Saturday, October 6, 2018

Link Aadhaar with voter ID to check election fraud: PIL

TIMES NEWS NETWORK

Chennai:06.10.2018

The Madras high court on Friday ordered notice to the Unique Identification Authority of India (UIDAI) and the Centre on a public interest litigation (PIL) seeking to link Aadhaar with electoral rolls and voter identification card to curb electoral malpractices.

A division bench of Justice S Manikumar and Justice P T Asha suo motu impleaded the UIDAI and the Centre in the matter and directed them to file their responses in two weeks before posting the plea to October 29.

When the plea moved by M L Ravi, president of Desiya Makkal Sakthi Katchi, came up for hearing, counsel for the Election Commission of India (ECI) Nirajan Rajagopalan submitted that the ECI had no objection to linking the Aadhaar with voter ID but said that the latest Supreme Court judgment in connection with Aadhaar should be taken into consideration. “Further we have to consider the expenses that are going to be incurred for the same,” he added.

According to the petitioner, the ECI prepares electoral rolls after a manual doorto-door check that could lead to many errors.

Further, to correct such errors, it seeks the support of all political parties and further errors are made and paves the way for corrupt practices. Even in the December 2017 RK Nagar byelection, there was confusion about the voters list due to allegations of malpractices in addition and deletion of voters, he said, adding that the ECI should initiate the process of linking Aadhar with voter ID to avoid the possibility of repeat, multiple, illegal, invalid, and false voters on the list.

The petitioner wanted the court to direct the ECI to do so before the coming general election.

On September 27, the Supreme Court upheld the validity of the Aadhaar Act, terming it a beneficial legislation, but weeded out provisions which had the potential for misuse.

It held that Aadhaar would no longer be mandatory for opening bank accounts, buying mobile phone SIM cards, getting school admissions, or for appearing in boards exams or common entrance tests.



The high court issued notice to UIDAI and the Centre and directed them to file their responses in two weeks before posting the plea to October 29

Friday, October 5, 2018


Mumbai University evaluators not punished for wrong marking: RTI query

TNN | Oct 3, 2018, 04.32 AM IST


 

MUMBAI: While a large number of Mumbai University students are erroneously failed each year, requiring them to apply for re-evaluation, no action seems to be initiated against paper checkers. An RTI query has revealed that the university, between 2015 and 2018, did not take any action against defaulting evaluators for failing students, who were found to pass after applying for re-evaluation. 

In March 2017, TOI reported that between 2014 and 2016, 73,000 students were wrongly failed in examinations but cleared the red after they filed for revaluation.

The RTI application, filed by activist Vihar Durve, has also revealed that there is a provision for action against erring evaluators in the Maharashtra Public University Act, 2016.

According to section 48 of the act, the board of examinations and evaluation shall constitute a committee of not more than five persons to investigate and take disciplinary action for malpractice or lapses on the part of candidates, paper-setters, examiners, moderators, referees and teachers who are connected with the conduct of the examination. The committee must submit its report to the vice-chancellor, who can instruct the authorities to take disciplinary action.

Durve said, "A student's career depends on the marks they score during their years at the university. Also, several times, revaluation results come much after students take the supplementary examinations. All of these things put students through great agony and hence paper checkers must be made accountable. Until that is done, there will be no onus on examiners to ensure there isn't a mistake during evaluation."

He has also demanded that the university return the revaluation fees to students who are failed wrongly. "The university collects crores from re-evaluation applications and must not be able to get away with it," he added.
RTI activist seeks Lord Krishna’s birth certificate from Mathura authorities 

RTI activist Jainendra Kumar Gendle from Bilaspur in Chattisgarh had raised the matter after Lord Krishna’s birthday, known as Janmashtami, was celebrated last month. lucknow Updated: Oct 04, 2018 13:48 IST



HT Correspondent
Hindustan Times, Lucknow


Children dressed as Lord Krishna and Radha take part in a procession during celebrations of Janmashtami festival. (AFP)

An RTI activist has sought the birth certificate of Lord Krishna and proof of him being God from authorities in Mathura.

Public information officer and additional district magistrate (law and order) Ramesh Chand has termed the query “ridiculous”, but forwarded it to the municipal commissioner of Mathura, who keeps records of births and deaths.

RTI activist Jainendra Kumar Gendle from Bilaspur in Chattisgarh had raised the matter after Lord Krishna’s birthday, known as Janmashtami, was celebrated last month.

Mathura is known to be the birthplace of Lord Krishna, who is believed to have taken birth in ‘Dwapar Yug’ at a place now worshipped as Sri Krishna Janambhoomi.

The RTI application accompanied by postal order was received in mid-September.

“It was ridiculous query to make as such issues are of faith and cannot be answered in the manner as asked for,” district magistrate Chand said.

“These are silly things done to attain cheap popularity or to create nuisance and should be dismissed before they hurt sentiments,” said a seer in Vrindavan who did not want to be named.
RTI query to provide Lord Krishna’s birth certificate

TNN | Oct 4, 2018, 11.25 AM IST

 

AGRA: In an unusual RTI, a Chhattisgarh resident has requested the Mathura district authorities to provide the copy of Lord Krishna’s birth certificate along with the proof that Krishna was a God. The query has left officials flummoxed regarding the kind of information that should be provided to the applicant.

Talking to TOI, public information officer, Ramesh Chandra, said, “It is difficult to find answers to questions that are related to public faith and personal beliefs. We are confused what to do with the query and do not know how to respond to it. We can only provide information that is available to us in the system and cannot create any.”

In the RTI application, Jainendra Kumar Gendle, a resident of Bilaspur district, has stated, “The government of India has declared September 3 as a national holiday on account of Krishna Janmashtami. Please provide a copy of Lord Krishna’s birth certificate to prove that he was born on this day in Mathura.”

Reacting to the query, Vrindavan priest Rasiya said, “According to the Hindu calendar, Lord Krishna was born on the eighth day of Krishna Paksha in Bhadra month.”
Delhi High Court upholds MCI regulation to make NEET qualification mandatory to study medicine abroad

India FP Staff Oct 03, 2018 12:41:07 IST

  The Delhi High Court has upheld the Medical Council of India’s (MCI) regulation mandating those wanting to study medicine abroad to appear in and qualify the National Eligibility cum Entrance Test (NEET).

However, for those who want to study medicine abroad but could not pass NEET, the court directed the MCI to grant eligibility certificates to such candidates for this year, reported The Indian Express. From next year, the students will have to pass NEET to study abroad, as required by the amended screening test regulations.


Representational image of Delhi High Court. PTI

“This court is of the opinion that the MCI’s amended regulations, mandating that those desirous of studying abroad, had to appear and qualify in NEET has direct nexus with the quality of professionals who — or many of who would — wish to practice the medical profession and seek enrolment in the State register, for that purpose. It is now essential that everyone wishing to secure admission to any medical college in India has to appear and clear the NEET… Such a requirement is neither unreasonable nor arbitrary,” a bench of Justices S Ravindra Bhat and AK Chawla observed.

The order came after a petition was submitted by the MCI, challenging the amendments to the Foreign Medical Institution Regulations, 2002, and Screening Test Regulations, 2002, reported Live Law.

The petitioners had earlier complained that the new requirements were arbitrary, according to Jagran Josh. MCI counsel T Singhdev said that the system of NEET helps to regulate the admission of only those candidates in the educational institutions at the undergraduate level who have suitable competence and capability.

He argued that many candidates who obtain admission in foreign institutes find it difficult to complete the primary medical course and are do not qualify the screening test for obtaining registration to practice medicine in the country.

Updated Date: Oct 03, 2018 12:41 PM
Bengaluru: Writing God's name on answer sheets constitute malpractice: RGUHS 

Thu, Oct 4 2018 10:19:07 PM

Daijiworld Media Network – Bengaluru

Bengaluru, Oct 4: The Rajiv Gandhi University of Health Sciences (RGUHS), the affiliating authority for all medical, dental and Ayush colleges in Karnataka, has declared writing God’s name and religious symbols on answer sheets will constitute malpractice.

The ban on writing God’s name and ‘mantras’ came after University encountered certain cases where certain words like ‘Om’ or names of gods were written in pre-assigned spots to help the evaluator identify the student whose answer script he or she is evaluating.



M K Ramesh, Registrar (Evaluation) of RGUHS told media that some students wrote religious slogans or symbols on different pages of the booklet, to signal the evaluator.

Besides the ban on religious words, the university has issued a circular which prohibits students from writing the register number, their name, the letters ‘P.T.O.’ at the end of the pages, other irrelevant messages, any word, number, or sentence that is extraneous to the answers, answers that are out of context to the question asked, and tampering with the booklets.

“Do not write any sign/symbol, letter, word which are likely to be construed as revealing the identity of the answer script,” the circular issued by the varsity on Monday stated.

The registrar added that if evaluator comes across answer scripts which violate rules, it will be sent to Malpractice Committee, to decide whether the student has to pay a penalty or be disqualified.

Meanwhile, the Professional Misconduct Committee will oversee the functioning of evaluators.

UGC approves Anna University’s all distance education programmes


TNN | Oct 4, 2018, 08.50 PM IST


 

CHENNAI: The University Grants Commission, the apex body for higher education, has approved all the distance education programmes of Anna University. 

The Centre for Distance Education (CDE) of Anna University has been offering distance education programmes in MBA, MCA and M Sc (computer science) since 2007.

The MBA programme is offered with specialisations in general management, marketing and a few other streams.

Recently, new regulations -- the UGC (Open & Distance learning) Regulations, 2017 and subsequent amendments in 2018 -- were brought in by the UGC to regulate the conduct of distance learning programmes by various varsities in the country.

According to a press release, Anna University with a NAAC score of 3.46 has fulfilled all the requirements mandated by the UGC in its new regulations.

In this regard, the notification approving all the three programmes -- MBA, MCA and MSc -- conducted by CDE for a period of five years (2013 to 2023) was issued by the UGC on October 3.

