Sunday, July 29, 2018

மனசு போல வாழ்க்கை 28: காட்சிகள் காட்டும் பிம்பங்கள்

Published : 29 Sep 2015 12:28 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்



ஒரு முறை கிடைக்கும் தகவலை வைத்துக்கொண்டே “இது இப்படித் தான்!” என்று முடிவு கட்டுவது மனதின் முக்கியமான தன்மை. ஒரே முறை ஒரு ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்று முடிவு கட்டும். முதல் முறை பார்க்கும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாத உறவினரை மண்டைக் கனம் பிடிச்சவன் என்று எண்ண வைக்கும். முதல் முறையாகத் தோன்றும் அபிப்பிராயத்தை எப்படியாவது தக்க வைக்கத் துடிப்பதும் மனதின் இயல்புதான்.

நாடு, மதம், இனம், மொழி, ஊர், தொழில் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் கருத்து வைத்திருக்கிறோம். இந்தக் கருத்தைப் பெரும்பாலும் பத்திரமாக வளர்த்துவருகிறோம்.

தோற்றத்தின் உள்ளே..

டி.வியில் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்து பவரைப் பெரிய அறிவாளியாக நினைக்கிறோம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பின்னால் ஒருவர் சொல்ல ‘டாக் பேக்கில்’ உள்வாங்கி ஏற்றஇறக்கமாக பேசுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால், அவ்வாறு நினைப்போமா? சினிமாவில் கதாநாயக நடிகர்களைப் பெரிய வீரர்கள் என்று நினைப்போம். அவர்கள் தங்கள் படம் வெளிவரவும் அதை ஓடவைக்கவும் எந்த அளவுக்கும் பணிந்துபோகிறார்கள் என்ற செய்திகளும் வரத்தானே செய்கின்றன.

அதற்குப் பிறகும் அவர்களை மாவீரர்கள் என கருதுவீர்களா? டாக்டர் என்றாலே அவர் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு தெரிந்தவர் என்று நினைக்கிறோம். அவரது மருத்துவத் துறையைத் தவிர மற்ற மருத்துவத் துறைகளில் நிபுணர் அல்ல என்று ஒரு மறுபக்கம் இருக்கிறதே. அதை நம்ப மறுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

ஏட்டுப்படிப்பு அதிகமாக இல்லாதவரை அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதேபோல நிறைய பட்டங்கள் படித்தவர் என்பதாலே அவரை அறிவுஜீவி என்று நம்புகிறோம். ஏராளமான எழுத்தாளர்கள் பெரிய கல்வித் தகுதிகள் இல்லாதவர்கள். முனைவர் பட்டம் பெற்ற பலருக்கு பாடப்புத்தகமும், வாரப்பத்திரிகையும் தவிர மற்ற வாசிப்பு இல்லை இருந்தும் படித்தவர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அப்படியேதான் வைத்திருப்போம்.

கொட்டுமா, உதிருமா?

அதே போல காசுக்காக எதையும் செய்பவர்கள் வியாபாரிகள் என்று நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் சேவை புரியும் நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள். மிக நாணயமாக, மக்களுக்குத் தீங்கு வரக்கூடாது என்று செயல்படுகிற பல வியாபாரிகள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களில் பலர் மிகுந்த வியாபார நோக்குடனும் மக்கள் விரோதமாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

இப்படி நம் கற்பிதங்களுக்கு நேர்மாறாகப் பலர் பல திறமைகளுடனும் ஆளுமைகளுடனும் இருக்கிறார்கள்.

முரடானது காவல்துறை. அதன் அதிகாரியாக இருந்த திலகவதி ஐ.பி.எஸ் மென்மையாக எழுதுகிறார். அதேபோல இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜென் துறவி போலத் தத்துவம் பேசுகிறார். அரசியல்வாதியான வைகோ வரலாற்றுப் பேராசிரியர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசுகிறார். என் நண்பர் டாக்டர் விஜயராகவன் அற்புதமாகத் தமிழில் செய்யுள் இயற்றுவார். அதை விட அபாரமான நகைச்சுவைத் திறனும் அவருக்கு உண்டு. புற்று நோய்க்குச் சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கையும் நகைச்சுவையும் குறையாமல் செயல்படுவார்.

“முடி கொட்டுமா டாக்டர்?” என்பார்கள். “ தேள்தான் கொட்டும். முடி உதிரும்!” என்று இலக்கணமும் நகைச்சுவையும் பேசி வைத்தியம் பார்ப்பார். அதே போல, சிவ ஆலயங்களைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடும் ஐ.டி. பணியாளர்களை எனக்குத் தெரியும். தங்கள் சொற்பமான சம்பளத்தின் பெரும்பங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளுக்குச் செலவு செய்யும் தம்பதியை எனக்குத் தெரியும்.

அதே போல, கார்ப்பரேட் நிறுவனங்கள் போலச் செயல்படும் கட்சிகளும் மடங்களும் மதச் சார்பு நிறுவனங்கள் உண்டு. அரசியல் தலைவரை மிஞ்சுகிற கவர்ச்சி மிக்க சாமியார்கள் இருக்கிறார்கள். துறவிகளாக வாழும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

வேண்டாம் பிம்பங்கள்

ஆனாலும் நம் மனம் சில அபிப்பிராயங்களை அப்படியே தக்க வைக்கத் துடிக்கிறது. “இவர்கள் இப்படித்தான்” எனும் அபிப்பிராயமே நமது சிந்தனையைக் கட்டிவைக்கும் ஒரு சங்கிலி. அதை உடைத்துவிட்டுச் சுதந்திரமாகப் பார்க்கும் பொழுது உலகம் இன்னமும் நிஜமாகவும் தெளிவாகவும் புரியும்.

எனக்குத் தமிழில் எழுத வராது. சில “ஆவி எழுத்தாளர்களை” பணித்துத் தான் கட்டுரைகளைச் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறேன் என்று ஒரு பேராசிரியர் பேசிவந்தார். ஆவிக்குத் தரும் அங்கீகாரத்தை இந்தப் பாவிக்குத் தர அவர் மனம் மறுக்கப் பல காரணங்கள். “ நீங்கள் சொல்வதை நிருபர்கள் எழுதுவார்கள் அல்லவா?” என்று பல முறை என் தொழில் முறை நண்பர்கள் கேட்பார்கள். “எழுத ஏது நேரம்?” என்பார்கள். “பேச்சு முழுதும் ஆங்கிலத்தில், எழுத்து மட்டும் எப்படி தமிழில்?” என்று லாஜிக்கலாக மடக்குவார்கள் சிலர்.

இவர்களின் பிரச்சினை நானல்ல. அவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் தான்!

நான் கோபப்படுகையில் என் நண்பர்கள், “நீங்களே கோபப்படலாமா?” என்று என் உளவியல் பின்னணியை இணைத்துக் கருத்து சொல்வார்கள். உளவியல் படித்தவர்கள் எல்லாம் மனதை வென்ற மகான்கள் அல்ல என்று சொல்வேன். படைப்புகளை வைத்துப் படைப்பாளி பற்றிய அபிப்பிராயம் வளர்த்தல் ஆபத்தானவை.

இப்படித்தான் நடிகர்களிடம் நாட்டைக் கொடுக்கிறோம். அதிகம் தெரியாத சாமியார் காலில் குடும்பமாகச் சென்று காலில் விழுகிறோம். நன்கு பேசுகிறார் என்றால் உடனே அறிவுஜீவியாக உயர்த்திவிடுகிறோம். கூட்டத்தை வைத்துப் பிரபல்யத்தைக் கணக்கிடுகிறோம்.

இவை மனதின் செயல்பாடுகள் என்பதை மட்டும் புரிந்துகொள்வோம். வண்ணம் பூசாத கண்ணாடி கொண்டு வாழ்க்கையைப் பார்ப்போம். அதுதான் அழகு. அது தான் ஆரோக்கியம்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
தொழில் தொடங்கலாம் வாங்க! - 04: ஏதாவது செய்ய முடியுமா?

Published : 28 Feb 2017 10:54 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்




தொழில் தொடங்கும் புள்ளி என்று எதைச் சொல்லலாம்? தொழில் எண்ணம் கொண்டவர்களுக்குச் சந்தையில் நிறைய வாய்ப்புகள் கண்ணில் தென்படும். ‘இதைச் செய்தால் காசு வரும்’ என்று தோன்றக்கூடிய பத்து ஐடியாக்களையாவது நீங்கள் தாண்டி வந்திருப்பீர்கள். தொழில் முனைவோரின் ஆதாரத் தகுதி சந்தை வாய்ப்புகளைக் கண்டு கொள்வதுதான்.

ஆரம்பிக்கலாம், பண்ணலாம், தரலாம்!

பிறர் கண்களுக்குத் தெரியாத தொழில் வாய்ப்புகளை நீங்கள் உணர்வீர்கள். மனம் ஒட்டுமொத்த வியாபாரச் சுழற்சியையும் ஒரு முறை நடத்தி ஒத்திகை பார்க்கும். பிறரிடம் சொல்லி சிலாகித்துக்கொள்வீர்கள்.

“சுத்து வட்டாரத்துல ஓட்டலே கிடையாது. இவ்வளவு கவர்மெண்ட் ஆஃபீஸ்கள் இருக்கு. ஒரு டிஃபன் சென்டர் போடலாம்!”

“நாங்க குடியிருக்குற ஃப்ளாட்ல மட்டும் 250 குடும்பங்கள் இருக்கு. நிறைய வயசானவங்க தனியா இருக்காங்க. அவங்களுக்கு தேவையான எல்லா வெளி வேலைகளையும் பாக்க ஒரு சர்வீஸ் ஏஜென்சீஸ் ஆரம்பிக்கலாம்!”

“ஃபைனல் இயர் படிக்கிற பசங்களுக்கு இண்டெர்ன்ஷிப் கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு ஆப் (App) செஞ்சு காலேஜ் பசங்களையும் இண்டஸ்ட்ரி ஹெச். ஆர். எல்லாம் கனெக்ட் பண்ணலாம்!”

“எல்லாருக்கும் இயற்கை உணவு மேலதான் இப்ப கவனம் வந்திருக்கு. ஆனா போய் வாங்கத்தான் சிரமப்படறாங்க. அதனால் ஹோம் டெலிவரி செய்யலாம். ஆர்டரின் பேரில் வாங்கித் தரலாம்!”

இதில் எதுவும் பூமியைப் புரட்டிப் போடும் புதிய சிந்தனை இல்லை. இந்தத் தேவைகள் எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதை ஒரு வியாபாரமாக உருவாக்குவதுதான் தொழில் முனைவோரின் திறமை.

விரக்தி உருவாக்கியத் துறை

கண்ணில் படும் தேவையை வைத்துப் பிஸினஸ் மாடல் பிடிக்கலாம். ரெட் பஸ் போல. தீபாவளிக்கு முன் இரவு நாலைந்து மணி நேரங்கள் அலைந்தும் பஸ் கிடைக்காமல் விரக்தியோடு திரும்பியவர் மனதில் உதித்தது இதுதான். பல பிரயாணிகளுக்கு எந்தப் பஸ்ஸில் இடம் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் பண்டிகை நாளில்கூடச் சில பஸ்கள் முழுக்க நிரப்பப்படாமல் புறப்படுகின்றன. காரணம் இந்தத் தகவல் இரண்டு பக்கமும் இல்லை. இதைப் பூர்த்தி செய்ய ஒரு தகவல் தொடர்பு சேவை இருந்தால்? இந்த எண்ணம் ஒரு கம்பெனியை மட்டும் உருவாக்கவில்லை. ஒரு துறையையே உருவாக்கியுள்ளது.

நடந்தபடியே பாட்டுக் கேட்போமா?

எல்லாத் தேவைகளும் கண்ணில் படுமா? வாடிக்கையாளர்களுக்கே தெரியாத தேவைகள் நிறைய உள்ளன. அவர்கள் அதைக் கேட்க மாட்டார்கள். கொடுத்தால் ஆர்வமாக வாங்கிக் கொள்வார்கள். உதாரணம் வாக் மேன்.

மியூசிக் சிஸ்டம் என்றால் வரவேற்பு அறையில் உட்கார்ந்து அமைதியாகக் கேட்பது என்பதுதான் உலகம் முழுதும் நடைமுறை. சாலையில் நடந்து போகும்போது இசை கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? சோனி நிறுவனர் அகியோ மொரீடோவுக்கு இப்படி ஒரு எண்ணம். ஆனால் இப்படி ஒரு தேவை இருப்பதாக எந்த சந்தை ஆய்வும் சொல்லவில்லை. யாரும் கடை தேடி வந்து கேட்கவும் இல்லை. ஒரு அனுமானம்தான் இருந்தது முதலாளிக்கு. போர்ட் உறுப்பினர்களிடம் சொன்ன போது யாரும் இதைப் பெரிதாக வரவேற்கவில்லை. மனம் தளராத மொரீடா இதைத் தன் ஆர் & டி பணியாக எடுத்துச் செய்ய ஆரம்பித்தார்.

ஒரு நாள் அதைச் சிறிய அளவில் வெளியிட்டார். வாக் மேன் என்று பெயரிட்டார். “என்ன பெயர் இது? நடக்கவும் உதவவில்லை. ஆண்களுக்கானதுமில்லை. ப்ராடெக்டும் புதுசு” என்று எல்லோரும் புருவம் உயர்த்தப் பெயரை மட்டுமாவது மாற்றலாமா என்று யோசித்தார். ஆனால் அதற்குள் இது பரபரப்பாக விற்பனை ஆனது, வாடிக்கையாளர்களிடம் பதிந்துவிட்ட பெயரை மாற்ற வேண்டாம் என்று அப்படியே விட்டு விட்டார் அகியோ மொரீடா. வாக் மேன் ஒரு தலைமுறையையே தன் கட்டுக்குள் வைத்திருந்தது.

