனை மற்றும் மும்முனை என, இரண்டு பிரிவுகளில், ஆண்டுக்கு சராசரியாக, 30 லட்சம் மீட்டர்கள் வாங்கப்படுகின்றன. 

டெண்டர் : இவற்றின் மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. மீட்டர் கொள்முதல், டெண்டரில், 12 நிறுவனங்கள் வரை பங்கேற்கின்றன. அப்போது, ஒவ்வொரு நிறுவனமும், 8 மீட்டர்களை, சோதனை மாதிரிக்காக வழங்கும். 

சோதனை : அதில், 6 மீட்டரை, பெங்களூரில் உள்ள, மத்திய ஆய்வு கூடத்திற்கும், 2 மீட்டர், சென்னை, நந்தனத்தில் உள்ள, மின் வாரிய ஆய்வகத்திற்கும் அனுப்பப்படும். அங்கு, மீட்டரின் எடை, தரம், மென்பொருள் உள்ளிட்டவை சோதனை செய்யப்படும்.

அதன் அடிப்படையில், மீட்டர் சப்ளை செய்ய, 'ஆர்டர்' தரப்படும். ஆர்டர் பெற்ற நிறுவனங்கள், மின் வாரிய கிடங்குகளுக்கு, மீட்டரை சப்ளை செய்யும். அதில், எப்போது வேண்டுமானாலும், எந்த பெட்டியில் இருந்தும், 6 மீட்டரை எடுத்து, பெங்களூரு ஆய்வு கூடத்திற்கு, மறு சோதனைக்கு அனுப்ப வேண்டும். டெண்டரில் பங்கேற்கும் அனைத்து நிறுவனங்களும், சோதனைக்கு தரமான மீட்டர் தருகின்றன. ஆனால், சப்ளையின்போது, தரமில்லாத மீட்டர்களை அனுப்புகின்றன. அதை, கிடங்கில் உள்ளவர்கள், முறையாக ஆய்வு செய்வதில்லை. 

கிடங்கு, பிரிவு அலுவலகங்களில், மீட்டரை முறையாக அடுக்கி வைப்பதில்லை. இஷ்டத்திற்கு துாக்கி போடுகின்றனர். இது போன்ற காரணங்களால், மீட்டரை, வீடுகளில் பொருத்தும்போது, எளிதில் பழுது ஏற்பட்டு, தவறாக ஓடுகிறது.

ஆதரவு : மின் வாரியம், ஒரு முனை மீட்டரை, 450 ரூபாய்க்கும், மும்முனை மீட்டரை, 1,200 ரூபாய்க்கும் வாங்குகிறது. மத்திய ஆய்வு கூடத்திற்கு இணையாக, மின் வாரிய பொறியாளர்கள், மீட்டரின் தரத்தை சோதிக்காமல் இருப்பதுடன், அவர்கள், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
தேர்வு முடிவுகள் தாமதம் : துணைவேந்தர் நீக்கம்

மும்பை: பல்கலைக்கழக தேர்வு முடிவை வெளியிடாமல் தாமதப்படுத்தும், மும்பை பல்கலைக்கழக துணைவேந்தரை, பதவியில் இருந்து நீக்கி, மஹாராஷ்டிர மாநில கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான, வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த, 2015 முதல், மும்பை பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகிக்கும், சஞ்சய் தேஷ்முக், 52, பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதப்படுத்தியதால், பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, மஹாராஷ்டிர மாநில கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் நடந்த பல்கலைக்கழக தேர்வு முடிவுகள், நான்கு மாதங்களாகியும் அறிவிக்கப்படவில்லை. இதனால், இறுதியாண்டு முடித்த மாணவர்கள், வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு முடிவை வெளியிடுவதை தாமதப்படுத்திய துணைவேந்தர், பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
100 விவசாயிகளின் பெயர்கள்  ஒரே, 'ஆதார்' எண்ணுடன் இணைப்பு
மும்பை:மஹாராஷ்டிராவில், கடன் தள்ளுபடி பெற விண்ணப்பித்துள்ள விவசாயிகளில், 100 பேர், ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளது, அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், விவசாயக் கடன், 34 ஆயிரம் கோடி ரூபாய்
ரத்து செய்யப்பட உள்ளதாக, முதல்வர் பட்னவிஸ் அறிவித்தார். இதற்காக, விவசாயிகள், இணைய தளத்தில், விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது.

