Tuesday, December 12, 2017


நன்றியுள்ள ரிக்ஷாக்காரன்…!

By வழக்கறிஞர் சி.பி. சரவணன் | Published on : 09th December 2017 12:45 PM |


சென்னை மவுண்ட்ரோடு தபால்தந்தி அலுவலகம்! மாலை ஆறு மணி, நீண்ட வரிசை, அதில் வியர்வையால் நனைந்து, காய்ந்து விரைத்து நிற்கும் சட்டை, கோடு போட்ட உள் டவுசர் வெளியில் தெரிய மடித்துக் கட்டிய லுங்கி முகத்தில் சோகம், எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கை இழையோடும் கண்கள், பரபரப்புடன் ஒரு ரிக்‌ஷாகாரர்.

ஒரு வழியாய் மனதை திடப்படுத்திக் கொண்டு உள்டவுசர் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்று கசங்கி சுருண்டு கிடந்த நோட்டுகளை தந்திக் கவுண்டரில் அள்ளிப் போட்டுக் கொண்டே…


”இவ்வளவு தான்யா இன்னிக்கு ரிக் ஷா ஓட்டின கலெக்ஷன், இதை எடுத்துக்க”
“யோவ் நீ என்ன இடம் மாறி வந்துட்டியா, நான் உன் ரிக்‌ஷா ஓனர் இல்ல…!


“அய்ய…துட்டு உன்க்கில்லைபா…தந்தி கொடுக்க”
“எந்த ஊருக்கு?”


அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு” தலைவா கவலைப் படாதே... நாங்கள் உயிருடன் இருக்கும் வரை உன்னை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது” இதுக்கு எவ்வளவு காசு”

“95 ரூபாய் ஆகுது”


“இந்தா எடுத்துக்க..


அலுவலர் அந்த அழுக்கு நோட்டுகளை எண்ணிப் பார்த்து, 78 ரூபாய் தான் இருக்கிறது, இன்னும் 17 ரூபாய் வேண்டும்.


“மீண்டும் பாக்கெட்டுக்குள் கையை விட்டுத் துழாவுகிறார், 10 பைசா கூட இல்லை.
அவருக்குப் பின்னால் வரிசையில் நின்றவர்கள், ரிக் ஷாக்காரரைப் பார்த்து .
“அண்ணாத்தே, காசு இல்லன்னா எடத்தை காலி பண்ணு, நாங்க தந்தி கொடுக்கணும்.”
“நிலை தடுமாறிய ரிக்ஷாக்காரர், சார் கொஞ்சம் பொறுத்திரு, நாலு சவாரியில நீ கேட்ட துட்டை கொண்டு வந்துடுறேன், நீ வூட்டுக்கு போயிடாத, ஆபீஸ எப்ப மூடுவ?!


“எப்பவும் மூட மாட்டோம், இந்த கவுண்டர் 24 மணி நேரமும் திறந்திருக்கும்”
“அது போதும் இன்னும் அரை அவர்ல வந்துட்றேன்... நேரத்தை வீணாக்காமல் வெளியேறுகிறார்.
“நீங்க எந்த ஊருக்குமா தந்தி கொடுக்கணும்..?”


காலிப் பூக்கூடையுடன் க்யூவில் நின்ற பூக்காரப் பெண்மணியிடம் கேட்கிறார். தந்தி அலுவலர்.
”ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு”


ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்திய காசை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல், ஒரு தலைவனின் உயிருக்காக தன்னை வருத்தி தவம் கிடக்கிறார்கள். இப்படிப்பட்ட மனிதர்களை, கொஞ்சம் கேலித்தனத்துடன், பார்க்கிறார் தந்தி அலுவலர்.
அரை மணி நேரத்திற்குள் வருவதாக சென்ற ரிக்ஷாகாரர், ஒரு மணி நேரம் கழித்து வருகிறார்.
“இந்தா சார் நீ கேட்ட 17 ரூபாய்’ என்று


நான்கு ஐந்து ரூபாய் நோட்டுகளை கொடுக்கிறார்...
பரிவுடன் பதிவு செய்து கொண்ட தந்தி அலுவலர்…


ஏம்பா நான் கேட்குறேன்னு தப்பா நினைக்காத. நீ தந்தி கொடுக்கறதுனால என்ன பிரயோஜனம், தலைவர்களெல்லாம் நிறையச் சம்பாதிச்சு ரொம்ப உயர்ந்து இருக்காங்களே, உங்களை மாதிரி தொண்டர்கள் எல்லாம் மூடத்தனமா ஏன் இப்படி செயல்படுறீங்க?


அவுங்க உங்களுக்கு ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களா?


வேறு நேரமாயிருந்தால், ரிக் ஷாக்காரர் தாறுமாறாக செயல்பட்டிருப்பார், ஆனால் நல்லவேளை அந்த நேரத்தில் மட்டும் ரிக்ஷாக்காரர் பொறுமையாக செயல்பட்டார்.


“சார் இது வரைக்கும் ஒரு டீயாவது வாங்கி கொடுத்திருப்பாங்களான்னு கேட்டீங்க, மத்த தலைவர்களைப் பத்தி எனக்குத் தெரியாது. ஆனா என் தலைவன் அப்படி இல்லை, எங்களை மாதிரி ஏழை ஜனங்களுக்கு என் தலைவன் என்ன வேணும்னாலும் செய்வான் உங்களுக்குத் தெரியுமா? என் குடும்பம் மூனு வேளை சோறு துண்றதே என் தலைவனால தான்.’
“என்னப்பா சொல்ற..?


“ ஆமா சார்..! இந்த ரிக் ஷா என் தலைவன் வாங்கிக் கொடுத்தது அந்தத் தலைவனுக்காக என் குடும்பம் ஒருநாள் பட்டினி கிடந்தா, செத்தா போயிடுவோம்..
அதிகம் பேச வரவில்லை……பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு ரிக்ஷாக்காரர் விருட்டென்று கிளம்பி விட்டார்.


படித்த நமக்கே, படிக்காத ரிக்‌ஷாக்காரர் பாடம் கற்பித்துச் சென்றுவிட்டாரே என்று தந்தி அலுவலர் கலங்கித் தான் போனார்.

தேர்தல் நடத்தி பயனில்லை: லக்கானியிடம் தமிழிசை புகார்

Added : டிச 12, 2017 00:05

 
சென்னை: ''தேர்தலை நேர்மையாக நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், தேர்தல் நடத்தி பயனில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

சென்னை, ஆர்.கே.நகர் பா.ஜ., வேட்பாளர், கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகளுடன், நேற்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை, தமிழிசை சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் முறைகேடுகளை பட்டியலிட்டார்.

லக்கானியிடம் தமிழிசை கூறியதாவது: 'காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரிக்கலாம். அதன்பின், அனுமதி கிடையாது' என, அறிவித்துள்ளீர்கள். ஆனால், மாலை, 5:00 மணியில் இருந்து, இரவு, 10:00 மணி வரை, ஊர்வலம் செல்வதாகக் கூறி, வீடு வீடாகச் சென்று, பணம் பட்டுவாடா செய்கின்றனர்.


அனைத்து தெருக்களிலும், மேஜை, நாற்காலி போட்டு, வௌியூர் ஆட்கள் அமர்ந்துள்ளனர். பணப் பட்டுவாடா தாராளமாக நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.

அதற்கு பதிலளித்த ராஜேஷ் லக்கானி, 'உங்களிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை கொடுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என்றார். பின் தமிழிசை, நிருபர்களிடம் கூறியதாவது:
பிரசாரம் ஆரம்பித்த, முதல் நாளில் இருந்தே, முறைகேடுகள் துவங்கி விட்டன. மிக அதிகமாக, பண நடமாட்டம் உள்ளது. வீட்டுக்கு வீடு ஓட்டு கேட்பதற்கு பதிலாக, ரூபாய் நோட்டு கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 'பூத் சிலிப்'பை, தேர்தல் கமிஷன் மட்டும் வழங்கும் என்றனர்; ஆனால், பல கட்சிகள் வழங்குகின்றன. அதை படம் எடுத்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி உள்ளோம். பல இடங்களில், பரிசு பொருட்களாக, சின்னமே வழங்கப்படுகிறது. தேர்தலை நேர்மையாக நடத்த முடியும் என்றால் நடத்துங்கள்; நேர்மையாக நடத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், தேர்தல் நடத்தி பயனில்லை. அனைத்து ஊடகங்களும், 'பணப் பட்டுவாடா நடக்கிறது' என எழுதுகின்றன. ஆனால், பா.ஜ., தவிர, வேறு எந்த கட்சியும், புகார் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பார் கவுன்சிலில் போட்டியிட நிபந்தனை : ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பரிந்துரை

Added : டிச 12, 2017 00:20

சென்ன: 'மூன்று ஆண்டு தண்டனை விதிக்கக் கூடிய, கிரிமினல் வழக்கு உள்ள வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளில் பதவி வகிக்கும் வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, அன்னை மருத்துவ கல்லுாரியின் நிறுவன அறங்காவலர்களுக்கும், புதிய அறங்காவலர்களுக்கும் இடையேயான பிரச்னையில், வழக்கறிஞர்கள் எனக்கூறி, சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக, உயர் நீதிமன்ற நீதிபதி, கிருபாகரனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், சட்ட கல்வியை ஒழுங்குபடுத்தவும், வழக்கறிஞர்கள் தொழிலை முறைப்படுத்தவும், ௨௫ கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, பார் கவுன்சிலுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களுக்கு, கண்டனமும் தெரிவித்தார்.
இவ்வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிறப்பிக்கப்பட்ட உத்தரவு:


நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க, பார் கவுன்சில் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர், எஸ்.ஆர்.ரகுநாதன் அவகாசம் கோரினார்.
மிரட்டிய வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, இரண்டு வழக்கறிஞர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் செந்தில்குமார், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சில பரிந்துரைகளை தெரிவித்துள்ளார்.


அதில், 'சொத்து விபரங்கள், நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின் விபரங்கள், ௧௦ ஆண்டுகளாக ஆஜரான வழக்குகளின் எண்ணிக்கை, நீதிமன்ற உத்தரவுகள், அரசியல் பதவி விபரங்களை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வெளியிட வேண்டும்' என, அவர் கூறியுள்ளார். 


இந்த பரிந்துரைகள் நியாயமாக இருப்பதாக தெரிகிறது. விபரங்களை வெளியிட்டால், போட்டியிடுபவர்கள் பற்றி, வழக்கறிஞர்கள் புரிந்து கொள்ள முடியும்.
மூன்று ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடிய, கிரிமினல் வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அந்த வழக்கறிஞர்களை, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. 


கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்களை தேர்ந்தெடுத்தால், நியாயமான விசாரணைக்கு பாதிப்பு ஏற்படலாம்.
அரசியல் கட்சியில், முக்கிய பதவி வகித்திருந்தாலோ அல்லது வகித்தாலோ, எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டிருந்தாலோ, அந்த வழக்கறிஞர்களையும், பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இதனால், வழக்கறிஞர் தொழிலில், அரசியல் குறுக்கீடு தவிர்க்கப்படும்.


பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட விரும்பும், வழக்கறிஞர்களின் கல்வி தகுதியையும் சரி பார்க்க வேண்டும். சட்டப் படிப்பை முறையாக படிக்கவில்லை என்றால், அவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும். 


வழக்கறிஞர்களின் குடும்ப அட்டை, 'பான் கார்டு, ஆதார்' அட்டையை சரிபார்க்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி, அனில் தவே தலைமையிலான குழுவின் முன், பார் கவுன்சில் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்போது தான், அனைத்து பார் கவுன்சில்களுக்கும் உத்தரவு பிறப்பிக்க, நீதிபதி குழுவுக்கு ஏதுவாக இருக்கும்.


விசாரணை, வரும், ௧௩க்கு, தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஸ்டிரைக் டாக்டர்களுக்கு அரசு நோட்டீஸ்

Added : டிச 12, 2017 06:13

மதுரை: சிறப்பு டாக்டர் நியமனத்தில் விதிமுறை மீறியதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மருத்துவ தேர்வு வாரியம் நவ.,18 ல் நேர்முக தேர்வு மூலம் 465 சிறப்பு டாக்டர்களை நியமித்தது. 'எழுத்து தேர்வு, இடஒதுக்கீடு படியே நியமிக்க வேண்டும்' என்பது விதிமுறை. ஆனால், நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே சிறப்பு டாக்டர்கள் நியமித்ததை கண்டித்து, சென்னையில் நவ.,18ல் இருந்து முதுநிலை சிறப்பு டாக்டர்கள் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை பயிற்சி டாக்டர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்க மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உத்தரவிட்டார். இதையடுத்து, 'சிறப்பு டாக்டர் நியமன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பயிற்சி டாக்டர்கள் என்ற முறையில் அரசிடம் சம்பளம் பெறுகிறீர்கள். 


முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தவறு. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 227 உட்பட 1,250க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் போன்' மறுப்பு : நர்சிங் மாணவி தற்கொலை

Added : டிச 12, 2017 01:25

  பெரம்பலுார்:'ஸ்மார்ட் போன்' வாங்கித் தர பெற்றோர் மறுத்ததால், ரயிலில் பாய்ந்து, தனியார் நர்சிங் கல்லுாரி மாணவி, தற்கொலை செய்து கொண்டார். அரியலுார் மாவட்டம், வேப்பங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர், நல்லதம்பி மகள், நந்தினி, 17; கீழப்பழுவூரில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர், தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி, பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்; அவர்கள் வாங்கி தரவில்லை.
இதனால், தன் அக்கா வைத்துள்ள ஸ்மார்ட் போனை கேட்டுள்ளார்; அவரும் தர மறுத்து விட்டார். விரக்தியடைந்த நந்தினி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், கல்லகம் ரயில்வே கேட் அருகே, சென்னையில் இருந்து, திருச்சி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்
ரேஷன் பொருட்கள் ரத்து என, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி

Updated : டிச 12, 2017 00:58 | Added : டிச 12, 2017 00:46



'ரேஷன் பொருட்கள் மானியம் ரத்து' என, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, மக்களிடம் வதந்தியை ஏற்படுத்தும் விஷமிகள் குறித்து, போலீசில் புகார் செய்ய, உணவு துறை அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.

