Sunday, January 14, 2018


உடலை இரும்பாக்கும் கரும்பு!


Published : 13 Jan 2018 09:41 IST

டாக்டர் பி. திருவருட்செல்வா


பொங்கல் பண்டிகை என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது கரும்பல்லவா. பொங்கல் பண்டிகையும் கரும்பும் பிரிக்க முடியாதவை. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை தை மாதம் பிறந்துவிட்டாலே காத்தாடியும் கரும்புமாகத்தான் குழந்தைகள் திரிவார்கள். இன்றைக்கு அது தலைகீழாக மாறி, கையில் பதப்படுத்தப்பட்ட நொறுக்குத்தீனிகளுடன் தொலைக்காட்சி முன்பு சரணாகதி அடைந்துவிட்டனர்.

முன்பெல்லாம் பொங்கலன்று மட்டுமாவது கரும்பு சாப்பிடும் வழக்கம் இருந்துவந்தது. தற்போது சம்பிரதாயத்துக்கு இரண்டு கரும்புத் துண்டுகளை வைத்து வணங்க மட்டுமே செய்கின்றனர். கரும்புச் சாறு உடல்நிலை சரியில்லாதவர் சாப்பிட வேண்டியது என்கிற நிலையே தற்போது நிலவிவருகிறது.

பல்லுக்கு உறுதி

செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட எல்லோருக்குமான தேர்வாக இருக்கும். செங்கரும்பு, சிறுவர்களுக்கும் நீரிழிவு நோய் இல்லாதவர்க்கும் ஏற்றது என்பதால் பொங்கல் நேரத்தில் உட்கொள்ளலாம்.

கரும்பில் வைட்டமின் சத்தும் கனிமச் சத்தும் பெருமளவில் இல்லை என்றாலும் நம் உடலுக்குத் தேவையான அளவு கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை தவிர, உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கரும்பில் அதிக அளவில் உள்ளன. ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்டு சத்துமே அவை. உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில், கரும்பு போன்ற ‘ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்’ நிறைந்த பொருட்களை உட்கொள்ளத் தவறக்கூடாது.

ஆலும் வேலும் மட்டுமல்ல… கரும்பும் பல்லுக்கு உறுதிதான். அதனால் கரும்பை, சிறுவர்கள் மென்றே சாப்பிடலாம். இதனால் பற்கள் உறுதிபெறும். பல்லால் கடித்து மென்று சாப்பிட முடியாதவர்கள் சாறாக அருந்தலாம்.



சர்க்கரைக்குச் சத்தான கரும்பு

வெண்கரும்பு இனிப்பாக இருந்தாலும், இதிலிருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை, உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும்போது செயல் புரியும் நொதிகள் காரணமாக, ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை அளவாக அருந்தலாம். நல்ல பலனைத் தரும்.

இதிலிருக்கும் ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்ட் சத்தும் புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. உடல் செல்களுக்குத் தீமையை ஏற்படுத்தும், புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கும் ‘ஃபிரீ ராடிக்கல்ஸ்’ உருவாக்கத்தை இது பெரிதும் தடுக்கிறது.

கொழுப்பைக் குறைக்கும் கரும்பு

மஞ்சள் காமாலை நோய்க்குக் கரும்புச் சாறு அருந்தச் சொல்வது தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. ‘கரும்பு கசத்தால் வாய்க்குற்றம்’ எனும் வழக்கு மொழியே உண்டு. அதாவது, கரும்புச் சாறு இனிப்பாக இருக்க, அதைச் சுவைக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் செரிமான சுரப்புகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பொருள். பெரும்பான்மையான செரிமானச் சுரப்புக்கள் சுரக்க, கல்லீரலே முதல் காரணமாய் இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானச் சுரப்புக்கள் நன்கு சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.


மேலும், கரும்பில் உள்ள ‘பாலிகோ சனால்’ எனும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத் தட்டணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது.

சித்த மருத்துவத்தின்படி, உடலில் அதிகரித்த பித்தத்தை கரும்பு சமநிலைப்படுத்தும். சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். உடல் சூட்டைக் குறைக்கும் குணம் உடையது கரும்பு.

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் எனப் பொருள்படும். அதன் பொருளுக்கேற்றாற் போலவே உடல்நலத்திலும் இன்பத்தை விளைவிக்கும் பண்புகளை உடைய கரும்பைத் தின்னக் கூலி வேண்டுமா? கரும்பு சாப்பிடுவோம். கரும்புச் சாறு அருந்துவோம். வாழ்க்கை தித்திக்கட்டும்!

கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: siddhathiru@gmail.com
வாசிப்போம் சுவாசிப்போம் நேசிப்போம்

By உதயை மு. வீரையன்  |   Published on : 11th January 2018 01:53 AM  | 

அறிவுடையார் எல்லாம் உடையார் என்று திருக்குறள் கூறுகிறது. அறிவில்லாதவர் வேறு எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும் ஏதும் இல்லாதவரே என்றும் விளக்குகிறது. அந்த அறிவு கல்வியறிவு என்றும், பட்டறிவு என்றும் இரு வகைப்படும். கல்வியறிவுக்குப் புத்தகங்களே துணை செய்கின்றன. புத்தகக் கண்காட்சிகளின் வளர்ச்சிக்கு அதுவே காரணம்.


புத்தகங்கள் அறிவை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள்; அறிவுக்கும், அறியாமைக்கும் போர் ஏற்படும் போதெல்லாம் இந்த ஏவுகணைகளே ஏவப்படுகின்றன. இங்கே அழிவு ஏற்படுவதில்லை. அறிவே ஏற்படுகிறது; புதிய உலகம் உருவாகிறது; புதிய மனிதர்கள் உருவாக்கப்படுகின்றனர்; புதிய பாதைகள் போடப்படுகின்றன.

குடியேற்ற நாடுகளையெல்லாம் இழப்பதற்குக் கவலைப்படாத மாபெரும் இங்கிலாந்து பேரரசு, மாமேதை ஷேக்ஸ்பியரின் இலக்கியங்களை இழந்திட சம்மதிக்காத நிலைக்குக் காரணம் என்ன? ஒரு நாட்டின் பெருமையை இழந்திட யாராவது சம்மதிப்பார்களா? சாகாத இலக்கியங்கள் ஒரு நாட்டின் மதிப்புமிகு கருவூலங்கள்; செல்வங்கள் ஒருநாள் அழிந்து போகும்; இவை அழியாதவை.

அந்த ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளே ஏப்ரல், 23 உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1995-ஆம் ஆண்டு ஐ.நா. அவையின் கல்வி, கலாசார நிறுவனம், உலக மக்களிடம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக இந்த நாளைக் கொண்டாடும்படி அறிவுறுத்தியது.
தோழர்களே, இது ஓர் புத்தகம் மட்டுமே என நினைக்காதீர்! இதைத் தொடுகிறவன் இதை எழுதிய ஆசிரியரையே தொடுகிறான் என்றார் அமெரிக்கக் கவிஞன் வால்ட் விட்மன். ஆம், நூல்கள் வெறும் காகிதங்கள் அல்ல, அவை அச்சடிக்கப்பட்ட ஆயுதங்கள்; அதுவும் அறிவாயுதங்கள்.

நூல்கள் என்பவை ஒரு மொழியின் பிள்ளைகள்; ஓர் இனத்தின் வாரிசுகள்; ஒரு நாகரிகத்தின் தொட்டில்கள்; ஒரு தேசத்தின் சொத்துகள்; அறிவுக்கடலில் மூழ்கி எடுக்கப்பட்ட முத்துகள்; அவற்றைப் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் கடமை.
புத்தகங்கள் இப்போதைய நிலையை அடைவதற்கு அவை கடந்து வந்த பாதைகளும் நெடியவை. அக்கால அரசர்களின் காலத்தில் கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டன; பின்னர் செப்பேடுகளாகவும், ஓலைச்சுவடிகளாகவும் மாற்றம் பெற்றன. அறிவியல் வருகையால் காகிதங்களும், அச்சு எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
1445-ஆம் ஆண்டில் ஜெர்மனியில் புத்தகம் அச்சிடும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைக் கண்டுபிடித்த அறிவியல் மேதை கூடன்பர்க் உலகத்தில் சிறந்த 10 சாதனையாளர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
புத்தகங்கள் உருவாக புதிய முறையைக் கண்டுபிடித்த ஜெர்மனியில்தான் ஏராளமான புத்தகங்களும் அழிக்கப்பட்ட சோக நிகழ்வுகளும் நடந்தேறின. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது ஜெர்மனி புத்தக எதிர்ப்பிலும், எரிப்பிலும் முனைந்து நின்றது. நாஜிகளின் கொள்கைகளுக்கு எதிரான புத்தகங்கள் பொது இடங்களில் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. ஹிட்லர் காலத்தில் இப்படி எரிப்பது தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

புகழோடு வாழ முடியாதவர்கள் தங்களை நொந்து கொள்ளாமல், அவர்களை இகழ்பவர்களை நொந்து கொள்வதால் பயன் என்ன? என்று கேட்டார் திருவள்ளுவர். சர்வாதிகாரியான ஹிட்லர் போன்றவர்கள் மாறாத பழியை அவர்களாகவே வேண்டி விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள்.

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, ஒரு தேசத்துக்குப் பெருமை சேர்ப்பது மன்னர்களும், சாம்ராஜ்யங்களும் அல்ல. மாமுனிவர்களும், சித்தர்களும், மாமேதைகளும், சிந்தனையாளர்களும், அவர்களது கருத்துகளும், கருத்துகளின் வடிவங்களான இறவா இலக்கியங்களுமே! அவையே மொழி, இனம், நாகரிகம் இவற்றின் அடையாளங்களாகும். பண்பட்ட சமுதாயத்தின் முதல் முகவரியாகும்.

உலகில் தலைசிறந்த நாகரிகமாகப் போற்றப்படும் கிரேக்க நாகரிகம் சிந்தனையின் பிறப்பிடமாக இருந்தது. கிரீஸ் நாட்டின் முதல் நூலகம் பிஸிஸ்டிராடஸ் என்ற கிரேக்கரிடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி.மு.4ஆம் நூற்றாண்டில் ரோமாபுரியில் 28 நூலகங்கள் இருந்தனவாம்.

நினிவா என்ற இடத்தில் இருந்த ஆசிய நாட்டு நூலகத்தில் 10 ஆயிரம் களிமண் பட்டயங்களின் வடிவில் நூல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. உலகம் போற்றும் அரசியல் தத்துவ மேதை பிளேட்டோ ஏராளமான நூல்களைச் சேமித்து வைத்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. மற்றோர் அரசியல் மேதை அரிஸ்டாடில் தாம் உருவாக்கி வைத்திருந்த நூலகத்தை தம் சீடருக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளார்.
இந்தியாவில் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் நாகார்ச்சுனன் என்ற அரசன் உருவாக்கிய நூலகம் நாகார்ச்சுன வித்யா பீடம் என்பதாகும். இப்போதைய ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் இருந்திருக்கிறது. கி.பி. 399 முதல் 414 வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த பாஹியான் என்னும் சீனப் பயணி தனது நூலில் நாகார்ச்சுன வித்யா பீடம் பற்றியும், அன்றைய இந்தியாவில் பல புத்த மடாலயங்களில் நூலகங்கள் செயல்பட்டு வந்தது பற்றியும் எழுதியுள்ளார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் 68,700 பனை ஓலைகளில் எழுதப்பட்ட நூல்களும், 36,058 பாபிரஸ் புல் சுருள்களில் எழுதப்பட்ட நூல்களும் இருந்தனவாம். அவற்றுள் 3,100 பனை ஓலைகள் மட்டும் நமக்குக் கிடைத்துள்ளன.
சமண சமயம் சார்ந்த அறுபெரும் திருமறைகள் தொக்கப்பட்டு, உரைகளும் எழுதப்பட்டன. இத்தகைய தொகை நூல்களைச் சேர்த்து வைத்த இடங்கள். ஞான பண்டாரங்கள் எனப்பட்டன. நூலக இயக்கத்திற்கு பங்காற்றிய மற்றொரு சமயம் புத்தமதமாகும். பெளத்த மத நூலகத்திற்கு செழுங்கலை நியமம் என்று பெயர். சைவக் கோயில்களின் ஒரு பகுதியில் சரசுவதி பண்டாரம் என்ற பெயரில் நூலகங்கள் இருந்தனவாம். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம் வரலாற்றுப் புகழ்பெற்றது.