யாருக்கும் தெரியாத தொழில் தேவையை எப்படிக் கண்டு பிடித்தார்? அதனால்தான் அவர் தொழில் மேதை. சோனி நிறுவனம் நுழையாத துறை இல்லை எனும் அளவுக்கு வளர, இந்தக் குணம்தான் காரணமாக இருந்தது.

முதலீட்டுக்கும் முன்னால்

உங்களைச் சுற்றி, உங்களுக்குத் தெரிந்து, உங்களால் செய்ய முடியும் என்று நீங்கள் நம்பக்கூடிய தொழில் தேவைகளைப் பட்டியல் இடுங்கள். கண்ணில் படும் எல்லாத் தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்ய முடியாது. நூற்றுக்கணக்கான ஐடியாக்களில் சரியானதைத் தேர்வுசெய்வதில்தான் பாதி வெற்றி உள்ளது.

என்னிடம் தொழில் ஆலோசனை கேட்டு வரும் பலர் இந்த முதல் படியையே தாண்டுவதில்லை.

“ஏதாவது தொழில் செய்யணும் சார். கொஞ்சம் பணம் இருக்கு. என்ன செஞ்சா நல்லா பெரிய லெவலுக்கு வரலாம்னு சொல்லுங்க!” என்று யாராவது கேட்டால் அவர்கள் பிஸினஸுக்கு இன்னமும் தயாராகவில்லை என்றுதான் பொருள்.

நூறு தொழில் யோசித்து, பத்துத் தொழில் ஆராய்ந்து, ஓரிரு தொழிலுக்கு மாதிரி தயாரித்து, ஆலோசனை கேட்டுவிட்டுப் பணம் முதலீடு செய்வது நல்லது. பணத்தைப் போட்டு ஆரம்பித்த பின் யோசித்தால் அதைக் காப்பாற்ற நிறைய செலவு செய்ய வேண்டிவரும்.

மறைந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான ராம நாராயணன் ஒரு கருத்தைச் சொன்னார், “ பேப்பரில் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி எழுதிக் கிழித்துப் போடலாம்; ஆனால் ஃபிலிமில் எடுத்து வெட்டி வெட்டி எறியக் கூடாது!”

ஒரு இயக்குநர் என்பதை விடப் படத்தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் மீது அளப்பரிய மரியாதை உண்டு எனக்கு. பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கும் திரைப்படத் துறையிலேயே பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் லாபகரமாகப் படங்கள் எடுத்தவர் அவர். அவர் சொன்னது சினிமாவிற்கு மட்டுமல்ல. எல்லாத் தொழிலுக்கும் பொருந்தும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


ராகயாத்திரை 12: மனத்தில் பூத்த ராக மலர்

Published : 05 Jul 2018 14:56 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



‘இது நம்ம பூமி’ படத்தில் கார்த்திக், குஷ்பு

சென்ற வாரம் கேட்ட கேள்வியோடு தொடங்குவோம். சிவகுமார் நிஜமாகவே நல்ல ஓவியர். அவர் சில படங்களில் ஓவியராக நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த ஒரு படம்தான் ‘மனிதனின் மறுபக்கம்’ (1986). அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு அருமையான பாடல் பிருந்தாவன சாரங்கா ராகத்தில் அமைந்திருக்கிறது. ‘கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன’ என்ற அந்தப் பாடலை ஜானகியின் குரலில் கல்லுக்குள்ளும் ஈரம் கசிய வைக்கும் வகையில் அமைத்திருப்பார் இசைஞானி.


சரியான பதில்சொன்ன பலரில் முதல்வர்களான ஸ்ரீரங்கம் ஹிமயா, அய்யன்கோட்டையன் முத்து ஆகியோருக்குப் பாராட்டுகள்.

மென்மையான காதல் பாடல்களுக்கு இந்த ராகத்தை ராஜா பயன்படுத்தியிருப்பார். ‘டிசம்பர் பூக்கள்’ (1986) என்றொரு திரைப்படம். இந்த முறை ஓவியராக நடித்தது மோகன். அந்தப் படத்தில் ‘மாலைகள் இடம் மாறுது... மாறுது’ என்ற இனிமையான பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார். யேசுதாஸ் சித்ரா குரல்களில் ஆரம்ப கோரஸ், வயலின், குழல், சிதார் என வழக்கமான பக்கவாத்தியக் கச்சேரி நடத்தியிருப்பார். பாடல் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. யாரும் முகரவில்லை என்றாலும் காட்டு மலர் மணம் குறையுமா? அதுபோன்றதே இந்தப் பாடலும்.

நாட்டுப்புற மெட்டில்...

காதல் என்றால் நடிகர் முரளி இல்லாமலா? திரைப்படம் முடிந்த பிறகும் காதலைச் சொல்லாமல் தயங்கும் கதாபாத்திரங்களுக்காக வார்க்கப்பட்டவர்போல பல படங்களில் நடித்திருப்பார். அவர் அறிமுகமான ‘பூவிலங்கு’ (1984) படத்தில் இந்த ராகத்தில் இடம்பெற்றது அந்த அட்டகாசமான பாடல். இளையராஜாவே பாடியுள்ள ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடலே அது. குழல் இசையோடு தொடங்கும் அந்தப் பாடலில் நாட்டுப்புற மெட்டில் இந்த ராகத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

அதே போல் ‘இது நம்ம பூமி’ (1992) என்ற திரைப்படம். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனவை. அதில் ஒரு மென்மையான பாடல் ‘ஒரு போக்கிரி ராத்திரி’. மனோ சுவர்ணலதாவின் குரல்களில் ஒலிக்கும். அதுவும் பிருந்தாவன சாரங்காதான். விறுவிறுப்பான இரண்டு பாடல்களை இந்த ராகத்தில் சொல்லலாம். ஒன்று ‘பிரியங்கா’ (1994) என்ற திரைப்படத்தில் வந்தது.

இந்தியில் சக்கை போடு போட்ட ‘தாமினி’ என்ற இந்திப் படத்தின் மறுஆக்கம் இப்படம். அதில் ஓர் அருமையான பாடல் அமைத்திருப்பார் ராஜா. ‘இந்த ஜில்லா முழுக்க நல்லாத் தெரியும்’ என்னும் அந்தப் பாடலில் உற்சாக ஊர்வலம் நடத்திய குரல்கள் மனோ, சித்ராவினுடையவை. இன்னொரு பாடல் அதே மனோ, சுனந்தாவுடன் பாடியது. ‘மெதுவாத் தந்தியடிச்சானே’ என்ற பாடல். படம் ‘தாலாட்டு’ (1993). சிவரஞ்சனியுடன் இணைந்து அரவிந்த்சாமி கஷ்டப்பட்டு நடனமெல்லாம் ஆடியிருப்பார். பாடல் அருமையான பிருந்தாவன சாரங்கா.

ராஜா – சுந்தர்ராஜன் கூட்டணியில்..

இன்னொரு அருமையான பாடல் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் வந்த ‘குங்குமச்சிமிழ்’ (1985) என்ற படத்தில் வந்த ‘பூங்காற்றே தீண்டாதே’ என்ற பாடல்தான். சுந்தர்ராஜன் என்றால் இசையூற்றுதான் சுரந்து வழியுமே இசைஞானிக்கு. ஜானகியின் குரலில் ‘அடி பெண்ணே’ (முள்ளும் மலரும்) போல் அமைந்த ஒரு பாடல் இது.

ஸ்ரீதரின் இறுதிக் காலப் படங்களில் ஒன்று ‘தந்துவிட்டேன் என்னை’ (1991). விக்ரம் சேதுவாக உருவெடுக்கும் முன் சாதுவாக நடித்த திரைப்படம். அதில் ஒரு மென்மையான கிராமியச் சாயலுடன் கூடிய மெல்லிசைப் பாடல் ‘முத்தம்மா முத்து முத்து’ என்ற பாடல். அருண்மொழி, உமாரமணன் குரல்களில் வந்த ஒரு இனிய பிருந்தாவன சாரங்கா.

இசைஞானியின் இசையில் இந்த ராகத்தில் சிறப்பாக அமைத்த பல பாடல்களில் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் (1989)’ படத்தில் வரும் இந்தப் பாடலும் ஒன்று. பி.சுசீலாவின் திறமைக்குக் களம் தந்த பாடல்களில் (உதா- பூப்பூக்கும் மாதம் தைமாதம், ஆசையில பாத்தி கட்டி) இதற்கும் இடமுண்டு. ‘மனதில் ஒரே ஒரு பூப் பூத்தது’ என்ற பாடல் அது. ‘குழலினிது யாழினிது என்பார் சுசீலா குரலினிமை அறியாதவர்’ எனக் குறளே எழுதும் அளவுக்கு இனிமையான பாடல். ‘குழலூதும் கண்ணனின் வண்ணமே நீ’ எனத் தொடங்கும் சரணம் இந்த ராகத்தின் சாரம்.

பின்னணி இசையிலும் ராகம்

நாம் திரைப்படப் பாடல்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். பின்னணி இசையைப் பற்றி ஆராய வேண்டுமானால் அதற்கு நாட்களும் பத்தாது; நாளிதழ் தாள்களும் பத்தாது. இளையராஜா ஒவ்வொரு படத்திலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தை வேறு வேறு உணர்வுகளுக்குப் பயன்படுத்தியிருப்பார். உதாரணம், ‘சிந்து பைரவி’ படத்தில் சிந்து பைரவி ராகம் படம் முழுவதும் இழையோடும்.

‘சின்னக் கவுண்டர்’ திரைப்படத்தில் சுகன்யா மொய்விருந்து வைக்கும் இடத்தில் நெகிழ்ச்சியான உணர்வுகளுக்குப் பிருந்தாவன சாரங்கா ராகத்தைத் தந்திகளால் (சிதார்) இழை இழையாக நெய்திருப்பார். முதலில் பின்னணி இசை இல்லாமல் மியூட் மோடில் வைத்துக் கேளுங்கள். பின்னர் இசையுடன் கேளுங்கள். பின்னணி இசையின் மகத்துவம் புரியும்.

பிற இசையமைப்பாளர்கள் அமைத்த பாடல்களில் இரண்டு பாடல்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ‘அன்புள்ள அப்பா’ (1987) என்ற திரைப்படம். அதில் ஓர் அருமையான பிருந்தாவன சாரங்கா – ‘மரகதவல்லிக்கு மணக்கோலம்’ என்ற பாடல். யேசுதாஸின் குரலில் , ஷெனாய் போன்ற இசைக்கருவிகளுடன் பிரமாதப் படுத்தியிருப்பார்கள் சங்கர்-கணேஷ் இருவரும்.

இந்த வாரக் கேள்வியோடு முடிப்போம் . மயிலிடம் தோகையைக் கேட்ட பாடல் எது? படம் எது? கண்டுபிடிக்க ஒரு குறிப்பு: ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் பிரபலப் பாடல்.

தொடர்புக்கு: ramsych2@gmail.com
ராக யாத்திரை 11: நீ சின்ன நி! நான் பெரிய நி!!

Published : 29 Jun 2018 10:30 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்
 



‘என் தம்பி’ படத்தில்

சென்ற வாரம் சற்றுக் கடினமான கேள்விதான். மத்தியமாவதியின் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் என்ன ராகம் எனக் கேட்டிருந்தேன். வழக்கமாக நூற்றுக்கணக்கான வாசகர்கள் பதில் அளித்துத் திணற அடிப்பார்கள். இந்த வாரம் சிலரே பதிலளித்தனர் அவர்களில் ஈரோடு ஞானப்பிரகாசம் மற்றும் யக்ஞ நாராயணன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். அந்த ராகம் ‘பிருந்தாவன சாரங்கா’.

ஸ ரி2 ம1 ப நி2 ஸ் , ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இதன் ஆரோகண அவரோகணங்கள். சிலர் அவரோகணத்தில் ஒரு சின்ன ‘க’வும் சேர்ப்பார்கள். சிலர் அதுதான் ஒரிஜினல் ‘பிருந்தாவன சாரங்கா’, க இல்லாமல் வருவது ‘ப்ருந்தாவனி’ என்பார்கள்.

ராக முத்திரை

மிகவும் இனிமையான ராகம் இது. முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை. எம். எஸ். பாடிக் கேட்டால் அந்த அரங்க மா நகரின் சொர்க்க வாசல் கதவுகளே நமக்குத் திறக்கும். ராகத்தின் பெயரையே கீர்த்தனையில் சொல்வதற்கு ராக முத்திரை என்று பெயர். அதில் தீட்சிதர் வல்லவர். இந்தக் கீர்த்தனையிலும் ராகத்தின் பெயரை அவ்வாறு பிருந்தாவனத்தின் மான்களுக்கெல்லாம் தலைவனே (சாரங்கா – மான்) எனப் பொருள் படும்படி அமைத்திருப்பார். மான் போல் குதிக்கும் இந்த ராகத்தில் பெரியசாமி தூரன் இயற்றிய ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.

திரை இசையில் மிகவும் பிரபலமானது இந்த ராகம். கொஞ்சம் இந்துஸ்தானி ஜாடையும் இதில் வரும். ஷெனாயில் வாசிக்க ஏற்றதாக இருப்பதால் பல திரைப்படப் பின்னணி இசையில் வரும். இந்த ராகத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் வரும் ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே’ என்ற பாடல் மிகவும் இனிமையானது.