DGHS Notice 3.10.2018


Delhi HC Strikes Down UGC Regulations Giving 100% Weightage To Viva Voce For MPhil & PhD Admissions [Read Judgment] | Live Law

Delhi HC Strikes Down UGC Regulations Giving 100% Weightage To Viva Voce For MPhil & PhD Admissions [Read Judgment] | Live Law: The Delhi High Court has struck down as arbitrary a University Grants Commission (UGC) Regulation which granted 100% weightage to viva voice

கவிப் பேரரசு வைர முத்து


பூமியை
கைவிடப் பார்ப்பவனே

பூமி
உன்னை கைவிடவில்லையப்பா

காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?

தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது
நிறுத்திக் கொண்டதா?

பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?

தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.

நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?

*

உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திரு
என் பின்னால் வா

அதோ பார்

உயிரில் பாதி
ஒழுகி விட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன்- ஏன்?

அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே – ஓஏன்?

பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே ஏன்?

மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?

வலையறுந்தும் நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?

வாழ்க்கையின்
நிமிஷ நிட்டிப்புக்குத்தான்

*

தம்பீ

சாவைச்
சாவு தீர்மானிக்கும்

வாழ்வை நீ தீர்மானி

புரிந்து கொள்

சுடும் வரைக்கும்
நெருப்பு

சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்

- கவிப்பேரரசு வைரமுத்து..
கனமழை காரணமாக சென்னை வரும் விமானங்கள் தாமதம்

2018-10-05@ 08:00:17



சென்னை: கனமழை காரணமாக சென்னை வரும் விமானங்கள் அரைமணி நேரம் தாமதமாக வந்து செல்கின்றனர். சென்னையில் நேற்று முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் விடாமல் மழை பெய்து வருவதால் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் 1 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குணப்படுத்த முடியாத நோயாக இருந்தாலும் சிறுவனை கருணை கொலை செய்ய வாய்ப்பு இல்லை

2018-10-05@ 05:48:45




* மருத்துவக் குழு அறிக்கை தாக்கல் 

* நீதிபதி கண்கலங்கியதால் நீதிமன்றத்தில் சோகம்

சென்னை: தன்னுடைய உணர்ச்சியில்லாத 10 வயது மகனை கருணைக் கொலை செய்யக்கோரிய வழக்கில் சிறுவனைக் கருணைக்கொலை செய்ய முடியாது என்று மருத்துவக் குழு அறிக்கையைப் பார்த்த உயர் நீதிமன்ற நீதிபதி கண்கலங்கியது நீதிமன்றத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த திருமேனி என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் டெய்லர் வேலை செய்கிறேன். எனக்கு 14 வயது, 12 வயதில் 2 பெண் குழந்தைகளும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனது மகன் கடந்த 2008ல் பிறந்தான். அவன் பிறந்ததிலிருந்து பேசவில்லை. சுற்றியிருப்பவர்களையும் அடையாளம் காண முடியவில்லை.

தற்போது அவனுக்கு தினமும் 20 முறை வலிப்பு வருகிறது. அவனைக் குணமாக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, எனது மகனைக் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த சிறப்பு மருத்துவர்களை தேர்வு செய்ய குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த மருத்துவக் குழு சிறுவனைச் சோதனை செய்து நேற்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலையில் உள்ளான். தாய் மற்றும் சகோதரி பேசுவது அவனுக்கு கேட்கிறது.

முழுநேரம் அவனுக்கு மற்றவர்கள் உதவி தேவைப்படுகிறது. எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சிறுவனை கருணைக் கொலை செய்ய முடியாது. இறுதி வரை எந்த மருத்துவத்தாலும் குணப்படுத்த முடியாத நிலை உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதைக்கேட்ட நீதிபதி, கண்கலங்கினார். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயனிடம், இந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவாகுமே. ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அதற்கு கார்த்திகேயன் எத்தனை கோடி ரூபாய் வேண்டுமானாலும் பெற முடியும். ஆனால், சிறுவனை சாதாரண நிலைக்கு கொண்டுவர முடியாது என்ற நிலையே உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி மீண்டும் கண்கலங்கினார். இதைப்பார்த்த நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த வக்கீல்களும் கண்கலங்கினர்.

அப்போது, அரக்கோணத்தில் உள்ள பிரேம் நிகேதன் என்ற ஆஸ்ரமம் அந்த சிறுவனை பார்த்துக்கொள்வதாக தெரிவித்தது. ஆனால், சிறுவனின் தந்தை என் குழந்தையை நானே பார்த்துக்கொள்வேன் என்று கூறி அழுதார். இதையடுத்து, நீதிபதி, இதுபோன்ற மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாத மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளவர்களின் பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் திட்டம் எதுவும் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ளதா?. அப்படி ஒரு திட்டம் இல்லையென்றால் இதற்காக ஒரு புதிய திட்டத்தை ஏன் கொண்டுவரக்கூடாது? என்று கேள்வி எழுப்பி அடுத்த கட்ட விசாரணையை வரும் 23ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் சோகம் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் சென்னையில் மர்ம மரணம்: மனைவியிடம் தீவிர விசாரணை


2018-10-05@ 00:20:33




சென்னை: திருமணமான ஒரு மாதத்தில் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர், மர்மமான முறையில் வீட்டில் இறந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் ஆதாம் கிராஸ்வார்ட் (40). இவர், சென்னையில் உள்ள தனியார் இசை பயிற்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் இசை பயிற்சிக்கு வந்த கொட்டிவாக்கம் வெங்கடேசபுரம் 14வது தெருவை சேர்ந்த ரஷி (24) என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர். மகளின் காதல் விவகாரம் குறித்து ெபற்றோருக்கு தெரியவந்தது. உடனே ரஷியின் பெற்றோர் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆதாம் கிராஸ்வார்டை வீட்டிற்கு அழைத்து விசாரித்தனர். அப்போது, இருவரும் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து ரஷியின் பெற்றோர் மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், ஆதாம் கிராஸ்வார்டை அவரது பெற்ேறாரை அழைத்து வந்து முறைப்படி பெண் கேட்க ரஷியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

அதன்படி ஆதாம் கிராஸ்வார்ட் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இருந்து தனது பெற்றோரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஆதாம் கிராஸ்வார்ட் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரியவந்தது. இதனால் ஆதாம் கிராஸ்வார்டுக்கு பெண்ணை திருமணம் ெசய்து கொடுக்க ரஷியின் பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து ஆதாம் கிராஸ்வார்ட் ஆஸ்திரேலியாவில் உள்ள முதல் மனைவி ெகலியை விவாகரத்து செய்தார். பிறகு கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் சென்னையில் தனது காதலி ரஷியை திருமணம் ெசய்துள்ளார். தொடர்ந்து, இருவரும் பனையூர் விஜிபி தெற்கு அவென்யூவில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவரை திடீரென காணவில்லை என்று மனைவி ரஷி வீட்டில் உள்ள மற்ற அறையில் தேடியபோது அவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் ரஷி புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாம் கிராஸ்வார்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்ேபட்ைட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக அவரது மனைவி ரஷி மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதாம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் கொலையா அல்லது தற்கொலை செய்தாரா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அனுபவம் புதுமை 21: தேவை,சாப்பாடு மீதும் ஒரு கண்!

Published : 07 Sep 2018 10:35 IST


கா. கார்த்திகேயன்





இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோனர் எந்தெந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதில் தெளிவே இல்லாமல் இருக்கிறார்கள். ஓர் உடையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால்கூட மணிக்கணக்காக நேரத்தைச் செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள்.

புது பைக்கை வாங்க வேண்டுமென்றால்கூட, டிசைன், மாடல், அதிலுள்ள வசதிகள் என ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வாங்குகிறார்கள். மொபைல்போன் வாங்கக்கூட இணையத்தில் நீண்ட நேரம் உலவுகிறார்கள். ஆனால், உணவு விஷயத்தில் மட்டும் அசட்டையாக இருக்கிறார்கள்.

காலை உணவுவை சர்வ சாதாரணமாகத் தவிர்க்கிறார்கள். அப்படியே சாப்பிட்டாலும் அவசரகதியில் சாப்பிட்டுவிட்டு ஓடுகிறார்கள். உணவைக்கூட ஆற அமர்ந்து சாப்பிட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. உணவு வேளையில்கூட உடலுக்குத் தேவையான சமச்சீர் உணவைத் தவிர்த்துவிட்டு சிப்ஸ், பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளை உண்ணவே பலரும் முன்னுரிமை கொடுப்பதை அதிகம் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான இளைஞர்கள் ருசிக்கு மயங்கி, சத்தான ஆகாரங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள். இந்த உடலே இன்ஜின் போன்றதுதான். அந்த இன்ஜின் சிறப்பாகச் செயல்பட சத்தான உணவு உடலுக்குத் தேவை என்பதை இந்தக் கால இளைஞர்கள் மறந்துவிடுகிறார்கள். விளைவு, உடல் பருமன் பிரச்சினை, அல்சர், ஒவ்வாமை எனச் சின்ன வயதிலேயே பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள்.

உணவு மீதான மனோபாவத்தை அவசியம் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இந்தக் கால இளைஞர்கள் இருக்கிறார்கள். மாறிவிட்ட இளைஞர்களின் உணவுக் கலாச்சாரத்தைக் கவலையுடன் பார்க்கும் பெற்றோர்கள் வீட்டுக்குவீடு இருக்கவே செய்கிறார்கள். அதுபோன்றவர்களின் அறிவுரையைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், உணவு மீதான அக்கறையின்மையை நாகரிகத்தின் வெளிப்பாடாகக் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது.