இக்காலத்தில் இந்தியாவில் நூலகங்கள் இல்லாத இடங்களே இல்லை எனலாம். தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை முதலிய நகரங்களில் புகழ்பெற்ற நூலகங்கள் இயங்குகின்றன.
காலங்களையும், தேசங்களையும் கடந்து உலக மக்களை ஒன்றுபடுத்தவும், சிந்திக்கவும் செய்யும் ஆற்றல் புத்தகங்களுக்கே இருக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த சான்றோர்களுடன் உறவாடுவதற்கும் நூல் உதவி செய்கிறது. திருவள்ளுவர் காலம் வேறு; ஆயினும் காலத்தின் இந்தத் தடைகளைக் கடந்து ஆசிரியருடன் உறவு கொள்ள வைக்கிறது. அறிவியலால் முடியாத அரிய பெரிய பயனை நல்ல நூலால் பெற்று மகிழ்கிறோம்... என்று டாக்டர் மு.வ. கூறுவது சிந்திக்கத்தக்கது.

1981-ஆம் ஆண்டு ஆசியாவிலேயே பெரியதோர் நூலகங்களின் ஒன்றான யாழ்ப்பாணம் நூலகம் இலங்கையில் சிங்களவர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இலட்சக்கணக்கான நூல்களும், ஓலைச்சுவடிகளும் சாம்பலாயின. மிச்சம் மீதி இருந்தவர்களை ஹிட்லரின் வாரிசான இராசபக்ச இனப்படுகொலை செய்தான்.தேனீக்கள் சுறுசுறுப்புடன் நிறைய பூக்களுக்குப் பறந்து சென்று தேனைச் சேகரிப்பது போன்று நீங்களும் நிறைய புத்தகங்களைப் படித்து நிறைய நல்ல செய்திகளைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றார் மார்க்சிம் கார்க்கி. கல்விக்கும் நூல்களுக்கும் செலவழிப்பது செலவினம் ஆகாது. அவை மூலதனம் என்றே அறிஞர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 2000க்கும் மேற்பட்ட ஊர்ப்புற நூலகங்கள், 2500க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள், மாவட்டம் தோறும் மாவட்ட மைய நூலகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 12,000 கிராமப்புற உள் நூலகங்களும் அரசினால் உருவாக்கப்பட்டுள்ளன.எனினும் நூலாசிரியர்களும், நூல் வெளியீட்டாளர்களும் மகிழ்ச்சியாக இல்லையே ஏன்? கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசின் நூலகத்துறை நூல்களை வாங்காமல் புறக்கணித்து வருகிறது. இதனை அரசு புரிந்து கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுசார் மக்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஒரு மிகப்பெரிய நூலகத்துறை தனித்துறையாக மாற்றப்படாமல் கல்வித்துறையின் ஓர் அங்கமாகவே இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருப்பது? பொது நூலக இயக்குநர் என்னும் தலைமைப் பொறுப்புக்கு நிரந்தர இயக்குநர் இதுவரை நியமிக்கப்படவில்லை. கிளை நூலகங்களுக்குக் கேட்க வேண்டுமா? தமிழகம் முழுவதும் நூலகர் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

வளமான நிலமே செழிப்பாகப் பயிர்கள் வளர உதவும். நலமான நூலகத் துறையே எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும் வளரத் துணை செய்யும். நாம் உயிர்வாழ சுவாசிப்பது போலவே வாசிப்பதும். வாசிப்பவர்களே உலகை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர். எனவே வாசிப்போம் வாருங்கள்.
கல்லூரிக்கான இணைப்பு ரத்து பல்கலை உத்தரவுக்கு தடை
Added : ஜன 14, 2018


சென்னை:திருப்பூர் மாவட்டத்தில், தனியார் கல்லுாரிக்கான இணைப்பை ரத்து செய்து, பாரதியார் பல்கலை பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், பிஷப் தார்ப் கல்லுாரி உள்ளது. இதன் செயலர், டாக்டர் பால் வசந்தகுமார் தாக்கல் செய்த மனு:


குறைந்த கட்டணம்


எங்கள் கல்லுாரிக்கு, அரசின் நிதி உதவி கிடையாது; சுயநிதி கல்லுாரி. பட்டப் படிப்பு மற்றும் முதுகலை படிப்பில், 469 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. 35 ஆசிரியர்களும், 17 அலுவலர்களும் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை, நிர்வாகம் வழங்குகிறது.கல்லுாரிக்கு, பாரதியார் பல்கலை வழங்கிய இணைப்பு, ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த கல்வியாண்டு முதல், மாணவர்களை சேர்க்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இணைப்பு குறித்து, மூன்று பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. 


அதன்பின், எங்களுக்கு, 'நோட்டீஸ்' எதுவும் தரப்படவில்லை. விளக்கம் அளிக்க, சந்தர்ப்பமும் தரவில்லை. இணைப்பு ரத்துக்கான காரணமும் கூறப்படவில்லை.எனவே, பாரதியார் பல்கலை உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை, உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


நோட்டீஸ்


மனு, நீதிபதி, மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஐசக் மோகன்லால், வழக்கறிஞர், காட்சன் ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி, மகாதேவன், ''எந்த விசாரணையும் இல்லாமல், நேரடியாக இணைப்பை ரத்து செய்யும் விதத்தில், பாரதியார் பல்கலை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு, மூன்று வாரங்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது,'' என, உத்தரவிட்டுள்ளார்.மனுவுக்குப் பதிலளிக்க, சிறப்பு பிளீடர் முனுசாமிக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, மூன்று வாரங்களுக்கு, நீதிபதி தள்ளிவைத்தார்.
'மருத்துவ கட்டணம் செலுத்தாத நோயாளியை சிறை பிடிப்பது குற்றம்'

Added : ஜன 14, 2018 01:27 |

  மும்பை:'மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை செலுத்தாததற்காக, குணமான நோயாளியை பிடித்து வைப்பது சட்ட விரோதம்; மக்கள் அனைவரும், இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்' என, மும்பை உயர் நீதிமன்றம் கூறிஉள்ளது.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், இரு தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ கட்டணம் செலுத்தாத நோயாளிகளை, மருத்துவமனை நிர்வாகம் வெளியே விட மறுத்து, பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தர்மாதிகாரி, பாரதிய தாங்ரே அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'உடல் நலன் குணமான நோயாளியை, கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் பிடித்து வைத்திருப்பது, சட்ட விரோதம்.'இதை, மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட வேண்டும். குணமான நபரை பிடித்து வைப்பது, தனிநபர் சுதந்திரத்தை மீறும் செயல்' என, கூறப்பட்டுள்ளது.


Saturday, January 13, 2018

3 ஏக்கரில் 21 வகை காய்கறி சாகுபடி... அசத்தும் ‘காய்’ சேகர்

Published : 11 Jan 2018 10:02 IST


வி.சுந்தர்ராஜ்


திருவலஞ்சுழியில் இயற்கை முறையில் விளைவித்த சிவப்பு முள்ளங்கி அறுவடை.

மலைப்பிரதேசத்தில் விளையும் காலிபிளவர் சமவெளிப் பகுதியில் விளைந்திருக்கும் அதிசயம்.



பல வகை காய்கறிகளை பயிரிட்டுள்ள தனது வயலில் சேகர்.

திருவலஞ்சுழியில் இயற்கை முறையில் விளைவித்த சிவப்பு முள்ளங்கி அறுவடை.

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பதெல்லாம் திருவலஞ்சுழி ‘காய்’ சேகர் கிட்ட செல்லாது. ஏன்னா, அவர் வழி, தனி வழி என்கிறார்கள் திருவலஞ்சுழி சுற்றுவட்டாரத்தினர்.

“ரெண்டு ஏக்கர்ல சம்பா சாகுபடி செஞ்சேங்க, முட்டுவுலி செலவு அம்பதாயிரம் ரூவா ஆச்சு, பருவத்துக்கு மழயும் பெய்யல, ஆத்துல தண்ணியும் இல்லை. காலேல எழுந்திருச்சு வயலைப் போய்ப் பாத்தா பச்சப் பசேல்னு இருக்க வேண்டிய பயிரெல்லாம் அறுவட காலத்துல இருக்கிறமாதிரி மஞ்ச கலருக்கு மாறிப்போயிக் கெடந்தா மனசு வலிக்குதுய்யா” என மனம் வெம்பித் தவிக்கும் விவசாயிகளுக்கு மத்தியில், மாற்றுப் பயிர் சாகுபடி- மகத்தான ஒன்றுதான் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் திருவலஞ்சுழி சேகர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே 3 ஏக்கர் நிலத்தில் 21 வகையான காய்கறிகளை, இயற்கை முறையில் சாகுபடி செய்து, அறுவடை செய்த இடத்திலேயே அவற்றை விற்பனையும் செய்து அசத்தி வருகிறார்.

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழியைச் சேர்ந்த விவசாயி சேகர்(50). இவர் தன்னுடைய வயலில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் புதுமையான காய்கறிகளை பயிரிட்டு அதில் மகசூலும் பெற்று வருகிறார்.

3 ஏக்கர் நிலமும் வண்டல் மண். மலைப் பிரதேசங்களில் விளையும் காய்கறிகளான காலி ஃப்ளவர், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், நூல்கோல், தரணிபூ, பீன்ஸ், புரோகோலி, பச்சைப் பட்டாணி, சிகப்பு முள்ளங்கி மற்றும் நாட்டு காய்களான தக்காளி, கத்தரிக்காய், பச்சை மிளகாய், அவரை, கொத்தவரை, வெண்டை, புடலை, பீர்க்கங்காய், சுண்டைக்காய், பாகற்காய் மற்றும் கீரைகள் ஆகியவற்றைப் பயிரிட்டு வருகிறார். போர்வெல் மூலம்தான் நீர்ப்பாசனம்.

திருவலஞ்சுழியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, “சேகர் வயல்ல விளையிற காய்கறி எல்லாமும் அவரோட வயலை ஒட்டிய சாலையோர பகுதியிலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டு, அன்றாடம் விற்று முதலாகிவிடுகிறது. பச்சைப் பசேல்னு காய்கறிகள வாங்குவதற்காக தினமும் அக்கம் பக்கத்து ஊர்கள்ல இருந்தும் சேகர் வயலுக்கு மோட்டார் சைக்கிள்ல வாராங்கன்னா பாத்துக்குங்களேன்” என்கின்றனர் ஆச்சரியத் துடன்.

ஊரெல்லாம் ஒரே பேச்சுங்கிற மாதிரி, யாரைக் கேட்டாலும் உங்களைப் பற்றி பெருமையா சொல்கிறார்களே என சேகரிடம் நாம் கேட்டோம். அப்போது அவர் கூறியது:

நான் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு வருகிறேன். குறைந்த நாட்களில் அதாவது 70 முதல் 110 நாட்களுக்குள் விளையக்கூடிய காய்கறிகளை மட்டும் பயிரிட்டு வருகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக மலைப் பிரதேச காய்கறிகளையும் பயிரிட்டேன். கடந்தாண்டு காலி ஃப்ளவர் பயிரிட்டேன், இந்தாண்டு புரோக்கோலியை பயிரிட்டுள்ளேன். மலைப் பிரதேச காய்கறிகள், காவிரி டெல்டாவில் உள்ள மண்ணிலும் நல்லபடியாகவே விளைகின்றன. 3 ஏக்கரில் 21 வகையான காய்கறிகளையும் 5 வகையான கீரைகளையும் பயிரிட்டுள்ளேன்.