இதன்படி, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்த அதிகாரிகள், விவசாயி களின் ஆதார் எண், பெயர்கள், அவர்கள் பெற்ற கடன் தொகை, அவர்களின் நில அளவு உள்ளிட்ட, பல்வேறு தகவல்கள் முரண்பாடாக இருந்ததை பார்த்து, திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த விவசாயி களில், 100க்கும் மேற்பட்டோருக்கு, ஒரே ஆதார் எண் தரப்பட்டுள்ளது, அதிகாரிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பது ஏற்கனவே, தாமதமாகி வரும் நிலையில்,தற்போது எழுந்துள்ள பிரச்னை களுக்கு தீர்வு காண முடியாமல், அதிகாரிகள் தவிக்கின்றனர்.



இதையடுத்து, வங்கி அதிகாரிகளின் அவசர கூட்டத்தை, முதல்வர் பட்னவிஸ், நேற்று கூட்டினார். தற்போதுள்ள சூழ்நிலையில், விவசாயிகளுக்கு தாமதமின்றி, நிவாரணம் கிடைப்பதற்கான வழிமுறைகளை ஆராயும்படி, அதிகாரிகளுக்கு, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
பலமுறை தள்ளி போகும் தீர்ப்பு தேதிஎதிர்பார்ப்பை எகிற வைக்கும், '2ஜி' வழக்கு
தீர்ப்பு இன்னும் முழுமையாக எழுதி முடிக்கப் படாததால், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பை, 3-வது முறையாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது.



கடந்த, 10 ஆண்டுகளாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு, அரசியல் ரீதியிலான முக்கியத்துவத்தை சிறிதும் இழக்கவில்லை. இந்த வழக்கின் தீர்ப்பு, தி.மு.க.,வின் அரசியல் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த லாம் என்றும், அதன்மூலம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தின் முகம் மாறலாம் என்றும், யூகங்கள் நிலவி வருகின்றன.

தி.மு.க., மட்டுமல்லாது, தேசிய அரசியலில் காங்கிரசுக்கும் இந்த தீர்ப்பினால், அரசியல் ரீதியாக சாதக பாதகங்கள் ஏற்படுமென்றும், அதன் மூலம், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போக்கு தீர்மானிக்கப்படலாம் என்ற கருத்தும் உள்ளது.

தவிர, குஜராத், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. காங்கிரஸ், பா.ஜ.,வுக்கு இடையிலான இந்த யுத்தத்தில், ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு, உடனடியாக, பெரும் விளைவு களை ஏற்படுத்தலாம் என, கூறப்படுகிறது. தி.மு.க.,வின் தெரிந்த முகங்களான, முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, எம்.பி., கனிமொழி ஆகிய இருவரது அரசியல் எதிர்காலம் தாண்டி, இந்த தீர்ப்பின் வழக்கு, பல்வேறு கோணங்களில் விஸ்வரூபம் எடுத்து, தமிழகம் மற்றும்தேசிய அரசியலின் ஆட்டங்களை, திணறடிக்க காத்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் இறுதி விசாரணை முடிந்து, தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின், பல முறை தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது, நவ., 7ம் தேதி, தீர்ப்பு தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், கூறியதாவது:

ஸ்பெக்ட்ரம் குறித்த, ஆறு வழக்குகள், நீதிபதி, சைனி முன், விசாரணைக்கு வந்தன. இதில், 'ஏர்செல் மேக்சிஸ்' உட்பட 3 வழக்குகளில், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ளது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் கலைஞர், 'டிவி'க்கு வந்த பணம் குறித்த வழக்குகள்.
இவ்வழக்கில் ஆரம்பம் முதலே, உறுதி குலை யாமல் நிற்கிறார், ராஜா. காரணம்,

இவ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்.ராஜா மீதான முக்கியகுற்றச்சாட்டே, தன்னிச்சையாக முடிவெடுத்தார், என்பது தான்.
தான் மட்டுமல்ல, தனது துறையின் முக்கிய அதிகாரிகள் மட்டுமல்லாது, நிதியமைச்சரில் துவங்கி பிரதமர் வரையில் ஒப்புதல் பெற்றே முடிவெடுத்தாக கூறி, அது குறித்த முக்கிய ஆவணங்களை, நீதிபதி முன் மலைபோல கொட்டி இருக்கிறார், ராஜா.தனக்காக, நீதிபதி முன், ராஜா வாதாடிய ஒவ்வொரு முறையும், அவரது வாதங்களில் அனல் பறந்தது. சி.பி.ஐ., தரப்பிடம், 'கூறப்படும் குற்றச்சாட்டுக்கு முரணாக ஆவணங்கள் உள்ளனவே' என, பலமுறை, நீதிபதியே கடிந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்தன.