இதுதொடர்பான விஷயங்களை அணுகுகிறபோதெல்லாம் என் நினைவுக்கு என் மாணவி ரக் ஷனா நினைவுக்கு வருவார். வீட்டில் வசதிக்குக் குறைச்சலில்லை. நன்றாகப் படிப்பவரும்கூட. ஆனால், அடிக்கடி உடல்நலக் குறைவு என்று விடுப்பு எடுத்துக்கொள்வார். ஒரு முறை வகுப்பில் மயங்கி விழுந்துவிட்டபோது பரபரவென முதல் உதவிகளைச் செய்தோம். கண்விழித்த பிறகு, “என்ன ஆச்சு” என்று பதற்றத்துடன் கேட்டால், “காலையில சாப்பிடலை சார்” சாதாரணமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.

கல்லூரிக்குக் கொண்டுவரும் உணவைக்கூடச் சாப்பிடாமல் திரும்பவும் வீட்டுக்கே கொண்டுசெல்வதைப் பெருமையாக நினைப்பவர் இவர். பார்ப்பதற்கு எப்போதுமே களைப்பாக இருப்பதுபோலவே தெரிவார் ரக்‌ஷனா. அவரைப் பார்க்கும்போதெல்லாம், “உணவின் மீதான அக்கறையின்மை உடம்புக்குப் பெரிய பிரச்சினையைத் தந்துவிடும், நேரத்துக்கு சாப்பிடு” என்று சொல்வதை வாடிக்கையாகவே வைத்திருந்தேன். ஆனால், இந்த அறிவுரைகள் எல்லாம் காற்றில்தான் கலந்ததே தவிர, அவர் காதில் ஏறவே இல்லை.

இறுதியாண்டின் முடிவில் வளாகத் தேர்வில் நல்ல வேலை கிடைத்ததை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்து வாழ்த்து பெற்றுச் சென்றார். அப்போதும் அவருடைய தோழிகள் அவரைக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். “சார், வேலைக்குச் சேர்ந்த உடனே இவளுக்கு அங்கீகாரம் கிடைச்சிடும். சாப்பிட்டாமல் கூட எப்பவும் வேலை பார்க்கிறதால புரோமோஷன், இன்கிரிமென்ட் எல்லாம் சீக்கிரம் எதிர்பார்க்கலாம்” என்ற நையாண்டிக்குப் பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தபடியே விடைபெற்றார்.

இதன் பிறகு ரக்‌ஷனாவை ஆறு மாதம் கழித்து ஒரு மருத்துவமனையில், உடல் மெலிந்து, முகம் பொலிவிழந்த நிலையில்தான் பார்த்தேன். பார்க்கும்போதே நோயில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. மருத்துவரைப் பார்த்துவிட்டு என்னைக் கவனிக்காமல் புறப்பட்டுக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் விசாரிப்பது அவருக்குத் தொந்தரவாக இருக்கும் எனக் கருதி அவரிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டேன்.

என் நண்பரான மருத்துவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் வருத்தப்பட்டு சொன்ன விஷயம் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றித்தான். “இப்பதான் ஒரு பொண்ணு சிகிச்சைக்கு வந்தாங்க. சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் அல்சர் பிரச்சினை வந்திருக்கு. அடிக்கடி மயக்கம் வேற. இதனால் அலுவலகத்துக்கு அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை. சொன்ன நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் போயிருக்கு.

கோபப்பட்ட நிர்வாகம், 'முதல்ல ஹெல்த்த பார்த்துக்குங்க, வேலையை ராஜினாமா பண்ணிடுங்க’ன்னு சொல்லி அனுப்பிவிட்டது. மூணு மாசம் முழுமையா ஓய்வு எடுத்த பிறகு வேற வேலைக்கு முயற்சி பண்ணுங்கன்னு அந்தப் பெண்ணிடமும் அவருடைய அம்மாவிடமும் சொல்லியிருக்கேன்” என்று சொன்னார்.

திறமை, படிப்பு எல்லாம் இருந்தும் ரக்‌ஷனாவின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக இருந்தது அவருடைய உணவு மீதான புரிதலின்மைதான். நமக்குப் பயனளிக்கிற பல உணவு வகை நாவுக்குப் பிடிப்பதாக இல்லை. அதேநேரம் சுவையாக இருக்கிற சில உணவு வகை நம் ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதாக இல்லை.

இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்டு நம்மைச் சரிசெய்து கொள்வது அவசியம். செவிக்கும் வயிற்றுக்கும் சரியான உணவே வாழ்க்கையில் நாம் பெறத் துடிக்கும் நிரந்தர வெற்றிக்கு அஸ்திவாரம். உணவைப் பற்றிய உணர்வில் சரியான திசையில் இளைஞர்கள் பயணிப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய தேவை.

(அனுபவம் பேசும்)
கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு:karthikk_77@yahoo.com
ஓவியம்: பாலசுப்பிரமணியன்

Jail என்றாலும், Prison என்றாலும் ஒன்றுதானா?

ஆங்கிலம் அறிவோமே 224: மிகச் சரியாகப் பேசுறீங்க!

Jail என்றாலும், Prison என்றாலும் ஒன்றுதானா?
ஒன்று போலத்தான் இப்போது பயன்படுத்தப்படுகின்றன.
எனினும், நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு முன் குற்றவாளி என்று கருதப்படுபவரை அடைத்துவைப்பது Jail. சட்டப்படி சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்களை அடைத்துவைப்பது Prison. இப்படித்தான் நெடுங்காலமாகக் கருதப்பட்டுவந்தது.

காலா காந்தியை மறந்துவிட்டோமா?

Published : 02 Oct 2018 18:07 IST

பால்நிலவன்




இன்று காமராஜர் நினைவு தினம். முன்பெல்லாம் காந்தி என்று சொன்னவுடன் கூடவே காமராஜரும் நம் நினைவுக்கு வந்துவிடுவார். ஆனால் இன்று இந்தியா போகிற போக்கில் காந்தியை நினைப்பதே பெரும்பாடாகிவிட்டது.

ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா பெரும் உற்சாகத்தோடு பல்வேறு சிறப்பம்சங்களோடு நாடு தழுவிய அளவில் கொண்டாடப்பட்டிருக்கக் கூடும்.

தனது சுகதுக்கங்களையெல்லாம் மறந்து நாட்டுக்காகவே வாழ்ந்து நாட்டுக்காகவே உயிர் துறந்தவர் காந்தி. அத்தகைய தேசப்பிதாவையே இன்றைக்கு பெயரளவுக்குத்தான் நினைவுகூர வேண்டிய நிலை. அப்படியிருக்க காமராஜரை எப்படி நினைவுவைத்திருப்பது என்று ஒரு கேள்வி எழுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் குறைந்தபட்சம் நாட்டுக்காக உழைத்த தலைவர்களின் பிறப்பு இறப்பு தினங்களில் அவர்களை நினைப்பதுகூட பெரும் சுமையாக கருதும் நிலை இன்று.

“காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி”– என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். அத்தகைய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கோலாகலமாக முடிவடைந்து சில தினங்களே ஆகியுள்ளன. காமராஜரை இன்று எத்தனை அரசியல் தலைவர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.

நினைவுகூர்தல் என்பது ஏதோ மூத்தோர்களுக்கு சடங்கு செய்வது என்பதுபோலல்ல. அவர்களை நினைவுகூர்வதன்மூலம் இன்றைய நமது பாதையைச் சரிபார்ப்பது அல்லது சரிசெய்துகொள்வது.

1975-ல் அக்டோபர் மாதத்தில் இதே தினத்தில் காமராஜர் மறைந்தார். அவரது மறைவுக்கு நாடே கண்ணீர் சிந்தியது. ஏனெனில் அப்போது அடுத்தடுத்து நடந்துகொண்டிருந்த அரசியல் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து வந்த அவரது மரணமும் மக்களின் இதயத்தை உலுக்கியெடுத்தது.

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலைப் பிரகனடத்தை கடுமையாக எதிர்த்த முக்கிய தலைவர்களில் ஒருவர் காமராஜர். இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின்போதே இந்திரா காந்தியோடு முரண்படவேண்டி வந்தது காமராஜருக்கு. தனது தேர்தல் முடிவு செல்லாது என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட உடனே நாடு முழுவதும் நெருக்கடிநிலையைப் பிரகனடத்தை அறிவித்த இந்திரா காந்தியின் செயலில் சிறிதும் உடன்பாடில்லாமல் போனது அவருக்கு.

ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யம் உடைந்து துண்டுதுண்டாக போனதுபோல் ஆனது. காங்கிரஸ் பேரியக்கத்தின் பாதையும் சிதைந்தது. சிண்டிகேட் இன்டிகேட் என இரண்டாகப் பிரிந்ததும்.... அதன்பிறகு அது இன்னும் பல்வேறு துண்டுகளாகப் பிரிந்துபோனது வேறு விஷயம். இதில் யாருக்கு இழப்பு ஏற்பட்டதோ இல்லையோ, யாரைத் தோற்கடிக்கிறோம் என்று தெரியாமலேயே தமிழகம் ஒரு மாபெரும் முதல்வரை, மாபெரும் தலைவரை இழந்தது.

தேசத்தின் எதிர்காலம் குறித்து பெரும் கவலைக்கு ஆளான காமராஜர் அக்டோபர் 2-ம் தேதியான காந்தி பிறந்த நாளில் மறைந்தார். அவரது மரணத்தின்போது ராணுவ மரியாதைக்கு ஏற்பாடு செய்தார் முதல்வர் கருணாநிதி. பிரதமர் இந்திரா காந்தியும் காமராஜரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.

காமராஜரின் மரணத்திற்காக நாடே கண்ணீர்விட்டு அழுதது. அதற்குக் காரணம் ஒரு நல்ல தலைவரைத் தோற்கடித்துவிட்டோமே என்ற மக்களின் குற்ற உணர்வும் அதில் கலந்திருந்தது.

இந்திரா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததே காமராஜர் என்பது மட்டுமல்ல... காலா காந்தி என வட இந்திய மக்களால் உள்ளன்போடு அழைக்கப்பட்டவர் காமராஜர். காலா என்றால் கருப்பு. அத்தகைய கருப்பு காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேசிய அளவில் பணியாற்றிய காலத்தில் நேருவுக்குப் பிறகு தனக்கு கிடைத்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று மறுத்தார். நேருவின் மகள் இந்திராவே அதற்கு பொருத்தமானவர் என்று முன்மொழிந்தார்.

