Wednesday, January 2, 2019

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ரவிசங்கர் பிரசாத் தகவல்

விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ரவிசங்கர் பிரசாத் தகவல்

டெல்லி: விஜயா வங்கி, தேனா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாதத்தின் நான்காவது சனிக்கிழமை, கிறிஸ்துமஸ் என அடுத்தடுத்து  விடுமுறைகள் வந்ததால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல்  அளித்தது.இதனைக் கண்டித்து ஒன்பது வங்கி சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பினர் கடந்த 21-ம் தேதி வெள்ளிகிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த நாள் சனிக்கிழமை  4வது சனிக்கிழமை விடுமுறை, மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) என தொடர்ந்து 3 நாட்கள் வங்கி செயல்படாத நிலை ஏற்பட்டது. 24ம் தேதி(திங்கட்கிழமை) வங்கி பணி நாளாகும். 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை. 26ம் தேதி  அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இதனால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டது. ஸ்டிரைக், விடுமுறை என்று அடுத்தடுத்து 5 நாட்கள்  விடுமுறையால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியது. வங்கிகள் தொடர் போராட்டம் காரணமாக வணிகர்கள், தொழில் நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவை கடுமையாக பாதிப்பை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியது. இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய  மந்திரிசபை கூட்டத்தில் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றைப் பரோடா வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இந்த இணைப்பின் மூலம்  இவ்வங்கிகளில் பணியாற்றுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வரிசையில் பரோடா வங்கியை மூன்றாவது இடத்தில் முன்னிறுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்  அவர் குறிப்பிட்டார். நாட்டின் வங்கித்துறையில், மூன்று வங்கிகளை இணைத்துள்ளது இதுதான் முதல் முறையாகும். மூன்று வங்கிகள் இணைப்பு மூலம், நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது  உருவெடுத்துள்ளது. இந்த வங்கிகள் இணைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kerala Health Minister’s ultimatum to government doctors on long leave
Meanwhile, it has been learnt that the re-entry of the long-term absentees into their respective services will be subjected to conditions, including the signing of bonds.
 
Published: 31st December 2018 03:23 AM 


 

Kerala Health Minister K K Shylaja. (File Photo) 


By Express News Service

THIRUVANANTHAPURAM: The Health Minister has issued an ultimatum to the long-term absentees in the Health Department. According to the minister, a direction has already been given to the concerned to initiate strict action against those including doctors and other staff who are on unauthorised absence for a long time. The ultimatum for the absentees has been set as January 15.

 “Those who were on unauthorised leave will have to re-enter into their respective services on or before January 15. The defaulters will be dealt with disciplinary actions,” said K K Shailaja.

Meanwhile, it has been learnt that the re-entry of the long-term absentees into their respective services will be subjected to conditions, including the signing of bonds.

“The respective department heads will have to prepare and submit an ‘action taken report’ on the said appointments. They will have to prepare a list of the defaulters who continue to be on leave after January 15. The disciplinary action against them will be based on the aforementioned report,” said Shailaja. Earlier, 36 doctors with the Medical Education Department had been sacked for unauthorised leave
சுங்கச்சாவடிகள் வசூலில் தன்னிறைவு : பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படுமா?

Added : ஜன 02, 2019 00:44 |



'நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள், வசூலில் தன்னிறைவை எட்டி விட்டதால், 40 சதவீதம் பராமரிப்பு கட்டணத்தை மட்டும் வசூலிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அகில இந்திய மோட்டார் காங்., வேண்டுகோள் விடுத்துள்ளது.அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக் குழு உறுப்பினர், சென்னகேசவன், கூறியதாவது:கோல்கட்டாவைச் சேர்ந்த, ஐ.ஐ.எம்., நிறுவனம் நடத்திய ஆய்வில், சுங்கச்சாவடிகள், செக்போஸ்ட்களில் வாகனங்கள் நின்று செல்வதால், எரிபொருள் செலவு, மனித உழைப்பு விரயம் என்ற வகையில், அரசுக்கு, ஆண்டுக்கு, 87 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தது.சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டது முதல், தற்போது வரை, கட்டண வசூல், பெட்ரோல், டீசல் மீதான, 'செஸ்' வரி காரணமாக, சுங்கச்சாவடிகள் மூலம் கிடைத்துள்ள வருவாய், தன்னிறைவை எட்டி விட்டது.எனவே, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ், ஐந்து ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. மேலும், சுங்கச்சாவடிகள் மூலம், மத்திய அரசுக்கு ஓராண்டில் கிடைக்கும், 19 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் வருவாயை, அகில இந்திய மோட்டார் காங்கிரசே வழங்க தயார் எனவும் அறிவித்தது; அதையும் அரசு ஏற்க மறுத்து விட்டது.தற்போது, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் இல்லை என்ற திட்டம் அமலுக்கு வர உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், தேவை இல்லாத குழப்பமும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய அரசு, சுங்கச்சாவடிகளில், தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைத்து, 40 சதவீதம் பராமரிப்பு செலவை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்படி செய்தால், இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள, 5 கோடிக்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், அரசுக்கான வருவாயும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

பி.எஸ்.என்.எல்., சர்வர் பழுது : புதிய, 'சிம்' பதிவில் சிக்கல்

Added : ஜன 01, 2019 23:09

மென்பொருள் பழுது காரணமாக, புதிய, 'சிம்' கார்டுகளை பதிவு செய்ய முடியாமல், 10 நாட்களுக்கும் மேலாக, பி.எஸ்.என்.எல்., திணறி வருகிறது.பி.எஸ்.என்.எல்.,லில், புதிய சிம் கார்டுகளை பதிவு செய்ய, 'சாஞ்சார்' என்ற, மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மென்பொருள் சர்வர் செயல்படாததால், புதிய இணைப்புகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:புதிய, 'சிம்' கார்டு மற்றும் பிற நிறுவனங்களிடமிருந்து, பி.எஸ்.என்.எல்.,லுக்கு மாறுவோரின் தகவல்கள், 'சாஞ்சார்' என்ற, மென்பொருள் வாயிலாக, பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு தகவல்களை பதிவு செய்த பிறகே, புதிய சிம் கார்டு செயல்பட துவங்கும்.தற்போது, 10 நாட்களுக்கு மேலாக, மென்பொருள் சர்வர் செயல்படாடின்றி முடங்கியுள்ளது. இதனால், புதிய வாடிக்கையாளர்களுக்கு, சிம் கார்டு வழங்க முடியவில்லை. பிற நிறுவனங்களில் இருந்து மாறுவோரும், 'பி.எஸ்.என்.எல்., சேவையிலும் குறைபாடா...' என, விரக்தி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.
- நமது நிருபர் -


அதிவேக, 'தேஜஸ்' ரயில் சேவை மதுரையில் துவக்குகிறார் மோடி

Added : ஜன 01, 2019 23:40

சென்னை - மதுரை இடையேயான, அதிவேக, 'தேஜஸ்' ரயில் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி, வரும், 27ம்தேதி, மதுரையில் துவக்க, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.சென்னை எழும்பூர் - மதுரை இடையே, அதிநவீன தேஜஸ் ரயில் சேவை, கடந்த டிசம்பர், இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக, தகவல் வெளியானது; ஆனாலும், துவக்கப்படவில்லை.இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, கேரளா மாநிலம், திருச்சூருக்கு, பிரதமர் மோடி, வரும், 27ம் தேதி வருகிறார். அன்று, தமிழகத்தில், மதுரையில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் அவரை பங்கேற்க வைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.மேலும், மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் சென்னை - மதுரை இடையேயான, அதிவேக, தேஜஸ் ரயில் போக்குவரத்து துவக்க விழாவும், அன்றே நடத்தப்பட உள்ளது. இந்த விழாக்களில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.அப்போது, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையேயான, மெட்ரோ ரயில் போக்குவரத்தையும் துவக்கி வைக்கிறார்.இதற்காக, தெற்கு ரயில்வே மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்கும்படி உஷார் படுத்தப்பட்டுள்ளன. முறையான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, தெரிகிறது.
- நமது நிருபர் -



மாநில செய்திகள்

‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டு மூலம் இனி பணம் எடுக்க முடியாது



‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பதிவு: ஜனவரி 02, 2019 03:15 AM
சென்னை,


‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

‘சிப்’ உள்ள ஏ.டி.எம். கார்டுகள்

வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.

பணம் எடுக்க முடியவில்லை

ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல் உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை.

குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-

தபாலில் அனுப்பி வைப்பு

‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.
When a major air tragedy was averted in Tiruchy

DECCAN CHRONICLE. | R. VALAYAPATHY

PublishedDec 30, 2018, 1:00 am IST

All the 130 passengers and six crew members had a miraculous escape.



Breached wall at runway’s end in Tiruchy airport.

TIRUCHY: The International Airport at Tiruchy drew global attention recently as a Dubai- bound Air India Express flight miraculously escaped when it brushed past the airport compound wall here at the end of the runway, while taking off in the wee hours of October 12. All the 130 passengers and six crew members had a miraculous escape.

Airport sources told DC that around 0119 hours, the flight commandant Capt. Ganeshkumar operating the aircraft on its taking-off process hit and damaged the Instrument landing system (ILS), one runway end light (RWY 27), five ILS functional monitoring antennas and an ILS monitor controlled antenna, before the wheelbase of the aircraft crashed the compound wall very close to the Tiruchy- Pudukkottai National Highway. It resulted in a small portion of the compound wall collapsing at two places and also damaged the fencing.

The Air traffic Control (ATC) duty staff gave a note to airman and also directed the pilot to come back for an emergency landing, but he told the ATC that they were safe and continued their journey as if nothing happened.

Realising the trouble and danger, the ATC alerted the Air Indian Express authorities and the Mumbai airport. Then, at Mumbai airport ATC’s instruction, the aircraft nearing Muscat returned to Mumbai for an emergency landing there. The passengers of the aircraft came to know about the episode only after the aircraft alighted at Mumbai airport.