பிரச்னை இல்லை

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், தமிழகத்தில், அமலுக்கு வந்ததை தொடர்ந்து, ரேஷன் கார்டுகள், பி.எச்.எச்., எனும் முன்னுரிமை கார்டு; என்.பி.எச்.எச்., எனும் முன்னுரிமை அல்லாத கார்டுகள் என, பிரிக்கப்பட்டன. அப்படி பிரிக்கப்பட்டாலும், ஏற்கனவே இருந்தபடியே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், 'வாட்ஸ் ஆப்' செயலியில், 'உங்கள் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டில், புகைப்படத்திற்கு கீழே, பி.எச்.எச்., என இருந்தால், ஒன்றும் பிரச்னை இல்லை. 'ஆனால், என்.பி.எச்.எச்., என இருந்தால், அதை மாற்ற விண்ணப்பம் பூர்த்தி செய்து, ரேஷன் கடையில் தர வேண்டும். 12ம் தேதி, கடைசி நாள்.

'தவறும்பட்சத்தில், மானியம் ரத்தாகும்' என, தகவல் பரவி வருகிறது. இது, பொது மக்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதது என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டாலும், இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும், முன் எப்படி வழங்கப்பட்டனவோ, அதே போல் தரப்படுகின்றன.

குறிப்பாக, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்த பின், நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு, 20 கிலோ இலவச அரிசியும், அதற்கு மேல் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும், கூடுதலாக, 5 கிலோ அரிசி இலவசமாகவும் தரப்படுகிறது.

தவறான தகவல்

அப்படி இருக்கும்போது, சில சமூக விரோதிகள், விண்ணப்பம் என்ற பெயரில், மக்களிடம் பணம் பறிக்க, முன்னுரிமை கார்டுக்கு மாறவில்லை எனில், மானியம் ரத்தாகும் என, தவறான தகவல் பரப்பி வருகின்றனர்.

இது, முற்றிலும் தவறு; அதை நம்ப வேண்டாம். மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல் பரப்பும் விஷமிகளை கண்டறிந்து, போலீசில் புகார் அளிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தேர்தல் பிரசாரமா : மறுக்கும் நடிகர் கவுண்டமணி

Added : டிச 12, 2017 00:09

சென்னை: 'நான் எந்த கட்சியிலும் இல்லை; எந்த கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை' என, நடிகர் கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், டிச., 21ல், நடக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க., வேட்பாளர் மருதகணேசிற்கு ஆதரவாக, அக்கட்சிகளை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நட்சத்திர பட்டாளங்கள் ஆதரவு திரட்டினால், வாக்காளர்களை எளிதாக கவர முடியும் என, அரசியல் கட்சிகள் கணக்கு போட்டு, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, டிச., 14ல், காமெடி நடிகர் கவுண்டமணி, பிரசாரம் மேற்கொள்வார் என்ற தகவல் பரவியது. இது தொடர்பாக, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக, நடிகர் கவுண்டமணி நேற்று, வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக, செய்தி வந்துள்ளது; அது, உண்மைஅல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு அபராதம்

Added : டிச 12, 2017 00:47

போபால்: பெற்றோரை பராமரிக்காத அரசு அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, பெற்றோரின் கணக்கில் செலுத்த, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்காமல், தனியே தவிக்கவிடுவது அதிகரித்து வருகிறது.


இதையடுத்து, மாநில அரசு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தது; அதில் கூறப்பட்டுள்ள தாவது:பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அந்த தொகையை, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, பெற்றோரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும்.
ஒரு பெற்றோரின் நான்கு பிள்ளைகள் அரசு பணியில் இருந்தால், ஒவ்வொருவரிடமும், தலா, 2,000 ரூபாய் வீதம் வசூலித்து, பெற்றோரின் அடிப்படை தேவைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில், 'பெற்றோர் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு மசோதா' ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, வயதான பெற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற சகோதர,சகோதரியரை பராமரிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 10 சதவீதம் பிடித்தம் செய்யவும், அந்த தொகையை, பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் வகை செய்யப்பட்டுஉள்ளது.
கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : டிச 12, 2017 00:13



சென்னை: சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், 4,000 பேர் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. இளைஞர் அணி முன்னாள் செயலர், ஆதி ராஜாராம் ஏற்பாட்டில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், பன்னீர் செல்வம் பேசியதாவது: உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தமிழகத்தின் முன்னேற்றம், உங்கள் கையில் உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மாணவர்களின் பங்கு தான் முக்கியமாக இருந்தது. அதன் காரணமாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 50 ஆண்டுகளாக, காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாத நிலையை உருவாக்கியது. உங்கள் சக்தி, அ.தி.மு.க., வளர்ச்சிக்கு வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி பேசியதாவது: நாங்கள் எல்லாம், கல்லுாரியில் படிக்கும்போதே, அ.தி.மு.க.,வில் இணைந்தோம். பல ஆண்டுகள் உழைத்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், பதவி கிடைக்கக் கூடிய, ஒரே இயக்கம் இது. வேறு எந்த கட்சியிலும், இது கிடைக்காது. மற்ற கட்சிகளில், வாரிசு அடிப்படையில் தான், பதவி கிடைக்கும். தொழில் அதிபர், மிட்டா மிராசுதாரர்கள் தான், அந்த கட்சிகளில் பதவிக்கு வர முடியும்.சாதாரண தொண்டனும், உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய கட்சி, அ.தி.மு.க., மட்டுமே. அ.தி.மு.க.,வில் இணைந்து உள்ளதால், உங்களுடைய வருங்காலம் பிரகாசமாக இருக்கும். கட்சிக்கு உழைத்து, விசுவாசமாக இருந்தால், நீங்கள் நினைக்கும் பதவி, உங்களை தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சவுதியில் 2018 முதல் சினிமாவுக்கு அனுமதி

Added : டிச 12, 2017 02:19 |



  ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. '2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, பதவியேற்ற பின், பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில், தேசிய தினத்தில், ஆண்களும், பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த, சினிமா ஒளிபரப்புக்கு, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் முதல், படங்கள் திரையிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் மத்திய அரசு அறிவிப்பு



வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

டிசம்பர் 12, 2017, 05:30 AM

புதுடெல்லி,

நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பாராளுமன்ற கூட்டுக்குழு இம்மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.

விரைவில் தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயத்தில், இதில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்று பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும்போது, அதை சரி செய்வதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

இதற்காக, ‘தீர்வு கழகம்’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக்கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல் தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்பு தொகையும் ‘சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம்‘ மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்த புதிய மசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்துசெய்ய வழிவகுக்கிறது.

இதனால், பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் திவால் ஆவதை தடுக்க, பொதுமக்களின் பணம் எடுத்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–

எப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களையும் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. வங்கிகளை பலப்படுத்துவதற்காகவே, வங்கிகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்.

இது, வங்கிகளை பலப்படுத்துவதற்குத்தான். இதற்காக, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று அர்த்தம் அல்ல.

ஒருவேளை, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், வங்கிகளில் பொதுமக்கள் போட்டு வைத்துள்ள பணத்துக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். அதில் மத்திய அரசு மிகத்தெளிவாக உள்ளது.

மேலும், இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. அக்குழு என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Monday, December 11, 2017

Award for diabetologist 

Special Correspondent 
 
Chennai, December 11, 2017 00:00 IST
 



Senior diabetologist V. Seshiah became first Indian to be honoured with the Lifetime Achievement Award at the International Diabetes Federation Congress in Abu Dhabi recently. The federation has members from 170 countries. Dr. Seshiah is the Pro-Chancellor of Maher University and founder of Dr. V. Seshiah and Dr.V. Balaji Diabetes Care Centre. He is a professor with Tamil Nadu Dr. MGR Medical University.
ஓய்வூதியர்களை அலைக்கழிக்காதீர்கள்... தமிழக அரசுக்கு வேண்டுகோள்

By தி. வேணுகோபால் | Published on : 11th December 2017 02:37 AM |



தமிழக அரசுப் பணிநிறைவுற்று ஓய்வூதியம் பெறுவோர், அவரவர் விருப்பப்படி, நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தோ அல்லது சென்னை நகரிலுள்ள ஓய்வூதிய அலுவலகம் (Pension Pay Office) அல்லது மாவட்டங்களிலுள்ள அரசுக் கருவூலம் வழியாகவோ தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். 

சென்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது மாவட்டக் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியமும், அவரவர்களின் வங்கிக் கணக்கில் உஇந முறையில் செலுத்தப்பட்டு, தேவைப்படும்போது பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறும்முறை கடந்த 1988-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பணிநிறைவு பெறும் அரசு ஊழியருள், நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போரே அதிகமாகும். பொதுத்துறை வங்கிகளின் சேவையைப் பெறுவது எளிதானதாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆண்டிற்கொருமுறை ஓய்வூதியர்கள் தாங்கள் உயிரோடிருப்பதற்கான சான்றிதழைத் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கருவூலம் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கியெனில் நவம்பர் மாதத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட வங்கிக் கிளையில் நேரடியாக ஓய்வூதியம் பெறும் ஒருவர் மிக எளிதாக இதனைச் சமர்ப்பித்துவிட முடியும். ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அவர் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையில் ஓய்வூதியம் நேரடியாகப் பெறுவோர் மிகச் சிலரே. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓய்வூதியரிடையே அவர் சிரமப்பட வேண்டும்.


ஓய்வூதியம் தொடர்பான குறைகளைச் சம்பந்தப்பட்ட வங்கிக்கிளை மேலாளரிடம் தெரிவித்துத் தீர்வு காண்பது எளிது. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை எதிர்பார்க்கவே இயலாது. அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்படுவது உறுதி.


கடந்த 2017 ஜூன் மாதத்தில் ஓர் ஓய்வூதியர் தன் உயிர்த்திருக்கும் சான்றை சமர்ப்பித்தபோது அச்சான்றிதழின் நகலில் அதனைப் பெற்றுக் கொண்டதற்கான ஏற்பறிப்பைத் தர அங்கிருந்த அரசு ஊழியர் மறுத்துவிட்டார்.


நிலைமை இவ்வாறிருக்க தற்போது அரசு, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை ரத்து செய்து அனைவருமே ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகவே ஓய்வூதியம் பெற வேண்டுமெனவும், இம்முறை இவ்வாண்டு இறுதிக்குள் அதாவது 31.12.2017-க்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆணை வழங்கியுள்ளது. (அரசாணை எண்.268, நிதித் (ஓய்வூதியம்) துறை நாள் 18.09.2017).
இவ்வாணை ஓய்வூதியர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இம்மாற்றத்திற்கான காரணங்களாக மேற்குறித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள குறைகள் பின்வருமாறு:


1. வங்கி ஊழியர்கள் ஓய்வூதிய விதிகள் குறித்து அறிந்திராததால், அவ்வப்போது அவர்கள் ஓய்வூதிய அலுவலகம் (அ) கருவூலகங்களிடம் விளக்கங்கள் கோருகின்றனர். ஓய்வூதிய ஆவணங்கள் வங்கிகளிடம் உள்ளதால் அவற்றைப் பெற்று விளக்கங்கள் வழங்குவது சிக்கலான நடைமுறையாக உள்ளது. 


2. ஓய்வூதியர் குடும்ப நலத் தொகைப் பிடித்தம் தொடர்பான விவரங்களை வங்கிகள் உரிய நேரத்தில் வழங்காததால், அவ்விவரங்களை ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்புவதில் தாமதம் நேருகிறது. 


3. உயிரோடிருப்பதற்கான சான்று ஓய்வூதிய அலுவலகம் மற்றும் கருவூலகங்களால் ஏப்ரல் - ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கிகளால் நவம்பர் மாதத்திலும் பெறப்படுவதால் ஓய்வூதியரிடையே குழப்பம் ஏற்படுகிறது. 


4.மாதந்தோறும் ஓய்வூதியச் செலவினம் மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கல், கூடுதல் ஓய்வூதியச் செலவினம் ஆகியவற்றைப் பல்வேறு வங்கிகளிடமிருந்து பெறுவதில் சிரமம் நேருகிறது. அவ்வாறே ஓய்வூதிய மிகைப் பற்றுப் பிடித்தம் மற்றும் வழங்கப்படாத ஓய்வூதியம் குறித்த விவரங்களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளன. 


5. ஓய்வூதியர் இறந்த பிறகும் அவருடைய கணக்கில் உள்ள வாங்கப்படாத ஓய்வூதியத் தொகை வங்கிக் கடனுக்குக் கழிக்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும். இறந்த பிறகு ஓய்வூதியரது கணக்கில் சேர்க்கப்படும் ஓய்வூதியத் தொகை அரசுக்குரியதாகும்.
மேற்கூறிய பிரச்னைகள் யாவும் நிர்வாகப் பிரச்னைகளாகும். அவை சில சிறு நடைமுறை மாற்றங்களின் மூலம் சரி செய்யப்படக் கூடியவையே. இனம் 5-இல் சொல்லப்பட்டுள்ள பிரச்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகப் பெறும் ஓய்வூதியர் இனத்திலும் நேரக்கூடியதே. ஓய்வூதியர் இறந்தது பற்றிய தகவல் கிடைக்குமுன் அவருடைய வங்கிக் கணக்கில் உஇந மூலமாகக் கருவூலம் செலுத்தும் தொகையும் வங்கியால் ஓய்வூதியரின் கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படுவது இயல்பான நடைமுறையே. எனவே அதற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை மாற்றுவது தீர்வாகாது. 