கருப்பு காந்தியான காமராஜர், மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் இறந்தார். பல வருடங்களாக அக்.2க்கு இருவரது புகைப்படங்களையும் வைத்து கடைவீதிகளில், பொது இடங்களில், கல்வி நிலையங்களில், உள்ளாட்சி அலுவலகங்களில் வழிபட்ட காலங்களும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கிவிட்டன.

இந்திரா காந்தியின் வீழ்ச்சியும் வெற்றியும்

நெருக்கடி நிலைக்குப் பிறகு மக்கள் இந்திரா காந்தியை மக்கள் அரியணையிலிருந்து வீழ்த்தியதும், மொரார்ஜி தேசாயை நாட்டின் பிரதமராக்கியதும்... அதன்பிறகு தனது தவற்றை உணர்ந்துவிட்டதாகவும் நெருக்கடி நிலை கொண்டு வந்தது தவறுதான் என மக்களிடம் இந்திரா காந்தி மன்னிப்புகேட்ட பிறகு மீண்டும் அவரிடம் ஆட்சியை மக்கள் ஒப்படைத்ததும் வரலாறு.

ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள், விவசாய உற்பத்திக்குத் தேவையான ஏராளமான நீர்த்தேக்க அணைகள், பிரம்மாண்டமான மின்சக்தி திட்டங்கள் என இன்றுவரை தமிழகம் ஒளிர காரணமாக இருந்த காமராஜர் இறந்தபோது அவர் விட்டுச்சென்றது 4 கதர் வேட்டி, சட்டை, ரூ.350 மட்டுமில்லை... தன்னலம் கருதாமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லெண்ணங்களையும்தான்.

அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்ல எஞ்சி நிற்கப்போவது நிச்சயம் இன்றுள்ள மோசமான அரசியல்வாதிகளோ, வேடிக்கையான இவர்களின் பேச்சுகளோ அல்ல. நாட்டுக்காக உயிர் நீத்த காந்தி, காமராஜர் போன்ற உன்னத மனிதர்களின் உயர்ந்த செயல்களையும் அவர்களைப் பற்றிய நினைவுகளும்தான்.
வீட்டில் ஏ.சி விபத்தை தவிர்க்க சில வழிமுறைகள்

Published : 03 Oct 2018 08:12 IST

இ.ராமகிருஷ்ணன்சென்னை





கோயம்பேட்டில் வீட்டிலுள்ள ஏ.சி இயந்திரத்தில் காஸ் கசிவு ஏற்பட்டு கணவன், மனைவி, மகன் ஆகிய 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகள் நிகழா மல் இருக்க ஏசி இயந்திரத்தை முறையாக பராமரிக்க வேண் டும், தரமான உதிரிபாகங் களை வாங்கி பொருத்த வேண்டும் என இத்துறையின் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

வீட்டில் ஏ.சி விபத்து ஏற்படாத வண்ணம் அதைப் பராமரிக்கும் முறை குறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த கண்ணன் என்ற ஏ.சி.மெக்கானிக் கூறியதாவது:

வீட்டில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி இயல்பான நிலையில்தான் இருக்கிறதா எனப் பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை. பழுதா கிப் பயன்படுத்த முடியாமல் போனால் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பழுதடையா மலே கூட ஏ.சி உயிர் இழப்பை ஏற்படுத்தும்.

ஏ.சி வாங்குபவர்கள், வீட்டில் அது பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். 1.5 டன், 2 டன், 3 டன் என்ற விகிதத்தில் ஏ.சி. இயந்திரங்கள் உள்ளன. 150 சதுர அடி அறைகளுக்கு 1.5 டன் அளவுள்ள ஏ.சியே போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.

உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்கக்கூடாது. நல்ல விலையில் தரமான உதிரி பாகங்களை வாங்க வேண்டும். ஏ.சி வாங்கியதும் அதற்கேற்ற தரமான ப்யூஸ் ஒயர், ‘டிரிப்பர்’ போன்றவற்றை பொருத்த வேண்டும். ஏ.சி. 1.5 டன் கொண்டதெனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ப்யூஸை பொருத்த வேண்டும். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சியைக் காப்பாற் றும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்க வேண்டும்.

ஏ.சி.யை எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சிக்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனால் தீப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரிக்கு ஏ.சி-யை கொண்டு போகக்கூடாது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்ய வேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்ட வேண்டும். ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்பிரே அடிப்பது தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, விரைவில் ஏ.சி இயந்திரத்தை பழுதாக்கி விடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்கொண்டிருக்கும்போதே மின் விசிறியை போடக்கூடாது. ஏசியை ஆஃப் செய்யும்போது ரிமோட்டில் மட்டும் ஆஃப் செய்ய கூடாது. சுவிட்சிலும் ஆஃப் செய்ய வேண்டும். சிறுவர்கள் கையில் ஏசிக்கான ரிமோட்டை கொடுக்க கூடாது. அவர்கள் அடிக்கடி அதை இயக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் கூறும்போது, “வெளியில் இருக்கும்போது ஆக்ஸிஜன் அளவு அதிகமாக இருக்கும். அறைக்குள் செல்லும்போது ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும். அதனால், அறையின் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துவிட்டு தூங்குவது நல்லது. ஏ.சி போட்டு தூங்கும்போது அதை இரவு முழுவதும் இயங்க வைக்காமல், 3 மணிநேரம் வரை ஏசியை ஆன் செய்து விடலாம். ஆட்டோமேடிக் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஏசியை சரியான கால அளவில் சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வெளியில் இருக்கும் நச்சு வாயு ஏசியின் குளிர்ந்த காற்றுடன் கலந்து விடும். அந்த காற்றை சுவாசிக்கும்போது மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். சில நேரம் உயிர் இழப்பைக் கூட ஏற்படுத்தும்" என்றார்.

Emergency Phone Numbers



ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் வழிபாடு


By DIN | Published on : 04th October 2018 11:46 PM

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

நவகிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்றது. இது சோழவள நாட்டில் 98-ஆவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் காசி ஆரண்யம், திருஇரும்பூளை, ஆலங்குடி என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வியாழக்கிழமை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

யாக பூஜைகள்: விழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குருபரிகார யாக பூஜைகளும், அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மூலவர் குருபகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, உத்ஸவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் குருபகவான் சன்னிதி எதிரில் பிராகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சன்னிதிகளில் சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் பங்கேற்று, குருபகவானை வழிபட்டனர்.

குருபெயர்ச்சி: வியாழக்கிழமை இரவு சரியாக 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, மூலவர் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருபெயர்ச்சி விழாவில், அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு ஏற்பாடு: விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தெற்கு கோபுரவாசல் பகுதியில் நீண்ட தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை இரவு தொடங்கி, தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ச. கிருஷ்ணன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பி. தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

2-ஆவது கட்ட லட்சார்ச்சனை: இக்கோயிலில் 2-ஆவது கட்ட லட்சார்ச்சனை அக். 8-ஆம் தேதி தொடங்கி அக். 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கருணை கொலைக்கு அனுமதி கோரிய வழக்கு சிறுவனின் நிலை அறிந்து கண் கலங்கிய நீதிபதி

Added : அக் 05, 2018 00:33

சென்னை:கருணை கொலைக்கு அனுமதி கோரிய சிறுவனின் தந்தைக்கு, மத்திய, மாநில அரசுகள், நிதி உதவி அளிக்குமா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கிருபாகரன், கண்களில் கண்ணீர் ததும்பியது.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவைச் சேர்ந்த, திருமேனி தாக்கல் செய்த மனு:தனியார் மருத்துவமனையில்,2008ல், எனக்கு மகன் பிறந்தான். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட என் மகனை, குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்களிடம் காட்டினேன்.வலிப்புஎந்த முன்னேற்றமும் இல்லை. அவனால் எதையும் செய்ய முடியாது. 

சுற்றுப்புறத்தில், என்ன நடக்கிறது என்பதை, உணரவும் முடியாது.உட்கார முடியாது; மல்லாந்து படுத்த நிலையில் தான் எப்போதும் உள்ளான். வலுக்கட்டாயமாக, உணவை, வாயில் ஊட்ட வேண்டும். தினசரி,20 முறை வலிப்பு வருகிறது. தற்போது, ஒன்பது ஆண்டுகளை கடந்து விட்டான். இன்னும், அதே நிலை தான் நீடிக்கிறது. மூளை பாதிக்கப்பட்டு இருப்பதால், குணமடைய வாய்ப்பே இல்லை என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உணவு, மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. சிறுவனை பரிசோதித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, டாக்டர்கள் குழுவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, கடலுாரில் இருந்து சென்னைக்கு, சிறுவனை கொண்டு வந்து, டாக்டர்கள் பரிசோதித்தனர்.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்து பார்த்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ அறிக்கையை பார்க்கும் போது, எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உடல் நிலை தேறாது என்பது தெரிகிறது. சிறுவனுக்கு ஆதரவும், கவனிப்பும் தேவை. அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அரக்கோணத்தில் உள்ள, அரசு சாரா அமைப்பு, சிறுவனை கவனிக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், சிறுவனை, வேறு யாரிடமும் ஒப்படைக்க, பெற்றோர் தயாராக இல்லை. கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், தானே கவனித்துக் கொள்வதாக தந்தை கூறினார். 

மருத்துவ அறிக்கையை படித்த பின், பதில் அளிப்பதாக, மனுதாரரின் வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர் தெரிவித்தார்.பரிசீலனைமத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், 'நிதி உதவி பெற முடியும்; பெற்றோருக்கு வயதாகும் போது, அவர்களை கவனிக்க ஆள் தேவைப்படும். அப்போது, இந்த சிறுவனின் நிலை என்ன என்பதையும், பரிசீலிக்க வேண்டும்' என்றார்.சிறுவனின் பெற்றோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க முடியுமா; சிறுவனுக்கு, மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பதை, இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது.