According to local residents residing on the Tiruchy-Pudukkottai National highway, fortunately at that time when the flight crashed the compound wall, very close to the National highway, there was no vehicular movement; otherwise a major mishap could have taken place.

This incident has given the jolt to the Airports Authority of India to pursue the expansion of the existing runway, which has been long delayed due to the bottlenecks faced in land acquisition for the proposed runway expansion.

Though the AAI instituted a high level inquiry into the incident, the outcome of the probe is yet to be released. However, after setting right the damaged compound wall and other communication equipment, flights movement in and out of Tiruchy International airport is going on as usual.
Consider plea to grant affiliation for PG courses: Madras HC to Anna University

DECCAN CHRONICLE.

Published Dec 30, 2018, 1:13 am IST

AU issued proceedings dated May 15, 2018, granting provisional affiliation in favour of the college with reduced strength of students.


Madras high court

Chennai: The Madras high court has directed the Anna University to consider on merits and in accordance with law, a representation from Sri Nandhanam College of Engineering and Technology in Vellore district, seeking affiliation for PG courses viz., MBA and M.E.(Structural Engineering) and M.E. (Thermal Engineering) courses.

Justice T.Raja gave the directive while disposing of a petition from Sri Nandhanam College of Engineering and Technology, which also sought a direction to permit 15 students in MBA, 17 students in M.E.(Structural Engineering) and 14 students in M.E. (Thermal Engineering) studying in the college to participate in the 1st semester practical and theory examinations for the year 2018-2019.

According to G.Sankaran, counsel for the petitioner, the college has applied for continuation of Provisional Affiliation by the Anna University. Based on the same, the University conducted inspection in March 2018 and issued notice pointing out certain deficiencies. Thereafter, the college has submitted a detailed compliance report in April 2018. While so, the Anna University issued proceedings dated May 15, 2018, granting provisional affiliation in favour of the college with reduced strength of students. When the said proceedings were challenged by the college, this court set aside the order of the Anna University in respect of B.E. (Marine Engineering) course only with further direction, leaving to take any decision in respect of the other discipline or course, he added.

He further submitted that the college filed another petition to modify the earlier order in order to give liberty to the petitioner to approach the University for redressal to avail sanctioned intake of students in respect of P.G courses, viz., M.B.A and M.E courses and this court granted liberty to the college to approach the Anna University with a further direction to the University to consider the same on merits. Thereafter, the petitioner college has resubmitted the representation to the University on September 27, 2018 for granting provisional affiliation for M.B.A and M.E courses since the students have already been admitted in the said course and the list of student have already been forwarded to the University for verification. But, no order has been passed by the University. Therefore, the college filed the present petition, he added.

The judge said considering the facts and circumstances of the matter, it appears that the representation of the petitioner which was resubmitted on September 27, 2018 was pending with the Anna University. Therefore, the Anna University was directed to consider the said representation of the petitioner on merits and in accordance with law within one week, the judge added.
RGUHS to revise MBBS evaluation

To ensure a speedy evaluation process, Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) has decided to revise the evaluation system for MBBS exams from May 2019.

Published: 01st January 2019 07:40 AM 


By Rashmi Belur

Express News Service

BENGALURU: To ensure a speedy evaluation process, Rajiv Gandhi University of Health Sciences (RGUHS) has decided to revise the evaluation system for MBBS exams from May 2019. Currently, the university conducts primary evaluation of each answer script at two levels (double evaluation) for MBBS courses, and if there is a difference of 15 per cent marks between both the valuations, it is handed over for a third evaluation. As this process is lengthy, the university has now decided to revise it.

As per the new decision, the university will go for single evaluation at the primary level and all the scripts that have secured less than 50 per cent marks in that particular subject will be sent for a second evaluation automatically.

Dr MK Ramesh, registrar evaluation, RGUHS, said, “As our evaluation system is entirely online-based, scripts with less than 50 percent marks in that subject will be automatically sent for second evaluation.”

This new system will be applied only for MBBS exams from May 2019. To implement it for post graduate courses, the university has to get permission from the Governing Council constituted by the Union government in place of Medical Council of India (MCI).


For post graduation exams, the evaluation process is even lengthier, as the primary level involves four evaluations - two by internal faculty members and two by external.

“We need to get a clarification about post graduation evaluation, so we are writing to the authorities to know if we can implement the system that we are incorporating for the under graduate exams for PG as well,” Ramesh said.
Prakash Raj to contest 2019 LS polls as independent

TIMES NEWS NETWORK

Bengaluru:02.01.2019

Multilingual actor Prakash Raj on Tuesday made a New Year resolve to test the political waters by contesting the 2019 general elections. He tweeted his decision to contest as an independent candidate and said the details of the constituency will be announced soon.

Sources said he’ll contest from Karnataka, Telangana or Uttar Pradesh. In Karnataka, he has set his eyes on four constituencies – Dakshina Kannada, Udupi-Chikkamagaluru, Uttara Kannada and Bengaluru South.

Bunt community, to which Raj belongs, has considerable population in Dakshina Kannada and Udupi. Raj, who is known for his anti-BJP stance, is the third prominent actor after Rajinikanth and Kamal Haasan to enter politics in recent years.

In 2017, he had said he’s open to the idea of entering politics after the murder of his friend and journalist Gauri Lankesh. Raj made this announcement after he faced backlash from BJP sympathizers for questioning the silence of Prime Minister Narendra Modi on Gauri’s murder.

“I’m not anti-Hindu. I’m anti-Modi, anti-Amit Shah and anti-Aditya Nath. And according to me, Modi, Shah and Aditya Nath are not Hindus,” Raj had tweeted, drawing more ire from their supporters.

Meanwhile, BJP leader S Suresh Kumar offered some tips to Raj in cinema parlance. “There’s no re-take here (politics) and there is no scope for editing. Prepared script is a rarity. Action-cut is totally banned. Beware!” he tweeted.

Bribe at birth: Pay more if you have son at govt hosps

Rosana Maria Schellito TNN

Chennai:02.01.2019

Families of women who have babies at government maternity hospitals, where treatment is free, complain they end up paying at least ₹3,500 as bribes to ward boys, ayahs and other paramedical staff. They have to pay more if the newborn is a boy.

“I brought my daughter here thinking everything is free. It’s not. I was scared that they will not care for my daughter if I did not pay,” said S Mariamma, mother of a 21-year-old who was admitted to the Government hospital for women and children in Egmore last week. On Friday, when a statesponsored 108 ambulance reached the hospital in Egmore at around 9am, another family was asked to ₹900 for the “quick and safe” trip. The amount would be shared by the ambulance driver and two others who carried the stretcher, they were told.

After the duty doctors declared that the woman was in active labour, a ward boy who took her to the labour room on a stretcher took ₹200 from her husband, a daily wage labourer. The nursing assistant who prepared her for labour and ayahs in the ward demanded money from the family every time they came by to leave information about the woman’s condition. To ensure the families don’t raise an alarm, they talk to them about safety measures and RFID tags given to the hospital to prevent baby theft.

After four hours, the public address system announced that the woman had delivered a baby boy. A few minutes later the staff nurses brought the baby wrapped in a new towel. Soon, an ayah demanded ₹1000 for all women workers in the ward. “We don’t ask parents of girls to pay. We understand it can be tough on them,” the ayah said.

The family thought no more bribes would be sought. But ayahs from the labour ward demanded ₹700 for cleaning the patient. When the family argued, they agreed to take ₹500. “Besides paying bribes, we are forced to buy food here. My wife was hungry and I had to buy lunch for ₹150,” the newborn’s father said.

Two weeks ago, many hospitals came under the DVAC scanner after complaints. “We have appointed vigilance squads in all institutions. Patient and relatives can also complain against those demanding bribes,” said director of medical education Dr Edwin Joe, who is in charge of administration of all medical colleges and institutions like the Egmore women’s hospital attached to these colleges. Nearly 60% of the deliveries in the state happen in government hospitals.


FREE, REALLY?
COURT ORDERS NOTICE TO GOVT

Appointment of teacher edu univ VC under HC scanner

TIMES NEWS NETWORK

Chennai:02.01.2019

Madras high court has ordered notice to the government on a plea assailing the appointment of professor Thangasamy as the VC of Tamil Nadu Teachers Education University.

A division bench of Justices M M Sundresh and Krishnan Ramasamy issued the notices on a plea by advocate K

Chakravarthy of Cuddalore. The bench directed the state to file its reply by January 2.

According to the petitioner, the UGC Regulations, 2013 which prescribes minimum qualifications for appointment of teachers and other academic staff in colleges and universities, would apply to the appointment of VC also. Moreover, Thangasamy has only two years of experience as professor as against the mandatory 10 years which is a clear violation of UGC Regulations, he said.

As per the regulation, the candidate must be a distinguished academician with 10 years of experience as a professor in a university or in an equivalent position in a research or academic administrative organisation. This apart, a selection committee of eminent persons must be constituted which would in turn recommend three to five names to the office of the governor for appointment.

But all such mandatory procedures were not followed in the present appointed, the petitioner said.
Fears of another question paper leak at Anna University
Ram.Sundaram@timesgroup.com

Chennai:02.01.2019

Suspicions of another question paper leak at Anna University, this time of the test to select 350 assistant engineers for the Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco), have been sparked by images of handwritten notes circulating on WhatsApp and other social media groups.

The university conducts the tests for Tangedco and the images, which turned up two days after the test, were of questions that had appeared and the correct answers. More than 80,000 candidates took the written test on December 30 at 124 centres across Tamil Nadu. Electrical engineering candidates said the image they received in their WhatsApp groups contained not just questions asked in part C of the question paper, but also the right answers marked against them.

One candidate from Chennai, requesting anonymity, said it was impossible for someone to write down all the questions verbatim after the test was complete. The question booklet has to be returned with the answersheet. “So, the leak must have happened prior to the test,” he added.