எண்ணிக்கையில் குறைவாகப் பாடினாலும் தரத்தில் நிறைவாகப் பாடிய எஸ். வரலட்சுமியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் ராகமேதை ராமநாதன் அவர்கள். ஆரம்பத்தில் ஒரு ஆலாபனை பின்னர் இடையிடையே ஷெனாய் ஒலி என இந்த ராகத்தின் ஜாடையை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

கோவர்த்தன ஆவர்த்தனம்

லேசான இந்துஸ்தானி ஜாடையில் மென்மையாகப் பாட வேண்டும் என்றால் பி.பி.ஸ்ரீநிவாஸ் இல்லாமலா? ‘இதயத்தில் நீ’ (1963) என்ற படத்தில் ஒரு பிரமாதமான பாடல். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ராகத்தில் அமைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு ஹம்மிங் மூலம் பிபிஎஸ் இந்த ராகத்தை ஜாடை காட்டி அற்புதமாகப் பாடியிருக்கும் அந்தப் பாடல் ‘பூ வரையும் பூங்கொடியே’. வாலியின் ஆரம்ப காலப் பாடல்களுள் ஒன்று.

‘என் தம்பி’ (1968) என்ற சிவாஜியின் படம். எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தது. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் ‘முத்து நகையே உன்னை நானறிவேன்’, டி.எம்.எஸ். பாடியது. இடையிடையே ஆஹா, ஓஹோ எனப் பாடலில் வருவது போன்றே நாமும் பாடலைக் கேட்டால் ஆஹா, ஓஹோ எனப் பாராட்டுவோம்.

கோவர்த்தனம் என்ற இசையமைப்பாளர். ‘பட்டினத்தில் பூதம்’ போன்ற சில படங்களுக்கே இசையமைத்தவர். அவரது சிறுவயதிலேயே நாகஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்கும்போது உடனுக்குடன் ஸ்வரங்களைச் சொல்லி அவரிடம் பாராட்டுப் பெற்றாராம். அவர் இசையமைத்த படம் ‘பூவும் பொட்டும்’ (1968). அதில் ஒரு அருமையான பாடலை பிருந்தாவன சாரங்காவில் அமைத்திருப்பார். ஷெனாயைப் போன்றே நாகஸ்வரத்திலும் இனிமையான ஒரு ஆலாபனையுடன் இப்பாடல் தொடங்கும். பி.சுசீலாவின் தேன்குரலில் வரும் ஹம்மிங்களுடன் டி.எம்.எஸ். பாடிய பாடல் ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’ என்பது. உண்மையிலேயே பரமண்டலத்திலிருந்து தேவன் பாடும் பாடலைக் கேட்பது போன்ற அனுபவத்தைத் தரும் பாடல் அது.

மெட்டின் இனிமைக்கு மெல்லிசை மன்னர்

இந்த ராகத்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது ‘படித்தால் மட்டும் போதுமா?’வில் (1962) அமைந்த ஒரு பாடல்தான். இந்த ராகத்தில் இரண்டு நி எனப் பார்த்தோம். சிறியது ஒன்று பெரிய நி மற்றொன்று. அது போல் இரண்டு வேறு விதமான பாடகர்கள். இரண்டு வேறு விதமான நடிகர்கள். பாத்திரங்கள். படத்தில் சிவாஜி கொஞ்சம் முரட்டுத்தனமானவர், பாலாஜி மென்மையானவர். இருவரும் மற்றவருக்காகப் பெண்பார்த்து விட்டு வந்து பாடும் பாடல். இந்த ராகத்திலும் இரண்டு நிஷாதங்கள் (நி).

கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்., மென்மையாகப் பாடும் பி. பி. எஸ். என அமைந்திருப்பது தற்செயலான விஷயமாகத் தோன்றவில்லை. ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற அந்தப் பாடல் இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல்களிலேயே முதன்மையானது எனலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அமைந்த பாடல். வயலின், ஷெனாய், குழல் என இந்த ராகத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டியிருப்பார்கள். எம். எஸ். வி. தனது பாடல்களில் ராகத்தின் இலக்கணத்தை ராணுவ ஒழுங்குபோல் கடைப்பிடிக்க மாட்டார்.

இலக்கணத்தைவிட மெட்டின் இனிமைதான் முக்கியம் என்பது அவரது பாணி. இப்பாடலிலும் ‘நான் பார்த்த பெண்ணை’ என்ற இடத்தில் வேறு ஸ்வரங்கள் வந்தாலும் இனிமை கெடாமல் இருக்கிறது.

அதே மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் பொல்லாதவன் (1980) என்ற படத்தில் சுசீலாவின் குரலில் ‘சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே’ என்ற இனிய பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.

சரி. இசை ஞானிக்கு வருவோம். பல விதமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். கல்லுக்குள் ஈரமாய் வந்த பாடல் ஒன்று உண்டு. அது என்ன பாடல் ? க்ளூ: அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இல்லை.

தொடர்புக்கு: ramsych2@gmail.com

ராக யாத்திரை 10: துள்ளி துள்ளிப் பாடும் ராகம்

Published : 22 Jun 2018 10:54 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்




ராஜாவும் ரஜினியும்

சென்ற வாரம் கொஞ்சம் எளிமையான கேள்வி போலிருக்கிறது. பாரதிராஜாவின் அறிமுகத்தில் புதுமுகமாக நாயகன் நாயகி இருவரும் நடித்த ‘மண்வாசனை’ (1983) படத்தில் மத்தியமாவதி ராகத்தில் அமைந்த ஆனந்தமான பாடல் ‘ஆனந்தத் தேன்சிந்தும் பூஞ்சோலை’ என்னும் பாடல்தான் . மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாடலில் இந்த ராகத்தின் மென்மை காதுகளில் தேன்சிந்தும். சரியாகச் சொன்ன பலரில் முதலாகச் சொன்ன சிவகாசி கல்பனா ரத்தனுக்கும் நெய்வேலி ரவிக்குமாருக்கும் பாராட்டுகள். நட்சத்திர நாயகி என ரேவதிக்கு க்ளூ கொடுத்திருக்கத் தேவையேயில்லை போலிருக்கிறது.

மத்தியமாவதிக்கு வேறொரு வண்ணம்

எல்லா ராகத்தைப் போலவே வேறுவேறு தளங்களுக்கு, உணர்வுகளுக்கு இந்த ராகத்தையும் பயன்படுத்தியிருக்கிறார் இசைஞானி. நவரசங்களில் குறிப்பாக, சிருங்கார ரசத்துக்குக் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ‘மூன்றாம் பிறை’ (1982) திரைப்படத்தில் வரும் ‘பொன்மேனி உருகுதே’ என்ற பாடலைச் சொல்லலாம். கர்னாடக சங்கீதத்தில் மிகவும் சுத்தபத்தமாகப் பக்திபூர்வமான மங்களகரமான ராகமாகக் கருதப்படுகிறது மத்தியமாவதி.

அதை மிகவும் வேறொரு பரிமாணத்தில் விரகத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைத்திருப்பார். ஜானகியின் குரலுக்குக் கேட்க வேண்டுமா?. ‘பனிக்காற்றிலே தனனா தனனா...’ என்ற இடத்தில் அந்த ராகத்தின் சங்கதிகள் வந்து விழுவதைக் கவனியுங்கள். (கட்டாயம் இந்தப் பாடலின் புகைப்படம் போடப்பட மாட்டாது).

அதே பிக்பாஸின் இன்னொரு பாடல் இதே மாதிரியான ஒரு மாதிரியான பாடலுக்கும் இந்த ராகத்தை இளையராஜா பயன்படுத்தியிருப்பார். இரவு, நிலவு, காதல் போன்ற உணர்வுகளுக்கு மிகவும் ஏற்ற ராகம் எனச் சொல்லியிருந்தேன். அதேபோல் பல இடங்களில் இந்த ராகம் பயன்பட்டிருக்கும். ‘சகலகலாவல்லவன்’ (1982) திரைப்படத்தில் வரும் ‘நிலாக் காயுது’ என்ற பாடலும் இந்த மத்தியமாவதி ராகத்திலேயே அமைந்திருக்கும். ஜானகியுடன் மலேசியா வாசுதேவன். பாடலில் சில இடங்களில் வேறு ராகங்கள் தலைதூக்கினாலும் அடிப்படையில் இந்த ராகமே மேலோங்கி இருக்கும்.

காதல் இளவரசனுக்கு அதிரடியாக என்றால் காலாவுக்கு வேறு மாதிரியாக அமைதியான சிருங்கார ரசப் பாடல். முதலிரவுப் பாடல்தான். மகேந்திரனின் இயக்கத்தில் வந்த ‘கை கொடுக்கும் கை’ (1984) படத்தில் வரும் ‘தாழம்பூவே வாசம் வீசு’ என்ற பாடல்தான் அது. எஸ்.பி.பி., ஜானகி குரலில் இனிமையாக ஒலிக்கும் ஒரு மெல்லிய பூங்காற்றாக வரும். தாழம்பூவை ஒளித்து வைத்தாலும் வாசம் போகாது என்பது போல் மத்தியமாவதி எந்த உருவில் வந்தாலும் அதன் அடையாளமான இனிமையை வெளிப்படுத்திவிடும்.இன்னொரு அதிரடி சிருங்காரப் பாடலான ‘சின்ன மாப்பிள்ளை’ (1993) படத்தில் மனோ, சுவர்ணலதா குரலில் வரும் ‘வெண்ணிலவு கொதிப்பதென்ன’வும் மத்தியமாவதிதான்.

‘நாடோடிப் பாட்டுக்காரன்’ (1992) படத்தில் ‘வனமெல்லாம் செண்பகப்பூ’ என்ற பாடல் இரண்டு முறை வரும். ஆண்குரலில் ஒன்று; பெண்குரலில் ஒன்று. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகம். அதில் எஸ்.பி.பியின் குரலில் வரும் பாடல் மத்தியமாவதியில் அமைந்தது. (சுசீலா பாடும் பாடல் லதாங்கி என்னும் அரிய ராகம்- அதுபற்றிப் பின்னர்). ‘கெட்டவர்க்கு மனம் இரும்பு, நல்லவரை நீ விரும்பு’ என்பது போன்ற எளிய வரிகளுடன் நாட்டுப் புற மெட்டில் இனிமையாக இந்த ராகத்தை அமைத்திருக்கிறார் இசைஞானி.

ஆனால், மேக்னம் ஓப்பஸ் என ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல் இந்த ராகத்தின் சிகரமாக அமைந்த பாடல் ஒன்று ராஜாவின் இசையில் அமைந்துள்ளது. தெலுங்கு டப்பிங் பாடல்தான் என்றாலும் கொஞ்சம்கூட ‘அக்கட’ உள்ள வாசனை தெரியாமல் இருக்கும் பாடல். எஸ்.பி.பியின் ஆரம்ப ஆலாபனை பாடத் தெரியாதவன் சுருதி சேர்ப்பதுபோல் (‘பாட்டும் நானே’ –சிவாஜி நினைவுக்கு வரும்) ஆரம்பித்துப் பின் ராகத்தின் மேடு பள்ளங்களிலெல்லாம் வேகமாக ஓடிவரும்.


சிப்பிக்குள் முத்து

தொடர்ந்து ஜானகி ‘நிஸரிமபநிஸரிநிரிஸநிபமபநிஸா’ என இந்த ராகங்களின் ஸ்வரங்களின் ஆரோகண அவுரோகணங்களில் ஒரு ரோலர்கோஸ்டர் ரங்கராட்டினம் போல் ஏறி இறங்கி வருவார். இந்த ராகத்தில் ஸரிமபநி மட்டும்தான் என்பது நினைவிருக்கிறதா?. சிப்பிக்குள் முத்து (1985) படத்தில் வரும் ‘துள்ளித் துள்ளி நீ பாடம்மா’ என்னும் பாடல்தான் அது. சுத்தமான நெய்யால் செய்யப்பட்ட அக்மார்க் மத்தியமாவதி ராகப் பாடல் அது. இடையில் வரும் குழல், வயலினிசை என எல்லாம் கலந்து ஓர் உன்னதமான அனுபவம் அளிக்கும் லேசான சோகத்தைச் சொல்லும் பாடல் அது.

இதற்குமேலும் ராஜாவின் மத்தியமாவதியை ஆராய வேண்டாம். பிற இசையமைப்பாளர்களில் ‘உயிருள்ளவரை உஷா’வில் (1983) டி.ஆர் ‘இந்திர லோகத்துச் சுந்தரி’ என அருமையான பாடலொன்றை இந்த ராகத்தில் போட்டிருப்பார். ‘கொடிபறக்குது’ (1988) படத்தில் வரும் ‘சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ என்ற பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார் இசையமைப்பாளர் அம்சலேகா. நல்ல துள்ளலான இசை.

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த ராகத்தில் ஒரு பாடலில் பின்னியிருப்பார். ‘ஸ்டார்’ (2001) என்ற படத்தில் வரும் ‘தோம் கருவில் இருந்தோம்’ என்ற பாடல். சங்கர் மகாதேவனின் குரலில் வேகமும் ஆவேசமும் கலந்த அருமையான மத்தியமாவதி அது.

கொஞ்சம் சிலபஸ்சைக் கடினமாக்கிக் கேள்வி கேட்போம். மத்யமாவதியின் ஸரிமபநி ஸநிமபரி என்னும் சுரங்களில் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் இன்னொரு இனிய ராகம் வரும். அது?