முப்பதாண்டுக்கால நடைமுறையில் உள்ள இம்முறையை மாற்ற வேண்டுமென ஓய்வூதியர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கங்களோ கோரிக்கை ஏதும் முன்வைக்கவில்லை. இம்முறை தங்களுக்குச் சிரமங்கள் தருவதாக ஓய்வூதியர்கள் யாரும் கூக்குரல் எழுப்பவில்லை. மாறாக ஆண்டுதோறும் பொதுத் துறை வங்கிகளிடம் நேரடியாக ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போர் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்கிறது.
மேலும் தற்போது அரசு ஆணை வழங்கியுள்ள நடைமுறை மாற்றத்தால் எழும் நிர்வாகப் பிரச்சினைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை.


மேற்கூறிய அரசாணையிலேயே, தற்போது சுமார் 79,114 ஓய்வூதியர்கள் நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிச்சுமை முழுவதும் இப்போது ஓய்வூதிய அலுவலகத்திற்கும் கருவூலங்களுக்கும் மாற்றப்படுகிறது. இப்பணியை மேற்கொள்ள அங்குப் பணியாளர்கள் உள்ளனரா அல்லது கூடுதல் பணியாளர்கள் வழங்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காத சூழ்நிலையில் அரசு ஏன் இப்பணிச் சுமையை ஏற்கத் துடிக்கிறது என்பது தெரியவில்லை.


அரசாணையில் கூறப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், நடைமுறையை மாற்றுமுன் ஓய்வூதியர்களின் விருப்பத்தை அறிவதும் அரசின் கடமையாகும். ஓய்வூதியர்கள் விரும்பாத நிலையில் இந்நடைமுறை மாற்றம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதோடு அவர்களையும் மூத்த குடிமக்களையும் போராட வீதிக்கு அழைத்து வரும் என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

பணி ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் (காவல்துறை).

No night shift for station masters at three suburban stations could pose security risk

By B Anbuselvan  |  Express News Service  |   Published: 11th December 2017 02:00 AM  |  

CHENNAI: If you were to visit suburban railway stations at Saidapet, Guindy or Meenambakkam at late night, chances are you will not find any railway personnel, certainly not the station master. For, the Chennai division of the Southern Railway has just withdrawn night shift for station masters for the three stations.

It means between 10 pm and 6 am, the three stations will have no station masters. They will work in two shifts alone: 6 am to 2 pm and 2 pm to 10 pm.

Trains ply between Chennai Beach and Tambaram from 3.55 am to 11.59 pm. As many as 34 train services pass through the intermediate stations between 10 pm to 6 am on both directions.
Blame it on the staff shortage. A few days ago, the transportation branch of Chennai division transferred station masters in the three stations and posted them in the existing vacancies of additional station master at Pallavaram suburban station.

However, suburban stations between Chennai Beach and Tambaram will still be manned by junior level station masters in three shifts each day.

People who got to know about the decision were shocked as it would pose a huge risk to trains and commuters. If the trains do not run as per schedule at night, commuters will not be informed about it in these three stations. This could increase the risk of commuters safety, especially women passengers, said a section of passengers.

N Masilamani, former member of Chennai divisional rail users consultative committee, said, “Guindy and Meenambakkam stations are well patronaged even during night hours. In the event of any emergency, there will be no one to guide them. It also increases the risk of accidents as passengers movements will not be monitored when the train leaves the station,” he said.
He added that many stations, including C and D grade stations in Southern Railway, function without night duty station masters due to the lack of train operations. “When there are train services, railway should deploy a person to monitor its operation,” he added.

Station masters oversee the arrival and departure of trains by monitoring work in the signal and section engineering department, clear trains for operations, alert the next station master in the event of emergencies and handle passenger complaints.

About five lakh passengers commute in 236 train services in the Chengalpattu - Tambaram - Chennai Beach section each day.
WhatsApp Beta gets Private replies, Picture in Picture mode and more 

DECCAN CHRONICLE.

Published Dec 10, 2017, 7:45 pm IST

The company has now rolled out some new features on the beta version which will soon make their way to the stable version of the app.



The PiP feature enables users to multitask while taking a video call. The app now has a new icon that will prompt when a user is taking a video call. After selecting the icon, a picture in picture mode will start in a new window. Users can also resize the video window.

Facebook-owned WhatsApp keeps updating its mobile app with new features regularly. The company has now rolled out some new features on the beta version which will soon make their way to the stable version of the app.

The new features are as follows:

Picture in Picture (PiP) mode

The PiP feature enables users to multitask while taking a video call. The app now has a new icon that will prompt when a user is taking a video call. After selecting the icon, a picture in picture mode will start in a new window. Users can also resize the video window.

Private replies in groups

This feature will allow a user to reply privately to a group message. Now, a person in a group will get an option to message a particular member which other members can’t see. This feature was spotted in the WhatsApp Web version.

New invite via link shortcut

The invite via link feature is already available for the iOS app but will now make its way to the Android platform. It enables group admins to send a link to other users so they can join the group directly.

Tap to unblock user

The new build will provide an option wherein users can unblock anyone by just tapping and holding any contact and send him/her a message.

Shake to report

This is an interesting feature that allows users to report problems just by shaking the device which opens the Contact Us section of the app. The feature is available in the WhatsApp beta version number 2.17.437.
காலத்தின் வாசனை: தெருவில் இருந்து மறைந்தவர்கள்

Published : 10 Dec 2017 09:31 IST

தஞ்சாவூர்க் கவிராயர்




வீட்டில் காணாமல் போனவர்களைத் தெருவில் தேடலாம். ஆனால் தெருவிலிருந்தே காணாமல் போனவர்களை எங்கே என்று தேடுவது?

இப்போதெல்லாம் உப்பு வண்டிக்காரரை தெருவில் பார்க்கவே முடியவில்லை. அவர் காணாமலே போய்விட்டார். கவனித்தீர்களா? கடைகளில்தான் அழகான பாக்கெட்டுகளில் உப்பு கிடைக்கிறதே. இனிமேல் அவரெல்லாம் எதற்கு?

ஆனால் உப்பு வண்டிக்காரர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்று சொல்லிக்கொள்ளவே ஆசை. உப்பு வண்டியை ஒற்றை ஆளாக இழுத்து வருவார் அவர். ஏதோ அவரே கடலுக்குள் மூழ்கி அள்ளிக்கொண்டு வருவது மாதிரி!

தயிர், மோர் விற்கிற பெண்மணியும் காணோம். அவள் விற்கிற மோருக்கென்று தனிவாசனை. சுவரில் அவள் தீற்றிப்போகும் கோடுகள் - மோர்க்கணக்கு!

காலை 11 மணிக்கு வெறிச்சோடி கிடக்கும், தெருவின் மோனத்தைக் கலைத்தபடி ஒலிக்கும் ‘கிளி ஜோ...ஸீயம்’ என்ற குரல் இப்போதெல்லாம் கேட்பதில்லை. சமீபத்தில் எங்கள் தெருவில் அத்திப்பூத்தாற்போல் வந்த கிளிஜோசியக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன்

“தோ இந்தக் கூண்டில் இருக்கிற ராகினியும், பத்மினியும் சீட்டு எடுத்துக் குடுத்தே பழக்கப்பட்டது. தொறந்து வெளியே பறக்கவிட்டாலும் என்கிட்டேயே வந்துரும்! அதுங்கமாதிரிதான் நானும். எனக்கு வேற வேலை தெரியாது! அப்பாவுக்கு குடுத்த சத்தியத்தை மீற முடியாதுங்க ஐயா... வேற வேலைக்கு போவப்புடாது. இது பரம்பரைத் தொழில் ஸாமி. விட்ற முடியுமா?!”

ஆமோதிப்பது மாதிரி கிளிகள் கீ...கீ...என்று கத்தின!

பல வருஷங்களுக்கு முன்னால் கவிஞர் நா. விச்வநாதன் எனக்காகவே எழுதிய ஜோசியக்கிளி கவிதை நினைவுக்கு வருகிறது.

‘நடைபாதைக் கிளிகளிடம்/ சேதி கேட்டு நிற்கும் சோகத்தில்/ முனகல் வாய்ப்பாடு/ மறந்து போகாது கோபாலா!/ திறந்து விடு கூண்டை/ அவை பறந்து போகும் உனக்கான/ சேதிகளைச் சொல்லிவிட்டு!’

“இதற்கு அர்த்தமென்ன?” என்று கேட்டேன். “அட போடா, ஆபீஸ் குமாஸ்தா!” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி போய்விட்டான். தெருவில் தான் கண்ட சாதாரண மனித ஜீவன்களைப் பார்த்து வசன கவிதைச் சித்திரத்தை தீட்டுவான் பாரதி.

‘பாம்புப்பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? பாம்புப்பிடாரன் மூச்சிலே பிறந்ததா? இது சக்தியின் லீலை பொருந்தாத பொருள்களை பொருந்தவைத்து அதிலே இசை உண்டாக்குதல்! தொம்பைப்பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன. ஜரிகை வேணும் ஜரிகை என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான். இவை எல்லா உயிரிலும் சக்தி விளையாடுகிறது.’

குடுகுடுப்பைக்காரர் பாடிக்கொண்டு போவதை புதிய கோணாங்கி என்ற பாடலாக வடித்துவிடுவான் பாரதி.

தெருவில்தான் எத்தனைவிதமான பிச்சைக்காரர்கள்! அன்னக்காவடி, ராப்பிச்சைக்காரர்! ஒருநாள் பாரதி தன் வீட்டு மொட்டை மாடியிலே உலாவுகிறான். இரவு வேளை தெருவிலே ராப்பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி பாடிக்கொண்டு போகிறாள். ‘மாயக்காரன் அம்மா - கண்ணன்/ மோசக்காரன் அம்மா.’ மனசுக்குள் பாஞ்சாலி சபதம் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதிக்கு ராப்பிச்சைக்காரியிடம் ராகம் கிடைத்து விடுகிறது. பாடல் வரியொன்று பீறிட்டுக் கிளம்புகிறது.

‘காய் உருட்டலானார் - சூது/ களி தொடங்கலானார்/ மாயமுள்ள சகுனி - பின்னும்/ வார்த்தை சொல்லுகின்றான்…’

பாடி முடித்த பாரதி செல்லம்மாளைக் கூப்பிட்டு ராப்பிச்சைக்காரப் பெண்ணின் வயிறு நிறைய சாப்பாடுபோட்டு அனுப்பிவைக் கிறான்!

அம்மி கொத்துகிறவர், ஈயம் பூசுகிறவர், குடை ரிப்பேர்காரர், சாணை பிடிக்கிறவர் - இவர்களுக்கெல்லாம் தொழிலுக்கேற்ற பிரத்யேக குரல் தொனிகள் இருக்கின்றன. குச்சி ஐஸ் விற்கிறவர், பலூன்விற்கிறவர், ஜவ்வுமிட்டாய்க்காரர் (மீந்த ஜவ்வில் வாட்சும் மோதிரமுமாய் கட்டிவிடுவதை மறக்க முடியுமா?).

கூடை நிறைய வெள்ளை முறுக்கு விற்றுக்கொண்டு வரும் பாட்டி... அதன் பாம்படம் தொங்கும் பெரிய காதுகள்...முறுக்குத்தான் என்ன ருசி! ஜல் ஜல் என்று சலங்கை ஒலிக்க தெருவில் உடம்பில் சாட்டையால் சுளீர் சுளீர் என்று அடித்துக்கொண்டு கையிலும் வயிற்றிலும் வரிவரியாய் ரத்தக் கோடுகளுடன் வந்து காசு கேட்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? நம் கண்களில் ரத்தம் வரும்! ஒரு நாள் தாங்க முடியாமல் கேட்டேவிட்டேன்.

“ஏய்! நிறுத்துப்பா! காசு கொடுத்துவிடுகிறேன்! வயிற்றில் இப்படி ரத்தம் வரும் அளவிற்கு அடித்துக்கொள்கிறாயே ஏன்?” புகையிலை காவி ஏறிய தொங்கு மீசை துடிக்க அந்த மனிதர் சொன்னார்:

“வயித்துக்குத்தான் ஸாமி!”

தஞ்சாவூர்க்கவிராயர். தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
'உங்கள் மகன், மகளிடம் மனம் விட்டு எப்போது பேசினீர்கள்?'- மாணவர்களின் தற்கொலையை சாகடிப்போம்

Published : 09 Dec 2017 14:26 IST

வி.ராம்ஜி
 


ஒரு வீடு, குழந்தைகளைக் கொண்டுதான் இயங்குகிறது. குழந்தைகளே நம் உலகமாகிப் போகிறார்கள். குழந்தைகளின் சந்தோஷமே, நம் குதூகலம் என்றாகிவிடுகிறது. குழந்தைகள்தான் நம் சொத்துகள். சொத்துகளைச் சேர்க்க வேண்டும் என்பதும் குழந்தைகளுக்காகத்தான்!

ஆனால் கண்களை விற்று ஓவியம் வாங்கிக் கொண்டிருக்கிறோம். கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கிறோம். ஒரு மிகப்பெரிய விபத்துக்குப் பிறகு, கொட்டாவி விட்டு, விழித்துக்கொள்ளும் அரசாங்கத்தைப் போல், நாமும் மெத்தனம் காட்டுகிறோம்.