Corroborating this, sources at Anna University said they suspected the role of lower-rank staff. “After compiling the final list of questions, it is sent for proofreading and typing. Usually cell phone or camera usage is restricted in these areas. Knowing this, someone has noted down all the questions with the answers in a diary. Later, this must have been photographed and circulated,” said an official who asked not to be identified.

Professor S Rajendra Boopathy, who is in charge of conducting the test, said he had no idea about any leak and he was ready to open the sealed room where the answersheets were stored and check if there was any wrongdoing only if the vice-chancellor instructed him to. Tangedco officials said that they were no way connected with the conduct of the exam as it was for Anna University to prepare the question paper, conduct the test and submit the final list of candidates to them.



Image of a handwritten note containing the questions which was circulated on social media

Tuesday, January 1, 2019


மனசு போல வாழ்க்கை 26: உங்களுக்கு நன்றி

Published : 15 Sep 2015 12:01 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்

மறுபதிவு




நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம்

Published : 27 Oct 2015 10:54 IST


டாக்டர். ஆர். கார்த்திகேயன்

  மறுபதிவு




நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள்.

தொடுதலும் உணவே

சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டு திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான். உணவை விட ஆதரவும் பாராட்டும்தான் தொடர்ந்து பிள்ளையை வளர்க்கிறது. தாயிடமிருந்து தனிமைப்படுத்தப்படும் விலங்கினங்களின் குட்டிகள் தொடுதல் இல்லாதபோது குறைந்த ஆயுட்காலத்தில் இறந்து போகின்றன.

மொழியறிவு வளரும் வரை வார்த்தைகள் தரும் நம்பிக்கையும் பாராட்டும் தொடுதல் மூலமாகவே முழுமையாக நிகழ்கிறது. பிறகு வார்த்தைகள் அதைச் செய்ய வேண்டும். ஆனால் வளர்ந்த பின்னாலும் கூட ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத செய்தியை ஒரு தொடுதல் சொல்லிவிடும் என்பதுதான் உண்மை.

தொடுதலுக்கு இசைந்து வெளிவரும் வார்த்தைகள் பிடிப்புடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மடியில் போட்டு முதுகை நீவிக்கொடுக்கும் தாய் பாதுகாப்பு உணர்வைத் தருகிறாள். விரல் பிடித்து அழைத்துச் செல்லும் அப்பா பாதி ஆசிரியர் ஆகிறார். தட்டிக்கொடுத்துக் கதை சொல்லும் பாட்டி கற்பனையை வளர்க்கிறாள். தோளில் கை போட்டு ரகசியம் பேசும் சகோதரன் உலகைச் சொல்லிக்கொடுக்கிறான். வாரி அணைக்கும் காதலி ஆசையை அள்ளித் தெளிக்கிறாள். முதுகில் ஏறும் பிள்ளை உங்கள் பொறுப்பை உணர்த்துகிறான். உடல் மொழி சொல்லாததை வாய் மொழி சொல்வது கடினம்.

பேச்சுகளின் பெருக்கம்

நாம் வளர்கையில் தொடுமொழி குறைந்து வாய் மொழி ஆதிக்கம் பெருகுகிறது. வார்த்தைகள் மூலம் தான் பெரும்பாலான செய்திகள் செல்கின்றன. அதனால் வார்த்தைகள் பெரும் முக்கியத்துவம் பெற்று விட்டன.

உறவுகள் இயந்திரத்தனமாக இயங்குகையில் தேவைகள் கருதி மட்டுமே வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நேரம் தான் செல்வம் என்று இயங்குகின்ற உலகில் பொருள் ஈட்ட வழியில்லாத வார்த்தைகள் குறைந்து போகின்றன. பிரச்சினை என்றால் பேசுகிறோம். காரியம் என்றால் பேசுகிறோம். பரஸ்பர அன்புக்கும் நட்புக்கும் அபிமானத்துக்கும் பேசும் பேச்சுகள் குறைந்துவருகின்றன.

இதனால் மனதார ஒருவரைப் பாராட்டுவது என்பதே அரிதான செயலாகிறது. ஒருவர் பாராட்டினாலே ‘இவர் எதற்காக இப்படிப் பாராட்டுகிறார்? இவருக்கு என்ன வேண்டும்?” என்று சந்தேகப்படுகிறோம்!

எதையும் எதிர்பார்க்காமல் ஒருவரை மனதாரப் பாராட்டுதல் என்பது பாராட்டுபவரின் மன வளத்தைக் காட்டுகிறது. அது ஒரு பரிமாண வளர்ச்சி. அதனால் தான் பலருக்கு மனதாரப் பாராட்டும் மன விசாலம் இருப்பதில்லை.

ஆனால் நாம் அனைவரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். எங்கிருந்து பாராட்டு வரும்? கொடுத்தால்தானே திரும்பப்பெற?

நல்ல சாப்பாடு என்றால் வார்த்தை பேசாமல் மிச்சம் வைக்காமல் சாப்பிடுபவரில் எத்தனை பேர் மனதாரச் சமைத்தவரை பாராட்டுகின்றனர்? சரியில்லை என்றால் திட்டித் தீர்க்க யோசிப்பதில்லை.

“ஒரு நாளில் எத்தனை பேரிடம் பாராட்டு வாங்குகிறோமோ அவ்வளவு நல்ல சேவையைச் செய்கிறோம்!” என்பது சேவை நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சொல்லித் தரும் பாடம். இதை நான் சற்றுத் திருப்பிப்போட்டுச் சொல்வேன். “ஒரு நாளில் எத்தனை பேரைப் பாராட்டுகிறீர்களோ அவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.”

பாராட்டுவதற்காக பாராட்டு

பாராட்டுவதற்குப் பாராட்டப்படும் பொருளோ மனிதரோ அருகதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பாராட்டுபவரின் அருகதைதான் முக்கியம்.

நம் வாழ்க்கையை மெலிதாகத் தொட்டுச் செல்லும் மனிதர்கள் செய்யும் சிறு காரியங்களைப் பாராட்டுங்கள். அவர்கள் நாள் அன்று நிச்சயம் சிறப்பாக இருக்கும். உங்களுடன் வாழும் மனிதர்களின் நல்ல பண்புகளை, நல்ல செயல்களைப் பாராட்டுங்கள். அது அவர்களின் வாழ்க்கையையே சிறப்பானதாக மாற்றும்.

வீட்டுக்குள் தேவைக்கு அதிகமான பாராட்டு அவசியமா என்று வாதாடுவார்கள். அது வீண் வாதம். பாராட்டுகள் அதிகமானால் பாதகமில்லை. குறைவானால் தான் பாதகம். முடியாதவரிடம் முடியும் என்று சொல்லிச் சற்று அதிகப்படியாகப் பாராட்டினால் பிழையில்லை. ஆனால் முடியும் என்பவரையும் பாராட்டாமல் விடும் பொழுது பலர் தங்கள் திறமைகளின் மேல் நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்கள்.

பெரும் குடும்பத்தில் வாழும் சூழலில்கூடப் பெரிய பாராட்டுகள் அவசியப்படவில்லை. நல்ல வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருக்கும். இன்று மூன்று பேராய், நான்கு பேராய் சிறுத்துள்ள குடும்பங்களில் வாய் மொழியே குறைந்துவருகிறது. அவசர யுகத்தில் பாராட்டுக்கு ஏது நேரம்?

ஒரு நாள் முயற்சி செய்யுங்கள். ஒரு பத்துப் பேரை இன்று மனதார, பிரதி பலன் எதிர்பார்க்காமல் அவர்கள் நல்ல செயல்களுக்குப் பாராட்டுங்கள். சங்கிலித் தொடர்ச்சியாக நல்ல நிகழ்வுகளை நடத்துவீர்கள்.

ஒருவரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றிவிட்டால் அவரிடம் பாராட்டத்தக்கவல்ல பண்புகளைத் தேட ஆரம்பிப்பீர்கள். அது நல்ல உறவுக்கான வீரிய விதைகளைத் தூவும்.

பாராட்ட நினைத்தும் பிறகு செய்யலாம் என்று ஒத்திப் போடுபவர்கள் பலர் இருப்பார்கள். பாராட்டை இன்றே செய்யுங்கள். உறவுகளில் குறைகள் சொல்வதைத் தள்ளிப்போடுங்கள்.

உங்களைத் தொட்டுச் செல்லும் உறவுகளில்; மனிதர்களில் யாரையெல்லாம் பாராட்டலாம் என்று பட்டியல் போடுங்கள். இன்றே செயல்படுத்துங்கள்.

பாராட்டு ஒரு மூலதனம். அது பன்மடங்கு பெருகி உங்களிடம் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
மனசு போல வாழ்க்கை 34: அறிவுரைகளும் அனுபவங்களும்

Published : 17 Nov 2015 11:32 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

மறுபதிவு




பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் வாழ்கிறார்கள். கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு. சிற்சில மாறுதல்களோடு. கொஞ்சம் வேறுபாடுகளுடன். ஆனால் ஆதார வாழ்க்கை நம் பெற்றோர்களுடையதுதான். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்க்கையின் பெரும் பகுதியைப் பெற்றோர்களிலிருந்து தொடங்கி நம் முன்னோர்கள் வரை பலரிடமிருந்து பெற்றிருக்கிறோம்.

இதை விஞ்ஞானம் மரபணுக்களின் காரணம் என்கிறது. முன்னோர் செய்த வினை என்று ஆன்மிகம் சொல்கிறது. குறிப்பாக, இந்து மதம் பூர்வ ஜென்மம் என்றும் ஜென்மங்கள் என்றும் சொல்லும். உளவியலாளர்களில் ஒரு சாரார் தட்டையாக நாம் எல்லாவற்றையுமே பெற்றோரைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் உங்கள் நம்பிக்கைகளும் சார்பு நிலைகளும் மாறுபடலாம். ஆனால், பெற்றோர்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் குழந்தைகள் வாழத் தொடங்குகிறார்கள் என்பதைப் பொதுவாக யாரும் மறுக்கமாட்டார்கள்.

யாரோட ஜெராக்ஸ்?

