Tuesday, December 12, 2017

'ஸ்மார்ட் போன்' மறுப்பு : நர்சிங் மாணவி தற்கொலை

Added : டிச 12, 2017 01:25

  பெரம்பலுார்:'ஸ்மார்ட் போன்' வாங்கித் தர பெற்றோர் மறுத்ததால், ரயிலில் பாய்ந்து, தனியார் நர்சிங் கல்லுாரி மாணவி, தற்கொலை செய்து கொண்டார். அரியலுார் மாவட்டம், வேப்பங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர், நல்லதம்பி மகள், நந்தினி, 17; கீழப்பழுவூரில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில், இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர், தனக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தரும்படி, பெற்றோரிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்; அவர்கள் வாங்கி தரவில்லை.
இதனால், தன் அக்கா வைத்துள்ள ஸ்மார்ட் போனை கேட்டுள்ளார்; அவரும் தர மறுத்து விட்டார். விரக்தியடைந்த நந்தினி, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில், கல்லகம் ரயில்வே கேட் அருகே, சென்னையில் இருந்து, திருச்சி சென்ற விரைவு ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.அரியலுார் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...