படங்கள் உதவி: ஞானம்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

Post Office Not Liable To Pay Damages For Delay In Delivery Of Speed Post, Postal Articles: Chhattisgarh HC [Read Order] | Live Law

Post Office Not Liable To Pay Damages For Delay In Delivery Of Speed Post, Postal Articles: Chhattisgarh HC [Read Order] | Live Law: Can one get compensation from post office for the loss suffered by him when there is a delay in delivery of postal articles? Chhattisgarh High court

Calcutta HC Reduces Sentence Of Rape Accused As He Married The Victim [Read Judgment] | Live Law

Calcutta HC Reduces Sentence Of Rape Accused As He Married The Victim [Read Judgment] | Live Law: ‘The fact that the prosecutrix and the appellant are married (to each other) and have settled in life with their children appears to be “adequate and special reason” for imposing lesser sentence.’ In July 2015, the Supreme Court had pronounced a judgment in which it categorically observed that in a case of rape or attempt …
Pregnant goat gangraped by 8 men in Haryana village, animal dies from abuse

DECCAN CHRONICLE.

PublishedJul 28, 2018, 8:17 pm IST

According to reports, the accused who are believed to drug addicts and alcoholics, raped goat in deserted house, following which she died.


A complaint was filed with the Nagina police station where the station in charge (SI) Rajbir was recorded as detailing that they were approached by the goat’s owner. (Photo: ANI)

In another shocking case of animal abuse, a pregnant goat was allegedly gang raped by 8 men in Mewat town of Nuh district in Haryana.

Three of the eight men have been identified thus far.

The goat died after being raped by the eight men.

According to reports, the eight accused who are believed to drug addicts and alcoholics, raped the goat in a deserted house, following which she died.

A complaint was filed with the Nagina police station where the station in charge (SI) Rajbir was recorded as detailing that they were approached by the goat’s owner named Aslu on Thursday, who accused eight people of stealing and raping his goat.

Taking to social media, Meet Ashar, Emergency Response Coordinator at PETA India, worte, “A FIR has been registered under Sections 34, 377 and 429 IPC, Section 11(1)(a) & (l) of the Prevention of Cruelty to Animals Act, 1960.”

Ashar, who further wrote that he is in touch with the Superintendent of Police, Nuh and SHO Nagina Police Station went on to add that there has been a steep increase in cases of sexual abuse against animals.

He further added, “People who are violent often start with animals as victims and then move on to humans. This case should, therefore, worry everyone.”

The post-mortem report of the goat is awaited.
M Karunanidhi’s fan, 85, comes all the way from his village

DECCAN CHRONICLE.

PublishedJul 28, 2018, 2:41 am IST

To personally visit the DMK patriarch M Karunanidhi at his residence and convey her prayers for his speedy recovery.


Rathnambal.

Chennai: Rathnambal, 85, came all the way from her native Thirukkuvalai in Tiruvarur district, changing buses and clutching her small cloth bag carrying just a little money, to personally visit the DMK patriarch M Karunanidhi at his residence and convey her prayers for his speedy recovery.

A kind soul at Madhya Kailash near Adyar spotted the brave woman Friday morning as she was trying to find her way to Gopalapuram. When she explained that her bus had dropped her at the spot and she had no clue how to reach Kalaignar’s house, the man helped her with directions and a couple of hours later, she landed at Gopalapuram, still clueless on how she would be able to get into the house through all that huge crowd of DMK followers and the VIP visitors.

That’s when someone whispered to Stalin inside the house that an old woman from his father’s village was waiting outside, hoping to catch a glimpse of the ailing leader. The son at once sent the DMK legislator P. K. Sekar Babu to fetch Rathnambal and received the old woman with warmth and some much-needed refreshments.

“Thalapathi was moved when the old lady told him she was Kalaignar’s diehard fan, and that he had presided over her marriage in Thirukkuvalai decades ago”, said an eyewitness, requesting anonymity. He said Stalin gave Rathnamal some money to help her return home, safe and comfortable, and also deputed a party member to put her in the bus at Koyambedu.

“People like Rathnambal have ensured that Kalaignar and the DMK remained a big force in Tamil Nadu through all these years, whatever be the electoral results”, said a DMK MLA.
Community certificate of other states not valid for med seat in Tamil Nadu

DECCAN CHRONICLE.

PublishedJul 29, 2018, 2:26 am IST

Tamil Nadu to consider her application for MBBS admission under the reserved category for scheduled tribes.


Madras High Court.

Chennai: Madras High Court held that Community Certificate issued by other states will not be valid to get a seat in medical course in Tamil Nadu.

Justice S Vaidyanathan, before whom a petition filed by a student S Geetha came up for hearing, said that “In my view, the petitioner would not be entitled to get any relief in this writ petition, since the petitioner has produced the community certificate issued by Andhra Pradesh and seeking relief to consider her candidature under the reserved category.”

The petitioner, who is holding a scheduled tribe community certificate issued by Andhra Pradesh, has sought the court to direct the selection committee, Directorate of Medical Education, Tamil Nadu to consider her application for MBBS admission under the reserved category for scheduled tribes.

The judge said, the Supreme Court in Mari Chandra case had clarified that a scheduled caste/tribe person who has migrated from the state of origin to some other state for the purpose of seeking education, or employment will be deemed to be a scheduled caste/tribe of the state of his origin and will be entitled to derive benefits from the state of origin and not from the state to which they have migrated.

The judge said in the present case, de-hors the question of migration, it is an admitted fact that the petitioner had obtained community certificate from Andhra Pradesh and in view of the prospectus for MBBS admission, the petitioner will not be entitled to any relief and her candidature can be considered only under the open category and not under the reserved category.
Nurse’s body may be brought to Udupi from Saudi in 15 days

The body of nurse Hazel Jyotsna Mathias (28) of Kuthyaru village in Udupi district, who died under suspicious circumstances in Saudi Arabia last week, may be brought to India within 15 days.

Published: 29th July 2018 05:27 AM |



Image used for representational purpose only

By Express News Service

UDUPI: The body of nurse Hazel Jyotsna Mathias (28) of Kuthyaru village in Udupi district, who died under suspicious circumstances in Saudi Arabia last week, may be brought to India within 15 days.

The delay is attributed to the investigation by the Jeddah into her death, Hazel’s neighbour Joseph D’Souza told Express on Saturday, “her untimely death is still a mystery. But now our efforts are concentrated on bringing her body back here.”

“Her husband Ashwin Mathias is still unable to come to terms with the reality. We through MLC Ivan D’Souza have contacted officials of the Indian Embassy in Saudi Arabia and External Affairs Minister Sushma Swaraj. The officials of Indian Embassy have told that as the police are investigating the case. It may take another 15 days for releasing the body from the hospital,” D’Souza added.

“She was not mentally weak to take such an extreme step and moreover she had no reason to commit suicide,” a relative of Hazel told TNIE. The Indian Embassy too has not got the information about the reason behind her death.
Railways to run special tatkal trains during August, September to clear extra rush
There will be a total of nine services with stops at Krishnarajapuram, Bangarpet, Tirupattur, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Ottappalam, Thrissur, Aluva and Ernakulam Town.

Published: 29th July 2018 06:50 AM 



Indian Railways | EPS
By Express News Service

THIRUVANANTHAPURAM: In view of the extra rush, the Railways will operate weekly tatkal special trains between Yesvantpur and Ernakulam Junction during August and September.

Train No 06547 Yesvantpur-Ernakulam Jn Weekly Tatkal Special will leave Yesvantpur at 10.45 am on Tuesdays (July 31, August 7, 14, 21, 28, September 4, 11, 18 and 25) and arrive Ernakulam Jn at noon the next day.

There will be a total of nine services with stops at Krishnarajapuram, Bangarpet, Tirupattur, Salem, Erode, Tirupur, Coimbatore, Palakkad, Ottappalam, Thrissur, Aluva and Ernakulam Town.

Train No 06548 Ernakulam Jn–Yesvantpur Weekly Tatkal Special will leave Ernakulam Jn at 2.45 pm on Wednesdays (August 1, 8, 15, 22, 29, September 5, 12, 19 and 26) and arrive Yesvantpur at 4.30 am the next day. The train will have stops at Aluva, Thrissur, Ottappalam, Palakkad, Coimbatore, Tirupur, Erode, Salem, Tirupattur, Bangarpet, and Krishnarajapuram. The special trains will have one AC 2-tier, three AC 3-tier, nine sleeper class coaches and two luggage-cum-brake vans.
Disparity’ in retirement benefit riles employees

BENGALURU, JULY 29, 2018 00:00 IST



A. Mallesh Reddy and R. Padmanabhan, retired employees of a private bank here, are running around to lobby for changes in the recent amendments to Payment of Gratuity Act, 1972 instead of looking forward to a peaceful retirement life.

The amendment in the current form has affected lakhs of employees across many sectors covered by the Act, who have retired between January 1, 2016 and March 29, 2018.

What has riled them is the “disparity” between retiring Central government employees and others in calculation of gratuity — an important portion of retirement benefits — after the 7th Central Pay Commission (CPC) recommendations were implemented. While the CPC recommendations, which enhanced gratuity limit from Rs. 10 lakh to Rs. 20 lakh, was implemented to the Central government employees from January 1, 2016, for others the implementation date was fixed as March 28, 2018. Those who retired in the interim period have been deprived of this enhancement.

Mr. Padmanabhan told The Hindu that they have submitted memoranda to several Union Ministers to bring changes in amendments to provide benefits with retrospective effect to all. An online petition launched to impress upon the government about the “disparity” in implementation date had garnered over a lakh signatures. It has also led to several legal tussles with individual aggrieved employees going to court.

In an important development, following representations, the Union Ministry of Labour and Employment sought advice from the Ministry of Law and Justice on whether the benefits could be given to employees with retrospective effect.

The Law Ministry felt that the Union government is empowered to notify the ceiling proposal from prospective as well as retrospective effect. The legal advice by the ministry has been obtained through a RTI query.

According to Mr. Reddy, employees who retired from banking, insurance and public sector undertakings among many others, who are covered under the Gratuity Act, have been affected. “Representations have been made to re-notify the implementation date to January 1, 2016. The proposal for re-notification is pending in the Labour Ministry.” Explaining the genesis of the problem, he said: “The enhancement of gratuity for Central government employees was also followed by I-T exemption. However, neither gratuity nor I-T exemption was given to us.”
Institute of Eminence tag to benefit IISc. through autonomy, additional funds

BENGALURU, JULY 29, 2018 00:00 IST



Autonomy may cut down on the approvals and reviews needed to set up new degree courses.File Photo

While the profile of Indian Institute of Science (IISc.), which regularly tops the rankings of scientific institutes in India and is making its way up international rankings, may not get a significant boost from the ‘Eminence’ tag, it may benefit from the autonomy granted and the additional funds. IISc. has yet to get a formal letter on the issue, or the modalities of what comes along with the tag.

Autonomy may cut down on the approvals and reviews needed to set up new degree courses as well as to tweak current courses, says Anurag Kumar, director, IISc. Currently, IISc’s programmes are approved or reviewed by the University Grants Commission (UGC).

Significantly, the tag comes along with a significant funding of Rs. 200 crore for the next five years. The Rs. 1,000 crore ‘matching’ grant will be given provided IISc. can raise a similar amount themselves. “Fund-raising is never easy, but we have to raise this from government agencies (Department of Biotechnology, for instance), donors and CSR. We have a fund-raising office on campus, and it is doing quite well. We have to ramp up there,” said Mr. Kumar.

Apart from enhancing their current infrastructure at the main campus, the additional funds are expected to be spent on schemes which are not met by government funding agencies: post-doctoral salaries, sending researchers to international conferences, inviting distinguished speakers for talks and interactions, he said.

Three new campuses

Meanwhile, Manipal Academy of Higher Education (MAHE) which has also earned the Institute of Eminence (IoE) plans to start new programmes, open three new campuses and step up its research activities. Speaking on the way forward, H. Vinod Bhat, Vice-Chancellor, Manipal Academy of Higher Education, said they were planning to open three new campuses in Sri Lanka, Bengaluru and Jamshedpur.

It will also now have the ‘autonomy’ to start new courses, programmes and institutes on campuses without approvals from the UGC or the All India Council of Technical Education. However, the management will have to continue to approach other regulatory bodies such as the Medical Council of India or Dental Council of India for approvals.

Dr. Bhat said that they plan to start courses in data sciences, health economics and analytics. The institute also wants to step up research and improve both the quality and quantity of publications.

On fees

With respect to fees, Dr. Bhat said that they do not want to increase the fees at the moment.

“We will follow what the fee fixation committee of the university tells us to do,” he said. This academic year, the fee hike ranged from 0 to 5% for different programmes. While public institutes have received funding, Dr. Rao said they will raise their own resources to. “We will engage with the alumni in a bigger way,” he said, adding that there were plans to start an alumni cell.

MAHE currently has around 24,000 students and 2,450 faculty members in 300 different programmes.
For a change, AIADMK praises Karunanidhi

CHENNAI, JULY 29, 2018 00:00 IST



M. Thambi Durai 

Ruling party members recall his contribution to the cause of Tamil culture

Once the arch rival and a figure of contempt for the AIADMK, especially when former Chief Minister Jayalalithaa was alive, DMK president M. Karunanidhi drew moderate praise from his principal opposition party.

Mr. Karunanidhi has been the target of severe criticism by the AIADMK, both inside the Assembly and at public meetings.

His opponents used to leave no stone unturned to rubbish the DMK chief’s schemes and achievements.

