Friday, October 5, 2018

இதே நாளில் அன்று

Added : அக் 04, 2018 21:34



அக்டோபர் 5, 1934:

சோ ராமசாமி: சென்னையில், ரா.ஸ்ரீநிவாசன் -- ராஜம்மாள் தம்பதிக்கு மகனாக, 1934 அக்., 5ல் பிறந்தார். சட்டம் பயின்ற அவர், 1957 முதல், 1962 வரை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். 1957ல், நாடகங்களை எழுத ஆரம்பித்தார். 1970ல், 'துக்ளக்' வார இதழையும், 1976ல், 'பிக் விக்' என்ற ஆங்கில இதழையும் துவக்கினார்.

இவர், 14 திரைப்படங்களுக்கு கதை எழுதி யுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்தார். நான்கு திரைப்படங்களை இயக்கினார். நான்கு, 'டிவி' நாடகங்களுக்கு கதை எழுதியும், இயக்கியும், நடித்தும் உள்ளார். இவரது,முகமது பின் துக்ளக் என்ற அரசியல் நையாண்டி நாடகம், மிகவும் புகழ் பெற்றது; திரைப்படமாகவும் வெளி வந்தது. ராஜ்யசபா, எம்.பி.,யாக, 1999 முதல், 2005 வரை பணியாற்றியவர்.

பகீரதன் எழுதிய, 'தேன்மொழியாள்' என்ற மேடை நாடகத்தில், இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர், சோ. அதையே, தன் பெயரின் முன் சேர்த்து கொண்டார். 2016, டிச.,7ல் காலமானார்; அவர் பிறந்த தினம் இன்று.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024