அப்பா, அம்மா, தாத்தாக்கள், பாட்டிகள் என நிறைய மனிதர்களின் பங்களிப்பு இருப்பதால் நாம் ஒரு கார்பன் காப்பியாகயாகவோ ஜெராக்ஸ் நகலாகவோ மட்டும் இல்லாமல் ரசமான கலவையாக இருக்கிறோம். ஒவ்வொருவரிடமிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கியிருக்கிறோம். சில பண்புகள் தூக்கலாகத் தெரியும். பல உள்ளார்ந்து இருக்கும். மிகச் சில பண்புகள் நமக்கே தெரியாமல் என்றோ ஒரு நாள் பீறிட்டுக்கொண்டு வரும்.

இந்த ஒற்றுமைகளைப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். பிறந்த குழந்தையின் உருவ ஒற்றுமைகளில் இது ஆரம்பமாகும்.

“அப்படியே அம்மா தான்” , “நெத்தி மட்டும் தாத்தா. மத்தபடி அவங்க பக்கம்தான்”, “ அப்படியே டிட்டோவா பொள்ளாச்சி ஃபீச்சர்ஸ்”, “மீசையை ஒட்ட வச்சா அப்படியே அவள் அவங்கப்பாதான். அப்படியேதான் வருவா.” என்று குழந்தையைப் பார்த்து அடிக்கப்படும் டயலாக்குகள் நமக்குத் தெரியும்தானே!

உருவ ஒற்றுமைகளுக்குப் பிறகு சுபாவங்கள் அலசப்படும்.

“அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கு. என்ன கோபம் பாரு!” “என்னா அழுத்தம் பாரு. அவ அம்மாவே தான்.” “எப்படி மழுப்பறா பாரு. அவ அத்தை இப்படித்தான் நழுவுவா எதைக் கேட்டாலும்!”

வாழ்க்கையை கூர்ந்து நோக்கினால் வாழ்வின் நிகழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் நடப்பதையும் உணரலாம். தாயின் அதே துயரம் மகள் வாழ்விலும் நடக்கும். தந்தை செய்த அதே தவறை மகனும் செய்வார். வாழ்வின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தினால் இப்படிப்பட்ட பல ஒற்றுமைகளைக் பார்ப்பீர்கள். இவை யதேச்சையானவை அல்ல.

அறிவுரைகளும் அனுபவங்களும்

பாஸ்ட் லைஃப் ஹீலிங் என்று ஒன்று உண்டு. கடந்த காலத்தின் கர்ம வினைகளைக் களைவதற்கான சிகிச்சை முறை. மதங்கள் அனைத்துமே கர்மவினைகளைப் போக்கத்தானே முயல்கின்றன?

கர்ம வினை என்பதை முதலில் எளிமைப்படுத்துவோம். ஒரு செயலைச் செய்து அதிலிருந்து கற்றுக்கொண்ட பிறகு அதைத் தொடர்வதா வேண்டாமா என்று முடிவு செய்கிறோம். ஆனால் செயல் ஏற்படுத்திய பாதிப்பு நமக்கு வந்து விடுகிறது. அந்த பாதிப்பைப் பிறகு குறைக்கப் பார்க்கிறோம். அதன்பின் அந்த அனுபவத்தால் மற்றவர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளிடம் அதைச் செய். இதைச் செய்யாதே. இது பாவம். அது புண்ணியம் என்று அறிவுரை சொல்கிறோம்.

ஆனால் அறிவுரைகளை விட அனுபவங்கள்தான் சக்தி வாய்ந்தவை. அப்பாவின் தவறு மகனுக்குப் புரியாது, பட்டுத் தெரியும் வரை. படுவதற்கு முன் தெரிந்து கொள்ள முடியாதா என்பதுதான் ஒவ்வொரு தகப்பனின் ஏக்கமும். ஆனால் தீ சுடும் என்று எவ்வளவு சொன்னாலும் தொட்டால் தானே தீயின் குணம் தெரியும்? இதனால் தான் எவ்வளவு சொல்லியும் தவிர்க்க இயலாமல் பெற்றோர்களின் தவறுகள் பிள்ளைகளால் மீண்டும் செய்யப்படுகின்றன.

அறிவுரைகள் எந்தக் காலத்திலும் பெரிய பலனை அளித்ததில்லை. அறிவுரைகள் சொல்வதை விட நம் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதுதான் முக்கியம்.

பிள்ளைகள் பார்த்துத் தெரிந்துகொள்கின்றன. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. பெற்றோர்கள் சொல்வது முக்கியமில்லை. செய்வது தான் முக்கியம்.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்று சொல்லிவிட்டு போன் வரும் போது “நான் வீட்டில் இல்லைன்னு சொல்லு” என்று சொல்லும் அப்பாவிடம் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும்?

“பொய் சொல்லலாம்; ஆனால் பொய் சொல்லக் கூடாது என்று பேசிக்கொள்ள வேண்டும்!” என்றுதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.

மோசமான கருத்துள்ள திரைப்படத்தையோ தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ எந்த மறுப்பும் விமர்சனமும் இல்லாமல் பெற்றோர்கள் பார்க்கும்போது குழந்தைகள் அதை சம்மதமாகவே என எடுத்துக்கொள்வார்கள்.

தேர்வு அவர்கள் கையில்

நம் பழக்கங்கள், நாம் பயன்படுத்தும் சொற்கள், நாம் வாழ்வில் எடுக்கும் முடிவுகள் எனக் குழந்தைகள் நம்மை நகல் எடுக்கின்றன.

“ நான் அதிகாலை எழுந்திருக்கிறேன். அவன் அப்படி இல்லையே. இதையெல்லாம் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று நீங்கள் கேட்கலாம். உங்களிடமிருந்து இதைத்தான் குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. தேர்வு செய்வது அவர்கள் கையில். ஆனால் உங்கள் வாழ்க்கையை ஆதாரமாக வைத்துத்தான் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையோ அவர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நீங்கள் காட்டும் உலகம்தான் அவர்களுக்கு முதல் உலகம். பிறகுதான் அவர்கள் வாழ்வில் நண்பர்கள், ஊடகம், பயணங்கள் என மற்ற வகையான தாக்கங்கள் நிகழ்கின்றன.

பெற்றோர்களின் வாழ்வுக்கு நன்றி செலுத்திவிட்டு, உங்கள் வாழ்வைச் சீராக்குங்கள். அவைதான் அடுத்த சந்ததிக்கு நீங்கள் செய்யும் மூலதனம். என் வாழ்க்கையை என் பிள்ளை அப்படியே பெறட்டும் என்று சொல்ல முடிந்தால் நல்ல வாழ்க்கை வாழ்கிறீர்கள் என்று பொருள்.

உங்கள் வாழ்வைச் செப்பனிடும்போது உங்கள் பிள்ளைகள் வாழ்வு சீராகும். அதனால் மனசு போல வாழ்க்கை என்பது உங்களுக்கு மட்டுமல்ல. உங்கள் மனசு தான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன.

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஆர்டிஓ அலுவலகங்களில் பணமில்லா பரிவர்த்தனை



கி.மகாராஜன் 01.01.2019

தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அனைத்து சேவைகளுக்கும் ஆன் லைனில் மட்டுமே பணம் செலுத்தும் பணமில்லா பரிவர்த்தனைத் திட்டம் ஜன.1 முதல் அமலுக்கு வருகிறது.

இதுவரை பழகுநர், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்தல், ஆர்சி புத்தகத் தின் நகல் பெறுதல், முகவரி மாற்றம் போன்ற சில சேவைகளுக்கு மட்டும் ஆன்லைனில் பணம் வசூலிக்கப்பட்டது.

ஜன. 1 முதல் போக்குவரத்து வாகனங்களுக்கு வரி செலுத்துதல், வாகன உரிமை மாற்றம் செய்தல், தகுதிச்சான்று புதுப்பித்தல், தவணை கொள்முதல், தவணை ரத்து செய்தல் போன்ற அனைத்து பணிகளுக்கும் இணையதளம் மூலம் மட்டுமே பணம் செலுத்த முடியும். பின்னர் ஆன்லைனில் பணம் கட்டியதற்கான ஒப்புகைச் சீட்டுடன் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை அணுகி எளிதில் சேவையைப் பெறலாம்.

மதுரையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் (மதுரை மத்தி) தலைமை வகித்தார்.

இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தி னர், மேக்ஸிகேப் உரிமையாளர்கள் சங்கத்தினர், சுற்றுலா பேருந்து, ஆட்டோ உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலு வலக சேவைகளுக்கு இணைய தளம் மூலம் பணம் செலுத்துவது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
பெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம்

By அர்ஜுன் சம்பத் | Published on : 01st January 2019 03:03 AM 

தனியார் கட்டண சேனல்களுக்கு (கேபிள் டி.வி. மற்றும் டிடிஎச் உள்ளிட்டவை) புதிய கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') விரைவில் அமல்படுத்த உள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் முறை மூலம் மட்டுமே இனி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைப் பார்க்க முடியும்.

இலவச சேனல்களைக் பார்ப்பதற்குக்கூட செட்-ஆப் பாக்ஸ் அல்லது டிடிஎச் நிறுவனத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக தமிழக அரசுக்குச் சொந்தமான அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70 சந்தா செலுத்தி கட்டணச் சேனல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களைக் கண்டு களித்துவந்த பொது மக்கள் இனிமேல் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

"டிராய்' விதிமுறைகளின்படி விரும்பும் கட்டணச் சேனல்களைத் தேர்வு செய்து அந்த சேனல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி மட்டுமே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களைக் காண முடியும். கட்டணத்துடன் அதற்கான ஜிஎஸ்டி-யும் சேர்த்து பொதுமக்கள் செலுத்த வேண்டும். ஒருவகையில் பேக்கேஜ் முறையில் தாங்கள் விரும்பாத, பார்க்காத சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தி வந்த பொதுமக்களுக்கு இது நன்மை செய்வதாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு தனியார் கட்டண சேனல்களுக்கும் "டிராய்' மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்டண சேனல்களும் தங்களுக்கான கட்டணத்தை வெளிப்படையாக அறிவித்து விளம்பரம் செய்து வருகிறார்கள்.