இந்த வழக்கில், தீர்ப்பின் ஒவ்வொரு அம்சமும், கச்சிதமாக இருக்க வேண்டுமென, மிகுந்த கவனத்துடன், நீதிபதி செயல்பட்டு வருகிறார். அதன் வெளிப்பாடே, கூடுதல் கால அவகாசம் எனத் தெரிகிறது.சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தின் ஆயுட்காலம், நவ.,30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இதற்கு மேலும், இந்த தீர்ப்பு தாமதம் ஆக வாய்ப்பில்லை.

நவ., 7ல் தேதி அறிவிக்கப்பட்டு, அதிலிருந்து, ஒரு வாரத்திற்குள், தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள், தெரிவித்தன.இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப் பட்ட அனைவரும், நவ., 7ம் தேதி ஆஜராக வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர்: ஆய்வில் தகவல்


 உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர்: ஆய்வில் தகவல்
சிங்கப்பூர் சிட்டி:உலகில் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது.

கனடாவைச் சேர்ந்தை ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம் பல்வேறு முதலீடு , நிதி ஆலோசனை, பாஸ்போர்ட் குறித்த குறியீட்டு சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்கிறது.இந்த நிறுவனத்தின் கிளை அலுவலங்கள் உலக நாடுகள் முழுவதிலும் உள்ளது.
இந்த நிறுவனத்தின் பாஸ்போர்ட் குறியீட்டு பிரிவு 2017-ம் ஆண்டில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பாஸ்போர்டுகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் சிங்கப்பூர் முதலிடம் பெற்றுள்ளது.
அதன் விவரம்: 
1. 159 - சிங்கப்பூர்.
2. 158 - ஜெர்மனி
3. 157 - சுவீடன், தென்கொரியா.
4. 156 - டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்.நார்வே, பிரிட்டன், 
5. 155 - லக்ஸம்பர்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, போர்சுக்கல், 
6. 154 - மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா, 
7. 153 - ஆஸ்திரேலியா, கிரீஸ், நியூசிலாந்து.
8. 152 - மால்டா, செக் குடியரசு, ஐஸ்லாந்து.
9. 150 - ஹங்கேரி.
10. 149 - சுலேவேனியா, சுலேவாக்கியா, போலாந்து, லுதுவேனியா. லாட்வியா.

சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறியது, சிங்கப்பூர் முதலிடம் பெற்றதற்கு காரணம் அந்நாடு தனது தூதரக உறவுகளை வலுப்படுத்துவதிலும், வெளியுறவு கொள்கைகளில் கவனம் செலுத்துவதும் தான் என்றார்.

வழக்கமாக ஐரோப்பிய நாடான ஜெர்மன் நாடு தான் கடந்த இரண்டு வருடங்களாக முதலிடத்தில் இருந்தன. இந்தாண்டு முதன்முறையாக ஆசிய நாடான சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. . இந்தியா 70-வதுஇடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க மிகவும் பின்தங்கியுள்ளதற்கு காரணம் அதிபர் டெனால்டு டிரம்ப் சமீபத்தில் விசா கெடுபிடி காட்டியதே காரணம் என கூறப்படுகிறது. 

சென்னை : விமான நிலைய ஏ.டி.எம்.மில் 28 லட்சம் ரூபாய் கொள்ளை
சென்னை,விமான நிலைய ,ஏ.டி.எம்.மில், 28 லட்சம் ரூபாய், கொள்ளை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் ரூ.28 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. உள்நாட்டு விமானநிலையத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பணத்துடன் ஒருவர் காரில் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.

மானாமதுரை அருகே போலி மருத்துவர்கள் இருவர் கைது


மானாமதுரை,அருகே,போலி,மருத்துவர்கள்,இருவர்,கைது
மானாமதுரை: மானாமதுரை அருகே போலி மருத்துவம் பார்த்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். 

மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரை சேர்ந்தவர்கள் நாகராஜன் 65, பாண்டீஸ்வரி 33 இவர்கள் இருவரும் முறையாக மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவ துறை இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி அளித்த புகாரின் அடிப்படையில் மானாமதுரை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

200 விமான பயணிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்

200 விமான பயணிகளுக்கு இலவச  ஸ்மார்ட்போன்: சாம்சங் தாராளம்
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
டேமேஜ் கண்ட்ரோல் மோடில் சாம்சங்
மாட்ரிட்: ஸ்பெயினில் விமானத்தில் பயணித்த 200 பயணிகளுக்கு சாம்சங் நிறுவனம் கேலக்சி நோட்-8 மாடல் ஸ்மார்ட் போன்களை இலவசமாக வழங்கியது.

கடந்த ஆண்டு சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரிகள் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டது. விமானங்களில் இது போன்ற சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களில் உஷ்ணம் அதிகமாகி, தீப்பொறிகள் கிளம்பியதை அடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெறப்பட்டன.

இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங் கேலக்சி நோட்-8 ரக ஸ்மார்ட் போன் மிகவும் பாதுகாப்பானவை என விமான பயணிகளிடம் தெரிவிக்கும் விதமாக இலவசமாக நோட்-8 ஸ்மார்ட் மொபைல் போன்களை சாம்சங் வழங்கி பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.
ஸ்பெயினின் ஐபிரியா- மாட்ரிட் இடையே விமான பயணம் மேற்கொண்ட 200 பயணிகளுக்கு நோட்-8 ஸ்மார்ட் போனை, விமான பணி பெண்களே பயணிகளுக்கு விநியோகம் செய்தனர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சாம்சங் நோட் -8 ஸ்மார்ட் போனை இலவசமாக வாங்கிய பயணிகள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 
விமான பயணிகளின் சந்தோஷம் அடையும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்


 ஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்
புதுடில்லி: மொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

நாடு முழுவதும், 100 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. இணைப்புகளை பெற்றுள்ளவர்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் வகையில், ஆதார் எண்ணுடன் இணைக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதுவரை, 50 கோடி பேர், தங்களுடைய மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்நிலையில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு எளிமையான புதிய வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.ஆன் - லைனில் முன்பதிவு செய்தால், வீட்டுக்கே சென்று, ஆதார் எண்ணை இணைக்கும் வசதி செய்யப்பட உள்ளது. தங்களுடைய மொபைலில் இருந்தே, ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை ரகசிய குறியீட்டைப் பெற்று பதிவு செய்யும் வசதி போன்ற வசதிகள், செயல்படுத்தப்பட உள்ளன.

'தூக்கு தண்டனையின்போது டாக்டர்கள் வேண்டாமே!'


'தூக்கு தண்டனையின்போது டாக்டர்கள் வேண்டாமே!'
புதுடில்லி: 'துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, டாக்டர்கள் உடனிருக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்' என, இந்திய டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, தண்டனை நிறைவேற்றப்பட்டவரின் உடலைப் பரிசோதித்து, அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக, டாக்டர்கள் உடன் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.

இந்த நிலையில், இந்திய டாக்டர்கள் சங்கத்தின் தலைவர், கே.கே. அகர்வால், இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ஒருவருடைய துாக்கு தண்டனையை நிறைவேற்றும்போது, டாக்டர்கள் உடனிருப்பது, மருத்துவ நியதிகளுக்கு எதிரானது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய டாக்டர்கள், உயிரைப் பறிக்கும்போது உடனிருக்கும் நடைமுறையை மாற்ற வேண்டும். சர்வதேச மருத்துவ சங்கம் இது தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், இந்த நடைமுறையை மாற்றுவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்



தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

அக்டோபர் 26, 2017, 04:45 AM

சென்னை,

சென்னையில் சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு அடுத்தபடியாக தாம்பரம் ரெயில் நிலையம் 3–வது ரெயில் முனையமாக அமைக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து சில வாராந்திர சிறப்பு ரெயில்கள் மட்டும் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை வழியாக நெல்லைக்கும், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, அருப்புக்கோட்டை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டைக்கும் தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.அதன் விவரம் வருமாறு:–

* தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் மாலை 3.30 மணிக்கு நெல்லை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

* மறுமார்க்கத்தில், நெல்லையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் ரெயில் அன்று இரவு 9.45 மணிக்கு சென்னையை வந்தடையும்.

(இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).

* தாம்பரத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரெயில் செங்கோட்டை ரெயில் நிலையத்தை அன்று இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.

* மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

(இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்).

இந்த புதிய ரெயில்களில் 18 முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. இந்த ரெயில்கள் இயக்கப்படும் தேதி குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது.
நெல்லையில், கந்துவட்டி கொடுமையால் தீக்குளித்த தம்பதியினர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி



நெல்லையில், கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த தம்பதியினர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறினார்.

