Sunday, December 10, 2017

விளம்பரத்தை விரும்பாதவர்

   k2
Published on : 10th December 2017 12:00 AM |

1967-இல் தமிழகத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்து திமுக அரியணை ஏறியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம், "அய்யா! மக்களுக்காக நீங்கள் எவ்வளவோ செய்திருக்கிறீர்கள்.

அப்படியும் தேர்தலில் நமக்கு வாக்குகள் விழவில்லை. திமுகவினர் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டார்கள். நீங்களோ மக்களுக்கு என்னவெல்லாம் செய்தோம் என்பதைக் கூட பிரசாரத்தில் விவரமாய்த் தெரிவிக்கவே இல்லையே'' என்றார் வேதனையுடன். அதற்கு காமராஜர், "அட போய்யா! பெத்த தாய்க்கு சேலை வாங்கிக் குடுக்கிற மகன், "எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கிக் குடுத்தேன்'னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத்தானேய்யா செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?'' என்றார்.


மு.பெரியசாமி

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...