வருங்காலத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்த்திட குறைந்தபட்சம் மாதம் ரூ.130 மற்றும் இதற்கான ஜிஎஸ்டி விதிப்புடன் சேர்த்து ரூ.153.40 முதல் ரூ.300 வரை செலவு செய்ய நேரிடும். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். நடுத்தர குடும்பத்தினர் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாது.
தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70-க்கு கட்டணச் சேனல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்த்து வந்த மக்கள், இனிமேல் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் .

இது ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்துடன் உருவாக்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக அமைந்துள்ளது.

டிஜிட்டல் மயமாக்குதல் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இனி அனலாக் முறை சிக்னல்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கேபிள் டி.வி. வர்த்தகத்தில் தனியார் தொலைக்காட்சிகளுக்குச் சாதகமாக இருந்த சூழலை மாற்றிடவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் சென்று கொண்டிருந்ததைத் தடுக்கவும் இந்தத் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை அழிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.

கேபிள் டிவி தொழிலில் உள்ள ஏகபோக முறையை ஒழித்துக் கட்டவும், அரசுக்கு வந்து சேரவேண்டிய வருவாய் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழக அரசு கேபிள் டி.வி.நிறுவனம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே தமிழக அரசு கேபிள் டி.வி. யை பலவீனப்படுத்தி ஒழித்துக் கட்ட சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.
38 லட்சம் வாடிக்கையாளர்களுடன் பலம் பொருந்திய தமிழகத்தின் பெரிய நிறுவனமாக மக்களுக்குச் சேவை செய்துவரும் அரசு கேபிள் டி.வி.க்குப் போட்டியாக தனியார் டிடிஎச் நிறுவனங்கள் மற்றும் தனியார் செட்-ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மக்களுக்குத் தேவையான இணையதள சேவைகளும் வழங்கப்படுகின்றன.

தொடக்கம் முதலே மத்திய அரசின் "டிராய்' நிறுவனம் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை ஒவ்வொரு விஷயத்திலும் தாமதப்படுத்தி வருகிறது. உரிய அங்கீகாரத்தை வழங்க பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு முறையும் தமிழக அரசு சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை நடத்தி வருகிறது.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கத்தைத் தடை செய்ய வேண்டும். கொள்ளை லாபநோக்கத்துடன் கட்டண சேனல்களை தனியார் தொலைக்காட்சி முதலாளிகள் நடத்துகின்றனர்.
ஏற்கெனவே விளம்பரம் மூலம் அதிக வருவாய் ஈட்டி லாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், திடீரென கட்டண சேனல்களாக மாறி மேலும் கொள்ளை லாபம் அடிக்கின்றன.

கட்டண சேனல்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி-யையும் சந்தாதாரர்களே (பொதுமக்கள்) செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகளான தூர்தர்ஷன் உள்பட ஏராளமான இலவச சேனல்களும் மேலும் தனியாருக்குச் சொந்தமான இலவசச் சேனல்களும் உள்ளன.

இனிமேல் இவற்றை கேபிள், செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடி எச் முறை மூலம் காணவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்தித்தான் ஆகவேண்டும். சன் டி.வி. குழுமம், விஜய் டி.வி. குழுமம், ராஜ் டி.வி. குழுமம் உள்ளிட்டவை இலவச சேனல்களாகவே இருந்தன; லாபகரமாகவும் இயங்கி வந்தன. இவர்கள் தங்கள் குழுமத்தின் ஏதாவது ஒரு சேனலை இலவசமாக கொடுத்துவிட்டு, மீதி அனைத்துச் சேனல்களையும் கட்டணச் சேனல்களாக மாற்றி "பேக்கேஜ்' முறை அமல்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர்.

இனி அரசுக்குச் சொந்தமான இலவசேனல்களைக் பார்ப்பதற்குக்கூட, அதாவது தொலைக்காட்சி பார்ப்பதற்குகூட குறைந்தபட்ச கட்டணமாகிய ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கேபிள் டி.வி. தொழிலில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாற்றம் ஏற்பட மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ("டிராய்') அறிவித்துள்ள மக்களே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் சிறு நன்மை மட்டுமே உண்டு. மற்றபடி "டிராய்' நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மிகவும் அதிகமாகும்.

எனவே, கட்டண சேனல்களை தடை செய்யும் வகையில் விதிமுறைகளிலும் சட்டத்திலும் "டிராய்' நிறுவனம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டணச் சேனல் முறையைத் தடை செய்ய வேண்டும்.
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரம் மூலம் லாபம் ஈட்டி வருகின்றன. அவற்றுள் சில கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்தில் கட்டண சேனல்களாக மாற்றுவதற்குத் தடை செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் கட்டண சேனல்களையும் தடை செய்ய வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாகும்.
இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குச் சேனல்கள், செய்திச் சேனல்கள், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு உதவி செய்யக்கூடிய அனைத்துச் சேனல்களும் இலவசமாகவே வழங்கப்படவேண்டும்.ஸ்ரீ
தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தனியார் டி.வி. சேனல்கள், கொள்ளை லாபம் அடிக்க துணைபோகும் வகையில் புதிய சட்டம் மற்றும் விதிமுறைகள் அமைந்துள்ளன.
தமிழக அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை "டிராய்' அங்கீகரித்து, அதிகாரம் கொடுத்து மக்கள் குறைந்த கட்டணத்தில் (ரூ.70) அனைத்துச் சேனல்களையும் பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர
வேண்டும்.

ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவையாக விளங்கும் அரசு கேபிள் டிவிக்கு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவேண்டும். கேபிள் டிவி தொழிலில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
கேபிள் வயர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி மற்றும் மின் கம்பங்களில் கேபிள் கொண்டு செல்ல அனுமதி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கட்டண சேனல்களின் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவும் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை மேம்படுத்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் ஒளிபரப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் மூலம்தான் ஒளிபரப்புகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களில் அரசு சேவை நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வினாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பெரும் சுமையாக வரவிருக்கின்ற கேபிள் டிவி கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும்.

கட்டண சேனல்களை பொதுமக்கள் புறக்கணித்து மத்திய அரசின் தூர்தர்ஷன் பொதிகைச் சேனல்களையும் இலவச் சேனல்களையும் மட்டுமே ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பெரும் சுமையாக வரவிருக்கும் கேபிள் டி.வி. கட்டண உயர்விலிருந்து தப்பிக்க முடியும்.

கட்டுரையாளர்:
தலைவர், இந்து மக்கள் கட்சி.
dinamalar 01.01.2019

'கஜா' புயல் நிவாரணத்திற்காக, தமிழகத்திற்கு ஏற்கனவே, 173 கோடி ரூபாய் அளித்த நிலையில், நேற்று, 1,146 கோடி ரூபாயை விடுவித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புயல் சேதத்திற்காக கேட்ட இடைக்கால நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசும், பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில், நவ., 16 அதிகாலை, 'கஜா' புயல், கரையை கடந்தது. புயலால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது. 

டெல்டா மாவட்டங்கள், முழுமையாக பாதிக்கப்பட்டன.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், பல லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மக்கள், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்தனர். புயல் சேதங்களை பார்வையிட்ட முதல்வர் பழனிசாமி, நவ., 20ல், டில்லி சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தார்.'புயலால்



பாதிக்கப்பட்ட பகுதிகளில், தற்காலிக புனரமைப்புக்கு, 1,431 கோடி ரூபாய்; நிரந்தர புனரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்கு, 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் வழங்க வேண்டும். புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவை அனுப்ப வேண்டும்' என, பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
இதையேற்று, மத்திய குழுவை அனுப்ப, பிரதமர் உத்தரவிட்டார். மத்திய குழுவினர், நவ., 23 முதல், 27 வரை, புயல் பாதித்த பகுதிகளுக்கு சென்று, சேதங்களை பார்வையிட்டனர். அவர்களிடம், தமிழக அரசு சார்பில், இடைக்கால நிவாரணமாக, 2,700 கோடி ரூபாய் வழங்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து, மத்திய குழுவினர் ஆய்வு முடித்தபின், புயல் நிவாரணப் பணிகளுக்கு

உதவ, மாநிலங்களுக்கான பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து, மத்திய அரசின் பங்காக, 353.70 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்தது. அதன்பின், மத்திய வேளாண்மைத் துறை சார்பில், தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 173 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டது. 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில், நேற்று, உயர்நிலைக் கூட்டம் நடந்தது.இக்கூட்டத்தில், மத்திய நிதி அமைச்சர், அருண்ஜெட்லி, வேளாண்துறை அமைச்சர், ராதா மோகன் சிங், நிதி ஆயோக் துணைத் தலைவர், ராஜிவ்குமார் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், கஜா புயல் நிவாரணமாக, தமிழகத்திற்கு, 1,146 கோடி

ரூபாய் ஒதுக்க, அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசு, இடைக்கால நிவாரணமாக, 1,146 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பது, தமிழக அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த உதவியால், தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான சலுகைகள் கிடைக்கும் என, டெல்டா மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கூடுதல் தொகை

தமிழகத்தில், வர்தா புயலால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானபோது, தமிழக அரசு, மத்திய அரசிடம், 22 ஆயிரத்து, 573 கோடி ரூபாய் நிதி கேட்டது. மத்திய அரசு, 266.17 கோடி ரூபாய் ஒதுக்கியது.ஒக்கி புயலால், தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அரசிடம், 5,255 கோடி ரூபாய் நிவாரணம் கோரியது. இதற்கு, 133 கோடி ரூபாயை மட்டும், மத்திய அரசு வழங்கியது. தற்போது, கஜா புயல் நிவாரணத்திற்கு, இடைக்கால நிவாரணமாக, 1,431 கோடி ரூபாய் கேட்ட நிலையில், இரண்டு கட்டமாக, 1,319 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -

நிதியின்றி தவிக்கும் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம்

Added : ஜன 01, 2019 04:39 |

போதிய நிதி இல்லாததால், 'லேண்ட் லைன்' இணைப்பை, திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறு மாதங்களாக, 'டிபாசிட்' தொகையை வழங்க முடியாமல், பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர், வி.சத்தியபாலன் கூறியதாவது:என் வீட்டிற்கு, பி.எஸ்.என்.எல்., லேண்ட் லைன் இணைப்பு பெற்றிருந்தேன். நீண்ட காலமாக பயன்பாடின்றி இருந்ததால், அதை, ஜூனில், பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தேன். இதற்கான டிபாசிட் தொகையை, விதிமுறைப்படி, 90 நாட்களுக்குள் திருப்பித் தர வேண்டும்; இதுவரை, டிபாசிட் தொகை தரப்படவில்லை. தாமதமானால் வட்டியுடன் தர வேண்டும். என்னைப் போன்று, ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:இணைப்பை திருப்பித் தரும் வாடிக்கையாளர்களுக்கு, டிபாசிட் தொகையை வழங்க, நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை. இதனால், 90 நாட்களுக்குள், டிபாசிட் தொகையை வழங்க முடியவில்லை.ஆறு மாதங்களாக, யாருக்கும் டிபாசிட் தொகை கொடுக்கப்படவில்லை. நெருக்கடி தரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், டிபாசிட் தொகை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

சுதா சேஷையன் பொறுப்பேற்பு

Added : ஜன 01, 2019 04:56


சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தர், சுதா சேஷையன், நேற்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக இருந்த, டாக்டர் கீதாலட்சுமியின் பதவி காலம், டிச., 27ல் முடிந்தது. புதிய துணைவேந்தர்இதையடுத்து, சென்னை மருத்துவ கல்லுாரியில், துணை முதல்வராக பணியாற்றி வந்த, டாக்டர் சுதா சேஷையனை, புதிய துணைவேந்தராக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக, டாக்டர் சுதா சேஷையன், நேற்று பொறுப்பேற்றார்.

முக்கியத்துவம் :

நிகழ்ச்சியில், சுதா சேஷையன் பேசுகையில், ''பல்கலையை, முன்மாதிரி மருத்துவ பல்கலையாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன். ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ''எனக்கு, பொன்னாடை, பூ, பழங்கள் தர வேண்டாம்; அதற்கு பதிலாக உங்கள் அன்பை கொடுங்கள்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணியர் நேரடியாக அந்தமான் செல்லலாம்

Added : ஜன 01, 2019 06:15



புதுடில்லி : அந்தமானில், போர்ட்பிளேர் நகரில் உள்ள விமான நிலையம், அதிகாரபூர்வ குடியேற்ற சோதனை மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலா பயணியர், நேரடியாக, அந்தமானுக்கு பறந்து செல்லலாம்.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், போர்ட்பிளேர் விமான நிலையத்தை, அதிகாரபூர்வ குடியேற்ற சோதனை மையமாக அங்கீகரித்து உள்ளது. மேலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போலீஸ் கண்காணிப்பாளர், குடியேற்ற சோதனை மையத்தின், சிவில் ஆணையராக, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தேவையான ஆவணங்களுடன் வரும் வெளிநாட்டவர், அந்தமானுக்கு நேரடியாக, விமானம் மூலம் சென்றடையலாம். அதேபோன்று, அங்கிருந்து, நேரடியாக, தங்கள் நாட்டிற்குச் செல்லலாம்.இதற்கு முன், அந்தமான் செல்லும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், இந்தியாவில் உள்ள சென்னை, டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள குடியேற்ற சோதனை மையங்களுக்கு வந்து தான், செல்ல வேண்டியிருந்தது.

சமீபத்தில், அந்தமானில் உள்ள சென்டினல் பழங்குடியினர் தீவுக்கு சென்ற அமெரிக்கர், சென்டினல் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, உலகம் முழுவதும் பிரபலமான பகுதியாக, அந்தமான் உருவெடுத்துள்ளது. அந்தமானுக்கு வருகை தரும் வெளிநாட்டவர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கு மத்திய அரசு ரூ.1.49 கோடி நிதியுதவி

Added : ஜன 01, 2019 02:05


புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ள 1.49 கோடி நிதி உதவியை மத்திய அரசு அளித்துள்ளது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை, உயர் கல்வியில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளுக்கு நிதி உதவியை அளித்து, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி மனப்பான்மையை ஏற்படுத்தி வருகிறது.புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் உள்ள உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைக்கு, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, ரூபாய் 1.49 கோடி நிதி உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்த நிதி உதவி ஐந்தாண்டுகளுக்கு ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக,புதுச்சேரிபல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி மேம்பாட்டு நிதி உதவியிலிருந்து,உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையில் எம்.எஸ்சி., பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாணவர்களுக்கு தேவையான பன்னாட்டு தரத்திலான அல்ட்ரா சென்டிரிவியுஜ் மற்றும் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர் போன்ற உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான, ஆய்வு கூடத்திற்கு தேவையான பொருள்களை கொள்முதல் செய்ய முடியும்.மேலும், இந்த நிதியை பயன்படுத்தி,குளிரூட்டப்பட்ட ஆய்வுக் கூடங்களையும், திசு பாதுகாப்பு அறைகளையும் மற்றும் கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஆய்வகங்களையும் புதியதாக நிறுவ முடியும். உலகத்தரத்திலான ஆய்வுகளில் புதிய உத்திகளைக் கையாண்டு அரிய ஆராய்ச்சிளைக் கண்டு பிடித்தால், மத்திய அரசின் இந்த நிதி உதவி தொடர்ந்து கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.இந்த நிதி இரண்டு முறை,பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசின் நிதி நல்கைக்குழுவும் (யு.ஜி.சி.,) ஆராய்ச்சிகளை மேம்படுத்த இதே துறைக்கு ஏற்கனவே சிறப்பு கூறுத் திட்டத்தின் கீழ் நிதி உதவியை அளித்துள்ளது.இந்தத் துறையில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றவர்களில் பலர் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதற்காக தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விருதுகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Man demands details of treatment given to wife at GH

SALEM, JANUARY 01, 2019 00:00 IST

The woman had alleged that she contracted HIV following a blood transfusion four years ago

The husband of the 28-year-old woman of Kudhiraikaran Pudhur village near Mettur, who is undergoing treatment after testing positive for HIV, has urged the district administration to provide the details of the treatment provided to his wife at the Government Mohan Kumaramangalam Medical College Hospital (GMKMCH) in the city in 2014.

The woman had alleged that she contracted HIV following a blood transfusion during her first pregnancy at the Mechery Primary Health Centre four years ago.

The Health Department had denied the allegation stating that all the available records proved that the blood transfused to the woman did not have HIV infection.

However, the woman’s husband, a lorry driver, presented a petition to District Collector on Monday stating that his wife was admitted to GMKMCH for delivery and she was in the hospital from August 11 to 28.

During this period, a unit of blood was transfused to her.

The Health Department officials have not furnished any details of this blood transfusion while refuting the allegation of his wife.

He said that the failure of the Health Department officials to mention about the blood transfusion at the GMKMCH was giving room for the doubt that the official machinery was hiding the facts.

He also took exception to the statement of the officials that his wife had contracted HIV infection due to “other reasons”, which he said had caused mental agony to his wife, the petition said.

He has also sought the copies of case sheets, issue register, master records prepared when his wife underwent treatment at GMKMCH, through Right to Information Act.
Nurses allege they were cheated by advocate

RAMANATHAPURAM, JANUARY 01, 2019 00:00 IST



A group of nurses submitted a petition at the Collectorate in Ramanathapuram on Monday.L. BalachandarL_Balachandar

Request Collector’s intervention to get the money paid to him back

Alleging that they were cheated to the tune of more than Rs. 40 lakh collectively by an advocate practising in the Madurai Bench of Madras High Court on the promise of permanent jobs in government hospitals, a group of nurses urged the district administration on Monday to help them get the money back.

More than 20 nurses, who were among the 48 nurses employed in primary health centres in the district on contract basis for three years since 2013, in their petition presented to Collector K. Veera Raghava Rao, said they were cheated after they gave Rs. 1.5 lakh each to the advocate, and sought his intervention to get their money back.

M. Vasuki, who led the nurses, said after the completion of contract period, their colleague Rajeswari suggested that her husband Ravi, an employee in Tamil Nadu State Transport Corporation, knew a senior advocate in Madurai and he could help in getting their services regularised by filing a writ petition.

Initially, they gave Rs. 7,000 each and the advocate provided them the writ petition number and told them that he had filed a case on their behalf seeking a direction to the State government to regularise their services. A couple of years later, the advocate informed them that they won the case but could get the posts only if officials in the department concerned were bribed, she said.

In their anxiety to get permanent jobs in government hospitals, 28 of the nurses gave Rs. 1.5 lakh each to the advocate, but they did not get jobs, she said.

After realising that they were taken for a ride, the nurses presented a petition to the then Superintendent of Police, Madurai, in July 2017. Later, the Crime Branch police, after making a preliminary enquiry, said they could not take up the case as the amount involved was more than Rs. 25 lakh, which was beyond their jurisdiction.

The Crime Branch police also said the advocate failed to appear before them after responding to the first summons, she said.

The group of nurses also presented a petition to Ramanathapuram SP Omprakash Meena, she said.
After 5-mnth gap, guv appoints MKU vice-chancellor

TIMES NEWS NETWORK

Chennai:01.01.2019

A few days after appointing Dr Sudha Seshayyan as the new Dr MGR University vice-chancellor, governor and chancellor Banwarilal Purohit appointed M Krishnan as the vicechancellor of Madurai Kamaraj University.