அக்டோபர் 25, 2017, 03:00 AM

நெல்லை,

நெல்லையில், கந்து வட்டி கொடுமையால் தீக்குளித்த தம்பதியினர் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் கூறினார்.குடும்பத்துடன் தீக்குளிப்பு

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மம் எம்,.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 28). கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குடும்பத்தோடு தீக்குளித்தார். இதில் அவருடைய மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி ஆருண்யா, அக்‌ஷயா என்ற பரணிகா ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். பலத்த தீக்காயத்துடன் இசக்கிமுத்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர்

இசக்கிமுத்து குடும்பத்தோடு தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு இசக்கிமுத்து குடும்பத்தினர் காசிதர்மம் புதுமனை தெருவில் உள்ள தளவாய்ராஜ் வீட்டில் வாடகைக்கு இருந்தபோது தனது குழந்தைகளின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு ரூ.60 ஆயிரமும், வீடு கட்டுவதற்கு ரூ.85 ஆயிரமும் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, தளவாய்ராஜின் மனைவி முத்துலட்சுமியிடம் கடன் வாங்கி உள்ளார். மேலும் மானூரை சேர்ந்த ஆறுமுககோனார் மனைவி இசக்கியம்மாளிடம் ஏற்கனவே வாங்கி இருந்த கடனுக்காக முத்துலட்சுமியின் 19 கிராம் தங்க நகையையும் வாங்கி உள்ளார்.

இதேபோல் சுப்புலட்சுமி அதே ஊரை சேர்ந்த பலரிடம் கடன் வாங்கி உள்ளார். இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் இந்த பணத்தை வைத்து செங்கோட்டையில் ராஜ், முப்புடாதி தேவர் ஆகியோருடைய வீடுகளை தலா ரூ.50 ஆயிரம் கொடுத்து ஒத்திக்கு வாங்கி உள்ளனர். மேலும் இவர்கள் காசிதர்மத்தில் 1½ செண்ட் நிலம் வாங்கி உள்ளனர். மேலும் பலருக்கு இவர்கள் வட்டிக்கு பணம் கொடுத்து உள்ளனர்.வங்கியில் நகைகளை வைத்து...

மேலும் காசிதர்மத்தை சேர்ந்த பரமசிவன் மனைவி கண்ணம்மாள், சுப்புலட்சுமியிடம் 10 நாட்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வட்டி வீதம் ரூ.65 ஆயிரம் வாங்கியதாகவும், அத்துடன் தனது 48 கிராம் தங்க நகைகளை சுப்புலட்சுமி மூலம் வங்கியில் ரூ.95 ஆயிரத்திற்கு அடகு வைத்ததாகவும், சுப்புலட்சுமி அதற்கான ரசீதை தர மறுப்பதாகவும், மேலும் தான் சுப்புலட்சுமியிடம் ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறி அவதூறாக பேசி தன்னுடன் சண்டைக்கு வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கண்ணம்மாள் கடந்த 20–4–2017 அன்று அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் 2 பேரும் நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் தேடிக்கொள்வதாக எழுதி கொடுத்ததன் பேரில் அந்த புகார் மனு முடிக்கப்பட்டது.

மேலும் தளவாய்ராஜ் மனைவி முத்துலட்சுமி, அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 18–8–2017 அன்று இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் தன்னிடம் பணம், நகையை வாங்கிக்கொண்டு கொடுக்க மறுப்பதாக புகார் செய்தனர். இந்த மனு மீதான விசாரணைக்கு இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் ஆஜராகவில்லை. இசக்கிமுத்துவின் தந்தை பலவேச தேவர் மட்டுமே ஆஜரானார்.தற்கொலை முயற்சி

இதன் தொடர்ச்சியாக முத்துலட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 11–9–2017 அன்று இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகார் மனு அச்சன்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அச்சன்புதூர் போலீசார் விசாரணைக்கு அழைக்க சென்றபோது காசிதர்மம் கிராமத்தில் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் குடியிருக்கவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய உறவினர்களிடம் தெரிவித்தும் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

இதனால் மனம் உடைந்த முத்துலட்சுமி 30–9–2017 அன்று வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் போலீசில் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் தன்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகைகளை திருப்பிதராததால் மனம் உடைந்து வி‌ஷம் குடித்ததாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் ஊரில் இல்லை.பதிவு தபால் திரும்பி வந்தது

இந்த நிலையில் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர், தங்களிடம் முத்துலட்சுமி கந்துவட்டி கேட்டு தொல்லை கொடுப்பதாக 4–9–2017, 18–9–2017, 25–9–2017, 9–10–2017 ஆகிய தேதிகளில் கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் மூலம் அச்சன்புதூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மனு மீது நடக்கும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினருக்கு பதிவு தபால் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அந்த தபால் அவர்களுக்கு வாங்கப்படாமல் அந்த முகவரியில் ஆள் இல்லை என்று திரும்பி மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்தது.கடும் நடவடிக்கை