மேலும், இதுபோன்ற குழந்தைகள் விஷயத்தில், பெற்றோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசிடம் திட்டம் உள்ளதா என்பதையும், தெரிவிக்க வேண்டும்.எந்த திட்டமும் இல்லை என்றால், இதுபோன்ற குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி அளிக்கவும், பெற்றோருக்கு நிதி சுமையை குறைக்கவும், மத்திய, மாநில அரசுகள், ஏன் திட்டம் வகுக்கக் கூடாது என்பதை தெரிவிக்க வேண்டும். விசாரணை, வரும், 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், சிறுவனின் நிலையை விளக்கும்போது, நீதிபதி கிருபாகரன் கண்கள் ததும்பின. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது, கைக்குட்டையால், கண்களை துடைத்துக் கொண்டார்.

'கிறுக்கிய' டாக்டர்களுக்கு 5,௦௦௦ ரூபாய் அபராதம்

Added : அக் 05, 2018 01:35

லக்னோ:உத்தர பிரதேசத்தில், யாருக்கும் புரியாத வகையில், மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த, மூன்று டாக்டர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி.,யில் உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் எழுதிக் கொடுத்த, மருத்துவக் குறிப்புகள் யாருக்கும் புரியாத வகையில் இருந்தன.இதுதொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அரசு டாக்டர்கள், டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்குகளை விசாரித்தது.'அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால், கையெழுத்து இப்படி இருக்கிறது' என, டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.

டாக்டர்கள் கூறிய காரணத்தை, நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். டாக்டர்கள் மூவருக்கும், தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை, யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. 

இப்படி இருந்தால், வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்?அறிக்கைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கூட, கிறுக்கல்களாகத்தான் உள்ளன. அவற்றை, வக்கீல்கள், நீதிபதிகள் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. டாக்டர்கள், அனைவருக்கும் புரியும்படி மருத்துவ பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து பெயர்களை எழுத வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ரூ.100க்கு குடை கூவிக்கூவி விற்பனை 

Added : அக் 05, 2018 06:24

பண்ருட்டி, 

பண்ருட்டி பகுதியில் பலத்த மழை துவங்கியதால் 100 ரூபாய்க்கு கூவி, கூவி குடைகளை விற்பனை செய்தனர்.பண்ருட்டி பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2:00 மணிக்கு துவங்கிய மழை மாலை 5:00 மணிவரை நீடித்தது. பின் இரவு 9:00 மணிக்கு துாரல்களுடன் துவங்கிய மழை நள்ளிரவு 1:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.இந்நிலையில் மழை காரணமாக பண்ருட்டி கடலுார் சாலையில் குடை விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை குடைகளை கூவிக்கூவி விற்பனை செய்தனர். ஏராளமானோர் குடைகளை வாங்கிச் சென்றனர்.
ஆவணங்கள் இன்றி விமான பயணம்

Added : அக் 05, 2018 01:13




புதுடில்லி:விமான பயணியர், 'பேஷியல் பயோமெட்ரிக்' எனப்படும், முக அடையாள அங்கீகார பதிவு முறையை பயன்படுத்தி, விமான நிலையத்திற்குள் நுழையும் வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

விமான பயணியர், பயணச் சீட்டுடன், தங்கள் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் காண்பித்த பின்பே, விமான நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவது வழக்கம்.இந்நிலையில், மத்திய அரசின், 'டிஜி யாத்ரா' திட்டத்தின் கீழ், ஆவணங்கள் இன்றி, 'பேஷியல் பயோமெட்ரிக்' முறையை பயன்படுத்தி, விமான நிலையத்திற்குள் நுழையும் முறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, சுரேஷ் பிரபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அடிக்கடி விமான பயணம் செய்வோர், தங்கள் பெயர் மற்றும் இதர விபரங்களை, தகுந்த ஆவணங்களுடன், 'ஆன்லைன்' வாயிலாக, ஒருமுறை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு, நிரந்தர அடையாள குறியீடு வழங்கப்படும்.அதன் பின், ஒவ்வொரு முறையும் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, 'டிஜி யாத்ரா' அடையாள குறியீட்டை குறிப்பிட வேண்டும். இதில், ஏற்கனவே பயணியரின் விபரங்கள் பதிவாகி இருப்பதால், விமான நிலைய வாயிலில், ஆவணங்கள் எதையும் காண்பிக்காமல், முக அடையாள அங்கீகாரப் பதிவு மூலம், விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
இந்த திட்டம், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையத்தில், சோதனை முறையில் பயன்பாட்டுக்கு வருகிறது. பின், கோல்கட்டா, வாரணாசி, புனே மற்றும் விஜயவாடா விமான நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

ஷீரடிக்கு சிறப்பு ரயில்

Added : அக் 05, 2018 05:55

கோவை:இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் வரும், 21ம் தேதி ஷீரடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஷீரடி சாய்பாபா நுாற்றாண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும், 21ம் தேதி மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக ஷீரடிக்கு செல்கிறது.கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து புறப்படுவோர், ஈரோட்டில் இருந்து பயணிக் கலாம். ஷீரடியில் உள்ள பாபா சமாதி, பண்டரி புரம், பாண்டுரங்கன் தரிசனம், மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திரர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஏழு நாட்கள் யாத்திரைக்கு, நபர் ஒருவருக்கு, 6,615 ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு, 90031 40655 என்ற எண்ணிலும், www.irctctourism.com எனும் இணைய தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பழநியில் கனமழை: வெறிச்சோடிய கோயில்

Added : அக் 05, 2018 02:42


பழநி:பழநியில் நேற்று பகல் முழுவதும் கன மழை பெய்ததால், மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டது. பக்தர்கள் வருகை குறைவால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை நேற்று மதியம் 3:30 மணி வரை நீடித்தது. இதனால் திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடுகளில் குளம்போல் ரோட்டில் தண்ணீர் தேங்கி நின்றது. மலைக்கோயில் ரோப் கார் மழையால் நிறுத்தப்பட்டு குறைந்த நேரமே இயக்கப்பட்டது. படிப்பாதை, யானைப்பாதையில் ஆறுபோல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.பாதவிநாயகர் கோயில், சன்னதி வீதிகளில் பக்தர்கள் வருகை குறைவால் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டு வெறிச்சோடி கிடந்தன. மழையால் பொதுமக்கள் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
பெற்றோர் இல்லாத மாணவர்களுக்கு, 'ப்ரீ!' தனியார் பஸ் நிர்வாகத்தின், 'சபாஷ்' சேவை

Added : அக் 05, 2018 02:05 |




கோவை : பள்ளி மாணவர்களின் நலன் கருதி, 5 ரூபாய் 'டிக்கெட்' கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ் நிறுவனத்துக்கு, பொதுமக்களிடம் பாராட்டுகள் குவிகின்றன.

பயணிகளை வளைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கில் போட்டிபோட்டு இயக்கும் பஸ்கள் மத்தியில், பள்ளி மாணவர்களிடமும், மக்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம்.

ஒண்டிப்புதுார் - வடவள்ளி, ஒண்டிப்புதுார் - மணியகாரம்பாளையம், காந்திபார்க் டூ காந்திபார்க் என பல்வேறு வழித்தடங்களில் விஜய் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் பஸ்களை இயக்கி வருகிறது. இந்த பஸ்களில் செல்லும் பள்ளி மாணவர்கள், 5 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

அதற்கு, அடையாள அட்டை அல்லது பஸ் பாஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பஸ் கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும். பெற்றோரை இழந்த குழந்தைகள், தலைமை ஆசிரியரிடம் பெற்ற கடிதத்தை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம்.

விஜய் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கிஷோர் கூறுகையில்,''பெற்றோரை இழந்த குழந்தைகள் படிப்பதே சிரமம் என்பதால், அவர்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். மீதமுள்ள மாணவர்களிடம் ரூ.5 மட்டுமே. எங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும், ஐந்து பஸ்களிலும் பள்ளி மாணவர்களுக்கு இச்சலுகை உண்டு. எதிர்காலத்தில் மேலும் பல சலுகைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

விஜய் பஸ்சுக்கு போடுவோம் ஒரு ஜே!
தத்கல்' வாராந்திர ரயில் அறிமுகம்

Added : அக் 05, 2018 01:08

சென்னை:கர்நாடக மாநிலம்,யஷ்வந்த்பூரில் இருந்து, சேலம், ஈரோடு, கோவை, வழியாக, கேரள மாநிலம், எர்ணாகுளத்திற்கும்; ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக விசாகப்பட்டினத்திற்கும், 'தத்கல்' வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.இந்த ரயிலில்பயணம் செய்ய, தத்கல் கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும். எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

நவ., 1 முதல் பஸ் 'ஸ்டிரைக்'  Added : அக் 05, 2018 00:29

சென்னை:அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், நவம்பர், 1 முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தவும், இதற்கான, நோட்டீசை, வரும், 8ம் தேதி வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை, பண பலன்களை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. நேற்று, சென்னை பல்லவன் இல்லம் முன், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து, தொழிற்சங்கத்தினர் நேற்று மாலையில், ஆலோசனை நடத்தினர். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 1 முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்துவது என்றும், இதற்காக, வரும், 8ம் தேதி, முறைப்படி அரசிடம், நோட்டீஸ் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
20.5 செ.மீ.,!  7ல் பெய்யுமாம் மழை










சென்னை : 'அரபிக் கடலில் உருவாகும் புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில், வரும், 7ம் தேதி, 20.5 செ.மீ., அளவுக்கு, பேய் மழை பெய்யும்' என, இந்திய வானிலை மையம், 'ரெட் அலர்ட்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது.