But with his health suffering a setback and in the absence of Jayalalithaa who had them on a tight leash, AIADMK members have struck a conciliatory tone in their comments about Mr. Karunanidhi.

Senior AIADMK MP and Lok Sabha Deputy Speaker M. Thambi Durai on Saturday said the party did not hold any political hatred towards Mr. Karunanidhi.

No political hatred

“He came in the footsteps of Periyar and Anna. We don’t have any political hatred towards him. There might have been difference of opinion….With MGR and Amma (Jayalalithaa) also, he had lots of differences of opinion,” he said.

The ruling party members recalled his contribution to the cause of Tamil culture and Tamils worldwide.

Mr. Thambi Durai said the party recognised that Mr. Karunanidhi was a leader of Tamils and one who fought for Tamil Nadu and the rights of Tamils.

“We will only be happy if he recovers and gets well,” he told reporters in Karur.

Dairy Development Minister K.T. Rajenthra Bhalaji said the DMK leader had worked for Tamil culture and Dravidian ideology.

AIADMK MP V. Maitreyan expressed happiness that Mr. Karunanidhi’s health had improved.

Revenue Minister R.B. Udhayakumar told reporters in Madurai that the DMK president had worked hard as both Chief Minister and the Leader of the Opposition.
9 things you must know before falling prey to a ‘SIM swap’

Times of india 29.07.2018

How identity thieves exploit your ignorance so that you end up losing money in a matter of minutes

Acyberfraud called ‘SIM swap’ has tricked several people across the country. Not really new, the fraudulent method is used by criminals to trick gullible smartphone users, who end up losing money in a matter of minutes.

And if you think that only digitally-illiterate people fall prey to this scam, you’ve got it wrong. Several tech-savvy youths too have ended up falling for this cyberfraud. In fact, criminals have devised several ways to commit ‘SIM swap’ frauds. Take a look at some of the common techniques used to trap people.

You can be trapped by sharing information on the phone

SIM swap or simply SIM card exchange is basically registering a new SIM card with your phone number. Once this is done, your SIM will become invalid and your phone will stop receiving any signal. Now, once the miscreants have your phone number, they will get OTPs on their SIM card. With this, they can initiate bank transfers and even opt to shop online after getting OTPs.

It starts with an unknown call claiming to be from your service provider

You will get a call from a person who will pose as an executive from your service provider. He or she will then tell you that it’s a routine call to fix the call drop problem or improve signal reception on your phone. He/she can also promise to help you get more mobile data or increase mobile internet speeds or simply ‘guide’ you to migrate to a 4G SIM card.

Entire conversation will be to get your 20-digit SIM number

The scam caller will try all means to get your unique 20-digit SIM number. Every SIM card has this 20-digit number. Look for it at the back of your SIM card. The scamster will try to convince you to share your 20-digit unique number to a phone number to get the desired service.

You will be requested to press 1 or authenticate this swap

After convincing you to send the unique SIM number, the scamster will tell you to press 1 or simply authenticate the SIM swap. The scamster, after obtaining the unique SIM number, will initiate the ‘swap’ with your telecom operator officially.

Your mobile will stop receiving a signal altogether

Once the swap is successful, your SIM card will stop working and you will not get any signal on your phone. On the other hand, the scamster’s new SIM card will get full signal with your mobile number.

How can you lose money if your SIM is hijacked?

It is a two-step process, and sadly, SIM swap is the part two of the fraud process. The scamster, in most cases, already has information about your banking ID and password. All they need is the OTP that you get on your registered mobile number to make financial transactions.

How did they get your banking details beforehand?

This is mostly through phishing attacks. If you happen to open a fake version of your banking website, then your details automatically get compromised. They may ask for your Aadhaar number to verify your identity. Never ever share your Aadhaar number over the phone.

Do not switch off or mute your phone to ignore anonymous calls

In most cases, once the scamster has successfully imitated a SIM swap, he or she will disturb you so that you get angry and switch off or mute your phone. This is crucial to buy time for scamsters. Usually, telecom operators take around four hours to activate a new SIM. So, the scamster will continuously call you and disturb you so that you either switch off your phone or put it on silent mode during this four-hour window. When the swap is complete, you will not even get to know about it.

Keep a tab on your bank balance

It is always a healthy habit to keep track of your bank account and balance. Also, keep changing your internet banking password so that it gets difficult for miscreants. If you notice any suspicious internet banking activity, report it to your bank immediately to stop the transaction.

— TOI TECH



















200 engg colleges apply for closure every year: AICTE

TIMES NEWS NETWORK

Trichy:29.07.2018

An average of 50% of seats in the 3,200-odd engineering colleges in the country have been lying vacant while around 200 colleges have been applying for closure every year, according to the All India Council for Technical Education (AICTE). This was revealed by the council’s chairman, Anil D Sahasrabudhe, on the sidelines of the 14th convocation of the National Institute of Technology Trichy on Saturday.

The waning interest in the engineering stream is not new, with the trend continuing for the past three years. “While most closure applications are from Andra Pradesh and Telangana, they are coming from Tamil Nadu as well. Quality education may not be imparted with less number of students, therefore we do allow such colleges to run vocational courses,” the chairman said.

Sahasrabudhe said that most closures were of rural engineering colleges which had large infrastructure. Permission was given for such colleges to ensure that students in rural areas had access to engineering education, but the students preferred colleges in urban areas for the sake of convenience and better opportunities leading to closure of many institutions.

Asked about teachers being sacked by many of the engineering colleges after AICTE relaxed the studentfaculty ratio from 1:15 to 1:20, the chairman said that change in ratio could not be offered as a reason for teachers getting retrenched from colleges. He pointed out that admissions in some colleges were so poor that they were not getting even one student. In such cases, the colleges might not be able to keep teachers and were likely to ask them to join elsewhere. “We have asked teachers to complain if they are sacked but we haven’t received any such complaints, which prove that the claims of retrenchment are false,”he added.

On the reforms introduced by AICTE to the curriculum, Sahasrabudhe said that except for a common entrance test, they had been getting a good response from the states. “Some of the states have been opposing a common entrance exam for the whole country. But a single entrance test will prevent students from unnecessarily appearing for various entrance tests to get qualified to various colleges,” he said. Without referring to the national eligibility-cum-entrance test (NEET), he said that some states were not on board because of the bad experience they had with some exam which should not be correlated with every test. He said that a common exam would not take away the policy of reservation of the state government. The AICTE chairman added that there has been a mad rush to open pharmacy colleges in the country this year.



The waning interest in the engineering stream is not new, with the trend continuing for the past three years
Tumour mistaken for fetus, woman sues govt hospital

Sureshkumar.K@timesgroup.com

Chennai:29.07.2018

A tumour misdiagnosed as pregnancy has landed Government Kasturba Gandhi Hospital for Women and Children at Triplicane here in legal trouble, as the woman whose hope of motherhood was shattered has approached the Madras high court seeking action against the doctors responsible for the mistake.

Asina Begum also wanted the court to direct the hospital authorities to pay ₹5 lakh as compensation for the mental agony suffered by her due to the misdiagnosis. Admitting the plea, Justice T Raja ordered notice to the secretary of health and family welfare department and the hospital management returnable by two weeks.

According to Begum, she was diagnosed as being pregnant by doctors attached to the hospital on April 11, 2016. Since she was declared ‘pregnant’ six years after her marriage, the petitioner and her family had rejoiced.

November 18, 2016 was tentatively declared as her delivery date by the doctors. But as Begum did not develop labour pain even after the scheduled date for delivery, she grew suspicious and visited the hospital. After conducting a scan test, the doctors assured her that the baby was in good health and advised her to wait for some more days.

On November 21, 2016, she was rushed to the hospital due to severe pain in the abdomen. After conducting a series of tests, doctors informed Begum that she was wrongly diagnosed as pregnant and it was actually a tumor that had developed in her abdomen.

A second opinion taken by the petitioner from a private scan centre also confirmed the tumour growth in her abdomen.

Distressed by the wrong diagnosis, Begum made a complaint to the National Human Rights Commission against the hospital besides approaching the high court for compensation and action against the erring doctors.



Admitting the plea, HC ordered notice to the secretary of health and family welfare department and the hospital management returnable by two weeks
HC: State’s SC/ST MBBS quota not for non-TN pupils

TIMES NEWS NETWORK

Chennai:29.07.2018

Admission to MBBS courses under reserved categories in Tamil Nadu cannot be claimed by candidates on the basis of community certificate obtained from other states, the Madras high court has ruled.

Justice S Vaidyanathan made the clarification while dismissing a plea moved by S Geetha, who sought MBBS admission in Tamil Nadu on the basis of a scheduled tribe (ST) certificate issued by the government of Andhra Pradesh. She wanted the court to direct the selection committee of the directorate of medical education, Tamil Nadu, to consider her application for MBBS admission under the reserved category for scheduled tribes.

“In my view, the petitioner would not be entitled to get any relief in this writ petition, since the petitioner has produced the community certificate issued by the state of Andhra Pradesh and sought relief to consider her candidature under the reserved category,” the judge said.

Relying on the decision of the SC in Mari Chandra case, the judge said the apex court had clarified that a SC/ ST person who had migrated from the state of origin to some other state for the purpose of seeking education, or employment would be deemed to be a SC/ ST of the state of his origin and would be entitled to derive benefits from the state of origin and not from the state to which they had migrated.

In the present case, dehors the question of migration, it is an admitted fact that the petitioner has obtained community certificate from Andhra Pradesh and in view of the prospectus for MBBS admission, she will not be entitled to any relief and her candidature can be considered only under the open category and not under the reserved category, Justice Vaidyanathan added.
Boy, 16, runs over woman, grandad too gets booked

TIMES NEWS NETWORK

Madurai:29.07.2018

A 16-year-old boy, driving a sedan, fatally knocked down an elderly woman selling idly on the roadside in Madurai on Saturday. The 65-year-old grandfather, who owned the car and who was with the boy at the time of the accident, has been booked along with the minor for allowing him to operate the vehicle without a driving licence.

The victim was identified as M Pazhaniammal, 60, of Vaigai Vadagarai in Madhichiyam. She was sitting on a platform selling idly at Shenoy Nagar in the city, hardly 50 metres away from the car parked on the roadside.

The minor, who was trying to reposition the car, ended up accelerating it. The vehicle lunged forward and rammed the woman at high speed. She was rushed to Government Rajaji hospital on an ambulance with injuries to her head and limb, but the doctors declared her brought-dead. Based on a complaint from her son M Gunasekaran, a case was registered by the Tallakulam traffic investigation wing.

‘Parents should not allow their wards to drive without licence’

The minor boy and his grandfather, a local AIADMK functionary, were booked under IPC Sections 299 — rash driving or riding on a publicway— and34(A) — acts done by several persons in furtherance of common intention — besides under the sections of Motor Vehicles Act.

Police said the boy, a Class IX dropout, worked in a mechanic shop near Mattuthavani. After his father died a few years ago, he and his mother Amutha had shifted to her parents’ house near Ramarayar Mandapam in Shenoy Nagar.

A higher police officer from the Madurai city traffic wing said that parents should not allow their wards to drive the vehicle without a valid licence. “In such untoward incidents, the owner of the vehicle will also be penalised for allowing a person without valid licence to drive.”

He said the accident was another instance of death caused by violation of road rules when they were taking efforts to bring down fatalities. Recently, three minors were killed in an accident near Avaniyapuram when their rashly-driven scooter collided with a mini truck
With eye on medicine, 35% state toppers skip Anna univ counselling

Ram.Sundaram@timesgroup.com

Chennai:29.07.2018

Almost one-third of the state’s engineering toppers have given the Anna University counselling a miss this year.

Of the 10,700 eligible candidates with a score of 190 or more, only 7,300 have entered their choices, with tentative allotment being provided to 7,100 of them, according to official data. The final numbers may vary as provisional allotment is yet to be provided.

The high rate of absenteeism suggests that toppers may be moving away from engineering because of the decline in campus placements and growing interest in other undergraduate courses, including medicine, agriculture and veterinary sciences, say experts.

Nearly 1.59 lakh candidates had applied for this year’s counselling and only those with an aggregate score of 190 or above were invited for the first round of general counselling to fill seats in engineering colleges affiliated to Anna University that began on July 25 and ended on Friday.

Unlike previous years, this year’s counselling was conducted entirely online. A total of 42 admission facilitation centres have been set up across the state for those who were not familiar with the online process.

HC: No quota for non-TN SC/STs

Rejecting the plea of a student, the Madras high court said that admission for MBBS courses under reserved categories in Tamil Nadu cannot be claimed by candidates on the basis of community certificate obtained from other states. P5

7,300 entered their choice of course online

Close to 7,300 candidates made the initial payment of ₹5,000 and entered their choice of course and college on the online admission portal.

Though there is no ceiling on the number of choices per applicant, each candidate on an average submitted 15 options. Candidates were allowed to revise their choices till 5pm on Friday.

Following this, seats were allocated to the candidates based on their cut-off scores, seniority and seat availability. Now, the ball is in the candidates’ court. If an applicant rejects the tentative allotment, the seat will be allotted to the next person in the rank list which was prepared based on the aggregate scores secured by Class XII students in their respective board exams “Until last year, toppers blocked seats in top engineering colleges and declined the offers at the last minute thereby leaving the most-sought seats vacant. This has been eliminated in the online counselling process as the vacant seats will be filled in the subsequent rounds of counselling right from the beginning,” said a senior Anna University official, requesting anonymity.

Educational consultant Moorthy Selvakumaran said many toppers who absented themselves from engineering counselling would have applied for medical counselling too.

