Saturday, January 13, 2018

விஜயபாஸ்கர் உதவியாளர் மீது லஞ்ச புகார் : சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கு

Added : ஜன 13, 2018 04:26

மதுரை: 'சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் மீதான லஞ்ச புகார் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை பில்லான்குடியை சேர்ந்த கார்த்திகா தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை மாவட்ட சத்துணவு பணியாளர்கள் நியமனத்தில் விதி
மீறல் நடந்துள்ளது. லஞ்சம் பெற்று பலரை நியமித்துள்ளனர். லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை இல்லை. சுகாதாரத்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் அன்பானந்தம், '3 லட்ச ரூபாய் கொடுத்தால் பணி நியமனம் வழங்கப்படும்' என்றார்.
நியமன முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ., சென்னை இணை இயக்குனருக்கு மனு அனுப்பினேன். சி.பி.ஐ.,விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனு செய்துள்ளார்.
மனு விரைவில் விசாரணைக்கு பட்டியல் இடப்படும்.

No comments:

Post a Comment

7 medical colleges not paying stipend to MBBS interns, residents- NMC tells Supreme Court, penalty proceedings initiated

7 medical colleges not paying stipend to MBBS interns, residents- NMC tells Supreme Court, penalty proceedings initiated Written By : Barsha...