சமீபகாலங்களில், மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை வெறும் சம்பவங்களாகக் கடந்துபோக முடிவதில்லை. இது ஒட்டுமொத்த மாணவர்களின் மனோநிலை. இந்த மனசை நிலைப்படுத்துகிற வித்தையை, திடப்படுத்துகிற மென்சொல்லை, எந்த மென்பொருள்களும் கொடுத்துவிடாது. அது நம்மில் இருந்துதான் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். இங்கே நாம் என்பது... பெற்றோரைச் சொல்கிறேன். மற்றோரையும் துணைக்கு வைத்துக் கொள்வோம். ஆனால் பெற்றோரில் இருந்துதான் மாணவர்களாகிய பிள்ளைகளைக் காக்கும் பொறுப்பைத் தொடங்கவேண்டும்.

செல்போனே தாத்தா, சேனல்களே பாட்டி என்று வளருகின்றனர் நம் குழந்தைகள். அவர்களிடம் பேச நமக்கு நேரமில்லை என்கிறோம். அவர்கள் பேசுவதையும் கேட்பதில்லை நாம். என்ன செய்வது... டி.வி. பார்ப்பதற்கு, முகநூலில் நுழைந்து தன்னையே மறப்பதற்கு, இணையதளத்தில் மூழ்கிக் காணாமல் போவதற்கு ஒதுக்குவது போல், நேரத்தை நம் குழந்தைகளுடன் ஒதுக்குவோம். அதற்கென நேரம் ஒதுக்குவோம். இங்கே... காலம் பொன் போன்றது என்பதையும் குழந்தைகள் பொன்னைவிட உயர்ந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

’ஒருமணி நேரம் டி.வி.யை ஆஃப் செய்துவிட்டு இருக்கமுடியுமா உங்களால். நல்லது. கைகொடுங்கள். உலகின் அதிசயக்கத்தக்க மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

வீட்டில், உங்களுக்கும் உங்கள் செல்போனுக்கும் இடையே பத்துஇருபது மீட்டர் இடைவெளியாவது இருக்குமா. ரொம்ப ரொம்ப நல்லது. இன்னும் வியக்கத்தக்க மனிதர் நீங்கள். உங்கள் மகனிடம் அல்லது மகளிடம் பேசக் கிடைக்கிற இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். அவர்கள் முகத்தில் ஒளி படர்வதையும் மனதில் அழுந்திக் கிடந்த ஏதோவொன்று எங்கோ போய்விட்டதையும் அவர்கள் மட்டும் அல்ல... நாமே கூட உணரமுடியும்.

இனிய பெற்றோர்களே... அன்பு நண்பர்களே... உங்கள் குழந்தைகளை, அதாவது டீன் பருவத்துப் பிள்ளைகளை பக்குவமாய் பழகி, நாலாவிதங்களையும் நாட்டுநடப்புகளையும் சொல்லிப் புரியவைத்தலே தந்தையின் லட்சணம் என்பதை முதலில் உணருங்கள். கேட்ட பொருளை வாங்கிக் கொடுப்பதோ, கேட்காத ஆனால் விரும்பிய பொருளை வாங்கித் தருவதோ பிள்ளை வளர்ப்பின் பாசநேச, பிரிய அன்புக்கானவை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இங்கேதான் நாமும் சறுக்கி, நம் குழந்தைகளையும் சறுக்கச் செய்கிறோம்.

மனநல ஆலோசகர்கள் பலரிடம் பேசினேன்.

சின்னச் சின்ன டிப்ஸ்... உங்களுக்காக!

1. வெற்றி பெற்றவர்களின் கதைகளைச் சொல்லுங்கள். தப்பே இல்லை. அதுதான் தன்முனைப்புடன் அவர்களை வெற்றிச் சிந்தனைக்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும்.

2. அதேசமயம், தோல்வி அடைந்தவர்களைச் சொல்லுங்கள். ஏனென்றால், தோற்றுப்போனவர்களின் வலிகளும் வேதனைகளும்தான் இன்னும் இன்னுமான பாடங்கள்; வாழ்க்கைக்கான வேதங்கள்!

3. ‘கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படு’ என்றொரு பழமொழி உண்டு. ஆகவே, கஷ்டப்பட்டுப் படித்தால்தான், கஷ்டப்பட்டு வேலை செய்தால்தான், கஷ்டப்பட்டு திறமையுடன் இருந்தால்தான், கஷ்டப்பட்டு வளர்ந்தால்தான், கஷ்டப்படாமல் பின்னாளில் வாழமுடியும் என்பதை உணர்த்துங்கள்.

4. ‘மனம்விட்டுப் பேசினேன்’ என்பதே இப்போது இல்லை. எவரிடமும் நாம் மனம்விட்டுப் பேசுவதே இல்லை. இது தருகிற இறுக்கம், மிகக்கொடியது. மனதை நொய்மைப்படுத்திவிடும். மகனிடமும் மகளிடமும் உள்ள இறுக்கம் தளர்த்துங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். ஒருகட்டத்தில்... காது மட்டும் கொடுங்கள். அவர்கள் பேசுவார்கள். கேளுங்கள்.

5. வீட்டில் விஷமம் செய்யும் குழந்தைகளிடம் ‘இரு இரு... உங்க மிஸ்கிட்ட வந்து சொல்றேன்’ என்கிறோம். பள்ளியில் ஏதேனும் குறும்பு செய்தால், ‘இரு இரு... உங்க அப்பாஅம்மாவை வரச்சொல்லி, ஒருநாள் சொல்றேன் பாரு’ என்கிறார்கள் ஆசிரியர்கள். ‘விசையுறு பந்தினைப் போல்’ உடலையும் மனதையும் வளர்க்க குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். பந்து மாதிரி உதைத்துக் கொண்டே இருந்தால் என்னாவார்கள்?

6. நாம் நடப்பதிலும் பேசுவதிலும்தான் நம் குழந்தைகளின் தெளிவு இருக்கிறது. நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள். முக்கியமாக, ஆசிரியர்கள் பற்றி கேலியும் கிண்டலுமாகப் பேசினால், அவர்களுக்குள் ஆசிரியர் குறித்த மரியாதை மட்டும் அல்ல... உங்களைப் பற்றிய மரியாதையும் கூட போய்விடும். ஜாக்கிரதை.

7. அதிக மார்க் என்பதே இலக்காகிப் போனதுதான், இந்தக் கல்வித் தொழிலின் மூலதனம். மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அவ்வளவு ஏன்... படிப்புக்கும் வாழ்க்கைக்கும் கூட சம்பந்தமில்லாமல், ஜெயித்தவர்கள் பலர் உண்டு என எடுத்துச் சொல்லுங்கள்.

8. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் மகன், ஆறாம் வகுப்பு படிக்கிறான். மாதாந்திரப் பரிட்சையில், நூத்துக்கு 94 மார்க் எடுத்திருந்தான். ஆனால் அவனை வீட்டு வாசலிலேயே இரண்டுமணி நேரம் நிற்கவைத்துவிட்டார் அவனுடைய அம்மா. ‘என்னங்க இது... தொந்நூத்தி நாலு மார்க் எடுத்திருக்கான். அவனைப் போய் இப்படி பண்றீங்களே..’ என்று கேட்டேன். ‘இப்ப படிப்புல நாட்டம் குறைஞ்சிருச்சு சார். போன தடவை தொந்நூத்தி ஆறு எடுத்திருந்தான். இப்ப 98 எடுக்கறதா ப்ராமிஸ் பண்ணிருந்தான். அதான் இவனுக்கு இந்தத் தண்டனை’ என்றார் சற்றும் குற்ற உணர்ச்சியே இல்லாமல்! இதுபோன்ற தவறை தயவுசெய்து செய்துவிடாதீர்கள்.

நாம் எடுத்த மதிப்பெண்களையும் நாம் செய்த குறும்புகளையும் மனசாட்சியைத் தொட்டு நினைவுப்படுத்திக் கொண்டால், ‘இதெல்லாம் சப்பை மேட்டர் நமக்கு’ என்பது நமக்கே புரியும்.

9. பள்ளியின் சூழல் அறிந்துவைத்திருக்கிறோமா. ஆசிரியர்களின் மனோநிலையைத் தெரிந்து கொண்டிருக்கிறோமா. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன், பஸ் டிரைவர்களின் பெயரோ, அவரின் வீடோ, அவரின் குடும்பச் சூழலோ தெரியுமா நமக்கு. தெரிந்து கொள்ளுங்கள். அதை குழந்தைகளிடம் பேசப் பேச தெளிவு கிடைக்கும். முக்கியமாக... உங்களுக்கும்!

10. முன்பெல்லாம் நம்மை அடி வெளுத்தெடுப்பார்கள் அப்பாவோ அம்மாவோ! விசிறி மட்டையால் விளாசித் தள்ளிவிடுவார்கள். பெற்றோரிடம் அடிவாங்கியதைச் சொல்ல, ஐம்பது கதைகள், அழகிய திரைக்கதையுடன் ஜோராக இருக்கும். ஆனால் அத்தனை அடியையும் திட்டுகளையும் வாங்கி வளர்ந்து இன்றைக்கு ஜெயித்திருக்கிறவர்கள்தான் நாம். ஆனால் நம் குழந்தைகளிடம் ஏதேனும் ஒரு விஷயத்துக்காக, கொஞ்சம் சுள்ளென்று ஒரேயொரு வார்த்தை சொன்னாலே நொறுங்கிப் போய்விடுகிறார்களே... உணர்ந்திருக்கிறீர்களா? அடித்துவிட்டது போல், அடித்து உதைத்து வெளுத்தெடுத்தது போல், கரகரவென கண்ணீர்விட்டு, அரைமணி நேர சீரியலைக் கடந்தும் அழுதுகொண்டே இருப்பதை என்றைக்காவது யோசித்தது உண்டா?

இதற்கு முக்கியக் காரணம்... நாம் அவர்களிடம் எப்போதாவது பேசுகிறோம். அப்படி எப்போதாவது பேசுகிறது திட்டுவதை, அந்த ஒரெயொரு சொல்லை, அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஆக, தவறு அந்த ஒரேயொரு சொல்லில் அல்ல. ஒரேயொரு சொல்லை மட்டுமே அவர்களுடன் எப்போதாவது பேசுவதுதான் இங்கே சிக்கல்!

11. அதனால்தான், ஆசிரியர்கள் திட்டினால் தாங்கமுடியவில்லை. வீட்டில் திட்டினால் ஏற்கமுடியவில்லை. பொசுக்கென உடைந்துவிடுகிறார்கள். வீட்டைவிட்டு, பள்ளியைப் புறக்கணித்து, எங்கோ செல்கிறார்கள். காணாது போகிறார்கள். சிலர், இன்னும் நொந்துபோய், தற்கொலை முடிவுக்கும் ஆளாகிறார்கள்.

முதலில் நம் வீட்டில் இருந்துதான் சிக்கல்களையும் சிடுக்குகளையும் களைந்தெடுக்க வேண்டும். ‘டீச்சர் சரியில்லை சார். எப்பப் பாத்தாலும் சிடுசிடுன்னு இருக்காங்க’ என்று சொல்வதெல்லாம் எஸ்கேபிஸம். தப்பிக்க வேண்டாம். பழியைப் பிறர் மீது போட வேண்டிய அவசியமில்லை. இவற்றையும் குழந்தைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

‘இந்த உலகமே நம்மள எதிர்த்தாலும், நமக்கு அப்பாவும் அம்மாவும் மிகப்பெரிய துணை’ என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களே செய்த தவறை, அவர்களே சொல்லும் அளவுக்கு, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான தொடர்பு இருக்கட்டும். தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடுவதுதான் இங்கே பிரச்னை வேர்பிடிக்கக் காரணம்!

வேர் விட்டு வளர வேண்டிய விதைகள் நம் குழந்தைகள். கண்ணீர் விட்டு வளர்த்து, ஆளாக்குகிற முனைப்பெல்லாம் சரிதான். அந்த விதைக்கு உரமிடுங்கள். உரமூட்டுங்கள். வலிமையுள்ளதே எஞ்சும்! வலிமைமிக்கவர்களாக குழந்தைகளை உருவாக்குவதும் ஒருவகையில்... அறம் என உணருங்கள்; உணர்வோம்.
சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் : பயணியர் கடும் அதிருப்தி

Added : டிச 11, 2017 00:37

சரக்கு ரயிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், காரைக்கால் - திருச்சி பயணியர் ரயில், தாமதமாக இயக்கப்படுவதாக, பயணியர் குறை கூறுகின்றனர்.

காரைக்கால், நாகூர், நாகை, திருவாரூர் ஆகிய நகரங்களில் இருந்து, கரூர், ஈரோடு, சேலம், திருப்பூர் மற்றும் கோவைக்கு, தொழில் ரீதியாகவும், வேலைக்காகவும், தினமும் அதிகம் பேர் செல்கின்றனர். இவர்கள், காரைக்காலில் இருந்து, திருச்சிக்கு இயக்கப்படும் பயணியர் ரயிலில், தஞ்சாவூர் சென்று, அங்கிருந்து, கோவை செல்லும், ஜன சதாப்தி ரயிலில் பயணம் செய்வது வழக்கம். காரைக்கால் - தஞ்சாவூர் பாசஞ்சர் ரயில், காரைக்காலில், நண்பகல், 12:30 மணிக்கு புறப்பட்டு, தஞ்சாவூருக்கு, மாலை, 3:35 மணிக்கு சென்றடைகிறது. 