மேலும் இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினர் கடந்த 4 மாதங்களாக இந்த முகவரியில் வசித்து வரவில்லை என்று கிராம நிர்வாக அலுவலர் 16–10–2017 அன்று சான்று வழங்கி உள்ளார். இதனால் இந்த மனுக்கள் மீது இசக்கிமுத்து–சுப்புலட்சுமி தம்பதியினரிடம் விசாரிக்க முடியவில்லை. இதனால் 16–10–2017 அன்று ஆஜரான முத்துலட்சுமி இது சம்பந்தமாக உரிமையியல் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு தேடிக்கொள்ளவேண்டும் என்றும், அவர்களிடம் எந்த பிரச்சினையும் செய்யமாட்டேன் என்றும் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தென்காசி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவருடைய விசாரணை அறிக்கையின் பேரில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.246 கந்துவட்டி வழக்குகள்

கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாரும், வருவாய்த்துறையினரும் இணைந்து செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 246 கந்துவட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 4 வழக்கில் விசாரணை முடிந்து நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் யார், யார்? கந்துவட்டி கொடுக்கிறார்கள்? என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுக்கப்படுகின்ற மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை மேற்கொள்ளப்படும். மாதந்தோறும் கந்துவட்டி சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு



காஞ்சீபுரம் அருகே நின்று கொண்டிருந்த தனியார் நிறுவன பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அக்டோபர் 26, 2017, 05:00 AM
காஞ்சீபுரம்,

ஈரோடு பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் நித்தின் கார்த்தி (வயது 20). சென்னை, சிட்லபாக்கம் எம்.சி.நகரை சேர்ந்தவர் சஞ்சையன். இவரது மகன் பிரீதம் (20). இவர்கள் இருவரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் காஞ்சீபுரத்தை செட்டியார்பேட்டை அருகே உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு மருத்துவ கல்லூரி விடுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

சாவு

கண்ணிமைக்கும் நேரத்தில் இவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் செட்டியார்பேட்டையில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு தனியார் நிறுவன பஸ்சில் மோதியது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்களான நித்தின் கார்த்தி, பிரீதம் இருவரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Couple save abandoned woman from roadside deathbed

TNN | Updated: Oct 26, 2017, 00:11 IST

Chennai: A 70-year old destitute woman lying unconscious on the pavement at Anna Salai was rescued by a couple on Wednesday. They handed over the woman to the state-funded 108 emergency service. The lady, whose identity remains unknown, was rushed to the Rajiv Gandhi General Hospital and is being treated. Locals said she had been lying unattended on the pavement for more than three days.

Deva Prabhu and his wife D Vinita spotted the woman who had taken refuge at the entrance of a locked building near the Head Post Office on Anna Salai. The woman was suffering from giddiness, according to the report filed by emergency medical technician G Bhagyalakshmi.

Vinita said, "Shopkeepers near the post office told us that the lady was once in good health and had been working as a domestic help." Vinita and Prabhu had approached the lady on Tuesday afternoon and offered her Rs 50. "When we came back on Tuesday night, locals told us that some rag pickers took the money away from her. So we gave her some food but she could barely hear us. As suggested by a local tea-seller who knows the lady, we gave her a cup of tea. She drank it up but still refused food," she said.

The woman had been lying in the sun for days and was motionless when the ambulance arrived on Wednesday morning.

Prabhu, who runs a computer shop on Ritchie Street, said, "It is a shame that nobody bothered to help the lady for days. When I called up some private shelters, they demanded money to take her in." Prabhu finally called 108 service on Wednesday morning which deployed an ambulance immediately.

The lady is stable and will spend the night at the general hospital and may be moved to a government shelter soon, according to a hospital staff member. G Bhagyalakshmi said, "The lady will stay at the hospital until she recovers completely."

Prabhu and Vinita said they plan to visit the lady at the hospital on Thursday. Vinita said, "We plan to get her clothes to wear. She was in tattered, old clothes when the ambulance took her away."

Two escape gallows in triple murder case as HC heart bleeds for their children

TNN | Oct 26, 2017, 00:24 IST

Chennai: Two men, convicted and condemned for triple murders, escaped the noose on Wednesday, as Madras high court took pity on their three children and felt their hanging would leave the children high and dry.

"If the capital punishment is confirmed, then, the three children would have to necessarily, and possibly, would have an uncertain future. They have to live with an idea that the judiciary was responsible for the death of their fathers. When there are three young children of the convicts, who have a long future, the court must keep in mind that these three children, when they grow up and enter the society do not have any anger or any reason to wreak vengeance in any manner whatsoever. To this extent, we feel that it would only be appropriate that an alternative to death sentence can be imposed on Kamaraj and Elangovan," said a division bench of Justice P N Prakash and Justice C V Karthikeyan.