60 வயதை கடந்தும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான உடற்பயிற்சி!

Published on : 17th July 2017 03:17 PM |



இன்றைய காலகட்டத்தில் 45 வயதைக் கடந்துவிட்டாலே எண்ணற்ற பெயர் தெரியாத நோய்கள் கூட வந்துவிடுகிறது, இதைப்பற்றி மருத்துவரிடம் கேட்டால் ‘வயது முதிர்ச்சிதான் காரணம், இன்னும் சின்னப்பிள்ளை போல் ஓடி ஆடாமல் பக்குவமாக இருந்துகொள்ளுங்கள்’ என்பார்கள்.

ஆனால் உங்கள் தாத்தா பாட்டிகள் 70 வயது வரைகூட கடினமான பணிகளைக்கூட இளம் வயதினர் போல் உற்சாகமாகச் செய்திருப்பார்கள், இதற்கெல்லாம் காரணம் அறிவியல் முன்னேற்றம் நமது உடல் உழைப்பைக் குறைத்துவிட்டது. குறைந்தது அதை ஈடு கட்டுவதற்காகவாவது நாம் தினமும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்திருந்தால் இந்த உடல் என்ற இயந்திரம் இன்னும் சில ஆண்டுக் காலம் சுறுசுறுப்பாக இயங்கியிருக்கும். பல நாட்கள் உபயோகிக்காமல் வைத்திருக்கும் ஒரு பொருள் எப்படி பழுதாகி பயனற்று போகிறதோ அதைப் போல்தான் நமது உடலும்.



பக்கத்துத் தெரு கடைக்குச் செல்வதற்கு கூட மோட்டார் பைக், கோவிலிற்குச் சென்றால் சிறிது நேரம் நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் பணம் கொடுத்துச் சிறப்பு தரிசனம், உடலுக்குத் தேவையான குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் கூடத் தராமல் பிற வேலைகளில் ஈடுபடுவது இவ்வாறெல்லாம் அந்த உடலைப் படாத பாடு படுத்தினால் அதுவும் என்ன செய்யும் பாவம். சரி கவலை வேண்டாம், இனிமேலும் நமக்கு வயதாகிவிட்டது என்று ஓய்ந்து போய் உட்காராமல் இதற்கு மேலும் உடல் கெட்டு போகாமல் மிதமுள்ள வாழ்நாளை ஆரோக்கியமாக நகர்த்த, இதோ சில எளிய உடற்பயிற்சிகள்.

எந்த ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கும் போகாமல் வீட்டிலிருந்தவாறே, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் பல வழிகள் உள்ளது. அவற்றில் சில,

வயிற்றுத் தசைகளை வலிமைப்படுத்த:

நன்கு ஆழமாக மூச்சை இழுத்து, வயிற்றைச் சுருக்கியவரே ஒரு மூன்று வினாடிகளுக்கு மூச்சை நிலை நிறுத்தி பின்பு பொறுமையாக மூச்சை விடுவிக்கவும். இவ்வாறு தினமும் 10 முறை செய்ய வேண்டும்.

மார்பு மற்றும் தோள் பட்டைகளை வலிமைப்படுத்த:

சுவரை நோக்கியவாறு ஒரு மூன்று அடி தொலைவில் நிற்க வேண்டும், பின் உங்களது தோல் பட்டைக்கு நேராக இருக் கைகளையும் சுவரில் வைத்து பொறுமையாக சுவரை நோக்கு உடலைச் சாய்க்க வேண்டும். சாயும் பொழுது முதுகெலும்பு வளையாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பின்னர் சுவரில் கையை நன்கு அழுத்தி உங்கள் உடலைப் பின் தள்ளுங்கள். இந்தப்பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும்.

பின்புறத்துத் தசைகளை வலிமைப்படுத்த:

முச்சை உள்ளிழுத்து அதை நிலை நிறுத்தியவாறே முன்னால் குனிய வேண்டும், மூன்று வினாடிகள் அந்த நிலையில் இருந்த பின்பு பொறுமையாக நிமிர்ந்து நிற்க வேண்டும். இந்தப் பயிற்சியை 8 முதல் 12 முறை செய்யவும்.



கால் தசைகளை வலிமைப்படுத்த:

நாற்காலியில் அமர்ந்தவாறே, தரையில் உங்கள் கால் விரல்களை நன்கு ஊன்றியவாறே முடிந்த அளவிற்குக் குதி காலை உயர்த்தியவாறே சில நிமிடங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வது கால்களில் சுத்தமான ரத்தம் பாய வழிசெய்யும். ஓய்வு எடுக்கும் நேரங்களில் ஒரு 20 முறை இவ்வாறு செய்ய வேண்டும்.

கை, கால் மணிக்கட்டினை வலிமைப்படுத்த:

இந்தப் பயிற்சியையும் நாற்காலியில் அமர்ந்தவாறே, வலது காலை தூக்கி வலப்புறமாக ஒரு ஐந்து முறை, பின் இடப்புறமாக ஒரு ஐந்து முறை சுழற்ற வேண்டும். இதே போல் இடது கால் மற்றும் இருக் கைகளுக்கும் செய்ய வேண்டும், இதன் மூலம் இணைப்பு தசைகள் வலுப்பெறும்.



கழுத்து தசைகளை வலிமைப்படுத்த:

சமமான பரப்பில் கால்களை நன்கு பதிய வைத்து, தோள்பட்டையை அகலமாக விரித்து, இருக் கைகளையும் இருபக்கத்தில் நீட்டி, உங்கள் தலையை மெதுவாக வலதுபுறமாகத் திருப்பவும், 10 முதல் 20 விநாடி அப்படியே நிறுத்திய பிறகு இப்போது மறு திசையில் திருப்பவும். இவ்வாறு ஒரு ஐந்து முறை செய்ய வேண்டும், இது தசைகளை வலிமைப்படுத்துவதோடு, கழுத்தில் வலி ஏதேனும் இருந்தாலும் சரி செய்துவிடும்.

ஆரம்பத்தில் இந்த உடற்பயிற்சிகளைச் செய்யும்போது தேவைப்பட்டால் துணைக்கு யாரையாவது வைத்துக் கொள்ளவும், பின்பு இது பழக பழக மிக எளிதாக நீங்களாகவே இதைச் செய்துவிடலாம்.
அண்ணாமலைப் பல்கலை. எம்பிபிஎஸ் வகுப்பு ஆக.1-இல் தொடக்கம்

By சிதம்பரம், | Published on : 29th July 2018 01:18 AM |

 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி தொடங்குகின்றன.
இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு (2018-19) மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) படிப்புகளுக்கான வகுப்புகள் வருகிற ஆகஸ்ட் 1 -ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகின்றன என அதில் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாள் தேதி மாற்றம்: தமிழக அரசு புதிய முடிவு


By சென்னை | Published on : 29th July 2018 02:08 AM

அரசுப் பணிகளில் சேருவோர் பிறந்த நாள் தேதியை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை விடுத்தால் அதற்கான நடைமுறைகள் குறித்த புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழகத்தின் அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

பிறந்த தேதியை மாற்றுவது தொடர்பாக அரசு ஊழியர் வைத்துள்ள கோரிக்கை குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் சில கருத்துகளை தெரிவித்திருந்தது.
அதில், பிறந்த நாள் தேதி மாற்றம் செய்ய வேண்டும் என்று யாராவது அரசுக்குக் கோரிக்கை விடுத்தால், அவர் 10-ஆம் வகுப்பு தேர்வை எழுதும் போது 15 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற தகுதியை அளவு கோலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வயதுத் தகுதியை அவர் திருப்தி செய்யவில்லை என்றால், அவருக்கு அளிக்கப்பட்ட பணி உத்தரவை ரத்து செய்துவிட்டு அனுப்பி விடலாம்.
இதனால் இதுபோன்ற கோரிக்கைகள் அரசுக்கு அடிக்கடி வருவதை தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கும் ஊழியர்கள், 1977-ஆம் ஆண்டு வரை நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியபோது 15 வயதை பூர்த்தி செய்திருந்தார்களா என்பதையும், 1978-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதிய போது 14 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பதையும் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ – சினிமா விமரிசனம்


By சுரேஷ் கண்ணன் | Published on : 28th July 2018 03:11 PM |



தமிழ்த் திரையில் இதுவரை மிகையாக ஊதப்பட்ட நாயக பிம்பங்கள் நொறுங்கி வீழத் துவங்கியிருக்கும் பின்நவீனத்துவக் காலக்கட்டம் இது. முந்தைய சினிமாக்களில், நாயகன் என்பவன் நன்மையின் ஒட்டுமொத்த அடையாளமாக இருப்பான். தீயகுணம் ஒன்று கூட அவனிடம் இருக்கவே இருக்காது. உதாரணம் எம்.ஜி,ஆர். இதைப் போலவே வில்லன், தீமைகளின் ஒட்டுமொத்தக் குத்தகைதாரனாக, கொடூரமானவனாக இருப்பான். பி.எஸ்.வீரப்பா, நம்பியார் வகையறாக்கள் இதற்கு உதாரணம். துல்லியமாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கறுப்பு, வெள்ளைச் சித்திரங்கள் இயல்புக்கு மாறானவை.

ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இந்தச் சித்திரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல் மற்றும் சந்தர்ப்பம் காரணமாக நாயகனும் தீமையின் பால் தற்காலிகமாக வசீகரிக்கப்பட்டு பிறகு திருந்துவான். வில்லனிடம் இருந்த லேசான நற்குணங்களும் சித்தரிக்கப்பட்டன. மணிரத்னம் இயக்கிய ‘பகல்நிலவு’ திரைப்படத்தில் வில்லன் சத்யராஜ், ஒரு நல்ல குடும்பத்தலைவருக்கான இயல்புடன் அறிமுகம் ஆவார். விநோதமான விளக்குகள் மின்னும் பின்னணியில், அரைகுறை ஆடை அணிந்த பெண்களும், மதுபாட்டில்களும், அடுக்கி வைக்கப்பட்ட மரப்பெட்டிகளுமாகக் காட்சியளிக்கும் வில்லனின் இருப்பிடங்கள் மெல்ல மறையத் துவங்கின.

இது போலத்தான் ‘டான்’ பாத்திரமும். பயங்கரமான வில்லர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இந்தப் பாத்திரத்தில் பிற்பாடு நாயகர்களும் நற்குணம் கொண்ட ‘டான்’களாக நடிக்கத் துவங்கினர். ராபின்ஹூட் சாயலில் பணக்காரர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளைக் காப்பாற்றினார்கள். இந்த வகையில் ரஜினியின் ‘பாட்ஷா’ ‘தளபதி, கமலின் ‘நாயகன்’ போன்றவை முக்கியமான திரைப்படங்கள்.

ஆனால் அசலான டான்களின் மறுபுறத்தில் நகைப்பிற்கு இடமான விஷயங்களும் இருந்தன. எந்த நேரத்திலும் நிகழக்கூடிய உயிராபத்தின் காரணமாக உள்ளூற மறைத்துக் கொண்ட அச்சமும் நடுக்கமும் கொண்டவர்களாக இருக்கிற ‘டான்’களும் நிஜத்தில் இருக்கிறார்கள். இந்தச் சித்திரத்தின் கச்சிதமான உதாரணமாக வடிவேலுவின் ‘கைப்புள்ள’ பாத்திரத்தைச் சொல்லலாம். பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற இந்தக் குணாதியசத்தைப் பிறகு பல படங்களில் நடித்து தீர்த்து விட்டார் வடிவேலு.

வடிவேலு ஏற்ற இந்தப் பாத்திரத்தின் பெரும்பாலான சாயலை ஒரு நாயகனே ஏற்றால் எப்படியிருக்கும்? அதுதான் ஜுங்கா. இத்திரைப்படத்தில் வரும் சிக்கனமான, அற்பமான கஞ்சத்தனம் உடைய ‘டானை’ நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு ரகளையான பாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. ‘நானும் ரவுடிதான்’ என்று இதே போன்றதொரு பாத்திரத்தில் அவர் ஏற்கெனவே நடித்திருந்தாலும் முற்றிலும் வேறு மாதிரியான சித்திரம் இது. இதையொட்டி தமிழ் சினிமாக்களின் தேய்வழக்குகளை கிண்டலடித்திருக்கிறார்கள். கூடவே சில அரசியல் பகடிகளும். ‘தமிழ் படம் 2’ வெளிப்படையாக முன்வைத்ததை, ரசிக்கக்கூடிய அமைதியுடன் சாதித்திருக்கிறது, ஜுங்கா.

‘டான்’ ஜுங்காவை ‘என்கவுன்டர்’ செய்ய முடிவு செய்கிறது தமிழக காவல்துறை. துரைசிங்கம் (?!) எனும் அதிகாரியை இதற்காக அனுப்புகிறார்கள். “யார் இந்த ஜுங்கா?” என்று அவர் விசாரிக்கிறார். ‘பிளாஷ்பேக்’ வழியாக ஜுங்காவின் அறிமுகம் விரிகிறது. பொள்ளாச்சியில் பேருந்து நடத்துநராக இருக்கிறார் விஜய் சேதுபதி. பேருந்தில் தினமும் வரும் மடோனா செபாஸ்டியனைக் காதலிக்கிறார். இது தொடர்பாக ஏற்படும் சில்லறைத் தகராறில் முகத்தில் குத்து வாங்குகிறார். தம்மை அடித்தவர்களைப் பழிவாங்கச் செலவு செய்து ஆட்களை ஏற்பாடு செய்கிறார். அதில் பலனில்லாமல் போக தாமே எதிரிகளை அடித்து வீழ்த்துகிறார். ‘நம்முடையது ‘டான்’ குடும்பம்’ என்ற ரகசியத்தை இதுவரை தெரியவிடாமல் வளர்த்தேனே’ என்று தாய் சரண்யா புலம்ப, தன் தந்தையான ரங்காவும், தாத்தா லிங்காவும் ‘டான்’களாக இருந்தவர்கள் என்பதை அறிந்துகொள்கிறார் விஜய் சேதுபதி.