“Purohit has appointed Krishnan as vicechancellor of Madurai Kamaraj University for a period of three years with effect from the date of his assumption of office. Krishnan is endowed with rich experience. He was head of environmental biotechnology in Bharathidasan University and a professor of the Central University in Ajmer, Rajasthan,” said a press release from Raj Bhavan.

The VC vacancy arose after the Madras high court in July set aside the appointment of P P Chellathurai as the vice-chancellor of the university. The high court set aside the appointment on the ground that the proceedings of the search committee were flawed without expressing any opinion on eligibility and noticing Chellathurai has been dropped from the criminal case after investigation. “Krishnan has been a fellow of Royal Entomological Society, London, Society for Science and Environment, India, a Commonwealth Fellow, UK and of Japan Prize Foundation. He has a teaching experience of 28 years and is a visiting professor of various universities such as the Okayama University of Science, Czech Academy of Sciences, Institute of Biomedicine, Helsinki and University of Exeter, University of Edinburgh, Scotland,” read the press release.

He has presented 128 research papers in international conferences, published 60 research articles in UGC listed journals and authored two books in the field of molecular biology, the release said.
Tiruvarur: Cyclone fury could affect AIADMK’s prospects
Turf Stronghold Of DMK, But Parties Must Prove Mettle Sans Karuna, Jaya

B Sivakumar & R Gokul | TNN 01.01.2019

Cyclone Gaja that wrought devastation in the delta districts, tardy relief besides a whole host of issues, including corruption charges against the ruling dispensation, are likely to influence the outcome of the January 28 Tiruvarur byelection. The constituency has largely favoured the DMK with former party president M Karunanidhi contesting and winning the constituency twice. But, the contest would be a tough one and a precursor to the 2019 Lok Sabha elections, just a few months away.

It will be an action-packed byelection, considering that the key players like the DMK, AIADMK and AMMK would be testing their strength after the death of leaders J Jayalalithaa and Karunanidhi. If estranged DMK leader M K Alagiri decides to play spoilsport, he could prove to be a headache for the DMK.

Soon after the EC’s announcement on Monday, the DMK and AIADMK asked candidates interested in contesting to submit applications.

Later, DMK president M K Stalin told reporters that the Tiruvarur byelection would be a cakewalk for his party. “We have a definite strategy and the support of other parties. We are sure about the issues that have to be raised during campaign,” Stalin told reporters at the party headquarters in Chennai, where he held a meeting with senior party leaders. DMK won seven times from Tiruvarur, the CPM five times and the Congress once.

With the delta districts including Tiruvaur limping back to normalcy after the cyclone, distressed voters, especially farmers, are likely to make their choices depending on how smooth the disbursal of relief was in their region. “Until Monday, nearly 30% of the citizens of the constituency had not received any relief or compensation from the government. With the model code of conduct coming into force, it is not clear whether relief work can be taken up,” said a senior officer, seeking anonymity. Unlike the 2016 assembly election, when the DMK had only Congress and IUML for company, the party will now have the support of the CPI and CPM, which have a considerable support base in the constituency. “The CPM is with the DMK for the Lok Sabha elections. We will definitely support the DMK for the Tiruvarur byelection as well,” said former CPM state secretary G Ramakrishnan.

DMK workers in the constituency are upbeat. The party’s Tiruvarur district secretary Poondi K Kalaivanan said, “Our party has a strong base here. It is an additional strength for us that our leader (Karunanidhi) won here twice. He is still the hero in Tiruvarur.” The ruling AIADMK was quick to organize a meeting with functionaries. Food minister R Kamaraj who is also the party’s Tiruvarur district secretary, met key functionaries to discuss strategy.

AMMK’s Tiruvarur district secretary S Kamaraj said his party had already begun work.


CROWD FAVOURITE:

The DMK has won seven times from Tiruvarur, with M Karunanidhi contesting and winning twice

NEWS DIGEST

Med varsity VC assumes charge


Dr Sudha Seshyyan assumed charge as the 10th vice-chancellor of Tamil Nadu Dr MGR Medical University on Monday. She took the oath read out by health minister and pro-chancellor C Vijayabaskar, in the presence of health secretary J Radhakrishnan.

Change in train schedules : With three government holidays coming up in January, suburban trains on Chennai Beach – Tambaram/Chengalpattu/ Tirumalpur section, Chennai Beach – Velachery Section and Chennai Beach – Arakkonam Section will follow the Sunday pattern of working on January 1 (New Year), 15 (Pongal) and 26 (Republic Day), 2019.

‘Lohri Mela’ on Jan 12: Punjab Association with organise ‘Lohri Mela’ in Anna Adarsh College for Women in Anna Nagar on January 12.

Happy New year 2019


Sunday, December 30, 2018



Rs 3 lakh fine on 12 officials for delaying RTI replies


TNN | Dec 25, 2018, 08.33 AM IST


 

BIJNOR: The state information commissioner on Monday imposed a cumulative fine of Rs 3 lakh on 12 officials from Bijnor, Moradabad and Amroha for causing delay in replying to Right to Information requests filed in their respective departments.

State information commissioner Hafiz Usman, who was in Bijnor to attend a hearing on complaints related to RTIs, imposed a fine on 12 officials for delaying replies, while letting off 10 others with a warning.

The officials who were asked to pay a fine of Rs 25,000 each are district magistrate of Sambhal, district education and training institutes of Kanth in Moradabad, registrar of Vilaspur in Rampur district, basic shiksha adhikaris of Sambhal and Rampur, district inspector of schools in Sambhal, block development officer of Haldaur, supply inspector of Kundarki in Moradabad, executive officer of Milak civic body in Rampur, child development project officer of Najibabad, accounts officer of basic education department in Sambhal and block education officer of Junaavai in Sambhal.

The commissioner heard a total of 55 cases pertaining to RTI requests.
Several law graduates ‘missing’ from MU’s convocation list


TNN | Dec 29, 2018, 02.17 AM IST


 

MUMBAI: Several law graduates from Mumbai University’s colleges have claimed their names are missing from the convocation list issued by the university last week. These students had failed some exams, but have cleared the papers following revaluation. 

The convocation ceremony for the graduates from the 2018 batch is scheduled on January 11, but these students were allegedly told their names will be updated in next year’s list, to be issued in May.

The university had sent out a list of all graduating students to their respective colleges this year to get errors, if any, rectified. This was the first time the university had taken such a step as, most times, errors get detected after the convocation certificates are printed and distributed. However, some of the law students were shocked to see their names missing.

One of the students from the Government Law College said he had cleared his ninth semester after seeking revaluation of a paper. “University officials said since I had cleared my papers later, I would get the convocation certificate in May. I have already started working and my office has asked me to submit my degree certificate soon,” said a student,

Sachin Pawar, president of Law Students’ Council, who has written to the vice-chancellor regarding the issue, said, “The university told the students that they have ATKTs (allowed to keep term) and, therefore, their names are not on the convocation list. Students who have already got their ‘sanads’ from the Bar Council of Maharashtra will have to waste a lot of time and energy to get their certificates. Degree certificate copies must be mandatorily attached to validate the sanad.”
Five Applications Pending With UGC For Deemed University Tag: HRD Minister

Five applications are pending with UGC for grant of deemed to be university status, the Rajya Sabha was told. 


Education | Press Trust of India | Updated: December 28, 2018 21:05 IST


At present, 125 educational institutions are functioning as deemed to be universities in the country


New Delhi:

Five applications are pending with the central government for grant of deemed to be university status, the Rajya Sabha was told. In a question on whether the government is considering to redraw norms for deemed to be universities, Minister of State for HRD Dr Satya Pal Singh said Thursday the University Grants Commission (UGC) has framed the draft UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2018 for replacing the existing regulations, which has not been notified so far.

There is no timeline prescribed by the UGC for notifying the draft regulations, which have been framed after consulting all the stakeholders, he added.

At present, 125 educational institutions are functioning as deemed to be universities in the country, the minister said, adding five applications received for grant of deemed to be varsity status are pending with the central government/UGC.
சத்துணவா (அ) வெத்துணவா?

Published : 29 Dec 2018 07:14 IST

கே.சந்துரு




கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு)


மாணவர் சேர்க்கை குறைவினால் சில பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை மூடிவிட்டு அந்தப் பள்ளி மாணவர்களுக்கான உணவை அருகிலுள்ள சத்துணவுக் கூடங்களில் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது கண்டனக் கணைகளை எழுப்பியுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தை முதலில் எம்.ஜி.ஆர். தொடங்கியபோது எழுந்த விமர்சனங்கள் ஓரங்கட்டப்பட்டு இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் நிறைவேற்ற உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டது. ஊட்டச்சத்தை அதிகரித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பெருக்க வேண்டுமென்பது அரசின் கடமை என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது (பிரிவு 47).

எனது தீர்ப்பின்படி சத்துணவுக் கூடங்களிலுள்ள வேலைகளுக்கு பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அரசு உத்தரவிட்ட பின் சுமார் 25,000 பட்டியலினப் பெண்கள் ஒருங்கிணைப்பாளர்களாகவும், சமையலர்களாகவும், சமையல் உதவியாளர்களாகவும் வேலை பெற்றுள்ளனர். ஓரிரு இடங்களில் தலித் பணியாளர்களை வேலைக்கு வைப்பதை எதிர்த்து குரல்கள் எழும்பியிருந்தாலும், தமிழகத்தில் இத்திட்டம் வெற்றிகரமாகவே நடைபெற்றுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அரசு திடீரென்று தங்களது சைவப் பிரச்சாரத்தினால் பள்ளி மாணவர்களுக்கு முட்டையை நிறுத்திவிட்டது. கர்நாடகாவில் அட்சய பாத்திர திட்டத்தின் மூலம் மதிய உணவு அளித்துவரும் தன்னார்வ நிறுவனமான ஹரே கிருஷ்ணா இயக்கம் சைவ உணவைத் தவிர வேறு உணவை அளிக்க மாட்டோம் என்று கூறுவதால் அங்குள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவில் போதுமான ஊட்டச்சத்து இருக்கிறதா என்ற கேள்வியை பல சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். எனவே அத்திட்டத்தை நிறுத்தும் முடிவில் கர்நாடக அரசு உள்ளது.

