Sunday, January 14, 2018

'மருத்துவ கட்டணம் செலுத்தாத நோயாளியை சிறை பிடிப்பது குற்றம்'

Added : ஜன 14, 2018 01:27 |

  மும்பை:'மருத்துவ சிகிச்சை பெற்றதற்கான கட்டணத்தை செலுத்தாததற்காக, குணமான நோயாளியை பிடித்து வைப்பது சட்ட விரோதம்; மக்கள் அனைவரும், இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்' என, மும்பை உயர் நீதிமன்றம் கூறிஉள்ளது.


மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, சமீபத்தில், இரு தனியார் மருத்துவமனைகளில், மருத்துவ கட்டணம் செலுத்தாத நோயாளிகளை, மருத்துவமனை நிர்வாகம் வெளியே விட மறுத்து, பிடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது


இது தொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தர்மாதிகாரி, பாரதிய தாங்ரே அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'உடல் நலன் குணமான நோயாளியை, கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் பிடித்து வைத்திருப்பது, சட்ட விரோதம்.'இதை, மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட வேண்டும். குணமான நபரை பிடித்து வைப்பது, தனிநபர் சுதந்திரத்தை மீறும் செயல்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.10.2024