எந்த உரமும் போடாமல், பூச்சிக் கொல்லி மருந்தும் தெளிக்காமல் இயற்கை முறையில் அதிக அளவில் மகசூலும் பெற்று வருகிறேன். பசுமையான காய்கறிகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமானவை என பலரும் ஆங்காங்கே சொல்வதைக் கேட்டு தினமும் ஏராளமானோர் என்னுடைய வயலுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். உரம், பூச்சிக் கொல்லி மருந்து பயன்படுத்தாததால் இடுபொருள் செலவு குறைவு. பாதிப்பு அதிகம் இல்லாததால் அதிக மகசூல், அதிக வருவாய் கிடைக்கிறது என்றார்.

இன்றைக்கு நெல்லைத் தவிர்த்து இதர மாற்றுப் பயிர் சாகுபடியைச் செய்ய டெல்டா விவசாயிகளுக்கு தயக்கம் உள்ளது. இந்த தயக்கத்தை விட்டுவிட்டால், விவசாயத்தில் அனைவரும் நல்ல வெற்றியைப் பெறலாம் என்ற சேகர், “ஆரம்பத்தில் நானும் நெல்லும், வாழையும்தான் பயிரிட்டேன். காய்கறி சாகுபடியில் கிடைக்கும் அதிக வருவாய், மன நிறைவை அடுத்து தற்போது முழுவதும் காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு வருகிறேன்” என கூறுகிறார் இந்த இயற்கை காய்கனி சாகுபடி விவசாயியான காய் சேகர்..
'ஆதார் இன்றி ஓர் அணுவும் அசையாது'

Published : 12 Jan 2018 10:52 IST
Updated : 12 Jan 2018 10:52 IST


புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு பிப். 15ல் விமான சேவை தொடக்கம்

Published : 12 Jan 2018 14:29 IST

ஐதராபாத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலிருந்து வரும் பிப்ரவரி 15 முதல் பெங்களூருக்கு கூடுதல் விமான சேவை தொடங்குகிறது. அதிக வரவேற்பு இருப்பதால் இச்சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரியில் லாஸ்பேட்டை யில் விமானநிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013 ஜனவரியில் புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது.

புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்ட உடன் 2013 ஜனவரி 17-ம் தேதி ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுவையில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயங்கின. பயணிகள் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன்னறிவிப்பு ஏது மின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்ட, உதான் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், புதுச்சேரி-ஐதராபாத் இடையே ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மூலம் விமானப் போக்குவரத்து சேவை, புதுச்சேரி அரசு முயற்சியால் மத்திய அரசு அனுமதியுடன் தொடங்கப்பட்டது. அதன்படி புதுச்சேரியில் இருந்து ஐதராபாத்துக்கு விமானம் கடந்த ஆகஸ்ட் 15 முதல் இயக்கப்படுகிறது.

விமான சேவைக்கு வரவேற்பு இருப்பதால் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தரப்பில் கூறியதாவது:

அதிக வரவேற்பு இருப்பதால் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வரும் பிப்ரவரி 15ம் தேதியிலிருந்து கூடுதல் விமான சேவையை தொடக்குகிறது. பெங்களூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் விமானம் புதுச்சேரிக்கு காலை 10.30க்குவந்தடையும். அதைத்தொடர்ந்து காலை 10.50 மணிக்கு புறப்படும் விமானம் காலை 12.10க்கு பெங்களூரூ சென்றடையும். கட்டணம் ரூ. 1600 என நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
பொங்கல் நாளில்... மங்கலம் பொங்கட்டும்!

Published : 12 Jan 2018 16:24 IST


வி.ராம்ஜி



உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் உன்னதத் திருநாள்... பொங்கல் நன்னாள்! தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் முடிந்துவிடும். அறுவடை ஆனதை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் தெய்வம் சூரிய பகவான்.

அன்றைய தினம், காலையில் எழுந்ததும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். இந்த முறை ஞாயிற்றுக் கிழமை மாலையில்தான் மாதம் பிறக்கிறது. எனவே மாலை 4 மணிக்குத்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

புதிய பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.

பொங்கல் பொங்கி வழியும் போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று குரலெடுத்து கூவி, வழிபடுவார்கள். சில இடங்களில் பொங்கல் பொங்கி வழியும் திசையை வைத்து, ‘நல்லது நடக்குமா? என்று தீர்மானிப்பார்கள். சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும். சூரியனே பிரதான தெய்வம் இன்று. மேலும் ஞாயிற்றுகிழமை அதுவுமாக பொங்கல் வருகிறது. மாதமும் பிறக்கிறது.

முன்னதாக, கணபதி பூஜையை முடித்துக் கொண்டு பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து அந்த இடத்துக்கு அழகூட்டலாம். சாந்நித்தியம் பெருக்கலாம்!

தலைவாழை இலையில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடுகிற வழக்கம் சில ஊர்களில் உண்டு. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள். பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது என்பது ஐதீகம்!

பொங்கலுக்கு மறுநாள்... கணுப் பண்டிகை! பெண்களுக்கு உரிய பண்டிகை இது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ்சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

இரண்டு மஞ்சள் இலைகள் (அல்லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ கணுப்பிடி வைப்பார்கள்.

முன்னதாக, கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்ளவேண்டும். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் .

ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைத்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றி ஆராதனை செய்யவேண்டும்.

வெற்றிலை,- பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு, மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக்கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் தயாராக வைத்துக் கொள்ளவும். கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உதாரணத்துக்கு அன்று திங்கட்கிழமை. அதாவது 15ம் தேதி. ராகுகாலம் காலை 7.30 முதல் 9 மணி வரை. எமகண்டம் காலை 10.30 முதல் 12 மணி வரை!

அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுங்கள். பிறகு கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்- பூனை முதலான பிராணிகள் எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும் அதாவது சித்ரான்னங்களும் அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறலாம் என்கிறார் பாலாஜி வாத்தியார். .

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக, செளக்கியமாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்ளுங்கள். ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியே உண்டு! கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் அர்த்தம்! .

பிறந்த வீட்டுச் சீராகப் பெண்களுக்குப் பணமோ, துணியோ வழங்குவார்கள். உள்ளூரிலேயே இருந்தால், , தாய் வீட்டுக்குப் போய் மதிய உணவு சாப்பிடுவார்கள்!

ஆக, பொங்கலை குடும்பத்தாருடனும் அக்கம்பக்கத்தாருடனும் உறவுகளின் மேன்மையின் பொருட்டும் கொண்டாடுங்கள்.

பொங்கும் மங்கலம், உங்கள் வீட்டில் பொங்கி வழியட்டும். பொங்கலோ பொங்கல்!

உத்தராயன புண்ய காலமும்... தைத் திருநாள் பொங்கலும்!

Published : 12 Jan 2018 16:50 IST

வி.ராம்ஜி
 


இந்தியா... ஆன்மிக பூமி என்று போற்றப்படும் தேசம். வேதங்களாலும் இதிகாசங்களாலும் புராணங்களாலும் பலம் கொண்டிருக்கும் புண்ணிய பூமி இது.

சிவ வழிபாடு, விஷ்ணு வழிபாடு, சக்தி வழிபாடு, குமர வழிபாடு என பலப்பல வழிபாடுகள் இருந்தாலும் எல்லா வழிபாடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்... சூரியனார்! அதாவது சூரிய பகவான்! உலகுக்கே இருள் நீக்கி ஒளி கொடுக்கிற சூரிய பகவானை முன்னிறுத்திக் கொண்டாடப்படும் பண்டிகையே பொங்கல் வைபவம்!

சூரியன், தன் பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். ரவி என்றால் சூரியன் என்பது தெரியும்தானே. அதுவே உத்தராயன புண்ய காலம் எனப்படுகிறது. உத்தர அயனம் என்றால், வடக்குப் பக்க வழி, வடக்கு வாசல் என்று அர்த்தம். சூரியன், கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்றாலும், தட்சிண அயனம் எனும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாகவும் சஞ்சரிக்கிறார் சூரிய பகவான் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அதாவது, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என ஆறு மாதங்களும் உத்தராயன புண்ய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படுகிறது. மங்கல கரமான காரியங்களைச் செய்ய உத்தராயனமே சிறந்த காலம் என்று போற்றுகிறது புராணம்.

இறப்பது கூட உத்தராயனத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும் என்பது ஐதீகம்! எனவேதான், தட்சிணாயன காலத்தில், குருக்ஷேத்திர யுத்தத்தில் அடிபட்டு விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயன புண்ய காலம் வரும் வரை காத்திருந்து இறந்தார் என்கிறது மகாபாரதம்!

உத்தராயன புண்ய காலம் தை மாதம் தொடங்குகிறது. இந்த மாதப் பிறப்பு, பொங்கல் நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது! பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாக, போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப் படுகிறது.

ஆகவே உத்தராயன புண்ய காலம் தொடங்குகிற தை மாதத்தை, உரிய முறையில் கொண்டாடுவோம். சடங்குகளின் அடிப்படையில் என்னென்ன சாங்கியங்கள் உண்டோ அவற்றை நிறைவேற்றுவோம். பொங்கலும் மகிழ்ச்சியும் எல்லோர் வீடுகளிலும் பொங்கித் ததும்பட்டும்! ததும்பும் என்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரம் கிடையாது: மத்திய வெளியுறவு அமைச்சகம்

2018-01-12@ 16:44:26

 பாஸ்போர்ட்டை இனி முகவரி ஆதாரமாக காண்பிக்க முடியாது என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. பெயர், முகவரி, பெற்றோர் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட கடைசிப்பக்கம் இனி அச்சிடப்பாடாது. இனிமேல் அச்சிடப்படும் பாஸ்போர்ட்டுகளில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலாவதியாகாத பாஸ்போர்டுகளில் கடைசிப் பக்கத்தில் உள்ள முகவரியை ஆதாரமாக காண்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு

2018-01-13@ 07:16:43

சென்னை: பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் கிளம்பவில்லை. சென்னையில் இறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.
Airtel is offering one year of free Amazon Prime membership to users

THE ASIAN AGE.
Published : Jan 12, 2018, 7:24 pm IST

The Infinity Postpaid, V-Fiber broadband users can now avail this offer.


Infinity plan priced Rs 499 or above will get one year of Amazon Prime membership which costs Rs 999.

Airtel postpaid users have a reason to rejoice. The ones who use the Infinity postpaid plan, which is priced Rs 499 or above will get one year of Amazon Prime membership. The same offer is also valid for Airtel V-Fiber broadband customers, who will also upgrade to a plan for availing the offer.

Airtel has teamed up with Amazon to provide their customers with this lucrative offer. Airtel Postpaid customers with an Infinity plan priced Rs 499 or above will get one year of Amazon Prime membership which costs Rs 999.

The users need to activate the offer exclusively via their Airtel TV app after which they will be able to access Amazon Prime Video via the app on supported devices. They also need to sign-up for Amazon Prime by registering a phone number and password. Even though the offer is free, the Prime subscription will be automatically renewed for Android users after the first year and they will be charged Rs 999 via postpaid or broadband billing, depending on the bill plan eligible for the offer. The membership of iOS customers won’t be auto-renewed. Both Android and iOS users will be notified via SMS at the time of activation of the offer.

Vijay Subramaniam, Director of Content at Amazon Prime Video India commented on the offer and said, “We are delighted to associate with Airtel to bring Prime membership to Airtel’s consumers. At Amazon Prime Video, we are focused on bringing the latest and exclusive content to India. This exclusive offer enables us to reach Airtel’s significant customer base across the country, providing entertainment - anytime, anywhere on a reliable service, with great playback quality and low data usage.”
முதல் நண்பன் – 16: அங்கீகாரம் பெறுமா நாட்டு நாய்கள்?