அரபிக் கடலில், தென் மேற்கு பகுதியில் இருந்து வீசும், ஈரப்பதம் மிக்க காற்று, அதிக வலுவடைந்துள்ளது. அதனால், கடலில் இன்று இரவு, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில், மிக கன மழை பெய்ய, அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில், ஐந்து நாட்களாக கன மழை கொட்டி வரும் நிலையில், இன்னும் கன மழை தொடரும் என அறிவித்துள்ளதால், அங்கு, மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு மழை பெய்யும்?

* இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், இன்று மட்டும், அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளது. கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவை ஒட்டிய, தமிழக பகுதிகளில், பெரும்பாலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிக மழை பொழிவுக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருநெல்வேலி, விருதுநகர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள்

* வரும், 7ம் தேதி, தமிழகம் மற்றும் கேரளாவில், மிக கன மழை முதல், மிக அதிக கன மழை பெய்யும். தமிழக கடலோர பகுதிகள்,


கர்நாடகாவை ஒட்டிய தமிழக பகுதிகள் மற்றும் அந்தமான் தீவுகள் பகுதிகளில், கன மழை பெய்யும்.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருநெல்வேலி

* வரும், 8ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோர பகுதிகள், கடலோரத்தை ஒட்டிய உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி என, அனைத்து மாவட்டங்களிலும், சில இடங்களில், மிக கன மழை பெய்யும்.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: ராமநாதபுரம், நாகை, கடலுார், விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரி

* வரும், 9ம் தேதி, தமிழக உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் மற்றும் கிழக்கு கடலோர மத்திய மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள்: மதுரை, திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை.

இதில் குறிப்பிடப்படாத பகுதிகளில், லேசானது முதல் மிதமானது வரை, திடீர் மழை பெய்யலாம்.

வானிலை மைய கணக்கு :

7 - 11 செ.மீ., வரை: கன மழை
12 - 20 செ.மீ., வரை: மிக கன மழை
21 செ.மீ., மற்றும் அதற்கு மேல்: மிக அதிக கன மழை

வரும், 7, 8ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில், மிக அதிக கன மழை பெய்யும்.
- சென்னை வானிலை ஆய்வு மையம்

கடலோரத்தில் கவனம்!
இன்று முதல், 7ம் தேதி வரை, பெரும்பான்மையான இடங்களில், மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில், கன மழை பெய்யும். அரபிக் கடலின் தென் கிழக்கு பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது, 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், புயலாகவும் வலுப்பெற்று, ஓமன் நாட்டில், கரையை நோக்கி நகரும். மீனவர்கள், குமரி கடல், தெற்கு கேரளா, லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு, இன்று முதல், 8ம் தேதி வரை செல்ல வேண்டாம். கடலுக்குள் இருப்பவர்கள், உடனடியாக, கரைக்கு திரும்பி விட வேண்டும். சென்னை மற்றும் புறநகரில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற நாட்களில், திடீர் மழைக்கு தான் அதிக வாய்ப்பு.
-எஸ்.பாலச்சந்திரன், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்

பீதி வேண்டாம்
வரும், 7ம் தேதியை பற்றி கவலைப்பட வேண்டாம். 7ம் தேதி, எப்படி மழை பெய்கிறது என்பதை, நீங்களே தெரிந்து கொள்வீர்கள். யாரும் பீதியடைய வேண்டாம். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு மட்டுமே, இந்திய வானிலை ஆய்வு மையம், மிக அதிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ல், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கேரளாவில், மிக அதிக கன மழை இருக்கும்.
-ஆர்.பிரதீப் ஜான், 'தமிழ்நாடு வெதர்மேன்'

மாவட்டங்களில் உஷார் நிலை!
மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில், நீச்சல் தெரிந்த, தன்னார்வம் உடைய இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். இதேபோல், பெண்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். இவர்கள், மழை நீர் தேங்கினால், உடனடியாக, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பர். பயிற்சி பெற்ற இளைஞர்கள், 30 ஆயிரத்து, 759 இளைஞர்கள் உள்ளனர். அதேபோல், கடலோர மாவட்டங்களில், காவல் துறையைச் சேர்ந்த, 60 - 80 பேர் கொண்ட படையை, தயார் செய்துள்ளோம். மற்ற மாவட்டங்களில், 40 - 50 பேரை தேர்வு செய்து, பேரிடர் மீட்பு பயிற்சி அளித்துள்ளோம். 1,275 காவலர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். மழை நீர் தேங்காமல் இருக்க, பாலங்களில் தடுப்புகளை அகற்றி உள்ளோம். 68 சிறு பாலங்கள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. 7,250 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மழை நீரை சேகரிக்க, தேவையான நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
-கே.சத்யகோபால், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக அரசு
இதே நாளில் அன்று

Added : அக் 04, 2018 21:34



அக்டோபர் 5, 1934:

சோ ராமசாமி: சென்னையில், ரா.ஸ்ரீநிவாசன் -- ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக, 1934 அக்., 5ல் பிறந்தார். சட்டம் பயின்ற அவர், 1957 முதல், 1962 வரை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். 1957ல், நாடகங்களை எழுத ஆரம்பித்தார். 1970ல், 'துக்ளக்' வார இதழையும், 1976ல், 'பிக் விக்' என்ற ஆங்கில இதழையும் துவக்கினார்.

இவர், 14 திரைப்படங்களுக்கு கதை எழுதி யுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்தார். நான்கு திரைப்படங்களை இயக்கினார். நான்கு, 'டிவி' நாடகங்களுக்கு கதை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார். இவரது,முகமது பின் துக்ளக் என்ற அரசியல் நையாண்டி நாடகம், மிகவும் புகழ் பெற்றது; திரைப்படமாகவும் வெளி வந்தது. ராஜ்யசபா, எம்.பி.,யாக, 1999 முதல், 2005 வரை பணியாற்றியவர்.

பகீரதன் எழுதிய, 'தேன்மொழியாள்' என்ற மேடை நாடகத்தில், இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர், சோ. அதையே, தன் பெயரின் முன் சேர்த்து கொண்டார். 2016, டிச.,7ல் காலமானார்; அவர் பிறந்த தினம் இன்று.

ரெட் அலர்ட் வதந்திகளை நம்ப வேண்டாம்: வெதர்மேன்

Updated : அக் 04, 2018 15:29 | Added : அக் 04, 2018 15:10 |  dinamalar




சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 7 ம் தேதி அதிதீவிரமான கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து, தனியார் வானிலை ஆய்வு அமைப்பான, 'தமிழ்நாடு வெதர்மேன்' தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

204 மி.மீ., மழை

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7 ம் தேதி அதி தீவிர கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் மழை அளவு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில்; மிக அதி தீவிர கனமழையாக, 204.5 மி.மீ., அளவுக்கு; 75 சதவீதம் கண்டிப்பாக மழை உண்டு என்ற நிலையில் இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில், 204.5 மி.மீ., மழை பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும், சென்னையில் மிக கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

அதற்குள் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால்,அதற்கான சாத்தியகூறுகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஒரு மாவட்டத்தில், 10 மழை அளவீடு மையங்கள் இருந்தால், அந்த மாவட்டம் முழுவதும் 204.5 மி.மீ., மழை பெய்யுமா என பார்க்க வேண்டும். குறிப்பிட்ட மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தால் சமாளித்து விடலாம்.

தமிழகத்தில் எந்த பகுதியில் மிக தீவிர கனமழை பெய்யும் என்பதை கூறாமல், பொதுவாக ரெட் அலர்ட் விடுத்தால், என்ன நடவடிக்கை எடுக்க முடியும். கிருஷ்ணகிரியில் குறைந்த அளவு மழை பெய்தால் அங்கு என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்.

வேகமாக பரவும் வதந்தி

ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய தமிழக பகுதிகளான நீலகிரி, கோவை (வால்பாறை) தேனி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரியில், தினமும் 200 மி.மீ., அளவுக்கு மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக கன மழை பெய்தது. சோலையாறு அணை பகுதியில், 24 மணி நேரத்தில் 400 மி.மீ., மழை பெய்தது. அப்போது அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது ஏன் வதந்திகள் இறக்கை கட்டி பறக்கின்றன?

தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால், அது கிழக்கில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதன் காரணமாக மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கன மழை பெய்யும்.

கடந்த, 2009ம் ஆண்டு நீலகிரியின் கேத்தி பகுதியில், ஒரே நாளில் 820 மி.மீ., மழை பெய்தது. குறிப்பாக குன்னூர் பகுதியில் கன மழை பெய்தது. ஆனால், தற்போது உருவாக உள்ள புயல் சின்னம், 2009ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக உள்ளது. அது ஓமன் நாட்டை நோக்கி நகருவதால், கேரளா மற்றும் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும், தமிழகத்தின் மலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு இருக்க வேண்டும்.

தமிழக முழுவதும் எச்சரிக்கை தேவையில்லை. குறிப்பாக சென்னைக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனவே, இந்த ரெட் அலர்ட் சென்னைக்கு உரியது அல்ல. தமிழகத்தின் மலை பகுதிகளுக்கு உரியது. எனவே, முன்பு டிச., 1ம் தேதி போல் பேய் மழை பெய்யும் என பயப்பட வேண்டாம். மலை பகுதிகளில் கன மழை பெய்யலாம். எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி அல்லது கன்னியாகுமரி அல்லது வால்பாறை அல்லது பெரியாறு பகுதியில் பெய்தது போல் இருக்காது. சென்னைக்கு மழை தேவை. வெள்ளம் என்பது வேறு விஷயம். ஒவ்வொரு எச்சரிக்கைக்கும் பயப்பட வேண்டாம். சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் போதிய நீர் இருப்பு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு




சேலம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பதிவு: அக்டோபர் 05, 2018 03:30 AMமாற்றம்: அக்டோபர் 05, 2018 03:41 AM
சேலம்,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய, விடிய நீடித்தது. சேலம் மாநகரை பொறுத்தவரையில் அஸ்தம்பட்டி, அழகாபுரம், மணக்காடு, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, பழைய மற்றும் புதிய பஸ்நிலையம், கன்னங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று காலையிலும் மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு மேலும் மழை பெய்து கொண்டிருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? அல்லது வழக்கம்போல் செயல்படுமா? என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவியது.

இதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு பள்ளி விடுமுறையா? என்று கேட்டனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் ரோகிணி அறிவித்தார். இந்த தகவல் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, விடுமுறை பற்றி தகவல் தெரியாத மாணவ-மாணவிகள் வழக்கம்போல் தங்களது பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு சென்றபிறகு தான் பள்ளிக்கு விடுமுறை என்ற விவரம் தெரியவந்ததால், அவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு புறப்பட்டு சென்றதை காணமுடிந்தது. ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் கல்லூரி மாணவ -மாணவிகள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர்.

மார்க்கெட்டில் மழைநீர் தேங்கியது

அதேபோல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் மழையில் நனைந்தவாறு கடும் சிரமத்திற்கு இடையே சென்றனர். சேலத்தில் நேற்று பகலில் இடை விடாமல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். பொதுமக்கள் சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே சென்று வந்தனர். சேலம் அருகே அரியானூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றதால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து சென்றதை காணமுடிந்தது.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கி நின்றதாலும், சேறும், சகதியுமாக காட்சியளித்ததாலும் வழக்கமாக நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் நேற்று நடைபயிற்சிக்கு வரவில்லை. சேலம் திருமணிமுத்தாறு ஆற்றோரம் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. இதனால் காய்கறி வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சேலத்தில் பெய்த பலத்த மழையால் சாலையிலும், தாழ்வான பகுதியிலும் மழைநீர் தேங்கி நின்றது. இந்த தொடர் மழையினால் மாவட்டத்தில் பெரியஅளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது.

இளம்பிள்ளை, மகுடஞ்சாவடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, சித்தர்கோவில், எட்டிகுட்டைமேடு, தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, கசப்பேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.
ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் ஆங்காங்கே வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. நேற்றும் அதிகாலை முதலே இளம்பிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

வீரகனூர்-30, ஆத்தூர்-23.6, ஏற்காடு-23.4, கரியகோவில்-21, பெத்தநாயக்கன்பாளையம்-20, கெங்கவல்லி-19.2, ஆனைமடுவு-18, சேலம்-17, காடையாம்பட்டி-16, வாழப்பாடி-14, தம்மம்பட்டி-11.6, எடப்பாடி-8, சங்ககிரி-5.6, ஓமலூர்-2.6. மாவட்டத்தில் சராசரி மழை அளவு 12.3 மி.மீ. ஆகும்.
மாவட்ட செய்திகள்

முகநூல் காதலை நம்பி ஏமாந்த பெண் டாக்டர் தற்கொலை முயற்சி



முகநூல் காதலை நம்பி ஏமாந்த பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக சேலம் என்ஜினீயரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: அக்டோபர் 05, 2018 03:56 AM
சேலம்,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 22 வயதுடைய பெண் டாக்டருக்கும், சேலத்தை சேர்ந்த ஒரு என்ஜினீயருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் முகநூல் வாயிலாக அடிக்கடி பேசி வந்தனர். நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில் நேரில் சந்திக்க வேண்டும் என்று பெண் டாக்டரிடம் என்ஜினீயர் கூறி உள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம், சேலத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பயிற்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவரை என்ஜினீயர் சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அறை எடுத்து 2 பேரும் தங்கினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சாப்பிடுவதற்காக, ஓட்டலில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தனர். அப்போது திடீரென்று பெண் டாக்டர் மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவரது காதலரான என்ஜினீயர் ஆகியோர் பெண் டாக்டரிடம் விசாரித்தனர். அப்போது வலி நிவாரண மாத்திரை அதிகம் சாப்பிட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று பெண் டாக்டரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் இது குறித்து மராட்டிய மாநிலத்தில் உள்ள பெண் டாக்டரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் செய்ய காதலனான என்ஜினீயர் மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றத்தில் தூக்க மாத்திரை தின்று பெண் டாக்டர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் அவதிப்படும் நல்லம்பாக்கம் கிராம மக்கள்



15 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் நல்லம்பாக்கம் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.

பதிவு: அக்டோபர் 05, 2018 04:00 AM
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு புதிய வழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து நல்லம்பாக்கம் வரை பஸ் போக்குவரத்தை தொடங்கியது. சில மாதங்களுக்கு பின்னர் சாலை வசதி சரியில்லை என்று காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனால் சுமார் 15 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் தினமும் நல்லம்பாக்கம் கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கண்டிகையில் இருந்து பஸ் ஏறி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.

இதே போல கூலி வேலைக்கு செல்பவர்களும், முதியோர், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் நல்லம்பாக்கம் கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி சரியில்லை என்று காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது சாலை வசதி நல்ல முறையில் இருக்கிறது.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:- கடந்த 15 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து பல முறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை போக்குவரத்து துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உடனே கண்டிகையில் இருந்து நல்லம்பாக்கம் கிராமம் வரை தமிழக அரசின் மினி பஸ்சை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லம்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FLASH NEWS: கனமழை எதிரொலி விடுமுறை அறிவிப்பு!!! (5 மாவட்டங்கள்)


தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை

* கனமழை காரணமாக சென்னையில்
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவு
Ministers can use multiple telephone connections: Dayanidhi Maran tells Madras High Court

There is no statutory bar for a Union cabinet minister to use more than three telephone service connections.

Published: 04th October 2018 04:55 AM 



Former Union Telecom and IT Minister Dayanidhi Maran (File | PTI)

By Express News Service

CHENNAI: There is no statutory bar for a Union cabinet minister to use more than three telephone service connections, the Madras High Court was told on Wednesday.

When the petitions from former Telecom Minister Dayanidhi Maran and his brother Kalanidhi Maran came up before Justice A D Jagadish Chandira, their senior counsel said a minister can use any number of telephone connections. Refusing to stay the proceedings pending before the Special Court for CBI cases, which had framed the charges against them, the judge adjourned the matter till October 10.

Counsel said the CBI court had framed charges based solely on the opinion of the investigating officer (IO) and not on the material available on record.
Madras High Court orders Law University to remove teachers appointed by violating UGC rules

If the unqualified persons are allowed to continue in the posts, the action would be detrimental to the interest of the public at large, the judge said.

Published: 05th October 2018 05:55 AM



Madras High Court (File Photo | PTI)

By Express News Service

CHENNAI: Holding that appointments to certain teaching staff posts were made in the law colleges affiliated to Dr Ambedkar Law University in violation of the regulations of the University Grants Commission (UGC) for certain ‘extraneous’ considerations, the Madras High Court has directed the university to identify and remove them from service and appoint qualified persons in their posts.

Justice S M Subramaniam gave the direction on Thursday while passing interim orders on a writ petition from Dr D Sankar seeking to quash an order, dated August 12, 2015, of the university Vice-Chancellor and consequently to reinstate him as the University Registrar.

If the unqualified persons are allowed to continue in the posts, the action would be detrimental to the interest of the public at large, the judge said. The enquiry in respect of the unqualified teachers is to be conducted without any further delay. In the event of identifying appointments made on favouritism and nepotism, then suitable action has to be taken against all persons, who are responsible, the judge said.

The syndicate of the university, the Directorate of Legal Studies and the Law Department shall ensure that all contract appointments are made in accordance with terms and conditions of the contract and should take suitable action to appoint lecturers on regular basis for the benefit of the students. They shall also ensure that the quality of legal education is maintained as per the UGC Regulations and the Rules of the Bar Council of India, the judge said.

Defamation case against Anbumani shifted to special court

Chennai: Giving a brief respite to PMK Youth Wing leader Anbumani Ramadoss (50), the High Court on Thursday stayed an order, dated September 11 last, of the Principal Sessions Judge here, directing him to appear before it on October 4 in connection with a defamation case. Justice P N Prakash, who granted the interim stay, transferred the case to the special court constituted exclusively for cases involving MPs and MLAs. He shall appear before it within two weeks and execute a bond for `5,000 without surety and provide an undertaking to appear whenever required, judge said.
DU to seek legal opinion in sexual harassment case

NEW DELHI, OCTOBER 05, 2018 00:00 IST

DU’s Executive Council has decided to seek legal opinion after an internal inquiry found a professor of the university guilty of sexual harassment, a varsity official said on Thursday. A teacher had accused the Head of Chemistry Department of sexual harassment last December.PTI
Special trains to clear Deepavali rush

SALEM, OCTOBER 05, 2018 00:00 IST


The Railways will operate the following special trains to clear the Deepavali rush.

Train No. 82619 Chennai Central – Coimbatore ‘Suvidha’ will leave Chennai at 8.40 p.m. on November 3 and will reach Coimbatore at 4.15 a.m. the next day.

No. 82620 Coimbatore – Chennai Central ‘Suvidha’ special will leave Coimbatore at 7 p.m. on November 6 and will reach Chennai at 3.45 a.m. the next day.

No. 06017 Chennai Central – Coimbatore special fare special train will leave Chennai at 8.40 p.m. on November 5 and will reach Coimbatore at 4.15 a.m. the next day.

No. 06018 Coimbatore – Chennai Central special fare special train will depart from Coimbatore at 7 p.m. on November 6 and will reach Chennai at 3.45 a.m.

Advance reservations

Advance reservation for these trains will open at 8 a.m. on Friday (October 5).
Teachers of law colleges face probe

CHENNAI, OCTOBER 05, 2018 00:00 IST

HC wants verification process speeded up, seeks report by Nov. 12

The Tamil Nadu Dr. Ambedkar Law University on Thursday informed the Madras High Court about having constituted a committee to go into allegations regarding faculty members who were serving in various government law colleges without possessing the requisite qualification and experience.

Justice S.M. Subramaniam was told by Additional Advocate General P.H. Arvindh Pandian that the committee had started functioning and scrutinising files of the teaching staff.