மயிலாடுதுறையில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், தஞ்சையில், இருந்து, 3:45 மணிக்கு புறப்படுகிறது. பயணியர் ரயில், 10 நிமிடம் முன்னதாக, தஞ்சாவூர் நிலையம் செல்வதால், இப்பயணியர், கோவை ரயிலை பிடித்து, பயணம் செய்ய வசதியாக உள்ளது. காரைக்கால் துறைமுகத்தில் இருந்து, தஞ்சாவூருக்கு வழியாக, சரக்கு ரயில் போக்குவரத்து அதிகம் உள்ளது. வருவாய்கருதி, சரக்கு ரயில்களை தாமதமின்றி இயக்கு ரயில்வே நிர்வாகம் ஆர்வம் காட்டுகிறது. இதனால், காரைக்கால் - திருச்சி பயணியர் ரயில், நாகை ரயில் நிலையத்தில், பல நாட்களில், 30 நிமிடங்கள் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. தஞ்சாவூருக்கு தாமதமாக செல்வதால், ஜன சதாப்தி ரயிலை பிடிக்க முடியாமல், பயணியர் தவிக்கும் நிலை தொடர்கிறது. 'பயணியர் ரயிலை தாமதமின்றி இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், ரயில் மறியல் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும்' என, பயணியர் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -
மனித உரிமைகள் அறியாத 86 சதவீத மூத்த குடிமக்கள்

Added : டிச 11, 2017 05:10 



 புதுடில்லி: நாட்டில் 86 சதவீத மூத்த குடிமக்கள் தங்களின் மனித உரிமைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இது குறித்து ஏஜ்வெல் பவுண்டேசன் அமைப்பின் சேர்மன் ஹிமன்ஷூ ராத் கூறியதாவது: 60-70 வயதிற்குள்ளவர்கள் மனித உரிமைகளைபாதுகாப்பதில் மிகவும் தீவிரமானவர்கள். ஆனால் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி , தலைமுறை இடை வெளி ஆகியவற்றால் இதனை அறியாமல் உள்ளனர்.

துஷ்பிரயோகம் அதிகரிப்பு

மூத்த குடிமக்களில் 86 சதவீதத்தினர் மனித உரிமைகள் பற்றி தெரியாமல் இருக்கின்றனர். 68.8 சதவீதம் பேர் மட்டுமே தேவையான மருந்துகள், சுகாதார பராமரிப்பு பற்றி தெரிந்து வைத்துள்ளனர். 23 சதவீதத்தினர் மனிதாபிமானமற்ற முறையில்வாழந்து கொண்டிருக்கின்றனர். 13 சதவீதம் பேர் தங்கள் வயதில் சரியான உணவை பெறாமல் உள்ளனர். மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்களின் மீதான துஷ்பிரயோகம், தவறான சிகிச்சை அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் பாடமுறை

இதனை தவிர்க்க வயதான ஒரு நபரின் உரிமை, குடும்ப உறுப்பினர்களின் தார்மீக பொறுப்பு மற்றும் அடிப்படை மனிதஉரிமையாக கருதப்பட வேண்டும். பள்ளிகளில் முதியோர் உரிமையை கற்று தருவதன் மூலம் பொறுப்புணர்வை உருவாக்க வேண்டும் என கூறினார்.
மதுசூதனனுக்கு கவுண்டமணி; தினகரனுக்கு செந்தில் பிரசாரம்

Added : டிச 11, 2017 00:06 | கருத்துகள் (9)


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, காமெடி நடிகர் கவுண்டமணி, டிச., 14ல், பிரசாரம் மேற்கொள்கிறார். நடிகர் கவுண்டமணி, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த அவர், இதுவரையில், அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரம் செய்ததில்லை. முதன் முறையாக, கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த, பழனிசாமி முதல்வராகி உள்ளார். எனவே, அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக, டிச., 14ல், கவுண்டமணி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த, காமெடி நடிகர் செந்தில், அதே சமுதாயத்தை சேர்ந்த தினகரனுக்கு ஆதரவாக, பிரசாரம் செய்ய உள்ளார்.
கவுண்டமணியும், செந்திலும், திரையுலகில் ஒன்றாக இணைந்து, நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர்கள். தற்போது, அரசியல் உலகில் இருவரும், எதிரும் புதிருமாக, பிரசாரம் செய்வது, தேர்தல் களத்தை கலகலப்பாக்கும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்

Added : டிச 10, 2017 20:39

புதுடில்லி: 1,300 எஸ்.பி.ஐ., வங்கி கிளைகளின் ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு நாடு முழுவதும் 23 ஆயிரம் கிளைகள் உள்ளன. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய இடங்களில் உள்ள 1,300 வங்கிக் கிளைகளின் பெயர்களும், ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகளும் மாற்றப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ. வங்கியுடன் ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டு விட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்றம் செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகளின் விவரங்கள் எஸ்.பி.ஐ. இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

Sunday, December 10, 2017

எங்கே இருக்கிறார்கள் லாடம் கட்டிகள்?- நலிந்துவிட்ட நமது இன்னொரு பாரம்பரியம்

Published : 09 Dec 2017 09:30 IST

கரு.முத்து



நவீன யுகத்தின் வளர்ச்சியில் பாரம்பரியமான நமது தொழில்களில் பலவும் மெலிந்து, நலிந்துவிட்டன. அதில் ஒன்றுதான் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில். இப்போது, லாடம் கட்டுவது என்பது பெரும்பாலும் போலீஸ் ட்ரீட்மென்ட் பாஷையாக மட்டுமே இருக்கிறது!

மனிதனுக்காக மாடாய் உழைப்பவை காளை மாடுகள். கால்களைக் கட்டிப்போட்டு காளை மாடுகளுக்கு லாடம் கட்டுவதைப் பார்க்கும்போது அவைகளை ஏதோ சித்திரவதைக்கு உள்ளாக்குவது போல் தெரியும். ஆனால், மாட்டுக்கு லாடம் கட்டுவது ஜீவகாருண்யத்தை போற்றும் செயல் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் விளங்கும்.

லாடம் இல்லாவிட்டால் அபராதம்

கல்லிலும், முள்ளிலும் பாரம் ஏற்றிய வண்டிகளை இழுத்துச் செல்லும் காளைகளுக்கு அதன் கால்கள் தேய்ந்துவிடாமலும் கால்களில் ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டுவிடமாலும் இருக்க இரும்பால் தயாரிக்கப்பட்ட லாடம் பொருத்தப்படுகிறது. புரியும்படியாக சொல்வதானால், மாடுகளுக்கு நம்மைப் போல செருப்பு, ஷூ அணிந்து நடக்கத் தெரியாது. அதற்காக அவற்றின் கால்களில் நிரந்தரமாக ஒரு காலணியை பொருத்திவிடுவதையே லாடம் கட்டுதல் என்கிறோம்.

மாட்டு வண்டிகள் பிரதான போக்குவரத்து வாகனமாக இருந்த அந்தக் காலத்தில், போலீஸார் அவ்வப்போது மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகளை சோதிப் பார்கள். அப்போது, மாடுகளின் கால்களில் லாடம் இல்லை என்று சொன்னால் அபராதம் விதித்து விடுவார்கள். இதுபோல், மாடுகளை விரட்ட வண்டிக்காரர் கையில் தார்க்குச்சி வைத்திருந்தாலும் தண்டம் கட்டியாக வேண்டும்.

வாரம் ஒரு கிராமத்தில்..

இப்படியொரு சிஸ்டம் இருந்ததால் அப்போதெல்லாம் லாடம் கட்டிகளுக்கு ஏக கிராக்கியாக இருக்கும். கருக்கலில் வீட்டுக்கே போய் ஆளைப் பிடித்தால் தான் உண்டு. அப்போது, லாடம் கட்டும் தொழிலைச் செய்பவர்கள் வாரம் ஒரு கிராமத்தில் கேம்ப் அடிப்பார்கள். அன்று முழுவதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அத்தனை காளைகளுக்கும் லாடம் கட்டிவிட்டுத்தான் ஊரைவிட்டுக் கிளம்புவார்கள். இதனால், லாடம் கட்டும் இடமே திருவிழாக் கூட்டமாய் இருக்கும்.

அந்தளவுக்கு அன்றைக்கு கிராமங்களில் வீட்டுக்கு வீடு மாடுகளும் மாட்டு வண்டிகளும் இருந்தன. ஆனால், இப்போது..? டாடா ஏஸ் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வருகை மாட்டு வண்டிகளை ஓரங்கட்டி விட்டன. இதனால் காளைமாடுகளின் தேவையும் வெகுவாகக் குறைந்து போனது. அதனால், கிராமங்களில் லாடம் கட்டுவதையும், லாடம் கட்டிகளையும் பார்ப்பது இப்போது அரிதிலும் அரிதாகிவிட்டது.

செம்பனார்கோவில் ராஜேந்திரன்

நமது பகுதியில் (போலீஸைத் தவிர!) லாடம் கட்டத் தெரிந்த யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பனார்கோவிலைச் சேர்ந்த ராஜேந்திரன் சிக்கினார். கடந்த 25 ஆண்டுகளாக மாடுகளுக்கு லாடம் கட்டும் ராஜேந்திரனுக்கு இப்போது 50 வயதாகிறது. லாடம் கட்டிய வருமானத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் நல்லபடியாக கரைசேர்த்திருக்கிறார் ராஜேந்திரன்.

பெரிதாக வருமானம் இல்லாவிட்டாலும் இன்னமும் இந்தத் தொழில்தான் ராஜேந்திரனுக்கு கஞ்சி ஊற்றுகிறது. கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் சுப்பிரமணியன் வீட்டுக் காளைகளுக்கு லாடம் கட்ட சாக்கு மூட்டையும் கையுமாய் போய்க் கொண்டி ருந்தவரை பின் தொடர்ந்தேன். போன வேகத்தில் மூட்டையைப் பிரித்து ஆபரேஷனில் இறங்கிவிட்டார்.

அவர் கொண்டு வந்திருந்த சாக்கு மூட்டையில் ஏராளமான லாடங்கள், அதை மாட்டின் காலடிக் குளம்பில் அடிப்பதற்கான் ஆணிகள், கனமான இரும்பு, சுத்தி உள்ளிட்ட சாதனங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் தனியாக பிரித்து வைத்தார். அடுத்ததாக, மாட்டை லாவகமாக மடக்கி கீழே படுக்க வைத்து, கால்களை நன்றாகப் பிணைத்துக் கட்டினார்.

ஜோடிக்கு 600 ரூபாய் கூலி

பிறகு, நடந்து தேய்ந்து பிசிறுதட்டிப் போயிருந்த கால் குளம்புகளை சீராக வெட்டி சரிசெய்தார். குளம்பு மட்டமானதும் அதற்கு பொருத்தமான லாடத்தை தேர்வுசெய்து அதை ஆணி கொண்டு காளையின் காலில் பொருத்தினார். இப்படி ஒரு மாட்டுக்கு லாடம் அடித்து முடிக்க அரை மணி நேரம் பிடித்தது. இப்படியே இன்னொரு மாட்டுக்கும் லாடம் கட்டி விட்டு, 600 ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு மூட்டையைக் கட்டினார் ராஜேந்திரன்.

அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “ஒரு நாளைக்கு ஒரு ஜோடியும் கிடைக்கும், இரண்டு ஜோடியும் கிடைக்கும். பல நாள் வேலையே இருக்காது. இதவிட்டா நமக்கு வேற வேலையும் தெரியாது. இந்த தொழில்ல நிரந்தர வருமானம் கிடையாது. மாட்டுக்காரங்க எப்பயாவது போன் அடிச்சுக் கூப்பிடுவாங்க. நானும் போய் லாடம் கட்டிட்டு வருவேன். இந்தத் தொழிலைப் பார்க்க இந்தப் பகுதியில எனக்குத் தெரிஞ்சு வேற ஆளுங்க யாரும் இல்லை. அதனால, நானே இந்தத் தொழிலை விடணும்னு நினைச்சாலும் மாடு வெச்சிருக்கிற சம்சாரிக விடமாட்டேங்கிறாங்க. நானும் இல்லைன்னா மாடுங்க பாவம்தான்” என்று மாடுகளுக்காக உண்மையாக பரிதாபப்பட்டார் ராஜேந்திரன்.

ஆறு மாசத்துக்கு மேல தாங்காது

தொடர்ந்து பேசிய அவர், “எல்லா மாடுகளுக்கும் ஈஸியா லாடம் கட்டிட முடியாது. அதுகட்ட உதை வாங்குறது, முட்டு வாங்குறதுன்னு ஆரம்பத்துல, நான் படாத அவஸ்தையெல்லாம் பட்டிருக்கேன். இப்ப புது மாடுக இல்லை. எல்லாமே நமக்குப் பழக்கப்பட்ட மாடுங்கிறதால சொன்னபடி கேட்கும்; நமக்கும் பெருசா கஷ்டம் இல்லை” என்றார்.

“முன்பெல்லாம் காளைகளுக்கு லாடம் கட்டுனா ஒரு வருசத்துக்குத் தாங்கும். ஆனா இப்ப, ஏகத்துக்கும் தார் ரோடா இருக்கதால ஆறு மாசத்துக்குள்ள லாடம் தேஞ்சு போய் கீழ விழுந்துருது” என்று சொன்ன வண்டிக்கார சுப்பிரமணியன், “லாடம் தேஞ்சு போயிட்டா ராஜேந்திரன் வந்து மறுபடியும் புதுசா லாடம் கட்டுற வரைக்கும் மாட்டை வண்டியில பூட்ட மாட்டேன். அது ஒரு மாசம் ஆனாலும் சரித்தான்” என்றபடி தனது காளை மாட்டை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். அதுவும், அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியது.