Published : 06 Jan 2018 11:27 IST

இரா.சிவசித்து




இன்றளவும் தமிழகத்து நாய் இனங்களுக்கான சந்தையில் மவுசு குறையாத நாட்டு நாய் இனம், ராஜபாளைய நாய்கள்தான். ராஜபாளையத்தைச் சார்ந்து இயங்கும் 50-க்கும் மேற்பட்ட நாய்ப் பண்ணைகளே அதற்குச் சாட்சி!

இன்று சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவில்கூட புலம்பெயர்ந்த தமிழர்கள் ராஜபாளைய நாய்களை வளர்க்கின்றனர். அவ்வளவு இருந்தும் இவற்றிற்கான உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்றால், இல்லை என்பதே பதில்.

தேசிய அங்கீகாரம்

அப்படியான அங்கீகாரம் பெற்ற இனம் இந்தியாவில் ‘கேரவன் ஹவுண்ட்’ மட்டும்தான். இவ்வாறான அங்கீகாரத்தை யார் வழங்குவது? இந்திய அளவில் ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ வழங்குகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அமைப்பு ராஜபாளைய நாய்களை அங்கீகரித்து விட்டது. சரி, உலக அளவிலான அங்கீகாரம்?

‘வேர்ல்ட் கனைன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் உலக அளவிலான அங்கீகாரத்தை வழங்குகிறது. நாய்களின் நலனுக்காகப் பணியாற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் இதில் உறுப்பினராக உள்ளன. அதில் இந்தியாவின் கென்னல் கிளப்பும் ஒன்று! அதுபோல், இந்திய கென்னல் கிளப்பில், இந்தியாவைச் சேர்ந்த பல அமைப்புகள் உறுப்பினராக உள்ளன. அதில், ‘மதுரை கென்னல் கிளப்’பும் ஒன்று.

அங்கீகாரத்தில் சிக்கல்

மதுரை கென்னல் கிளப்பின் செயலர் எஸ்.ராமநாதனிடம் பேசிய போது ராஜபாளைய நாய்களுக்கு உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் புரியத் தொடங்கியது.

அவர் கூறும்போது “ உலக அளவில் எல்லா வகை நாய்களுக்குமான கண்காட்சி நடக்கும் போது, ஒரே இனத்தைச் சேர்ந்த 100 நாய்கள் அதில் கலந்து கொண்டால், அந்த இனம் அதிக அளவில் கவனம் பெறுகிறது. அது அங்கீகரிக்கவும்படுகிறது.

இந்தியாவில், அவ்வாறு நடத்தப்படும் கண்காட்சியில் ஒரே இனத்தைச் சேர்ந்த 100 நாய்கள் கலந்துகொள்ள முடியுமா என்றால், அதுதான் இல்லை. காரணம், இந்திய கென்னல் கிளப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட இனங்களில் எவை ‘மைக்ரோசிப்’ பொருத்தப்பட்டுள்ளனவோ, அந்த நாய்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரே இனம் ராஜபாளைய இனம் மட்டும்தான். ஆனால், அந்த இனத்தில் மைக்ரோசிப் பொருத்தப்பட்ட 100 நாய்கள், என்பது மிகவும் பெரிய இலக்கு. அது சாத்தியமாகும்போது, ராஜபாளைய நாய் இனத்துக்கு உலக அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

* உலக அளவில் அங்கீகாரம் பெற்ற இனம் இந்தியாவில் ‘கேரவன் ஹவுண்ட்’ மட்டும்தான்

* ‘வேர்ல்ட் கனைன் ஆர்கனைசேஷன்’ என்ற அமைப்புதான் நாய் இனங்களுக்கான உலக அங்கீகாரத்தை வழங்குகிறது

* ராஜபாளைய நாய் இனங்களுக்கு ‘கென்னல் கிளப் ஆஃப் இந்தியா’ அமைப்பு தேசிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது
உலகை விழுங்கும் அமேசான் படைகள்!

Published : 10 Jan 2018 16:11 IST


சி.கோபிநாத் | தமிழில் ஆர்.முத்துக்குமார்.



ஹைதராபாத், தெலுங்கானா. அமேசானின் மிகப்பெரிய வேர்ஹவுஸ் வசதி. - கோப்புப் படம். | கே.வி.எஸ். கிரி.

சில காலங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகையே விலைக்கு வாங்கி விட்டதாக அனைவரும் பயந்தனர். பொறுப்பாண்மை அதிகாரிகள் இது குறித்து நீதிமன்றம் வரை சென்றனர். ஒருநாள் நாம் அனைவருமே மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்காகவே ஏதோ ஒரு விதத்தில் பணி புரிவோம் என்று நினைத்தோம். இன்று அதே உலகை விழுங்கும் வர்த்தகமாக, சக்தியாக அமேசான் ஆன்லைன் வர்த்தகம் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

1995-ம் ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனை நிலையமாக கால்பதித்தது அமேசான். ஆனால் தற்போது ஊசி முதல் யானை வரை, அனைத்தும் அமேசான் வர்த்தக மையமாகியுள்ளது. எல்லாவற்றுக்குமான சந்தையாக அமேசான் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் சியாட்டில் தலைமைச் செயலகத்தில் சுமார் 40,000 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர், உலகம் முழுதும் சுமார் 450,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது அமேசான்.

மிக முக்கியமான செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை அமேசானுக்குச் சொந்தமானது. முக்கிய விவகாரங்களில் வலுவான சுதந்திர நிலைப்பாடுகளை எடுத்த பத்திரிகையாகும் வாஷிங்டன் போஸ்ட். அதே போல் ஆரோக்கிய உணவு, இயற்கை, ஆர்கானிக் உணவுப்பொருட்களைக் கொண்ட மிகப்பெரிய ஹோல் ஃபுட்ஸ் மார்க்கெட் என்ற மிகப்பெரிய மளிகை வர்த்தகமும் அமேசானுக்குச் சொந்தமானதே. கிளவுட் சர்வீசஸ், பப்ளிஷிங், ஏன் திரைப்பட தயாரிப்பு வரை அனைத்திலும் அமேசான் தன் கையை பதித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் 20 பில்லியன் டாலர்கள் செலவில், அதாவது ரூ.1,30,000 கோடி செலவில் தனக்கு 2-வது தலைமைச் செயலகத்தை அமைக்க அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டது. சுமார் 20 ஆண்டுகால திட்டமாகும் இது. சில முன் நிபந்தனைகளை திருப்தி செய்யும் வகையில் இந்தத் திட்டத்துக்குத் தயாராக இருக்கும் நகரங்களிலிருந்து ஒப்பந்தப் புள்ளிகளை இத்திட்டத்துக்காகக் கோரியது அமேசான். அதாவது அந்நகரம் குறைந்தது சுமார் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகரமாக இருப்பது அவசியம். மேலும் மென்பொருள் மற்றும் பிற தொழில்நுட்பத் திறன்கள் கிடைக்கும் நகரமாக இருக்க வேண்டும், நல்ல போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள், இன்னபிற நிபந்தனைகளுடன் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியது அமேசான்.

இதற்கு 238 நகரங்கள், பெரும்பாலும் அமெரிக்காவிலிருந்தும், பிறகு கனடா, மெக்சிகோ ஆகியவையும் இந்த ஒப்பந்தப் புள்ளிகளில் ஆர்வம் காட்டியது. இத்தகைய திட்டத்தைத் தீட்டவும், நடைமுறைப்படுத்தவும் மிகப்பெரிய தீவிர முயற்சியும் உணர்வும் அறிவுக்கூர்மையும் தேவைப்படும். சுமார் 50,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்பதே இந்த திட்டத்தில் அனைவரும் ஆர்வம் காட்ட காரணமாக உள்ளது.

நெவார்க் நகரம் 10 ஆண்டுகளில் இத்திட்டத்துக்காக 7 பில்லியன் டாலர்கள் செலவிட முன்வந்தது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜியை ஈர்ப்பதற்காக தய்வான் மின்னணுப் பொருள் அசெம்ப்ளர் நிறுவனம் விஸ்கான்சினில் ஆலை ஒன்றை அமைக்க அம்மாகாணம் 3 பில்லியன் டாலர்கள் தொகையை உறுதியளித்தது.

ஆன்லைன் கொள்முதலை விரிவுபடுத்தியுள்ள அமேசான் நிறுவன வர்த்தக உத்திகளினால் மிகப்பெரிய வர்த்தக முதலைகள் ஆட்டம் கண்டுள்ளனர். அமெரிக்காவில் மட்டும் ஆன்லைன் செலவிடுதலில் 40% அமேசானில் மட்டுமே நடைபெறுகிறது. இதனையடுத்து மிகப்பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரான சியர்ஸ் திவால் ஆகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்களில் வர்த்தகம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. அசுர நிறுவனமான வால்மார்ட் கூட அமேசான் அதிர்ச்சியிலிருந்து தற்போதுதான் மீண்டுள்ளது. சமீபத்தில் அமேசான் மருந்து விநியோகச் சேவையையும் பரிசீலித்து வருகிறது. அமேசானின் வர்த்தக மாதிரியான குறைந்த வரி செலுத்துதல், டிவிடெண்ட் இன்மை, பணத்தை தக்கவைத்துக் கொள்ளுதல் போன்றவை வேறு ஒரு சுவாரசியமான கதையாகும்.

அடுத்ததாக பல சி.இ.ஓ.க்களை விழிக்கச் செய்யும் திட்டத்துக்கு அமேசான் தயாராகி வருகிறது. பல்வேறு தொழில்துறைகளில் இருக்கும் பல நிறுவனங்கள் அமேசான் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப நிறுவனங்களின் உத்திகளை கவனித்து வருவதோடு, தங்கள் நிறுவனங்களை அமேசான் விழுங்காமல் பாதுகாக்க எதிர் உத்திகளை வகுத்து வருகின்றனர். அமேசான் நிறுவனம் மருந்து விநியோகத்தில் குதிக்கும் முடிவினால் சங்கிலித் தொடர் மருந்து நிறுவனமான சிவிஎஸ், ஹெல்த் காப்பீட்டு நிறுவனமான ஏட்னாவை வாங்க முயன்று வருகிறது. அதேபோல் நெட்பிளிக்ஸ் வளர்ச்சி, விரிவாக்கத்துக்கு எதிராக டிஸ்னி நிறுவனம் ஃபாக்ஸ் நிறுவனத்தின் முக்கியச் சொத்துகளை வாங்கியுள்ளது. ஏடி&டி நிறுவனம் டைம் வார்னரை வாங்கியுள்ளது.

உலகின் 4 மிகப்பெரிய தொழில்நுட்ப அசுரர்களான அமேசான், பேஸ்புக், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகியவை மரபான நிர்வாக மேலாண்மைக் கோட்பாடுகளை உடைத்தெறிந்து புதிய வாடிக்கையாளர்களின் தேவைகள் என்னவென்பதை கண்டுணர்ந்து சேவை செய்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மானுடச் செயல்பாடுகளின் பல்வேறு புலங்களில் இந்த நிறுவனங்கள் ஊடுருவியுள்ளது. ஒரு நேரத்தில் ஸ்டார்ட் அப் தொழில் நுட்ப நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் தாங்கள் வாங்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் வெற்றிக்காகப் போராடினர். இப்போது அமேசான் நிறுவனம் அந்த இடத்தை ஆக்ரமித்துள்ளது.

எழுத்தாளர், பாஸ்டனில் உள்ள சஃபோல்க் பல்கலைக் கழக பேராசிரியர்.

மூலம் : தி இந்து பிசினஸ்லைன்
உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை; நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை: 4 நீதிபதிகள் கூட்டாக பேட்டி- இந்திய வரலாற்றில் முதன்முறை

Published : 12 Jan 2018 12:37 IST


இணையதள செய்திப் பிரிவு புதுடெல்லி



உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை, ஜனநாயகம் இல்லை என மூத்த நீதிபதிகள் 4 பேர் இன்று கூட்டாக பேட்டியளித்துள்ளது பெரும் பரரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகிய நான்கு பேர் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

"இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம்.

உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும்" எனக்கூறினார்.

இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள ‘‘இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்’’ எனக்கூறினர்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர். அந்த கடிதம் வெளியான பிறகே, நீதிபதிகளின் பேட்டியின் விவரங்கள் முழுமையாக வெளியாகும் என தெரிகிறது.
Soon, new look passport without parents' name 

Prakash Kumar, DH News Service, New Delhi, Jan 13 2018, 1:18 IST


The Indian Security Press, Nasik, will design the new passport in two different colours. File photo

The Centre has decided to do away with the printing of the names of a passport holder's parents, address and other details.

The Ministry of External Affairs (MEA) has decided to stop printing the last page of the passports which contains information like name of the father, mother, spouse, address, emigration check required (ECR) and old passport number with date and place of issue.

The Indian Security Press, Nasik, will design the new passport in two different colours.

Citizens with ECR status would be issued an orange passport while those with a non-ECR status would continue to get a blue passport.

"Till such time the new passport booklets are designed, manufactured and made available to the ministry, the passports and other travel documents would continue to be printed with the last page," an official said.
Tirumala Tirupati Devasthanams: More laddus for devotees 

DECCAN CHRONICLE.

Published Jan 12, 2018, 1:13 am IST

They could collect tokens for this from the LPT counter adjacent to the Srivari temple.



Tirumala Tirupati Devasthanams (TTD)

Tirupati: Tirumala Tirupati Devasthanams (TTD) is now offering 10 additional laddus to all devotees from Thursday.

They could collect tokens for this from the LPT counter adjacent to the Srivari temple.

On Wednesday, temple authorities offered six additional laddus and decided to increase it to 10 on Thursday.

The boondi-making machines installed rece-ntly helped in making more laddus. Storage capacity too had been raised helping increase in production by 10,000 to 20,000 laddus.

The officials did not make any official announcement as this was not going to be mandatory and would be issued subject to availability. Additional laddus were being sold at higher prices, based on which TTD earlier gave nod for recommendation letters.

The laddu was being sold at `50 apiece. The hiked price could be one reason for the availability of more laddus.
Gutka scam letter to former Tamil Nadu late CM Jayalalithaa found in VK Sasikala’s room in Veda Nilayam: I-T department

By Express News Service | Published: 13th January 2018 02:28 AM |

CHENNAI: In a shocking revelation, the Income Tax (I-T) Department on Friday told the Madras High Court that its confidential letter to the then Chief Minister J Jayalalithaa relating to gutka scam was found from the room of V K Sasikala at Veda Nilayam, the Poes Garden residence of Jayalalithaa, during a raid in November last year.

This information was disclosed in a counter-affidavit filed in the HC by Suise Babu Varghese, Principal Director of the I-T Department, in response to a PIL from DMK MLA J Anbazhagan seeking a CBI probe into the multi-crore gutka scam.

The counter-affidavit said the letter was forwarded through the then DGP to the then CM. However, it was seen and seized from Sasikala’s room.

“During a search by the department on November 17 last in the rooms occupied by Sasikala in Veda Nilayam, a note dated September 2, 2016, signed by the then DGP and addressed to the then CM enclosing copies of a secret letter dated August 11, 2016, addressed by then I-T Principal Director to the DGP in connection with gutka scam, was found and seized,” said the counter.

The letter was addressed to the then Chief Secretary and the DGP with copies of relevant accounts of the seized materials and copies of extracts of sworn statements recorded from Madhava Rao, the partner of the gutka company involved in the scam, evidencing payment to various parties connected with the State government and requesting action against the persons concerned, the counter added. The matter was adjourned to January 17.
No property tax exemption for private ​educational institutes

By Express News Service | Published: 12th January 2018 03:04 AM |

CHENNAI: Municipal Administration Minister S P Velumani on Thursday introduced a Bill to amend the laws relating to municipal corporations and municipalities in the State, which provides for doing away with the exemption given so far from paying property tax for buildings of private educational institutions.
As per rule 15 (c) of the Tamil Nadu Village Panchayats (Assessments and Collection of Taxes) Rules, 1999, only the buildings used for educational purposes, including hostels and libraries run by the government or local bodies and institutions aided by the government, are exempted from payment of the house tax.

However, under the municipal laws governing the municipal corporations, municipalities and town panchayats, all buildings used for educational purposes are exempted from payment of property tax.
The Third Finance Commission has, among others, recommended that the provisions exempting all educational institutions from payment of property tax shall be removed.

“Based on the above recommendations, the government has decided to do away with the exemption given from payment of property tax for all the buildings used for educational purposes, except those that are run by the government or corporation or any other local authority or institutions aided by the government. It was also decided to have uniformity in the assessment of property tax,” the Bill further said.
Secret letter on gutkha scam found from Sasikala's room: Income Tax department tells Madras HC

By PTI | Published: 12th January 2018 06:54 PM |
 
CHENNAI: The Income Tax department has told the Madras High Court that its confidential letter seeking action against those involved in the gutkha scam in Tamil Nadu was seized from a room occupied by expelled AIADMK leader Sasikala in the Poes Garden residence of Jayalalithaa.

This information was disclosed in an affidavit submitted today by Principal Director of Income Tax, Chennai, Susie Babu Varghese on a public interest litigation (PIL) filed by DMK MLA J Anbazhagan for a CBI probe into the alleged scam.

Alleging that a state minister and high-level state and central government officers, including police officials, were involved in the scam to "facilitate" sale of banned 'gutkha' (tobacco product), the PIL contended that the CBI alone can conduct a thorough and impartial probe in the matter.

According to the affidavit, the then principal director of the I-T department had on August 11, 2016 written a letter to the Tamil Nadu Chief Secretary and the Director General of Police in connection with the scam.

The letter was addressed to both of them, with copies of the relevant accounts from the seized materials, it said.

Copies of extracts of sworn statements recorded from Madhava Rao, a partner in the gutka company allegedly involved in the scam, evidencing payment to various parties connected with the state government, were also enclosed with the letter.

The letter had requested necessary action against the persons concerned, Varghese said in the affidavit.

It further said that during a search conducted by the (I-T) department on November 17, 2017 in the rooms occupied by Sasikala in Veda Nilayam, a note dated September 2, 2016 and signed by the then DGP addressed to the then chief minister (Jayalalithaa) enclosing copies of the confidential I-T letter was found and seized.

This apart, in the sworn statement, Rao had stated that the payments were made to various officials and explained that the abbreviation of 'HM' and 'CP' in the diary seized from the firm denotes health minister and commissioner of police respectively, the officer said.

"Madhava Rao in his sworn statement has said that he had paid Rs 56 lakhs to the health minister between the period April 1, 2016 to June 15, 2016 for incidental expenses incurred for running the business of manufacture and sale of Gutka which is not legally permitted in Tamil Nadu," the affidavit read.

I-T sleuths had conducted searches in the office block and a room occupied by Sasikala, currently serving a prison term in a corruption case, at the Poes Garden residence of Jayalalithaa 'Veda Nilayam' following inputs.

Jayalalithaa was admitted to a hospital here with complaints of fever and dehydration on September 22, 2016 and died on December 5 that year.
Aadhaar a must to register for Jallikattu event in Madurai

By ANI | Published: 12th January 2018 12:41 AM |



Image used for representational purpose only

MADURAI: The Madurai district administration on Thursday made the Aadhaar registration mandatory for bull tamers who wished participate in the annually organised festival of the Jallikattu celebrations.

According to reports, this new order has not gone down well with locals.

Meanwhile, the district administration claim that the move will help it in managing large crowds at the celebrations in an efficient manner. Similarly, it will also put a check on illegal elements too.

Nearly 1,000 bull tamers and 3,000 bulls are expected to participate in Jallikattu this year.

Jallikattu will be held in various parts of Tamil Nadu from January 14 to 16.
Bill moved on VC panel for medical university

TNN | Updated: Jan 12, 2018, 08:39 IST

CHENNAI: The government on Thursday moved a bill to amend Tamil Nadu Dr MGR Medical University Act, prescribing qualification for the search committee and for the vice-chancellor and the duration for the panel to come up with the list of prospective candidates.

The committee will comprise a nominee of the government, senate and governing council. The process of nominating members should begin six months before the probable date of occurrence of vacancy of vice-chancellor, while preparation of the panel of suitable persons for appointment as vice-chancellor should begin at least four months before the probable date of occurrence of the vacancy in the office.

A person recommended by the committee for appointment as vice-chancellor should be an academician with highest level of competence, integrity, morals and institutional commitment, said the bill moved by health minister C Vijayabaskar. tnn
Pongal: Jet Airways to offer ven pongal, sakharai pongal on flights from Chennai 

V Ayyappan | TNN | Jan 12, 2018, 20:10 IST

  CHENNAI: Travellers flying from Chennai on select Jet Airways flights will be able to enjoy the pongal feast for breakfast and lunch on January 14 as part of the airline's move to celebrate the popular Tamil Nadu harvest festival, Pongal.

The airline will offer a special menu to passengers in premiere and economy classes from Chennai. The menu will include a breakfast item comprising traditional savoury dish ven pongal, an offering made during the Pongal festival. The airline will serve the festival favourite -- sakharai pongal (a sweet dish) -- at the end of lunch and dinner.

The pongal feast will be served on flights which have either breakfast or lunch or dinner.

The pongal feast will be an in-flight initiative, allowing guests to participate in the annual festival while onboard Jet Airways flights, according to the statement from the press release.
Special trains come with high price tag, but offer no ‘Suvidha’Siddharth Prabhakar

 TNN | Jan 12, 2018, 23:48 IST

CHENNAI: Some passengers travelling from Chennai to Tirunelveli on Friday paid Rs 3,500 to Rs 5,000 for an AC ticket on Suvidha special trains that have a dynamic pricing model. While the premium rate might be attributed to the week-long bus strike that ended on Friday, data from Southern Railway shows that this is not a rare phenomenon.

All special services operated by Southern Railway to clear the festive or weekend rush are operated as Suvidha or special fare trains. While a passenger pays the regular fare plus the tatkal amount for a special fare train, in a Suvidha train, the fare increases for every 20% slab of tickets to a maximum of three times the regular fare plus the tatkal charge.

However, despite the skyrocketing fares, more than 90% seats on Suvidha trains have been sold out every month from April to December 2017, with July being an exception. Occupancy for the special fare trains has been lower, but more than 75% on six of the nine months. On the Chennai-south TN section, the average occupancy has been 102% for special fare and 93% for Suvidha, while for the Chennai-Kerala section, it has been 107% and 101%.

Over all, there has been a 71% increase in the number of passengers and a 51% increase in passenger earnings from special trains this year. This debunks the theory of passenger associations that Suvidha trains are not patronised due to the high fares. Railway officials said there is a huge demand for tickets on weekends and festival days, and people are willing to pay more. "We plan specials based on comprehensive demand-based analysis of waiting list status on regular trains and number of bus services well in advance," said an official of the commercial department of Southern Railway.

However, the high fares have neither materialised into better facilities, not have passengers got amenities on par with regular trains. Passengers often complain that older and spare coaches are used to run specials and regular trains are given preference when it comes to punctuality. Other grievances include lack of cleanliness and absence of ticket-checking staff.

"We are slowly incorporating LHB coaches in all trains, including specials. Currently, there is a shortage of extra coaches and we have to run specials on spare ones. Meeting passenger demand is the primary objective," said another senior railway official adding that special trains are as punctual as regular ones.

