Tuesday, December 12, 2017

ஸ்டிரைக் டாக்டர்களுக்கு அரசு நோட்டீஸ்

Added : டிச 12, 2017 06:13

மதுரை: சிறப்பு டாக்டர் நியமனத்தில் விதிமுறை மீறியதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மருத்துவ தேர்வு வாரியம் நவ.,18 ல் நேர்முக தேர்வு மூலம் 465 சிறப்பு டாக்டர்களை நியமித்தது. 'எழுத்து தேர்வு, இடஒதுக்கீடு படியே நியமிக்க வேண்டும்' என்பது விதிமுறை. ஆனால், நேர்முகத் தேர்வு அடிப்படையில் மட்டுமே சிறப்பு டாக்டர்கள் நியமித்ததை கண்டித்து, சென்னையில் நவ.,18ல் இருந்து முதுநிலை சிறப்பு டாக்டர்கள் காலவரையற்ற வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக கோவை, மதுரை, திருநெல்வேலி உட்பட மருத்துவ கல்லுாரிகளில் முதுநிலை பயிற்சி டாக்டர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் வழங்க மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உத்தரவிட்டார். இதையடுத்து, 'சிறப்பு டாக்டர் நியமன வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. பயிற்சி டாக்டர்கள் என்ற முறையில் அரசிடம் சம்பளம் பெறுகிறீர்கள். 


முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தவறு. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்' என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 227 உட்பட 1,250க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024