திருப்பதியில் இலவச தரிசன முறையில் மாற்றம்: தேவஸ்தானம் அறிவிப்பு

Published : 09 Dec 2017 07:31 IST

என். மகேஷ்குமார் திருமலை



திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசன (சர்வ தரிசனம்) முறையில் தரிசனம் செய்ய சில மாற்றங்களை வரும் 18ம் தேதி முதல் சோதனை முறையில் அமல்படுத்த உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.

திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஏழுமலையானை இலவச தரிசனம் (சர்வ தரிசனம்) மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் முக்கிய நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

டைம் ஸ்லாட் முறை

பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வரும் 18ம் தேதி முதல் ‘டைம் ஸ்லாட்’ முறை சோதனை முறையில் அமல் படுத்தப்பட உள்ளது.

18ம் தேதி முதல் அமல்

அதன்படி, சர்வ தரிசன முறையில் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் டோக்கன் முறை அமல் படுத்தப்படும். இதற்காக திருமலையில் 14 இடங்களில், 117 டோக்கன் விநியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதில் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவர்கள் திவ்ய தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் சர்வ தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவர். 7 நாட்கள் வரை இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும். பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இது நிரந்தரமாக்கவோ அல்லது நிறுத்துவதோ முடிவு செய்யப்படும்” என்றார்.
ஆளுமை மேம்பாடு: தன் மதிப்பை மேம்படுத்துவது எப்படி?

Published : 05 Dec 2017 11:42 IST
Updated : 05 Dec 2017 11:42 IST

முகமது ஹுசைன்
 


நம்மைப் பற்றியும் நம் திறமை பற்றியும் நாம் எவ்வாறு உணர்கிறோம் என்பதுதான் தன் மதிப்பீடு (Self evaluation). இதற்கு முக்கியமானது நம்மைப் பற்றி நமக்கிருக்கும் அபிப்பிராயம். நம்மைப் பற்றிய நம் மதிப்பீடு நம் சுற்றத்தின் அபிப்பிராயத்தைச் சார்ந்தோ சொத்து மதிப்பைச் சார்ந்தோ கல்வித் திறனைச் சார்ந்தோ இருக்கக் கூடாது.

அது நம் உள்மனதைச் சார்ந்த நம் குணத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். இந்தத் தன்மதிப்பு உயர்வானதாகவோ குறைவானதாகவோ இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலேயோ இருக்கலாம். ஆனால், அது எந்த நிலையில் இருந்தாலும் நம் வாழ்வில் அது ஏற்படுத்தும் தாக்கம் மிகப் பெரியது.

நம்முடைய தன்மதிப்பு குறைவானதாக இருந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் முக்கியம். தனிமை, பிறரால் கட்டுப்படுத்தப்படுதல், படிப்பில் குறைந்த மதிப்பெண் பெறுதல், ஒதுக்கப்படுதல், நிந்திக்கப்படுதல், வேலைவாய்ப்பின்மை ஆகியவை தன்மதிப்புக் குறைபாட்டுக்குப் பொதுவான காரணிகளாக இருக்கலாம்.

சில நேரத்தில், அதற்கான காரணத்தை அறிவது கடினமாகவும் இருக்கலாம். ஆனால், நமக்கு அதற்கான காரணங்கள் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்தத் தன்மதிப்பை மேம்படுத்துவதற்குப் பல எளிய வழிமுறைகள் உள்ளன.

விழிப்புடன் இருத்தல்

எதை மாற்ற வேண்டும் என்பதைக் கண்டு உணராதவரை நம்மால் அதை மாற்ற முடியாது. நம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் எதிர்மறையான எண்ணங்களை வெறுமனே உணர்வதே நமக்குப் போதுமானது. அந்த உணர்வால் நாம் அந்த எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகிச் செல்ல ஆரம்பிப்போம். நம்மை அந்த எண்ணங்களுடன் அடையாளப்படுத்துவதையும் குறைத்துக்கொள்வோம். இந்தப் புரிதல் இல்லையென்றால், அந்த எதிர்மறை எண்ணங்கள் விரிக்கும் வலையில் சிக்கி நம் தன் மதிப்பைத் தாழ்த்திக்கொள்வோம்.

நமக்குத் தோன்றும் எண்ணங்கள் அனைத்தையும் நாம் நம்பத் தேவை இல்லை. ஏனென்றால், எண்ணங்கள் என்பவை வெறும் எண்ணங்கள், அவ்வளவுதான். நம்மை நாமே கடுமையாக விமர்சிப்பது தெரிய வந்தவுடன் என்ன நடக்கிறது என்பதை கவனமாக, மிகுந்த ஆர்வத்துடன் குறித்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அதற்குப் பின்னர், இவை எல்லாம் வெறும் எண்ணங்கள்தான். இவை எதுவும் உண்மை அல்ல என்பதை நமக்கு நாமே நினைவூட்டிக்கொள்ள வேண்டும்.

கதையை மாற்றுதல்

நம் அனைவருக்குமே நம்மைப் பற்றி ஒரு கதை இருக்கும். அந்தக் கதைதான் நமது சுய கண்ணோட்டத்தை வடிவமைக்கும். அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் நம் சுய பிம்பம் உருவாகும். எனவே, இந்தக் கதையை நாம் மாற்ற விரும்பினால் முதலில் அது எங்கிருந்து வந்தது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இந்தக் கருத்துகளை நாம் எங்கே பெற்றோம் என்பதையும் யாருடைய கருத்து நமக்குரியது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

சில வேளைகளில், நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மைக் ‘குண்டாக இருக்கிறாய்’ என்றோ சோம்பேறி என்றோ சொல்லிக்கொண்டே இருக்கலாம். இதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், சில நாட்களில் அவர்களின் அந்தக் கருத்து நம்முடையதாகவும் மாறிவிடும். ஆனால், இந்தக் கருத்துகள் நாம் பிறரிடம் இருந்து கற்றவை என்ற புரிதல் இருந்தால், அதை நம்மிடம் இருந்து அகற்றுவது எளிது. எதை நம்ப வேண்டும், எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தினமும் நமக்கு நாமே சொல்லிக்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்தல்

இக்கரைக்கு அக்கரை எப்போதும் பச்சையாகத்தான் தோன்றும் என்பது மறுக்க முடியாத உண்மை. நம் கண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகத் தெரியும் மனிதர் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பது நமக்குத் தெரியாது. எனவே, உண்மை நிலை எது என்று தெரியாத ஒன்றுடன் நம்மை ஒப்பிடுவது மடமையான செயல். ஒப்பிடுதல் எப்போதும் நமக்கு எதிர்மறையான எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கும். அது நம்மை பயம், பதற்றம், மன அழுத்தத்துக்கு இட்டுச் செல்லும். இதனால் நம் வேலை, உறவுகள், உடல்நலம் போன்றவை வெகுவாகப் பாதிக்கப்படும்.

திறமையை ஒருமுகப்படுத்துதல்

“எல்லோருமே மேதைதான். ஆனால், மரம் ஏறும் திறனைக் கொண்டு ஒரு மீனை மதிப்பிட்டால், அந்த மீன் தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஒரு முட்டாள்” என்று நம்பியே வாழ்ந்து மடியும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது இங்கு பொருந்தும். ஆம், நம் அனைவருக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமை இருக்கிறது. அந்தத் திறமை எது என்பதைக் கண்டறிவதில்தான் நம் வெற்றியின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. நம் வாழ்வில் ஒரு சூழ்நிலையில் நம்மைப் பற்றி மிகவும் உயர்வாக எண்ணியிருப்போம். அது எது என்பதைக் கண்டறிந்து, அப்போது நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று தெரிந்துகொள்ளவேண்டும். அது நம் தனித்துவமான திறமையை நமக்கு அடையாளம் காட்டும். நம்மிடம் இருக்கும் இந்தத் திறமையைக் கண்டுபிடிப்பதற்கு நம் நண்பர்களின் உதவியையும் நாடலாம்.

உடற்பயிற்சி

உயர்வான தன் மதிப்புக்கும் உடற்பயிற்சிக்கும் உள்ள தொடர்பைப் பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்கின்றன. உடற்பயிற்சி உடலையும் மனதையும் வலிமையாக்குகிறது. தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுவது அந்த நாளை ஒழுங்குபடுத்துவதுடன் நம்மையும் பேணுகிறது. உடற்பயிற்சியால் நாம் சத்தான உணவையும் போதுமான தூக்கத்தையும் பெறுகிறோம். இதனால் ஏற்படும் நேர்மறையான எண்ணங்கள் நமக்கு நம்மைப் பற்றி ஒரு உயர்வான எண்ணத்தை உருவாக்குகின்றன.

மகிழ்ச்சியான, வெற்றிகரமான வாழ்வுக்குத் தேவையான திறமைகளுடன்தான் நாம் அனைவரும் பிறக்கிறோம். நம் அனைவருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. தன்மதிப்பு அற்ற மனிதனோ குறைகள் இல்லாத மனிதனோ இவ்வுலகில் இல்லை. எனவே, நம்மை நம் குறைகளுடன் நேசித்துப் பழக வேண்டும். இந்தப் நேசிப்பு தோல்வி பயத்தை நம்மிடம் இருந்து அகற்றி வெற்றியைச் சுவைக்க வழிவகுக்கும்.
நல்லா வெச்சிருக்கிற சாமிக்கு நம்மால முடிஞ்சத செய்வோம்'

Published : 09 Dec 2017 09:32 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



சிலையை சுத்தம் செய்தபோது..



நாகமுத்து


பெரும்பாலும் நம்மவர்கள் நல்ல உத்தியோகம் பார்த்து பணம் சம்பாதிக்க கடவுளை வேண்டுவார்கள். பிறகு, சேர்த்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்பார்கள். ஆனால், “சம்பாதிச்சது போதும்; நம்மள நல்லா வெச்சிருக்கிற சாமிக்காக நம்மால முடிஞ்ச சேவையை செய்வோமே” என்கிறார் எஸ்.நாகமுத்து.

10 ஆண்டுகளுக்கும் மேலாக..

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழக்கமாக போகிறவர்கள் நாகமுத்துவை நிச்சயம் பார்த்தி ருக்கலாம். அம்மன் சந்நிதியில் உள்ள சிலை களை தனி ஆளாக சுத்தம் செய்து கொண்டிருப்பார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவையை எவ்வித ஊதியமும் பெறாமல் செய்து கொண்டிருக்கிறார் நாகமுத்து.

மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கு இப்போது வயது 71. டி.வி.எஸ் கம்பெனியில் மெக்கானிக்காக பணியில் இருந்தவர். 2003-ல் ஓய்வுபெற்றதும் மீனாட்சியம்மனுக்கு சேவை செய்ய வந்துவிட்டார். இங்குள்ள அம்மன் சந்நிதியில் அமைந்துள்ள உலோகச் சிலைகள் நித்தமும் தங்கம் போல் ஜொலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாகமுத்து. ஸ்டூலில் அமர்ந்து கொண்டு தினமும் அந்த சிலைகளை ஆயில் போட்டு பாலீஷ் செய்கிறார். இதேபோல் சண்டிகேஷ்வரர் சந்நிதியைச் சுற்றி பக்தர்கள் கொட்டி வைக்கும் திருநீற்றையும் அவ்வப்போது சுத்தம் செய்கிறார். இந்தப் பணிகளைச் செய்வதற்காக தினமும் காலை 10 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகிவிடும் நாகமுத்து, மாலை 5 மணிக்குத்தான் கோயிலை விட்டு வருகிறார்.

“பகலெல்லாம் மீனாட்சியம்மன் கோயிலே சரணம் என கிடக்கும் நான், பணியில் இருந்த காலத்தில் இந்தக் கோயிலுக்குள் ஒருமுறைகூட வந்ததில்லை தெரியுமா?” என்று சொல்லும் நாகமுத்து, “அந்தக் காலத்துல சித்திரைத் திருவிழாவுக்கு மீனாட்சி யம்மன் கோயிலில் அலங்கார வேலைகள் செய்யுறதுக்காக எங்க ஊருப்பக்கம் இருந்து ஆட்கள் வரு வாங்க. அப்ப, எங்கப்பாவோட நானும் வருவேன். அப்பக்கூட நான் கோயிலுக்குள்ள வரமாட்டேன்.

பிடித்தமான வேலை

என்னமோ தெரியல, ரிட்டையர் ஆனதும் மீனாட்சி மீது என்னையும் அறியாத ஒரு பக்தி. கோயிலுக்கு சுவாமி சிலைகளை சுத்தம் செய்யப் போறேன்னு பொண்டாட்டி, புள்ளை கிட்ட சொன்னேன். அவங்களும், ‘உங்களுக்குப் பிரியமானத செய்யுங்க’ன்னு என்.ஓ.சி. குடுத்துட்டாங்க. நானும் இந்த வேலையை நிம்மதியா செஞ்சுட்டு இருக்கேன்” என்கிறார் நாகமுத்து.

இன்னும் பேசிய அவர், “மீனாட்சியம்மன் கோயிலை இந்தியாவின் முதன்மையான தூய்மை கொண்ட வழிபாட்டுத்தலமாக அறிவிச்சாங்க. அதுக்காக கோயில் ஊழியர்களைப் பாராட்டுனப்ப, என்னையும் அழைத் துப் பொன்னாடை போர்த்தினாங்க. அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம். மேலமாசி வீதியில் இருக்குற டாக்டர் ஒருத்தர் இந்த சிலைகளைத் துடைக்க பனியன் வேஸ்ட் துணிகளை வாங்கிக் குடுக்கிறார். பாலீஷ் ஆயிலை நானே வீட்டுல தயார் செஞ்சு எடுத்துட்டு வந்துருவேன். கோயிலுக்குள்ள நான் வந்து போறதுக்கு தனியா எனக்கு பாஸ் குடுத்துருக்காங்க.