While hoping that the duo would reform due to the fact that it had been spared noose because of the children, the bench commuted their death sentence into life, on a condition that the two should not be considered for premature release unless they complete 30 years of actual imprisonment without any statutory remission or commutation. They shall also first serve their 10 years of rigorous imprisonment and start the imprisonment for life thereafter.

Kamaraj and Elangovan murdered a young doctor Sindhu, her mother Sathyavathi and grandmother Visalakshi for gain at their house in Namakkal in October 2011 and looted 28 sovereigns of gold ornamens found on their person. Convinced by solid evidence, the additional sessions court awarded death sentence to the duo on June 2, 2017 and the case was referred to the high court for confirmation.

The bench, making it clear that the case had been proved beyond doubt, went an extra mile, considered the future of children of both accused and victim, before commuting the death sentence awarded to the duo.

Noting that the high court takes the role of parent of families of both the death row prisoners and the victims, the judges said: "As parent of both the parties, the court cannot keep its eyes blind and say we have given this particular sentence and thereafter, we have nothing further to do with this case or with the family of the accused and the victims. The duty of the court extends further. We also would like to ponder that the children of the accused are also citizens of this country."

They also said that when the duo realises that they had been given life sentence and not death sentence due to their children, "it would certainly be a very important factor in the minds to reform."

Plea in Madras HC says Pudukottai collector, PA made illegal appointments

L Saravanan| TNN | Updated: Oct 25, 2017, 19:49 IST



MADURAI: The Madurai bench of the Madras high court on Wednesday ordered the Directorate of Vigilance and Anti-Corruption to file an action-taken report on a complaint against Pudukottaidistrict collector S Ganesh and his PA, Ramesh, for allegedly making illegal appointments in the noon meal scheme.

Justice A M Basheer Ahamed gave this direction on a petition filed by job aspirant K Thamizh Selvi.

When the case came up for hearing, the petitioner's counsel said, "The collector and his PA filled not less than 130 vacancies in the post of noon meal organiser on October 16 last for extraneous considerations. Through middle men, they have collected from Rs 3 lakh to Rs 4 lakh per appointment."

Certificate verification and interview took place in February last to fill vacancies in the post of noon meal organiser. But the collector had kept the selection process in abeyance for more than eight months, the counsel said.

"The petitioner who was not interested in paying bribe to the officials took the issue to the DVAC by way of sending complaint on October 10. He also filed a case before the Madurai bench of the high court. The court in turn heard it on October 13 and ordered notice. After that, the officials made appointments illegally. Now, the collector's PA is going to retire on October 31. If he is allowed to retire, it will be a mockery."

"It is necessary to grant an order of interim injunction restraining the vigilance commissioner from allowing the illegally appointed noon meal organisers from discharging their functions. It is necessary that a direction should be issued to the vigilance commissioner not to allow the PA to retire. An FIR should be filed based on a complaint lodged on October 10. Also, steps should be taken to prevent the district collector from influencing the witnesses," the counsel said.

The court adjourned the case to October 30.

Government may go beyond Aadhaar to verify mobile numbers

Pankaj Doval| TNN | Oct 26, 2017, 02:15 IST

HIGHLIGHTS

We are looking at whether other authentication documents can be used to verify mobile numbers, said a government source

These IDs could include ration card, driver’s license and passport



NEW DELHI: Faced with criticism for forcing people to link their Aadhaar numbers with their mobile connection, thereby creating scope for privacy invasion, the government is considering the option of allowing other identity proofs to complete the verification process. These IDs could include ration card, driver's license and passport.

"We are ready to explore other options. We are looking at whether a ration card, or a driver's license, or some other authentication document can be used. No final call has been taken on the matter though," an official source said.

The source further added, "It must be in conformity with the mandate laid down by the Supreme Court. We cannot dilute the process."

The telecom ministry had issued instructions to mobile companies to link Aadhaar with mobile phones after a suggestion by the Supreme Court (on a plea filed by Lok Niti foundation) for a credible authentication mechanism. If the authentication process is not completed by February next year, mobile service could be disconnected.

However, the decision of Aadhaar-linkage for mobile phones has been criticised and there has been a fresh petition in the Supreme Court challenging the move.

The source said that the government is mindful of the petitions in the apex court. "We will also wait to see what the court says further on this."

Seperately, the government said it would soon issue instructions to ensure authentication for people who do not have an Aadhaar card. "We will be putting in place a mechanism to ensure their authentication as well," telecom secretary Aruna Sundararajan said on the issue.

Earlier, telecom minister Manoj Sinha announced three new ways to complete the process of Aadhaar authentication with mobile number--through OTP (one-time password), an app or through an IVRS (Interactive Voice Response System) facility.

While the authentication by visiting stores of telecom companies will continue, the government has also ordered that operators carry out the exercise at the doorsteps of the disabled, chronically-ill and senior citizens.

