Tuesday, January 1, 2019


சுதா சேஷையன் பொறுப்பேற்பு

Added : ஜன 01, 2019 04:56


சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தர், சுதா சேஷையன், நேற்று பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தராக இருந்த, டாக்டர் கீதாலட்சுமியின் பதவி காலம், டிச., 27ல் முடிந்தது. புதிய துணைவேந்தர்இதையடுத்து, சென்னை மருத்துவ கல்லுாரியில், துணை முதல்வராக பணியாற்றி வந்த, டாக்டர் சுதா சேஷையனை, புதிய துணைவேந்தராக, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.இதைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக, டாக்டர் சுதா சேஷையன், நேற்று பொறுப்பேற்றார்.

முக்கியத்துவம் :

நிகழ்ச்சியில், சுதா சேஷையன் பேசுகையில், ''பல்கலையை, முன்மாதிரி மருத்துவ பல்கலையாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன். ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். ''எனக்கு, பொன்னாடை, பூ, பழங்கள் தர வேண்டாம்; அதற்கு பதிலாக உங்கள் அன்பை கொடுங்கள்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024