Improving amenities for special trains is paramount because the commercial department has planned to regularise some of them. Currently, the booking window for regular trains opens four months in advance and for high-demand routes like Chennai-Madurai, Chennai-Kochi and Chennai-Coimbatore, tickets are sold out almost immediately. Special trains are then announced during a festival or holiday weekend, if the waiting list is long.
Happy Pongal: Tomatoes, carrots, beans for Rs 10/kilo at Koyambedu

TNN | Jan 13, 2018, 02:04 IST

Chennai: City residents may have rarely experienced a time as bountiful as this a day ahead of Pongal. Those who braved the early morning chill to head to the Koyambedu wholesale market on Friday, part from of course retail merchants, came away with bagas of vegetables, most of them for a scarcely believable Rs 10 per kg and below.
With truckloads of vegetables flooding the market, the cost of vegetables has crashed.

S Chandran, president of Koyambedu Market Licensed Merchants Association said brinjal, beans, cabbage, ladies finger (okra), broad beans and tomato sold for less than Rs 10 per kilogram.

"The arrival of trucks with these vegetables has increased by 25% from the average 100 to 125 vehicles. So, this has reflected in a significant drop ," he said.

While one kilogram of onion cost anything between Rs 30/kg and Rs 40/kg, potato and yam sold for Rs 15/kg to Rs 20/kg and Rs 20/kg to Rs 25/kg.

The wholesale market received 450 trucks of vegetables and about 50 vehicles more to meet the demand for Pongal from different parts of Tamil Nadu, Andhra Pradesh and Karnataka.

The situation in the retail markets, however, was different, with residents in many areas saying prices were much higher.

Responding to this, Chandran said retail traders would factor in a minimum a profit margin of Rs 10 for every kilogram of vegetables to meet the expenses incurred in transporting the goods to respective places.

Hospital submits Jayalalithaa medical records to commission

TNN | Updated: Jan 13, 2018, 05:57 IST




Former Chief Minister J Jayalalithaa

CHENNAI: Apollo Hospitals has submitted two suitcases full of documents regarding the medical treatment given to former chief minister J Jayalalithaa to the Arumugasamy commission on Friday. The hospital said in a statement that it has filed affidavits and presented 30 volumes of the original medical records with copies.
The records furnished include details right from the time of her admission on September 22, 2016 up to her demise on December 5 the same year. The commission verified the photocopies before returning the original records to the hospital.

Apollo had sought two weeks time to file the entire set of medical records and accordingly, on January 3, the commission had posted the matter to January 12 to produce the documents.

Sheela Balakrishnan, former chief secretary and adviser to the Jayalalithaa government, appeared before the commission for a second time on Thursday. She was present for around three hours.

Latest CommentDo we have to accept the reports?Manoharan Thangavelu

Raja Senthur Pandian, counsel for V K Sasikala, Jayalalithaa's co-convict in the disproportionate assets case, also appeared before the commission on Thursday. He told reporters that he would file a fresh petition with the commission as fresh greivances have cropped up.

He told reporters that he would file a fresh petition with the commission as fresh greivances have cropped up.
சொந்த ஊர் செல்ல அலைமோதிய கூட்டம் : அரசு பஸ்கள் ஓடியதால் மக்கள் உற்சாகம்

Added : ஜன 13, 2018 00:57



சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல், பஸ் போக்குவரத்து இயல்பானது. இதனால், பொங்கல் பண்டிகை கொண்டாட, வெளியூர் செல்ல திட்டமிட்ட பயணியர், உற்சாகம் அடைந்துள்ளனர்.


போக்குவரத்து ஊழியர்கள், அரசு நிறைவேற்றிய, ஊதிய ஒப்பந்தத்தை எதிர்த்து, ஜன., 4 முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னையில், நீதிமன்றம் தலையிட்டதால், நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
வேலைநிறுத்தத்தால், பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களை, அரசால் இயக்க முடியவில்லை. முன்பதிவு செய்த பயணியருக்கு மட்டும், அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். ரயில்களில் டிக்கெட் கிடைக்காத மக்கள், அரசு பஸ்களையே நம்பி இருந்தனர். அவர்கள், முன்பதிவு மையங்களை தொடர்பு கொண்டனர்.


ஆனால், ஜன., 10, 11 ஆகிய நாட்களில், முன்பதிவு ரத்து செய்யப்பட்டதால், ஊருக்கு செல்ல முடியுமா என்ற, குழப்பத்தில் இருந்தனர். ஏற்கனவே, முன்பதிவு செய்தவர்களில், பாதி பேர் ரத்து செய்தனர்.


நேற்று முன்தினம் இரவு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணியர், நம்பிக்கையும் உற்சாகமும் அடைந்தனர். நேற்று காலை முதலே, சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில், பயணியரின் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், நேற்று காலை, 9:30 மணிக்கு, சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள, முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு, பொங்கல் பண்டிகைக்கு பின், சென்னை திரும்புவோருக்கான முன்பதிவுகள் செய்யப்பட்டன. பயணியருக்கு உதவும் வகையில், பஸ் நிலையங்களில் பல இடங்களில், போக்குவரத்துத்துறை சார்பில், தகவல் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


சென்னை கோயம்பேடு, அண்ணா நகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய, ஐந்து இடங்களில் இருந்து, நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால், வழக்கமாக வருவதுபோலவே, பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து, அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
விஜயபாஸ்கர் உதவியாளர் மீது லஞ்ச புகார் : சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு

Added : ஜன 13, 2018 04:26

மதுரை: 'சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் மீதான லஞ்ச புகார் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை பில்லான்குடியை சேர்ந்த கார்த்திகா தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதி
மீறல் நடந்துள்ளது. லஞ்சம் பெற்று பலரை நியமித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. சுகாதாரத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் அன்பானந்தம், '3 லட்ச ரூபாய் கொடுத்தால் பணி நியமனம் வழங்கப்படும்' என்றார்.
நியமன முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., சென்னை இணை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனு செய்துள்ளார்.
மனு விரைவில் விசாரணைக்கு பட்டியல் இடப்படும்.
போனஸ் பணம் கைக்கு வரவில்லை!

Added : ஜன 13, 2018 04:04

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த, 8ல் வெளியானது. கடந்த, 9ல், அனைத்து அலுவலகங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட போனஸ், நேற்று மாலை வரை யாருக்கும் வழங்கப்படவில்லை.


இது குறித்து, கருவூலத்தில் விசாரித்தபோது, 'பொங்கலுக்கு பிறகே, வங்கி கணக்கில் போனஸ் பணம் வரும்' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறுகையில், ''அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில், சி மற்றும் டி பிரிவினர், பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளனர். அவர்களுக்கு, பொங்கலுக்கு முன், போனஸ் தொகையை, வங்கி கணக்கில் செலுத்தினால், கடன் வாங்கும் நிலை ஏற்படாது,'' என்றார்.

- நமது நிருபர் -
ரேஷனில் பொங்கல் பரிசு : 17 லட்சம் பேர் வாங்கவில்லை

Added : ஜன 13, 2018 00:39

தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1.84 கோடி பேருக்கு, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பை அறிவித்தது.
இவை, ரேஷன் கடைகள் வாயிலாக, 6ம் தேதியில் இருந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று மதியம் வரை, 1.67 கோடி பேர், பொங்கல் பரிசை வாங்கி சென்றுள்ளனர்.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர், நேற்று கூறியதாவது: தகுதியுள்ள அனைத்து கார்டுதாரர்களின், பொங்கல் பரிசும், அவரவர் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகள், நாளையும் வழக்கம்போல் செயல்படும். கடையில் இட நெருக்கடி இருப்பதால், பொருட்களை பாதுகாக்க, ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, அவர்களின் சிரமத்தை களைய, பொங்கல் பரிசு வாங்காதவர்கள், நாளை கடைக்கு சென்று, பொருட்களை பெறலாம். அப்படியும் வாங்காதவர்கள், 16ம் தேதி முதல் 20 வரை கடைக்கு வந்து, பொங்கல் பரிசு கேட்டால் தரவும் என, கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்பின், யாருக்கும் வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சென்னை: பனி மூட்டம் காரணமாக 4 மணி முதல் விமானங்கள் ரத்து

Updated : ஜன 13, 2018 07:02 | Added : ஜன 13, 2018 06:02



சென்னை:பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை புகை மூட்டம் காரணமாக சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்ட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு சென்னை நர் முழுவம் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை மூட்டம் காணமாக சென்னை விமானநிலையத்தில் அதிகாலை நேரத்தில் வந்திறங்கும் விமானங்கள் பனி மூட்டம் க இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குவரும் விமானங்கள் வேறு விமானநிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.


சென்னைக்கு வரவேண்டிய 12 வெளிநாட்டு விமானங்கள், 6 உள்நாட்டு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றிவிடபபட்பது.

சென்னை - கொச்சுவேலிக்கு இன்று இரவு சிறப்பு ரயில்

Added : ஜன 12, 2018 18:48

சென்னை: சென்னை - கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படுகிறது.

பொங்கல், மகரஜோதியையொட்டி நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை, எழும்பூர்- கொச்சுவேலி இடையே முன்பதிவற்ற ரயில் இன்று இரவு இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, இரவு 11.45 மணிக்கு எழும்பூரிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. நாளை மாலை 3.40 மணிக்கு ரயில் கொச்சுவேலி சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து போக்குவரத்து தொடங்கியது




சேலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 2 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து வெளியூருக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. போராட்டம் முடிந்து முழுமையாக பஸ்கள் இயங்கியதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.

ஜனவரி 13, 2018, 04:31 AM

சேலம்,

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8 நாட்களாக பஸ்களை இயக்க மறுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். சேலம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 60 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை.

மீதமுள்ள பஸ்களை அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன. 22 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் முடிவுக்கு வந்ததையொட்டி, நேற்று அதிகாலை முதலே அரசு பஸ்கள் வழக்கம்போல இயங்க தொடங்கின. சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற முக்கிய நகரங்களுக்கான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்கள் இயங்க தொடங்கியதையொட்டி காலை முதலே சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதுகுறித்து பஸ் நிலையம் வந்த பயணிகள் கூறுகையில்,‘‘போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக சொந்த ஊருக்கு சென்று பொங்கல் திருநாளை கொண்டாட முடியாதோ? என்ற சந்தேகம் இருந்தது. ஒருவழியாக அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததால், பஸ்களும் வழக்கம்போல இயக்கப்படுகிறது. இதனால், சொந்த ஊருக்கு சென்று வருவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை. பஸ்கள் முழுமையாக இயக்கப்பட்டதில் நிம்மதியாக உள்ளோம்‘‘ என்றனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சேலம் மாநகரில் சேலம் ஜவகர் மில் திடல், சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள போஸ் மைதானம் என 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அவை நேற்று முதல் செயல்பட தொடங்கியது.

தற்காலிக பஸ் நிலையமான சேலம் போஸ் மைதானத்தில் இருந்து அரூர், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ஆத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, கடலூர், சிதம்பரம், தம்மம்பட்டி, துறையூர், பேளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஜவகர் மில் திடலில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி ஆகிய வழித்தடங்களுக்கான இயக்கப்பட்டன.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, எடப்பாடி, ராசிபுரம், ஏற்காடு, நாமக்கல், மேட்டூர், மைசூரு, பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பொதுமக்கள் பஸ்கள் எந்தெந்த வழித்தடத்தில் இருந்து செல்கிறது என்பதை அறியும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

மேலும் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைந்துள்ள சேலம் போஸ் மைதானம், ஜவகர்மில் திடல் ஆகிய இடங்களுக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு டவுன் பஸ்கள் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்





பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 13, 2018, 05:07 AM

வண்டலூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ்நிலையம் உள்பட பல இடங்களில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும்.

இதற்காக தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு பந்தல், நாற்காலிகள், போடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏறி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை பொங்கல் பண்டிகை. சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் இனிய நாள். 
 