"It is the government's endeavour to improve convenience and reduce time and energy spent by consumers to accessing government information and services," Sinha said.

Nearly 50 crore mobile numbers are already registered in the Aadhaar database. However, there has been major discontent amongst many mobile customers over the manner in which the authentication process is being carried out by telecom companies.
Consumers allege that they are being bombarded with messages by telecom companies to link the numbers or face immediate disconnection (despite the deadline being February 2018). Also, the biometric process has failed on many occasions due to problems with machines.

Sundararajan said that in the case of agent-assisted biometric authentication for SIM re-verification or issuance, telecom companies have been asked to ensure that full e-KYC details of subscribers are not made visible to the agent. Nor should data be stored on the agent's device. At present, e-KYC data of the subscriber, including photograph, is visible to the agent of the telecom operator.


Wednesday, October 25, 2017


Air traffic congestion at Bengaluru airport affects flight services in Chennai

V Ayyappan| TNN | Oct 25, 2017, 12:16 IST



CHENNAI: One flight was cancelled and four arrivals from Bengaluru were delayed in Chennai due to air traffic congestion at Bengaluru airport on Wednesday.

Passengers of a Chennai -Pune IndiGo flight were stranded after the 11.40am flight was cancelled an hour before departure. The airline cited bad weather in Bengaluru as the reason. Planes are stuck in Bengaluru airport which is facing delays in flight operations.

"There was confusion after passengers received SMSes saying the flight is cancelled. Most of the people have arrived at the airport. The airline is accommodating people on Hyderabad flights and Mumbai flights," said a passenger who got accommodation in a Hyderabad flight which connects to Pune.

However, many were not happy because their trip got delayed by several hours.

LATEST COMMENTthis time it is attributed to nature.

measures needed to expand the capacity , in view of increase in passenger trafficN Renganathan
Four arrivals from Bengaluru were delayed. An IndiGo flight scheduled for 7.15am, a SpiceJet flight scheduled for 8.25am and a Jet Airways flight scheduled for 9.30am were delayed by two hours. Another Jet Airways flight scheduled to arrive at 10.10am landed at 11am.

Airport sources said more arrivals from Bengaluru were likely to be delayed.
Singapore passport ranks ‘most powerful’, India ranks 75th

PTI

Published  Oct 25, 2017, 5:01 pm IST

‘It is a testament of Singapore's inclusive diplomatic relations and effective foreign policy,’ an official said.

According to the 'Global Passport Power Rank 2017' by global financial advisory firm Arton Capital, Germany is ranked second, followed by Sweden and South Korea in third place. (Photo: AFP)

Singapore: Singapore has the world's "most powerful" passport, according to a global ranking topped for the first time by an Asian country with India figuring at 75th position, three notches better than its previous ranking.

According to the 'Global Passport Power Rank 2017' by global financial advisory firm Arton Capital, Germany is ranked second, followed by Sweden and South Korea in third place.

Paraguay removed visa requirements for Singaporeans, propelling Singapore's passport to the top of Passport Index' most powerful ranking with a visa-free score of 159, the company statement said.

Historically, the top 10 most powerful passports in the world were mostly European, with Germany having the lead for the past two years. Since early 2017, the number one position was shared with Singapore, which was steadily going up, it said.

"For the first time ever an Asian country has the most powerful passport in the world. It is a testament of Singapore's inclusive diplomatic relations and effective foreign policy," said Philippe May, managing director of Arton Capital's Singapore office.

India, which was listed 78th last year, has improved its ranking, figuring at 75th position with a visa-free score of 51.

Coming in at last place on the list is Afghanistan, ranked 94 with a score of 22, followed by Pakistan and Iraq at 93 with a score of 26, Syria at 92, having a score of 29 and Somalia at 91 with a score 34.

"Visa-free global mobility has become an important factor in today's world," said founder and president of Arton Capital Armand Arton at the recently held Global Citizen Forum in Montenegro.

"More and more people every year invest hundreds of thousands of dollars in a second passport to offer better opportunity and security for their families," Mr Arton added.

While Singapore quietly climbed the ranks, the US passport has fallen down since President Donald Trump took office. Most recently Turkey and the Central African Republic revoked their visa-free status to US passport holders, the statement said.

Passport Index has become the most popular interactive online tool to display, sort and rank the world's passports.

The index ranks national passports by the cross-border access they bring, assigning a "visa-free score" according to the number of countries a passport holder can visit visa-free or with visa on arrival.

Madras university yet to get surplus grant from centre

Madras university yet to get surplus grant from centre Varsity says it is eligible to get Rs 100 crore fund after it received category-1 sta...