இன்னும் எதுக்கு சம்பாதிக்கணும்?

சொந்த வீடு இருக்கு. என்னோட மகன் கைநிறைய சம்பாதிக்கிறதால சாப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லை. அப்புறம் இன்னும் எதுக்காக சம்பாதிக்கணும்? அதுக்குப் பதிலா, நம்மள இந்தளவுக்கு சந்தோஷமா வெச்சிருக்கிற சாமிக்கு நம்மால முடிஞ்ச வரைக்கும் சேவை செய்வோமே” என்று சொன் னார்.


வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழத் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான் இந்த நாகமுத்து.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
'நானோ சிகிச்சை முறை'- ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம்!

By Raghavendran | Published on : 09th December 2017 07:01 PM



பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி.

புதிய வகை நானோ சிகிச்சை முறையில் ரூ.10 ஆயிரத்தில் புற்றுநோய்க்கு மருத்துவம் மேற்கொள்ளும் முயற்சியில் ஐஐடி, மும்பை பேராசிரியர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா மற்றும் கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 'நானோ மருத்துவமுறை கருத்தரங்கம் - 2017' பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஐஐடி, மும்பை பேராசிரியிர் டாக்டர். ரோஹித் ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:

புற்றுநோயை எதிர்கொள்ளும் விதமாக புதிய மருத்துவ சிகிச்சை முறை தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இந்த புதிய முயற்சி விரைவில் முழுமையாக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்படும். இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை தவிர்க்கப்படும்.

மேலும் இந்த புதிய முறையால் மருத்துவச் செலவுகளும், சிகிச்சை பெறும் நாட்களும் பெரிய அளவில் குறையும் நிலை ஏற்படும். இப்போதைய காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவு ஏற்படுகிறது. இந்த நிலை முற்றிலும் மாறும்.

இந்த சிகிச்சை முறையானது தங்கத்தின் நானோ பார்டிகலுடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்தினை இணைத்து புற்றுநோய் பாதித்துள்ள பகுதிகளில் செலுத்தப்படும். பின்னர் அவை இன்ஃப்ரா ரெட் மூலமாக 50 டிகிரிக்கு வெப்பமாக்கப்படும். இதன்மூலம் செலுத்தப்பட்ட மருந்து நேரடியாக புற்றுநோய் பாதித்த பகுதிகளில் செலுத்தப்படும்.

இந்த சிகிச்சை முறையின் முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. அடுத்தகட்ட நகர்வுகளாக இதன் 2-ஆம் கட்ட பரிசோதனை முறையினை மேற்கொள்ள இருக்கிறோம் என்றார்.

இதுகுறித்து கொச்சியைச் சேர்ந்த நானோ தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் ஷாந்திகுமார் வி நாயர் தெரிவித்ததாவது:

இந்த நானோ சிகிச்சை முறையின் மூலமாக புற்றுநோயை உருவாக்கும் செல்களை எளிதில் கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். மேலும் ஒரே வழியில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் பல்வகை மருந்துகளை செலுத்தும் தன்மை குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வகை சிகிச்சை முறையின் பரிசோதனைகளுக்கு ரூ.7 கோடி வரை நிதி தேவைப்படுகிறது. அதற்காக www.impactguru.co என்ற இணையதள பக்கத்தினை உருவாக்கி அதில் க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்று வருகிறோம். இந்த நன்கொடை முறையை துவக்கி இந்த 45 நாட்களில் இதுவரை ரூ.63,000 க்ரௌட் ஃபன்டிங் முறையில் நன்கொடை பெற்றுள்ளோம் என்றார்.
சபரிமலை சிறப்பு ரயில்கள் இன்று முதல் மாவேலிக்கரையில் நிறுத்தப்படும்

By DIN | Published on : 10th December 2017 04:16 AM |

சென்னை எழும்பூர், சென்ட்ரலில் இருந்து கொல்லத்துக்கு செல்லும் சபரிமலை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (டிச.10) முதல் மாவேலிக்கரை ரயில் நிலையத்தில் பக்தர்களின் வசதிக்காக 2 நிமிஷம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவேலிக்கரையில்


நிறுத்தப்படும் சிறப்பு ரயில்கள்


1. ரயில் எண் 06045/06046: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
2. ரயில் எண் 06051/06052: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
3. ரயில் எண் 06047/06048: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
4. ரயில் எண் 06049/06050: சென்னை எழும்பூர் - கொல்லம் - சென்னை எழும்பூர்
5. ரயில் எண் 06041/06042: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
6. ரயில் எண் 06043/06044: சென்னை சென்ட்ரல் - கொல்லம் - சென்னை சென்ட்ரல்
விளம்பரத்தை விரும்பாதவர்

   k2
Published on : 10th December 2017 12:00 AM |

1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்து திமுக அரியணை ஏறியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம், "அய்யா! மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள்.

அப்படியும் தேர்தலில் நமக்கு வாக்குகள் விழவில்லை. திமுகவினர் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ மக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் என்பதைக் கூட பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லையே'' என்றார் வேதனையுடன். அதற்கு காமராஜர், "அட போய்யா! பெத்த தாய்க்கு சேலை வாங்கிக் குடுக்கிற மகன், "எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன்'னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?'' என்றார்.


மு.பெரியசாமி
தபால் சேமிப்பு கணக்குகளுடன் ஆதார் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு வராததால் நுகர்வோர் கலக்கம்

By DIN | Published on : 10th December 2017 01:29 AM |

தபால் சேமிப்பு கணக்குகளுடன் ஆதாரை இணைப்பதில் காலக்கெடு நீட்டிப்பு தொடர்பான உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், தபால் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு ஒன்றில், பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகளுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கத் தயாராக உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதையடுத்து, நிரந்தரக் கணக்கு எண்ணுடன்(பான் எண்ணுடன்) ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோல, வங்கி கணக்கு, தபால் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேவைகளுக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தபால் துறையில் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேமிப்புத் திட்டக் கணக்குகளுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக காலக்கெடு நீட்டிப்பு பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ உத்தரவு ஏதும் வரவில்லை என தபால் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தபால்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:-


தபால் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேமிப்பு திட்ட கணக்குகளுடன் ஆதார் எண்ணை வரும் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக தபால் வட்டத்தில் 2 கோடியே 59 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. 


இந்த கணக்குகளில், 28 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தபால் சேமிப்பு கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடுவை நீட்டித்து எந்தவொரு உத்தரவும் தபால் துறைக்கு இதுவரை வரவில்லை. அப்படி அறிவிப்பு வரும் பட்சத்தில் உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றனர் அவர்கள். ஆதார் எண்ணை சேமிப்புக் கணக்குடன் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு ஏதும் வராத சூழலில், தபால் அலுவலகங்களில் கணக்கு வைத்துள்ளோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
வகுப்பறை சிறைச்சாலையல்ல!

By கிருங்கை சேதுபதி | Published on : 08th December 2017 04:01 AM |


நான்கு சுவர்களுக்கு நடுவில் கிடக்கும் வெற்றிடமென்று பார்க்கத் தெரிந்தாலும், வகுப்பறை என்பது நான்கு திசைகளையும் அளக்கத்துணிந்த இளந்தலை
முறையினரின் பயிற்சிக்கூடம். 


எத்தனைதான் பயின்றாலும் பயிற்றினாலும், நாளும் பொழுதும் கற்போரும் கற்பிப்போரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்தான் வாழ்க்கை. அதற்கான பயிற்சிக்கூடம்தான் வகுப்பறை.
கரும்பலகையில் வெண்சுண்ணக் கட்டி கொண்டு எண்ணையும், எழுத்தையும் இன்னபிற கோடுகளையும் வளைவுகளையும் புள்ளிகளையும் தீட்டிக்காட்டிப் புரியவைக்கும் சாமர்த்தியம் கைவரப்பெற்றவர்களால், வகுப்பறை ஒரு பல்கலைக்கூடமாகப் பரிணாமம் பெற்றெழுகிறது!
கரும்பலகை வசதிகள்கூட இல்லாத இடங்களில் உச்சரிப்பின் மூலமாகவும், மெய்ப்பாடுகளின் வாயிலாகவும் தனி நடிப்பு எனத் தக்க வகையில், கற்போரின் கவனங்களை ஈர்த்து, கருத்துகளைச் செரித்துக் கொள்ளும் வகையில் ஊட்டிவிடுகிறதாய் ஒத்து உயர்கின்றனர், தனித்துவமிக்க ஆசான்கள்.


ஒரு சொல், கற்பிப்பவரின் இதழிலிருந்து உதிர்ந்து, கற்போரின் செவி சேர்கிறபோது எய்துகிற பரிமாணங்கள் பற்பல. சான்றாக, மரம் என்று அவர் சொல்வதை செவியேற்கும் நெஞ்சங்களில் விரியும் மரமும், கிளைகளும், மலர்களும் நிழலும் ஒற்றைத்தன்மை உடையது இல்லை.
எல்லார்க்கும் பொதுவான அனுபவத்திலிருந்து தொடங்கி, அவரவர்க்கான தனித்தனி அனுபவங்களுக்குள் ஆழ்த்தி, மீண்டும் பொதுவான அனுபவத்திற்குக் கொண்டுவந்து நிறுத்துகிற பாடம் எதுவாயினும் அது சுவாரஸ்யமானது; சமூகப் பயன்மிக்கது.


அதுபோல் ஒரு கருத்து, கற்பிப்போர் - கற்போர் ஆகிய இருதரப்பிலிருந்தும் எழுப்பப்படுகிறபோது, அது ஜனநாயகத்தன்மை பெற்றுவிடுகிறது. தன் கருத்து இது என்று கற்பிப்பவர் சொல்வது


போலவே, கற்போரும் தத்தம் உளக் கருத்துகளை உரைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும். பயம் களையப்படுகிற இடத்தில்தான் நல்ல பாடம் கிடைக்கும். அச்சுறுத்தி அடிமைத்தனத்தை வளர்க்கலாமே ஒழிய, அறிவை வளர்க்க இயலாது. 


"குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி என்னும் கலையையும், ஆசிரியரின் திறமையையும், அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியரை, ஆசானைக் காண்பேன்' என்கிறார், சோவியத் நாட்டுப் பேராசிரியரும் கல்வியாளருமாகிய ஷ. அமனஷ்வீலி. 


இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்து கொள்கிறோம். எந்தக் குழந்தையும் அறியாமையின் சொரூபம் அன்று; அதனதன் அறிவோடு, சூழலியல் தன்மையோடுதான் பள்ளிக்கு வருகிறது. அதன் செவியிலும் சிந்தையிலும் - வரையறுக்கப்பட்ட கருத்தை அல்லது பாடத்தைத் திணித்தால் அது திமிறும்; மறுதலிக்கும்; எதிர்ப்புணர்ச்சிக்கும் வெறுப்புணர்ச்சிக்கும் அதுவே வழிவகுக்கும். அதற்குப் பதிலாக அதன் தன்மை இன்னதென அறிந்து தன் பாடத்தைத் தொடங்காமல், தன்பாட்டுக்குத் தொடங்குபவர்களிடமிருந்து விலகிப்போகிறது, கவனம்!
கவனத்தை ஈர்த்துத் தன்வசப்படுத்தியபின் வகுப்பறை ஒரு மாயாஜாலக் கூடமாகி விடுகிறது! எண்களும் எழுத்துகளும் நிறைந்து வாழ்வின் ருசிகரமான அனுபவங்களை உணர்த்திவிடுகிறபோது, கற்றல் சுகமாகிவிடுகிறது! அண்டா நிறைய இருக்கிற நீரை, குறுகிய வாயினை உடைய ஒரு குடுவைக்குள் கொள்ளும் அளவிற்கு ஊற்றுகிற நேர்த்தி கைவரப்பெற்றவர்கள் நல்லாசிரியர்கள். அதற்குப் பாடப்புத்தகம் என்பது ஒரு கையேடு; அவ்வளவே! அது வேதப்புத்தகம் அன்று. 


எந்தப் பாடமாயினும் அதனோடு தொடர்புடைய கவிதை, கதை, வரலாறு, உள்ளூர் நிலவியல் மற்றும் சூழலியல் தன்மைகளை இணைத்துச் சொல்லி, அப்  பாடம் குறித்த சித்திரத்தைக் கற்போர் மனங்களில் நிலைப்படுத்தி விடுகிற ஆசான்கள், பயில்வோருக்கு மிகச்சிறந்த முன்னோடிகள். உலகின் எந்த உண்மையும் தனது ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்காது என்ற நம்பிக்கையைப் பிள்ளைகள் பெறுவது இந்தக் கணத்தில்தான்.


வறுமை சூழ்ந்த கிராமத்துப் பழைய பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள் இன்னும் மனச்சித்திரங்களாகப் பலரின் சிந்தைகளை நிறைத்திருப்பதற்கும் இதுதான் காரணம். அப்படித்தான் நமது ஆசான்கள் பலரும் நமக்குக் கற்பித்தார்கள்; வாழ்ந்தும் காட்டினார்கள்.
துறைதோறும் சிறந்து விளங்கிய அறிஞர்களாக அவர்கள் உருவாக, முறையோடு எழுத்தறிவித்த கலைக்கோயில்கள் பள்ளிகளே! முக்கால உண்மைகளைத் தற்கால உணர்வுகலந்து தெளிவுபடுத்துகிற இடம் வகுப்பறை!


குழந்தைகள் கற்கும் எந்திரங்கள் அல்லர். கற்பவரும் கற்பிப்பவரும் இணைந்து பெறும் இனிய அமுது கல்வி. அது அறியாமையில் இருந்து அறிவிற்கும், மரணத்திலிருந்து மரணமற்ற பெருவாழ்விற்கும் இட்டுச் செல்லும் ஞானரதம். 