நாளை பொங்கல் பண்டிகை. சாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும் இனிய நாள். தை பொங்கல் என்பது தமிழர்களின் தனி அடையாளம். வயலும் வயல் சார்ந்த வெளிகளுமான மருதம் நிலத்தை அதிகம் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் கூறியபடி, ‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்’’ என்று உழவுத்தொழிலை மேன்மைப்படுத்திய இனம் தமிழ் இனம். தமிழன் எப்போதும் நன்றியுடையவன். அதனால்தான் இயற்கைக்கும், உழவுத்தொழிலுக்கு ஆதாரமான மண்ணுக்கும், விண்ணுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி பாராட்டும் தமிழனின் நாகரிகம்தான் பொங்கல் திருநாள். வளமிக்க மாதம் தை மாதம். மழை மறைந்து, குளிர் குறைந்து, இதமான வெயில் படர்ந்து, நிலம் விளைந்து, அறுவடை முடிந்து, குடும்பங்களில் பொருளாதாரம் வந்து சேரும் மாதம் தை மாதம். கையில் காசு வரும் மாதம் தை மாதம். அதனால்தான் தை பிறந்தால் வழிபிறக்கும் என்கிறோம்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் நிலைமை எப்போதும் மகிழ்ச்சியில் இல்லை. உழவன் கணக்கு பார்த்தால், உழக்கு மிஞ்சாது என்பது தமிழ்நாட்டு பழமொழி. விளைந்தால் விலை இல்லை. விலை இருந்தால் விளைச்சல் இல்லை. விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்பதால்தான், பல கிராமத்து குடும்பங்கள் நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர். எல்லை கற்கள் மட்டும் இருந்த விளைநிலங்கள், இப்போது வீட்டுமனை கற்கள் நிறைந்து கட்டாந் தரையாகிவிட்டது. ‘‘கரும்பு நட்டேன் விற்கவில்லை. வாழை நட்டேன் விற்கவில்லை. நெல் நட்டேன் விற்கவில்லை. கல் நட்டேன் விற்றுவிட்டது’’ என்பது ‘‘விவசாயிகள் ஏன் விளைநிலங்களை விற்கிறார்கள்’’ என்பதுபற்றி எழுதப்பட்ட ஒரு சோகமான கவிதை. விவசாயிகளின் விளைநிலங்கள், ஏன் வீட்டுமனை நிலமாக ஆகிறது என்பதை அரசுகள் எண்ணிப்பார்த்து அவசர அவசியமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.

விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவேண்டும் என்று மத்திய–மாநில அரசுகள் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றன. நமது பிரதமர் நரேந்திரமோடி கூட 2022–ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கில் அறிவிப்புகளை வெளியிட்டார். அரசாங்கங்கள் விரும்புகின்றன. ஆனால், அதற்குரிய திட்டங்களும் இல்லை. நிதியும் ஒதுக்கப்பட வில்லை. இந்தியா விவசாய நாடு. விவசாயத்தை பெருக்கினால்தான் நாடு செழிப்பை காணமுடியும். விவசாயத்துக்கான திட்டம் வகுக்கும்போது அதிகாரிகளால் மட்டும் திட்டங்கள் வகுக்கப்படாமல், சேற்றில் உழன்று கொண்டிருக்கும் விவசாய பெருமக்களையும் பிரதிநிதிகளாக சேர்த்துக்கொண்டு வகுக்கவேண்டும். விவசாயம் வளர ஒரு சுலபமான வழி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமி‌ஷன் கூறியதுபோல, விவசாய உற்பத்தி செலவோடு 50 சதவீத தொகையை சேர்த்து விலை நிர்ணயம் செய்தால்தான் விவசாயம் தழைக்கும். அந்த காலகட்டங்களில்தான் பொங்குகிற பொங்கலில் சர்க்கரை இனிக்கும். அடுத்துவரும் ஆண்டுகளிலாவது பொங்கலை விவசாயிகளுக்கு இனிப்பான பொங்கலாக்க மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday, January 11, 2018

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

Published : 09 Jan 2018 11:00 IST

தொகுப்பு: கனி

விரிவானது சென்னை மாவட்டம்

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகாவும் சென்னை மாவட்டத்தின் பெருநகரப்பகுதியாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜனவரி 4 அன்று தொடங்கிவைத்தார். இதன்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள 67 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சென்னை மாவட்டம் 122 வருவாய் கிராமங்களுடன் 426 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்ஙகள், 16 வட்டங்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, வட சென்னையில் 32 வருவாய் கிராமங்களும், மத்திய சென்னையில் 47 வருவாய் கிராமங்களும், தென்சென்னையில் 43 வருவாய் கிராமங்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.


போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் ஊழியர்கள் ஜனவரி 4 இரவு வேலைநிறுத்தம் அறிவித்தனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 13வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்து ஊழியர்கள் 2.5 சதவீத ஊதிய உயர்வைக் கேட்டனர். ஆனால், அரசு தரப்பு இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், போக்குவரத்து தொழில்சங்கங்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றன.

30% மாணவர்கள்கூட சேராத பொறியியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் 30 சதவீத மாணவர்கள்கூட சேராத பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 142-லிருந்து 177 - ஆக அதிகரித்திருப்பதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் ஜனவரி 1 அன்று தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 526 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இதில் 177 கல்லூரிகளில் இந்தக் கல்வியாண்டில் மொத்தமிருக்கும் 77,509 இடங்களில் 12,399 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். குறைவான மாணவர்களைக் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் உத்திரபிரதேசத்தில் 169 கல்லூரிகளில் 30 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

பாகிஸ்தான் நிதியை நிறுத்தியது அமெரிக்கா

பாகிஸ்தான் ராணுவத்துக்கு வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்தபோவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 1 அன்று ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். 2002-ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கிவந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாததால், அமெரிக்கா தற்காலிகமாக 25.5 கோடி அமெரிக்க டாலர் நிதியை நிறுத்தியிருக்கிறது.


புதிய தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகர்

நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ‘ரா’ (RAW) வின் முன்னாள் தலைவர் ராஜிந்தர் கன்னா தேசியத் துணைப் பாதுகாப்பு ஆலோசகராக ஜனவரி 3 அன்று நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழு இவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியது. 2014 டிசம்பரில் இருந்து இரண்டு ஆண்டுகள் ‘ரா’வின் தலைவராகச் செயலாற்றிய இவர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தலைமைவகித்து இருக்கிறார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் தோவலின் கீழ் இவர் செயல்பட இருக்கிறார்.


எட்டு முதன்மைத் துறைகளில் 6.8% வளர்ச்சி

இந்தியாவில் நிலக்கரி, இரும்பு, உரம், இயற்கை எரிவாயு, சிமெண்ட், சுத்திகரிப்புத் தொழில், கச்சா எண்ணெய், மின்சாரம் ஆகிய எட்டு முதன்மைத் தொழில்துறைகள் 2017 நவம்பர்வரை 6.8 சதவீத வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ தரவுகளை ஜனவரி 1 அன்று வர்த்தக, தொழில் துறை வெளியிட்டிருக்கிறது. இதில் சிமெண்ட் 17.3 சதவீதமும், இரும்பு 16.6 சதவீதமும் சுத்திகரிப்புத் தயாரிப்புகள் 8.2 சதவீத வளர்ச்சியை அடைந்து இருக்கின்றன. ஒட்டுமொத்தத் தொழில் துறை உற்பத்தியில் இந்த எட்டுத் துறைகளின் உற்பத்தியின் அளவு 41 சதவீதம் என்பதால் இந்த வளர்ச்சி தொழில்துறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய வெளியுறவுத் துறை செயலர்

சீனாவுக்கான முன்னாள் தூதர் விஜய் கேஷவ் கோகலே, நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலராக ஜனவரி 1 அன்று நியமிக்கப்பட்டார். தற்போது பொருளாதார உறவுகளுக்கான செயலரான இவர், ஜனவரி 28 அன்று வெளியுறவுத் துறை செயலராகப் பதவியேற்கஇருக்கிறார். தற்போதைய வெளியுறவுத் துறை செயலர் எஸ். ஜெய்ஷங்கரின் பதவிக் காலம் முடிவடைவதால், மத்தியப் பணியாளர் அமைச்சகம் இவரைப் புதிய செயலராக அறிவித்து இருக்கிறது. டோக்லம் பிரச்சினையின்போது பெய்ஜிங்கில் நடைபெற்ற வெளியுறவுப் பேச்சுவார்த்தையில் இவர் முக்கிய பங்கு வகித்தார் .


அணுசக்தித் தளங்கள் பட்டியல்

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் அணுசக்தித் தளங்களின் பட்டியல் பகிர்வு நடைமுறை ஜனவரி 1 அன்று நடைபெற்றது. அணுசக்தித் தாக்குதலுக்கு எதிரான தடை ஒப்பந்தத்தின்படி, 1991-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த நடைமுறையை இரண்டு நாடுகளும் பின்பற்றிவருகின்றன. அணுசக்தித் தாக்குதலுக்கு எதிரான தடை ஒப்பந்தம் 1988-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு நாடுகளும் அணுசக்தி வசதிகளைப் பயன்படுத்தி நேரடியாகவோ மறைமுகமாகவோ பரஸ்பரம் சேதங்களை ஏற்படுத்தமுடியாது.
வரலாறு தந்த வார்த்தை 17: பாஸ்போர்ட்டில் இரண்டு வகை

Published : 09 Jan 2018 11:10 IST


ந. வினோத் குமார்




புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் செலுத்திய 125 பேர் பின்னால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும்போது, தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என்று சென்னைக் காவல்துறை அறிவித்திருப்பதுதான் கடந்த வாரம் பலரை ‘தள்ளாட’ வைத்த செய்தி.

‘ஏம்பா, குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா ‘ஃபைன்’ போடுங்க. அதை விட்டுட்டு, பாஸ்போர்ட்டுல எல்லாமா கை வைக்கிறது?’ என்று சிலர் கேட்கலாம். ஆனால், அப்படிச் செய்தால் மட்டுமே ‘குடி’மகன்கள் வண்டியைப் பிறர் மீது மோதி, அவர்கள் ‘மேலே’ செல்வதற்கு ‘பாஸ்போர்ட்’ கொடுக்காமல் இருப்பார்கள் என்று காவல்துறை நினைத்திருக்கலாம்.

இப்படிக் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதிலிருந்து ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் பிறந்திருக்கிறது என்பதை உங்களால் ஜீரணித்துக்கொள்ள முடிகிறதா?

‘One for the road’ - இதுதான் அந்தச் சொற்றொடர். ‘விடை பெறுவதற்கு முன்னால் ஒரு பெக்’ என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். இன்றைக்கு இருப்பதுபோல, 18-ம் நூற்றாண்டில் நெடுஞ்சாலைகள் கிடையாது. அதனால் மோட்டல்களும் இல்லை. என்றாலும், எப்போதும் பயணிகள் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்?