ஆனால் அவர்களின் வரலாறு பெருமைக்குரியதாக இல்லை. வெட்டி வீறாப்புடன் சுற்றும் ‘நகைச்சுவை’ டான்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிற சொத்தையெல்லாம் காலி செய்து குடும்பத்தை ஓட்டாண்டி ஆக்கியிருக்கிறார்கள். அவர்களைப் போல் அல்லாமல் சிக்கனமாகச் சேமித்து, தன் குடும்பச் சொத்தான ‘சினிமா பாரடைஸ்’ என்கிற திரையரங்கை மீட்பதை லட்சியமாகக் கொண்டு சென்னைக்குச் செல்கிறார் விஜய் சேதுபதி. ‘ரூ.500/-க்கு கொலை, அடிதடி’ என்று சகாய விலையில் சேவை செய்ய பணம் குவிகிறது. இதனால் இதர டான்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்கிறார். திரையரங்கை வைத்திருக்கும் செட்டியார், அதைத் திரும்பத் தர மறுப்பதோடு விஜய் சேதுபதியை அவமானப்படுத்தியும் விடுகிறார்.

பாரிஸில் தங்கியிருக்கும் செட்டியாரின் மகளைக் கடத்துவதின் மூலம் தன் லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்கிறார் விஜய் சேதுபதி. ஆனால் வடிகட்டிய கஞ்ச ‘டானான’ இவர் எப்படி வெளிநாட்டுக்குச் செல்கிறார்? அங்கு இத்தாலிய மாஃபியாவிற்கும், பிரெஞ்சு போலீஸிற்கும் இடையில் சிக்கி எப்படித் தப்பிக்கிறார்? செட்டியாரின் மகளைக் கடத்தினாரா, திரையரங்கத்தை மீட்டாரா என்பதையெல்லாம் நையாண்டி பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.



‘கஞ்ச’ டான் பாத்திரத்தில் விஜய் சேதுபதி கலக்கியெடுத்திருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன.

ஒரேயொரு காட்சியின் மூலம் ஜுங்காவின் குணச்சித்திரத்தை உதாரணம் காட்ட முயல்கிறேன். ஒருவனைக் கொலை செய்வதற்காக பழைய ஜீப்பில் இரண்டு அடியாட்களுடன் கிளம்புகிறான் ஜூங்கா. ‘வண்டி சும்மாதானே போகிறது’ என்று அதை ‘ஷேர் ஆட்டோவாக்கி’ வழியில் பயணிகளை ஏற்றிச் செல்கிறான். கொலை செய்யப்படவிருக்கிறவனின் வீட்டில் தன் கைபேசிக்கு ‘சார்ஜ்’ போடச் சொல்கிறான். மதிய உணவை அந்த வீட்டின் பிரிட்ஜில் இருந்து எடுத்து வரச் சொல்கிறான். இப்படிப் பல காட்சிகளின் வழியாக ‘டானின்’ அற்பத்தனங்களைச் சித்தரித்துச் சிரிக்க வைக்கிறார்கள்.

திரையரங்கை மீட்பதற்காகக் கஞ்சத்தனமாகப் பணம் சேர்க்கும் இவனின் இம்சைகளைத் தாங்க முடியாமல் யோகி பாபு உள்ளிட்ட உதவியாளர்கள் தவிக்கிறார்கள். இந்திய ரூபாய்க்கும் யூரோவிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் செலவு செய்து விட்டு பயங்கரக் கோபத்துடன் கண்ணீர் விடுவது, ‘டான்’களின் கூட்டத்தில் கெத்தாகப் பேசி விட்டு அங்குள்ள குளிர்பானத்தையும், பிஸ்கெட்டையும் லவட்டிக் கொண்டு வருவது, செட்டியாரிடம் சவால் விடுவது, காதலியிடம் தன் கதையைச் சொல்வது.. எனத் தன்னுடைய பாத்திரத்தை ரகளையாகக் கையாண்டிருக்கிறார் விஜய்சேதுபதி. ‘உதவி’ டானாக வரும் யோகி பாபுவின் எதிர்வினைகள் நகைச்சுவையாக அமைந்திருக்கின்றன.

‘உனக்கு ஜுங்கா’ன்னு எப்படி பேர் வந்துச்சு தெரியுமா?’ என்று குடும்ப வரலாற்றின் கேவலத்தைக் கூறும் சரண்யாவின் வசன உச்சரிப்பும் நடிப்பும் அட்டகாசமான நகைச்சுவையுடன் அமைந்திருக்கிறது. சமயத்திற்கு ஏற்றாற் போல் தோரணையை மாற்றும் ஜுங்கா-வின் பாட்டி (விஜயா) மிகவும் ரசிக்க வைக்கிறார். சிறிது நேரமே வந்தாலும், ‘காட்ஃபாதர்’ திரைப்பட ‘டானை’ நினைவுப்படுத்தும் ராதாரவியின் கோணங்கித்தனம் புன்னகைக்க வைக்கிறது. ஜுங்காவின் ‘பாரிஸ்’ காதலியாக நடித்திருக்கும் சயீஷாவின் ஆடம்பரமான தோற்றமும் நடனமும் வசீகரிக்கிறது. ‘தெலுங்கு’ பேசும் பெண்ணாக, சிறிது நேரம் வந்தாலும் மடோனா செபாஸ்டியன் கவர்கிறார். செட்டியாராக, இயக்குநர் சுரேஷ் மேனன் நடித்திருக்கிறார்.

முதல் பாதியில் ரகளையாக நகரும் திரைப்படம், பாரிஸிற்கு இடம் மாறியவுடன் தொய்வடைந்து விடுகிறது. மீண்டும் இறுதிப்பகுதியில்தான் ‘கலகல’வுணர்வு திரும்புகிறது. ஒரு காமெடியான ‘டான்’, இத்தாலிய மாஃபியா மற்றும் பிரெஞ்சுக் காவல்துறை ஆகியவர்களுடன் மோதி சாகசம் செய்வது, பணக்கார ஹோட்டலில் தங்குவது உள்ளிட்ட பல காட்சிகளில் தர்க்கமில்லை. இது போன்ற காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குறைத்து சோர்வூட்டுகின்றன. ‘நகைச்சுவை திரைப்படம்தானே’ என்று இந்த லாஜிக் மீறல்களைச் சமாதானப்படுத்திக் கொண்டாலும், பலவீனமான திரைக்கதை உண்டாக்கும் சோர்விலிருந்து வெளியே வர முடியவில்லை. இதற்கு மாறாக படத்தின் முதல் பாதியின் வேகத்தை அப்படியே தக்க வைத்திருந்தால் இன்னமும் ரசிக்கக்கூடிய திரைப்படமாகியிருக்கும் ஜுங்கா.

‘மெளனராகம்’, ‘பாட்ஷா’ போன்ற திரைப்படத்தின் காட்சிகள் ரசிக்க வைக்கும் வகையில் மெலிதாகக் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. விஜய் சேதுபதிக்கும், மடோனா செபாஸ்டியனுக்கும் இடையிலான காதல் முறிந்து போவதற்கான காரணம் இதுவரை உலக வரலாற்றிலேயே சொல்லப்பட்டதில்லை. ‘அவன் கிட்ட கதையில்லை போலிருக்கிறது, ‘பார்ட் டூ’விற்கு அடிபோடறான், மாட்டிக்காத’ மற்றும் ‘சாதிக்காமலேயே சக்ஸஸ் பார்ட்டி’ போன்ற வசனங்களின் மூலம் சமகாலத் தமிழ்த் திரையுலகின் போக்குகளையும் கிண்டலடித்திருக்கிறார்கள்.

சித்தார்த் விபினின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் கவரவில்லை. தமிழ் சினிமாவின் வழக்கம் போல், ஒரு டூயட் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வந்து, வேகத்தடையாக அமைந்து ‘கொட்டாவி’ விட வைக்கிறது. பாரிஸ் உள்ளிட்ட இடங்களை ஒளிப்பதிவு அபாரமாக பதிவு செய்திருக்கிறது.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய கோகுல் ‘ஜுங்கா’வை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதிக்கெனத் தயார் செய்யப்பட்ட பிரத்யேகமான திரைக்கதை கவர வைக்கிறது. இவரது திரைப்படங்களின் சில பகுதிகள் ரசிக்க வைக்கும். ஆனால் ஒட்டுமொத்த நோக்கில் திருப்தியைத் தராது. ஜுங்காவும் இதற்கு விதிவிலக்கில்லை.

தன்னுடைய பாரம்பரியச் சொத்தை மீட்பதற்காக, ‘கஞ்ச’ டான் செய்யும் நகைச்சுவைகளும், விஜய் சேதுபதியும்தான் இந்தத் திரைப்படத்தின் முக்கிய பலம். ஏறத்தாழ படத்தின் முழுச்சுமையையும் அநாயசமாக சுமந்திருக்கிறார் விஜய்சேதுபதி. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை சிதைக்காமல், முழு திரைப்படத்தையும் நகர்த்தியிருந்தால் மேலதிகமாக ரசிக்க வைத்திருப்பான் ‘ஜுங்கா’.
கர்ப்பம் என தவறான சிகிச்சை டாக்டர்கள் மீது பெண் வழக்கு

Added : ஜூலை 28, 2018 22:49 |

சென்னை, வயிற்றில் இருந்த கட்டியை, கர்ப்பம் எனக்கூறி சிகிச்சை அளித்த, அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மருத்துவ அறிக்கை குறித்து, நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு, விளக்கம் பெற அவகாசம் அளித்து, விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.சென்னையை அடுத்த ஒக்கியம் - துரைப்பாக்கத்தைச் சேர்ந்த, அசினா பேகம் தாக்கல் செய்த மனு:எனக்கு, 2009ல், திருமணம் நடந்தது. குழந்தைபேறு இல்லாமல் இருந்தது. 2016 ல், மாதவிடாய் பிரச்னை வந்தது.திருவல்லிக்கேணி, கஸ்துாரிபாய் அரசுமருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த டாக்டர்கள், நான் கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரிவித்தனர்.ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லாத நான், கர்ப்பம் தரித்திருப்பதாக டாக்டர்கள் கூறியவுடன், மகிழ்ச்சி அடைந்தேன்; குடும்பத்தினரும் மகிழ்ந்தனர். ௨௦௧௬ நவம்பரில், பிரசவ தேதி இருக்கும் என்றும் தெரிவித்தனர்.குழந்தை பேறுக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது.வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனைக்கு சென்றேன். 'ஸ்கேன்' எடுத்து பார்த்தனர். குழந்தை, ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இரண்டு நாட்களுக்கு பின், அடி வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது.மருத்துவமனை சென்று, மீண்டும், ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது தான், வயிற்றில் குழந்தை இல்லை; கட்டி இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால், நானும், குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தோம்.இதையடுத்து, மருத்துவ குறிப்புகள், அறிக்கைகள் அனைத்தையும், டாக்டர்களும், ஊழியர்களும் எடுத்து கொண்டனர்.எனக்கு முறையான மருத்துவ சிகிச்சை தரப்படவில்லை. கர்ப்பம் தரித்திருப்பதாக கூறி, தவறாக டாக்டர்கள் கணித்துள்ளனர்.டாக்டர்களின் அஜாக்கிரதை குறித்து, அதிகாரிகளுக்கு மனு அளித்தேன்; உரிய நஷ்டஈடு தரும்படி கோரினேன். அவர்கள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நான் அடைந்த மன உளைச்சல், கஷ்டத்துக்கு, இழப்பீடு வழங்க வேண்டும். தவறு செய்த கஸ்துாரிபாய் அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் கே.பாலாஜி, அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் பி.ராஜலட்சுமி ஆஜராகினர்.மருத்துவ அறிக்கை தொடர்பாக கேள்விகள் எழுப்பிய நீதிபதி, அதுகுறித்து, டாக்டர்களிடம் விளக்கம் பெற உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.
தினமும் ரூ.8 கோடி நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள்

Added : ஜூலை 28, 2018 22:33 

ராமநாதபுரம், அரசு போக்குவரத்து கழகங்கள் தினமும் 8 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக அமைச்சர் மணிகண்டன் பேசினார்.ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு ஆண்டு விழாவில் அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது:'' ஒரு மகன் தந்தையின் சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கிய பின், அவரை கவனிக்காமல் விட்டுவிட்டான். வேறுவழியின்றி அவன் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மகன் எழுதி வாங்கிய சொத்துக்களை மீண்டும் முதியவர் பெயருக்கு மாற்றி உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதுபோன்ற சட்டங்கள் வரவேண்டும்.சென்னையில் மட்டும் ஜெ., உத்தரவின் பேரில் முதியவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. கட்டண உயர்வுக்கு முன் தினமும் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் இயங்கின. தற்போது இது குறைந்தாலும் தினமும் 8 கோடி ரூபாய் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன.எனவே தான் முதியோருக்கு இலவச பஸ்பாஸ் வழங்குவதை மற்ற மாவட்டங்களுக்கும் செயல்படுத்த முடியவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து விமானப்படை தளம் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.
கார் சர்வீசில் கோளாறு: ரூ.2 லட்சம் இழப்பீடு