"வித்து முளைத்திடும் தன்மைபோல் கற்றது கைகொடுக்கும்' என்பதைப் பெற்றோரும் மற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும். கற்றலில், சில மாதங்களில் பயன்தரும் கடலைச் செடியும் உண்டு; தலைமுறைக்கும் பயன் தருகிற ஆலமரமும் உண்டு.
"கல்வி ஒரு மூட்டை நூல்களை வாசிப்பது அன்று; அடக்கம், ஒழுங்கு, அறம், நீதி இவற்றின் முன்மாதிரியாகும்!' என்கிறார் எட்மண்ட்பர்க். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடம் வகுப்பறை.


வாழ்வியல் விழுமியங்களை உள்ளடக்கிய கல்விமுறை வழங்கும் கலைக்கூடங்களாக, என்று நமது பள்ளிகள் உயர்கின்றனவோ, அன்றுதான் வளரும் தலைமுறையினர் தகுந்த குடிமகன்களாக உருவாவார்கள் என்பது உறுதி. 


தனித்தன்மை சிதையாமல், பொதுத்தன்மை குலையாமல் மனிதத்துவத்தோடு குழந்தைகள் வளரத் துணைபுரியும் வகுப்பறை என்பது சிறைச்சாலையன்று; கனவுகளின் தொழிற்சாலை கூட இல்லை. கருதியது இயற்றக் கற்றுக்கொடுக்கும் தவச்சாலை; அதுவே மனிதப் பயிர் வளர்க்கும் இனிய நாற்றங்கால்.
35 ஆண்டுகளாக ஓய்வூதியத்துக்காக போராடிய தியாகி: 2 மாதங்களுக்குள் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published on : 10th December 2017 02:26 AM |

ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய- மாநில அரசுகள் உணர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேச விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் தனது 14 வயதில் சேர்ந்தவர் முனுசாமி. 


பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவரை கைது செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் ரங்கூன் சிறையில் வைத்துள்ளது. அதன்பின்னர் 1950-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையாகி நாடு திரும்பினார்.


தியாகிகளுக்கான ஓய்வூதியம் கோரி கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளை அணுகிய அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2008-ஆம் ஆண்டு ஓய்வூதியம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. 


இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை, 14 வயதில் ராணுவத்தில் சேர்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறி அவரது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதனை எதிர்த்து முனுசாமி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆவணங்களைப் பார்க்கும் போது அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே தகுதி பெற்ற நாளில் இருந்து இதுவரை அவருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியத் தொகையை இரண்டு மாதங்களில் வழங்க வேண்டும். இனிவரும் நாள்களில் ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் ஊழலுக்கு எதிரான அடுத்த சுதந்திர போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துள்ளதை மத்திய மாநில அரசுகள் உணர வேண்டும். மேலும் தேச விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாம் அனைவரும் வணங்க வேண்டும் என்றார்.
போதை பொருள் பயன்பாட்டை தடுக்க கல்லூரிகளுக்கு உத்தரவு

Added : டிச 10, 2017 00:30 |

 
போதை பொருள் பயன்பாட்டை தடுக்க, பொறியியல், மருத்துவக் கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நடவடிக்கை

அனைத்து மாநிலங்களிலும், கல்லுாரிகளில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், அதை கட்டுப்படுத்த, உயர் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து, பொறியியல், மருத்துவக் கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள், கலை, அறிவியல் கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதவ் விபரம்:

அனைத்து கல்லுாரிகளிலும், போதை பொருள் பயன்பாடு இல்லாமல், முதல்வர்கள் விதிகள் வகுக்க வேண்டும்.

அறிவிப்பு பலகை

தங்கள் நிறுவனத்தில் இருந்து, 100 மீ., சுற்றளவில், புகையில்லா பகுதி என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். புகையில்லா பகுதியை உறுதி செய்து கையெழுத்திட்டு, மேல் அதிகாரி
களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். புகையிலை பொருளால் ஏற்படும் தீமை குறித்து, மாணவர்கள் வழியே, விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கம் நடத்த வேண்டும். எந்த கல்லுாரியிலும், மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல், நிர்வாகத்தினர் கண்காணிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
3 லட்சம் ஆசிரியர்களுக்கு சிக்கல் 'டெட்' தகுதி தேர்வை முடிக்க கெடு

Added : டிச 10, 2017 00:21

'தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில் நீடிக்க, ஆசிரியர்   தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால், தனியார் பள்ளி ஆசிரியர்களை உஷார்படுத்தும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த, 2010 முதல், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்திலும் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு அறிமுகமானது.

கட்டாயம்

'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், 'டெட்' தேர்வை முடிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.இதன்படி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, 1 - 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பு முடிக்காவிட்டால், அவர்கள், மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியின், 'டிப்ளமா'
கல்வியியல் படிப்பை, 'ஆன்லைனில்' முடிக்க, புதிய படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான, டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. வரும் வாரங்களில், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. 'இந்த படிப்பை முடித்த பின், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வையும் முடிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அறிவுறுத்தல்

அதே போல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பி.எட்., படிப்பை முடித்திருந்தாலும், அவர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவுறுத்தப்படு உள்ளது. 


இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்
ஆகியோர், 'டெட்' தேர்வு விதிமுறைகள் குறித்து, தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்க
வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரகமும், மெட்ரிக் இயக்குனரகமும் அறிவுறுத்தி உள்ளது.

- நமது நிருபர் -
Goods train reaches Nagai without most wagons

By Express News Service | Published: 08th December 2017 02:30 AM |

Last Updated: 08th December 2017 07:07 AM

NAGAPATTINAM:When the 48 compartments of a goods train got disconnected, an unaware loco pilot ended up reaching the Nagapattinam railway station with 12 bogies of the coal-laden train on Thursday.

According to sources, the 48 compartments were disconnected from the goods train which carried coal from the Karaikal private port while the train was on its way in Ariyanattu Street near Nagapattinam.

The loco pilot drove the goods train without knowing realising about the other coaches till he reached Nagapattinam railway station.

Speaking to Express, a Railways official in Nagapattinam said, “The goods train started from Karaikal private port with 60 compartments filled with coal. Due to the weak connector, the 13th compartment got detached from the train on Thursday morning near Ariyanattu Street which is about two kilometres away from Nagapattinam Junction. Since the loco pilot did know about this, the train chugged along with the 12 compartments and reached Nagapattinam Junction,” he said.

Since, the Nagapattinam-Karaikal railway line has a single track, the engine which reached Nagapattinam Junction was unable to get back to carry along the remaining 48 compartments. Therefore, one loco engine was taken from Karaikal and the officials tried to connect that with the 48th compartment which stood there in Velipalayam which is about 10 km away from Nagapattinam Junction.

When the efforts for connecting the engine with the 48th compartment failed, the railway officials decided to push those compartments with that engine that was brought there towards the Nagapattinam Junction. With that move, the engine pushed the compartments to the railway station and the compartments were connected again.
UIDAI refuses but Karnataka jail officials submit Jayalalithaa's thumb impression in Madras High Court
By PTI | Published: 08th December 2017 09:10 PM |

CHENNAI: A Karnataka prison official today submitted to Madras High Court in a sealed cover a register containing the signature of late Jayalalithaa and soft copy of her fingerprints taken when she was lodged in a Bengaluru jail.

Justice P Velmurugan, before whom the cover was submitted as per his direction on an election petition, adjourned the matter to December 15 after the court was informed that the Supreme Court today stayed his order to the jail authorities and UIDAI seeking the records.

However, the Unique Identification Authority of India, which maintains Aadhaar data, said the ex-CM had enrolled under the unique identification scheme in her lifetime, but it can’t reveal the thumb impression since Section 29 of the Aadhaar Act bars it from disclosing such details.
Related Article

The Judge had on November 24 directed jail authorities and the Unique Identification Authority of India (UIDAI) to submit the fingerprint details by today while hearing a petition by P Saravanan, DMK candidate for the November 2016 Thirupparankundram Assembly bypoll, challenging the election of AIADMK's A K Bose.

Sarvanan had alleged, in an affidavit, that thumb impression of Jayalalithaa in the election forms authorising Bose's candidature was obtained without her consent while she was unconscious at a hospital here.

When the matter came up today, Jailor of the Parappana Agrahara Central Prison in Bengaluru Mohana Kumar produced in a sealed cover the prison register which contained the signature of Jayalalithaa.

It also contained the soft copy of Jayalalithaa's thumb impression obtained through the e-prison electronic device when she was lodged in the prison following her conviction by the trial court in the Rs 65.66 crore disproportionate assets case in September, 2014, the jailor submitted.

The former AIADMK supremo had died on December 5 last year.

Kumar informed the court that normally literate convicts affix their signature in the prison register and only the illiterate puts their thumb impression. However, all the convicts' thumb impression would be recorded in the e-prison electronic device, he added.

When the judge asked him whether the soft copy was certified as per section 65 B of the Evidence Act granting authenticity to it, the Jailor said he would get the certificate.

Counsel for UIDAI Deputy Director General Y L P Rao, who was also present in the court, informed the court that there was a bar under section 29 of the Aadhar Act from disclosing bio-metric details or information about the Aadhar card holders.

Responding to a question by the judge, he said Jayalalithaa had got her Aadhar card and sought time to file an affidavit explaining the difficulties in producing the thumb impression.

At this stage, counsel for Bose informed the Judge that on a special leave petition by his client the Supreme Court has stayed the proceedings related to production of Jayalalithaa's thumb impression.

Recording the production of documents, the judge then posted the matter to December 15.

A bench comprising Chief Justice Dipak Misra and Justices A M Khanwilkar and D Y Chandrachud of the apex court stayed the high court order.

It also issued notice to Saravanan and asked him to file a reply within eight weeks.

(With inputs from Express News Service)
One dies as girls jump off building a day after they went missing from school

By Express News Service | Published: 10th December 2017 02:04 AM |

Last Updated: 10th December 2017 08:10 AM

SALEM: Two girls, who went missing from school on Friday evening, jumped from the fourth floor of an unused building on Saturday morning. While one of them died, the other sustained multiple fractures.

Jayarani (13) daughter of Jayaraj of Moolapillayar Kovil Street, and Kavisri (13), daughter of Sakthivel of Shankar Nagar, were class VII students at St Mary’s Higher Secondary School in Arisipalayam.

On Friday evening, the girls left their bags in the classroom and went missing. As they did not return home after school hours, the parents lodged a complaint with the police. The police made inquiries with friends and in the neighbourhood and the school and launched a search operation.

Revealing details of preliminary inquiries, the police sources said that the two girls had gained notoriety for unexplained leave and had been exhibiting deviant behaviour. For a recent questionable episode in school, a teacher on Friday had told them to sit at different seats (they were usually seated next to each other) and asked them to bring their parents. It was after this development at the school, the two had gone missing.

Parents and relatives of the two girls gathered at the school, where they received information about the fall of the two girls from the building. They rushed to the spot and identified that they were the Jayarani and Kavisri. On Saturday morning, the girls jumped from the fourth floor of an unoccupied building at Ther Veedhi in Old Market area.
‘No need for lawyers to wear black gown before law tribunal’

By Express News Service | Published: 10th December 2017 01:59 AM |

Last Updated: 10th December 2017 08:21 AM

CHENNAI: Observing that there was no need for lawyers appearing before the National Company Law Tribunal (NCLT) in New Delhi to wear black gown, a division bench of the Madras High Court has stayed the operation of an order of the Tribunal Registrar.

The bench of Justices T S Sivagnanam and K Ravichandrabaabu granted the interim stay and ordered notice to the Union government, the NCLT Registrar and the Bar Council of India, returnable by January 22, on a PIL petition from advocate R Rajesh.

The petitioner is a practising advocate and also a member of the Institute of Company Secretaries of India and appearing before the High Court and other tribunals. He sought to declare as null and void the order passed by the NCLT Registrar.

The petitioner contended that the order was in direct conflict with the rules of the Bar Council of India (BCI), in particular, the rules pertaining to code of dresses or robes to be worn by advocates. In terms of the rules, wearing of advocates’ gown shall be optional except when appearing in the Supreme Court and in High Courts. Therefore, the Registrar has no jurisdiction to insist that the advocates appearing before the NCLT wear the gown, he added.

“We are of the prima facie view that the Registrar has no jurisdiction to insist that advocates appearing before the benches of NCLT should compulsorily wear black gowns. Such order would be in direct conflict with the rules framed by the BCI. Apart from that, it is doubtful whether the NCLT Registrar would have jurisdiction to issue the impugned order going by his functions as enumerated under Rule 17 of the NCLT Rules or for that matter, Rule 51. Thus, for the above reasons, we are satisfied that the petitioner has made out a prima facie case for grant of an interim order,” the bench added.
Girl burning case accused detained under Goondas Act

By Express News Service | Published: 10th December 2017 01:40 AM |

Last Updated: 10th December 2017 07:34 AM

CHENNAI: M Akash, who torched a 21-year-old girl after she rejected his marriage proposal, was detained under the Goondas Act on Saturday. On November 13, Akash, who had been reportedly pestering S Induja to marry him, entered her house in Adambakkam and set her on fire after dousing her with petrol.

Induja succumbed to injuries and her mother Renuka and sister Nivedhika suffered severe burns when they tried to save her. Renuka succumbed to injuries, while Nivedhika has been undergoing treatment. Police arrested Akash on November 14 and got him remanded in judicial custody by a magistrate court.

Induja had completed her BE and had just joined an IT company. Akash was a dropout and also Induja’s schoolmate. Police said he had come to the house with a can of petrol after learning that the family was making arrangements for her marriage.

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...