It would take three months for it to complete the process after which suitable action would be initiated. The judge ordered that the committee’s report be placed before the Syndicate

Mr. Justice Subramaniam called for an interim report by November 12.
District Collectors put on alert to tackle Oct. 7 downpour

CHENNAI, OCTOBER 05, 2018 00:00 IST

Warning issued by IMD for that day; 4,399 spots identified

Officials of all district administrations have been instructed to take precautionary measures on account of the warning issued by the India Meteorological Department for October 7.

“It is a not a red alert. IMD has a colour code for rain forecasts. If it’s red, it means there is a necessity for the administration to take action,” Commissioner of Revenue Administration, K. Satyagopal, said on Thursday.

The IMD has forecast heavy to very heavy rainfall across south Tamil Nadu and districts along the Western Ghats on October 7. The State government has already identified 4,399 vulnerable areas. Of them, 578 were found to be ‘very highly’ vulnerable, while 872 had ‘high’ vulnerability, he added.

The Collectors and Superintendents of Police would oversee the effort, and interdepartmental zonal teams would set up camp in the vulnerable areas, he said.

First responders, mainly youngsters, would also be on standby to help, Mr. Satyagopal said, adding that arrangements were being made to move people to safer places in case of flooding.

Fisheries Minister D. Jayakumar said, in a release, that fishermen had been warned not to venture out to sea.
A peoples’ doctor is no more

CHENNAI, OCTOBER 05, 2018 00:00 IST



Dr. Jaganmohan 

Hundreds turn up to pay respects to the physician


The last rites of Dr. Jaganmohan, who charged only Rs. 20 from his patients, were performed at the Besant Nagar crematorium on Thursday.

Hundreds of people turned up to pay their last respects to the 77-year-old doctor, who saw medicine as a service and not as business.

On hearing the news of his death on Wednesday, a steady stream of people from Mylapore, Mandaveli, R.A. Puram and other parts of the city started visiting his Chandra Clinic, on R.K. Mutt Road.

Posters announcing his death were put up in several localities of Mandaveli and R.A. Puram by Mylai Vazh Makkal.

Regina Mary, a resident of R.A. Puram, said the doctor was a saviour of her family as three generations, including her father, herself and her son, had visited him whenever they were ill.

Hailing from a village in Tirunelveli district, the doctor came to the city with his parents and finished his bachelors degree in Pachaiyappa’s College. He joined a private medical company in Mumbai, but quit it later to return and join the Government Stanley Medical College Hospital.

Nominal fee

He started a clinic in the name of his wife Chandra in his own house at Mandaveli in 1975, charging patients as little as Rs. 1 and Rs. 2.

Later, he hiked his fee to Rs. 5 and Rs. 10. The highest he charged was Rs. 20.

Sometimes, he took whatever the patient could afford, while at other times he treated the poor for free.

DMK president M.K. Stalin condoled the death of the peoples’ doctor, who treated about 300 people daily for a nominal fee.
Dr Agarwal’s introduces pinhole pupilloplasty

CHENNAI, OCTOBER 05, 2018 00:00 IST



A patient who underwent the procedure being examined by Dr. Amar Agarwal, Chairman and Managing Director, Dr. Agarwal's Eye Hospital.M. VedhanM_VEDHAN
New technique to help treat astigmatism


S. Sadhath Ali, 59, had undergone a corneal transplant in the left eye for a fungal infection. He developed severe astigmatism which could not be corrected by any procedure and he could not be given glasses for his power of -24.

The Alwarpet resident came to Dr. Agarwal’s Eye Hospital seeking help.

Hospital chairman and ophthalmic surgeon Dr. Amar Agarwal, who reviewed him said he suffered from severe astigmatism of about 20 diopter, which laser cannot treat.

Nor could spectacles of such high power be prescribed for him.

“I did not consider pinhole intraocular lens though in India we do not require Food and Drug Administration approval,” he said.

Instead he decided to reduce the size of the pupil to less than 1.5 mm.

Since astigmatism resulted in multiple rays of light falling on the retina leading to blurred vision, the surgeon decided to reduce the size of the pupil’s diaphragm by sutering the edges and preventing light rays entering from the periphery.

The procedure is called pinhole pupilloplasty (PPP). “The patient is now able to see clearly and may not require corrective glasses,” he explained.

The results were there for all to see when the patient was able to see well after four days post-surgery.

Dr. Amar used the same procedure on J. Bhaskaran, 67, of Tiruvallur district, who sustained an injury to his eye. The surgeon said he had introduced the technique at the European Society of Cataract and Refractive Surgeons meeting and had published his work.

The PPP procedure could be considered for people who have had an eye transplant or surgery; or have high astigmatism which prevents use of laser treatment. The procedure can be done on children too and they would not require a repeat surgery at a later time, Dr. Amar said.
Release of Rajiv case convicts unlikely anytime soon

CHENNAI, OCTOBER 05, 2018 00:00 IST



Banwarilal Purohit 

Governor may not act till SC decides plea against remission of their sentences


The release of seven persons convicted for the assassination of former Prime Minister Rajiv Gandhi is unlikely in the near future.

Sources in the Raj Bhavan made it clear that Governor Banwarilal Purohit would not act on the State Cabinet’s recommendation to release the convicts till the Supreme Court decided on the petition filed by two relatives of victims, S. Abbas and John Joseph, and four others, challenging the State government’s 2014 decision to remit the sentences of the seven convicts.

Recently, relatives of the victims of the bomb blast that killed Rajiv Gandhi and 15 others at Sriperumbudur in May 1991 met the Governor and urged him to wait for the Supreme Court decision on their petition.

Some of them later claimed that the Governor had agreed to their demand. Enquiries in Raj Bhavan circles said Mr. Purohit saw justification in the demand made by the relatives.

In the middle of last month, the court allowed the petitioners, including Americai V. Narayanan, Congress spokesperson (in his personal capacity), to amend their petition filed in March 2014 and include the Cabinet’s decision, taken on September 9, regarding the release of the convicts. It gave them four weeks to file a revised petition.

The Governor had also met Arputhammal, mother of A.G. Perarivalan, one of the convicts, who urged him to accept the Cabinet’s decision at the earliest.

No consulations yet

In view of the matter pending before the Supreme Court, Mr. Purohit is not having consultations with legal experts for the time being.

Separately, the Raj Bhavan has received an opinion that the Centre should be consulted, even though one view, as expressed by many parties in the State, on Article 161 (Power of Governor to grant pardons and to suspend, remit or commute sentences in certain cases), is that the Governor can go by the advice of his or her Council of Ministers.

Considering the complexity of the matter, the Governor is conscious of the need to examine a range of legal, administrative and constitutional issues before arriving at any decision, the sources explained.

Asked for comment on the approach of the Governor, K. Chandru, former judge of the Madras High Court, said there are two issues that need to be considered in this matter.

“Even if the Cabinet gives an advice, the Governor can ask for a legal opinion to act in accordance with the Constitution. He is not supposed to follow the advice blindly. At the same time, when the Supreme Court is seized of the matter, he cannot take a decision expeditiously on the ground that he would not like to wait for the Supreme Court’s judgement as he has got all powers.”
Wet spell for the next 5 days

CHENNAI, OCTOBER 05, 2018 00:00 IST


Two weather systems to leave impact; Western Ghats districts to get heavy rain

Wet weather is on the cards for the next five days, with two weather systems prevailing over the Bay of Bengal and the Arabian Sea.

An upper air cyclonic circulation over southwest Bay of Bengal and adjoining Sri Lanka is expected to bring moderate rainfall to most parts of Tamil Nadu and Puducherry till October 7. Chennai is likely to experience intermittent spells of light to moderate rain till Sunday.

Another weather disturbance is likely to develop into a low pressure area over southeast Arabian Sea on Friday and eventually intensify into a cyclone by October 7 and move towards the Oman coast.

‘Red’ alert issued

The India Meteorological Department has issued a ‘red’ alert. Clarifying on the colour-coded warning, S. Balachandran, Deputy Director General of Meteorology, Chennai, said heavy to very heavy rainfall is expected in the Western Ghats and south Tamil Nadu. There are chances of extremely heavy rainfall (above 24.4 cm) in one or two places in southern parts of the State and the Western Ghats region.

It is not an alert for the entire State but a warning intended to get the government to take necessary action, he added.

While the southwest monsoon is still retreating, Wednesday’s rainfall came as precursor to the northeast monsoon that is likely to set in later this month. Most weather stations across the State received moderate rain on Thursday with Kattumannarkoil in Cuddalore district and Pullambadi in Tiruchi district recording the highest of 11 cm in the 24 hours ending at 8.30 a.m. on Thursday. Chennai received nearly 3 cm of rainfall.

On the rumours in social media about two cyclones forming simultaneously and heavy rain in Chennai, Mr. Balachandran said that as of now there was only a possibility of the weather system in the southeast Arabian Sea intensifying into a cyclone. Weather bloggers have also pointed to the possibility of another low pressure area over the southwest Bay of Bengal around October 8.

It is not an alert for the entire State but a warning intended to get the government to take action

S. Balachandran

Deputy Director General of Meteorology, Chennai
Keep gods off answer papers, K’taka varsity tells examinees

Bengaluru 05.10.2018

: Rajiv Gandhi University of Health Sciences in Karnataka has not taken kindly to students making pleas to gods on answer sheets.

With quite a few examinees writing ‘Om’, a sacred symbol in Hinduism, or the names of gods before attempting to answer questions, the university, in a circular to all affiliated colleges, has called it an examination malpractice.

The first among the eight ‘Don’ts’ mentioned in the October 1 circular issued by registrar (Evaluation) M K Ramesh, is the direction on the mention of the names of gods.

In addition to this, writing one’s name, PTO at the end of a page, irrelevant messages, numbers or sentences, signs, symbols, letter or word and tampering with answer books would also be construed as revealing the identity of the examinee and will be treated as a malpractice, it says.

Sandhya Avadhani, deputy director (pre-exam), at the university said some students try to reveal their identity to the evaluators. PTI

NEWS TODAY 25.09.2024