Added : ஜூலை 28, 2018 18:56

சென்னை, 'கார் கோளாறை முழுவதுமாக சரி செய்யாத இரண்டு நிறுவனங்கள், வாடிக்கையாளருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், அயனாவரத்தைச் சேர்ந்த துரைகண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:என் காரின் இன்ஜினில், ஆயில் கசிவு, 'ஏசி' கோளாறு இருந்தது. சர்வீஸ் மையத்தில், இரண்டு முறை கோளாறு சரி செய்யப்பட்டும், காரை இயக்க சிரமமாக இருந்தது.இதற்காக, 1.14 லட்சம் ரூபாய் செலவாகியும் பயனில்லை. இது குறித்து கேட்டால், சர்வீஸ் நிறுவனமும், கார் விற்பனை நிறுவனமும் சரிவர பதிலளிக்கவில்லை. 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரி இருந்தார்.வழக்கு விசாரணை சமீபத்தில் நடந்தபோது, கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனங்கள் கூறியதாவது:மனுதாரர் காரை முறையாக பயன்படுத்தவில்லை. எங்கள் சேவையில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அவை கோரி இருந்தன.நீதித்துறை உறுப்பினர் பாஸ்கரன் பிறப்பித்த உத்தரவு: கார் விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனங்கள், உரிய சேவை வழங்கவில்லை. இரண்டு நிறுவனங்களும், மனுதாரருக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், சேவை குறைபாட்டுக்கு, 25 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்உத்தரவிட்டார்.
மதுரையில் 16 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி மூதாட்டி பலி 

Added : ஜூலை 29, 2018 01:19 |

  மதுரை, மதுரையில், குடியிருப்புகள் நிறைந்த மதிச்சியம் பகுதியில், 16 வயது சிறுவன், கார் ஓட்டி பழகினான். இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி, சாலையோரம் இட்லி விற்றுக்கொண்டிருந்த, 60 வயது மூதாட்டி பலியானார்.மதுரை வைகை வடகரை புளியந்தோப்பில், சாலையோரம் இட்லி வியாபாரம் செய்து வந்தவர் பழனியம்மாள், 60. ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் வைகைமூர்த்தி; அ.தி.மு.க., பேச்சாளர். இவரது போர்டு ஐகான் காரை, 16 வயது பேரன் நேற்று காலை, 8:45 மணிக்கு ஓட்டியுள்ளான்.அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து, பழனியம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.அவர்கள் கூறியதாவது:சிறுவன் கார் ஓட்டி பழகியதில், இவ்விபத்து ஏற்பட்டது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 16 வயது சிறுவனை, கார் ஓட்ட வைகைமூர்த்தி அனுமதித்தது தவறு. ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள சிறுவன், மாட்டுத்தாவணி பகுதியில் மெக்கானிக்காக உள்ளான்.ஓட்டுனர் உரிமம் இல்லாமல், 18 வயதுக்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது, முரட்டுத் தனமாக வாகனம் ஓட்டியது உட்பட, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுவனை கைது செய்து உள்ளோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.
ஆந்திரா ஜாதி சான்றிதழ் பெற்ற பெண்ணுக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு சலுகை இல்லை

Added : ஜூலை 29, 2018 00:02

சென்னை, 'வெளி மாநிலத்தில், பழங்குடியின சான்றிதழ் பெற்றவர், தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்க கோர முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கீதா என்பவர் விண்ணப்பித்திருந்தார். பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலத்தில் பெற்ற, பழங்குடியின சான்றிதழை இணைத்திருந்தார்.பழங்குடியின பிரிவின் கீழ், மருத்துவ படிப்பில் இடம் ஒதுக்கக்கோரி, மருத்துவ கல்விக்கான தேர்வுக் குழுவுக்கு, மனு அளித்தார். மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில், தமிழக மாணவர், வெளிமாநிலத்தில் இருந்து, ஜாதி சான்றிதழ் பெற்றிருந்தால், பொதுப் பிரிவின் கீழ் தான் பரிசீலிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.மனுதாரர், ஆந்திர மாநிலத்தில் இருந்து பெற்ற, ஜாதி சான்றிதழை சமர்ப்பித்து, இடஒதுக்கீட்டின் கீழ் பரிசீலிக்கும்படி கோரியுள்ளார். அதனால், நிவாரணம் பெற, அவருக்கு உரிமை இல்லை.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒரு மாநிலத்தைச் சேர்ந்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதே மாநிலத்தில் தான் சலுகை பெற முடியும். குடிபெயர்ந்த மாநிலத்தில், சலுகை பெற உரிமையில்லை.இந்த வழக்கை பொறுத்தவரை, ஆந்திர மாநிலத்தில், ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளதால், தமிழகத்தில் இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் நிவாரணம் கோர முடியாது. விளக்க குறிப்பேட்டின்படி, பொதுப்பிரிவுக்கு தான் பரிசீலிக்க முடியும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கோவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம்

Added : ஜூலை 28, 2018 23:42

திருவாரூர், திருவாரூர் அருகே, பிரசாதம் சாப்பிட்ட 200 பேர், வாந்தி, பேதி ஏற்பட்டுமயக்கம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா,குவளைக்கால் மகாமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம்நடந்தது.விழாவை ஒட்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளிசாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, பிரசாதம் சாப்பிட்ட, 30 ஆண்கள் உட்பட, 200 பேர், வாந்தி, பேதி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில், 28 பேர் மேல்சிகிச்சைக்காக, நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிரசாதம் சாப்பிட்டதால் வாந்தி, பேதி ஏற்பட்டதா அல்லது குடி நீரால் பாதிப்பா என விசாரித்து வருகிறோம். மேலும், பிரசாதம் மற்றும் அங்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பரிசோதனைக்குப்பின் உண்மையான காரணம் தெரியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து மஹா.,வில் 33 பேர் பலி

Added : ஜூலை 29, 2018 01:09

ராய்கட், மஹாராஷ்டிராவில், வேளாண் பல்கலை ஊழியர்கள் சென்ற சுற்றுலா பஸ், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 33 பேர் பலியாகினர்.மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த, தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள், 34 பேர், கர்நாடகாவில் உள்ள மஹாபலேஸ்வருக்கு, சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.அதன்படி, நேற்று காலை, ரத்னகிரியிலிருந்து, ராய்கட் வழியாக பஸ்சில் சென்றனர். ராய்கட் மாவட்டத்தில், மலைப் பாதையில் பஸ் சென்ற போது, திடீரென, 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.பஸ்சில் பயணித்த, 33 பேர் சம்பவ இடத்திலேயேபலியாகினர்.உயிர் தப்பிய ஒருவர், விபத்து குறித்து, அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த வீரர்கள், இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில்ஈடுபட்டுள்ளனர்.

'தமிழகத்தில் தனியார் கல்லூரிகளால் கல்வி வளர்ச்சி'


Added : ஜூலை 29, 2018 01:16 | 
கோவை, ''உயர்கல்வியில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கு, தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு முக்கிய காரணம்,'' என, டில்லி தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலை பேராசிரியை, மனிஷா பிரியம் பேசினார்.தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், 'பயன்பாடு சார்ந்த கல்விமுறை' என்ற தலைப்பில், மாநில அளவிலான பயிலரங்கு, இரண்டு நாட்களாக கோவையில் நடந்தது. விளக்கம்நிறைவு நாளான நேற்று, ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகாடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய், டில்லி, உயர்கல்வித்துறை தலைவர், பேராசிரியர் சுதான்சு பூஷன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர், திருவேங்கடம் ஆகியோர், பயன்பாடு கல்வி சார்ந்த விளக்கங்களை அளித்தனர்.டில்லி தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலை பேராசிரியை, மனிஷா பிரியம் பேசியதாவது:கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பயன்பாடு சார்ந்த கல்விமுறையில், முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.தொடர் மாற்றங்கள்கல்வி நிறுவனங்கள், கற்பித்தல் மையங்களாக அல்லாமல், மாணவர்களை மையமாக கொண்ட, கற்போர் மையமாக செயல்படவேண்டும்.மாணவர்களின் திறன் ஆய்வு செய்யப்பட்டு, நம் கற்றல் முறைகளில் தொடர் மாற்றங்கள், மேம்பாடுகளை கொண்டுவரவேண்டும். உலகளாவிய அறிவை பெறவேண்டும் என்பது கல்வியின் நோக்கமல்ல; சமூக மேம்பாட்டிற்கு உதவும், பயனுள்ள நல்ல நோக்கங்களுக்கான கருவியாக, கல்வியும், பாடத்திட்டமும் அமையவேண்டும்.இதன்மூலமே, மாணவர்களின் தனித்திறன் மேம்படும். எதிர்கால பல்கலைகள், அறிவு என்பதைவிட திறன்சார்ந்த அறிவு என்பதையே ஊக்குவிக்கும். உயர்கல்வித்துறையில் தமிழகம் முன்னணியில் இருப்பதற்கான காரணம், தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு என்பதை, இப்பயிலரங்கு மூலம் உணரமுடிகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக தனியார் கல்லுாரிகளின் செயல்பாடுகள், ஆக்கப்பூர்வமாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
எம்.பி.பி.எஸ்., வகுப்பு 1ம் தேதி துவக்கம்

Added : ஜூலை 28, 2018 22:04

சென்னை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவங்குவதாக, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 4,699 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போது, 'நீட்' தேர்வில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங், வரும், 30, 31ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 1ம் தேதி முதல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:அரசு ஒதுக்கீட்டில், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, ஆக., 1ம் தேதி, வகுப்புகள் துவங்குகின்றன. மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை உத்தரவால், இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அந்த முடிவுகள் வெளியானதும், அதில், மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அடிப்படையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜாதி சான்றிதழ் தாமதம் கவுன்சிலிங்கில் அனுமதி

Added : ஜூலை 28, 2018 22:03

சென்னை, பழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:நாங்கள், பழங்குடியின சமூகமான, 'குறுமர்' இனத்தைச் சேர்ந்தவர்கள்; என் மகன் பரதன், பிளஸ் ௨ தேர்விலும், 'நீட்' தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளான்.குறுமர் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மனு, தர்மபுரி மாவட்ட வருவாய் கோட்ட அதிகாரியிடம் நிலுவையில் உள்ளது. சான்றிதழ் கிடைக்க, ௧௦ நாட்களாகும்.எனவே, ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி வற்புறுத்தாமல், பழங்குடியின பிரிவுக்கான ஒதுக்கீட்டின் கீழ், என் மகனை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.துரைசாமி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஜாதி சான்றிதழை வற்புறுத்தாமல், பழங்குடியின பிரிவுக்கான ஒதுக்கீட்டின் கீழ், கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். 'சான்றிதழ் கிடைத்த உடன், அதை சமர்ப்பிக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் பொய்யானது என, பிற்காலத்தில் தெரிய வந்தால், மனுதாரரின் தகுதி செல்லாதது ஆகி விடும்' என, கூறப்பட்டுள்ளது.

Saturday, July 28, 2018

`தலைவர ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா..! - தொண்டர்களை நெகிழ வைத்த மூதாட்டி #Karunanidhi

அஷ்வினி சிவலிங்கம்

தி.மு.க தலைவர் கருணாநிதியைப் பார்க்க திருக்குவளையிலிருந்து தனியாகச் சென்னை வந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் ரத்தினம் என்னும் மூதாட்டி.



கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் ஓய்வில் இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, வயது முதுமை காரணமாக சற்று நலிவடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தர தொடங்கினர். ஓ.பி.எஸ், திருமாவளவன், கமல்ஹாசன் என அனைத்துத் தலைவர்களும் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர். இதையடுத்து நேற்றிரவு முதலே தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். கலைஞர் வீட்டுக்குச் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டுள்ளன.

கருணாநிதி உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளால் தி.மு.க தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் மக்கள் மிகுந்த வருத்தத்தோடு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருக்குவளையைச் சேர்ந்த 85 வயது ரத்தினம் என்னும் மூதாட்டி, கருணாநிதி உடல்நலம் குறித்து கேள்விப்பட்டதும் இன்று அதிகாலையே பஸ் ஏறி சென்னை வந்துவிட்டார். கோபாலபுரத்தில் அவரைக் கண்ட தி.மு.க தொண்டர்கள் அவர் பற்றி விசாரித்துள்ளனர்.




`இன்னைக்கு காலைல பஸ் ஏறி மத்திய கைலாஷ் வந்துட்டேன். அங்கிருந்து அட்ரஸ் கேட்டு பஸ் புடிச்சு இங்க வந்தேன். ஒரேயொரு தடவ அவர ஓரமா நின்னு பார்த்துட்டு போயிடுறேன் பா... எனக்கு கல்யாணம் பண்ணி வச்சதே தலைவர்தான் பா’ என்று கூறியிருக்கிறார் கண்ணீருடன். இதைக் கவனித்த தி.மு.க எம்.எல்.ஏ பி.கே.சேகர் பாபு, அவரை மு.க.ஸ்டாலினிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரை இப்போது பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் மூதாட்டியிடம் பொறுமையாக விளக்கியிருக்கிறார். அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார் ரத்தினம். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து தி.மு.க தொண்டர்கள் வழியனுப்பி வைத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சிவகுமார் என்னும் தி.மு.க பிரமுகர் ஒருவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

NEWS TODAY 20.09.2024