நலிவுற்ற பகுதியிலிருந்து வரும் மாணவர்களுக்கு சுவையுள்ள ஊட்டச்சத்து உணவை அளிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் புரிதல் ஒப்பந்தம் செய்து வாகனங்கள் மூலம் மாணவர் விடுதிகளுக்கு நேரடியாக உணவை அனுப்பி வைக்கிறது. இந்த திட்டம் மாணவர்களிடம் பரந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு தரத்துடன் கூடிய இலவச மதிய உணவு, முடிந்தால் காலை உணவு அளிப்பது ஒன்றே நமது முடிவாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போதாதென்றும் காலை உணவுக்கும் அரசுத் திட்டம் வகுக்கும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது. அது தவிர உயர்நிலைப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மதிய உணவு அளிக்க வேண்டுமென்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதிய உணவுத் திட்டம் 40 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் கிட்டும் நலன்கள் பற்றி பல அறிக்கைகள் வந்துவிட்டன. தமிழகத்தில் பள்ளி சேர்க்கை விகிதம் கேரள விகிதத்தைவிட தாண்டிச் செல்லும் நிலைமையை எட்டி விட்டதாக கூறுகின்றனர்.

ஒரு பக்கத்தில் தமிழகக் குழந்தைகளில் 42% மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி படித்து வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுவதைப் பார்க்கும்போது அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை என்னவென்பதும், அதில் சத்துணவு எடுத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை பற்றியும் தகவல் இல்லை.

உதாரணமாக நான் தலைவராக இருக்கும் தென் சென்னை பள்ளியொன்றில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 300 மாணவர்களில் 60 மாணவர்களே இலவச மதிய உணவைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் உயர்நிலை மற்றும் மேனிலை வகுப்புகளில் (9 முதல் 12 வரை) பயிலும் 350 மாணவர்களுக்கு அரசின் திட்டத்தில் பங்கில்லை. அதில் நலிவுற்ற நிலையிலிருந்து வரும் பல மாணவர்கள் மதிய உணவின்றி வாடுவதைக் கண்டு நண்பர்களின் உதவியுடன் ‘‘அன்னபூரணி திட்டத்தை” ஏற்படுத்தி சுமார் 100 மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

எமது பள்ளியில் அரசு திட்டத்தில் பயனாளிகளாக உள்ள பல மாணவர்களும் தினசரி கொடுக்கப்படும் உணவை தவிர்த்து அன்னபூரணி திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் உணவைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இதைப் பார்க்கும் போது லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதிய உணவின் தரம், மாணவர்களின் விருப்பு மற்றும் அரசு செலவழிக்கும் தொகை, பதுக்கப்படும் உணவுப் பொருட்கள், முட்டை வாங்குவதில் ஊழல், உணவுப் பொருள் வழங்குத் துறையின் தரக்கட்டுப்பாடற்ற கொள்முதல், தினசரி வீணாகும் சமைத்த உணவு இவற்றையெல்லாம் பற்றி ஒரு தெளிவான பார்வை அரசுக்கு ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.

தற்போது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஒரு சமையற்கூடம் ஏற்படுத்தி அதில் மூன்று பெண் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமையலுக்கான பாத்திரம், உணவுப் பொருட்கள் பராமரிப்பு மற்றும் தினசரி சமையல், அதற்கான காய்கறி கொள்முதல் இவற்றிற்கு அப்பெண்களே பொறுப்பு. எரிவாயு, முட்டை மற்றும் உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்குவதற்கு அரசு பொறுப்பாகிறது. அரசு அளிக்கக்கூடிய உதவி, ஒரு மாணவனுக்கு மதிய உணவுக்காக ரூபாய் மூன்றுக்கு மேல் வழங்குவதில்லை. இந்த சொற்ப மானியத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்குவது இயலாது. ஒவ்வொரு கூடத்தில் பணியாற்றும் பெண்களின் சமையல் திறன் சோதிக்கப்படாத ஒன்று. உணவில் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை சோதிப்பதற்கு ஊட்டச்சத்து நிபுணர்கள் நியமிக்கப்படுவதில்லை. சமையலில் சுவை சேர்ப்பதைப் பற்றிக் கூறுவதற்கு சமையல் நிபுணர்களின் ஆலோசனை கிடையாது. தரமான காய்கறிகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்வதைப் பற்றி அரசுக்குப் பொறுப்பில்லை. இதைப் பற்றி இன்று சத்துணவுக் கூடங்கள் மூடப்படுவதை எதிர்த்து குரலெழுப்புவர்களும் யோசிப்பதில்லை.

மாணவர்களுக்கு தரமான உணவு, நேரந்தவறாமல் கிடைக்கச் செய்வதுடன், அதில் ஊட்டச்சத்தை பெருக்கி சரியான விகிதத்தில் சத்துணவு அளிப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை வைத்து சத்துணவுக் கூடங்களை உருவாக்காமல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கல்வி பயின்று வரும் மாணவர்களின் தேவைக்கேற்ப காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்குவதற்கான அறிவியல்பூர்வமான திட்டமொன்றைத் தயாரித்து (2016) அன்றைய முதல்வரிடம் நான் ஒப்படைத்தேன். மதிய உணவுத் திட்டத்தில் தற்போதுள்ள குறைபாடுகளை களைவது பற்றியும், திட்டத்தை சிக்கனமாக்குவதுடன் மாணவர்களுக்கு தரமான உணவு (பள்ளிச் சேர்க்கை பற்றி தொடர்பில்லாமல்) அளிப்பது எப்படி என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.

எனது ஆலோசனையின்படி ஊராட்சி ஒன்றியங்களிலும், நகராட்சிகளிலும், பெருநகராட்சிகளிலும் நவீன சமையல் சாதனங்கள் பொருத்திய மையப்படுத்தப்பட்ட சத்துணவுக் கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும் சுமார் 400 கூடங்களில் ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் 20 பணியாளர்கள் பணிபுரிவார்கள். அதில் குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், ஒரு சமையல் நிபுணர், உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் போதுமான சமையலர்களும், உதவியாளர்களும் பணிபுரிவார்கள்.

தற்போது அரிசியைப் பிரதானமாக்கிய உணவைத் தவிர்த்து இதர தானிய மற்றும் தினை வகைகளை உள்ளடக்கி விதவிதமான காய்கறிகளை சந்தையில் பெற்று சுவையான உணவைத் தயாரிக்க முடியும். தயாரித்த உணவை வாகனங்கள் மூலம் எடுத்துச் சென்று அனைத்து பள்ளிகளிலும் சூடாக விநியோகிக்க முடியும். ஒன்றியத்தில் சத்துணவுக் கூடங்கள் இருப்பதனால் எந்த கிராமமாக இருந்தாலும் அரை மணி நேரத்தில் வாகனங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துச் செல்ல முடியும். காலை உணவு, மதிய உணவு இரண்டையும் விரைவாக தயார் செய்ய முடியும்.

காலையில் பள்ளி தொடங்கியவுடன் தலைமை ஆசிரியர் அலைபேசியில் மையத்தை தொடர்பு கொண்டு மாணவர் வருகை எண்ணிக்கையை தெரிவித்தால் அதன்படி உணவின் அளவு தயார் செய்யப்படும். தரமான உணவுப் பொருட்களை சந்தையில் நேரடியாகப் பெற்று அதை பராமரித்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும். அதேபோல் சந்தையில் நேரடியாக காய்கறிகளை பெற்று விதவிதமாக சமைக்க முடியும். தற்போது தமிழகம் முழுவதும் வெவ்வேறு பள்ளிக்கூடங்களில் கிட்டத்தட்ட 1,25,000 பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அதற்கு மாற்றாக அனுபவமுள்ள 8000 பணியாளர்கள், நிபுணர்களுடன் சேர்ந்து பணியாற்றினால் மாணவர்களுக்கு சூடான, சுவையான, சத்தான உணவு மாலை, மதியம் இரு வேளைகளிலும் அரசால் தற்போதுள்ள நிதிநிலை ஒதுக்கீட்டில் செய்து காட்ட முடியும். தற்போது ஒவ்வொரு சத்துணவுக் கூடத்திலும் பணியாற்றும் மூன்று பெண் ஊழியர்களை மற்ற உள்ளாட்சிகளில் மாற்று வேலைகளுக்கு அனுப்பிவிட்டால் அவர்களது வேலையும் பாதிக்காது. சமைத்த உணவும் வீணாகாது. எலி மற்றும் பூச்சித் தொல்லையால் உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது.

ஒன்றியம்தோறும் உருவாக்கப்படும் மையப்படுத்தப் பட்ட சத்துணவுக் கூடங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட வாகனங்கள், அதை ஓட்டிச் செல்லும் ஊழியர்கள் உள்ளடக் கிய ஏற்பாட்டை இயற்கைப் பேரிடரின் போதும் அந்தந்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டு தோறும் மாணவர்களுடைய ஊட்டச்சத்து முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதும், சத்துணவில் சுவை கூடிய தானிய வகை கலப்பை உறுதிப்படுத்துவதுடன் வளர்ச்சிப் பருவத்திலேயே சர்க்கரை வியாதி போன்றவற்றை தடுப்பதையும் உறுதிப்படுத்த முடியும்.

இப்படிச் செய்தால் சத்துணவுக் கூடங்களை மூடக்கூடாது என்ற கண்டனக் கணைகளிலிருந்து அரசு தப்புவதோடு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. அரசு கேட்குமா?

கே. சந்துரு, நீதிபதி (ஓய்வு)

சென்னை உயர் நீதிமன்றம்

MGR University new VC dinamani


Woman has right to be identified in biological mother’s name: HC

Woman has right to be identified in biological mother’s name: HC  Abhinav.Garg@timesofindia.com 28.09.2024 New Delhi : It is a fundamental r...