அன்றைய இங்கிலாந்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பயணிகள் புறப்பட்டால், வழியில் தேவைப்படும் உணவு உள்ளிட்ட இதர விஷயங்களை மூட்டை கட்டி எடுத்துக்கொள்வார்களாம். அந்த மூட்டையை ‘ஒன் ஃபார் தி ரோட்’ என்று சொல்வது வழக்கம். இப்படித்தான் அந்தச் சொற்றொடர் புழக்கத்துக்கு வந்தது. பிற்காலத்தில், நண்பர்களுடனான பார்ட்டியை முடித்துக்கொண்டு, அவர்களிடமிருந்து பிரிய மனம் வராமல், ‘கடைசியா ஒரு ரவுண்டு!’ என்று கெஞ்சி, ஒரு வாய் சாப்பிட்டுப் போவதற்கு மேற்கண்ட சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

பார்ட்டியிலிருந்து விடைபெறும்போது இந்தச் சொற்றொடரைச் சிலர் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். ஆனால், ‘ஊற்றிக்கொள்வது’ அதிகமாகிவிட்டால், நாம் ஒரேயடியாக ‘மேலே செல்வதற்கான பாஸ்போர்ட்’ உடனடியாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, மறந்துவிட வேண்டாம்.
 கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

Published : 10 Jan 2018 20:38 IST

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வரும் 12-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை வரும் 13-ம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது. 13-ம் தேதி போகியும், 14-ம் தேதி பொங்கலும், 15-ம் தேதி மாட்டுப்பொங்கலும், 16-ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 13-ம் தேதி போகிப்பண்டிகை சனிக்கிழமை வருகிறது. அதையடுத்து ஞாயிறு, திங்கள், செவ்வாய் என பண்டிகை வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு ஒரு ஆணையை வெளியிட்டுள்ளது. ஆளுநர் ஆணையின் படி முதன்மைச்செயலர் சுனில் பாலீவால் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
''தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நம் மாநிலம் முழுதும் சீரிய முறையில் கொண்டாடும் பொருட்டும் குறிப்பாக கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களில் பயிலும் மாணவச்செல்வங்கள் அவர்களது இளவயது கொண்டே தமிழர் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் பொருட்டும், அவர்களது பெற்றோர் மற்றும் சுற்றத்துடன் இணைந்து உவப்புடன் களித்திடும் பொருட்டு.தமிழகத்தில் உள்ள உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைகழகங்களுக்கு கீழ் இயங்கும் உறுப்புக்கல்லூரிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக வருகிற 12.01.18 வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளித்து அரசு ஆணையிடுகிறது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்படுகிறது.

எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா என மக்கள்... கொதிப்பு! எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளத்தை, 55 ஆயிரம் ரூபாயில் இருந்து, 1.05 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதற்கான, சட்ட மசோதாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனால், கொதிப்படைந்துள்ள மக்கள், 'எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா; இதற்கு மட்டும், நிதி நெருக்கடி இல்லையா' என, கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சம்பள உயர்வை, ஏற்கனவே முதல்வர் அறிவித்த அன்று, தி.மு.க.,வரவேற்றது; இன்று எதிர்ப்பு நாடகமாடுவதாக, சபாநாயகர் தனபால் கிண்டல் அடித்தார்.




சட்டசபையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ., சம்பள உயர்வு மசோதாவில்கூறப்பட்டுள்ளதாவது: எம்.எல்.ஏ.,க்களின் மாதாந்திர சம்பளம், 8,000 ரூபாயில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி, 7,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரமாகவும்; டெலிபோன் படி, 5,000 இருந்து, 7,500 ரூபாயாகவும்...

தொகுதிப்படி, 10 ஆயிரத்தில் இருந்து, 25 ஆயிரமாகவும்; தொகுப்புப்படி, 2,500 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும்; வாகனப் படி, 20 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.தற்போது வழங்கப்படும் அஞ்சல் படி, 2,500 ரூபாயாக, தொடர்ந்து வழங்கப்படும். இதன்மூலம், தற்போது எம்.எல்.ஏ.,க்கள், சம்பளம் மற்றும் இதர படிகள் சேர்த்து, மாதம் தோறும், 55 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர். இம்மாதம் முதல், 1.05 லட்சம் ரூபாய் பெறுவர்.

ஈட்டுப்படி

அமைச்சர்கள், சபாநாயகர்ஆகியோருக்கு, ஈட்டுப்படி, 15 ஆயிரம் ரூபாயாகவும், சில்லரை செலவினப்படி, 10 ஆயிரம் ரூபாயாகவும், தொகுதிப்படி, 25 ஆயிரம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும். துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கு வழங்கப்படும் ஈட்டுப்படி, 15 ஆயிரம் ரூபாயாகவும், சில்லரை செலவினப்படி, 7,500 ரூபாயாகவும், தொகுதிப்படி, 25 ஆயிரம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்.

ஓய்வுபெற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாத ஓய்வூதியம், 12 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.குடும்ப ஓய்வூதியம், 10 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்.


முன்னாள், எம்.எல்.ஏ.,க்களின் மருத்துவ சிகிச்சை தொகை, ஆண்டுக்கு, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.

அறிவித்தார்

'உயர்த்தப்பட்ட சம்பளம்,ஓய்வூதியம் மற்றும் இதர படிகள், 2016 ஜூலை, 1 முதல்வழங்கப்படும்' என, 2017 ஜூலை மாதம், சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, சம்பள உயர்வு வழங்குவதற்காக, சட்டசபையில், நேற்று சட்ட மசோதாவை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதை ஆரம்ப நிலையிலே, தி.மு.க., எதிர்ப்பதாக, அக்கட்சி கொறடா, சக்கரபாணி தெரிவித்தார். சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரனும் எதிர்ப்பதாக கூறினார்.அப்போது, சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, 'அன்று மேஜையை தட்டி, மகிழ்ச்சி தெரிவித்தீர்கள்; இன்று எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்' என, கிண்டல் செய்தார். இந்த மசோதா, சட்டசபை கூட்டத்தொடர், நிறைவு நாளில் நிறைவேற்றப்படும்.

'இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஆண்டுக்கு, 25.32 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும். போக்குவரத்து தொழிலாளர்கள், ஊதிய உயர்வுக்காக, வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில், எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம், இரு மடங்காக உயர்த்த வேண்டியது அவசியமா; இதற்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லையா' என, பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

'தேர்தலில், வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, வெற்றி பெறுவோருக்கு, அரசாங்க சம்பளம் எதற்கு' என்றும், 'சம்பளமே அனாவசியம் என்கிறபோது, இரு மடங்கு உயர்வு என்பது அநியாயம்' என்றும், சமூக வலைதளங்களில், அரசுக்கு எதிராக, ஆவேச கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

- நமது நிருபர் -
ஜெ., இருந்தபோது பேச அஞ்சியவர்கள் இன்று துள்ளி குதிக்கின்றனர்: செம்மலை

Added : ஜன 11, 2018 01:38

சென்னை: ''ஜெ., ஆட்சியிலிருந்தபோது, வெளியில் வந்து பேச அஞ்சியவர்கள் எல்லாம், இன்று துள்ளி குதிக்கின்றனர்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - செம்மலை: கவர்னர் உரையை வைத்து, ஆட்சியை கணித்து விடலாம். ஆட்சியின் தொலைநோக்கு பார்வையை, கவர்னர் உரை பிரதிபலிக்கிறது. ஜெ., அரும்பாடுபட்டு உருவாக்கிய ஆட்சியை, முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறம்பட, ஆட்சி செய்து வருகின்றனர்.


அ.தி.மு.க., ஆட்சி என்றாலே, அமைதியாக இருக்கும்; அராஜகம் இருக்காது; மக்கள் பயமின்றி வாழலாம். அ.தி.மு.க., ஆட்சியை பொறுத்தவரை, மக்கள் கவலையின்றி இருக்கலாம். இந்த ஆட்சியை கவிழ்ப்போம். ஓரிரண்டு மாதங்களில் கவிழ்த்து விடுவோம் எனக் கூறி வருகின்றனர்.
ஜெ., ஆட்சியிலிருந்தபோது, வெளியில் வந்து பேச அஞ்சியவர்கள் எல்லாம், இன்று துள்ளி குதிக்கும் நிலை உள்ளது.


இந்த ஆட்சி மீது, எதிர்க்கட்சியினர், கற்பனையான குற்றச்சாட்டை கூறுகின்றனர். கடும் நிதி நெருக்கடியிலும், ஜெ., கொண்டு வந்த திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசிடம் மண்டியிடுவதாக, கற்பனையான குற்றச்சாட்டை கூறுகின்றனர்.
நாங்கள் ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கிறோம்; எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம்.
மோட்டார் வாகன சட்டம், முத்தலாக் சட்டம் உட்பட பலவற்றை எதிர்க்கிறோம். 'உதய்' திட்டத்தை எதிர்த்தோம்; நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின் ஆதரித்தோம். மீத்தேன் திட்டத்திற்கு, தி.மு.க., ஆட்சியில் ஒப்புதல்அளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின்: இது தொடர்பாக, பல முறை விளக்கம் அளித்துள்ளேன். மீத்தேன் திட்டம் ஆய்வுக்கு தான் ஒப்புதல் அளித்தோம். திட்டம் நிறைவேற்ற, ஒப்புதல் அளிக்கவில்லை.


செம்மலை: ஆய்வுக்கு ஒப்புதல் அளித்தால்,திட்டத்திற்கு ஆதரவு என்று தானே அர்த்தம்.
ஸ்டாலின்: பல திட்டங்களின் ஆய்வுக்கு அனுமதி அளிப்போம். அதில் சிலவற்றை மட்டும் ஏற்றுக் கொள்வோம். அனைத்தையும் ஏற்பதில்லை.


இவ்வாறு விவாதம் நடந்தது.
அ.தி.மு.க.,வினருடன்
தினகரன் வாக்குவாதம்!


அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை பேசுகையில், ஸ்டாலின் அறிக்கை குறித்து, சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலினுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், செம்மலையின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து, சில கேள்விகளை எழுப்பினார். இரு தரப்பிலும் கடும் விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து, செம்மலை மற்றும் ஸ்டாலின் பேசியது, சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக, சபாநாயகர் அறிவித்தார்.


அதன்பின், அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,வினருக்கும், சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரனுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் நடந்தது. பரஸ்பரம் குற்றம் சாட்டினர். அதையடுத்து, செம்மலை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர் தங்கமணி, தினகரன் ஆகியோர் பேசிய அனைத்தும் நீக்கப்படுவதாக, சபாநாயகர், தனபால் அறிவித்தார்.
வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் நுழைவு சீட்டு வழங்கும் முறை அறிமுகம்



வண்டலூர் பூங்காவில் ஆன்–லைன் மூலம் நுழைவு சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 11, 2018, 05:04 AM

வண்டலூர்,

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களின் வசதிக்காக ஆன்–லைன் மூலமாக நுழைவு சீட்டுகள் வழங்கும் முறை மற்றும் பூங்காவின் இதர வசதிகளான மின்கல ஊர்தி, சிங்க மான் உலாவிட ஊர்தி போன்ற வசதிகளையும் பெறும் முறை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
 
ஆன்–லைன் மூலமாக நுழைவு சீட்டுகள் மற்றும் இதர வசதிகள் முன் பதிவு செய்ய விரும்புவோர் www.aazap.in அல்லது www.vandalurzoo.com ஆகிய இணையதளங்கள் மூலமாக பதிவு செய்யலாம்.

பார்வையாளர்கள் தங்களது பெயர், பூங்காவிற்கு வருகை தரும் நாள் மற்றும் நபர்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி ஆக்ஸிஸ் வங்கி மூலமாக செய்யப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக பதிவு செய்த பார்வையாளர்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக பதிவு குறித்த விவரம் அறியப்படுவார்கள். பார்வையாளர்கள் நுழைவுசீட்டு பதிவு செய்த விவர ரசீது மற்றும் ஆளறி சான்று ஆகியவற்றை தங்கள் வருகையின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

இணைய வழி மூலமாக முன் பதிவு செய்த பார்வையாளர்கள் தனி வழி மூலமாக அனுமதிக்கப்படுவார்கள். இந்த வசதியால் பார்வையாளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும்.

வங்கி கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மற்றும் பற்று அட்டை (டெபிட் கார்டு) மூலமாகவும் நுழைவுசீட்டு பெறும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பொங்கல் விடுமுறை காலத்தில் பார்வையாளர்கள் அதிக அளவில் பூங்காவிற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதால் ஆன்–லைன் மூலமாக நுழைவுசீட்டுகள் வழங்கும் வசதி முன்கூட்டியே பார்வையாளர்கள் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வருகிற 16–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலை முன்னிட்டு பூங்கா திறந்திருக்கும் இவ்வாறு பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Man submits fake NEET cert at AIIMS, held

Man submits fake NEET cert at AIIMS, held  TIMES OF INDIA 28.10.2024  Ramanathapuram : Ramanathapuram district police have arrested a 22-yea...